கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.


நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை; மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.


திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.



சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.


 மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.


பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கூறப்படுவது, "அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும்  பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.


இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்துச் சென்றவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இரவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்" என்றனர்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


5ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை



 5ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை


சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் ரோஷினி (10 வயது). இவர், பொழிச்சலூர் ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா வேலைக்கு சென்று வருகிறார். அவர் வேலைக்கு சென்று விட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி மகள் ரோஷினியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.


இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த மாணவி ரோஷினி, தனது தம்பி கண் எதிரேயே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


School student commits suicide - Case registered against 3 people including HM



 பள்ளி மாணவர் தற்கொலை - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு


School student commits suicide - Case registered against 3 people including HeadMaster 


 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை வேல் நகரை சேர்ந்தவர் கலாவதி (47). சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருடைய மகன் யோசுவா (15). பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.


பிப்ரவரி 27-ம் தேதி பள்ளியில் இருந்து கலாவதியை தொடர்பு கொண்டு உடன் படிக்கும் மாணவர் ஒருவரை யோசுவா அடித்து விட்டதாக கூறி பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு தற்போது வேலையில் இருப்பதால் மறுநாள் வருவதாக கலாவதி கூறியுள்ளார். கலாவதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது யோசுவா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.



போலீஸார் மாணவர் யோசுவாவின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆசிரியர்கள் கண்டித்ததால், மன உளைச்சலில் இருந்த யோசுவா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மாணவர் எழுதிய கடிதத்தில் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்து விடுமாறும், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், அட்வகேட் மேடம் ஆகியோர் தான் செய்யாத தவறுக்கு அடிக்கடி திட்டியதாகவும், அவர்களால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது எனவும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.


மாணவர் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்றும், உண்மையான காரணத்தை போலீஸார் மறைப்பதாகவும் கூறி யோசுவாவின் உறவினர்கள், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட முயன்றனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.



இதற்கிடையே யோசுவாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீஸார் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலரால் ஆசிரியர்கள் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE - Holidays 2025-2026 Academic Year

தொடக்கக்கல்வித்துறை - 2025-2026ஆம் கல்வியாண்டு விடுமுறை நாட்கள் விவரம் DEE - List of Holidays 2025-2026 Department of Elementary Education -...