கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - செய்தித்துறை கடிதம் வெளியீடு



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கடிதம் வெளியீடு


TN Chief Minister Official Photo



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டிய  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வெளியீடு



மின்னஞ்சல் வாயிலாக


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நிர்.4)த்துறை, தலைமைச் செயலகம் சென்னை-09.


கடித எண் e 14048542 / நிர்4 / 2026, நாள். 14.05.2026


அனுப்புநர்

திரு.வே. ராஜாராமன் இ.ஆ.ப.,

அரசுச் செயலாளர்


பெறுநர்

அனைத்து துறைச் செயலாளர்கள்

அனைத்து துறைத் தலைவர்கள்

அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (இணைப்புடன்)


ஐயா/அம்மையீர்.


பொருள்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - அனுப்பி வைத்தல் - தொடர்பாக 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அனைத்து அரசு அலுவலகங்கள் / தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் /தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள் / ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்த ஏதுவாக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன்.


தங்கள் உண்மையுள்ள,

அரசு செயலாளருக்காக



நகல்

அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்

(உரிய தொடர் நடவடிக்கைகாக)


தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA) தொடர்பான விவரங்கள்



2026-2027 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA) தொடர்பான விவரங்கள்:


1. பதிவுக் காலம்: விண்ணப்பங்கள் மே 3, 2026 அன்று தொடங்கின, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 2, 2026 ஆகும்.


2. விண்ணப்ப இணையதளம்:  மாணவர்கள் www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் .


3. தரவரிசை:  மாணவர்களுக்கான தகுதிப் பட்டியல் (தரவரிசைப் பட்டியல்) 2026 ஜூன் 29 அன்று வெளியிடப்பட உள்ளது.


மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 இன்று (15-05-2026) வங்கிக்கணக்கில் வரவு வைப்பு



 மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 இன்று (15-05-2026) காலை வங்கிக்கணக்கில் வரவு வைத்தது தமிழ்நாடு அரசு. 



பள்ளிகளுக்கு மேலே செல்லும் மின் கம்பியை இடம் மாற்ற உத்தரவு



 பள்ளிகளுக்கு மேலே செல்லும் மின் கம்பியை இடம் மாற்ற உத்தரவு - நாளிதழ் செய்தி 



தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நாணய விற்பனையை நிறுத்த நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு



தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நாணய விற்பனையை நிறுத்த நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு


நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த கவலைகள் மற்றும் தங்க இறக்குமதி வரி உயர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30,000 நகைக்கடை உரிமையாளர்கள் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.


தமிழ்நாடு நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சபரிநாத் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதுடன், தங்கம் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் இதர விளம்பரத் திட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசு சமீபத்தில் தங்க நகைகள் மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "ஒரே இரவில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி (GST) வரியும் உயர்த்தப்படலாம் என வதந்திகள் பரவி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 125 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. நகைக்கடைக்காரர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வரும் நிலையில், தேவை குறைந்தால் கடனைத் திருப்பிச் செலுத்துவது பெரும் சவாலாக மாறும்," என கவலை தெரிவித்தார்.


கோயம்புத்தூர் பொற்கொல்லர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம். கமல்ஹாசன் கூறுகையில், மத்திய அரசு வரிகளை 10% உயர்த்தியதால், புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.


தற்போது விற்கப்படும் விலையில் சுமார் 3,000 ரூபாய் வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் திருமண சீசன் உச்சத்தை அடைய உள்ள நிலையில், இந்த விலை உயர்வு நுகர்வோரின் வாங்கும் திறனை எப்படி பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார். 


கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 35,000 பொற்கொல்லர் பட்டறைகள் உள்ளன, இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


தங்க விலை ஏற்ற இறக்கங்களால் கடந்த ஓராண்டில் நகை விற்பனை 60% சரிந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையைச் சீராக்க கூட்டமைப்பு சார்பில் அரசுக்குச் சில முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன:


* மக்களிடம் முடங்கிக் கிடக்கும் சுமார் 25,000 டன் தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* தங்கம் பணமாக்கும் திட்டங்களில் (Gold Monetisation Schemes) நகைக்கடை உரிமையாளர்களை அரசு ஈடுபடுத்த வேண்டும்.


* டிஜிட்டல் தங்கம் (Digital Gold) மற்றும் இடிஎஃப் (ETF) விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.


* தங்கம் இறக்குமதியாளர்கள், விநியோக ஏஜெண்டுகள் மற்றும் புல்லியன் டீலர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும், என்று வலியுறுத்தி உள்ளனர்.


அந்நியச் செலாவணி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நகைக்கடைக்காரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 


இருப்பினும், இந்த திடீர் மாற்றங்கள் சாதாரண மக்களையும், நகைத் தொழிலையும் எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்


பெட்ரோல், டீசல் விலை உயர்வு

 

Petrol and diesel prices hiked


பெட்ரோல், டீசல் விலை உயர்வு.


பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.90க்கு விற்பனை.


டீசல் லிட்டருக்கு ரூ.3.08 உயர்ந்து ரூ.95.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு




கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு


கேரள முதலமைச்சராக திரு.வி.டி.சதீஷன் அவர்களை தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சி.


தேர்தல் முடிவு வெளியாகி 11 நாட்களாக முதலமைச்சரை தேர்வு செய்ய திணறி வந்த நிலையில் சதீஷனை தேர்வு செய்துள்ளது.


2026 மே 14 நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி. சதீஷன் (V. D. Satheesan) கேரளாவின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


இவர் முன்னதாக பரவூர் தொகுதியில் இருந்து பலமுறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


முக்கியத் தகவல்கள்:

பதவி: கேரள முதல்வர் (2026 மே முதல்).

கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்.

தொகுதி: பரவூர், கேரளா.

முந்தைய பொறுப்பு: கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் (2021-2026).


கேரளா: காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக தேர்வாகியுள்ள வி.டி.சதீஷன், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.



ஆசிரியரின் ஓய்வூதியப் பணத்தில் ஒரு தேநீர் - கவிஞர் வைரமுத்து அவர்களின் பதிவு

 


ஆசிரியரின் ஓய்வூதியப் பணத்தில் ஒரு தேநீர் - கவிஞர் வைரமுத்து அவர்களின் பதிவு


திண்டுக்கல்லிலிருந்து

கரூர் செல்லும் வழித்தடத்தில்

'நான் யாருக்கும் 

ஒரு தொந்தரவும் செய்யமாட்டேன்'

என்று

ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறது

தாடிக்கொம்பு


சென்றிருந்தேன்


அங்குதான்

ஓய்வு வாழ்க்கை

வாழ்ந்துகொண்டிருக்கிறார்

என் பள்ளித் தமிழாசிரியர்

பாசமிகு உத்தமன்


யாப்பிலக்கணத்தின்

அடிப்படை அலகு

எழுத்து அசை சீர்

தளை அடி தொடை


அசை பிரிக்க எனக்கு

ஆசை ஆசையாய்க்

கற்றுக்கொடுத்தவர்

ஐயா உத்தமன்


அந்த மூல இலக்கணம்தான்

ஒட்டுமொத்தத் தமிழையும்

என்னை

உழுதுபார்க்கச் செய்தது


கிராமத்து மக்களின்

உரையாடல்களைக் கூட

அவர்கள் பேசி முடிக்குமுன்

அசைபிரிக்க ஆரம்பித்தேன்


ஒருவன் மேடையில்

வெண்பாப் பாடும்போதே

எங்கே தளைதட்டுகிறது 

என்றறிந்து தலை குட்டினேன்


1330 குறட்பாக்களையும்

அசைபிரிக்கச் செய்ததே

அந்த ஆசைதான்


"நேர் நேர் = தேமா

நிரை நேர் = புளிமா

நிரை நிரை = கருவிளம்

நேர் நிரை = கூவிளம்"

என்று கரும்பலகையில்

எழுதும்போது

அவர் கருதியிருக்கமாட்டார்

இதை நகலெடுக்கிறவர்களுள்

ஒருவன்தான்

தமிழுக்கு ஞானபீடம் பெறுவான் என்று


எழுதிய வைரமுத்துவும்

எண்ணியிருக்க மாட்டான்

ஞானபீடம் பெற்றுவந்து

தமிழாசிரியருக்குத்

தங்கத்துண்டு

அணிவிப்பான் என்று;

அணிவித்தேன்


அவர் கண்ணிரண்டிலும்

கண்ணீர் படலமிட்டது


அவர் உடல் மொழியில்

‘இது போதுமப்பா எனக்கு’

என்ற ஆனந்த நடுக்கம்

அலைபாய்ந்தது


'வணங்குவதற்கு மிச்சமுள்ள

ஒரே ஒரு மூத்தமகன்

நீங்கள்தான் ஐயா' என்று

முணுமுணுத்துக்கொண்டேன்


அவரது

ஓய்வூதியப் பணத்தில்

ஒரு தேநீர் சாப்பிட்டேன்


அது

ஜனாதிபதி மாளிகையின்

விருந்துக்கு நிகரானது


கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்தபின் மே 2026 மாதத்திற்கான தொகை, விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்



கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்தபின் மே 2026 மாதத்திற்கான தொகை, விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்



செய்தி வெளியீடு எண்: 018 , நாள்: 14.05.2026


செய்தி வெளியீடு


மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு


பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.


மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


TN DIPR




2% அகவிலைப்படி உயர்வு D.A. Hike

 

 

 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு


DIPR - P.R.No.019 - Hon'ble CM Press Release - Govt. Staff 2 Percent DA Hike - Date.14.05.2026


TN CM Announced.. DA 60% w.e.f. 01.01.2026


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58%ஆக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60%ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவிப்பு


2% Dearness Allowance Hike for Teachers and Government Employees


01.01.2026 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 % உயர்வு 

அகவிலைப்படி 58%லிருந்து 60%ஆக உயர்வு


Tamil Nadu CM announces that the dearness allowance, currently at 58 per cent for government officials and teachers, will be increased to 60 per cent effective from 01.01.2026


செய்தி வெளியீடு எண் : 19, நாள் : 14-05-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செய்தி வெளியீடு எண்: 019 , நாள் : 14.05.2026


செய்தி வெளியீடு


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.


இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,  ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


TN DIPR


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - செய்தித்துறை கடிதம் வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கடிதம் வெளியீடு TN Chief Minis...