கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

National Teachers' Awards 2026 | DSE Proceedings| Manual for Online Self-nomination



தேசிய ஆசிரியர் விருதுகள் 2026 - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் இணையவழியில் சுய-பரிந்துரை செய்வதற்கான செயல்முறை கையேடு


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


National Awards to Teachers - DSE Proceedings, Revised Guidelines for Selection of Teachers for National Awards to Teachers & Instruction Manual for Online Self-nomination NATIONAL TEACHERS' AWARDS 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் | முதலமைச்சர் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

 

International Day Against Drug Abuse | Chief Minister's social media post


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் |  முதலமைச்சர் அவர்களின் சமூக வலைதளப் பதிவு


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு



26-06-2026 TN SCERT Special TET 1 EVS & TET 2 Science Session 3 - Paper 2 Social Science Session 6 - Youtube Links

 


Good afternoon all. Kindly note today session and its timings



Click here for SPECIAL TET PAPER 1 EVS SESSION 3


https://www.youtube.com/live/srt3xPxYRqY?si=MPjDmieo_vgV7Ouu



Click here for SPECIAL TET PAPER 2 SCIENCE SESSION 3

 

https://www.youtube.com/live/q1q1pD6Qe0c?si=WCMU95vuf5ms56_2



Click here for SPECIAL TET PAPER 2 SOCIAL SCIENCE SESSION 6

 

https://www.youtube.com/live/W7Vjm_n3dAY?si=5eAHyTz5EoIC8lOH


Session starts on 26.06.26 at 06.30 PM Today.


State Resource Centre Whatsapp Channel Link

https://whatsapp.com/channel/0029VbCcBG8HgZWVwDltOv1Y


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு

 


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விலக்கு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Teachers aged over 55 and teachers with disabilities exempted from census duties


கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது



Census Duty Exemption - BEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம்

 15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் - செய்தி வெளியீடு


2026-ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.



செய்தி வெளியீடு எண்: 298 , நாள்: 26.06.2026


செய்தி வெளியீடு


2026ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.


மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு "போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்" 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்:


வ.எண். பெயர். பதவி மற்றும் பணிபுரியும் இடம் திருவாளர்கள்


1. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர். கடலூர் மாவட்டம்.


2. ஜி. சந்தீஷ், இ.கா.ப.. காவல் கண்காணிப்பாளர். இராமநாதபுரம் மாவட்டம்.


3. ஸ்ரீ. லட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர். போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.


4. வை. மனோஜ்குமார். காவல் உதவி ஆணையாளர், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு. நுண்ணறிவுப் பிரிவு. சென்னை பெருநகர காவல்.


5. மோ.கண்ணன். காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு. திருச்சி மண்டலம்.


6. பொ. காமராஜ். காவல் ஆய்வாளர். மத்திய நுண்ணறிவுப் பிரிவு, கோயமுத்தூர் மண்டலம்.


7. மு. அருண். காவல் உதவி ஆய்வாளர், குரங்கனி காவல் நிலையம், தேனி மாவட்டம்.


8. கே. ராஜ்குமார். தலைமைக் காவலர் -1868, குமுளி காவல் நிலையம், தேனி மாவட்டம்.


9. க. கார்த்திகேயன். தலைமைக் காவலர் 348, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.


10. அ. குத்புதீன், தலைமைக் காவலர் 1288. கோட்டைப்பட்டினம் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்.


11. க. ராமர், சிறப்பு உதவி ஆய்வாளர் -973, நல்லூர் காவல் நிலையம். திருப்பூர் மாநகரம்.


12. மு. ஐய்யப்பன். தலைமைக் காவலர் 2244. மதுவிலக்கு அமலாக்க பிரிவு, திருநெல்வேலி.


13. ந. பிரேம் குமார், தலைமைக் காவலர் 46983, R-3 அசோக் நகர் காவல் நிலையம். சென்னை பெருநகர காவல்.


14. உ.பி. செந்தில்குமார். சிறப்பு உதவி ஆய்வாளர் -1138, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு. கரூர் மாவட்டம்.


15. ச. ராமகிருஷ்ணன், தலைமைக் காவலர் 2120, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தேனி அலகு.


மேற்கண்ட பதக்கம் பெறுபவர்களின் சிறப்புப் பணிகள் பின்வருமாறு:-


1. திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் 28.12.2020 அன்று இந்திய காவல் பணியில் சேர்ந்து ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சார்ந்த நடவடிக்கைகள் மூலம், 903 கிலோ கஞ்சா, 575 கிராம் மெத்தாம்பெட்டமைன், 74.5 கிராம் எம்.டி.எம்.ஏ., 55 கிராம் கோகைன் மற்றும் எல்.எஸ்.டி. தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளிமாநில மற்றும் அயல் நாட்டை சேர்ந்த குற்றவாளிகள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியான விசாரணை, தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் திறமையான மேற்பார்வையின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயும் சர்வதேச அளவிலும் செயல்பட்ட போதைப்பொருள் வலையமைப்புகளை முறியடித்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.


2. திரு. ஜி. சந்தீஷ், இ.கா.ப 17.12.2018 அன்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். 12.01.2024 முதல் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் சட்ட வழிகாட்டுதல் படியும், அறிவுபூர்வமான விசாரணைகள் மற்றும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக, தான் பணியாற்றிய மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்களை கணிசமாகக் குறைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு முதல் 347 NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், கஞ்சா, மெத்தாம்பெட்டமின் மற்றும் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 2025 ஆம் ஆண்டில், 542 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், இவரது மேற்பார்வையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் நடவடிக்கையாகும்.










மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்



India's first hydrogen train, operated at a speed of 120 km/h.


மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்


இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்


ஹரியானா மாநிலம் ஜிந்த் - சோனிபட் இடையே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் இறுதிகட்ட சோதனை தொடக்கம்.


மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சோதனைக்குப் பின் பயன்பாட்டிற்கு வரும்.


இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


மாற்றத்திறனாளிகள் சேவைக்கான Award பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



மாற்றத்திறனாளிகள் சேவைக்கான விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவையாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படவுள்ள மாநில விருதுக்காக https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு


வெப்பநிலை உயர்வால் தகிக்கும் France

 


வெப்பநிலை உயர்வால் கொதிக்கும் ஃபிரான்ஸ்


France sweltering due to rising temperatures


ப்ரான்சில் வரலாறு காணாத அளவு வெப்பம் நிலவி வருகிறது. 

 

பாலைவனத்தில் தகிக்கும் சவுதி அரேபியாவின் மக்கா மாநகரை விடவும் ப்ரான்சின் பாரிசில் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது என்பது எத்தகைய பெரிய முரண். 


கடந்த திங்கள் அன்று ப்ரான்சு அதன் வரலாற்றிலேயே உஷ்ணமான நாளை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது. 


இத்தனைக்கும் அங்கு பல்வேறு இடங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் நிலவுகிறது. 


நீங்கள் கேட்கலாம்.. 

நாங்களாம் இதே 40 டிகிரி செல்சியஸ் 

வெப்பத்தில்  சூடான டீ அடிப்போமே 

40 டிகிரிலாம் ஒரு வெப்பமா? என்று கேட்கலாம். 


ப்ரான்சின் சராசரி வெப்பம் வெறும் 11 டிகிரி முதல் 13 டிகிரி செல்சியஸ்ங்க..

வெயில் காலத்தில் கூட அதிகபட்சம் 24-28 டிகிரி தான் அங்கு வெப்பமே இருக்கும்.


உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்.. 


அங்கு பெரும்பான்மையான இடங்களில் ஏசி கிடையாது. இன்னும் ஏன் ஃபேன் கூட கிடையாது 


காரணம் அதற்குத் தேவையும் அங்கு இல்லை. 


ஆனால் திடீரென்று மாறிய இத்தகைய வெப்பமான சூழ்நிலையை அந்நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. 


வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற 40 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். 


அடைபட்ட காரில் சிக்கிக் கொண்ட 2 மற்றும் 4 வயது சிறுவர்கள் இருவர் வெப்ப வாதம் ஏற்பட்டு இறந்துள்ளனர். 


போர்டியா நகரில் 80-95 வயதுடைய மூன்று முதியோர் இறந்துள்ளனர். 


இரவு நேர வெப்பமே 30 டிகிரி செல்சியஸ் நிலவி வருவதால் குளிரூட்டியும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


ஈஃபிள் டவருக்கு முன் உள்ள செயற்கை நீர் சுனையில் மக்கள் குளித்து வருகின்றனர். 


இத்தகைய வானிலை மாற்றத்துக்குக் காரணம் "ஒமேகா தடை" வானிலை என்று அழைக்கப்படுகிறது. 


கிரேக்க எழுத்துகளில் ஒமேகா எழுத்து Ω

இப்படி குண்டானைக்  கவிழ்த்தது  போல இருக்கும். 


இத்தகைய ஒமேகா  வடிவில் வட ஆப்ரிக்காவில் இருந்து வரும் வெப்பக்காற்றை தன்னகத்தே வைத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பாவை அவித்து வருகிறது எனலாம். 


இந்தக் காற்று மிகவும் மெதுவாக நகர்வதால், வெப்பத்தில் இருந்து தப்பிக்க லேசான காற்று கூட அடிக்காமல் வெப்பம் உயர்ந்து வருகிறது. 


வீட்டில் ஏசி ஃபேன் இல்லாமல் இத்தகைய சூழ்நிலையை சமாளிப்பது மிக மிகக் கடினம் என்பதால் குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறையும் வேலை நேரங்களைக் குறைத்தும் இயங்கி வருகின்றன. 


நாளின் பிற்பகுதி தான் முற்பகுதியை விட அதிக வெப்பத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


பிரிட்டனில் கெண்ட் நகரில்  தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக  வீட்டில் யாரும் தோட்டத் தண்ணீர்க் குழாயை  உபயோகிக்கக் கூடாது என்று தற்காலிகத் தடை விதிக்கும் அளவு நிலை சென்று வருகிறது.


சூப்பர்  எல்நினோவின் பாதிப்பை இந்திய தீபகற்பம் சந்தித்து வரும் சூழ்நிலையில் 


ஒமேகா ப்ளாக் காரணமாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்பத்தால் தகிப்பது, மாறி வரும்  வானிலை சூழல்கள் மக்களை பாதித்து வருகிறது. அதனால் ஏற்படும் உடல் நிலை பாதிப்புகளும் அதிகரிக்கின்றன.


வானிலை / காலநிலை மாற்றங்கள் குறித்து நாம் அதிகம் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


முதலமைச்சர் தலைமையில் துறை வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாட்கள் - தலைமைச் செயலாளர் கடிதம்



Dates for department-wise review meetings chaired by the Chief Minister – Letter from the Chief Secretary


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் துறை வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாட்கள் - தலைமைச் செயலாளர் கடிதம் 


Special Programme Implementation Department, Secretariat, Chennai -9


Letter No.19/SPI/2026, Date: 25.06.2026.


From 

Dr. M. Sai Kumar, I.A.S., 

Chief Secretary to Government.


To

The Additional Chief Secretaries/Principal Secretaries/Secretaries to Government, 

Departments concerned, 

Secretariat, 

Chennai -9 (w.e)


Sir/Madam,


Sub:

Department Review meeting - under the Chairmanship of Hon'ble Chief Minister Instructions received from the Chief Minister's office Regarding. Communication of meeting schedule


It is proposed to conduct a review meeting under the Chairmanship of the. Hon'ble Chief Minister with the Departments as per the schedule attached.


2. In this regard, it is requested to prepare a concise presentation (not more than 20 slides with related photos) covering the following aspects of your department:


  • Key Activities and functions;
  • Action Plans: One-Year, Three-Year and Five-Year plans aligned with the Vision Document;
  •  Suggestions to improve transparency, efficiency and service delivery (incorporate best practices); and 
  • Key challenges faced.


3. It is requested that the proposal with financial implications need to be discussed with the Additional Chief Secretary to Government, Finance Department.


4. The above presentation should be submitted to the Chief Minister's office at least two days in advance after obtaining the approval of the Chief Secretary to Government.


Yours faithfully,

For Chief Secretary to Government


Copy to:


The Principal. Private Secretary to Chief Secretary to Government, Secretariat, Chennai -9



துறை வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாட்கள் - தலைமைச் செயலாளர் கடிதம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


EPFO வலைதளம் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு

 


EPFO போர்டல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிப்பு


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கான ஆன்லைன் சேவைகளை ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது . 


தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சிஸ்டம் மைக்ரேஷன் (System migration) காரணங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .


இந்த 3 நாட்களுக்கு பின்வரும் சேவைகள் பாதிக்கப்படும்:

  1. புதிய ஆன்லைன் கிளைம் (Claim) கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாது .நிலுவையில் உள்ள கிளைம்களைச் செயலாக்கும் பணிகள் நடைபெறாது .
  2. UMANG செயலி வழியாகப் பெறப்படும் EPFO சேவைகள் ஜூலை 2 வரை கிடைக்காது .
  3. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கிளைம்கள் சேவை மீண்டும் தொடங்கிய பின்னரே பரிசீலிக்கப்படும் .


சேவைகள் ஜூன் 29 முதல் வழக்கம் போல் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 


இந்த காலகட்டத்தில் அவசர உதவிக்கு உறுப்பினர்கள் 14470 என்ற எண்ணில் EPFO கால் சென்டரைத் தொடர்பு கொள்ளலாம் .


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

National Teachers' Awards 2026 | DSE Proceedings| Manual for Online Self-nomination

தேசிய ஆசிரியர் விருதுகள் 2026 - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்ற...