கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்



 TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


ஆசிரியர் தகுதி தேர்வு 4 மற்றும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளதால் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு தேதி மாற்றம் - DEE Revised Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்த DEE & DSE செயல்முறைகள்...




தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந. க. எண். 009324/டி1/2026, . நாள் 09.06.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2026 மாதத்தில் நடத்துதல் -விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கியது தொடர்பாக திருத்திய ஆணை வழங்குதல்-சார்ந்து,


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள். 17.12.2021.


2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.032782/சி3/இ1/2026, நாள் . 08.06.2026 மற்றும் ந.க.எண்.009324/10-1/2026, நாள் . 08.06.2026.


பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும், இதர கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்



பெறுநர்:


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி).


(இச் செயல்முறையினை தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்)


நகல்:


1. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநில திட்ட இயக்குநர் சமக்கர சிக்க்ஷா, சென்னை-6. அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.


3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக


2026- 2027 Teachers' Transfer Counseling - DSE & DEE Proceedings & Schedule

 


பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - 2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் & கால அட்டவணை வெளியீடு


DSE & DEE - 2026- 2027 Teachers' Transfer Counseling Proceedings & Schedule Released


தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026-27 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண். 032782 / சி3 / இ1 / 2026 , நாள் : 08.06.2026


ந.க. எண். 009324 / டி1 / 2026 , நாள் : 08.06.2026


பொருள்:-


பள்ளிக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.


பார்வை-


1) அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021


2) அரசாணை (நிலை)எண்.180 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.10.2022


3) அரசாணை (நிலை)எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.24.5.2023


4) அரசாணை (நிலை) எண். 164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024


5) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் ந.க. எண்.037584/சி3/இ 1/2025 , நாள்.18.06.2025


6) தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13466/டி1/2025, நாள்.18.06.2025


 -0-


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2025-26 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனை பின்பற்றி கடந்த ஆண்டு (2025-26) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் முடிக்கப்பட்டுள்ளது. பணிகள்


2) அதேபோல 2026-27ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ഖത ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 15.06.2026 முதல் 22.06.2026 வரை 06.00 பிப வரை EMISல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.


பார்வை-2ல் காணும் அரசாணையில் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிநிறைவடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்குபெற விருப்பம் உள்ள அனைத்துவகை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


 3) ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMIS மூலம் வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்ததேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியர் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென olrar Login ID Teacher Profile ல் சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் Individual Login IDஐக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும். 


ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பத்தினை பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும்.


மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியரது விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட (CEO) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


> அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் தங்களுக்கென ஒதுக்கீடு செய்ப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் 2nd Approval செய்யப்படவேண்டும்.


பொதுமாறுதல் கலந்தாய்வில் வழங்கப்படும் முன்னுரிமை Priority 


1. முற்றிலும் கண்பார்வையற்றவர் 100%


2. மாற்றுத்திறனாளிகள் (40% அதற்கு மேல் ஊனம் உள்ளவர்கள்) (கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் உட்பட)


3. மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தை உள்ள பெற்றோர்


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டையாலிசிஸ் சிகிச்சை / இதய அறுவை சிகிச்சை / புற்றுநோயாளிகள் / மூளைகட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள்


5. இராணுவத்தில் பணிபுரிபவரின் கணவன் / மனைவி


6. விதவை / மனைவியை இழந்தவர் / 40 வயது கடந்த முதிர்கன்னியர் / சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை 


7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள்


8. கணவன் / மனைவி பணி முன்னுரிமை (above 30km)


9. இதர பிரிவுகள்


மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் (Competent authority) அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


தற்போது பணிபுரியும் பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) i) விருப்ப மாறுதல் ii) மனமொத்த மாறுதல் ii) நேரடி நியமனம் iv) பதவி உயர்வு v) நிருவாக மாறுதல் vi) அலகு மாறுதல் vil) பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


4) ஆசிரியர் பயிற்றுநர் BRTE & DC


ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் ஒருங்கிணைப்பாளர்களும் விருப்ப மாறுதல் கோரி EMIS ல் மேற்காண் அறிவுரைகளின்படியே விண்ணப்பிக்கவேண்டும். இவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும் மாறுதல் விண்ணப்பங்களை சரிபார்த்து Approval சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் மேற்கொள்ளப்படவேண்டும்.


5) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை


ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு பயன்படுத்தி EMIS செய்யப்பட்ட Individual Login ID வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


மாறுதலுக்கு விண்ணப்பித்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரும் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) தங்களுக்குரிய Login IDஐ பயன்படுத்தி சரிபார்த்து ஒப்புதல் (Approval) அளிக்கப்படவேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் / அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


6) பொதுமாறுதல் அறிவுரைகள் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான


மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை / மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க தங்களுக்கு என EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட் User Name and Pasword ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.


மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்திடல் வேண்டும்.


7) பொதுவான அறிவுரைகள்


மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்படவேண்டும் மற்றும் எந்த  பணியிடத்தில் (Post Details Zoology, Botony, Biology)  பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்படவேண்டும்.


கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் /பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும். கணவன் பணிபுரியும் மாவட்டம் (அ) மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே தெரிவு செய்ய அனுமதிக்கப்படவேண்டும். வேறு மாவட்டங்களை தெரிவு செய்திட அனுமதிக்க இயலாது.


> உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy) காலிப்பணியிடங்களில் மேற்காணுமாறு Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரவர்களின் முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை (One More choice) காலிப்பணியிடங்களை விருப்பத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.


மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது) 


மேலும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம் /மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) சார்பான விண்ணப்பங்கள். பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


> கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது எனவும், தற்செயல் விடுப்பு அளித்துவிட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது.


மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


> மேலும் இணைப்பில் காலஅட்டவணையில் விண்ணப்பிக்கப்பட்ட காணும் தெரிவித்துள்ளவாறு மாறுதல் கோரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Login IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி திருத்தங்கள் / முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


> பார்வை-1ல் காணும் அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024ன்படி கடந்த ஓராண்டிற்குள் (1.6.2025 to 31.5.2026) ஆசிரியரின் கணவரோ (அ) மனைவியோ விபத்து மற்றும் இதர காரணங்களால் திடீரென மரணம் அடைந்து இருப்பின் எந்தவித முன்னுரிமையும் பின்பற்றாமல் கலந்தாய்வுக்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்திற்கு மாறுதல் வழங்கப்படவேண்டும்.


புகாருக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே பள்ளியை கலந்தாய்வில் தெரிவு செய்திட அனுமதித்தல் கூடாது. மேலும் போக்சோ வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு மாவட்டத்திற்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த அதே மாவட்டத்தினை தெரிவு செய்ய அனுமதித்தல் கூடாது. இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


> கலந்தாய்வு:- அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர்களின் EMIS Login மூலமாகவே நடத்தப்படும்.


தொடக்கக் கல்வி இயக்ககம்


1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்/ தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை:


* ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login ID யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


2. பொது மாறுதல் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


ஆசிரியரின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பெற்ற தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டவற்றினை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக வட்டாரக் கல்வி அலுவலர்Approval செய்யப்பட வேண்டும்.


+ மேற்படி வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியனை சம்பந்தப்பட்ட (DEO) மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை வட்டாரக் கல்வி அலுவலரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 2nd Approval செய்யப்பட வேண்டும்.


மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


+ தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகையில் (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) I) விருப்ப மாறுதல் ii) மனமொத்த மாறுதல் iii) நேரடி நியமனம் iv) பதவி உயர்வு V) நிர்வாக மாறுதல் vi) அலகு மாறுதல் vil) பணி நிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


3. பொது மாறுதல் சார்பாக மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை மாவட்டக் கல்வி அலுவலரிடம் (தொடக்கக் கல்வி) ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாறுதல் கோரி விண்ணப்பத்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஒப்புதல் அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட User Name and Password ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.


மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) சரிபார்த்திடல் வேண்டும்.


+ கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு /வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து முதன்மைக் கல்வி கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அலுவலர்கள்/மாவட்டக் தெரிவிக்கலாகிறது.


இணைப்பு: பொதுமாறுதல் காலஅட்டவணை

(பள்ளிக் கல்வி & தொடக்கக் கல்வி)


தொடக்கக் கல்வி இயக்குநர்     பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் &

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் மூலமாக) இச்சுற்றறிக்கையின் நகலினை (DEO (Sec.) & BEO's தகவல் அளிக்கவும்)


நகல்: 1 இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி & மேல்நிலைக் கல்வி)

2  EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6 

3 சம்பந்தப்பட்ட பிரிவுகள் (W1, W2, W3, C1, C2, C3, C4, C5, V1)



09-06-2026 TN SCERT Special TET 1 & 2 - தமிழ் - SESSION 1 - Youtube Links

 


09-06-2026 TN SCERT Special TET 1 & 2  - தமிழ் - SESSION 1 - Youtube Live Links


Good afternoon all. Kindly note today session and its timings



Click the link for TET 1 - *தமிழ்* - SESSION 1  https://www.youtube.com/watch?v=GZlJ4Xd7g8A




Click the link for TET 2 - *தமிழ்* - SESSION 1 https://www.youtube.com/watch?v=gqgXcO80X7c



Session starts on 9.6.26 at 6.30 PM Today.


UDISE+ ல் Students Progression ஐ மேற்கொள்ள தேவையான படிவம்



UDISE+ ல் Students Progression ஐ  மேற்கொள்ள தேவையான படிவம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். 


2026-27 ம் ஆண்டிற்கான Students Progression ஐ UDISE+ ல் மேற்கொள்ள வேண்டி உள்ளதால்,  மேற்காணும் படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக தங்கள் பள்ளி AI இடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நன்றி.




08-06-2026 TN SCERT Special TET 1 & 2 - CDP - SESSION 1 - Youtube Links



TN SCERT Special TET Paper 1 & 2  - CDP - SESSION 1 - Youtube Links


Good afternoon all. Kindly note today session and its timings



Click the link for TET 1 - Child Development and Pedagogy CDP - SESSION 1  https://www.youtube.com/watch?v=JW-Aa5jVVVY




Click the link for TET 2 - CDP - SESSION 1 https://www.youtube.com/watch?v=eSRfp7Cd9_U



Session starts on 8.6.26 at 6.00 PM Today.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-06-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:424

குறள்:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

பொருள்:
தான்‌ சொல்லுவனவற்றை
எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌.


பழமொழி :

பழக பழக பாலும் புளிக்கும்.

Familiarity breeds contempt.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.

2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை.


Thought for the Day :

Responsibility is not what is given to you. It is what you choose to own.


பொது அறிவு :

1. இந்தியாவிலேயே முதல் முறையாக கடலுக்கடியில் அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படுகிறது?

மகாராஷ்டிரம்.

2. ஜுன் 1, 2026 நிலவரப்படி இந்தியாவில் உள்ள இரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

18.


English words :

Accept – Receive, ஏற்றுக்கொள்.

Brave – Courageous, தைரியமான.


NMMS :

8,4,15,5,22,6, ____ , ________

(1) 29, 7. (2) 28, 7. (3) 29, 8. (4) 27, 8.

    1)     இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் இடத்தில் உள்ள எண்கள் வரிசையாக உள்ளன. அதன்படி எட்டாவது இடத்தில் வரவேண்டிய எண் 7
    2)  o  8 + 7 = 15
        15 + 7 = 22
        22 + 7 = 29

விடை: (1) 29,7


புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி நமக்குக் கிடைத்த பரிசு அல்ல; முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றது.


ஜூன் 09
சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.


நீதிக்கதை

புத்தகத்தின் மதிப்பு

ஒரு கிராமத்தில் வருண் என்ற சிறுவன் படித்து வந்தான். அவனுடைய புத்தகங்களும் நோட்டுகளும் எப்போதும் சிதறிக் கிடக்கும். சில நேரங்களில் புத்தகத்தின் பக்கங்களை மடிப்பான், நோட்டுகளில் கிறுக்குவான். பள்ளிப் பையை கூட சரியாக வைத்துக்கொள்ள மாட்டான்.

அதே வகுப்பில் நந்தினி என்ற சிறுமி படித்தாள். அவள் தனது புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட்டு, பெயர் எழுதி, மிகவும் பத்திரமாக வைத்திருப்பாள்.

ஒருநாள் தேர்வு நெருங்கியது. வருண் படிக்க அமர்ந்தபோது, அவன் அறிவியல் நோட்டினை காணவில்லை. கணிதப் புத்தகத்தின் சில பக்கங்கள் கிழிந்திருந்தன. முக்கியமான குறிப்புகள் பலவற்றை அவனால் படிக்க முடியவில்லை.

ஆனால் நந்தினி தனது புத்தகங்களையும் நோட்டுகளையும் ஒழுங்காக வைத்திருந்ததால், தேவையான பாடங்களை எளிதாகத் திரும்பப் படித்தாள்.

தேர்வு முடிவுகள் வந்தபோது, நந்தினி நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். வருணுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வரவில்லை.

அப்போது ஆசிரியர் கூறினார்:

"புத்தகங்களும் நோட்டுகளும் நம் அறிவின் நண்பர்கள். அவற்றைப் பத்திரமாகப் பராமரித்தால், அவை சரியான நேரத்தில் நமக்கு உதவும்."

அன்றிலிருந்து வருணும் தனது புத்தகங்களையும் நோட்டுகளையும் கவனமாகப் பாதுகாக்கத் தொடங்கினான்.

நீதி: புத்தகங்களையும் நோட்டுகளையும் பத்திரமாகப் பராமரிப்பது நல்ல பழக்கமும், நல்ல கல்விக்கான அடிப்படையும் ஆகும். 📚✨


இன்றைய செய்திகள்
09.06.2026

🗒️கீழடி அகழாய்வில் செங்கல் கட்டுமான சுவரின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🗒️மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018 சட்டத்தின் கீழ் செய்தித்தாள்களில் திண்பண்டங்களை மடித்து
வழங்கத் தடை.

🗒️அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் காரணமாக ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என  இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

விளையாட்டு செய்திகள்

🏀கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


Today's Headlines

🗒️ The continuation of a brick-built wall has been discovered during the excavations at Keeladi Excavation Site.

🗒️ To protect public health, wrapping and serving food items in newspapers has been prohibited under the Food Safety and Standards Regulations, 2018.

🗒️ Due to the conflict between the United States and Iran, the Indian Embassy has advised citizens to avoid traveling to Iran.

Sports News

🏀 Cricket – India secured a convincing victory in the Test match against Afghanistan.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-06-2026

 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:423

குறள்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:
எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌,கேட்டவாறே கொள்ளாமல்‌,அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌.


பழமொழி :

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

Faith is the force of life.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.


2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

"வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியுமல்ல."


Thought for the Day :

"Responsibility is not a burden. It is an opportunity to prove your character."


பொது அறிவு :

1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜுலை 18.

2. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் யார்?

உயர்திரு. ராஜ்மோகன் அவர்கள்.


English words :

Avenue - a road bordered by houses or trees, அழகான தெரு.

Believe - regard as true, நம்பு


NMMS :

அடுத்த உறுப்பைக் கண்டுபிடி:- 4,9,19,39,___

(1)59         (2)69         (3) 79         (4) 74

விடை :    (3) 79


புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும்.
உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரே கோள் பூமி ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரும் 29% நிலமும் உள்ளன.


ஜூன் 08
உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை

  “சிறிய துளி, பெரிய பலன்”

ஒரு கிராமத்தில் அருண், மீனா என்ற இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர், “தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் மழைநீரை சேமிக்க வேண்டும்” என்று கூறினார்.

அருண் அந்தப் பாடத்தை கவனமாகக் கேட்டான். வீட்டிற்குச் சென்று, அப்பாவுடன் சேர்ந்து வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு தொட்டியில் சேமிக்கும் ஏற்பாடு செய்தான்.

ஆனால் மீனா, “மழை வந்தால் தண்ணீர் தானே கிடைக்கும்! இதற்கெல்லாம் என்ன அவசியம்?” என்று நினைத்தாள்.

சில மாதங்கள் கழித்து கோடைக்காலம் வந்தது. கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் குடிநீருக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அருணின் வீட்டில் சேமித்திருந்த மழைநீர் இருந்ததால் அவர்களுக்கு சிரமம் இல்லை.

அதைப் பார்த்த மீனா, “நானும் மழைநீரை சேமித்திருக்க வேண்டும்!” என்று உணர்ந்தாள். அடுத்த மழைக்காலத்தில் அவளும் மழைநீர் சேமிப்பு முறையை அமைத்தாள்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மழைநீரை சேமிக்கத் தொடங்கினர். கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறைந்தது.

நீதி:

💧 “மழைநீரை சேமிப்போம்; நாளைய தண்ணீர் தேவையை பாதுகாப்போம்.”

💧 “சிறு துளி சேர்ந்து பெரிய செல்வமாகும்.”


இன்றைய செய்திகள்
08.06.2026

🗒️ தமிழக சிங்கப் பெண் படை. ஜூன் 9 ல் தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

🗒️உலகளவில் இந்தியாவில்  தான்  சமையல் எரிவாயு விலை குறைவு மத்திய அரசு அறிவிப்பு .

🗒️ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கப்படும் என  வடகொரியா உறுதி.

விளையாட்டு செய்திகள்

🏀தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

🏀ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற  தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து.


Today's Headlines

🗒️ The Tamil Nadu government has announced that the Tamil Nadu Singa Penn Force will be launched on June 9.

🗒️ The Central Government has stated that India has the lowest cooking gas (LPG) prices in the world.

🗒️ North Korea has pledged to increase its missile production by 2.5 times.

Sports News

🏀 South Asian Women's Football Championship: The Indian team won the trophy.

🏀 Tamil Nadu chess player Savitha Shri, who won a gold medal at the Asian Chess Championship, was congratulated by Chief Minister Vijay.


TNSED Schools App New Version: 0.4.3 - Updated on 05-06-2026




தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

TNSED Schools App New Version: 0.4.3 - Updated on 05-06-2026 - Application Enhancements and Performance improvements have been implemented



* TNSED Schools App


* What's is new..?



🎯 Added enhancements to the Uniform


📍Noon Meal, and Breakfast Schemes module


UPDATED ON  05 June 2026

Version: Now 0.4.3


Link:




Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 123 பேருக்கு பாதிப்பு - பரவும் வழிகள், தடுப்பு முறைகள்

 


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 123 பேருக்கு பாதிப்பு - பரவும் வழிகள், தடுப்பு முறைகள்


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து மூன்று சிறுமிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறுமிகள் குணமடைந்துள்ளனர் . ஒரு சிறுமி உயிர் இழந்துள்ளார் என கேரள மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் திருமுருளிதரன் தெரிவித்துள்ளார்.


ஷிகெல்லா நோய்      


 ஷிகெல்லா தொற்று (Shigellosis) என்பது ஷிகெல்லா (Shigella) எனப்படும் பாக்டீரியாவால் குடலில் ஏற்படும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். 

இது கடுமையான வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் கூடிய மலம் மற்றும் வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது.


பரவும் வழிகள்:

அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட நபரின் மலம் படிந்த பொருள்கள், கைகள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.

சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்துவதாலும், நெருங்கிய தொடர்புகளாலும் பரவ வாய்ப்புள்ளது.


அறிகுறிகள்:

கடுமையான வயிற்றுப்போக்கு (மலத்தில் ரத்தம் மற்றும் சளி காணப்படலாம்).

அதிக காய்ச்சல் மற்றும் குளிர்.

தீவிரமான வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு.

குமட்டல் மற்றும் வாந்தி.


பாதுகாப்பு மற்றும் சிகிச்சை:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதைத் (Dehydration) தடுக்க, ORS கரைசல் மற்றும் அதிக நீர் ஆகாரங்கள் கொடுக்க வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி, மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.


தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விவரங்கள்

 


தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விவரங்கள்


உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கட்டணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்


https://tnfeecommittee.com/fees28dirsticts.php


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்

 TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு ஆசிரியர் தகுதி தேர்வு 4 மற்றும்...