கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Stomach Ulcer | சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள்




வயிற்றுப்புண் (அல்சர்) - சாப்பிட வேண்டிய உணவுகள் - தவிர்க்க வேண்டியவை


Stomach Ulcer | Foods to Eat | Foods to Avoid


உணவுப் பழக்கத்தையும், வாழ்வியல் முறையையும் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்னை அல்சர். `நேரத்துக்குச் சாப்பிடணுமா... போங்க அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு?’ இதுதான் அல்சர் வருவதற்கான முதல் கட்டம். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதால், பலரும் வயிற்றுப் புண் பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.


அல்சர் என்றால்...


அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.

* இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம்.

* உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது.

* சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம்.


காரணங்கள் என்னென்ன?


பாக்டீரியா தொற்று (Helicobacter pylori)

மன உளைச்சல்

அதீத கவலை

தவறான உணவுப் பழக்கம்

சில வகை மருந்துகளை உட்கொள்வது

அதிகமாகக் காபி குடிப்பது

மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது  போன்ற பல்வேறு காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.


தவிர்க்க வேண்டிய உணவுகள் :


* காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.


* காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.


* பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது.


* சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம்.


* ஆடு, மாடு போன்ற கால்நடை இறைச்சி (ரெட் மீட்டை) உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.


சாப்பிட வேண்டிய உணவுகள் :



* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.


* தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம்.


* முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம்.


* ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.


* கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.


* அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


* வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.


* மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


* பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.


* முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.


ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி | உதவி இயக்குநர் இடமாற்றம்

 


Irregularities in Teachers' Counseling | Assistant Director Transferred


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள்  கலந்தாய்வு குளறுபடிகள் குறித்த நாளிதழ் செய்தி


சென்னை, ஜூன் 25


ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில், 100 ஆசிரியர்கள் பங்கேற்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக,  குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குளறுபடிக்கு காரணமானவர் எனக் கூறி, உதவி  இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 16ல் துவங்கி, 18ல் நிறைவடைந்தது. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெறும் நோக்கில், சிலருக்காக நிபந்தனைகளை தளர்த்தி உள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது.


கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் நேரடி நியமனங்கள் வாயிலாக, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு, 81 முதுகலை பட்டதாரி ஆசியர்கள் உட்பட 100 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னரே, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.


ஆனால், தற்போது நடந்து முடிந்த பொது மாறுதல் கலந்தாய்வில், புதிதாக பணியில் சேர்ந்த 100 ஆசிரியர்களும், பங்கேற்கும் வகையில், நிபந்தனைகள் திருத்தப்பட்டதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தில், கல்வி பிரிவில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆதிமூலம், கடலுார் மண்டல உதவி இயக்குநராக, நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.


அப்பதவியில் இருந்த சுப்பிரமணியன், இயக்குனரகத்தில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஆதிதிராவிடர் நல இயக்குநர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார். அதில், கலந்தாய்வில் ஏற்பட்ட இடையூறு காரணமாகவும், நிர்வாக நலன் கருதியும், ஆதிமூலம் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Issuance of Community & Residence Certificates within Schools | DSE Proceedings



பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை  School Login App ல் 13.07.2026க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 


Issuance of Community Certificates and Nativity certificates within schools - Proceedings issued by the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6


பிறப்பிப்பவர்: முனைவர் ச. கண்ணப்பன்


ந.க. எண் : 12328/இ/இ2/2025 , நாள் : 22.06.2026


பொருள் : பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு பயிலும் பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது - சான்றுகள் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை- School Login App-பதிவேற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண்ணை பதிவேற்றம் மேற்கொள்ள கோருதல் - தொடர்பாக.


பார்வை

1. அரசாணை (நிலை)எண்.06, பள்ளிக் கல்வி (பக5(2)த்துறை , நாள்.09.01.2026.

2. இவ்வியக்க இதே எண்ணிட்ட கடிதம் நாள். 11.06.2026


பார்வை 2 இல் காணும் கடிதத்தின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.


2026-2027 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களில் (இரு வகை சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விவரம் மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணாக்கர்களின் விவரம் ஆகியவற்றை தமிழ்நாடு கல்வி மேலாண்மை தகவல் மைய School Login-இல் உடனடியாக சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண் மற்றும் இரு வகை சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

(மின்னஞ்சல் மூலம்)


நகல்: அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)


நகல்:

வருவாய் நிருவாக ஆணையர்,

எழிலகம், சேப்பாக்கம், சென்னை -05 தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது



மனிதர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாதவற்றை உணரும் அசாதாரண விலங்குகள்



 மனிதர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாதவற்றை உணரும் அசாதாரண விலங்குகள்


மனிதர்கள் உலகை புரிந்துகொள்ள முக்கியமாக கண்களையும் காதுகளையும் நம்புகிறோம். ஆனால், இயற்கையில் நம்மைவிட பல மடங்கு சக்திவாய்ந்த உணர்வுத் திறன் கொண்ட உயிரினங்கள் ஏராளம் உள்ளன. சில விலங்குகள் நாம் ஒருபோதும் கேட்க முடியாத ஒலிகளை கேட்கின்றன; சில உயிரினங்கள் நம் கண்களுக்கு முற்றிலும் தெரியாத ஒளியைக் கூட பார்க்கின்றன.


🦇 வெளவால்கள் (Bats)

வெளவால்கள் மனிதர்களால் கேட்க முடியாத மிக உயர்ந்த அதிர்வெண் (Ultrasonic) ஒலிகளைக் கேட்கும் திறன் கொண்டவை. அவை எக்கோலொகேஷன் (Echolocation) என்ற முறையைப் பயன்படுத்தி ஒலி அலைகளை அனுப்பி, அதன் எதிரொலியின் மூலம் முழு இருளிலும் துல்லியமாக பறந்து இரையை வேட்டையாடுகின்றன.


🦉 ஆந்தைகள் (Owls)

ஆந்தைகளால் முழுமையான இருளில் பார்க்க முடியாது. ஆனால், மிகவும் குறைந்த வெளிச்சத்திலும் அற்புதமாகப் பார்க்கும் திறன் உள்ளது. பெரிய கண்களும் அதிக ஒளியை உணரும் விழித்திரையும் (Retina) காரணமாக, இரவு நேர வேட்டையில் அவை உலகின் சிறந்த வேட்டையாடிகளில் ஒன்றாக திகழ்கின்றன.


🐕 நாய்கள் (Dogs)

மனிதர்களால் கேட்க முடியாத உயர்ந்த அதிர்வெண் ஒலிகளையும், மிகவும் மெல்லிய சத்தங்களையும் நாய்கள் எளிதாகக் கேட்கும். அதனால், நாம் கவனிப்பதற்கு முன்பே நாய்கள் பல ஒலிகளுக்கு எதிர்வினையாற்றுகின்றன.


🐍 பாம்புகள் (Pit Vipers, Boas, Pythons)

சில பாம்புகள் அகச்சிவப்பு (Infrared) வெப்பக் கதிர்களை உணரும் திறன் கொண்டவை. இதன் மூலம் முழு இருளிலும் வெப்ப இரத்தம் கொண்ட உயிரினங்களின் உடல் வெப்பத்தை உணர்ந்து அவற்றை கண்டுபிடிக்கின்றன. இது இயற்கையான தெர்மல் கேமரா போன்ற திறன் ஆகும்.


🦐 மாண்டிஸ் ஷிரிம்ப் (Mantis Shrimp)

கடல் வாழ் இந்த அற்புத உயிரினம், மனிதர்களால் பார்க்க முடியாத புற ஊதா (Ultraviolet) ஒளியைக் காணும் திறன் கொண்டது. அதனால், கடலுக்கடியில் அது பார்க்கும் உலகம், மனிதர்கள் காணும் உலகைவிட முற்றிலும் வித்தியாசமானது.


🌍 இயற்கை மீண்டும் மீண்டும் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுகிறது: நாம் காண்பதும் கேட்பதும் மட்டுமே உலகம் அல்ல. நம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மிகப் பெரிய உலகம் இயற்கையில் உள்ளது.


மகிழ் முற்றம் (Magizh Mutram) நடைமுறைப்படுத்துதல் | முக்கிய தினங்கள்



மகிழ் முற்றம் (Magizh Mutram) நடைமுறைப்படுத்துதல் | முக்கிய தினங்கள்


HOUSE  SYSTEM - ( மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள்


⭕ மாணவர் குழு ஒதுக்கீடு( HOUSE ALLOCATION-30.06.26)

⭕ மாணவர் குழு தலைவர் தேர்வு, ,HSTC, HEAD TEACHER FOR EACH HOUSE SELECTION- 01.07.26

⭕ மாணவர் குழு தலைவர் ( HOUSE LEADER SELECTION)தேர்வு- 03.07.26

⭕ மாணவர் அமைச்சர் தேர்விற்கான தேர்தல் பிரச்சாரம்- 06.07.26

⭕மாணவர் அமைச்சர் தேர்வு -

STUDENT MINISTER

 (தேர்தல் நாள்) 07.07.26

⭕ COMPLETION OF EMIS ENTRY& PRE PLAN MEETING-08.07.26

⭕ HOUSE LEADER & STUDENT MINISTER- பதவி ஏற்பு விழா மற்றும் முதல் செயற் குழு கூட்டம் நடைபெறுதல்- 10.07.26



Magizh Mutram 2026-27 DSE Proceedings


அரசுப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மகிழ் முற்றம் சார்ந்த மாணவர் செயல்பாடுகள் -  வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Attempt to leak TET question paper | 3 arrested by Maharashtra Police

 


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வினாத்தாள் கசிவு முயற்சி | மகாராஷ்டிர காவல்துறையால் 3 பேர் கைது


Attempt to leak Teacher Eligibility Test (TET) question paper | 3 arrested by Maharashtra Police


 ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான வினாத்தாள் கசிவு முயற்சி ஒன்று, தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் முறியடிக்கப்பட்டது; 


இதற்காக வினாத்தாள் கசிவு கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். டெல்லியிலிருந்து TET தேர்வுக்கான வினாத்தாள்களைக் கொண்டு வந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவற்றை சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பேரத்தின் மூலம் விற்கத் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. 


ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் செயல்பட்ட பிவாண்டி காவல்துறையினர், அப்பேரம் நடைபெறுவதற்கு முன்பாகவே பொறி வைத்து அந்த மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பீகாரைச் சேர்ந்த ராஜீவ் ஷா மற்றும் ஆகாஷ் குமார், அத்துடன் ஹரியானாவைச் சேர்ந்த தீரஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


அவர்களிடமிருந்து அலைபேசிகள், ரொக்கப் பணம் மற்றும் மறுநாள் நடைபெறவிருந்த தேர்வுக்கான நான்கு தொகுப்பு TET வினாத்தாள்கள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். 


கைப்பற்றப்பட்ட வினாத்தாள்களை மகாராஷ்டிர மாநிலத் தேர்வுக் குழும அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை உண்மையான வினாத்தாள்களுடன் ஒத்துப்போவதை உறுதிப்படுத்தினர். இந்தச் சரிபார்ப்புக்குப் பிறகு, பிவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.



A major paper leak involving the Maharashtra Teacher Eligibility Test (TET) was foiled in Bhiwandi, a day before the scheduled examination, with the arrest of three alleged members of a paper leak racket. 


Police said the accused had brought the TET question papers from Delhi and were allegedly preparing to sell them in a deal worth around Rs 1.5 crore.


Acting on a tip-off, the Bhiwandi police laid a trap and apprehended the three accused before the transaction could take place. The arrested men have been identified as Rajiv Shaw and Akash Kumar, both from Bihar, and Dheeraj Singh from Haryana. 


Police recovered mobile phones, cash, and four sets of TET question papers meant for the examination scheduled the following day.


Officials from the Maharashtra State Council of Examination examined the seized papers and confirmed that they matched the original question papers. Following the verification, a case was registered at the Bhiwandi police station, and further investigation is underway.



CMBFS | Daily Meal Menu | Schedule



முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் | தினசரி உணவு வழங்கும் பட்டியல் | அட்டவணை


Chief Minister's BreakFast Scheme | Daily Meal Menu | Schedule



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Nutritious Meal Programme | Revised Mid-day Meal Menu | Schedule

 


புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் | திருத்தியமைக்கப்பட்ட மதிய உணவுப் பட்டியல் | அட்டவணை


Revolutionary Leader MGR Nutritious Meal Programme | Revised Mid-day Meal Menu | Schedule



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின்   பதவி உயர்வு சார்ந்த எந்த கோரிக்கைகளையும் ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்


Requests regarding the promotion of teachers who have not passed the Teacher Eligibility Test cannot be entertained – High Court



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 04-06-2026

CORAM

THE HON'BLE MR JUSTICE S. M. SUBRAMANIAM

AND

THE HON'BLE MR.JUSTICE N.SENTHILKUMAR

WP No. 30300 of 2023

and

W.M.P.Nos.29889, 29890 & 29891 of 2023


Writ Petition filed under Article 226 of the Constitution of India to issue a Writ of Declaration, declaring that the Special Rules for the Tamilnadu Elementary Education Subordinate Service issued in GO Ms. No 12 School Education (EE1(1)) Department dated 30.01.2020 insofar as it prescribes a pass in Teacher Eligibility Test (TET) only for direct recruitment for the post of headmaster / Headmistress of Middle School and Headmaster / Headmistress of primary school and not for promotion thereto in Annexure Class 1(1) category 2 and class 1(iii) category 1 respectively, are illegal being ultravires the Right of Children to Free and Compulsory Education Act 2009 and the Rules framed thereunder and the NCTE Notification dated 23.08.2010 and 29.07.2011 and for the consequential direction to the respondents to hold that a pass in TET is mandatory eligibility criterion for the appointment to the post of headmaster / head mistress Primary school and Middle School by promotion as well as direct recruitment.


For Petitioner(s):

Mr.R.Ramachandran


For Respondent(s):

Dr.R.Gouri, Government Counsel for R1 to R4


ORDER


(Order of the Court was made by S.M.Subramaniam J.)


Writ of Declaration has been instituted to declare the Special Rules for TamilNadu Elementary Education Subordinate Service issued in G.O.Ms.No.12 School Education (EE1(1)) Department dated 30.01.2020.


2. The issues are no more res integra. In the context of Section 23 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009, the Hon'ble Supreme Court of India ruled that passing of Teacher Eligibility Test (TET) is mandatory to hold the teaching post in the Education Department. The directives issued by the National Council for Teachers Education prescribing Teacher Eligibility Test has been validated by the Hon'ble Supreme Court of India. That being the factum, the relief as such sought for, in the present writ petition, cannot be considered by this Court.


3. Learned Government Counsel would submit that necessary actions are taken for appropriate orders/amendments in the rules. This Court made it clear that such actions are to be initiated as expeditiously as possible in order to avoid any further unnecessary claims from unqualified teachers who does not possess TET qualification.


4. With these observations, the Writ Petition stands disposed of. No costs. Consequently, W.M.P.No.29889 of 2023 is ordered on payment of separate court fee and C.M.P.Nos.29890 & 29891 of 2023 are closed.


தீர்ப்பின் தமிழாக்கம் (Google Translate மூலம் மொழிபெயர்க்கப்பட்டது)


மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

தேதி: 04-06-2026

முன்னிலை

மாண்புமிகு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்

மற்றும்

மாண்புமிகு திரு. நீதிபதி என். செந்தில்குமார்

WP எண் 30300, 2023

2023-ஆம் ஆண்டின் WMP எண்கள் 29889, 29890 மற்றும் 29891

இந்திய அரசியலமைப்பின் 226-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனுவில், 30.01.2020 தேதியிட்ட அரசாணை எண் 12, பள்ளிக் கல்வி (EE1(1)) துறையின்படி வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்புப் பணிக்கான சிறப்பு விதிகள், அதாவது நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை ஆகிய பதவிகளுக்கு நேரடி நியமனம் பெறுவதற்கு மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், இணைப்பு வகுப்பு 1(1) பிரிவு 2 மற்றும் வகுப்பு 1(iii) பிரிவு 1 ஆகியவற்றில் முறையே பதவி உயர்வு பெறுவதற்கு அல்ல என்றும் குறிப்பிடுவது, குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் 23.08.2010 மற்றும் 29.07.2011 தேதியிட்ட NCTE அறிவிப்புகளுக்கு முரணானதால் சட்டவிரோதமானவை என அறிவிக்கக் கோரியும், அதன் விளைவாக, நியமனத்திற்கு TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயத் தகுதி அளவுகோல் என முடிவு செய்யுமாறு எதிர்வாதிகளுக்கு உத்தரவிடக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை பதவிகள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.


மனுதாரர்(கள்) சார்பாக:

திரு. ஆர். ராமச்சந்திரன்

பதிலளிப்பவர்(கள்) சார்பாக:

டாக்டர் ஆர். கௌரி, ஆர்1 முதல் ஆர்4 வரையிலானவர்களுக்கான அரசு வழக்கறிஞர்


ஆர்டர்

(நீதிமன்றத்தின் உத்தரவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்தார்.)

30.01.2020 தேதியிட்ட அரசாணை எண்.12 பள்ளிக் கல்வி (EE1(1)) துறையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணைநிலை சேவைக்கான சிறப்பு விதிகளை அறிவிக்க, அறிவிப்பு ஆணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. இந்தப் பிரச்சினைகள் இனி புதிதல்ல. 2009 ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவின்படி, கல்வித் துறையில் ஆசிரியர் பதவியை வகிக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும் என்று மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வை பரிந்துரைத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழங்கிய வழிகாட்டுதல்கள் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உண்மையின் அடிப்படையில், தற்போதைய ரிட் மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை இந்த நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது.

3. விதிகளில் பொருத்தமான உத்தரவுகள்/திருத்தங்கள் செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கற்றறிந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளார். TET தகுதி இல்லாத தகுதியற்ற ஆசிரியர்களிடமிருந்து மேலும் தேவையற்ற கோரிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, அத்தகைய நடவடிக்கைகள் முடிந்தவரை விரைவாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

4. இந்தக் கருத்துக்களுடன், இந்த ரிட் மனு முடித்து வைக்கப்படுகிறது. செலவுகள் இல்லை. அதன் விளைவாக, WMP எண் 29889/2023 தனி நீதிமன்றக் கட்டணம் செலுத்துவதன் பேரில் உத்தரவிடப்படுகிறது மற்றும் CMP எண்கள் 29890 மற்றும் 29891/2023 முடித்து வைக்கப்படுகின்றன.



ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் பின்பற்ற வேண்டியவை



ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் பின்பற்ற வேண்டியவை பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், நாள். 24.01.2022


Teacher Transfer Counselling Instructions



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




அவசரம் / தனிக்கவனம்


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண்.25154/அ1/இ2/2021 , நாள். 24.01.2022


பொருள்:


பள்ளிக் கல்வி-2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு சார்பான அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.


பார்வை:


1) அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021


2) பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள். 30.12.2021, 06.1.2022, 07.1.2022 8.1.2022, 10.1.2022, 20.1.2022,21.1.2022, 22.1.22 மற்றும் 24.1.2022


-0-


பார்வை-2ல் காணும் 24.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் பத்தி-3ற்கு கீழ்க்காணுமாறு திருத்தம் செய்து வாசிக்குமாறும் அதன் தொடர்ச்சியாக சில கூடுதல் அறிவுரைகளும் கீழ்க்காணுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


1. கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன் / மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியினை தான் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதற்கு பதிலாக அவர்கள் விரும்பும் ஏனைய மாவட்டத்தினையும் தெரிவு செய்துகொள்ளலாம்."


2. கணவன் /மனைவி மேற்காண் முன்னுரிமையினை (Spouse Priority) எவரேனும் ஒருவர் பயன்படுத்தினால் கூட அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த முன்னுரிமையினை (Priority) கோரக்கூடாது.


3. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின் முன்னுரிமையின் (Seniority basis) அடிப்படையில் அவரது சுழற்சி (turn) வரும்பொழுது உள்ள காலிப்பணியித்தினை மட்டுமே தெரிவு செய்ய ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவருக்கு பின்னர் வரும் Resultant Vacancy ஐ தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.


4.மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)


5.மேலும் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent) (அ) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


மேற்காண் அறிவுரைகளின்படி காலிப்பணியிடங்கள் மற்றும் மாறுதல் விண்ணப்பங்களில் அனைத்து முறையீடுகள், திருத்தங்கள் ஆகியவற்றினை குறித்த காலக்கெடுவிக்குள் சரிசெய்யப்படவேண்டும். கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் தெரிவிக்கப்படும் எவ்வித முறையீடுகளும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


ஆணையருக்காக


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


(மின்னஞ்சல் மூலமாக)


நகல்:


1.தொடக்கக் கல்வி இயக்குநர் சென்னை-6


2. இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)


3. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)


4. இணை இயக்குநர் (தொழிற் கல்வி)


5. சம்பந்தப்பட்ட பிரிவுகள்


6. EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Stomach Ulcer | சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள்

வயிற்றுப்புண் (அல்சர்) - சாப்பிட வேண்டிய உணவுகள் - தவிர்க்க வேண்டியவை Stomach Ulcer | Foods to Eat | Foods to Avoid உணவுப் பழக்கத்தையும், வா...