கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தீபாவளி முன்பணம் சொற்பம்: அரசு ஊழியர் தயக்கம்

அரசிடம் இருந்து தீபாவளி முன் பணமாக 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ள அரசு ஊழியர்களும், போலீசாரும் தயக்கம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு, அரசு ஊழியர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை மாதம் 200 ரூபாய் வீதம் 10 தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர். வழக்கம் போல் நடப்பு ஆண்டும் தீபாவளி முன்பணம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களும், போலீசாரும் முன்பணம் பெற தயாராக இல்லை.  தேனி மாவட்டத்தை பொறுத்தவரை போலீசார் 5 சதவீதம் பேர் கூட தீபாவளி முன்பணம் பெற விண்ணப்பிக்கவில்லை. கலெக்டர் அலுவலக ஊழியர்களும் முன்பணம் கேட்டு விண்ணப்பிக்காமல் உள்ளனர். போலீசார் கூறியதாவது: கடந்த 1994 ம் ஆண்டு தீபாவளி முன்பணம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என அரசு உத்தரவு வெளியானது. தற்போது அனைத்து பொருட்களும், ஜவுளிகளும் விலை உயர்ந்துள்ள நிலையில் 2 ஆயிரம் ரூபாயில் குடும்பத்தில் ஒருவருக்கு கூட ஜவுளி எடுக்க வாய்ப்பில்லை. இந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். தீபாவளிக்கு ஒரு மாதம் சம்பளத்தையாவது முன்பணமாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளோம்,என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்

Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)... 202...