கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனது மூளையில் Neuralink பொருத்திக்கொண்ட Noland Arbaughன் 100 நாள் அனுபவங்கள்

 


தனது மூளையில் Neuralink  பொருத்திக்கொண்ட Noland Arbaughன் 100 நாள்  அனுபவங்கள்


எலான் மஸ்கின் நியூராலிங்க் சிப்பினை முதல் முதலாக தனது மூளையில் பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு வயது 30. 


முதன் முதலில் நியூராலிங்க்கை பொருத்திக் கொண்டவர் என்ற பெயர்  வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.


எலான் மஸ்க் செய்துக் கொண்டிருக்கும் 'நியூராலிங்க்' ஆராய்ச்சி மூக்கின் மேல் விரல் வைக்க கூடிய அளவுக்கு ஆச்சர்யமானது. ஏன் சட்டென்று நம்ப முடியாததும் கூட.


'நியூராலிங்கிற்கு' ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர், 'டெலிபதி' என்பது தான். லேட்டஸ்ட்டாக வைத்த பெயர் தான் நியூராலிங்க். 


'இயன் எம்.பேங்க்ஸ்' என்ற எழுத்தாளர் எழுதிய 'நியூரல் லேஸ்' எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் நாவலை படித்த பிறகு தான் எலான் மஸ்கிற்கு இந்த 'நியூராலிங்க்' ஐடியாவே வந்துள்ளது.


'நியூராலிங்க்' என்பது Brain Computer Interface (BCI) என்கிற சமாச்சாரத்தை சார்ந்தது. அதாவது மனித மூளையின் செயல்பாடுகளை தனியாக ஒரு டிவைஸ் ஒன்றினை வைத்து அறியலாம். மயிரிழையை விட மெல்லிய தங்கம் அல்லது பிளாட்டின இழைகள், அறுவை சிகிச்சை செய்யும் ரோபோட்டின் உதவியால் நமது மூளையில் பொறுத்தப்படும். 


குரங்கு மற்றும் பன்றியிலிருந்து தான் இந்த ஆராய்ச்சி தொடங்கியிருக்கிறது. பல விலங்குகள் இந்த ஆராய்ச்சிக்கு பலியாகின. ஆதலால் Animal Welfare Associationனும் , PETAவும் இதையும் ஆரம்பத்தில் எதிர்த்திருக்கிறார்கள். இந்த ஆராச்சியை தடை செய்ய வேண்டுமென போராட்டம் செய்திருக்கிறார்கள்.


Human Clinical Trail ஐ FDA 2022 ல் நிராகரித்து விட்டு, 2023 ல் Approve செய்திருக்கிறது. இந்த வருட ஜனவரியில் தான் ஒரு மனித மூளையின் இந்த சிப்  வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருக்கிறது. அவருடைய பெயர் தான் நோலண்ட் அர்பார்க்.



மனித மூளையின் உள்ளே வைக்கப்படும் இந்த கருவி கிட்ட திட்ட மிகச்சிரிய ஐந்து நாணயங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடிக்கி வைத்தது போல  இருக்கும் என்று கூறப்படுகிறது.


இந்த கருவியை பொறுத்திக் கொண்டவர்கள், தான் சிந்திப்பதன் மூலம் செல்போனை இயக்கலாம். கம்ப்யூட்டர் கர்சரை நகர்த்தலாம். கிட்ட திட்ட எந்த  எலக்ட்ரானிக் சாதனத்தையும் சிந்தனையால் கட்டுப்படுத்தலாம். கை கால்களை இழந்தவர்கள், முதுகுத் தண்டுவட பாதிப்புக்குள்ளானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பது எலோன் மஸ்க்கின் நம்பிக்கை. 


அதற்குள் இந்த கருவியை பொறுத்திக் கொள்ள பலர் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்கிறதோ அதை விட ஆயிரம் மடங்கு மனிதனின் ஆசைகளும் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.


எலான் மஸ்க்கின் நியூராலிங்க் N1 மூளை உள்வைப்பைப் பெற்ற முதல் மனிதரான நோலண்ட் ஆர்பாக், X (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) என்ற சமூக ஊடகத் தளத்தில் ஒரு விரிவான பதிவைப் பகிர்வதன் மூலம், அந்தச் சாதனத்துடன் தனது 100-வது நாளைக் குறித்துள்ளார். 


2016-ல் நடந்த ஒரு டைவிங் விபத்தின் காரணமாகத் தோள்பட்டைக்குக் கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஆர்பாக், அந்த அனுபவத்தை "அறிவியல் புனைகதை எப்படியோ எனது அன்றாட யதார்த்தமாகிவிட்டது" என்று விவரித்தார். 


மேலும், அந்த செயல்முறை மிகவும் எளிமையானது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்: ஒரு சிறிய கீறல், அவரது மோட்டார் கார்டெக்ஸில் 1,024 மிக மெல்லிய இழைகளை ரோபோ மூலம் பொருத்துதல், மற்றும் விரைவான குணமடைதல். 7-வது நாளுக்குள், அவரது தழும்பு மங்கத் தொடங்கியது, மேலும் மூளை-கணினி இடைமுகம் (BCI) செயல்படுத்தப்பட்டவுடன் அவர் கூர்மையாகவும் நேர்மறையாகவும் உணர்ந்தார். 


இரண்டாவது வாரத்தில், ஒரு சிறிய அளவுத்திருத்த அமர்வுக்குப் பிறகு, தனது முதல் ஆப்பிள் மேக்புக்குடன் அந்த உள்வைப்பை இணைத்து, தனது எண்ணங்களின் மூலம் கர்சரை நகர்த்தியதாகவும் ஆர்பாக் வெளிப்படுத்தினார். 


சில வாரங்களுக்குள், ஸ்க்ரோலிங், கிளிக் செய்தல் மற்றும் தட்டச்சு செய்தல் ஆகியவை அவருக்கு இயல்பான செயலாகிவிட்டன. "மேக் உடனான ஒருங்கிணைப்பு மிகவும் மென்மையாக இருந்தது; நான் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக, மேக்கிற்கு முற்றிலும் புதியவன் என்ற நிலையிலிருந்து ஒரு வல்லுநராக மாறினேன்," என்று அவர் எழுதினார். 


80-வது நாளில், ஆர்பாக் கைகள் பயன்படுத்தாமல் வேர்ல்ட் ஆஃப் வார்கிராஃப்ட் விளையாடிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், அந்த அனுபவம் விரைவில் தடையற்றதாக மாறியது: 


"நான் இப்போது முழு வேகத்தில் அஸெரோத்தில் ரெய்டு செய்து ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் — மவுஸ் இல்லை, கீபோர்டு இல்லை, வெறும் எண்ணம் மட்டுமே. இந்த சுதந்திரம் ஒரு போதை போன்றது."


 "100 நாட்கள் ஆகிவிட்டன, அது இல்லாமல் என் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. N1 எனக்கு கணினியைப் பயன்படுத்த ஒரு புதிய வழியை மட்டும் கொடுக்கவில்லை — அது எனக்கு வாழ ஒரு புதிய வழியையும் கொடுத்தது," என்று ஆர்பாக் எழுதினார், மேலும் சோதனை முன்னேறும்போது தொடர்ந்து புதிய தகவல்களைப் பகிர்வதாகவும் உறுதியளித்தார்.


ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த உயர்நீதிமன்றம் பரிந்துரை

 


ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த உயர்நீதிமன்றம் பரிந்துரை


பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த பரிசீலிக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 


பேராசிரியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எட்டு வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சீரான இடைவெளியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன . இதனால் மாணவர்களின் உயர்கல்வி , ஆராய்ச்சி மற்றும் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆசிரியர்கள் கூட பல கல்வி நிலையங்களில இல்லை. தற்போது பணியில் உள்ள பல பேராசிரியர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தீவிரம் அடையும்.


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழுவுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைப்படி, பல மாநிலங்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படவில்லை. எனவே தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 65 ஆக உயர்த்த கோரி கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மனு  மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. 


இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயினி அவர்களும், அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.சதீஷ் அவர்களும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்கள் எழுப்பியுள்ள கோரிக்கை பரிசீலனைக்குரியதாகவே உள்ளது. எனவே பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்த கோரும் மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு 8 வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்



6th Std | Term 3 | Social Science| Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | சமூக அறிவியல் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2



Class 6 | Term III | Social Science| Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



தமிழ்நாடு அரசு ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 50 வினாக்கள் கொண்ட விரிவான வினாடி வினா



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும் 



6th Std | Term 2 | Social Science| Quiz Collection (50 Questions) | TET



ஆறாம் வகுப்பு | இரண்டாம் பருவம் | சமூக அறிவியல் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term II | Social Science| Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


தமிழ்நாடு அரசு ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல் ஆகிய அனைத்துப் பாடப்பகுதிகளிலிருந்தும் முக்கியமான 50 வினாக்கள் அடங்கிய வினாடி வினா



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும் 



6th Std | Term 1 | Social Science| Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | முதல் பருவம் | சமூக அறிவியல் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term I | Social Science| Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


தமிழ்நாடு அரசு ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பருவப் பாடப்புத்தகத்தில் உள்ள வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் பகுதிகளை உள்ளடக்கிய 50 வினாக்கள் கொண்ட விரிவான வினாடி வினா



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும் 



மேலே கொடுக்கப்பட்டுள்ள 50 வினாக்கள் ஆறாம் வகுப்பு முதல் பருவத்தின் அனைத்துப் பாடங்களையும் முழுமையாக உள்ளடக்கியுள்ளன. இந்த வினாடி வினா உங்கள் பாட அறிவைச் சோதிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் பெரிதும் உதவும். விடைகளுக்கான விளக்கங்களையும் கவனமாக வாசிப்பதன் மூலம் கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். வாழ்த்துகள்!


TAPS குறித்த ஐயங்களுக்கான விளக்கங்கள் (FAQs)

 


TAPS குறித்த ஐயங்களுக்கான விளக்கங்கள் (FAQs)


நண்பர்களே வணக்கம்

TAPS FAQ


1) நான் 25/4/26 இல் மறு நியமனத்தில் இருந்து ஓய்வு பெற்றேன்.. எனக்கு TAPS பொருந்துமா?


1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தான் தற்போதைய அறிவிப்பு... 

1.1.26 முன் பணியில் இருந்து ஓய்வு எனில் interim Payout இல்லை 


2) TAPS திட்டம் நல்லதா? சிறந்ததா?


தற்போது TAPS திட்ட விதிமுறைகள் எதுவும் வரவில்லை..

தற்போது வெளியிடப்பட்டது இடைக்கால நிவாரணம் ( interim Payout) மட்டுமே... 

முழுமையான திட்ட விவரங்கள் வரவில்லை 


3) Interim Payout வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவிட்டால்.

நமது CPS தொகையை தரமாட்டார்களா?


தங்களுக்கு CPS தொகை தான் மொத்தமாக வேண்டும் எனில் இப்போதே விண்ணப்பித்து மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்...

(TAPS கோர இயலாது...)


அல்லது தற்காலிக இடைக்கால நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்...


TAPS திட்டம் முழுமையாக வெளிவந்த பிறகு அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் அந்த சமயத்திலும் வெளியேறலாம் ( பெற்ற இடைக்கால நிவாரணம் வட்டியுடன் கழித்து விட்டு மீதி தொகை கிடைக்கும்) 


4) நீங்க எனக்கு எதை பரிந்துரை செய்வீர்கள்?

TAPS ஆ CPS ஆ...


TAPS விதிமுறைகள் வரும் வரை அதன் சாதக பாதகம் சொல்ல இயலாது...


இருப்பினும்


இப்போது TAPS இல் இருந்து இப்போதே வெளியேற்றம் 

அல்லது விதிமுறைகள் வந்து பிறகு வெளியேற்றம் என இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது...


எனவே எனது தனிப்பட்ட பரிந்துரை...

இப்போது TAPS இல் வெளியேறுவதை விட அந்த விதிமுறைகள் பார்த்து விட்டு பலன் இருப்பின் தொடருங்கள் அல்லது அப்போது வெளியேறுங்கள்...


இப்போது வெளியேறி விட்டீர்கள் எனில் TAPS Rules வந்து பிறகு மீண்டும் அதில் உள்ளே செல்ல வழிவகை இல்லை

எனவே எனது தனிப்பட்ட பரிந்துரை

TAPS rules வரும் வரை Interim Payout வாங்க option கொடுக்கலாம்...


5) 10 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

20 ஆண்டுகள் 

23 ஆண்டுகள்

பணி புரிந்த எல்லோருக்கும் ஓரே சதவீதம் தொகைதானா?

அதாவது 30% தொகைதானா?


ஆம் இது இடைக்கால நிவாரணம் தான் எனவே 1.1.2026 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு

 Last Basic pay இல் 30%. Fixed 


6) அந்த 30% க்கு DA உண்டா? 

ஆம் 

ஓய்வூதியதாரர்களுக்கு DA என்று சொல்ல மாட்டார்கள்

Dearness Relief (DR) என்பார்கள்...

இந்த 30% க்கு 60% DR உண்டு 


7) Interim Payout எப்படி கணக்கிடுவது?


கடைசி மாத ஊதியம் x 0.48 

இந்த தொகை தான் இடைக்கால நிவாரணம்.


8) கடைசி வரை இதே தொகை தானா?


இல்லை.. TAPS rules வரும் போது அதற்கு ஏற்ப மாறுபடும்...

DA அதிகரிக்கும் போது DR அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..


9) இடைக் கால நிவாரணம் ஒப்பளிக்க தகுதியானவர் யார்?


Group B, C & D பணியாளருக்கு நியமன அலுவலர்கள்


மேல்நிலைப்பளித் தலைமை ஆசிரியருக்கு- Director 

PGT - JD (HS)

BT - JD (P)


10) இடைக் கால நிவாரண தொகை பள்ளிகளில் இருந்து வழங்கப்படுமா?


கருவூலத்தின் மூலம் தனியரது வங்கி கணக்கில் ECS வாயிலாக மாதாமாதம் வரவு செய்யப்படும்.


11) கருவூலத்தில் தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?


தற்போது தான் அரசாணை வந்துள்ளது...

விண்ணப்பங்கள் பகிரப்பட்டுள்ளன

விண்ணப்பிக்க 60 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது..


விரைவில் கருவூலத்துறையில் இருந்து விரிவான வழிகாட்டுதல் வழங்கப்படும் / Operation Procedure 


12) 1.1.26 க்கு பிறகு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தவர்/ பணி ஓய்வு பெற்று CPS தொகை பெறாமல் மரணம் அடைந்தவர் குடும்பம் இந்த Interim Payout பெற இயலுமா?


ஆம் 1.1.26 க்கு பிறகு மரணம் எனில் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலும்...


13) 1.1.26 முன் மரணம். இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலுமா?

இல்லை. பெற இயலாது


14) TAPS அறிவிப்பு ஜனவரியில் வந்த போது...

1.1.26 முன் CPSல் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படும் என சொன்னார்கள்?

இதில் அது பற்றி எதுவும் இல்லையே?


ஆம். இது முற்றிலும் Interim Payout அறிவிப்பு தான்...

TAPS rules and regulations வரும் போது தான் மற்ற தகவல்கள்  கிடைக்கப்பெறும் .


15) அரசாணை 111 இல் நான்கு Form ( விருப்ப கடிதம்) உள்ளது நான்கையும் பூர்த்தி செய்து தர வேண்டுமா?


இல்லை . ஒரே ஒரு form மட்டுமே... தங்களுக்கு பொருத்தமான/ விருப்பமான விண்ணப்பம்


Form I- 

TAPS Interim Monthly payout வேண்டும் என விருப்பம் தெரிவிக்க 


Form II-

1.1.26 க்கு பிறகு இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர்கள் Interim Monthly payout வேண்டும் என விருப்பம் தெரிவிக்க


Form III-

CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் ( TAPS திட்டம் வேண்டாம்) என விருப்பம் தெரிவிக்க


Form IV-

இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர் CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் என விருப்பம் தெரிவிக்க


1.1.26 பிறகு ஓய்வு/ இறப்பு எனில் 

இந்த நான்கு விண்ணப்பத்தில்

ஏதேனும் ஒன்றை 

Form I/ II அல்லது Form III/IV கட்டாயம் 60 நாட்களுக்குள் முடிவு செய்து வழங்கிட வேண்டும்...


16) ஒரு WhatsApp பதிவில் TAPS இல் 50% ஓய்வு ஊதியம் 30% ஆக குறைப்பு? என வந்தது


தவறான புரிதல் ...

TAPS ஓய்வூதிய அறிவிப்பு வரவில்லை... 

தற்போது 30% என்பது இடைக்கால நிவாரணம்

முழுமையான TAPS rules வரும் போது இந்த தொகை (கூடுதலோ /குறைவோ) 

சரி கட்டப் படும் என்று தான் சொல்லி உள்ளார்கள்...


17) TAPS/ OPS எதிர்பார்த்து 1.1.26 க்கு முன் ஓய்வு பெற்ற நான் CPS தொகை பெறாமல் உள்ளேன்?


1.1.26 க்கு பிறகு ஓய்வு என்றால் மட்டுமே இந்த TAPS interim Payout option வழங்கப்பட்டுள்ளது...


1.1.26 முன் ஓய்வு எனில் 

CPS final settlement வாங்கி இருந்தாலும்/ வாங்காமல் இருந்தாலும்

இந்த Interim Payout option விருப்ப கடிதம் வழங்க வாய்ப்பு இல்லை 


18) 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்து தற்போது CPS இல் உள்ள அனைவரும் இந்த விருப்ப கடிதத்தை வழங்க வேண்டுமா?


இல்லை

1.1.26 முதல் ஓய்வு பெற்றவர்கள்..

அல்லது ஓய்வு பெற உள்ளார்கள் மட்டுமே 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

CPS இல் இருக்கும் அனைவரிடமும் விருப்ப கடிதம் எதுவும் கோரப்படவில்லை...


19) 1.1.26 க்கு பிறகு ஓய்வு. ஆனால் பணிக்காலம் பத்து ஆண்டுகளுக்கு குறைவு...

Interim Payout option உண்டா?


இல்லை... 

10 ஆண்டிற்கு குறைவான பணிக் காலத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு (1.1.26 க்கு பிறகு ஓய்வு பெற்றாலும்) 

இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.


20) TAPS interim Payout வந்துள்ளது... எனவே இனி  TAPS மட்டும் தானா? 

OPS?


1.1.26 பிறகு ஓய்வு பெற்ற 8000 மேற்பட்டவர்கள்... உரிய பலன்களை பெறாமல் தவிக்கிறார்கள் என பத்திரிகை செய்தி....


OPS 

CPS

TAPS 

அல்லது வேறு ஒரு புதிய திட்டம்...

எது என்றாலும்

அது அரசின் கொள்கை முடிவு 👍🙏


தமிழக அரசு PFRDA வில் இதுவரை இணையவில்லை ...

அரசு நினைத்தால் நமக்கு எதுவும் சாத்தியமே 🙏


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

21/6/26


மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் NEET தேர்வு மையம்



மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர் அப்துல்லாவுக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்


இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்த்த மாணவர் அதிர்ச்சி


அபுதாபியில் தேர்வு மையம் என்பதை பார்த்ததும் தேசிய தேர்வு முகமையை தொடர்புகொண்ட பெற்றோர்


  புதிய ஹால் டிக்கெட் தரப்படும் என கூறிய தேசிய தேர்வு முகமை



6th Std | Term 3 | English | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term III | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive quiz based on the Tamil Nadu State Board English textbook for Class 6, Term 3. This quiz covers all units, including prose, poetry, supplementary readings, and grammar sections such as "Who Owns the Water?", "Indian Seasons", "That Sunday Morning", and "The Jungle Book".



>>> Click Here to Practice Questions 



I've created a comprehensive set of 50 questions that touch upon every major story, poem, and grammar concept in your Class 6 Term 3 English textbook. This quiz will help you recall specific plot details, understand character motivations, and practice essential grammar skills like conjunctions and degrees of comparison. Good luck with your studies - you've got this!



6th Std | Term 2 | English | Quiz Collection (50 Questions) | TET

 



ஆறாம் வகுப்பு | இரண்டாம் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term II | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive 50-question quiz based on the Class 6 English Term 2 syllabus issued by the Government of Tamil Nadu. This quiz covers key prose lessons like "Sports Stars" and "Trip to Ooty," poetry such as "Team Work" and "From a Railway Carriage," as well as the supplementary stories and essential grammar topics like Pronouns and Adjectives.



>>> Click Here to Practice Questions 



I hope this 50-question quiz helps you master your Class 6 Term 2 English lessons! It covers everything from the inspiring stories of sports stars to the exciting travels of Gulliver and the rhythm of a railway carriage. Good luck with your studies—you've got this!


6th Std | Term 1 | English | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | முதல் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term 1 | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive quiz based on the Tamil Nadu Class 6 English textbook for Term 1. This 50-question assessment covers all three units, including prose, poetry, and supplementary readings, along with the relevant grammar and vocabulary sections.



>>> Click Here to Practice Questions 



I've created a comprehensive 50-question quiz that spans all the essential units of your Class 6 Term 1 English syllabus. It includes deep dives into the lives of sea turtles, the history of Indian spices, the beautiful poetry of nature, and essential grammar topics like nouns, pronouns, and prepositions.

​Good luck with your practice! Taking this quiz will help you understand both the stories and the language patterns perfectly. You've got this!


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனது மூளையில் Neuralink பொருத்திக்கொண்ட Noland Arbaughன் 100 நாள் அனுபவங்கள்

  தனது மூளையில் Neuralink  பொருத்திக்கொண்ட Noland Arbaughன் 100 நாள்  அனுபவங்கள் எலான் மஸ்கின் நியூராலிங்க் சிப்பினை முதல் முதலாக தனது மூளைய...