கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 



பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பெண்ணை பார்த்து கண் அடிப்பது, சைகை செய்வது, மற்றும் பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பது போன்ற செயல்கள் பாலியல் தொல்லையின் கீழ் வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் வழக்கொன்றில், இத்தகைய செயல்கள் பாலியல் ரீதியான தொந்தரவு மற்றும் குற்றச் செயலாகக் கருதப்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 


2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது


முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 


முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 02-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த விளக்கம்

 மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த செய்முறை விளக்கம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சுய மார்பகப் பரிசோதனை 


இருபது வயதைக் கடந்த அனைத்து மகளிரும் மாதம் ஒருமுறை 

தங்களின் மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பின்வரும் சுய மார்பகப் பரிசோதனையை கட்டாயம் செய்யவும் 


முதல் படி 

பாருங்கள் 


முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களின் இருபக்க தோள்பட்டைகளையும் நேராக வைத்துக் கொண்டு கைகளை கீழே தொங்க விட்டுக் கொள்ளுங்கள். 

இப்போது தங்களின் இருபக்க  மார்பகங்களிலும் 

அளவிலோ

வடிவத்திலோ

நிறத்திலோ ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்களா? 

ஏதேனும் வீக்கத்தைக் காண்கிறீர்களா? 


இப்போது உங்களின் இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மேற்கூறியவற்றைப் பார்க்கவும். 


இரண்டாவது படி 

உணர்தல்


தங்களின் தோள்பட்டைப் பகுதிக்குக் கீழ் தலையைணையை வைத்துப் படுத்துக் கொண்டு, தங்களின் இடது கையை வைத்து வலது புற மார்பகத்தையும் 

வலது கையை வைத்து இடது புற மார்பகத்தையும் தொட்டு உணர்ந்து பாருங்கள். 


மூன்றாவது படி 

உணர்தல் 


உங்களின் நடு மூன்று விரல்களின் உள்ளங்கைப் பகுதியைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தங்களின் மார்பகங்களை அழுத்திப் பரிசோதனை செய்யுங்கள். 


தங்களின் மூன்று விரல்களையும் தட்டையாக சேர்த்து வைத்துக் கொண்டு சீரான அழுத்தத்தைக் கொடுத்து இந்த பரிசோதனையைச் செய்யுங்கள்.  


சிறிய சிறிய வட்ட வடிவில் தங்களின் விரல்களை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்களின் மார்பகம் முழுமையையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும். 


ஒவ்வொரு முறை வட்ட வடிவில் அழுத்தம் தருவதற்கு இடையிலும் விரல்களை எடுக்காமல் தொடர்ந்து பரிசோதனை செய்யவும். 


வெளிப்புறத்தில் இருந்து சுற்றுப் பகுதிகளை பரிசோதனை செய்து கொண்டே உட்பக்கம் வந்து இறுதியில் முலைக் காம்பு வரை அழுத்தம் தந்த பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்யவும். 


இந்தப் பரிசோதனையில் 

ஏதேனும் வீக்கம், 

கட்டி இருப்பது போன்ற உணர்வு, தோல் பகுதி ஆரஞ்சுப் பழ தோல் போன்று தடிமனாக இருத்தல் போன்றவற்றை பரிசோதிக்கவும்


அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் 

கக்கம் (Arm pit) பகுதியை அழுத்தி அங்கு ஏதேனும் கழலை வீக்கம் இருக்கின்றதா? என்பதை பரிசோதிக்கவும். 


நான்காவது படி 

உணர்தல் 


தங்களது முலைக்காம்பை மெதுவாகப் பிதுக்கிப் பார்க்க வேண்டும். 

முலைக் காம்பில் இருந்து 

நீர் போன்ற , பால் நிற அல்லது மஞ்சள் நிற திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்பதைப் பார்க்கவும். 


ரத்தம் வெளியேறுவது புற்று

நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். 


ஐந்தாவது படி

பார்த்தல் & உணர்தல் 


மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் மற்றொரு மார்பகத்திலும் செய்ய வேண்டும்.


ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும். 


இந்தப் பரிசோதனையை மாதம் ஒரு முறை செய்வதன் மூலம்  தங்கள் மார்பகங்களில் நேரும் மாற்றங்களை உடனே இனங்கண்டு மருத்துவ உதவியை நாட முடியும். 


முப்பது வயதைக் கடந்தோர்

வருடம் ஒருமுறையேனும் மருத்துவரிடம் நேரடி மார்பகப் பரிசோதனை  செய்து கொள்வது நல்லது. 


விரைவான நோய் கண்டறிதல் மூலம்

துரிதமான சிகிச்சை அளித்து

வியத்தகு முன்னேற்றம் அடைந்து

முழுமையான நோய் குணம் பெற முடியும். 


எனதருமை தாய்மார்களே சகோதரிகளே இன்றே தொடங்கிடுவீர் சுய மார்பகப்பரிசோதனையை... 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





ஷபே பாரத் வரையறுக்கப்பட்ட விடுப்பு RL இன்று (04.02.2026) எடுக்கலாம் - வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம்


ஷபே பாரத் வரையறுக்கப்பட்ட விடுப்பு Restricted Leave எப்போது எடுக்கலாம்?


ஷபே பராத் வரையறுக்கப்பட்ட விடுப்பு RL / RH இன்று (04.02.2026) எடுக்கலாம் - உருது பள்ளிகளின் வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்

 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்


TNTET - Genuineness Certificate  & SR Entry Format


>>> Click Here to Download SR Entry Letter & Genuineness Certificate Apply Covering Letter Format 



>>> Click Here to Download Genuineness Certificate Apply Form 



TNTET - Genuineness Certificate பெற  & SR Entry செய்ய தேவையான படிவங்கள் - Model 2

(Attach  TET certificate & Hall ticket)


👇


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 04.02.2026

கிழமை:- புதன்


 

திருக்குறள்: 

குறள் 304:

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.     

விளக்க உரை: முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?


பழமொழி :
Small efforts daily lead to big results.    

தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.


பொன்மொழி :

இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.

        - ஔவையார்


பொது அறிவு :

01.ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?

HMS சேலஞ்சர்- HMS Challenger

02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?

அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 America -Lunar Orbiter 1


English words :

cascade-waterfall

studious-hardworking


தமிழ் இலக்கணம்:

இரண்டு வட மொழிச் சொற்கள் சேர்ந்து ஒரு சொல் வரும் போது வல்லினம் மிகாது
தேசம் + பிதா = தேசபிதா
ஆனால் முதல் எழுத்து வடமொழி சொல்லாக இருந்து அடுத்த சொல் தமிழ் சொல்லாக இருந்தால் வல்லினம் மிகும்
தேச+தந்தை = தேசத் தந்தை.
தேசம் வடமொழிச் சொல். தந்தை தமிழ் சொல்

அறிவியல் களஞ்சியம் :

1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.


பிப்ரவரி 04

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


உலகப் புற்றுநோய் நாள்

உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.


நீதிக்கதை

கர்வம் கொண்ட மயில்

குறள் :

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம் :

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

கதை :

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும்.

ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள்.

நீதி :

தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.


இன்றைய செய்திகள்

04.02.2026

⭐செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்துள்ளது.

⭐இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

⭐ இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Today's Headlines

⭐  The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government  hospital.

⭐The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..

⭐ Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.

*SPORTS NEWS*

🏀The 4th Women's Premier League (WPL) 20-over cricket match between 5 teams is underway in Vadodara, Gujarat.
The Smriti Mandhana-led Royal Challengers Bangalore team, which finished first with 12 points (6 wins, 2 losses) at the end of the league round, advanced directly to the final.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 03.02.2026

கிழமை:- செவ்வாய்


 

திருக்குறள்: 

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
     
விளக்க உரை:

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.


பழமொழி :
There is no substitute for hardwork.  

கடின உழைப்பிற்கு மாற்று எதுவும் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.


பொன்மொழி :

இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் ...

---------- இறையன்பு ஐஏஎஸ்


பொது அறிவு :

01.கரீபியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவு எது?

          கியூபா -Cuba

02.இந்தியாவின் முதல் இரத்த வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

கொல்கத்தா-மேற்கு வங்காளம்

Kolkatta- west  Bengal


English words :

Adverse - unfavorable. பாதகமான. எதிரான.

Anticipate -to expect something to happen, hope for something

ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருத்தல்


தமிழ் இலக்கணம்:

என்ன? யாவை? என்ற வினாச் சொற்களை எங்கு உபயோகிக்க  வேண்டும்?
வினா கேட்கும் போது செயல் ஒருமையாக இருந்தால் என்ன என்பதை பயன்படுத்த வேண்டும்? செயல் பன்மையாக இருந்தால் யாவை என்பதை பயன்படுத்த வேண்டும்.
எ. கா
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* என்ன? இது தவறு
காரணங்கள் என்று பன்மையில் வருவதால்
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* யாவை ? என்று வர வேண்டும்
காற்று மாசுபாட்டிற்கு *காரணம்* யாவை? என்று வரக்கூடாது.
காரணம் என்பது ஒருமைச் செயல் எனவே
காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்ன என்று வர வேண்டும்?


அறிவியல் களஞ்சியம் :

குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகத்துடனான தொடர்பை துண்டிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, ஷார்ட்வேவ் மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் இங்கு அடைவதில்லை.


பிப்ரவரி 03

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது.


ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்

கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை.


 
நீதிக்கதை

எதிர்காலம்

ஒரு நாள் முல்லா தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை, அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும், மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார். முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன், அடித்து மிரட்டிப் பார்த்தேன், ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.

குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும், மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

அம்மா, முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு, முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.



இன்றைய செய்திகள்

03.02.2026

⭐பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை - சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு.
கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

⭐ இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு & உளவு அமைப்பான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அமைப்பிற்கு ரூ.6,782.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

⭐ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம்- டிரம்ப்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

Today's Headlines

⭐ Chief Minister quote *travel is a classroom without books* at  the center of Tourism Summit. Also Tamilnadu government has allocated Rs. 612 crore for the department of tourism  in the last 5 years.

⭐ The central government has allocated Rs. 6,782.43 crore for the 'Intelligence Bureau' that is India's internal security & spy agency.

⭐US president Trump said
they will launch a military attack on Iran if there is no agreement .

*SPORTS NEWS*

🏀The T- 20 World Cup will be held in India and Sri Lanka from February 7 to March 8.

 

86 New KV Schools List


86 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் New Kendriya Vidhyalaya Schools பட்டியல் வெளியீடு


List of 86 (85 new and 01 existing) KVs


தமிழ்நாட்டில் தேனி மற்றும் தஞ்சாவூரில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது



>>> புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET 2025 Paper 1 & Paper 2 Certificate Download link



TET 2025 Paper 1 & Paper 2 Certificate Download link provided in TRB Website now


https://tetcertificate.ucanassess.in/candidate/login



Login செய்ய தேவையானவை


Registration / Roll Number


Date of Birth (DD-MM-YYYY)


Budget 2026-2027 - முக்கிய தகவல்கள்



நிதிநிலை அறிக்கை 2026-2027 செய்திகள் 


🌹👉9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல்  செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

27 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இதுவாகும்

🌹👉 இளைஞர்கள் மற்றும்  பெண்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉மருந்து தயாரிப்பு துறைக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு 

இதன் மூலமாக பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉எளியமுறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கான மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு

தமிழ்நாட்டை போலவே ஒடிசா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும் என அறிவிப்பு                                             🌹👉"செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு"

செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

🌹👉மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

🌹👉ஜவுளித்துறைக்கான புதிய திட்டம் அறிவிப்பு மகாத்மா காந்தி பெயரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஹேண்ட் லூம் கைத்தறி உள்ளிட்டவை இதன் மூலமாக மேம்படுத்தப்படும் இந்தியாவின் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பலன் பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கான வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

இதற்காக நான்கு மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் உருவாக்கப்படும்

மகாத்மா காந்தி  ஸ்வராஜ் திட்டம் என இதற்கு பெயர்

🌹👉மூலதன செலவு ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடியாக ரூபாயாக உயர்வு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

🌹👉சென்னை பெங்களூர் ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு

🌹👉மருத்துவ சுற்றுலாவை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்

இது தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் 

மருத்துவ சிகிச்சைகளுடன் கல்வி மற்றும் நோய் கண்டறிவது குணப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மேற்கொள்ளப்படும் 

இதன் மூலமாக மருத்துவர்களுக்கும் மற்ற துறை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

🌹👉ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்.

 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் அமைக்கப்படும்

🌹👉AIக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்

AI  மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது

🌹👉நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தலா ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்

🌹👉ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்

🌹👉தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

🌹👉ஆந்திரா - தமிழ்நாடு புலிகட் பகுதியில் பறவை கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்

🌹👉தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

🌹👉"12 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளோம்" 

-நிர்மலா சீதாராமன் உரை

🌹👉"உலக சந்தைகளுடன் இந்தியா ஆழமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்

விக்ஸித் பாரத்தை நோக்கி இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும்"

 - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉எளியமுறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும்                                                                             🌹👉பாஜக அரசின் சீரிய நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரித்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

🌹👉செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

🌹👉“மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவுக்கு அறிமுகம்

🌹👉விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

 🌹👉நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு 

பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும் 

🌹👉குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

🌹👉"மூலதனச்செலவு ரூ.12.20லட்சம் கோடியாக உயர்வு"

🌹👉புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு

🌹👉கோயில் நகரங்களுக்கு 

முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்

நிர்மலா சீதாராமன்

🌹👉"சென்னை - பெங்களூரு; சென்னை - ஐதராபாத் இடையே அதிவேக  ரயில் வழித்தடம் அமைகிறது"  - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉"ஜவுளித்துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்"

உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் - நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்

🌹👉“பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉மும்பை - பூனே, ஐதராபாத் - சென்னை, புனே - ஐதராபாத் 

இடையே அதிவிரைவு 

ரயில் தடங்கள் உருவாக்கப்படும்

🌹👉நாட்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

🌹👉 ரூ.5,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் பொருளாதார மண்டலங்கள்

🌹👉வெளிநாடு வாழ் இந்தியர்கள் 

இனி இந்திய பங்குச்சந்தையில் 

முதலீடு செய்யலாம் - -நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

🌹👉“25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉நாட்டின் வளர்ச்சிக்கு 7 புதிய "அதிவேக ரயில் வழித்தடங்கள்" அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு! 

நகரங்களை அதிவேகமாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த 'வளர்ச்சி இணைப்பான்களின்' நோக்கம்

🌹👉ஸ்மார்ட் சிட்டியாக மாறும் சிறு நகரங்கள்.! இந்தியாவின் முகத்தை மாற்றப்போகும் மெகா திட்டங்கள்.!

🌹👉தென்னிந்தியாவிற்கு  ஜாக்பாட்!

அறிவிக்கப்பட்டுள்ள 7 வழித்தடங்களில் 3 முக்கிய வழித்தடங்கள் சென்னையை இணைக்கின்றன: 

✅ சென்னை - பெங்களூரு 

✅ சென்னை - ஹைதராபாத் 

✅ ஹைதராபாத் - பெங்களூரு

பயண நேரம் பாதியாக குறையும், வணிகம் செழிக்கும்! 

🌹👉இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்காக ஒரு விடுதி அமைக்கப்படும்

-பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

🌹👉“கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 🌹👉வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி! 

இந்த அதிவேக ரயில் திட்டங்கள் வெறும் போக்குவரத்துக்கானவை மட்டுமல்ல, Tier-2 மற்றும் Tier-3 நகரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் "வளர்ச்சி இணைப்பான்கள்" (Growth Connectors). இதன் மூலம் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்!

🌹👉நவீனமயமாகும் இந்திய ரயில்வே! 

அதிவேக ரயில் வழித்தடங்களுடன், பாதுகாப்புக்காக Kavach 4.0 தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதியை நாடு முழுவதும் ஏற்படுத்துவதே இலக்கு!

🌹👉பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

🌹👉தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது ஒன்றிய அரசு

🌹👉இந்தியாவில் தரம் மிகுந்த விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கப்படும் 

-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉வளர்ச்சியைத் தூண்ட 6 முக்கியத் திட்டங்கள்! 🚀

1️⃣ 7 துறைகளில் உற்பத்தி உயர்வு 

2️⃣ பாரம்பரிய தொழில் மறுசீரமைப்பு 

3️⃣ சாம்பியன் MSME உருவாக்கம் 

4️⃣ உள்கட்டமைப்பு விரிவாக்கம் 

5️⃣ நீண்டகால உறுதித்தன்மை 

6️⃣ நகர பொருளாதார மண்டலங்கள்

🌹👉வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி!

புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள்: 

✅ ₹4 லட்சம் வரை வரி இல்லை 

✅ வரி அடுக்குகளில் சீர்திருத்தம் 

சாமான்ய மக்களின் சேமிப்பை உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

🌹👉மத்தியபட்ஜெட்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

🌹👉தமிழகத்திற்குப் புதிய கனிம வழித்தடம்!

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசாவில் 'அரிய வகை கனிம வழித்தடங்கள்' (Rare Earth Corridors) அமைக்கப்படும். 

ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை பெற வாய்ப்பு! 

🌹👉“ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉மாணவர்களின் படைப்பாற்றலுக்குப் புதிய சிறகுகள்!

மும்பை 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ்' (IICT) உதவியுடன்: ✅ 15,000 மேல்நிலைப் பள்ளிகள் 

✅ 500 கல்லூரிகள் ஆகியவற்றில் 

AVGC Content Creator Labs அமைக்கப்படும்.

🌹👉எதிர்கால வேலைவாய்ப்பிற்குத் தயார்!

அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் (VFX) துறையில் இந்தியாவை உலக மையமாக மாற்ற இந்த ஆய்வகங்கள் உதவும். பள்ளிக்காலத்திலேயே மாணவர்களுக்குத் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

🌹👉“பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்!” -நிர்மலா சீதாராமன்

🌹👉கிழக்கு இந்தியாவிற்குப் புதிய மகுடம்!

✅கிழக்கு பிராந்தியத்தில் (Northeast) புதிய 'தேசிய வடிவமைப்பு நிறுவனம்' (NID) அமைக்கப்படும்-  நிதியமைச்சர்

✅இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் படைப்பாற்றல் மற்றும் தொழில்முறை வடிவமைப்பு கல்வி பெரும் ஊக்கம் பெறும். 

🌹👉20,000 புதிய நிபுணர்கள்!

இந்த புதிய திட்டத்தின் மூலம் கால்நடை மற்றும் துணை மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் அதிகமாக உயர்த்தப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் மேம்படும்!

🌹👉 “Animation, VFX, Gaming மற்றும் Comics (AVGC) துறைகளில் மாணவர்களை மேம்படுத்த AVGC Content Creator Lab-கள், 1,500 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அமைக்கப்படும்.”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉ஆயுர்வேத மேம்பாட்டிற்குப் புதிய வேகம்! 

✅ 3 புதிய அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் (AIIA) 

✅ ஆயுஷ் மருந்தகங்கள் & ஆய்வகங்கள் தரம் உயர்வு 

✅ ஜாம்நகர் WHO பாரம்பரிய மருத்துவ மையம் மேம்பாடு

🌹👉பாரம்பரிய மருத்துவத்தின் உலக மையம்! 

குஜராத், ஜாம்நகரில் உள்ள WHO பாரம்பரிய மருத்துவ மையத்தின் (GTMC) உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வு வசதிகள் தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

🌹👉ஆயுஷ் மருந்து உற்பத்தி & தரம்

நாடு முழுவதும் ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் சோதனை ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். பாதுகாப்பான மருந்துகள் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்! 

🌹👉மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்  - நிர்மலா சீதாராமன்

🌹👉மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41% சதவீதமாகவே தொடரும்

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிப்பு 

🌹👉சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு போக்குவரத்து!

✅ டன்குனி - சூரத் இடையே புதிய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் (DFC). 

✅ அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர் வழித்தடங்கள். 

✅ சரக்கு கையாளும் திறன் மேம்பாட்டிற்குப் பயிற்சி நிறுவனங்கள்! 

🌹👉மத்திய பட்ஜெட்டில் தமிழக சுற்றுலா

"தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் 3 பார்வை மையங்கள் அமைக்கப்படும்"

• நிர்மலா சீதாராமன்

 🌹👉"வருமான வரி தாக்கல் எளிமைப்படுத்தப்படும்"

“வருமானவரி தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும்“

"நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு" 

“தனிநபர்கள் போல நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகின்றது“ 

-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉“மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு!”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉“கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார வரி (TCS), 5%லிருந்து 2%ஆகக் குறைக்கப்படும்!”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉Data Centre டெவலப்பர் நிறுவனங்களுக்கு வரி விடுமுறை -நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்

🌹👉வரி நடைமுறையில் வெளிப்படைத்தன்மை!*

புதிய 'விதிமுறை சார்ந்த முறை' மூலம் தகுதியான வரிதாரர்களுக்குத் தானாகவே சலுகைச் சான்றிதழ் கிடைக்கும். இது வரி ஏய்ப்பைத் தடுப்பதுடன், நேர்மையான வரிதாரர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்

🌹👉 மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது 

பிரதமர் நரேந்திர மோடி . பேச்சு


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு பெண்ணை பார்த்து கண...