கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று - பாரதியார் பிறந்த நாள்.

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே...'

இப்போது தெரிந்திருப்பீர்கள்... 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி நான்தான் என்று. இளம் வயதிலேயே தமிழ் மீது எனக்குப் பற்று. என் மீத
ும் தமிழுக்குப் பற்று!

இளம் வயதில் என்னை வறுமை வாட்டியது. நல்ல வேளை, சுதேசமித்திரன் பத்திரிகைக்கு நான் ஆசிரியராகி ஓரளவு வயிற்றுப் பசியைத் தீர்த்தேன். ஆனால், என்னுள் கனன்ற சுதந்திரத் தீயின் பசியைத்தான் என்னால் அடக்க முடியவில்லை.

எழுதினேன்... எழுதினேன்... வெள்ளையரை எதிர்த்து ஓராயிரம் பாடல்கள் எழுதினேன். தேசத்தைப் பற்றி எழுதினேன், தெய்வீகத்தைப் பற்றி எழுதினேன், குயில் பாட்டும்கூட எழுதினேன். அறியாமை நீங்கவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், சாதி வெறியைச் சாடியும், நாடு விடுதலை பெறவும் எழுதினேன். காக்கை, குருவிகூட எங்கள் சாதி என்று எழுதினேன்.

துப்பாக்கிக் குண்டுகளுக்குக்கூடப் பயப்படாத ஆங்கிலேயர்கள், எனது பாடல்களுக்குப் பயந்தார்கள். ''ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்'' என்று பாடினேன்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் எனது கவிதை நின்றது. சுதந்திரப் போராட்ட வீரனுக்கு மரணமில்லை என்பார்கள். எனது கவிதை வடிவிலே இன்றும் நான் உங்களிடம் வாழ்கிறேன்!''
*
இன்று - டிசம்பர் 11: தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன்... மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன்... மக்கள் மனங்களில் வாழும் ஒருவன்... அழகிய தமிழ் மகன் பாரதியார் பிறந்த நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings

 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செ...