கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census House Number எழுதும் முறை



 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை (Census House number) எழுதும் murqi


மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கனிவான கவனத்திற்கு:


மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை (Census House number) எழுதும்போது, கட்டிட எண் பெரும்பாலான முக்கிய இடங்களில் இல்லை அல்லது வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கும் எண் வேறாக உள்ளது என பல களப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே, சீரான தன்மையைப் பராமரிக்கும் பொருட்டு, கட்டிடத்தின் முக்கியப் பகுதியில் கட்டிட எண்ணையும், அடைப்புக்குறிக்குள் எத்தனை கணக்கெடுப்பு வீடுகள் (Census houses) உள்ளன என்பதையும் எழுதுமாறு கணக்கெடுப்பாளர்களுக்கு (Enumerators) அறிவுறுத்தலாம்.


அதை அடிக்கோடிட்டு (Underline), ஒவ்வொரு கணக்கெடுப்பு வீட்டின் நுழைவாயிலிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை எழுத வேண்டும்.


எடுத்துக்காட்டாக:

முதல் கணக்கெடுப்பு வீட்டின் கட்டிட எண் 32/12 எனில், அதை பின்வருமாறு எழுத வேண்டும்:


32/12

--------

0001


கணக்கெடுப்பாளர்கள் செயலில் (App) HLO பதிவைத் தொடங்கியுள்ள இடங்களில், முதல் பதிவிற்குப் பிறகு தகவல்களை ஒத்திசைக்க (Sync) அவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Self Enumeration : கணக்கெடுப்பாளர்களுக்கான தகவல்

 


Self Enumeration : கணக்கெடுப்பாளர்களுக்கான தகவல்


மொத்தமுள்ள 10 லட்சம் சுய கணக்கெடுப்புகளில்  (Self Enumeration), சுமார் 5 லட்சம் இன்று காலை 11 மணிக்குள் செயலாக்கப்பட்டுவிட்டன (processed). மீதமுள்ளவை மாலைக்குள் செயலாக்கப்படும்.


எனவே, கணக்கெடுப்பாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், செயலியை refresh செய்து நாளை முயற்சிக்குமாறும் தெரிவிக்கவும்.


இதற்கிடையில், அவர்கள் தங்கள் பகுதிகளைக் கண்டறிந்து, கட்டிட எண்களை உறுதிசெய்து, மாதிரி வரைபடத்தை (layout map) வரையுமாறு அறிவுறுத்தலாம்.


CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு

 


மக்கள்தொகை கணக்கெடுப்பு CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு


விவரங்கள்:


* வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.


* சுய கணக்கெடுப்பு முடித்தவர்கள், உருவான SE ID எண்ணை வீடுகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர வேண்டும்.


* சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யாதவர்கள், வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தகவல்களை வழங்கினால் அவர் பதிவு செய்வார்.


* அரசின் ID கார்டு அணிந்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாளர்களிடம் மட்டுமே தகவல்களை வழங்க வேண்டும்.


* அரசின் ID கார்டு இல்லாமல் கணக்கெடுப்பு என்ற பெயரில் வரும் நபர்களிடம் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.


* சந்தேகங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்: 1855


ஆடி 18 : உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


ஆடி 18 - 03-08-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


Districts where a local holiday has been announced for Aadi 18 (August 3, 2026)



ஆடி பெருக்கு:  


தருமபுரி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


சேலம் மாவட்டம்: 

 ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தருமபுரி மாவட்டம்: 

 தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சரவணன்.



ஈரோடு மாவட்டம்: 

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 03-08-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


 ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம்: 


ஆடிப்பெருக்கு மற்றும் கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். 


இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம்: 


திருப்பூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை  03.08.2026 உள்ளூர் விடுமுறை.


ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.




ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை



 ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை


விசித்திரமான வரலாறு 


இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின்  மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2026க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹45000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

சூழல் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

 


ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு : தூத்துக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் துணிகரம்


தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, பெண் ஆசிரியையிடம் 16 பவுன் தங்கத் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையனைப் போலீசார்  தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், செவ்வாய் அன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காகப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான்.


சங்கிலியைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட சங்கிலியின் மதிப்பு ரூ. 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய கொள்ளையனைப் பிடிக்க மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Neral To Matheran Toy Train



 🚂 நெரால் டு மாதேரான் : மேகங்களுக்கு நடுவே செல்லும் பொம்மை ரயில் பயணம்! 🌧️🌲 Neral To Matheran Toy Train


சுற்றிலும் அடர்ந்த பச்சைக்காடுகள்... கையில் தொடும் அளவுக்கு மேகக்கூட்டங்கள்... மலைகளின் வளைவு நெளிவுகளில் மெதுவாக ஊர்ந்து செல்லும் சின்னஞ்சிறு பொம்மை ரயில்! 🚂💚


மகாராஷ்டிரா மாநிலத்தின் சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் மாதேரான் (Matheran) மலைப்பிரதேசத்திற்கு, நெரால் (Neral) ரயில் நிலையத்திலிருந்து செல்லக்கூடிய இந்த நூற்றாண்டு கால 'டாய் ட்ரெயின்' பயணம், Matheran Hill Railway இந்திய ரயில்வேயின் ஒரு வரலாற்று மேஜிக்! 🌟


🛑 முக்கிய அறிவிப்பு (Monsoon Closure Info):

கனமழை, நிலச்சரிவு மற்றும் தண்டவாள பாதுகாப்பு கருதி, நெரால் - மாதேரான் இடையேயான முழுமையான டாய் ட்ரெயின் சேவை ஜூன் 15 முதல் அக்டோபர் 15 வரை நிறுத்தப்பட்டுள்ளது! 🛑🌧️


(குறிப்பு: வழக்கம்போல மழைக்காலம் முடிந்ததும் அக்டோபர் 15-க்கு பிறகு இந்த ரயில் சேவை மீண்டும் முழுவீச்சில் தொடங்கும்!)


🔷சரி இப்போது எப்படிச் செல்வது?:

 நெராலிலிருந்து அமன் லாட்ஜ் (Aman Lodge) வரை ஷேர் டாக்சியில் செல்லலாம். அல்லது சொந்த வாகனங்கள் மூலம் கூட செல்லலாம்.


 அங்கிருந்து மாதேரான் வரை இயங்கும் குறுகிய தூர ஷட்டில் ரயில் (Shuttle Train) அல்லது நடைபயணம் மூலம் மாதேரானை அடையலாம்!


🛣️ பயண பாதையில் என்னவெல்லாம் பார்க்கலாம்? 


சுமார் 21 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாதையில் ரயில் 3 மணி நேரம் மெதுவாகச் செல்லும். 


🔷சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதி (Eco-Sensitive Zone):

 மாதேரானுக்குள் மோட்டார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது! அதனால் இங்கு வீசும் காற்று அவ்வளவு தூய்மையாக இருக்கும்.


🔷280-க்கும் மேற்பட்ட வளைவுகள் (Sharp Curves):

 மலைகளைச் சுற்றிச் சுற்றி ரயில் செல்லும்போது கிடைக்கும் இயற்கை பின்னணி காட்சிகள் வேற லெவல்!


🔷ஒன் கிஸ் டன்னல் (One Kiss Tunnel):

 இந்த ரயில் பாதையில் இருக்கும் ஒரே ஒரு குறுகிய அழகான குகைப் பாதை.


வழியில்  சிறிய ரயிலின் ஜன்னல் வழியே பார்த்தால் பாதாள பள்ளத்தாக்குகளும், கொட்டும் சிறிய நீர்வீழ்ச்சிகளும் கண்ணுக்கு விருந்தளிக்கும். 🌊⛰️


💡 பயணிகளுக்கு  டிப்ஸ்:

 அக்டோபர் 15-க்கு பிறகு குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு செல்ல பிளான் பண்ணுங்க!


 நெரால் ரயில் நிலையத்திலேயே நேரடியாக டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

மலைகளின் அழகை ரசிக்க... இதுவே மிகச்சிறந்த பயணம்! ✊🚂🌧️


இல்லை நான் இப்போதே செல்கிறேன் என்றாலும் காரில் அல்லது இருசக்கர வாகனத்தில் சென்று மாதேரான் அழகை மனதார ரசித்து மகிழலாம்.


📍 Route: Neral Junction --> Aman Lodge

 


துணைத்தேர்வுகள் ஜூன் / ஜூலை 2026 - தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை



Supplementary Examinations June/July 2026 – Procedure for downloading exam results and applying for a copy of the answer script.


மேல்நிலை துணைத்தேர்வு ஜூன் / ஜூலை 2026 - தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்த செய்திக்குறிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பதவி உயர்வுக்கு 01-03-2026ன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப உத்தரவு

 


Order issued to submit details of those who have passed the TET as of 01-03-2026 for promotion


 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01-03-2026இன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப ஆதிதிராவிடர் நலஇயக்குனர் உத்தரவு

28.7 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census House Number எழுதும் முறை

 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை (Census House number) எழுதும் murqi மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கனிவான கவனத்திற்கு: மக்கள் தொகை கண...