கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Minister visited the school on the invitation of the Headmaster



தலைமையாசிரியரின் அழைப்பை ஏற்று பள்ளியைப் பார்வையிட்டார் அமைச்சர்


Minister visited the school on the invitation of the Headmaster


அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் முகநூல் பதிவு 

 டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.க.வளர்மதி அவர்களின் அழைப்பினை ஏற்று இன்று அப்பள்ளிக்கு சென்றோம்.


‘எம்மாணவர்களின் கற்றல் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்’ என அழைப்பு விடுத்தார் தலைமை ஆசிரியர். ‘பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு தடையின்றி வாசிப்பார்களா?’ எனும் எண்ணத்தோடு அப்பள்ளிக்கு சென்றோம். 


உண்மைதான்! அனைத்து மாணவர்களும் சரளமாக வாசிக்கின்றார்கள். எழுதுகின்றார்கள். தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


பெருமதிப்பிற்குரிய அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களே நீங்களும் அழையுங்கள். தங்களின் அன்பான அழைப்பை ஏற்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தங்களின் பள்ளிகளுக்கு வருகை புரிவார்கள். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்வார்கள். நானும் வருவேன்!


இன்றே பயணத்தைத் தொடங்குவோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழியில் அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம். 


Tamilnadu_School_Education_Department


💢வளர்மதி டீச்சரைப் போல ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் OPEN CHALLENGE விட வேண்டும்.. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்.."


ஓசூர் அடுத்த டி.புதூர் ஊராட்சியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் அழைப்பை ஏற்று ஆய்வு மேற்கொண்ட பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...