கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி வெளியாகும் அதிகாரப்பூர்வமற்ற தகவலை நம்ப வேண்டாம்...

 அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அரசு கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஆசிரியர் பணியிடம் வாங்கித்  தரகர்கள் தருவதாக சில, அங்கீகரிக்கப்படாத நபர்கள் தங்களை அணுகுவதாக, சில விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மை இல்லாத, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு, பணி வாங்கித் தருவதாக கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀🌀...