கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்


 அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்


தமிழ்நாடு அரசு. ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி குடும்பப் பாதுகாப்பு நிதி (Family Security Fund) பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை.


மாவட்ட அளவிலேயே இந்த நிதியை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அளவிலேயே வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை. அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் இயற்கை எய்தினால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 50,000 குடும்பப் பாதுகாப்பு நிதியைப் (FSF) பெறுவதில் பெரும் சிக்கல் இருந்தது.


இதற்கான கோப்புகள் சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுமதி வந்த பிறகே பணம் வழங்கப்படும். இதனால் பல குடும்பங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இந்த நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது அரசாணை எண் 267ஐ நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி அந்தந்த மாவட்ட கருவூல அலுவலர்களே இந்த நிதியை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



>>> நாளிதழ் செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கு...