கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election Code of Conduct


தேர்தல் நடத்தை விதிமுறைகள் - அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026


Election Code of Conduct - Guidelines for Government Officials - Tamil Nadu Legislative Assembly Election 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்: முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்?


தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்.


ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.


பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.


மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.


முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.


20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடி.


100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530.


85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்.


மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்.


சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி

 


700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும் - தேர்தல் தேதி அறிவித்த போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டு பேசினார்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! 


வருசநாடு மலைப்பகுதியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்

.

ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.


அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.


தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.


ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.


8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.


வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். பில் ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.


3 மணி நேரம் பயணம் செய்து வருசநாடு வாக்குச்சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் செல்கிறார்கள். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றார்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-03-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 16.03.2026 

கிழமை:- திங்கள்


திருக்குறள்:

குறள் 815:

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

விளக்க உரை:

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.


பழமொழி :
Accept if the counsel is good, no matter who gave it.

அறிவுரை நல்லதாய் இருப்பின் யார் கூறினாலும் கேள்


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் முன்னேறுங்கள் - டாக்டர் அம்பேத்கர்


பொது அறிவு :

01.அரசியல் தத்துவத்தின் தந்தை (Father of Political Philosophy) என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரேக்க தத்துவஞானி
பிளேட்டோ- Plato

02. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற உள்ளது?

ஏப்ரல் 23,2026


English words :

Brittle - breakable; உடையக்கூடிய
Baffle - Astound; குழப்பம்


தமிழ் இலக்கணம்:

கேளிர், கேளீர்

இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருமா இல்லாவிட்டால் வேறு வேறு பொருளைத் தருமா? வாருங்கள் பார்ப்போம்

இரண்டும் வேறு வேறு சொற்கள் தான்.

கேளிர் என்பது உறவினரைக் குறிக்கும்.

எ. கா - யாதும் ஊரே யாவரும் கேளிர்

கேளீர் என்பது கேளுங்கள் என்பதைக் குறிக்கும்.

எ. கா - நான் சொல்வதைக் கேளீர்


அறிவியல் களஞ்சியம் :

நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம்.


மார்ச் 16

அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவு நாள்

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.



நீதிக்கதை

கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.


இன்றைய செய்திகள்

16.03.2026

⭐தமிழகத்திற்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு

⭐ மாணவர்கள், கப்பல் மாலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் என சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

⭐ மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

⭐ ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


Today's Headlines

⭐ Voting for Tamil Nadu will be held in a single phase on  April 23

⭐ India’s Ministry of External Affairs has confirmed that about 9,000 Indians, including students, ship sailors, professionals, and businesspeople, are currently safe in Iran

⭐ Tension has arisen in Meghalaya after clashes between tribal groups and other communities in the Garo Hills district

⭐ Due to continuous attacks by Iran, several Arab countries that are allies of the United States have been affected.

SPORTS NEWS

🏀 Former Pakistan captain Sarfraz Ahmed has announced his retirement
He played 54 Test matches, 117 One-Day Internationals, and 61 T-20 matches for the Pakistan national cricket team.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் : 23-04-2026, வாக்கு எண்ணிக்கை நாள் : 04-05-2026 - இந்திய தேர்தல் ஆணையம்



தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்23 தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி - இந்திய தேர்தல் ஆணையம்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் : 23-04-2026, வாக்கு எண்ணிக்கை நாள் : 04-05-2026 - இந்திய தேர்தல் ஆணையம்


Tamil Nadu Assembly elections to be held on April 23, counting of votes on May 4 - Election Commission of India.



Election Poll Date Tamilnadu: 23.04.2026

Counting Date: 04.05.2026


Training for Polling Officers - Tamil Nadu Legislative Assembly Elections 2026



 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026


Training Manual for Polling Officers - Tamil Nadu Legislative Assembly Elections 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது



 கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது


7 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை வென்றவர் கவிஞர் வைரமுத்து


திரைத் துறையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளவர்


தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதை காணிக்கை ஆக்குகிறேன்: வைரமுத்து



ஏற்கனவே 1975இல் எழுத்தாளர் அகிலன், 2002இல் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீடம் விருது பெற்றுள்ளனர்.


ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.


ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்.


இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.


1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.


2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் புரோதம் புரோதிசுருதி (பொருள்: முதல்சத்தியம்) எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.


இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது, இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றிலும், 2013 முதல் ஆங்கில மொழியிலும் சிறந்த படைப்பு இலக்கிய எழுத்துக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் அறிவின் தெய்வமான வாக்தேவியின் (சரஸ்வதி) வெண்கலப் பிரதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது . இந்த கலாச்சார அமைப்பு பாரதிய ஞானபீடத்தால் நிதியுதவி செய்யப்படுகிறது.


ஞானபீட விருது பற்றி



ஞானபீட விருது 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, முதல் விருது 1965 இல் வழங்கப்பட்டது. 1982 வரை, இந்த விருது சில குறிப்பிட்ட படைப்புகளுக்காக வழங்கப்பட்டது; பின்னர், இலக்கியத்திற்கான ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இது வழங்கப்பட்டது. அதன் பின்னர், இந்த விருது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது, இருப்பினும் சில ஆண்டுகளில் இது இரண்டு எழுத்தாளர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. ஞானபீட விருதைப் பெற்றவர்களில், இந்த விருதை வென்ற முதல் பெண்கள் ஜி. சங்கர் குருப் மற்றும் ஆஷாபூர்ணா தேவி ஆகியோர் அடங்குவர். 2018 ஆம் ஆண்டில், ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் ஆனார்.


பின்னணி

ஞானபீட விருதை சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் நிறுவினார் . அவர் 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனமான பாரதிய ஞானபீடத்தின் நிறுவனர் ஆவார் . இந்திய எழுத்தாளர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு விருதை நிறுவ அவர் விரும்பினார்.


முதல் ஞானபீட விருது 1965 ஆம் ஆண்டு ஜி. சங்கர் குருப்புக்கு வழங்கப்பட்டது . இது மலையாளத்தில் அவர் எழுதிய "ஓடக்குழல்" என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது. அதன் பின்னர், இந்த விருது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரவீந்திரநாத் தாகூர், பிரேம்சந்த், ஆர்.கே. நாராயண் மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் அடங்குவர்.


ஞானபீட விருதுக்கான தேர்வு செயல்முறை

முதலாவதாக, பல்வேறு ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், சங்கங்கள், அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மொழிக்கும், மூன்று சிறந்த இலக்கிய அறிஞர்கள் மற்றும் விமர்சகர்களைக் கொண்ட ஒரு மொழி ஆலோசனைக் குழு உள்ளது. அவர்கள் படைப்புகள்/ஆசிரியர்களை முன்மொழிவுகள் அல்லது பிற எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்டவை மூலம் பரிசீலித்து, நிறுவப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஆசிரியரின் இலக்கிய படைப்பாற்றலை மதிப்பிடுகின்றனர்.

பல்வேறு மொழி ஆலோசனைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகள், ஒரு தேர்வுக் குழுவின் முன் வைக்கப்படுகின்றன, இது பரிந்துரைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்து, அந்த ஆண்டிற்கான விருது வென்றவரைத் தேர்ந்தெடுக்கிறது.


ஞானபீட விருதுகளின் பட்டியல் (1965-2025)

ஆண்டு பெயர்  மொழி

1965 (முதல்) ஜி. சங்கர குருப் மலையாளம்

1966 (2வது) தாராசங்கர் பந்தோபாத்யாய் வங்காளம்

1967 (3வது) உமாசங்கர் ஜோஷி குஜராத்தி

குப்பளி வெங்கடப்பா புட்டப்பா 'குவெம்பு' கன்னடம்

1968 (4வது) சுமித்ரானந்தன் பந்த் இந்தி

1969 (5வது) ஃபிராக் கோரக்புரி உருது

1970 (6வது) விஸ்வநாத சத்யநாராயணா தெலுங்கு

1971 (7வது) பிஷ்ணு டே வங்காளம்

1972 (8வது) ராம்தாரி சிங் 'திங்கர்' இந்தி

1973 (9வது) டி.ஆர். பெண்ட்ரே கன்னடம்

கோபிநாத் மொஹந்தி ஒடியா

1974 (10வது) விஷ்ணு சாகாராம் கண்டேகர் மராத்தி

1975 (11வது) அகிலன் தமிழ்

1976 (12வது) ஆஷாபூர்ணா தேவி வங்காளம்

1977 (13வது) கே. சிவராம் கரந்த் கன்னடம்

1978 (14வது) சச்சிதானந்த வாத்ஸ்யாயன் இந்தி

1979 (15வது) பிரேந்திர குமார் பட்டாச்சார்யா அசாமி

1980 (16வது) எஸ்.கே. பொட்டேக்காட் மலையாளம்

1981 (17வது) அம்ரிதா பிரிதம் பஞ்சாபி

1982 (18வது) மகாதேவி வர்மா இந்தி

1983 (19வது) மஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னடம்

1984 (20வது) தகழி சிவசங்கர பிள்ளை மலையாளம்

1985 (21வது) பன்னாலால் படேல் குஜராத்தி

1986 (22வது) சச்சிதானந்த ரௌத்ரே ஒடியா

1987 (23வது) விஷ்ணு வாமன் ஷிர்வாட்கர் 'குசுமக்ராஜ்' மராத்தி

1988 (24வது) சி. நாராயண ரெட்டி தெலுங்கு

1989 (25வது) குர்ராத்துலைன் ஹைதர் உருது

1990 (26வது) விநாயக கிருஷ்ண கோகக் கன்னடம்

1991 (27வது) சுபாஷ் முகோபாத்யாய் வங்காளம்

1992 (28வது) நரேஷ் மேத்தா இந்தி

1993 (29வது) சீதகாந்த் மகாபத்ரா ஒடியா

1994 (30வது) யு.ஆர். அனந்தமூர்த்தி கன்னடம்

1995 (31வது) எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்

1996 (32வது) மகாஸ்வேதா தேவி வங்காளம்

1997 (33வது) அலி சர்தார் ஜாஃப்ரி உருது

1998 (34வது) கிரிஷ் கர்னாட் கன்னடம்

1999 (35வது) நிர்மல் வர்மா இந்தி

குருதியல் சிங் பஞ்சாபி

2000 (36வது) மாமோனி ரைசம் கோஸ்வாமி அசாமி

2001 (37வது) ராஜேந்திர ஷா குஜராத்தி

2002 (38வது) ஜெயகாந்தன் தமிழ்

2003 (39வது) விந்தா கரண்டிகர் மராத்தி

2004 (40வது) ரெஹ்மான் ரஹி காஷ்மீர்

2005 (41வது) குன்வர் நாராயண் இந்தி

2006 (42வது) ரவீந்திர கேலேகர் கொங்கணி

சத்ய விரத சாஸ்திரி சமஸ்கிருதம்

2007 (43வது) ஓஎன்வி குருப் மலையாளம்

2008 (44வது) அக்லக் முகமது கான் 'ஷாஹ்ரியார்' உருது

2009 (45வது) அமர்காந்த் இந்தி

+ ஸ்ரீ லால் சுக்லா இந்தி

2010 (46வது) சந்திரசேகர கம்பாரா கன்னடம்

2011 (47வது) பிரதிபா ரே ஒடியா

2012 (48வது) ராவூரி பரத்வாஜா தெலுங்கு

2013 (49வது) கேதார்நாத் சிங் இந்தி

2014 (50வது) பாலசந்திர நேமடே மராத்தி

2015 (51வது) ரகுவீர் சவுதாரி குஜராத்தி

2016 (52வது) ஷங்கா கோஷ் வங்காளம்

2017 (53வது) கிருஷ்ணா சோப்தி இந்தி

2018 (54வது) அமிதவ் கோஷ் ஆங்கிலம்

2019 (55வது) அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மலையாளம்

2021 (56வது) நீலமணி பூக்கன் அசாமி

2022 (57வது) தாமோதர் மௌசோ கொங்கணி

2023 (58வது) ராமபத்ராச்சாரியார் சமஸ்கிருதம்

+ குல்சார் உருது

2024 (59வது) வினோத் குமார் சுக்லா இந்தி

2025 (60வது) வைரமுத்து  தமிழ்


 ஞானபீட விருது பற்றிய தகவல்கள்

ஞானபீட விருது நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் மற்றும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு மற்ற இந்திய மொழிகளுடன் சேர்த்து ஆங்கிலமும் பரிசீலிக்கப்படுகிறது.

வெற்றியாளருக்கு ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசும், இந்து மதக் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் வெண்கலப் பிரதியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த விருதை முதன்முதலில் 1965 ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஜி. சங்கர் குருப் தனது 'ஓடக்குழல்' (மூங்கில் புல்லாங்குழல்) நாவலுக்காகப் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் 1976 ஆம் ஆண்டு வங்காள எழுத்தாளர் ஆஷாபூர்ணா தேவி ஆவார்.

இந்த விருது வழங்கும் அமைப்பு 1944 ஆம் ஆண்டு தொழிலதிபரும் கொடையாளருமான சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் நிறுவப்பட்டது.

ஞானபீட விருது பாரதிய ஞானபீடத்தின் கலாச்சார அமைப்பால் வழங்கப்படுகிறது.



5 மாநில சட்டப்பேரவைகள் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது

 

 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது


மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு.


ELECTION COMMISSION OF INDIA

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001

15.03.2026

MEDIA INVITATION

Dear Sir/Madam,

You are cordially invited to cover the following event:

Event

Press Conference by the Election Commission of India To announce the schedule for General Elections to Legislative Assemblies of Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal - 2026

Date 

Sunday, March 15, 2026

Time  

4:00 PM

Venue 

Vigyan Bhawan, New Delhi


Entry 2:45 PM onwards. All are requested to be seated/stationed by 3:30 PM

Yours Sincerely

P. Pawan Deputy Director


To

All PIB accredited Journalists/Correspondents/Camerapersons

Assignment Heads of all TV News Channels

DG(News), Doordarshan

DG(News), News Services Division, Akashvani

ADG Photo Division, PIB

PPS to PDG, PIB/ADG, PIB



அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 

அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



// மிக மிக அவசரம் //


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரின் செயல்முறைகள், சென்னை -6 

ந.க.எண்.015689 /அகத/2026, நாள். 13.03.2026.


பொருள்:


பள்ளிக் கல்வி பள்ளி 31.05.2026 வரை துறைத் தணிக்கை அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் /நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஓய்வு பெறவுள்ளவர்கள் அகத்தணிக்கை மேற்கொள்ளல் சார்ந்து.


பள்ளிக் கல்வி இயக்ககத்தின் (அகத்தணிக்கை) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் மாவட்டம் வாரியாக 31.05.2026 வரை ஓய்வு பெற்ற / ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பணிபுரிந்தக் காலங்களை அகத்தணிக்கை மேற்கொள்ள அலுவலர்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது.


எனவே, 31.05.2026 வரை ஓய்வு பெறவுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அலுவலர்களின் விவரங்களையும் மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்களையும் இணைப்பில் கண்ட படிவங்களில் ( EXCEL - படிவம் 1, 2, 3) தனித்தனியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலருக்கு 18.03.2026 - மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரிந்த காலங்களில் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை coseaudit.sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு படிவம் 1 முதல் 3 வரை


ஒம்/-ஆர்.லோகநாதன்

நிதி ஆலோசகர் (ம)

முதன்மைக் கணக்கு அலுவலர்


பெறுநர்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.


நகல்

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்கல்வி)

2. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).

3. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).

4. நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர். சென்னை -06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).

5. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).



கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்



கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ; 20 மாணவர்கள் படுகாயம்


கரூர் மாவட்டம் வெள்ளியணைக்கு அருகில், நேற்று மாலை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த கல்லூரி பேருந்து ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்றபோது, சரக்கு ரயில் பேருந்தின் மீது மோதியதில் 18 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த விவரம் பின்வருமாறு;



கரூர் மாவட்டம் க‌.பரமத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், நேற்று கல்லூரி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் பெரியசாமி கல்லூரிப் பேருந்தை ஓட்டி வந்தார். ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வந்த சரக்கு ரயில் , பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. பலருக்கு கை, கால் மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




விபத்து நடந்ததும், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது எதிர்பாராத விதமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




18 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிக்கும் பவுடர் ஏற்றிக் கொண்டு, புலியூர் சிமெண்ட் ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.



குளத்தூர் பகுதி லெவல் கிராசிங் பகுதியில் ஆட்கள் இல்லாததால், பேருந்து அந்த லெவல் கிராசிங்கை கடந்துள்ளது. அப்போது ரயில் வருவதைக் கண்டு பீதியடைந்த மாணவர்கள், பஸ்ஸில் இருந்து அவசர அவசரமாக இறங்க முயன்றனர். அதற்குள் ரயில், பஸ் மீது மோதிவிட்டது. இதில், கல்லூரி பஸ் பலத்த சேதமடைந்தது. மேலும், அதில் இருந்த மாணவர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஜோதிமணி எம்.பி. நலம் விசாரித்தார்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election Code of Conduct

தேர்தல் நடத்தை விதிமுறைகள் - அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 Election Code of Conduct - Guidelines ...