கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏற்காடு Yercaud சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி

ஏற்காடு - 11 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி


Yercaud - 11 beautiful places - Government bus facility to explore


 ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு! 


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கண்டு களித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



கொடைக்கானல் - Kodaikanal எழில்மிகு 12 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி

கொடைக்கானல் - எழில்மிகு 12 இடங்கள் - சுற்றிப் பார்க்க அரசுப் பேருந்து வசதி


Kodaikanal - 12 beautiful places - Government bus facility to explore


கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு



Student TC & Promotion modules, Annual marks entry - State EMIS Team Message



EMIS - Student TC module, Promotion module and Entry of annual marks - State Team Message 


 Dear Sir / Madam, 


🌾 Student Promotion module will be enabled by Friday (09.05.2025).                   


🌾 TC module is on, schools can generate TC  


🌾 Please ensure entry of annual marks in EMIS before promoting the profiles  ( as per the instructions of DEOs concerned)


Thank you.




EMIS TC GENERATION REGARDING

                                                                                          Hi all,

Good Evening,


TC module is live now!! Please start generating the TC          

                                                                                                                                                                                                                                                                              STATE EMIS TEAM


STUDENTS TC Genaration Process

 

மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் முன் EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


STUDENTS TC Genaration Process in EMIS Website 


Tasks to be completed on the EMIS website before issuing students' Transfer Certificates


STUDENTS TC GENARATION REGARDING..


1. TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, EE  mark entry, 7.5% Verification (school & medium) , Career Guidance work மற்றும் EMIS சார்ந்த பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம். 


2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.


3. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது* . மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.


4. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும் 


        (Primary - வகுப்பு 5

          Middle  - வகுப்பு 8

          High school -வகுப்பு 10  

          HR sec - 10  & 12 

 *முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common poolக்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.


 Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.


5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு  பயிலும் (Classes - Primary -5, Middle -8 , High -10, Hr sec -12) மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.* 


6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும். 


7. TC edit செய்வதற்கு reset தேவைப்பட்டால் தங்கள் பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர்  மூலம் தகவல் தெரிவிக்கவும்.


மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்


 "நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...?

👇👇👇👇👇👇👇


*நாடு முழுவதும் நாளை (மே 4) இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.*


*பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:*


*நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.* 


*அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.* 


*தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது.*


*இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.*


*தேர்வர்கள் தங்கள் கையில் கிளியர் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம்.*


*மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை  ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.*


*வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.*


*முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும்.*


*தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.*


*இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தகுதிகாண் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*


*இன்று (04.05.2025) நீட் தேர்வு(மருத்துவ தகுதித்தேர்வு)  எழுத உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மகத்தான வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்



அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்


Standard operating procedures to be followed by drivers and conductors when transporting differently abled persons in State Transport Corporation buses



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள். கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடித எண் 453/Ch2/ChO/2022, நாள்: 10/01/2022. கடித எண்: 750/Ch5/ChO/2022. நாள்: 05/01/2023 மற்றும் கடித எண்: 453/Ch5/Cho/2023. நாள்: 30/01/2023 மூலம் வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



1, மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.


2. ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறிதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி / இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது.


3. நடத்துனர் வேண்டும் என்றே. பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.


4. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.


5. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.


6. சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்


7. பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும்.


8. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ,எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏௗனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.


9. பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திட வேண்டும்.


10. மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை (Signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.


11. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை (Unique Disability ID Card) and National Disabilty Identity Certificate Cards (NDIC) அசல் அட்டை கொண்டு. 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White board) மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்.


12. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி. 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.


13. இயற்கை சீற்றம் உள்ள நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தினை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.


14. ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது தவறாமல் மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற, தகுந்த சுற்றறிக்கையை அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி, இது பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு



அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் விவரம் - தமிழ்நாடு தகவல் ஆணையம்  உத்தரவு


அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது - தமிழ்நாடு தகவல் ஆணையம்


பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.


காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.


அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.


மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.


மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Application for Paramedical courses starts from 17.06.2025

TamilNadu Paramedical துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது Counseling application for Paramed...