கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BEO பதவிக்கும் TET தேவை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 

BEO பதவிக்கும் TET தேவை -  உயர்நீதிமன்றத்தில் வழக்கு


வாட்ஸ்அப் பகிர்வு


அனைவருக்கும் வணக்கம்🙏


MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 


எனவே இது தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Challenge செய்யப்பட்டுள்ளது.

Stay கேட்கப்பட்டுள்ளது.

DEE PROCEEDINGS ஐ QUASH செய்யவும்,

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி உயர்வு கலந்தாய்வு நடை பெறுகிறதா என்பதை உறுதி செய்ய , தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்லி  (CALL FOR RECORDS) PRAYER  வைக்கப்பட்டுள்ளது


Without TET II,

MSHM TO BEO PROMOTION ஆனது

Supreme court of India வின் 01-09-2025 தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்று Prayer வைக்கப்பட்டுள்ளது


முதல் Hearing சென்ற வாரம் நடை பெற்றது.


அடுத்த hearing அடுத்த வாரம் பட்டியலிடப்பட்டுள்ளது.


Counter affidavit தாக்கல் செய்ய சொல்லி அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு மாண்புமிகு நீதிபதி திருமதி P T ASHA அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


இவ்வழக்கில் கூறப்பட்டுள்ள தகவல்கள் :

1) SUPREME COURT OF INDIAவின் 01-09-2025 நாளிட்ட TET PROMOTION CASE ன் JUDGEMENT 100 % மீறப்பட்டுள்ளது.


2) RTE ACT 2009 வின் விதிகள் பின்பற்றப்படவில்லை.


3) NCTE RULES/NCTE ACT மீறப்பட்டுள்ளது.


4) அரசாணை 12 திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது


5) இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.



Election Duty Exemption - DEO's order


 தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற விண்ணப்பிப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு


District Education Officer's order regarding application for exemption from election duty



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


4 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

 

நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு


கரூர், ஈரோடு, நாகை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர்களை (எஸ்.பி.) மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு - புதிய எஸ்.பி.க்கள் நியமனம்


Election Commission orders transfer of four district police superintendents




GBM 2.0 - அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க வாய்ப்பு


GBM 2.0 - அரசு  ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க வாய்ப்பு


அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே அலட்சியம் வேண்டாம்! GBM 2.0 - உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க கடைசி வாய்ப்பு


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தற்போது ஒரு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கருவூலத் துறையிலிருந்து (Treasury Department) ஜிபிஎம் 2.0 (GBM 2.0) தொடர்பான பணிகளை மிக விரைவாக முடிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு GBM 2.0 அப்டேட்: தமிழ்நாடு அரசு கருவூலத் துறை மூலம் ஜிபிஎம் 2.0 (GBM 2.0 - Global Beneficiary Master) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 11 இலக்கத் தனித்துவ ஐடி உருவாக்கப்படுகிறது. IFHRMS போர்ட்டலில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் PF விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது குறித்த முழுமையான வழிகாட்டி பற்றி பார்ப்போம்.


ஜிபிஎம் 2.0 (GBM 2.0) என்றால் என்ன?

ஜிபிஎம் 2.0 என்பதன் முழு வடிவம் Global Beneficiary Master என்பதாகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு அரசு ஊழியரின் தனிப்பட்ட தரவுத் தொகுப்பு (Personal Data). உங்கள் வங்கி கணக்கு எண் (Bank Account), ஆதார் (Aadhaar), பான் கார்டு (PAN Card), மொபைல் எண் (Mobile) மற்றும் மின்னஞ்சல் (E-mail) முகவரி போன்றவை உங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும். ஒரு ஊழியரின் தரவு மற்ற ஊழியரோடு எந்த இடத்திலும் மேட்ச் ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த Data Cleansing பணி நடைபெறுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு எனத் தனியாக 11 இலக்க GBM ID உருவாக்கப்படும்.


உங்களுடைய GBM ID மற்றும் தரவுகளைச் சரிபார்ப்பது எப்படி?

உங்களுக்கு GBM ID உருவாகிவிட்டதா அல்லது உங்கள் தரவுகளில் ஏதேனும் பிழைகள் (Errors) உள்ளதா என்பதை அறிய கீழ்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்.

IFHRMS போர்ட்டலில் Initiator Login செய்யவும்.

Other Application என்பதற்குச் சென்று, அதில் GBM 2 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Beneficiary -> DTO Beneficiary Details என்பதை கிளிக் செய்யவும்.

அதில் உள்ள Know Your Option பகுதிக்குச் செல்லுங்கள்.

உங்கள் பெயர், GBM ID, ஆக்டிவ் ஸ்டேட்டஸ் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.


உங்களுடைய GBM ID-ல் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா எப்படி பார்ப்பது?

E-Service -> Human Resource -> GBM Report Viewer மூலம் ஒரு எக்செல் (Excel) கோப்பைத் தரவிறக்கம் செய்யவும்.

அதில் Exception Value மற்றும் Exception Remark என்ற பகுதியில் உங்கள் தரவுகளில் உள்ள பிழைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.


உங்களுடைய GBM ID-ல் எப்படி திருத்தம் செய்வது?

அரசு தரப்பில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள சில முக்கியமான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.


பெயர் மற்றும் பிறந்த தேதி

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பணிப் பதிவேடு (SR), IFHRMS ப்ரொபைல், மற்றும் CPS/GPF அக்கவுண்ட் ஸ்லிப் ஆகிய மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயரின் இனிஷியல் (Initial) எப்போதும் பெயருக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் (CAPITAL LETTERS) இருக்க வேண்டும்; நடுவில் புள்ளி (Full Stop) வைக்கக்கூடாது.


பணியேற்ற தேதி (DOJ)

உங்கள் SR புத்தகத்தில் உள்ள பணியேற்ற தேதியும், IFHRMS மற்றும் CPS/GPF ஸ்லிப்பில் உள்ள தேதியும் சரியாகப் பொருந்த வேண்டும்.



PF வகை (PF Type)

சிலருக்கு CPS/GPF ஆப்ஷன் செலக்ட் செய்ய முடியாமல் மறைந்திருக்கும் (Hide). இதற்கு ஒரு சிறிய ட்ரிக் உள்ளது: Employee Category-க்குச் சென்று 'Government Servant' என்பதை மாற்றிவிட்டு, மீண்டும் 'TN Government' எனத் தேர்ந்தெடுங்கள். இப்போது அந்த ஆப்ஷன் காண்பிக்கப்படும்.


மொபைல் எண்

கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால், இருவருக்கும் தனித்தனி மொபைல் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒரே எண்ணைப் பகிரக்கூடாது.


GBM ID திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?

நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் உரிய ஆதாரங்களை 1 MB அளவிற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெயர் / பிறந்த தேதி மாற்றம் (SR புத்தகத்தின் முதல் பக்கம்)

பணியேற்ற தேதி மாற்றம் (SR புத்தகத்தின் 58-வது பக்கம்)

தந்தை பெயர், ஆதார் கார்டு, பான் கார்டு நகல் அவசியம்

CPS / GPF எண் திருத்தம் (அலாட்மெண்ட் நம்பர் (Allotment Number) நகல்)

இந்த விவரங்கள் அனைத்தையும் சரியாகப் புதுப்பித்துவிட்டால், உங்களுக்கு வர வேண்டிய சம்பளம் மற்றும் இதர பணப் பலன்கள் எந்தத் தடையுமின்றி உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இல்லையெனில், அவை நிறுத்தி வைக்கப்பட (Hold) வாய்ப்புள்ளது. எனவே இந்த GBM 2.0 பணிகளை விரைந்து முடியுங்கள்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-03-2026

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 17.03.2026 

கிழமை:- செவ்வாய்


திருக்குறள்:

அதிகாரம் 57 / CHAPTER 57 –

வெருவந்த செய்யாமை

குறள் 561:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.           

விளக்க உரை:

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.


பழமொழி :
Hear more,but talk less.      

அதிகமாக கேள்,குறைவாக பேசு.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :

வெற்றியோ, தோல்வியோ எது வரினும் நம் கடமையை செய்வோம். பிறர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் - அண்ணல் அம்பேத்கர்


பொது அறிவு :

01.உலகின் மிக அதிகமான எரிமலைகள்எந்த பெருங்கடலில்  உள்ளது?

பசிபிக் பெருங்கடல்

Pacific Ocean

02.மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரிகோர் மெண்டல் -Gregor Mendel


English words :

Election-

The process where people vote to choose their representatives or leaders.

Candidate-

A person who contests in an election to win a position.


தமிழ் இலக்கணம்:

முன்னாள் அமைச்சர்

முந்நாள் அமைச்சர்

முன்னால் அமைச்சர்

இவற்றில் எது சரி ?

எல்லாமே சரி தான். நாம் உபயோகப் படுத்தும் இடத்தைப் பொறுத்து அமையும்.

முன்னாள் அமைச்சர் என்றால் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முந்நாள் அமைச்சர் என்றால் மூன்று நாட்கள் மட்டும் அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முன்னால் அமைச்சர் என்றால் நமக்கு முன்னால் அமைச்சர் இருக்கிறார் என்று பொருள்.

ஆக மூன்று வார்த்தைகளும் சரியே


அறிவியல் களஞ்சியம் :

சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.


மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்

சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.



நீதிக்கதை

ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது.

இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான். மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா. “நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்” என்று கேட்டார் அவன் மாமா. “நான் படித்து கலெக்டராக வருவேன்” என்றான் மணிவண்ணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா “தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்” என்றார். மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?” என்று நினைத்தான். வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான். பாடங்களில் அவன் மனம் கவனம் செல்லவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனை கவனித்து விட்டார். ஆசிரியர் அவனை தனியாக அழைத்து விசாரித்தார்.

“ஒரு ஏழையின் மகன் கலெக்டராக ஆசைப்படுவது பேராசையா” என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். “இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்” என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், “உன் சந்தேகத்தை அவரிடமே கேள்” என்றார். முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலெக்டரிடம் கேட்டான். “ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்டராக வர ஆசைப்படுவது பேராசையா?

“நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை” என்று பளிச்சென்று கூறினார் கலெக்டர். “நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான்”. “உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது” என்று பேசி முடித்தார் கலெக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன.

அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது” என்று கலெக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


இன்றைய செய்திகள்

⭐அசாம் & புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 9ம்தேதி நடைபெறவுள்ளது.

⭐ எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி 2025- விருது அறிவிப்பு

⭐ போதுமான அளவு பெட்ரோல் எரிபொருள் கையிருப்பு உள்ளது என மத்திய  பெட்ரோலியத் துறை தகவல்

*விளையாட்டு செய்திகள்*

🏀நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்திடம் தென்னாப்பிரிக்கா  வெற்றி பெற்றது.


Today's Headlines

⭐ Voting for the Assam & Puducherry Legislative Assembly elections will be held on April 9.

⭐ Writer Tamil Selvan has been announced as the recipient of the Sahitya Akademi Award 2025.

⭐ The Union Petroleum Ministry has stated that there is sufficient stock of petrol fuel available.

Sports News

🏀 The South African team, which is touring New Zealand, is playing a 5-match T20 series. In the first T20 match, South Africa defeated New Zealand.


TNLA Elections 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு


TN Elections 2026 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



CEO TN PR No : 002 , Date: 16.03.2026 

 

GENERAL ELECTIONS - TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, 2026

Election Commission of India has announced the Schedule for General Elections to the Tamil Nadu Legislative Assembly, 2026 on 15.03.2026. 


The Poll schedule is as follows:-

Sl. No. Poll Event Date

1. Issue of Gazette Notification 30.03.2026 (Monday)

2. Last date for making Nominations 06.04.2026 (Monday)

3. Date for the scrutiny of Nominations 07.04.2026 (Tuesday)

4. Last date for the withdrawal of candidatures 09.04.2026 (Thursday)

5. Date of Poll 23.04.2026 (Thursday)

6. Date of Counting 04.05.2026 (Monday)

7. Date before which election shall be completed 06.05.2026  (Wednesday)

The Model Code of Conduct comes into force with immediate effect from the date of announcement i.e. 15.03.2026 and shall remain in force till the completion of election process. The Model Code of Conduct is applicable to all the Political Parties, all the Contesting Candidates, and the Government machinery. We request all the Political Parties and the contesting candidates to strictly abide by the Model Code and extend their fullest co-operation for conduct of free, fair, peaceful and inclusive election. All Secretaries to Government and Heads of Departments/ Boards/Corporations were also sensitized on MCC. As all Officers / officials, including Police engaged in the conduct of elections are deemed to be on deputation to the Election Commission of India as per section 13CC of Representation of People Act, 1950 and they were all instructed to discharge their duties in an impartial manner without fear or favor. 

The final Electoral rolls with reference to 01.01.2026 as qualifying date were published on 23.02.2026. As on 15.03.2026, the total number of electors is 5,69,17,979 (Male:2,78,32,032; Female: 2,90,78,291 and Third Gender: 7,656) This includes 2446 Overseas Electors. There are 67,168 Service Electors in the final Electoral roll. Currently, the process of continuous revision is ongoing and all Eligible applications for addition can submit their Form 6 and form 8 (only for shifting) till 10 days before the last date for nominations.

All electors are requested to ensure the availability of their name in the elector roll and find their Part no and Sl no well in advance, so that they are able to identify their polling station locations before the elections. In order to facilitate the electors to find their names in the Electoral roll , they can use the online voter search facility or contact the concerned DEO facilitation center for assistance.

The Election Commission of India has been implementing all possible additional facilities to ensure all the voters enrolled in the electoral roll to exercise their franchise in the forthcoming elections to the Tamil Nadu Legislative Assembly. Action has been taken to facilitate voting through postal ballot to senior citizens aged above 85 years, and persons with above 40% benchmark disabilities including persons with intellectual disability and persons affected with Covid and taking treatment from home. (Absentee voters) The above persons have the option to apply for postal ballot to the Returning officer of the Legislative Assembly constituency within 5 days of the announcement of the elections. 

Returning officers on receipt of the applications, verifying the eligibility will deliver the postal ballots at their home and take back the filled up postal ballots. Therefore, senior citizens aged above 85 years, persons with above 40% benchmark disabilities including persons with intellectual disability and persons who are taking treatment for Covid from home should fill up form 12D and handover to the returning officer within 5 days of notification.

It has been ensured that all the polling stations are provided with Assured Minimum Facilities such as adequate furniture, help desk, electricity and proper lighting, provision for ramp, proper signage, toilet, provision for drinking water ramps, shades, approach roads etc. Additional facilities for PwDs including Facilitation measures such as Wheel chairs, Wheel chair assistants / volunteers and adjustable tables are being arranged. For visually impaired, hearing impaired and speech impaired, Trained volunteers will be engaged at select booths. PwD voters can seek assistance through Saksham App developed by ECI.

The Election Expenditure Monitoring teams i.e., Flying Squads, Static Surveillance Teams, Video Surveillance Teams, have started functioning round the clock in shifts from 15.03.2026. The supporting teams of Expenditure Monitoring Cell, Video Viewing Team, Accounting Team have also started functioning. The State Level / District Level Media Certification and Monitoring Committee have been constituted and started functioning for pre-certification of Political advertisements and to keep watch over the instances of Paid News. No advertisement in electronic media shall be published or telecasted without the prior certification obtained from the district level or State level MCMC.

Complaint redressal mechanism – Call center - The State / District Call Centre at Tamil Nadu is operational with toll free number 1800-4252-1950, District Contact Centre at all the District headquarters have been established with Toll Free Number 1950.SCC & DCC is working on 24 × 7 mode. Citizens can make use of the services in https://voters.eci.gov.in to find their sl.no. part no., location of the Polling Station and the contact details of their BLO.Web based online complaints can also be registered through NGS portal.


The Voters shall present his/her EPIC or any of the following 12 original Photo identification documents (Identity Cards) for identification as approved by the Commission which shall be used as alternate are as listed below.

(i) Aadhaar Card.

(ii) MGNREGA Job Card.

(iii) Passbooks with photograph issued by Bank/Post Office.

(iv) Health Insurance Smart Card issued under the scheme of Ministry of Labour/Ayushman Bharat Health Card.

(v) Driving License.

(vi) PAN Card.

(vii) Smart Card issued by RGI under NPR.

(viii) Indian Passport.

(ix) Pension document with photograph.

(x) Service Identity Cards with photograph issued to employees by Central/State Govt./PSUs/Public Limited Companies.

(xi) Official identity cards issued to MPs/MLAs/MLCs and

(xii) Unique Disability ID (UDID) Card, M/o Social Justice & Empowerment, Government of India. 

In order to ensure fair, free, transparent, and inclusive election some of the new initiatives include.

1. Mobile deposit facility at the Polling stations.

2. Going for a Clearer Voter Information Slip.

3. Use of Colour photo of Candidates and Large font size on EVM Ballot paper.

4. Limiting to a Maximum of 1200 Electors per polling station.

5. Permitting Candidates’ booth just outside 100 meters of PS.

6. Integrated ECINET – One-stop Digital platform for all key voter services 

for all stakeholders.

7. 100% Webcasting at all PSs, ensures round the clock monitoring (inside 

& outside).

8. Standard ID cards for the BLOs.

With the support of all the media personnel who have assembled here and all other stake holders, we as a team will make this election a memorable one with increased voters participation.

“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”.

ARCHANA PATNAIK,

CHIEF ELECTORAL OFFICER &

PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

Issued By: - DIPR, Secretariat, Chennai – 9


Election Code of Conduct


தேர்தல் நடத்தை விதிமுறைகள் - அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026


Election Code of Conduct - Guidelines for Government Officials - Tamil Nadu Legislative Assembly Election 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்


தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த தகவல்கள்: முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்?


தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்.


ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி.


பெண் வாக்காளர்கள் 2.89 கோடி.


மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617.


முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம்.


20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடி.


100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530.


85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்.


மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்.


சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி

 


700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம் பெறும். தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்காக வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணிக்க வேண்டும் - தேர்தல் தேதி அறிவித்த போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இவ்வாறு குறிப்பிட்டு பேசினார்.


5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! 


வருசநாடு மலைப்பகுதியில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்

.

ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.


அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.


தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.


ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.


8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


சராசரியாக 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.


வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். பில் ஓக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.


3 மணி நேரம் பயணம் செய்து வருசநாடு வாக்குச்சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் செல்கிறார்கள். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிக்கு செல்ல 3 மணி நேரம் பயணிக்க வேண்டும். 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் என்றார்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-03-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 16.03.2026 

கிழமை:- திங்கள்


திருக்குறள்:

குறள் 815:

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

விளக்க உரை:

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.


பழமொழி :
Accept if the counsel is good, no matter who gave it.

அறிவுரை நல்லதாய் இருப்பின் யார் கூறினாலும் கேள்


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் முன்னேறுங்கள் - டாக்டர் அம்பேத்கர்


பொது அறிவு :

01.அரசியல் தத்துவத்தின் தந்தை (Father of Political Philosophy) என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரேக்க தத்துவஞானி
பிளேட்டோ- Plato

02. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற உள்ளது?

ஏப்ரல் 23,2026


English words :

Brittle - breakable; உடையக்கூடிய
Baffle - Astound; குழப்பம்


தமிழ் இலக்கணம்:

கேளிர், கேளீர்

இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருமா இல்லாவிட்டால் வேறு வேறு பொருளைத் தருமா? வாருங்கள் பார்ப்போம்

இரண்டும் வேறு வேறு சொற்கள் தான்.

கேளிர் என்பது உறவினரைக் குறிக்கும்.

எ. கா - யாதும் ஊரே யாவரும் கேளிர்

கேளீர் என்பது கேளுங்கள் என்பதைக் குறிக்கும்.

எ. கா - நான் சொல்வதைக் கேளீர்


அறிவியல் களஞ்சியம் :

நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம்.


மார்ச் 16

அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவு நாள்

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.



நீதிக்கதை

கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.


இன்றைய செய்திகள்

16.03.2026

⭐தமிழகத்திற்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு

⭐ மாணவர்கள், கப்பல் மாலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் என சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

⭐ மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

⭐ ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


Today's Headlines

⭐ Voting for Tamil Nadu will be held in a single phase on  April 23

⭐ India’s Ministry of External Affairs has confirmed that about 9,000 Indians, including students, ship sailors, professionals, and businesspeople, are currently safe in Iran

⭐ Tension has arisen in Meghalaya after clashes between tribal groups and other communities in the Garo Hills district

⭐ Due to continuous attacks by Iran, several Arab countries that are allies of the United States have been affected.

SPORTS NEWS

🏀 Former Pakistan captain Sarfraz Ahmed has announced his retirement
He played 54 Test matches, 117 One-Day Internationals, and 61 T-20 matches for the Pakistan national cricket team.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BEO பதவிக்கும் TET தேவை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

  BEO பதவிக்கும் TET தேவை -  உயர்நீதிமன்றத்தில் வழக்கு வாட்ஸ்அப் பகிர்வு அனைவருக்கும் வணக்கம்🙏 MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித...