கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

AI அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து



செயற்கை நுண்ணறிவு (AI) அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து


மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தைத் தடுக்க அதனை நிராயுதபாணியாக்க வேண்டும்.


ஒரு சில நிறுவனங்கள், நாடுகள் தங்களின் ஆதிக்கத்துக்காகவும் லாபத்துக்காகவும் மிக சக்திவாய்ந்த கணக்கீட்டு விதிகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். 


லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் மனித உழைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சமுதாயப் பேரழிவை ஏற்படுத்தும்.


– போப் 14ஆம் லியோ கருத்து


Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை



 Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை 


அனைவருக்கும் வணக்கம் 

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு ECO CLUB MISSION LIFE PORTAL / CLIMATE CHANGE PORTAL இல் பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்தல் சார்ந்து தேவையான விபரங்கள் மற்றும் வீடியோக்கள் இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது விரைந்து இப்பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 



Website Address 

https://climateeducation.in/



தேவையான விவரங்கள்

School information

1. UDISE Code

2. Institution name

3. School type

4. Address

5. District

6. Pincode

7. Latitude, Longitude (Take from GPS camera)

8. Head Name

9. Mobile no.

10. Email ID (will be the user name)

11. Password 


Incharge details 

1. Teacher’s name

2. Teacher’s mobile no.

3. Mail ID

4. Date of birth

5. Subject handled

6. Gender






>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்



பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்


இன்று (26.05.2026) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கூறிய அறிவுரைகள்


அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி அன்று பள்ளி திறக்கப்பட இருப்பதால் தங்கள் பள்ளியில் மேல்நிலைநீர்த்தொட்டிகள் அல்லது நிலத்தடி நீர்த்தொட்டிகள் இருப்பின் அவற்றை தூய்மைப்படுத்திட வேண்டும்.

 கடைசியாக தூய்மைப்படுத்த நாள் குறிப்பிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

 கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மாணவ,மாணவியரின் பயன்பாட்டிற்கு ஏதுவாக தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  

இத்துடன் சமையலறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு பாத்திரங்கள் மற்றும் மாணவர்கள் சாப்பிடும் தட்டுகள், டம்ளர்கள் தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவரங்களில் மிகுந்த கவனம் செலுத்திட அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளபடுவதாக கூறினார்கள்.

ஆய்வு அலுவலர்கள் பார்வையிட உள்ளதால் வருகின்ற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு கவனம் செலுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது..


- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்


6வது முறையாக Petrol, Diesel விலை இன்றும் உயர்வு



6வது முறையாக Petrol, Diesel விலை இன்றும் உயர்வு


 பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6ஆவது முறையாக உயர்த்தப்பட்டு விற்பனை




பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூபாய் 108.20க்கு விற்பனை ஆகிறது 


டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூபாய் 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது



1 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

 


1 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04-06-2026 அன்று பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


Schools to open on June 4 for students of classes 1 - 12 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருத்தப்பட்ட

செய்திக் குறிப்பு எண் : 096 , நாள்: 26.05.2026

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

செய்தி வெளியீடு


2026-2027 கல்வியாண்டில், 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 01.06.2026 அன்றும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 04.06.2026 அன்றும் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது.


அதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதியை உறுதி செய்வதற்கும், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான மீண்டும் திறக்கும் தேதியைக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் முறையீடுகளும் பெறப்பட்டன.


மேலும், ஜூன் முதல் வாரத்திற்கான தற்போதைய வானிலை நிலவரங்களும் முன்னறிவிப்புகளும், மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய செயல்பாடுகள் தொடர்வது, விட்டுவிட்டுப் பெய்யும் மழை, ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்ப நிலைகள் நிலவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர், சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளாகத் தயார்நிலை தொடர்பான பள்ளிகளின் ஆயத்தத் தேவைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது.


தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னர், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி,  தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வியாழக்கிழமை, 04.06.2026 அன்று ஒரே சீராக மீண்டும் திறக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தேவையான ஆயத்தப் பணிகள் முடிக்கப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.


வெளியிட்டவர்:- டிஐபிஆர், செயலகம், சென்னை - 9



Revised

Press Release No : 096 , Date: 26.05.2026

SCHOOL EDUCATION DEPARTMENT

GOVERNMENT OF TAMIL NADU

PRESS RELEASE

The School Education Department had earlier announced that schools for the academic year 2026-2027 would reopen on 01.06.2026 for Classes IV to XII and on 04.06.2026 for Classes I to III.

Subsequently, requests and representations were received from parents, teachers,and various stakeholders seeking a uniform reopening date for all classes in order to ensure administrative convenience and to avoid difficulties faced by families having children studying in different classes.

Further, the prevailing weather conditions and forecasts for the first week of June indicate the likelihood of continued pre-monsoon activity, intermittent rainfall, humidity,and associated heat conditions in several parts of the State. The Government has also reviewed the preparedness requirements of schools relating to sanitation, drinking water facilities, transportation arrangements, and overall campus readiness prior to reopening.

After careful consideration of all relevant factors, and as per the instructions of The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Raj Mohan, the Hon'ble Minister for School Education, Tamil Development and Information has informed that all schools in Tamil Nadu, including Government, Government-aided, Matriculation, and Private Schools, shall uniformly reopen for Classes I to XII on Thursday, 04.06.2026.

All Chief Educational Officers and District Educational Officers have been instructed to ensure that necessary preparatory measures are completed before reopening and that adequate arrangements are made for the welfare, safety, and well-being of students.

The cooperation of parents, teachers, school managements, and the general public is solicited.

Issued By:- DIPR, Secretariat, Chennai - 9




விரைவில் அறிமுகம் ஆகும் Ethanol Stoves



விரைவில் அறிமுகம் ஆகும் எத்தனால் அடுப்புகள் (Ethanol Stoves)


எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல். 


எல்பிஜி-யை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.



எத்தனால் அடுப்பு எல்பிஜி போன்றே எரியும்; இது மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது-நிதின் கட்கரி.


Hr. Sec. School HM Vacancies தொடர்பான முக்கிய தகவல்



மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (Higher Secondary School Headmaster Vacant Places) தொடர்பான முக்கிய தகவல் 


பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 25.05.2026 நிலவரப்படி மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் மொத்தம் 435 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக 230 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 205 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர்களுக்காக நிரப்பப்பட உள்ளன.


மேலும், கலந்தாய்வு நடத்துவதற்கான அட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CUET UG தேர்வு ஒத்திவைப்பு



மே 28ஆம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைப்பு


பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து மே 28ஆம் தேதி நடக்க இருந்த CUET UG தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


2026ம் ஆண்டிற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு Common University Entrance Test (CUET) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது.


புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்; தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணைய தளங்களை பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.


ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் என்டிஏ உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் - தேசிய தேர்வு முகமை.


JACTTO GEO சார்பாக முதலமைச்சரிடம் இன்று (26-05-2026) வழங்கப்பட்ட கோரிக்கைகள் மனு

 





ஜாக்டோ ஜியோ JACTTO GEO சார்பாக முதலமைச்சர் அவர்களிடம் இன்று (26-05-2026) வழங்கப்பட்ட கோரிக்கைகள் மனு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு



 அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் 


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்ததும், கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

AI அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து

செயற்கை நுண்ணறிவு (AI) அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தைத் தடுக்...