கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை உடனடியாக மூடுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு...



அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும், அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தொடக்கப்பள்ளிகள் நடத்த அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.


அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அங்கு பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களை மாற்று பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுமாயின் அதற்கு அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பு. அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 07.05.2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.2 - Updated on 31-07-2025

  தற்போது TNSED Schools  App-ல் Health and wellbeing - Students health screening module changes பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள...