கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு - நாளிதழ் செய்தி

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு - நாளிதழ் செய்தி


Old pension scheme to be announced for government employees and teachers in September - Daily News


அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி - செப்டம்பர் மாதத்தில் வருது பழைய ஓய்வூதிய திட்டம் - வெளியான தகவல்!


தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம்தான் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது.


2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.


தமிழகத்தில் பழைய ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக ஆட்சி முடிந்து, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுகவின் 309வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தது.


அதற்குப் பிறகு கொரோனா நெருக்கடி, மோசமான நிதிநிலை உள்ளிட்டவை காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் ஜனவரி மாதத்திலேயே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும். எனவே, இந்த ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.


கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது, திருமண நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்த நிலையில் , பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.


மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், செப்டம்பர் மாதத்திற்குள் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என அறிவித்தார். இது குறித்து ஆராய்வதற்கு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வு செய்ததோடு, அரசு ஊழியர்களிடமும் கருத்துக்களை கேட்டு அறிந்தது.


தற்போது நிதிநிலை குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு உறுதியாக இருக்கும் என்கின்றனர். தற்போது மட்டுமல்ல கடந்த காலங்களிலும் திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. தற்போதும் அரசு ஊழியர்கள் தேர்தலை குறி வைத்தே தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வரும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.


இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி



 இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி


வெளிவந்த ரூ. 230 கோடி மோசடி! 50,000 அரசு ஊழியர்களின் ஊதியம் எங்கே? 


மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மாநில அரசு தகவல்


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று வரைதல் மற்றும் வழங்கல் (DDO - அரசு ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் நிர்வகிப்பவர்) அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.


இந்தக் கடிதத்தின்படி, 50,000 ஊழியர்கள் என்றால், அம்மாநிலத்தின் அரசுப் பணிக்குழுவின் 9 சதவிகிதமாகும். அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவைகூட இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியமாக (ரூ. 230 கோடி) வழங்கப்படவில்லை என்று கடிதம் கூறுகிறது.


இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? (Ghost Employees)


ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.


ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ. 230 கோடி முறைகேடு நடப்பதை, அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.


இந்த ரூ. 230 கோடி மோசடி விவகாரம் குறித்து, 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மே 23 ஆம் தேதியில், சுமார் 6,000 அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.


உண்மையான அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாததால்தான், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


அரசு ஊதியத்தில் போலி ஊழியர்களின் விவரங்களைச் சேர்த்து, பொது ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடுகின்றனர்.



50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி


மத்திய பிரதேசத்தில், அரசு கோப்புகளில், 50,000 ஊழியர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் விடுவிக்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசின் பல்வேறு துறைகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவர்களில், 50,000 ஊழியர்களின் பெயர்கள் அரசு கோப்புகளில் உள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்களுக்கு பிரத்யேக அடையாள எண், பணியாளர் குறியீடு இருந்தும் சம்பளம் வழங்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனரா? அல்லது போலி ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இந்த ஊழியர்கள் போலியாக இருந்தால், அவர்களின் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்ட, 230 கோடி ரூபாய் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, மாநிலம் தழுவிய சரிபார்ப்பு நடைமுறையை கருவூல துறை துவங்கி உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் பணிபுரியவில்லை என சான்றளிக்கும்படி, துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், '2024 டிசம்பர் நிலவரப்படி, 50,000 அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்கள், 10,000 பேர் தற்காலிக ஊழியர்கள்.


'ஒருவேளை இவர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்திருந்தால், அரசு கோப்புகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 50,000 ஊழியர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு, அதன் வாயிலாக, 230 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்' என்றனர்.


அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மோசடி

மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மாநில காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும். இதுதொடர்பாக துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊதிய மோசடியாக இது கருதப்படுகிறது.


நடந்தது என்ன?

ஊதியம் கிடைக்கப்பெறாத ஊழியர்களுக்கு அவர்களுக்கான அடையாள எண்கள் இருந்தும், ஊதியம் வரவு வைக்கப்படாததால் இதில் ஏதேனும் பெரும் முறைகேடு நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா? அல்லது அவர்கள் போலி ஊழியர்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.  திடுக்கிடும் ஒழுங்கின்மை சம்பவத்தை விசாரிக்க வலியுறுத்தி, கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடந்த மே மாதம் 23ம் தேதி அனுப்பிய கடிதத்தின் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, 6,000க்கும் மேற்பட்ட டிடிஓக்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், மேலும் 15 நாட்களில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்று விளக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.


போலி ஊழியர்கள்:

ஊதியம் வழங்கப்படாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்கள் என்றும், மற்ற 10 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் கடந்த 6 மாத ஊதியம் 230 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்படாவிட்டால் பணம் எங்கே போனது? என்ற கேள்வி வலுத்துள்ளது. போலி ஊழியர்களின் விவரங்கள், சம்பளதாரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு மோசடி அரங்கேறியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


குவியும் கேள்விகள்:

அது உண்மையானால் அரசாங்கத்தை ஏமாற்றுவது யார்? சம்பளத்தொகையை நிலுவையில் வைத்து பின்பு காசோலை இன்றியே அந்த பணத்தை எடுக்க முடியுமா? அரசாங்கம் அறியாமலேயே 230 கோடி ரூபாய் மோசடிக்கு இடம் அளித்துள்ளதா? 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? ஆம் எனில், 9 சதவீத ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன? என யாராளமான கேள்விகள் எழுகின்றன. 


சரிபார்ப்பு பணிகள் தீவிரம்:

வழக்கமான தரவு தணிக்கையின் போது மாநில கருவூலம் இந்த முரண்பாட்டைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், ஒரு பெரிய நிதி ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஊழியர்களின் தரவுகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.  அதன் மூலம் போலி ஊழியர்கள் அரசின் அமைப்பில் அமைதியாக பதுங்கியிருக்கிறார்களா என்பதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.


பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திர பிரதேச அரசு முடிவு

 


மத்திய அரசைப் பின்பற்றி தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திர பிரதேச அரசு முடிவு 


Andhra Pradesh government decides to increase working hours of workers in private companies to 10 hours, following the Union government


“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை” – தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆந்திரா அரசு முடிவு


முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது.


தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திராவில் தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறியிருப்பதாவது, “இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்துவருகிறது. உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.



”ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன. பிரிவு 55 இன் கீழ் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு இருந்தது, இப்போது அது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்த விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.


தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 9 மணிநேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திரப் பிரதேச அரசு அனுமதிக்கவுள்ளது. இதன்மூலம் உணவு இடைவேளையுடன் சேர்த்து ஒருநாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இடைவேளை இல்லாத தொடர்ச்சியான வேலை நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. 75 மணி நேரமாக இருந்த ஓவர் டைம் உச்ச வரம்பு 144 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. பெண்கள் இரவு நேரப் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவற்றை நடைமுறைப்படுத்த தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு ஏதுவான சுழலை உருவாக்குவதற்காக இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசு கூறுகிறது.


சந்திரபாபு நாயுடுandhra pradesh government approves 10 hour daily workday

இதுகுறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே.பரதசாரதி, "தொழில் செய்வதை எளிதாக்குதல் (EoDB) கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பிரிவுகளைத் திருத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விதிகளைத் தளர்த்துவது அதிக முதலீடுகளை ஈர்க்க உதவும்" என தெரிவித்துள்ளார்.


ஆனால் இவை தொழிலாளர்களுக்கு விரோதமானவை என்று தொழிற்சங்கங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ் இந்த நடவடிக்கையை கண்டித்து, அதை திரும்பப் பெறக் கோரியுள்ளார்.


அவர், "பெரிய தொழிலதிபர்களைத் திருப்திப்படுத்த விதிகளைத் திருத்த மத்திய அரசிடமிருந்து மாநிலம் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை எதிர்த்து ஜூலை 9ஆம் தேதி நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வரும் நிலையில், ஆந்திர அரசு இந்த துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாளடைவில், இது 12 மணி நேரமாக அதிகரித்து விடுமோ என தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.


தொழிலாளர்களின் உடல்நலனை பாதிக்கும்: மருத்துவர்

இதேபோல மருத்துவர் டி. செல்வகுமார் என்பவரும் ஆந்திர அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது அவர்களது உடல்நலனை பாதிக்கும். மேலும், செயல் திறனும் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட 8 மணி நேரத்தைக் கடந்து வேலை செய்யுமாறு மனிதர்களை நிரபந்திப்பது அறிவுபூர்வமான திட்டம் அல்ல" என தெரிவித்தார்.


நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

 


இனி நகைக்கான ரசீது தேவையில்லை - தங்க நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி


தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும்; நகைக்கான ரசீது தேவையில்லை.


ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.


ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.


முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.


தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை



தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை


எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ், தவறான மதிப்பெண் பட்டியல், தவறான சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்


படிப்பில் எந்த வருடத்தில் இருந்தாலும் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் மேலும் 3 ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பாடத்தையும் தொடர தடை


TNPSC Group I Hall ticket வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது.


தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சீருடையுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவு செய்ய வேண்டாம் - காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி., அறிவுறுத்தல்



சீருடையுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவு செய்ய வேண்டாம் - காவல்துறை அலுவலர்களுக்கு டி.ஜி.பி., அறிவுறுத்தல்


சீருடையுடன் புகைப்படம் வெளியிட்டால் நடவடிக்கை 


சீருடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்ய கூடாது.


தனியார் நிகழ்ச்சிகளில் சீருடையுடன் பங்கேற்கும் உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்


உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் YOUTUBE சேனல்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது.


நன்னடத்தை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் செயல்படும் காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


- டி.ஜி.பி., சங்கர் ஜிவால்


சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!


சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியிருக்கிறார்


காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் பேசுவது, முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு டிஜிபி அறிவுறுத்தியிருக்கிறார்.


அதன்படி, அவர் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், காவல்துறையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.


அவ்வாறு அனுமதி பெற்றாலும்கூட, வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்காணலின்போது காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகே பேச வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

 சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர்



Festive Advance payment hike




பண்டிகைக் கால முன்பணம் உயர்வு


Festive Advance payment hike


தமிழ்நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்வு.


C, D பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை உயர்வு.


முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு.


RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு



 RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு


RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு


உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு


பெங்களூரு: IPL போட்டியில் கோப்பையை வென்ற Royal Challengers Bangaluru அணி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு



 மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - டி.கே.சிவக்குமார்.


ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.




ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்


ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.


இந்தச் சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “இன்று கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. அதிக கூட்டத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது ஓர் இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது” என்று கூறினார்.


நேற்று இரவு முதல் ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இரவு முழுவதும், காவல் துறையினர் கூட்டத்தை நிர்வகிப்பதிலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.


புதன்கிழமை பெங்களூருவில் தரையிறங்கிய ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அவர் ஒவ்வொரு வீரருக்கும் பூங்கொத்துகளை வழங்கினார். குறிப்பாக விராட் கோலியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு ஆர்சிபி அணியின் கொடி மற்றும் கன்னட கொடி இரண்டையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆர்சிபி அணியினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் அவர்களைப் பாராட்டினர். தற்போது ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரமாக மாறியுள்ளது.


திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து



திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து


திட்டுவது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுவதாகாது: உச்ச நீதி மன்றம்


 பள்ளி மற்றும் விடுதிக்கு பொறுப்பான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவனின் புகாருக்குப் பிறகு மாணவனை திட்டினார். அதைத் தொடர்ந்து, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் 


ஒரு மாணவனை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. 


 பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளரான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவரின் புகாரைத் தொடர்ந்து இறந்தவரை திட்டியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 


ஒரு சாதாரண மனிதனால் திட்டுவது இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக ஆசிரியரை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 


"இந்த விஷயத்தை முழுமையாகப் பரிசீலித்த பிறகு, இது தலையிடுவதற்கு ஏற்ற வழக்கு என்று நாங்கள் கருதுகிறோம். மேல்முறையீட்டாளர் சரியாகச் சமர்ப்பித்திருப்பது போல, ஒரு மாணவரின் புகாரின் அடிப்படையில்  திட்டுதல், அதுவும் ஒரு மாணவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று எந்த ஒரு சாதாரண மனிதனும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது," என்று பெஞ்ச் கூறியது. 


இறந்தவருக்கு எதிராக மற்றொரு மாணவர் செய்த புகார் கவனிக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இதுபோன்ற திட்டுதல் மிக சாதாரணம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


"இந்த நீதிமன்றத்தின் கருத்தில் கொள்ளப்பட்டதில்,  ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை நிலைப்பாட்டின் கீழ், இறந்தவர் செய்த தற்கொலையைக்காக, எந்த  காரணத்தையும் (தவறு பற்றிய அறிவு) மேல்முறையீட்டாளருக்குக் காரணம் காட்ட முடியாது," என்று பெஞ்ச் கூறியது. 


அந்த நபர், தனது வழக்கறிஞர் மூலம், தனது பதில் நியாயமானது என்றும், இறந்தவர் மீண்டும் குற்றத்தைச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், விடுதியில் அமைதியையும் பேணுவதற்கும் ஒரு பாதுகாவலராக  திட்டியதாகவும் மட்டுமே கூறினார். தனக்கும் இறந்தவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று அவர் சமர்ப்பித்திருந்தார்.


DECLARED BY THE HONOURABLE SUPREME COURT


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால், அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனால் அந்த ஆசிரியர் மீது IPC 306-ல் கொலைவழக்கு பதியப்பட்டது. இந்த அப்பீல் வழக்கில் உச்சநீதிமன்றம தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதில் “மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவது எதார்த்தமானது என்றும், அவ்வாறு திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது என்றும், இந்த வழக்கில் ஆசிரியர் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துவிட்டது. அதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்குத் தூண்டினார் என்று கருதமுடியாது. தற்கொலைக்குத் தூண்டும் எண்ணத்தில் ஆசிரியர் திட்டியிருக்கிறார் என்பதற்கு தகுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால், இவ்வழக்கில் இருந்து ஆசிரியரை விடுவிப்பதான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.”

” The Appellant acted as a responsible authority addressing a complaint; no evidence suggested he intended the tragic outcome, the court said. Furthermore, to establish the charge of abetment to suicide, it is essential to prove elements such as instigation, provocation, or intentional aid in committing the act; without proof of these ingredients, the offence of abetment to suicide is not made out”. 

THANGAVEL Vs THE STATE OF TN


பாராட்டு விழாவைப் புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு



 ஆசிரியர்களைக் குற்றவாளியாக்குவது நியாயம் அல்ல - பாராட்டு விழாவைப் புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு - நாளிதழ் செய்தி


பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ள பாராட்டு விழாவை புறக்கணிக்க, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.



விபரம் சேகரிப்பு


இதற்காக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


அதேவேளை, தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது விசாரணையும் நடத்தப்பட உள்ளது.


மேலும், அந்த பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் சென்று, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இதனால், இந்தாண்டு முழு தேர்ச்சி அடைந்த பள்ளிகள், அடுத்தாண்டு இதே நிலையை தொடருமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், இந்தாண்டு பாராட்டு விழாவில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும், அடுத்தாண்டு விசாரணை வளையத்துக்குள் வரும் வாய்ப்பு உள்ளது.



உளவியல் சார்ந்தது


அதனால், நிரந்தரமில்லாத இந்த பாராட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.



இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:


அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி என்பது, முழுக்க முழுக்க ஆசிரியர்களை சார்ந்தது அல்ல. அது, பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகச்சூழல் மற்றும் உளவியல் சார்ந்தது. அவற்றை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாணவர்களின் கற்றல் திறன், ஈடுபாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தேர்ச்சி விகிதம் அமையும் என்ற நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ப்பந்திப்பதும், அது நிகழாதபோது, ஆசிரியர்களை குற்றவாளிகளாக்குவதும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.





தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


அன்பான பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கம் ,


       இக்கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.


    உங்களில் மூத்த ஆசிரியராகவும், மூத்த அலுவலராகவும், பணியாற்றிய நான் உங்களோடு எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


உயர்த்துவோம் உயர்வோம்

இது நமது தாரக மந்திரம் 


ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி

இது நமது முன்னோர்கள் வாக்கு 


நாம் உறுதி ஏற்று பள்ளிக்குச் செல்வோம் .


1. பள்ளியைப் பேணிப் பாதுகாப்போம் ,

2. பள்ளியை அழகாகவும் வைப்போம் ,

3 . பள்ளி வகுப்பறையைத் தூய்மையாக்குவோம்

4 . பள்ளி சுகாதாரத்தை உறுதி செய்வோம் 

5. மாணவர்களை நேசிப்போம் 

6. காலை இறை வணக்கக் கூட்டத்தை சிறப்பிப்போம் 

7. மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை ஆர்வப்படுத்துவோம் ,

8. பள்ளி விழாக்களை பெருமைப் படுத்துவோம் 

9. விளையாட்டின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவோம் ,

10. அனைத்துப் பள்ளி வயதுப் பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்போம் ,

11. பெற்றோருடன் இணைந்து செயல்படுவோம் ,

12. SMCயுடன் இணைந்து பணியாற்றுவோம், 

13. அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்வோம்,

14. அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்போம்

15. நமது அரசுப்பள்ளி பெருமைகளைப் பேசுவோம் ,

16. குழந்தைகளின்  இல்லம் நோக்கி,

குழந்தைகளின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம் பெறுவோம்.

      "உங்கள் வாழ்வும் வளமும் நலமும் சிறக்க வாழ்த்துகின்றேன்" .

அன்புடன் 

ச.கண்ணப்பன்


அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

 தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு


8,144 people retired from Tamil Nadu government jobs in a single day today, 31-05-2025


இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு


தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.






வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் உள்ள தகவல்கள்


வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் உள்ள தகவல்கள்



அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


🛑இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.



🛑இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.


🛑இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான விவரங்களை மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்க வேண்டும்.


🛑மேலும், பள்ளிகளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அமல்படுத்தவும் அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வித் துறை கருத்துரு வழங்கியது. 


🛑அதையேற்று அதற்கான அனுமதியை வழங்கி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்லுவது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


🛑அதில் தமிழ்நாடு அரசின் சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



துணைத் தேர்வுகள் - பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை


துணைத் தேர்வுகள் - பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு


ஜுன்/ஜுலை 2025 மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு *விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (தட்கல் உட்பட) முடிந்த பின்னரே* SUMMARY REPORT பதிவிறக்கம் செய்ய வேண்டும். 


SUMMARY REPORT-இல் குறிப்பிடப்பட்ட தொகையினை IFHRMS E-Challan முறையில் இணையவழியில் செலுத்த வேண்டும். பின்னர் கீழ்க்கண்ட ஆவணங்களை *அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில்* ஒப்படைக்க வேண்டும்.


*ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்:*

1.HM/Principal Covering Letter

2.Applications

3.Summary Report with HM/Principal Attestation

3.E-Challan Payment Success Copy with HM/Principal Attestation


*விண்ணப்பிக்க கடைசி நாள் (தட்கல்):*

+2 – 31.05.2025

+1 – 06.06.2025

10th – 06.06.2025


*SUMMARY REPORT பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்:*

+2 – 02.06.2025

+1 – 07.06.2025

10th – 07.06.2025


*மேற்கண்ட ஆவணங்கள் ஒப்படைக்க கடைசி நாள்:*

+2 – 03.06.2025

+1 – 09.06.2025

10th – 09.06.2025


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.



பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


கொரோனா தொற்று பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.


நோய் பரவலை தடுப்பது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.


கைகளை சுத்தமாக கழுவுதல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், இருமும்போதும், தும்மும்போதும், வாய், மூக்கு பகுதிகளை முழுமையாக மூடிக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.



4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்



 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


4 New Government Arts and Science Colleges to be inaugurated - Chief Minister M.K. Stalin's announcement


தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.


உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு





அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


Extension of deadline for applying for admission to government arts and science colleges


அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு. 


விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 


அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.


தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி



யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை


சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி


IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.






இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது


முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED Parents செயலியில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக NSNOP உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்

    Namma School, Namma Ooru Palli நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பள்ளிச் சாளரம் பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED P...