கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TETOJAC சார்பில் August 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்

 


டிட்டோஜாக் சார்பில் ஆகஸ்ட் 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்


இன்று நடைபெற்ற  கூட்டத்தில், நடைபெற்ற முடிந்த மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வலுவான  போராட்டத்தை நடத்தும் வகையில், அதற்கான கால அவகாசத்தை அதிகரித்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி (22.08.25) சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வட்டார அளவிலான, மாவட்ட அளவிலான ஆயத்தக் கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹ஊடகச்செய்தி

**********************

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி


ஆகஸ்டு 22ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம்


டிட்டோஜாக் மாநிலப்பொதுக்குழு முடிவு!

**********************

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (23.07.2025) காலை சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளருமான ச.மயில் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களான ரெ.ஈவேரா, கே.பி.ரக்ஷித், அ.வின்சென்ட் பால்ராஜ், இரா.தாஸ், சி.சேகர், இல.தியோடர் ராபின்சன், நா.சண்முகநாதன், சு.குணசேகரன், கோ.காமராஜ், சி.ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.


பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய தேதிகளில் பேரெழுச்சியுடன் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு டிட்டோஜாக் மாநில அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்தல், தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு முரணாக விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடைகளை நீக்குதல், மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்புதல், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு  தொடர்பான வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து காலியாக உள்ள 6000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வுப் பணியிடங்களை நிரப்புதல், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் கடந்த ஜூலை 17, 18 தேதிகளில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனாலும், தமிழ்நாடு அரசு டிட்டோஜாக் பேரமைப்பின் போராட்டங்களையும், கோரிக்கைகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

எனவே, டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கையாக பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 22.08.2025 அன்று சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அணிதிரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. 

**********************

இப்படிக்கு

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்


SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி



SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி


வணக்கம்!

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள்.


SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 25.07.25 வெள்ளிக்கிழமை,மாலை 3.00-4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.


குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்துப்பார்த்து உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு.


கூட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும்  திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான  கூட்டப்பொருட்களில்  விழிப்புணர்வு  வழங்கப்படவுள்ளது.


இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும்,கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும், மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.


SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!

📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்: https://bit.ly/SMCSupportvideos


📌ஊக்கமூட்டும் காணொளி: https://youtu.be/qsB-DSC57j4


📌புதிய செயலி லிங்க் : https://bit.ly/TNSEDParentsApp🙏


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 


தமிழ் வளர்ச்சித்துறையின் 73 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards https://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழறிஞா்கள் மேலே உள்ள இணையதளத்தில் 

விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 'தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008' என்ற முகவரிக்கு செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.


தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை



புதிய உச்சத்தில் தங்கம் 


வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் இன்று (23-07-2025) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75,000-ஐ கடந்து விற்பனை.


சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கும் ஒரு கிராம் ரூ.9,380-க்கும் விற்பனை.


9 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் கலைஞர் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதிவு

 


9 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் பதிவு


9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.


அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!


அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம்


 இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள் ; அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை கண்டனம் - நாளிதழ் செய்தி 




TNPSC - Group 4 Exam - Tentative Answer Key



 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வு - தற்காலிக விடை குறிப்பு வெளியீடு 


Tamil Nadu Public Service Commission - Group 4 Examination held on 12.07.2025 - Tentative Answer Key Released



Tamil Nadu Public Service Commission

Combined Civil Services Examination-IV

(Group-IV Services)

(Notification No.7/2025)

Examination held on 12.07.2025 F.N. -

Tentative key Released on 21.07.2025


Link:

  https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=58ff38aa-81fc-453e-9bd9-517996eccbbb


அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



அரசுப் பள்ளிகளில் SMC கூட்டத்தை July 25ஆம் தேதி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


 அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25 ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 


அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (School Management Committee) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு மாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூலை 25 ஆம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை பள்ளிகள் தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.


மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுக்காக, முன்னாள் மாணவர்களிடம் பொருள், தொகை பெற்றதை, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.


பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதித்து, சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.


SLAS தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது



>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள் & வழிகாட்டுதல்கள் - SPD செயல்முறைகள்...


திடீர் உடல்நலக்குறைவு : முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனையில் அனுமதி



சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதி


காலை நடைப் பயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி என அப்போலோ நிர்வாகம் அறிக்கை.




மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்



மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பதிவு


 ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, அப்பள்ளியைப் பார்வையிட்டோம்.


முதலமைச்சர் காலை உணவுத்திட்டப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டோம். ஊர் மக்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து, உடனே அவற்றை பரிசீலிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தியுள்ளோம்.


அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு

 


அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி ; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை : ஒரு சாதனை நிகழ்வு


கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). இவர் மங்களூருவை அடுத்துள்ள அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். 


இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.


இதுகுறித்து ரிதுபர்ணா கூறுகையில், “எனக்கு பள்ளி நாட்களில் இருந்து மருத்துவராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று, நீட் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.


இதனால் எனது கனவுகள் கலைந்து போனதாக மனமுடைந்து போனேன். எனது பெற்றோரும் நண்பர்களும் என்னை தேற்றி, பொறியியல் படிக்குமாறு கூறினர். இதனால் சயாத்ரி கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சேர்ந்தேன்.


எனது கல்லூரி பேராசிரியர்கள், மூத்த மாணவர்கள் ஒருங்கிணைத்த அனைத்துவிதமான புதுமையான திட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றேன்.


குறிப்பாக ரோபோ இயந்திர வடிவமைப்பு, ஆட்டோமேஷன் பயன்பாடு, இயந்திர வடிவமைப்பு ஆகியவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. 


கல்லூரி நண்பர்களுடன் இணைந்து பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, பாக்கு அறுவடை மற்றும் தரம் பிரிக்கும் ரோபோ ஆகியவற்றை வடிவமைத்தேன்...


எங்களின் இந்த முயற்சிக்கு கோவாவில் நடந்த ரோபோட்டிக்ஸ் சர்வதேச மாநாட்டில் பதக்கம் கிடைத்தது.


இதன் மூலம் சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிபுணர்களின் அறிமுகம் கிடைத்தது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸில் ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் ஆக ஓராண்டு பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இதற்காக எனக்கு ஆண்டுக்கு ரூ.39.58 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது.


அந்த பயிற்சி காலத்தில் எனது முழு கவனத்தையும் செலுத்தி கடினமாக‌ உழைத்தேன். 


ஜெட் விமானத்தின் இன்ஜின் தயாரிக்கும் பிரிவில் எனது பரிந்துரைகள் பெரிதும் ஏற்கப்பட்டன. 


இதன் காரணமாக கடந்த மாதத்தில் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.


அதற்கான பணி நியமன கடிதத்தை பெற்றதும் என் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.


இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, ஏராளமானோர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர், மங்களூருவை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், கல்லூரி பேராசிரியர்கள் என ஏராளமானோர் என்னை நேரில் சந்தித்து பாராட்டினர்.


என்னைப் பொறுத்தவரை, தோல்விகளை கண்டு அச்சப்படாமல் இளைஞர்கள் புதிய துறைகளில் உற்சாகத்துடன் போராடினால், நிச்சயம் இமாலய வெற்றி கிடைக்கும். 


நான் எனது மருத்துவர் கனவு சிதைந்த போதும், துவளாமல் வேறு துறையில் ஆர்வமோடு இயங்கினேன். இப்போது இளம் பொறியாளராக, படிப்பை முடிக்கும் முன்பாகவே ரூ.72 லட்சம் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன்.” என்றார்.


20 வயதிலேயே சாதித்த ரிதுபர்ணாவை சமூக வலைதளங்களில் ஏராளமான இளைஞர்களும், கல்வியாளர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Vice President resigns



துணைக் குடியரசுத் தலைவர் ராஜினாமா


மருத்துவக் காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



TETOJAC மாநில பொதுக்குழுக் கூட்டம் பற்றிய தகவல்

TETOJAC மாநில பொதுக்குழுக் கூட்டம் பற்றிய தகவல்


எதிர்வரும் 23.07.2025 இல் டிட்டோஜாக் மாநில பொதுக்குழுக் கூட்டம்



பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு


பள்ளியில் காலை உணவு / மதிய உணவு உண்ணும் மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு


தற்போது 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் அரசு (ஊராட்சி ஒன்றிய) / உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் மற்றும்  1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு உண்ணும் மாணவர்களின்  விவரங்கள் தொடர்புடைய வகுப்பு ஆசிரியர்களின்  Individual ID மூலம் TNSED SCHOOLS APP-ல் உள்ளிட வேண்டும்



>>>  TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025...



சத்துணவு உண்ணும் மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் படிவம் - Noon Meal Consent Form...



>>> ஒப்புதல் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



"ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு..." என்று பள்ளி ஆசிரியரிடம் மரியாதையின்றி வீரவசனம் பேசிய மாணவன் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது



 "ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு..." என்று பள்ளி ஆசிரியரிடம் மரியாதையின்றி வீரவசனம் பேசிய மாணவன் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது


 முக்கிய வழக்கில் கைது செய்து இழுத்து சென்ற போலீஸ் .


"ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.." - வீரவசனம் பேசிய இந்த பையன ஞாபகம் இருக்கிறதா? - முக்கிய வழக்கில் இழுத்து சென்ற போலீஸ்


ATM பணம் கொள்ளை-கைதானவரின் பழைய வீடியோ வைரல்/ கடந்த மாதம் ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.29 லட்சம் கொள்ளை சம்பவத்தில் சிறுவன் உட்பட 6 பேர் கைது /ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் ஊழியர் நாக அர்ஜுன் பணம் கொள்ளை போனதாய் நாடகம்/ ஏடிஎம் பணம் கொள்ளை போன சம்பவத்தில் கைதான 19 வயது ப்ரீத்திவின் வீடியோ வைரல்/ பள்ளியில் ப்ரீத்திவ் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை மிரட்டிய வீடியோ/ “ஏறுனா ரயிலு...இறங்குனா ஜெயிலு...போட்டா பெயிலு“ - வீரவசனம் பேசிய வீடியோ வைரல்


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதையின்றி வீர வசனம் பேசிய மாணவன் ஒருவர், தற்போது ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதையின்றி பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பேசிய மாணவன், ‘ஏறுனா ரயிலு... எறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு...இந்த தவம் இருக்கிற வரையில் எதுவும் செய்யமுடியாது’ என ரைமிங் வசனத்துடன் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளான். இதனை அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், திண்டுக்கல் செம்பட்டி அருகே நடந்த ATM கொள்ளை வழக்கில் அந்த மாணவன் கைதாகியுள்ளான். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனியார் ஏடிஎம்மில் பணம் வைப்பதற்கான ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த நாகர்ஜுன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் வைக்க வந்த போது ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாகர்ஜுன், ஏஜென்சி உரிமையாளர் முருகனிடம் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து முருகன் செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படைட்யில் செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், நாகர்ஜுன் தான் தனது கூட்டாளிகளுடன் அந்த பணத்தை கொள்ளையடித்ததையும், ஏடிஎம்மில் பணம் வைக்க வந்த போது சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துவிட்டு போனதாக அவர் நாடகம் ஆடியதும் போலீஸுக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாகர்ஜுன், சுரேந்தர், முகமது, ரிதீஷ், கார்த்திகேயன், ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த தவம் எனும் ப்ரீத்திவ் என்ற 19 வயது இளைஞனும் கைதாகியுள்ளான். அந்த ப்ரீத்திவ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த போது ஆசிரியர்கள் முன்பு மரியாதையின்றி வீரவசனம் பேசிய மாணவன் என்று கூறப்படுகிறது. ப்ரீத்திவ் பேசும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. 


இந்த கொள்ளை குறித்து மற்றொரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் :


திண்டுக்கல் மற்றும் தேனியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 18 ஏ.டி.எம்.,களில் இவர்கள் பணம் வைக்கும் பணியில் ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நாகஅர்ஜுன் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏ.டி.எம்.,மில் பணம் வைத்துள்ளார்.


அங்கு பணி முடிந்ததும் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் வைப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரூபாய் 29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த, புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றுள்ளார். அப்போது, புதுகோடாங்கிபட்டி அடுத்த டாஸ்மாக் மதுக்கடை அருகே, இவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி ரூபாய் 29 லட்சத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.


அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏஜென்சி உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.கார்த்திகேயன் விசாரணை நடத்தி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ் தீபா, விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.


விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தர் (25) ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20) காமாட்சி மகன் பிரித்விவ்(19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


நாக அர்ஜூன் வங்கியில் பணம் செலுத்துவதற்காக பணத்துடன் சென்று வந்ததை இவர்கள் பல நாட்களாகவே நோட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று நாக அர்ஜுன் தனியாக வருவதை பயன்படுத்தி கத்தியை வைகாட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட தவம் என்ற ப்ரீத்திவ் என்பவர் தேவதானப்பட்டி பள்ளியில் படித்தபோது, பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில், ஏறுனா ரயிலு, இறங்கினால் ஜெயிலு, போட்டால் பெயிலு எனவும், தவம் இருக்கும் வரை, இந்த தவம் ? *** கூட புடுங்க முடியாது என ஒருமையில் பேசி, பள்ளி ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படிக்கும் ஆசிரியர்களை மதிக்காத நிலையில், தற்போது அவரே கொள்ளையனாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



இந்த மாணவனிடமிருந்து அரசாங்கம் பாடம் கற்க வேண்டும். பள்ளியில் மாணவர்களை கண்டிக்கும் சுதந்திரத்தை ஆசிரியர்களுக்கு வழங்காவிட்டால் நாடு முழுவதும் இப்படித்தான் நிகழும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் கூறுகின்றனர்.


ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து





ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் வாழ்த்து


 ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் (SEEUN - Student Education Expedition for the United Nations) கீழ் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றம் 5.O-வில் (International Youth Forum 5.0) தமிழ்நாடு சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


#SDG Goals எனப்படும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த International Youth Forum-இல் கலந்துகொள்ளும் நீங்கள், அந்த இலக்குகளில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் சார்பில் செல்வது பெருமிதம் தருகிறது. எளிய பின்புலத்தில் இருந்து உலக அரங்கில் தமிழ்நாட்டின் முகங்களாகச் செல்லத் தேர்வாகி இருக்கும் உங்களைப் போன்றோரின் வெற்றிதான் நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான #DravidianModel அரசின் உண்மையான வெற்றி!


இந்த வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகவும், உலக அளவிலான exposure வழங்கிடும் பயணமாகவும் அமைந்திட வாழ்த்துகள்.


ஜூலை 18 : “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள்



 ஜூலை 18 : “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


நமது தாய் நிலத்திற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள்!


ஜூலை 18, 1967ஆம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு” என சட்டப்பேரவையில் அண்ணா முழங்கியவுடன் தமிழர்களின் மனதில் ஏற்பட்ட உணர்வெழுச்சியை, பெயர் மாற்ற பாசிஸ்டுகள் துடிக்கும் போதெல்லாம் இன்றும் உணர முடிகிறது. தமிழர்களிடம் அந்த உணர்வு எழும் வரை தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்வார்கள். 


தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!


Review meeting is not a place to criticize; it is a place to encourage - Honorable Minister Mr. Anbil Mahesh



 ஆய்வுக்கூட்டம் என்பது குறை கூறும் இடமல்ல ; ஊக்கமளிக்கும் இடம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்


A Review meeting is not a place to criticize; it is a place to encourage - Honorable Minister of School Education, Mr. Anbil Mahesh



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


SLAS அறிக்கை - திருவண்ணாமலையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13

 


SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 13 திருவண்ணாமலையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாநிலத் திட்டக்குழுவால் வெளியிடப்பட்ட SLAS முடிவுகள் அடிப்படையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 13வது கூட்டம், இன்று எனது தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 


4 கல்வி வட்டாரங்களில் இருந்து 500 தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


SLAS அறிக்கை - கள்ளக்குறிச்சியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 14



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 14 கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம்.

14வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி 


சிறப்பான தேர்ச்சி விகிதத்தை வழங்க சேவையாற்றும் தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The secret of life: Be happy and helpful to others until the last moment

வாழ்வின் ரகசியம் : கடைசி நொடி வரையில் மகிழ்ச்சியாகவும், இயன்றவரை பிறருக்கு உதவிகரமாகவும் இருங்கள் The secret of life: Be happy and helpful t...