கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிரிவு வாரியாக நல்லாசிரியர் விருது: தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பிரிவு வாரியாக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு, நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறையில் கல்வி மாவட்டத்திற்கு இருவர் வீதமும், துவக்கக் கல்வித்துறையில் 3 பேர் வீதமும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  
இந்த விருதுகள் பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. அதேபோல தேசிய அளவில், மாவட்டத்திற்கு ஒருவர் நல்லாசிரியர் விருது பெறுகிறார். அவருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை, ஆசிரியர்களின் பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. தமிழக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியிருப்பதாவது:
தற்போது பள்ளிக் கல்வித்துறை, துவக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதை, தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் என பிரிவு வாரியாக விருது வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பை உயர்த்தும் வகையில், தற்போது மாநில அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.5 ஆயிரம் என்பதை, ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் ஊக்க ஊதியம், பஸ்களில் இலவச பாஸ் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2027 | Instruction Manual for House-listing and Housing Census

  இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரைக் கையேடு Guide  Census of India 2027 | In...