கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்

 


பள்ளி வகுப்பறையில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஆசிரியர் காயம்


காஞ்சிபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டடத்தின் மேல் பகுதியில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டடம் கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டடத்தின் பல இடங்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. கூரை பூச்சு பல இடங்களில் பெயர்ந்து விழுந்துள்ளது. 


அதன் தொடர்ச்சியாக, பள்ளியின் கூரை பூச்சு நேற்றும் பெயர்ந்து விழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் மீது விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷடவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 


இப்பள்ளியின் பராமரிப்பு பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி மேற்கொள்வதாக கூறினாலும், இப்பள்ளி கட்டடத்தின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகவே பெற்றோர் தெரிவித்துள்ளனர். 


இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, 18வது வார்டு கவுன்சிலர் மல்லிகா, மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தூய்மைப் பணியாளருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

  தூய்மைப் பணியாளருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து வரலட்சுமி உயிரிழந்தார். வர...