கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள்

 


1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 22-10-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Dear Team,


மேற்கண்ட சுற்றறிக்கையின்படி, 

இம்மாதத்திற்கான  6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான Future Ready Questions இன்று 09.03.2026 - 05.00 மணி முதல் exam.tnschools.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். இவ்வினாத்தாள்களை  13.03.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம். 


வினாத்தாள்களின் கடைசி 2 பக்கங்களில் விடைக்குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இவ்வினாக்களை பயன்படுத்துமாறு ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறோம்.



EMIS - Students Admission Form 2026-2027 AY குறித்த தகவல்கள்

 

EMIS -  Students Admission Form 2026-2027 Academic Year குறித்த தகவல்கள் 


EMIS -  Fill & Submit Students Admission Form AY 2026-2027


💫 2026-27 ஆம் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் சேர விரும்பும் 


▪️5+ மாணவர்கள்

▪️அங்கன்வாடி மாணவர்கள்

▪️புதிய நேரடி மாணவர்கள்


போன்றவர்களுக்கு


EMIS -யில் Students admission form fill செய்து Submit செய்தல்.


▪️Submit செய்தபின் Admission Receipt download செய்து மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கவும்.


▪️தற்போது Admission form fill செய்த மாணவர்களை வரும் கல்வி ஆண்டில் நமது பள்ளியில் தொடர பள்ளி த.ஆ நடவடிக்கை & முயற்சி எடுக்கவும்.


▪️ஒருசில காரணங்களால் தற்போது admission form fill செய்த மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தொடர முடியாமல் வேறு பள்ளிக்கு செல்ல நேர்ந்தால் இந்த admission receipt-யில் உள்ள Application ID எண்ணை கூறினால் போதும், புதிய பள்ளியில் Admit செய்து கொள்ளலாம்.


சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க அரசு உத்தரவு

 சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு



 தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? - எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.


தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு என இன்று (மார்ச் 10) மதியத்திற்குள் விவரம் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.


இஸ்ரேல் - ஈரான் போர் சூழலில் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.


தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று (மார்ச் 9) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.03.2026 

கிழமை:- செவ்வாய்



திருக்குறள்: 

குறள் 613:

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.             

 
விளக்க உரை:

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.


பழமொழி :
The childhood shows the man.   

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2. எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.


பொன்மொழி :

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் - சாக்ரடீஸ்


பொது அறிவு :

01.உலகின் மிக வேகமான பறவை

எது?

பெரெக்ரின் ஃபால்கன் -

Peregrine Falcon

02.அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

       பாதரசம் - Mercury


English words :

Grave-serious

Put up with -tolerate


தமிழ் இலக்கணம்:

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2

1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன)

      மல்லிகை   மணம் கமழ்கிறது –சரி

2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா)

      மாறன் கண் விழித்தான்

 
அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்படையான வெளிப்பாடுதான்  காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும்.


மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.



நீதிக்கதை

வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள்.

அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது.

இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.


இன்றைய செய்திகள்

10.03.2026

⭐தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

⭐உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

⭐அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.


Today's Headlines

⭐ In Tamilnadua digital population census will be conducted from July 17 to August 30

⭐ A 3,000-year-old wonder was discovered in Udumalai. A massive stone structure has been identified at Kallapuram

⭐ To prevent  cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

⭐ Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

*SPORTS NEWS*

🏀The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.



TAMILNADU LEGISLATIVE ASSEMBLY STRENGTH @ 21.01.2026


 தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கட்சி வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs ) எண்ணிக்கை , 21-01-2026இன் படி


TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY STRENGTH @ 21.01.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Serial No. / Name of the Political Party / Number of Members in Legislative Assembly


1 Dravida Munnetra Kazhagam 132 #

2 All India Anna DMK 62 *

3 Indian National Congress 17

4 Pattali Makkal Katchi 5

5 Bharatiya Janata Party 4

6 Viduthalai Chiruthaigal Katchi 4

7 Communist Party of India 2

8 Communist Party of India (Marxist) 2

9 Hon'ble Speaker 1

10 Vacant 5

Total 234


* Dr. Paul Manoj Pandian, M.L.A, elected from Alangulam Constituency has resigned as a Member on 4.11.2025. 

Consequently a vacancy has occurred in the Tamil Nadu Legislative Assembly and the strength of the 

All India Anna Dravida Munnetra Kazhagam Legislative Party has reduced from 65 to 64.

*Consequent on the demise of Thiru. T.K. Amul Kandasamy on 21.6.2025, Member representing Valparai (SC) Constituency, 

a vacancy has arisen in the Tamil Nadu Legislative Assembly and the strength of All India Anna Dravida Munnetra Kazhagam

Legislature Party has reduced from 66 to 65

# Consequent on the demise of Thiru. K. Ponnusamy on 23.10.2025, Member representing Senthamangalam (ST) 

Assembly Constituency, a vacancy has arisen in the Tamil Nadu Legislative Assembly and the strength of 

Dravida Munnetra Kazhagam Legislature Party has reduced from 133 to 132.

*Thiru. K.A. Sengottaiyan,, M.L.A, elected from Gobichettipalayam Constituency has resigned as a Member on 26.11.2025. 

Consequently a vacancy has occurred in the Tamil Nadu Legislative Assembly and the strength of the 

All India Anna Dravida Munnetra Kazhagam Legislative Party has reduced from 64 to 63

*Thiru. R. Vaithilingam, M.L.A, elected from Orathanadu Constituency has resigned as a Member on 21.1.2026. 

Consequently a vacancy has occurred in the Tamil Nadu Legislative Assembly and the strength of the 

All India Anna Dravida Munnetra Kazhagam Legislative Party has reduced from 63 to 62.


SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் விடுபட்ட விவர முகப்புத்தாட்கள் தொடர்பாக - இணை இயக்குநர் கடிதம்

 

SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் விடுபட்ட விவர முகப்புத்தாட்கள் தொடர்பாக - இணை இயக்குநர் கடிதம், நாள்: 09-03-2026


இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் / பள்ளி மாணவர்களின் பெயர் (Name), பயிற்றுமொழி (Medium), புகைப்படம் மாற்றம் (Photo Change) மற்றும் புகைப்படம் விடுபட்ட (Photo Missing) முகப்புத்தாட்கள் - தேர்வு மைய  கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக - அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர்களுக்கு இணை இயக்குநர் கடிதம், நாள்: 09-03-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நாளை (10.03.2026) சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - இயக்குநரின் செயல்முறைகள்

 

நாளை (10.03.2026) சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் :  09.03.2026


சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை (Equal Work, Equal Pay Demand) தொடர்பான கூட்டம் - நாளை (10.03.2026) சென்னையில் நடைபெறுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.35372/இ1/2022, நாள். .03.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது -தகவல் தெரிவித்தல் - சார்ந்து.


பார்வை:


1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 01.01.2023 நாளிட்ட செய்தி வெளியீடு.


2. அரசாணை (நிலை) எண்.25 பள்ளிக் கல்வி (தொ.க.3(1)) துறை நாள்.30.01.2023.


3. அரசாணை (நிலை) எண்.229 பள்ளிக் கல்வித் (.5.3(1)) . நாள் 06.12.2023.


4. அரசுக் கடித எண் 730/தொக.5.3(1)/2023-3, 5, 6, 8, 11 01.06.2023, 18.10.2023, 30.10.2023, 08.12.2023, 08.01.2025, 18.06.2025, 04.09.2025 06.03.2026.


5. சென்னை-600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.35372/1/2022, 23.01.2025, 03.03.2023, 06.06.2023, 26.10.2023, 01.11.2023, 19.09.2024, 20.05.2025, 20.06.2025, 23.06.2025, 21.08.2025 மற்றும் 08.09.2025.


தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி ஐந்தாவது கூட்டம் 10:03.2026 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 06.03.2026 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 10.03.2026 அன்று பிற்பகல் 02.30 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு பத்து சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஒரு சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எண் , சங்கத்தின் பெயர்


1. தமிழக ஆசிரியர் மன்றம்


2. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 3. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


4. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-2


5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-2


6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


7. அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். 


8. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


9. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை


10. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்.


நாள் மற்றும் நேரம் : 10.03.2026 பிற்பகல் 02.30 மணி


இடம் 

பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கு. 6-வது தளம், நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், சென்னை-9.





சங்கப் மேற்குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத பிரதிநிதிகளை தவிர்த்து மற்ற சங்கப் பிரதிநிதிகளை பிறிதொரு நாளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்


பெறுநர்


1. தமிழக ஆசிரியர் மன்றம்


2. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 3. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


4. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-2


5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-2


6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


7. அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். 


8. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


9. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை


10. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்.


மின்னஞ்சல் வழியாக



Perasiriyar Anbazhagan Award 2025-2026 - DSE Proceedings



 பேராசிரியர் அன்பழகன் விருது 2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த தகுதியான பள்ளிகளை தெரிவு செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Perasiriyar Anbazhagan Award 2025-2026 - DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6. 

ந.க.எண் 081540/எம்2/இ2/2025 நாள்: 06.03.2026.


பொருள்: பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - பேராசிரியர் அன்பழகன் விருது 2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் தொடர்பாக


பார்வை: 

1) இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களின் செய்தி வெளியீடு எண் 2156, நாள் 30.11.2022 

2) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க எண் 081540/எம்2/இ2/2023 , நாள்  24.12.2025

3) அரசாணை (நிலை) எண் 45 பள்ளிக் கல்வி (ப.க. 5(1))த் துறை நாள் 24.02.2026 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 30.11.2022 நாளிட்ட அறிவிப்பின்படி "கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் நிறன் மேம்பாடு, தலைமைத்துவம். மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வை(3)ல் காணும் அரசாணையில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதிற்கு தருதியான பள்ளியினை தெரிவு செய்து விருது வழங்குதல் சார்ந்து பின்வரும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசுப் பொதுத் தேர்வுகள் / திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அன்றாட கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாடு, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் கலைத்திருவிழா, மன்ற எண்ணிக்கை, விளையாட்டுப் போட்டிகள். செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலும். பள்ளி வகுப்பறைகள் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் இருக்கை வசதி மற்றும் தேவையான மின் மற்றும் மின்னணு சாதனங்களுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் அவற்றின் பயன்பாடு போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு: பள்ளிவளாக தூய்மை. மாணவர்கள் உணவருந்த சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை.


பள்ளியின் பசுமைச் சூழல், பள்ளி காய்கறித் தோட்டம் மற்றும் அதன் பயன்பாடு நூலக பயன்பாடு ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும் மதிப்பிட்டு விருதுக்குரிய பள்ளியை தெரிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருதுக்கான குழு அமைத்தல்


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான பரிந்துரைகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட / மாநில அளவில் பின்வரும் தேர்வு குழுவினை கீழ்கண்டவாறு அமைத்திட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்டத் தேர்வுக் குழு

  • முதன்மைக் கல்வி அலுவலர்
  • முதல்வர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 
  • தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
  • தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)
  • மூத்த வட்டாரக் கல்வி அலுவலர்


மாநில தேர்வுக் குழு

  • பள்ளிக் கல்வி இயக்குநர்
  • தொடக்கக் கல்வி இயக்குநர்
  • இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
  • தொடக்கக் கல்வி இணை இயக்குநர்.(நிர்வாகம்).
  • பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு  நலப்பணித் திட்டம்)



மேலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாவட்டத் தேர்வு குழு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவீட்டின் முறையின் அடிப்படையில் விருதுக்கு தகுதியான பள்ளிகளை 1:2 என்ற விகிதத்தில் தெரிவு செய்து மாநில மாவட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வு குழு மற்றும் மாவட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரை பள்ளிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்குரிய பள்ளிகளை மாவட்ட வாரியாக தெரிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட தேர்வுக்குழு அரசு தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் இரண்டு மற்றும் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிகளில் ஏதேனும் இரண்டு என மொத்தம் ஒரு மாவட்டத்திற்கு தகுதியான 4 பள்ளிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு படிவத்தின் விவரப்படி தேர்வு செய்து கருத்துருக்களை 13.03.2026 க்குள் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இயக்குநர்


1) பார்வை(3)ல் காணும் அரசாணையின் நகல்

2) அடைவுத்திறன் மதிப்பீட்டு படிவம்


பெறுநர்


1) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகள்

2) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1) இயக்குநர். தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 6.

2) அரசு செயலாளர், பள்ளி கல்வித் துறை தலைமைச் செயலகம். சென்னை 9


2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள்

 

2026-2027ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் 


* 31-07-2021 வரை பிறந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து கொள்ளலாம். 

* 01-08-2021 முதல் 31-08-2021 வரை பிறந்த குழந்தைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம். 

* 01-09-2021 முதல் 31-12-2021 வரை பிறந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து விட்டு  வட்டாரக்கல்வி அலுவலர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தளர்வாணை வேண்டி விண்ணப்பம் செய்து தளர்வாணை பெற வேண்டும்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 09.03.2026 

கிழமை:- திங்கள்



திருக்குறள்: 

அதிகாரம் 62 / CHAPTER 62

ஆள்வினை உடைமை

குறள் 611:

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

விளக்க உரை:

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்.  அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.


பழமொழி :
A good marksman may miss.

ஆனைக்கும் அடி சறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.


பொன்மொழி :

மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது

- பிளாட்டோ


Human life is above all others. It is exalted by superior actions. - PLATO


பொது அறிவு :

01.சூரிய குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?

             வெள்ளி -Venus

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?

           சூடான் -Sudan


English words :

Take off -remove or leave

Take on- accept responsibility


தமிழ் இலக்கணம்:

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்

1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)


      கடிகாரம் வேகமாக இயங்கியது

2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது ( தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)


மின்விசிறி வேகமாக சுழல்கிறது
    தொடரும்...



அறிவியல் களஞ்சியம் :

நிலை: துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.

பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் புலம் என்பது ஒரு பகுதி (region/field).

தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன.

துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்


மார்ச் 09

யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin,9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.


சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்

சாகீர் உசைன் (Zakir Hussain, இந்தி: ज़ाकिर हुसैन, 9 மார்ச்சு 1951 – 15 திசம்பர் 2024) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.[1] இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.


நீதிக்கதை

நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான்

அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.


இன்றைய செய்திகள்

09.03.2026

⭐கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

⭐தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த  ஈரான்

⭐ ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ஐசிசி T20 உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 3வது முறையாக இந்திய  அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

🏀நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.


Today's Headlines

⭐ The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.

⭐ An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.

⭐ The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.

🏀 Sports News

🏀  ICC T20 World cup: India recorded a tremendous  victory against  Newzealand by 96 runs and became the Champion for the 3rd time.

🏀 South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள்

  1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Future Ready பயிற்சி வினாக்கள் வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD, DSE & SCERT இயக்குநரின் இ...