கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு



  கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.


கார் மோதிய வேகத்தில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்தும், காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.


விபத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 2 மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.


போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - இயக்குநர்களின் செயல்முறைகள்



Proceedings of the Directors of School Education and Private Schools, Tamil Nadu, regarding the conduct of anti-drug awareness programs.


போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET Passed Teachers விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET)  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை


ந.க.எண்    3570 /அ3/2026, நாள் 10.06.2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,

அனைத்து அரசு /  நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (10.06.2026) இரு படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

1. அதில் Sec.Gr.Teacher / Spl.Tr.and PET Service Details என்ற படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் (இசை,ஓவியம்,தையல்) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Passed Teachers only) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 26 வரை கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 12..6.2026க்குள் ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

2. அடுத்தப்படியாக இரண்டாம் படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உநிப/மேநிப பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 23 வரை கோரியுள்ள விவரங்களை பூரத்தி செய்து 13.6.2026 க்கு ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

Note: TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் (TET Not qualified or Not Passed) விவரங்களை இப்படிவத்தில் கொண்டுவரவேண்டாம்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு இப்படிவத்தில் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட நகல் மற்றும், சார்ந்த ஆசிரியரின் படிவத்தில் பூர்த்தி செய்துள்ள  விவரங்களுக்கு உரிய SR கருத்துரு நகல் ,TET தேர்ச்சி பெற்ற சான்றிதழ்    தங்கள் அலுவலகப் பிரிவு எழுத்தர்/தனி நபர்  மூலம் 12.06.2026 மாலை 5.00 மணிக்குள் எவ்வித தாமதமுமின்றி,  முதன்மைக் கல்வி அலுவலகம், A3 பிரிவு எழுத்தரிடம் நேரில் வந்து ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.





11-06-2026 TN SCERT Special TET 1 & 2 - Maths - Paper 2 Social Science SESSION 1 - Youtube Links

 


Good afternoon all. 

Kindly note today session and its timings



Click here for SPECIAL TET PAPER 1 MATHS SESSION 1

https://www.youtube.com/live/m6miqXYlEpM?si=cr8iwj2wl8WuYY0C



Click here for SPECIAL TET PAPER 2 MATHS SESSION 1

 https://www.youtube.com/live/Sku5sCsvW-s?si=YF7aBBnzHKvj37D1



Click here for SPECIAL TET PAPER 2 SOCIAL SCIENCE SESSION 1

https://www.youtube.com/live/vCCRcLpS3G0?si=CNOZ9Do1Oai2HVXX


Session starts on 11.6.26 at 6.30 PM Today.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-06-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:426

குறள்:

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

பொருள்:

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.


பழமொழி :

Fortune favors the brave.

துணிவுடையோர்க்கே வெற்றி.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

பொறுமை கசப்பானது; அதன் கனியோ இனிமையானது.


Thought for the Day :

Responsibility is the bridge between goals and achievements.


பொது அறிவு :

1. இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக பதவி வகிப்பவர் யார்?

N .S.ராஜா சுப்பிரமணி.

2. தமிழகத்தில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் துறை (AI) அமைச்சர் யார்?

உயர்திரு. ஆர். குமார் அவர்கள்.


English words :

Benefit – Advantage, நன்மை.

Conceal – Hide, மறை.


NMMS :

1, 7, 3, 63, 5, 215, 7, ______

(1)342. (2) 511. (3)517. (4) 343.

1. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகிய இடங்களில் ஒற்றை எண்கள் அமைந்துள்ளன.

2. இரண்டாமிடத்தில் உள்ள 7 என்பதற்கான சமன்பாடு

             (முந்தைய எண் + 1)3  -  1

        I) இரண்டாமிட எண் (1 + 1)3  -  1 =  (2)3  -  1 = 8 - 1 = 7

        II) நான்காமிட எண் (3 + 1)3  -  1 =  (4)3  -  1 = 64 - 1 = 63

          III) ஆறாமிட எண் (5 + 1)3  -  1 =  (6)3  -  1 = 216 - 1 = 215

        IV) எட்டாமிட எண் (7 + 1)3  -  1 =  (8)3  -  1 = 512 - 1 = 511

விடை: (2) 511


புவியியலும் சுற்றுசூழலும் :

"இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்புள்ள குடிமக்கள்." எனவே வாரத்தில் இரு நாட்கள் குடிமையியல் குறித்தும் பார்ப்போம்.


குடிமையியல் என்றால் என்ன?

குடிமையியல் என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறை, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வியாகும்.


ஜூன் 11
உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.


நீதிக்கதை

  "வீட்டுப் பாடத்தின் மதிப்பு"

ஒரு கிராமத்தில் மணி என்ற மாணவன் இருந்தான். அவன் பள்ளிக்குச் சரியாகச் செல்வான். ஆனால் வீட்டுப் பாடம் செய்வதில் ஆர்வம் காட்டமாட்டான்.

ஒருநாள் ஆசிரியர் கணித வீட்டுப் பாடம் கொடுத்தார். மணிகண்டன் “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று நினைத்து விளையாடச் சென்றான். அவன் நண்பன் கோபி மட்டும் வீட்டுப் பாடத்தை கவனமாகச் செய்தான்.

மறுநாள் ஆசிரியர் அனைவரின் நோட்டுப் புத்தகத்தையும் பார்த்தார். கோபியின் வீட்டுப் பாடம் மிகவும் அழகாகவும் சரியாகவும் இருந்தது. ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.

மணி  மட்டும் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்திருந்தான். பாடத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனுக்கு வெட்கமாக இருந்தது.

அன்று மாலை மணி கோபியிடம், “நீ எப்படி பாடங்களை இவ்வளவு நன்றாகப் புரிந்துகொள்கிறாய்?” என்று கேட்டான்.

கோபி சிரித்துக்கொண்டு, “வீட்டுப் பாடம் செய்வது பாடத்தை மீண்டும் பயிற்சி செய்வது போல. அதனால்தான் எனக்கு எளிதாகப் புரிகிறது,” என்றான்.

அப்போது மணிக்கு தனது தவறு புரிந்தது. அந்த நாளிலிருந்து அவன் தினமும் வீட்டுப் பாடத்தை நேரத்திற்கு செய்து வந்தான். சில மாதங்களில் அவனும் வகுப்பில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக மாறினான்.

நீதி: வீட்டுப் பாடத்தை தவறாமல் செய்வதால் அறிவும் திறமையும் வளர்கின்றன. 


இன்றைய செய்திகள்
11.06.2026

🗒️10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு   அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்.

🗒️இந்தியாவின் நீண்ட கால பிரதமர் எனும்  சாதனை படைத்தார் நரேந்திர மோடி.

🗒️இங்கிலாந்து நாட்டில்  சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி துருவ்ராவத்-மனீஷா  வெற்றி பெற்றுள்ளனர்.

🏀ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில்  பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.


Today's Headlines

🗒️ Minister Rajmohan awarded incentive scholarships to students who scored high marks in the Class 10 and Class 12 public examinations.

🗒️ Narendra Modi has set a record as India's longest-serving Prime Minister.

🗒️ In England, restrictions have been imposed on children using social media platforms. England.

Sports News

🏀 In the Australian Open Badminton Tournament, the Indian pair Dhruv Rawat and Manisha emerged victorious. Australian Open Badminton Tournament.

🏀 In the women's singles category of the Australian Open Badminton Tournament, P. V. Sindhu secured a victory. P. V. Sindhu.


DSE - Revised Tranfer Counselling Schedule 2026-2027



பள்ளிக் கல்வித் துறை - திருத்திய ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு


DSE - Revised Teachers' Tranfer Counselling Schedule 2026-2027



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சுற்றறிக்கை-2


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண். 032782 / சி3 / இ1 / 2026 , நாள்.10.06.2026


பொருள்:-


பள்ளிக் கல்வி - 2026-27ம் ஆண்டு அனைத்துவகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை அனுப்புதல் சார்பு.


பார்வை:-

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க. எண்.032782 / சி3 / இ1/ 2026, நாள். 08.06.2026  ந.க. எண். 009324/டி1/2026, நாள் 08.06.2026


-0-


பார்வையில் காணும் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026-27ம் ஆண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான காலஅட்டவணை மற்றும் மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.


இணைப்பு: திருத்திய காலஅட்டவணை


பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக)


இச்சுற்றறிக்கையின் நகலினை (DEO (Sec.) தகவல் அளிக்கவும்)


நகல்: 

1  EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6


2 சம்மந்தப்பட்ட பிரிவுகள் (W1, W2, W3, C1, C2, C3, C4, C5, V1)


5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - ஏற்பாடுகளை வரும் 22.06.2026க்குள் மேற்கொள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு

 


 திருச்சி (கிழக்கு), பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை வரும் 22.06.2026க்குள் மேற்கொள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு - தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விளக்கம்








Most Immediate By Speed post

PUBLIC (ELECTIONS.III) DEPARTMENT, SECRETARIAT, CHENNAI-600 009.

e-mail / Letter No.16300/2026-3, Dated: 09.06.2026.

From 
Tmt. Archana Patnaik, I.A.S., 
Chief Electoral Officer & Principal Secretary to Government

To 
The Collector of Chengalpattu District 
The Collector of Tiruchirappalli District 
The Collector of Erode District 
The Collector of Tiruppur District 
The Collector of Tirunelveli District (with enclosure to all)

Sir,

Sub: ELECTIONS Preparatory measures for the Bye-elections to Tamil Nadu Legislative Assembly from 35.Madurantakam (SC) / 101.Dharapuram (SC) / 103. Perundurai /141. Tiruchirappalli (East) / 225.Ambasamudram Assembly Constituencies Model Code of Conduct Certain details -Called for.

Ref: From the Election Commission of India, New Delhi, letter No.437/6/INST/ECI/FUNCT/MCC/2024 (BYE ELECTIONS)/237, dated 02.01.2024.

I am to state that the following five casual vacancies have arisen in the Tamil Nadu Legislative Assembly, due to the resignation of the Members:-

Sl.

Name of the Member

No. & Name of AC No.

Name of District

Vacancy occurred on

1. Thiru. C. Joseph Vijay

141. Tiruchirappalli (East)

Tiruchirappalli

10.05.2026

2.

Thiru. S. Jayakumar

103. Perundurai

Erode

25.05.2026

3.

Tmt. K. Maragatham Kumaravel

35. Madurantakam (SC)

Chengalpattu

25.05.2026

4.

Tmt. P. Sathyabama

101. Dharapuram (SC) Tiruppur 25.05.2026

5.

Dr. Esakki Subaya.

225.Ambasamudram

Tirunelveli 26.05.2026


2. The Election Commission of India may make announcement for conduct of the poll for the bye-elections to the above Assembly Constituencies within a period of six months from the date of the occurrence of the vacancy, as per the provisions of Section 151-A of the Representation of the People Act, 1951. In view of this, it is necessary to get ready to commence electoral process immediately after the announcement of the poll schedule by the Election Commission of India.

3. The Election Commission of India, in its letter dated 02.01.2024, has communicated the detailed instructions regarding Model Code of Conduct during the Bye-elections, i.e. Enforcement of Model Code of Conduct, Publishing of Advertisements, Tours of Ministers, Transfer/Posting of Officers, etc.

4. The Election Commission, in its letter dated 02.01.2024, has issued following instructions regarding Model Code of Conduct:-

I. Enforcement of Model Code of Conduct:-

(i) In case, the constituency is comprised in State Capital / Metropolitan Cities / Municipal Corporations, then aforesaid instructions would be applicable in the area of concerned constituency only.

(ii) In case of a district in which Corporation Metro Municipal Corporation is located, Model Code of Conduct would be enforced in the particular Assembly Constituency only and not in the whole of the district.

(iii) in all other cases, the Model Code of Conduct would be enforced in the entire district(s) covering the constituency going for bye-elections(s).

5. The Election Commission, in its letter dated 02.01.2024, has directed that the Commission has decided that no officer connected directly with the conduct of Bye-election, should be allowed to continue in the present posting within the Assembly Constituency limits:-

If she he is posted in her/his home Assembly Constituency limit:

If she / he has completed three years during last four years or would be completing 3 years on or before the last day of the sixth month from the date of occurrence of the casual vacancy.

Such officers shall be shifted out of the Assembly Constituency limit.

These instructions cover Returning Officer and Assistant Returning Officers of the Assembly Constituency going for bye-election. These instructions will also cover other Officers, viz. Deputy/Assistant Collectors, Sub-Divisional Magistrates, Tahsildars and Block Development Officer located in Assembly Constituency Limits.

As far as Officer in the Police Department are concerned, these instructions shall be applicable to the Sub-Divisional Head of Police, DSPs/Circle Officers, Inspectors, Sub-Inspectors or equivalent ranks posted in the field within the Assembly Constituency Limit.

G.O.(D).No.47 - Govt Kallar School Teachers' Transfer Counseling 2026-2027



அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு


G.O.(D).No.47 - Govt Kallar School Teachers' Transfer Counseling 2026-2027


Government Order issued providing guidelines for conducting transfer counseling for teachers and wardens of Government Kallar Reclamation Schools



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் / விடுதிகள் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் /நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆசிரியர்கள் / காப்பாளர்கள், காப்பாளினிகள் -2026-2027 ஆம் கடைபிடிக்கப்பட கல்வியாண்டு முதல் பொதுமாறுதல் கலந்தாய்வு வேண்டிய நெறிமுறைகள்- ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலபிந31)த் துறை


அரசாணை (D) எண்.47 , நாள்: 02.06.2026


பராபவ, வைகாசி-19 திருவள்ளுவர் ஆண்டு, 2057 படிக்கப்பட்டது.


1. அரசாணை (14) στστ.65, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல (பிந3(1)த் துறை, நாள்:19.08.2024.


2 மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் : 06.05.2026. கடித ந.க.எண்.பி2/2334496/2025


ஆணை:


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.


2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான, தெளிவான, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கேற்ப கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கும் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்கள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.


3. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து, கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென்று அரசு ஆணையிடுகிறது.


பொது நிபந்தனைகள்


1 பணி ஓய்வு, பதவி உயர்வு, பணி துறப்பு, இறப்பு, பணி மாற்றம், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களும் பொதுமாறுதல் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் உள்ள காப்பாளர் / காப்பாளினி பணியிடங்களை ஒருங்கிணைந்த உள்ளடக்கிய காலிப்பணியிடங்களின் பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் தயாரிக்கப்பட வேண்டும்.


2. ஒவ்வொரு கல்வியாண்டிலும் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முன்னர் உள்ள கல்வியாண்டின் ஆகஸ்ட் 1-ஆம் தேதி B. Educational Management Information System (EMIS) உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.


3. கள்ளர் பள்ளிகளில் கலந்தாய்வானது, பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள் அதனையொட்டி பதவி உயர்வு என்ற முறையில் நடைபெற வேண்டும்.


4. கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் /காப்பாளினிகள் அனைவருமே முதன் முதலில் இத்துறையில் ஆசிரியர்களாகவே பணி நியமனம் செய்யப்பட்டு, அதன் பின்பு பணிமாறுதலில் காப்பாளர் / காப்பாளினியாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.


5. அதே போல் கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் முதுநிலை, முன்னுரிமை, மற்றும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கள்ளர் விடுதியின் காப்பாளர் / காப்பாளினியாக பணியமர்த்தப்பட வேண்டும்.


6. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை உசிலம்பட்டி, சோழவந்தான் மற்றும் உத்தமபாளையம் சரகங்களில் உள்ள பணியிடங்களுக்குள்ளும், சரக மேற்பார்வையாளர்களை செக்கானூரணி, பெரியகுளம் மற்றும் திண்டுக்கல் சரகங்களில் உள்ள பணியிடங்களுக்குள்ளும் கட்டாய பணிமாறுதல் (Zero Counseling) செய்யப்பட வேண்டும். மேலும், மேற்படி சரகங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களின் பணி ஒய்வு / இறப்பு / பதவி உயர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களை கொண்டு நிரப்பப்பட வேண்டும்.



Singappen Special Force - SSF | 2545 பணியிடங்கள் தோற்றுவிப்பு | ₹355 கோடி ஒதுக்கீடு | அரசாணை வெளியீடு



சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்புப் படை (Singappen Special Force - SSF) உருவாக்கம் - 2545 பணியிடங்கள் தோற்றுவிப்பு - ₹355 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Police Creation of the 'Singappen Special Task Force' to enhance the safety of women Administrative and Financial sanction for creation of Singappen Special Force (SSF) in all Districts/Cities in the State of Tamil Nadu Accorded Orders Issued.


Home (Police-XII) Department


G.O.(Ms) No.193  ,   Dated: 09.06.2026


பராபவ வருடம்.

வைகாசி திங்கள் 26-ம் நாள். திருவள்ளுவர் ஆண்டு 2057.


Read:


1. G.O.Ms.No.176, Home (Police-12) Department, dated 10.05.2026.


2. From the Director General of Police/ Head of Police Force, Chennai letter Rc.No.13688780/RA III (1)/2026, Dated 04.06.2026.


ORDER:


In the Government Order first read above, orders were issued for the creation of the Singappen Special Force (SSF) at the State Headquarters level (Phase-I) with the objective of enhancing the safety and security of women in the State of Tamil Nadu through focused preventive policing, technology-enabled interventions, community outreach and coordinated response mechanisms.


2. In the letter second read above, the Director General of Police/Head of Police Force, Chennai has submitted a detailed proposal for operationalisation of the Singappen Special Force at the field level throughout the State. The proposal envisages establishment of SSF Headquarters Units in all Districts/Cities, creation of dedicated field units covering all Police Sub-Divisions and Ranges, establishment of a dedicated Headquarters Control Room, strengthening of the State Police Master Control Room, creation of ministerial posts and provision of vehicles, communication systems, body worn cameras, drones, software upgradation, awareness programmes and other infrastructure required for effective implementation of the objectives of the Singappen Special Force.


3. The Director General of Police/Head of Police Force, Chennai has stated that the Singappen Special Force is conceived as a dedicated women safety and preventive intervention mechanism aimed at ensuring visible police presence, hotspot surveillance, safety audits, community engagement, outreach programmes in educational institutions, rapid response to incidents affecting women, social media monitoring and technology-enabled supervision of field operations. He has further stated that dedicated manpower and infrastructure are essential for ensuring continuous field engagement, effective monitoring, emergency response and coordinated functioning of the proposed Force. He has therefore requested the Government to accord administrative sanction for the creation of the required manpower and infrastructure and financial sanction towards recurring and non-recurring expenditure for operationalisation of the Singappen Special Force throughout the State.


4. The Government, after careful examination of the proposal of the Director General of Police/Head of Police Force, Chennai, have decided to accept the same.


5. Accordingly, the Government accord sanction for creation of the following posts for operationalisation of the Singappen Special Force (SSF):-



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு தலா ₹3,000 ரொக்கப்பரிசு



Cash prize of ₹3,000 each for teachers who achieved a 100% pass rate


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மட்டும்) தலா ₹3,000 ரொக்கப்பரிசு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் - செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வர...