கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 - ஆதார், புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்ய உத்தரவு



NHIS 2026 – Order by the Department of Treasuries and Accounts to upload details regarding Aadhaar, photographs, disability categories, and family members into IFHRMS


NHIS Updation in IFHRMS


NHIS 2026 - ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


G.O.Ms.No.93 - Creation of 125 Computer Instructor Grade 1 Posts



127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு


G.O.Ms.No.93 , Dated : 13-03-2026 - Creation of 125 Computer Instructor Grade 1 Posts


127 BT posts Surrendered and newly 125 Computer Instructor (Grade-1) posts created



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மாணவர்களுக்கு ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கல்விக்கடன்

 


Collateral-free education loans up to Rs. 7.5 lakh for students - District Collector's press release


 வங்கிகளில் மாணவர்களுக்கு ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கல்விக்கடன் - மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செ.வெ.எண்.29 , நாள்.07.07.2026


பத்திரிகைச் செய்தி


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது,


 தேனி மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறுவதற்கு https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும்பொழுது மாணவர்களின் ஆதார் அட்டை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்வி கட்டணம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம், பெற்றோர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வருமான வரி அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும், மாணவர்கள் மூன்று வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.


Namakkal MP requests exemption of teachers from census duties

 


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை


Namakkal MP requests exemption of teachers from census duties




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் :  பொருட்பால்         

இயல் : அரசியல்  

அதிகாரம்:45    பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:445

குறள்:

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 

பொருள்:

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.


பழமொழி :

Art is long and life is short

கல்வி கரையில் கற்பவர் நாள் சில.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :

பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.


Thought for the Day :

Dream big, work hard, stay humble.


பொது அறிவு :

1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது?

டிசம்பர் 10. 

2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

டிசம்பர் 10.


English words :

Generate – Produce, உருவாக்கு.

Illustrate – Explain, விளக்கிக் காட்டு.


புவியியலும் சுற்றுசூழலும் :

உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா


NMMS :

MAT

வேறுப்பட்டதை கண்டுபிடி.

விடை: (2)


ஜூலை 08
செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார். சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.


நீதிக்கதை

"நல்ல வார்த்தையின் சக்தி"

ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.

அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.

ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.

மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.

மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.

அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.

நீதி:

நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.


இன்றைய செய்திகள்
08.07.2026

🗒️ஹிட்டாச்சி ஒப்பந்தம்:
ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிட்டாச்சி (Hitachi) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

🗒️கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மீனாட்சி பகுதியில்  ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், கோழிக்கோடு–வயநாடு இரட்டை சுரங்கப்பாதை திட்ட பணியாளர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

🗒️பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀2-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி.

🏀விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.


Today's Headlines

🗒️ Hitachi Agreement:
The Tamil Nadu Government has signed a Memorandum of Understanding (MoU) with Hitachi to invest ₹1,000 crore, creating 1,000 employment opportunities.

🗒️ One person died in a sudden landslide in the Meenatchi area of ​​Kerala's Wayanad district, and intensive search and rescue operations are underway for workers involved in the Kozhikode-Wayanad twin tunnel project.

🗒️ Prime Minister Narendra Modi has been conferred Indonesia's highest civilian award.

Sports News

🏀 2nd ODI:
Sri Lanka defeated India in the second One Day International match.

🏀 Djokovic's Wish:
Novak Djokovic, the Wimbledon champion, said he would like to play cricket with Virat Kohli.


'Department of Social Justice' - ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றம்

 


ஆதிதிராவிடர் நலத்துறை இனி 'சமூக நீதித்துறை' என பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு


The Adi-Dravidar Welfare Department is being renamed the 'Department of Social Justice'.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் 'சமூக நீதித்துறை' என மாற்றம் - தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு.


அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் வகையில், தமிழ்நாடு வணிக விதிகளில் திருத்தம் செய்து நடவடிக்கை

 

ABSTRACT

Tamil Nadu Government Business Rules, 1978 - Change of Nomenclature of 'ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT' as 'SOCIAL JUSTICE DEPARTMENT' -Amendment to the Tamil Nadu Government Business Rules, 1978-Orders - issued.

HUMAN RESOURCES MANAGEMENT(A) DEPARTMENT

G.O.(Ms.)No.35 , Dated: 06.07.2026

Read:

G.O.(Ms).No.366, Public (Special.A) Department, dated 30.05.2026

ORDER:

In exercise of the powers conferred by clauses (2) and (3) of Article 166 of the Constitution of India, the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Tamil Nadu Government Business Rules, 1978:-

AMENDMENT.

In the said Rules, in the "FIRST SCHEDULE", for the heading"ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT", the heading"SOCIAL JUSTICE DEPARTMENT" shall be substituted.

(BY ORDER OF THE GOVERNOR)

M. SAI KUMAR

CHIEF SECRETARY TO GOVERNMENT

All Secretaries to Government, Secretariat, Chennai - 600 009

The Secretaries to Chief Minister, Secretariat, Chennai -600 009.

The Secretary to Governor, Chennai-600 022.

The Adi Dravidar and Tribal Welfare Department,

Chennai -600 009.




திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு

 


திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு - நாளிதழ் செய்தி 


9 பள்ளிகளை மூட முடிவு


ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?


திருப்பூர், ஜூலை 7-திருப்பூர் மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாத, 9 அரசு பள்ளி கள் நடப்பு கல்வியாண்டில் மூடும் நிலை உருவாகியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில், 144 அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 10க்கும் குறைவாக உள்ளது. இது தவிர, ஒரு மாணவர் கூட இல்லாமல், 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாமல், 7 பள்ளிகளும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 2 பள்ளிகளும் உள்ளன.


வேலை தேடி பெற்றோர் வெளியூர் செல்வது, இடம்பெயர்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகர்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது. 


ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது


அய்யம்பாளையம், பொங்கலுாரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகிய இரண்டிலும், ஒரு மாணவர் கூட நடப்பு கல்வியாண்டில் சேரவில்லை.


இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. 


பள்ளி வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.




NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card

 


NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card


NHIS 2026 to Tamilnadu Government Employees:


தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID  விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department  Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)


இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும்   e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது   குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Deaths inside cars – How to prevent them?



கார்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள் - தடுப்பது எப்படி?


சமீப காலமாக பூட்டிய காருக்குள் 

நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 


சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும்

 துக்கம்


இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து 

காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. 


தற்போதையை காலத்தில் 

மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் 

இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் 


பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வந்தால் ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து 


என்பதை பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன். 


பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி 

உள்ளேயே அடைபட்டு போய் அதிகமாக மரணிக்கின்றனர். 


அரிதாக பெரியவர்களும் குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள். 


இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம். 


ஒரு சராசரி மனிதனுக்கு 

தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. 


அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும். 


இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள்  மூடப்பட்ட காருக்குள் 

நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம்.. 


பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும்.  

வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ 

உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது. 


காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. 

அப்படியென்றால் காருக்குள் இருக்கும்   சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில் ,

735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும். 


ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 

0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என 

ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம் 

அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும்  சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது. 


பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்? 


இதற்குக் காரணம் 

நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது  

ஆக்சிஜனை வைத்துக் கொண்டு 

 சுவாசத்தை வெளிவிடும் போது 

கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம். 


முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்து விடும். 


ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் 

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள்  கூடிக் கொண்டே செல்லும். 


இது தான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து. 


ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். 


சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளது. 


கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது 


1½ நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு - 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது

5 நிமிடங்களில் - 2500 பிபிஎம் 


(2000 பிபிஎம் தாண்டினாலே 

மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)


22 நிமிடங்களில் - 6000 பிபிஎம் 


இத்தனைக்கும் ஏசியை  வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40000 பிபிஎம் தொட்டிருக்கின்றன. 


மற்றொரு ஆய்வில் 

இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டு பயணிக்கும் போது 

பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 

பிறகு இந்த அளவுகள் 1000 க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளது. 


இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 

கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம் 


2000-2500 பிபிஎம் வரை

-  சோர்வு 

- கவனச்சிதறல் 

- வேக்காடாக உணர்தல் 


2500-5000 பிபிஎம் 

- தலைவலி

- தலை சுற்றல் 

- உறக்கம் ஏற்படும் நிலை 


5000- 40,000 பிபிஎம் 

- மூச்சுத் திணறல் 

- மூர்ச்சை நிலை

- அதீத கவனக் குறைபாடு 


40,000 க்கு மேல்

- தீவிர மூச்சுத் திணறல் 

- கோமா 

- திடீர் மரணம் ஏற்படுதல் 


இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் 

காருக்குள்  அடைபடும் போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுப் போதுமானதாக இருந்தாலும் கூட 

நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் - மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும். 


இதனால் நாம் தேவைக்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் 

நமது உடலில் ஒரே நேரத்தில் 

ஆக்சிஜன் குறைபாடும் ( ஹைப்பாக்சியா) 

கூடவே ஹைப்பர் கேப்னியா ( கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும் 


இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். 

பல உறுப்புகளும் செயலிழக்கும்.  

மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 

மூர்ச்சை நிலைக்குச் சென்று 

சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


இதற்கடுத்தபடியாக 

நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு 

அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம்  உறங்குவது சரியா? 


தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட.. 


அதாவது கார் ஓடும் போதும் கூட 

ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால் 

வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது. 


மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, 

வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை. 


 அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் (BASEMENT)  அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது. 


காரணம் - காருக்குள் செல்லும் காற்றானது, 

அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் 

கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும். 

தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும்.  

இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். 

அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதை கவனிக்கும் வாய்ப்பு குறைவு. 

இதனால் மரணம் நிகழும். 


இதைத் தவிர்க்க, 

காருக்குள் தூங்க வேண்டும் என்றால் 

பாதுகாப்பான திறந்த வெளியில் 

ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது. 


இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காக சில டிப்ஸ்கள் இதோ


ஏசி மோடில் இரண்டு வகை உண்டு


- நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட் 

- வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட். 


காருக்குள் இருவருக்கு  மேல் 

நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது 


வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும். 


நீண்ட நெடிய பயணங்கள் செல்லும் போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து 

சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் - நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ் ஹார்ட் டில்லியில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும். 


கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.


பொதுவாக கார்களை நாம் லாக் செய்யும் போது ஜன்னல்களில்  ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர்  இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால் 

தற்செயலாக விபரீதமாக  குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட 

அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும். 


நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம்.

 என்றும் 

குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம்.


காரணம் தற்காலக் குழந்தைகள்

கார்களின் சாவிகளை தானே எடுத்துக் கொண்டு அவற்றை சிறிய அழுத்தில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம். 


கார் - ஏசி - கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் - கார்பன் மோனாக்சைடு  என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம் 


இன்னுயிர்களைக் காப்போம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


தற்காப்பு கலை பயிற்றுநர், காவல்துறையிடமிருந்து குற்றமின்மை அறிக்கை (Police verification report) பெறும் வழிமுறை

 


தற்காப்பு கலை பயிற்றுநர் காவல் நிலையத்திலிருந்து குற்றமின்மை அறிக்கை (Police verification report) பெற மேற்கண்ட  link ஐ பயன்படுத்திக் கொள்ளவும்.


The trainer needs to apply 


Steps to apply for Police verification report in online 


1. Open portal

2. click citizen services 

3. click paid services 

4. Click police verification report 

5. Click New request 

6. If already registered Click login. 


       If new means click register and enter all  the details as requested and proceed further ( full name, address, contact details, id proof, passport size photograph etc)


https://www.police.tn.gov.in/citizenportal



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 - ஆதார், புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்ய உத்தரவு

NHIS 2026 – Order by the Department of Treasuries and Accounts to upload details regarding Aadhaar, photographs, disability categories, and ...