கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:447

குறள்:

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

பொருள்:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.


பழமொழி :

As you sow, so You Reap

வினை விதைத்தவன் விதை அறுப்பான்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :

தன்னம்பிக்கை இருந்தால் தடைகள் கூட படிக்கட்டுகளாக மாறும்.


Thought for the Day :

Your attitude determines your direction.


பொது அறிவு :

1.கிரிக்கெட் விளையாட்டில் "God of cricket" என அழைக்கப்படும் வீரர் யார்?

சச்சின் டென்டுல்கர்.

2. கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் அவர்களின் சுயசரிதையின் பெயர் என்ன?

"Playing it my way."


English words :

Locate – Find, கண்டறி.

Modify – Change, மாற்றியமை

புவியியலும் சுற்றுசூழலும் :

நாட்டை நேசிப்பது அதன் சட்டங்களை மதிப்பதிலிருந்து தொடங்குகிறது."சமத்துவம் ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளம்.


NMMS :

MAT

விடுபட்ட உறுப்பைக் கண்டுபிடி.


(1) 42.

(2) 33.

(3) 44.

(4)36.

விடை: (3) 44


ஜூலை 10
சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.


நீதிக்கதை

"நெகிழிப் பாடம்"

ஒரு  கிராமத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில், ஒரு மாடு சாலையோரத்தில் கிடந்த நெகிழிப் பையைத் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அதை கண்டதும் அவர்கள் மிகவும் வருந்தினர்.

அன்று பள்ளியில் ஆசிரியர் நெகிழியின் தீமைகளைப் பற்றி விளக்கினார். "நெகிழி மண்ணில் எளிதில் மக்காது. அதை விலங்குகள் தின்றால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும், நெகிழி சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும்," என்றார்.

அதை கேட்ட மாணவர்கள், அடுத்த நாள் முதல் நெகிழியைத் தவிர்ப்பது, துணிப்பையை மட்டுமே பயன்படுத்துவது என முடிவு எடுத்தனர். தங்கள் நண்பர்களுக்கும் துணிப்பைகளைப் பயன்படுத்தச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

சில மாதங்களில் அந்தக் கிராமத்தில் நெகிழிப் பயன்பாடு மிகவும் குறைந்தது. தெருக்களும் தூய்மையாக இருந்தன. விலங்குகளும் பாதுகாப்பாக வாழத் தொடங்கின.

நீதி:

நெகிழியைத் தவிர்ப்போம்; இயற்கையையும் உயிரினங்களையும் காப்போம்.


இன்றைய செய்திகள்
10.07.2026

🗒️பள்ளிக்கல்வியின் முக்கிய குறியீடுகளில் தேசிய சராசரியை விட சிறந்து விளங்கும் தமிழ்நாடு - மத்திய அரசின் அறிக்கையில் தகவல்.

🗒️ "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" எனும் பயிற்சி வகுப்புகள் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில்  சென்னையில், நடைபெறவுள்ளது.

🗒️ஏலத்திற்கு வரும் டைனோசர் எலும்புக்கூடு; ரூ.250 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு.  கேரி கஸ் லிககிங்கை கவுரவிக்கும் விதமாக டைனோசருக்கு அவரின் பெயரே “கஸ் டி-ரெக்ஸ்” எனப் பெயரிடப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்

🏀உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி: பிரான்ஸ்-மொராக்கோ நாளை மோதல். அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

🏀விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


Today's Headlines

🗒️ Tamil Nadu outperforms the national average in key school education indicators, according to a report by the Central Government.

🗒️ A training programme on "App Development Using Artificial Intelligence" will be conducted in Chennai by the Entrepreneurship Development and Innovation Institute (EDII).

🗒️ Dinosaur skeleton to go up for auction; expected to fetch ₹250 crore.
The dinosaur has been named "Gus T-Rex" in honour of Gary Gus Lickking.

Sports News

🏀 FIFA World Cup Quarter-finals: France will face Morocco tomorrow.
Argentina, former champions France, Spain, England, and four other teams have advanced to the quarter-finals.

🏀 Wimbledon Tennis: Alexander Zverev advances to the semi-finals.



Mugizh Mutram | Monthly Activities

 


மகிழ் மற்றும் | பள்ளி அளவிலான மாதாந்திர செயல்பாடுகள் 


Mugizh Mutram | Monthly Activities 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC Resolutions Model

 



பள்ளி மேலாண்மை குழு தீர்மானங்கள் - மாதிரி


SMC Resolutions Model



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Magizh Mutram | Investiture ceremony | Agenda

 


மகிழ் முற்றம் - பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரல்


Magizh Mutram | Investiture ceremony | Agenda



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மகிழ் முற்றம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


"பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை" | அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அறிக்கை



"பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் அறிக்கை


எந்த அரசியல் கட்சியினரும், எந்த தனியார் அமைப்பும் மாணவர்களை நேரடியாக சந்திக்க அனுமதி இல்லை - பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவிப்பு


"அனுமதி இல்லை"


"பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை. தேவையின்றி யாரும் பள்ளிகளுக்குள் செல்ல கூடாது. பள்ளி வளாகங்களில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி"


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC ( 10.07.2026 ) Agenda



SMC - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ( 10.07.2026 ) கூட்டப்பொருள் :


1. 100% மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் இல்லா பள்ளி(Zero Dropout)பள்ளி பாடத்திட்டம்


பள்ளி எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதை ஆய்வு செய்து,பள்ளிக்கு வராத அல்லது பள்ளியை விட்டு விலகிய குழந்தைகளை அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.


மாணவர்களின் தொடர்ச்சியான வருகையை உறுதி செய்தல். இடைநிற்றலுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுதல், பெற்றோர் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் 100% சேர்க்கை-0% இடைநிற்றல் என்ற இலக்கை அடைய தேவையான செயல்திட்டங்களை வகுத்தல்.


2. உயர்கல்வி வழிகாட்டி உயர்கல்வி நிறுவனங்களில் 100% சேர்க்கையை உறுதி செய்தல்


தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன் இணைந்து-நிதி உதவி, சான்றிதழ்கள் அல்லது பெற்றோர் அனுமதி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை அடையாளம் கண்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் சிறப்பு மாணவர் குறைதீர்ப்பு முகாம்களில் பங்கேற்கச் செய்து அவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதி செய்தல்


b) பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதை உறுதி செய்தல்.


c) மாவட்ட உயர்கல்வி கட்டுப்பாட்டு அறைகள் (DCRs) குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவி தேவைப்படும் மாணவர்களை டனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புதல் வேண்டும்.


d) பெற்றோர் ஆதரவு இல்லாதோர், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள் (CWSN) மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து. அவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உறுதி செய்தல்.


3. அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACIS) 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு


a) 10ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 08.07.2026 முதல் 15.07.2026 வரை நடைபெறும் தேர்வில் தவறாமல் கலந்துகொள்ள பெற்றோர்களும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளுதல்


b) மாணவர்கள் வெற்றி பெறுவதற்காக மணற்கேணி செயலியின் தொடர்ந்து கற்போம்" பகுதியில் உள்ள குறைந்தபட்சக் கற்றல் கையேடுகளை (MLM) பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும்.


மேலும், மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் நேர்மறை மனப்பாங்கையும் வளர்க்க ஆதரவு வழங்க வேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் MLM பயன்பாடு தொடர்பான செயல் விளக்கக் காணொளியினை QR குறியீட்டை ஸ்கேன் செய்து பெறலாம்.


4.ஆட்டிசம்: தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும் | UDID (Unique Disability ID Card) (Autism - myths and facts. Importance of UDID):


பள்ளியில் பயிலும் ஆட்டிச நிலை மற்றும் அறிவுசார் குறைபாடு கொண்ட மாணவர்கள் மற்றும் UDID அட்டை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை SMC உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்


b) ஆட்டிசம் குறித்த உண்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் UDID (Unique Disability ID Card) அட்டையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்


c) UDID பெறுவதில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விவாதித்து. UDID தேவைப்படும் அனைத்து மாணவர்களும் UDID பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்


5. முன்னாள் மாணவர்கள் (Alumni) அரசுப் பள்ளித் தூதுவரின் விவரங்களை TNSED Parent App-ல் பதிவேற்றம் செய்தல்:


அரசுப் பள்ளிகளின் மீது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பள்ளி வளர்ச்சி மற்றும் பல்வேறு முன்னெடுப்புகளில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும். அனைத்து பங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் நபராக அரசுப் பள்ளித் தூதுவர்கள் (School Ambassadors) நியமிக்கப்பட உள்ளனர்.பள்ளி பாடத்திட்டம்


முதற்கட்டமாக நூறாண்டு கடந்த பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 8,209 பள்ளிகளில் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது இதற்காக பார்வை-4-6 வழங்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்த முன்னாள் மாணவர்களிலிருந்து SMC கூட்டத்தில் தேர்வு செய்து தீர்மானமாக பதிவு செய்து, தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளித் தூதுவரின் விவரங்களை TNSED Parent Appsல் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்


6. நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP)


a) பள்ளி மேம்பாட்டுத் தேவைகள் கண்டறிதல் மற்றும் ஆதரவு திரட்டல்


பள்ளியின் உள்கட்டமைப்பு கல்வி மற்றும் பிற மேம்பாட்டுத் தேவைகளை விவாதித்து SMC தீர்மானங்களாக பதிவு செய்தல்.பள்ளி பாடத்திட்டம்


NSNOP வழியாக நன்கொடையாளர்கள். நிறுவனங்கள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களிடமிருந்து பள்ளி ஈடுபாடுசார் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்.


உரிய பள்ளிக்காக வழங்கப்படும் நோக்குநிதி (Tied Contribution) குறிப்பிட்ட நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.


அடையாளம் காணப்பட்ட பள்ளியின் தேவைகளை நன்கொடையாளர்கள் பொருளாக வழங்கும் (Kind Contribution) பங்களிப்புகள் மூலம் நேரடியாக நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்து. அதற்கான தேவையான அனுமதிகள் மற்றும் ஒருங்கிணைப்பை NSNOP மூலம் மேற்கொள்ளுதல்,


b) NSNOP மற்றும் பள்ளிச் சாளரம் மூலம் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தல்


நன்கொடை வழங்க ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள், அரசு சாரா அமைப்புகள் (NGOs) தன்னார்வலர்கள் மற்றும் பெருநிறுவனங்கள், NSNOP தளம் வழியாக பங்களிக்கவும் பங்கேற்கவும் ஊக்குவித்தல்.


பள்ளிச் சாளரத்தில் பள்ளி செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்தல். SMC Parent App மூலம் பள்ளி ஈடுபாட்டு நடவடிக்கைகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து, சமூகப் பங்கேற்பு மற்றும் ஆதரவை அதிகரித்தல்பள்ளி பாடத்திட்டம்


7. மணற்கேணி


1) மணற்கேணி செயலி தரவிறக்கம் மற்றும் பயன்படுத்துதலை உறுதி செய்தல் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன்,அனைத்து மாணவர்களும் மணற்கேளி செயலியினை தரவிறக்கம் செய்து செயலித் தளத்தை அணுகி, பள்ளி நேரத்திற்கு அப்பாலும் கற்றல் மற்றும் தேர்வுத் தயாரிப்பிற்காக தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிசெய்தல்.


b) விழிப்புணர்வு பதாகைகள் (Posters) மணற்கேணி தொடர்பான பதாகைகள் (Posters) வகுப்பறைகள். பள்ளி அறிவிப்புப் பலகைகள், மாணவர்கள் கூடும் இடங்கள், பெற்றோர் கூட்ட அரங்குகள் மற்றும் SMC கூட்டங்களில் காட்சிப்படுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மணற்கேணி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். (பதாகைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)


8. எண்ணும் எழுத்தும்


1) கற்றல் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு வகுப்பு 1 முதல் 3 வரை புதிய பாடநூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முதல் பருவத்தில் மாணவர்கள் அடைய வேண்டிய முக்கிய கற்றல் விளைவுகள் குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தல்.


b) நான் கற்றவை பகுதியின் மூலம் மாணவர்கள் கற்றவற்றை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துதல் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் இடம்பெற்றுள்ள நான் கற்றவை பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பவற்றை மாணவர்கள் செய்துகாட்ட பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்.


9. 2024-2026 ஆண்டுகளுக்கான SMC உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தல்.


2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவுறும் நிலையில் இக்காலப்பகுதியில் (Tenure) உறுப்பினர்களாகப் பணியாற்றி பள்ளியின் முன்னேற்றம், பள்ளியின் கல்வித் தர மேம்பாடு, மாணவர் நலன் மற்றும் சமூகப் பங்களிப்பு உள்ளிட்ட அரசின் பல்வேறு முன்னெடுப்புகளில் சிறப்பான ஒத்துழைப்பும். அர்ப்பணிப்பும் வழங்கிய பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் துணைத் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தல் மற்றும் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுதல்


10. தீர்மானங்களின் தற்போதைய நிலை அறிக்கை (Resolution Status Update).


2024-2026 காலப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலை விவரங்கள் பெற்றோர் செயலியில் புதுப்பிக்கப்பட்டுள்ளதை (Resolution Status Update) ஆய்வு செய்து உறுதிசெய்தல்.


11.2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளல்.


2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு குறித்த விவரங்களைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்து. நடத்தப்படவுள்ள அனைத்துப் பெற்றோர் கூட்டத்தில் அனைவரும் தவறாதுபள்ளி பாடத்திட்டம்


கொள்ளும் உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுதல்.


II. வழிகாட்டுதல்கள்


(அ)பள்ளி மேலாண்மைக் குழுவும், துறை சார்ந்த அலுவலர்களும்:


a) பள்ளிக் கல்வித் துறை மூலம் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை நகலினை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருக்கு அளிக்க அறிவுறுத்த வேண்டும்.


b) பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட வருவதைத் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கும் சூழலில் அதன் விவரங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தலைமையாசிரியர் முன்னதாகத் தெரிவிக்க வேண்டும்.


c) கல்வி அலுவலர்கள் தவிர பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரல்லாத வேறு எந்தவொரு நபரும் பார்வையாளர்களாகக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை.


d) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தின் உறுப்பினர் வருகை மற்றும் தீர்மானங்களின் திட்டமிடல் உள்ளிட்ட விவரங்களை, கூட்ட நாளன்று இரவு 9 மணிக்குள் -TNSED Parent' (பெற்றோர் செயலி) Appஇல் தவறாது பதிவிடக் கேட்டுக்கொள்ள வேண்டும்.


e) பருவ மழை அல்லது உள்ளூர் நிகழ்வுகள் உள்ளிட்ட காரணங்களினால் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் நேர்வுகளில் சார்ந்த பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அடுத்துவரும் வேலை நாளில் பள்ளித் தலைமையாசிரியர்கள் நடத்திட வேண்டும். 


III. காணொலிகள்/தொடர்புடைய ஆவணங்கள்


பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த செயல்பாடுகளுக்கானக் காணொளிகள் (Best Practices Videos) வருகைப் பதிவு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் சார்ந்த செயலியின் காணொலிகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பெறுவதற்கான QR-Code மற்றும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


SMC ஆதரவு - காணொளிகள் மற்றும் ஆவணங்கள் டிரைவ் இணைப்பு:


https://bit.ly/SMCSupportvideos


மேற்காணும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி உரிய நேரத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சிறப்பாக நடத்திடவும், தீர்மான விவரங்களைப் பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்திடவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



>>> SPD செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Censusன் பொழுது கேட்கப்படும் 33 கேள்விகள்



 மக்கள் தொகை கணக்கெடுப்பின் Census 2027 பொழுது கேட்கப்படும் 33 கேள்விகள் - அரசு உத்தரவில் தகவல்


தமிழ்நாட்டில் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.


2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.


இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது.


மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.


இது தரவுகளை விரைவாக சேகரிக்கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்ய/வும் உதவும்.


மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்.


பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1-ந்தேதி முதல் இந்த பணிகள் ஆரம்பமாகி உள்ளது.


தமிழ்நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.


மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ,1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள்தொகை கணகெடுப்புப் பணியின் பொழுது கேட்கப்படும் 33 கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ளன.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்


1. அடுக்கு மாடி கட்டிட எண் ?

FOR APARTMENT BUILDING NUMBER

வசிக்கும் கட்டிடம் எண்

நீங்கள் வசிக்கும் கட்டிடத்தின் எண்

( நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை எண் )


2. வீட்டு கதவு எண் ?

HOME DOOR NUMBER

வீட்டு எண்


3. வீட்டின் தரையின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

TILES OR CEMENT

(Mosaic & Red Oxide Floor)

வீட்டு தரை


4. வீட்டின் சுவரின் முக்கிய பொருள் என்ன எதில் கட்டப்பட்டது ?

5. BRICK OR MUD WALL

(Red Bricks / Cement Hollow Blocks) 

சுவர்


5. வீட்டின் மேல் கூரையின் முக்கிய பொருள் எது ?

CONCRETE SEELING OR WOODEN SEELING

கான்கிரீட் (RCC) கூரை

உலோகத் தாள்கள் (Metal Sheets)

ஓடுகள் (Tiles)

மரச்சட்டங்கள் (Wooden Trusses)

மரப்பலகை / வைக்கோல்

கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்


6. வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா பயன்பாட்டை உறுதி செய்தல் ? 

LIVING OR LOCKED

வீட்டின் பயன்பாடு


7. எந்த மாதிரி வீட்டின் அமைப்பு ?

INDIVIDUAL PRIVATE HOUSE OR APARTMENT

மாடி வீடு (Duplex / Two-Story)

வீட்டின் நிலை


8. குடும்ப எண் ?

குடும்ப எண் (Family ID) என்பது பொதுவாக உங்கள் ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) எண்ணைக் குறிக்கிறது.


9. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

HOW MANY MEMBERS IN HOME

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை என்பது உங்களின் சொந்த வீடு, கிராமம், மாவட்டம் அல்லது மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும். அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை (Total number of persons living in a house) அடிப்படை தகவலாக சேகரிக்கப்படுகிறது.

வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை


10. வீட்டுத் தலைவரின் பெயர் என்ன ?

அரசு ஆவணங்களில் உள்ள உங்கள் குடும்பத் தலைவர் பெயரை அறிய

FAMILY MEMBER NAME

குடும்ப தலைவர் பெயர்


11. வீட்டுத் தலைவரின் பாலினம் ( ஆணா  / பெண்ணா ) எது ?

MALE OR FEMALE தலைவரின் பாலினம்


12. குடும்பத் தலைவர் எந்த ( ஜாதி ) சாதி (Caste) ?


13. வீட்டின் உரிமை நிலை என்ன?*

சொந்த வீடா / வாடகை வீடா )

வீட்டின் உரிமை நிலை

வீட்டின் உரிமை நிலை (Home ownership) என்பது ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குடும்பத்திற்கு அந்த வீடு சொந்தமானதா அல்லது அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா என்பதைக் குறிக்கிறது. இது சமூக, பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய காரணியாகும்.


14. வீட்டில் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை எத்தனை ?

HOW MANY ROOMS IN YOUR HOUSE அறைகளின் எண்ணிக்கை


15. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை ?

HOW MANY COUPLES IN YOUR HOUSE

திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை


16. குடிநீரின் முக்கிய ஆதாரம் ?

குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரங்கள் மேற்பரப்பு நீர் (ஏரிகள்), நிலத்தடி நீர், மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகின்றன

(ஏரிகள், ஆறுகள்) மற்றும் நிலத்தடி நீர் (கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்)


17. குடிநீர் வசதி எப்படி கிடைக்கிறது ?குழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது 


19. கழிவறை உள்ளதா ?

கழிப்பிட வசதி


20. கழிவறை எந்த வகை ?


21. கழிவு நீர் வெளியேறும் வசதி உள்ளதா ?

 கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு


22. குளியல் வசதி இருக்கிறதா ?


23. சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு வசதி உள்ளதா ?

சமையலறை வசதி மற்றும் கியாஸ் இணைப்பு

எல்.பி.ஜி (LPG)

குழாய் வழி கியாஸ் (PNG)


24. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது ?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்

•எல்.பி.ஜி (LPG)

இயற்கை எரிவாயு (PNG - Piped Natural Gas)

•மின்சாரம் (Electricity)

•விறகு, கரி மற்றும் சாணம் 


25. ரேடியோ / டிரான்சிஸ்டர் இருக்கா ?

வானொலி,டிரான்சிஸ்டர்


26. தொலைக்காட்சி ( TV ) இருக்கா ?


27. இணையதளம் வசதி இருக்கா ?இணையதள வசதி


28. மடிக்கணிணி, லேப்டாப் இருக்கா?


29. தொலைபேசி /மொபைல் போன் /ஸ்மார்ட்போன் இருக்கா ?


30. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் இருக்கா ?


 31. கார் / ஜீப் / வேன் இருக்கா ?

CAR / JEEP / VAN


32. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு  எது ?

அரிசி (Rice)

கோதுமை (Wheat)

மக்காச்சோளம் (Maize / Corn)

சிறுதானியங்கள் (Millets)

பார்லி மற்றும் ஓட்ஸ் (Barley & Oats)


33. உங்கள் மொபைல் எண் ( மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு மட்டும் )

செல்போன் எண்


ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.


PRASHAST 2.0 - அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கான குறைபாட்டைக் கண்டறியும் இணையவழிப் பயிற்சி



PRASHAST 2.0 - சமக்ர சிக்ஷா - உள்ளடக்கிய கல்வி: மாணவர்களுக்கான குறைபாட்டைக் கண்டறியும் செயல்முறைக்கு உதவும் வகையில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான இணையவழி விழிப்புணர்வுப் பயிற்சித் தொகுதியை அறிமுகப்படுத்துதல் - பயிற்சியை நிறைவு செய்வதற்கும் வகுப்பறை உற்றுநோக்கலுக்குமான வழிகாட்டுதல்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



https://prashast.education.gov.in/


அனைவரும் வணக்கம்

மேலே கொடுக்கப்படுள்ள link ல் அனைத்து ஆசிரியர்களும் login செய்து IE HEALTH SCREENING தொடர்பான பயிற்சி video வை July 15 க்கள் பார்த்து தாங்கள் பயிற்சி பெற்றதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதில் video பார்ப்பதற்கான user id : உங்கள் பள்ளி UDISE எண், password : குறிப்பிட்ட ஆசிரியரின் mobile எண் ( EMIS ல் உள்ள mobile எண்)

 மேலே குறிப்பிட்டுள்ள link ல் உள்ள 10 videoக்களையும் பார்த்துவிடவும்.


தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த தகவல்களை பகிரவும்


நன்றி



Samagra Shiksha - Tamil Nadu


From

Dr. M.Aarthi I.A.S., State Project Director, Samagra Shiksha, Perasiriyar Anbazhagan Kalvi Valagam, Chennai-600006.


To

The Chief Educational Officers, All Districts.


RC. No.29/B3/IE/SS/2026, Date: 08.07.2026


Sir/Madam,


Sub :


PRASHAST 2.0 - Samagra Shiksha - Inclusive Education Rollout of Online Sensitisation Training Module for Headmasters, Teachers and Special Educators to Facilitate Disability Screening of Students - Guidelines for Completion of Training and Classroom Observation - Reg.


Ref :


An online meeting with the officials of the Ministry of Education and the Technical Team was held on 03.07.2026.


It is informed that the Ministry of Education has introduced PRASHAST 2.0, an online disability screening module for the early identification of Children with Special Needs (CwSN) in schools for the academic year 2026-2027. As part of its nationwide rollout, an online sensitisation training programme has been initiated for all Headmasters, Teachers and Special Educators to prepare them for the disability screening of students. The PRASHAST 2.0


Implementation Timeline and key action points are detailed below:


Sl. No.

Action Point

Responsibility

Timeline


1.

Rollout of PRASHAST 2.0 Sensitisation training programme

CEOs of all districts

08-July-26


2

Completion of online sensitisation training before disability screening

General Teachers

By 31 July 2026


3

Completion of UDISE+ authentication and school verification

Headmasters

July 2026-15 August 2026


4

Completion of Part-I Disability Screening

General Teachers

15 August 2026-15 September 2026


5

Undertaking Part-II Disability Screening

Special Educators

From September 2026 onwards


6

Planning and organisation of assessment camps based on screening outcomes

SPO & DPO

November 2026


In this regard, all the Chief Educational Officers are requested to ensure that the sensitisation training is completed by every Headmaster, Teacher and Special Educator within the stipulated timeline. The guidelines to be followed for the implementation of the Prashast


2.0-sensitisation training programme are furnished below.


1. Every school with a UDISE Code shall complete the sensitisation training. The training is mandatory for all teachers working in schools including:


Headmasters/Principals


All Government School Teachers


Government Aided School Teachers


Private School Teachers


2. Teachers shall log in using the School UDISE Code and the Mobile Number registered in the UDISE+ Portal. Only the registered mobile number can be used for accessing the training module.


Special Educators


3. Training Module


The training module consists of 10 video modules.


Each teacher must watch all the videos available in their login.


Videos cannot be fast-forwarded or skipped.


Teachers may exit and continue later.


The system automatically resumes from the last viewed position.


4. Training Status


The training dashboard will display the following status:


Status

Meaning


Completed

Video has been watched fully.


In Progress

Video has been partially watched.


Pending

Video has not yet been viewed.


Teachers should ensure that all videos show "Completed".


5. Important


Completion of all the sensitisation videos is mandatory. Unless every video is completed, the teachers cannot proceed to the disability screening of students.


6. Classroom Observation after Completion of Training


After completing the training, teachers shall begin systematic classroom observation.


Teachers should observe students during regular classroom activities and identify children


who consistently experience difficulties such as:


Walking or moving


Climbing stairs


Using hands


Reading


Writing


Seeing


Hearing


Speaking


Understanding lessons


Paying attention


Communicating


Eating


Behavioural or social interaction


Any other developmental concerns explained in the training videos.


7. Teachers shall maintain a separate observation notebook and record the following details


Student Name


Class


Nature of observed difficulty


The observations should be based on repeated classroom experiences and not on a single incident.


8. Responsibility of BRTES


At the Block level, the Block Resource Teacher Educators (BRTEs) shall ensure 100% enrolment of all Headmasters, Teachers and Special Educators in the PRASHAST 2.0 sensitisation training module and monitor the completion of all ten sensitisation videos by every teacher.


They shall regularly review the training completion status during their school visit, provide timely support to schools facing login or technical issues and ensure that all schools are fully prepared before the commencement of the disability screening process scheduled from August 2026.


All Chief Educational Officers are requested to disseminate these instructions. immediately to all District Educational Officers, Block Educational Officers, BRTES and schools under their jurisdiction and ensure strict compliance with the above guidelines within the prescribed timeline.

for State Project Director(FAC)


Copy to


1. The Director, School Education, Chennai-6.


2. The Director, Directorate of Elementary Education, Chennai-6


3. The Director, Directorate of Private schools, Chennai-6.


4. The Director, SCERT, Chennai-6.



Census 2027 - User manual for HLO mobile app


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - HLO மொபைல் செயலிக்கான பயனர் கையேடு


User manual for HLO mobile app - Census 2027



>>> Click Here to Download 


‘அன்பாசிரியர்’ விருது குறித்த தகவல்கள்

 


‘அன்பாசிரியர்’ விருது குறித்த தகவல்கள் 


ஆசிரியர்களுக்கு அன்பின் அழைப்பு.


‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ராம்ராஜ் காட்டன் இணைந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருது ஏழாம் ஆண்டாக வழங்கப்படவிருக்கிறது.


கல்விச்சூழலில் புத்துணர்வோடு புதிய முன்னெடுப்புகளைச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களைப் பாராட்டிக் கவுரவிக்கும் நல்முயற்சி.


ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வரும் 2026 ஜூலை 12-ஆம் தேதிக்குள் விரைந்து பங்கேற்கவும்.


இணைப்பில் க்யூஆர் கோடு தரப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்தால் விண்ணப்பம் வரும். அதிலுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்புங்கள்.


ஆசிரியர்களுக்கு முன்னதான வாழ்த்துகள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக்...