கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள்: முதலமைச்சருக்கு தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள்

 

 

தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள்: முதலமைச்சருக்கு தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள்


பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கொண்டுவர வேண்டும். தமிழ் வழியில் படிப்போருக்கு கட்டணச் சலுகை மற்றும் வேலைவாய்ப்பு உறுதியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வலியுறுத்தி 34 தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


இது தொடர்பாக தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர், முனைவர் பா.இறையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'தமிழுக்காக தங்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பாராட்டுகள். தங்களால் கொண்டு வரப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பது கட்டாயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு ஆகிய திட்டங்களைப் பாராட்டுகிறோம். பொறியியல், மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் முன்பே பொறியியல், மருத்துவம் தமிழ் வழிக்கல்வி முயற்சிகள் நடந்து, பொறியியலில் ஓரளவு தமிழ் நூல்கள் உள்ளன. ஆங்கில நூல்கள் வைத்துப் பாடம் நடத்தினால், உடனே துணை நூல்கள் தர அறிவியல் அறிஞர்களும் பதிப்பகங்களும் தயாராக உள்ளனர். பொறியியலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமுயற்சி எடுத்து கொண்டு வந்த இரண்டு படிப்புகள் மட்டும் உள்ளன; அவற்றில் 90 சதவீதம் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறுகின்றனர். இதுவே நல்ல வெற்றி.


எனவே, வரும் கல்வியாண்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் பயில முன்வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடியும், வேலைவாய்ப்பு உறுதியும் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...