கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 E CARD Download செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்



புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CARD பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்


2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட  NHIS புதிய காப்பீட்டு  அட்டை(E-CARD) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று உங்கள் IFHRMS ID NO மற்றும் DOB தரவேண்டும் SCHEME NAME என்ற பகுதியில் வரும் முதல் OPTION-ல் Tamil Nadu Gov.Employee Scheme 2026 என்பதை தரவேண்டும் 


உள்ளீடாக

IFHRMS ID NO

DOB


தர வேண்டும்


கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇


https://tnnhis2016.com/TnHome.aspx


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CAED குறித்த முக்கிய தகவல் 



காப்பீட்டு திட்டத்தில் இரண்டு மூன்றாம் தரப்பு நிர்வாகி (Third party Administrator) உள்ளார்கள்.


Medi Assist  என்ற நிறுவனம் 20 மாவட்டங்களிலும், MD India  என்ற நிறுவனம் 18 மாவட்டங்களிலும் காப்பீட்டு திட்டத்தினை நடைமுறை படுத்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது 


Medi Assist நடைமுறை படுத்தும் மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் இன்னும் சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.


எனவே இந்த நிறுவனம் செயல்படும் 20 மாவட்டங்களுக்கான அடையாள அட்டைகள் தற்போது பதிவிறக்கம் செய்ய இயலாது. சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.


எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த நிறுவனம் என்ற விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


ரயில் நிலைய குடிநீரில் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் E.Coli பாக்டீரியா - CAG அதிர்ச்சி அறிக்கை

 


ரயில் நிலைய குடிநீரில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் எ.கோலி பாக்டீரியா - இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அதிர்ச்சி அறிக்கை  


ரயில் நிலைய குடிநீரில் வயிற்றுக்கு  பாதிப்பை ஏற்படுத்தும் எ.கோலி பாக்டீரியா - இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அதிர்ச்சிகரமான அறிக்கை  


இது குறித்த Geminiன் தகவல்

தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG)சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கை,  இந்தியா முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிர்விப்பான்களில் ஈ. கோலை பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்துள்ளது . 


முக்கிய கண்டுபிடிப்புகள்

பாதிக்கப்பட்ட நிலையங்கள்: 

தெற்கு ரயில்வேயில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு சந்திப்பு உட்பட எட்டு நிலையங்களில், தண்ணீர் குளிர்விப்பான் மாதிரிகளில் ஈ.கோலை தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . 


பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகள்:

ஹைதராபாத், மும்பை (சிஎஸ்எம்டி, பிவண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா) மற்றும் மதுபூரில் உள்ள ரயில் நிலையங்களிலும்  மாசு காணப்பட்டது.


சுகாதார அபாயங்கள்: 

ஈ. கோலை பாக்டீரியா , நீரில் மலக்கழிவு கலப்படம் ஏற்படுவதைக் குறிக்கிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு, உணவு நஞ்சாதல், வயிற்று வலி மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.


பரந்த குறைபாடுகள்: 

புறநகர் அல்லாத நிலையங்களில் கிட்டத்தட்ட 90% இல் அடிப்படை பரிந்துரைக்கப்பட்ட வசதிகள் இல்லை என்றும், வழக்கமான நீர் பரிசோதனை அடிக்கடி தவிர்க்கப்பட்டது என்றும் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரயில்வே பதில்

ரயில் நிலைய நீரின் தரத்தை வாரிய அளவில் கண்காணிக்கவும், 20,000 இடங்களில் வடிகட்டுதல் அமைப்புகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.


நீங்க நடிகர் மம்மூட்டியா? என்னை ஃபாலோ செய்யுங்க! - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழர் - வைரல் வீடியோவின் பின்னணி

 


நடிகர் மம்மூட்டிக்கு பைக்கில் சென்று வழிகாட்டிய தமிழர்


A Tamil person who rode a motorcycle ahead to guide actor Mammootty.


நீங்க நடிகர் மம்மூட்டியா? என்னை ஃபாலோ செய்யுங்க! - நள்ளிரவில் 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய தமிழர் - வைரல் வீடியோவின் பின்னணி


* தமிழ்நாட்டின் காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பிக் கொண்டிருந்த மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி வழியறியாமல் தவித்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் என்ற ரசிகர் அதிகாலை 3:30 மணிக்கு பைக்கில் முன்சென்று வழிகாட்டி உதவிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் தமிழரை "நம்ம ஃபிரெண்டு" என மம்மூட்டி கூறுகிறார். மேலும், அவரின் பைக்கை ஃபாலோ செய்யும்போது


 "சொந்தம் என்ன பந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன

உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹோய்"


என மம்மூட்டி பாடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


அந்த வீடியோவை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடந்த நிகழ்வு குறித்தும் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தகவல் வெளியிட்டுள்ளார்.


மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகதேவன் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வேளையில் மம்மூட்டி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி, ஜார்ஜ் மற்றும் ஓட்டுநர் உன்னி ஆகியோர் காரில் கேரளா நோக்கிப் புறப்பட்டனர்.


​திருப்பத்தூர் அருகே சென்றபோது நெடுஞ்சாலை அடைக்கப்பட்டிருந்தது. மாற்று வழியைக் கண்டறிய கூகுள் மேப் உதவியை நாடிய போதிலும், பல வழிகளில் சுற்றித் திரிந்தும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரில் அலைந்ததால் சோர்வடைந்த மம்மூட்டி, "மீண்டும் காரைக்குடி அறைக்கே திரும்பிச் செல்லலாம், நாளை காலை பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அடுத்த நாள் திட்டங்கள் அனைத்தும் வீணாகிவிடுமே என்று படக்குழுவினர் யோசித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது பட்டமங்கலம் பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க்கில் கார் நிறுத்தப்பட்டது. அங்கு கொசுவலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் வழி கேட்டனர். அவர் கூறிய வழிகள் அனைத்தும் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பாதைகளாகவே இருந்தன. ​அந்த சத்தம் கேட்டு, அருகே தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு இளைஞர் அங்கு வந்தார். காரில் இருந்தவர்களிடம் "நீங்க தமிழா, மலையாளிகளா?" என்று கேட்டவாறே காரின் உட்பகுதியை உற்றுப் பார்த்தார்.


​காரில் அமர்ந்திருப்பது மெகாஸ்டார் மம்மூட்டி என்பதைக் கண்டதும், அந்த இளைஞரின் தூக்கம் பறந்துபோய் முகத்தில் சொல்லொணா வியப்பும் உற்சாகமும் கூடியது. உடனே அவர் பரவசத்துடன், “நீங்க மம்மூட்டி சார்தானே, என்னை ஃபாலோ செய்யுங்க...” என்று கூறி, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.


கூகுள் மேப்பிற்கே தெரியாத குறுக்கு வழிகள் வழியாக, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் தனது இருசக்கர வாகனத்தில் முன்சென்று மம்மூட்டியின் காருக்கு அவர் வழிகாட்டினார். நெடுஞ்சாலையை அடைந்ததும், "அப்படியே ஸ்ட்ரைட்டா போனா கேரளா வந்துரும்" என்று கையைக் காட்டி வழியனுப்பினார்.


​அப்போது நடிகர் ரமேஷ் பிஷாரடி, "இந்த நல்ல மனிதர் நாளை யாரிடமாவது அதிகாலையில் மம்மூக்காவைப் பார்த்து வழி காட்டினேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்களே" என்றார். உடனே மம்மூட்டி காரில் இருந்து இறங்கி, அந்த இளைஞரின் செல்போனை வாங்கி ரமேஷ் பிஷாரடியிடம் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்.


மம்மூட்டி அவரை அன்போடு அணைத்துக்கொண்டு, "உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அதற்கு அவர் "பாண்டியன்" என்று பதிலளித்தார். "அவரது அக்கறையை நாம் பகிர வேண்டும் ஆன்டோ சேட்டா... இந்த பாண்டியன் பான்-இந்திய அளவில் பிரபலமாகட்டும்!" என்றார் ரமேஷ் பிஷாரடி. ​எதிர்பாராத நேரத்தில் நள்ளிரவில் உதவி செய்த தமிழ்நாட்டு இளைஞர் பாண்டியனின் செயல் மம்மூட்டியின் உள்ளத்தை கவர்ந்தது.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




Census தகவலால் அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் : தனிப்பட்ட விவரங்களை அளிக்க மக்கள் தயக்கம்



Census தகவலால் அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் :  தனிப்பட்ட விவரங்களை அளிக்க மக்கள் தயக்கம் - நாளிதழ் செய்தி 


அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம்


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தனிப்பட்ட விவரங்களை அளிக்க கிராம மக்கள் தயக்கம்


களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு, கால அவகாசம் வழங்க கோரிக்கை




மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) விவரங்களை அளிப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் எப்போது ரத்தாகாது என மத்திய அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளனர். இந்த அச்சம் முற்றிலும் அடிப்படையற்றது என்று தெரிவித்துள்ளனர்.


அரசின் விளக்கம் மற்றும் உண்மைகள்

நலத்திட்டங்கள் ரத்தாகாது: 

மக்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும் எந்தவொரு நலத்திட்ட உதவியையும் அல்லது மானியத்தையும் ரத்து செய்யப் பயன்படுத்தப்படாது.


திட்டமிடலுக்கான ஆதாரம்: 

நாட்டின் எதிர்கால வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏழை எளியோருக்கான புதிய நலத்திட்டங்களைச் சரியாக வடிவமைக்கவே இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.


பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை: 

1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 15-ன் படி, பொதுமக்கள் வழங்கும் தனிப்பட்ட விவரங்கள் முற்றிலும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும். இவை யாருடனும் பகிரப்படாது.


மக்கள் கவனத்திற்குகணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் அச்சமின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.


ஆன்லைன் மூலம் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்ய விரும்பினால் Official Census Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


Is it 80th Independence Day or 79th

 


இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா?


Is the 79th Independence Day being celebrated today, or the 80th?


இன்று (ஆகஸ்ட் 15, 2026) இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 


இது சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.


கணக்கீடு முறை


79 ஆண்டுகள் நிறைவு: 1947 முதல் 2026 வரை முழுமையடைந்த ஆண்டுகள் (2026 - 1947 = 79).


80-வது தினம்: 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட்ட முதல் சுதந்திர தினத்தை கணக்கில் சேர்த்தால், இது 80-வது சுதந்திர தின விழாவாகும்.


ஆகவே இன்று கொண்டாடப்படுவது 80வது சுதந்திர தின விழாவாகும் 


Independence Day Celebration - DSE Proceedings



சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Independence Day Celebration - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Independence Day Celebration - DEE Proceedings



 சுதந்திர தின விழா கொண்டாட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Independence Day Celebration - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Census 2027 : 40 Questions (In Tamil)

 


Census 2027ல் கேட்கப்படவுள்ள 40 வினாக்கள் விவரம் (தமிழில்)


Details of the 40 questions to be asked in the 2027 Census (in Tamil)


14.08.2026 அன்று ஒன்றிய அரசு, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 


மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும்.  அந்த List 👇


2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு - 40 கேள்விகள்


* தனிநபர் விவரங்கள்

1.  *பெயர்* - Name of the person

2.  *குடும்ப தலைவருடன் உறவு* - Relationship to head

3.  *பாலினம்* - Sex

4.  *பிறந்த தேதி மற்றும் வயது* - Date of Birth and Age

5.  *தற்போதைய திருமண நிலை* - Current Marital Status

6.  *திருமண வயது* - Age at Marriage

7.  *கணவர்/மனைவி பெயர்* - Spouse Name

8.  *தேசியம்* - Nationality as declared

9.  *மதம்* - Religion

10. *SC/ST/ஜாதி* - Scheduled Caste/Scheduled Tribe/Caste

11. *தந்தை விவரம்* - Father's Particulars  

12. *தாய் விவரம்* - Mother's Particulars

13. * மாற்றுத்திறன் (ஊனம்)* - Disability

14. *தாய்மொழி மற்றும் தெரிந்த மொழிகள்* - Mother Tongue and other languages known


கல்வி & வேலை விவரங்கள்

15. *கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு நிலை* - Literacy and digital literacy status

16. *கல்வி நிறுவனத்தில் படிக்கும் நிலை* - Status of attendance in educational institution

17. *உயர்ந்த கல்வி தகுதி மற்றும் பிரிவு* - Highest educational level attained and Stream

18. *கடந்த வருடம் வேலை செய்தீர்களா* - Worked any time during last year

19. *பொருளாதார செயல்பாட்டு பிரிவு* - Category of economic activity

20. *தொழில்* - Occupation

21. *தொழில்/வர்த்தகம்/சேவை தன்மை* - Nature of industry, trade or service

22. *தொழிலாளர் வகை* - Class of worker

23. *பொருளாதாரமற்ற செயல்பாடு* - Non-economic activity

24. *வேலை தேடுபவரா/கிடைக்குமா* - Seeking or available for work

25. *வேலைக்கு செல்லும் பயணம்* - Travel to place of work


* குடியிருப்பு & இடம்பெயர்வு

26. *பிறந்த இடம்* - Birth place

27. *கடைசியாக வசித்த இடம்* - Place of last residence

28. *இடம்பெயர்வுக்கான காரணம்* - Reason for migration

29. *இடம்பெயர்ந்த பிறகு தங்கியுள்ள காலம்* - Duration of stay

30. *நிரந்தர குடியிருப்பு முகவரி* - Permanent Residential Address


* பெண்கள் தொடர்பான கேள்விகள்

31. *தற்போது உயிருடன் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை* - Number of children surviving

32. *இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை* - Number of children ever born alive

33. *கடந்த 1 வருடத்தில் பிறந்த குழந்தைகள்* - Number of children born alive during last one year


* பிற முக்கிய விவரங்கள் - புதியவை

34. *கோவிட்-19 தடுப்பூசி போட்ட இடம்* - Place of Covid-19 Vaccination

35. *வங்கி கணக்குகளின் மொத்த எண்ணிக்கை* - Total number of Bank Accounts

36. *கைபேசி எண்* - Mobile Number (if available)

37. *ஆதார் எண்* - Aadhaar Number (if available)

38. *வாக்காளர் அடையாள அட்டை எண்* - Voter ID Number (if available)

39. *கடவுச்சீட்டு எண்* - Passport Number (if Indian Passport holder)

40. *ஓட்டுநர் உரிமம் உள்ளதா* - Availability of Driving License


* முக்கிய குறிப்புகள்:

1.  Digital + Paper : இந்த முறை Online மற்றும் நேரில் வந்து கேட்பார்கள்.

2.  *கட்டாயமில்லாதவை*: 36 முதல் 40 வரை "இருந்தால்" என்று கேட்கப்படும். கட்டாயம் இல்லை.

3.  *புதிய சேர்க்கை*: Digital Literacy, Bank Account, Mobile, Aadhaar, Voter ID, Driving License, Covid Vaccination போன்றவை இந்த முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்பு 2027-ல் நடைபெறும். வீடு வீடாக கணக்கெடுப்பாளர்கள் வருவார்கள்.


Census 2027ல் கேட்கப்படவுள்ள 40 கேள்விகள் விவரம் வெளியீடு

 


2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census 2027) கேட்கப்படவுள்ள 40 வினாக்கள் விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு


Details of the 40 questions to be asked in the 2027 Census released


Census India 2027 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NHIS 2026 E CARD Download செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 அடையாள அட்டை E CARD பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியாமைக்கான காரணம் 2026 ஆண்...