கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNLA 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்


 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, திரு. பிரதாப் சிங் அவர்களைச் சிறப்புப் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-03-2026

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 24.03.2026 

கிழமை:- செவ்வாய் 


திருக்குறள்:

குறள் 238:

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.         

விளக்க உரை:

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.


பழமொழி :
Even a trash becomes worthy in a dexterous  hand .

வல்லவர்  கை பட்டால் உதவா    குப்பையும்  உயர் மதிப்படையும்


இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.


பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.


பொது அறிவு :

01.சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) எங்கு அமைந்துள்ளது?

நெதர்லாந்து -ஹேக் நகர்  (Netherland -Hague)

02. தமிழின் முதல் காப்பியம் எது?

சிலப்பதிகாரம்-Silappatikaram


English words :

Campaign – Activities to win votes

Manifesto – Promises made by a party


தமிழ் இலக்கணம்:

காற்றுக்கு பொருளோடு வைக்கப் பட்டுள்ள பெயர்கள் குறித்து இன்று பார்ப்போம்

தெற்கில் இருந்து வீசும் இதமான காற்று - தென்றல்

வடக்கிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று - வாடை

கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல்

மேற்கிலிருந்து வீசும் காற்று - கச்சான்/மேலைக் காற்று

      தொடரும் நாளை


அறிவியல் களஞ்சியம் :

தட்டான் பூச்சிகளுக்கு (Grasshoppers) அவற்றின் வயிற்றுப் பகுதியில் காதுகள் உள்ளன.


மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்



நீதிக்கதை

அழுக்கு சட்டை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். “ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். “ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா. “குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். “தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். “சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன்கள் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.


இன்றைய செய்திகள்

24.03.2026

⭐ ஈரானில் உள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது.  "இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என  ஈரான் கூறியுள்ளது.

⭐அமெரிக்க - ஈரான் போரில் ஈரான் மிக பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த போரால் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

⭐வளைகுடா நாடுகள் குடிநீருக்கு 90% கடல் நீரை தான் நம்பியிருக்கின்றன. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் பல நாடுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நியூசிலாந்துக்கு எதிரான 4வது 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

🏀 இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்
மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ)அறிவித்துள்ளது.


Today's Headlines

⭐ In a situation where several lakh people in Iran are affected, India has been continuously sending aid. Iran has stated, We will never forget India’s compassion and humanity.

⭐ In the US–Iran war, Iran has suffered massive damage. More than 5,000 people have lost their lives due to this conflict.

⭐ Gulf countries depend on seawater for about 90% of their drinking water. If desalination plants are attacked, many countries could face severe drinking water shortages.

*SPORTS NEWS*

🏀 In the 4th T 20 match against New Zealand, South Africa won by 19 runs.

🏀 Cricket Australia (C A) has announced that the Test series between India and Australia will begin in January next year.



Checklist for the RO 2026

 


2026ஆம் ஆண்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கான சரிபார்ப்பு பட்டியல்


Election : Checklist for the Returning Officer 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


March 2026 Pay roll IT & Cess deduction குறித்த தகவல்

 

 

March 2026 Pay roll Income Tax and Cess deduction குறித்த தகவல் 


நண்பர்களே வணக்கம் 🙏

March 2026 pay roll Completed

அதில் income tax and cess deduction செய்துள்ளது


பலருக்கு சந்தேகம் இது சரிதானா? 


மார்ச் மாதம் I.T காட்ட மாட்டோமே? 


1) ifhrms kalanjium auto deduction..


2) income tax விதிகளின் படி இது சரிதான்


3) 1/April/26 க்கு பிறகு தான் மார்ச் 2026 ஊதியம் கிடைக்கும்


4) எனவே மார்ச் 2026 மாத சம்பளம் ஆக இருந்தாலும் அது அடுத்த (2026-2027) நிதியாண்டு ஊதியம் தான்.


5) நீங்க *DDO IT e-filing 138 (24Q)* (2026-2027 - Q1) செய்யும் போது..

1) Apr I ( மார்ச் 26)

2) Apr II ( ஏப்ரல் 26)

3) May

4) June


என காண்பித்து e-filing செய்து கொள்ளலாம்... தவறேதும் இல்லை


6) இந்த பதிவின் நோக்கம்..

 *மார்ச் 26* Income Tax 

auto deduction ஐ 

 *edit செய்ய delete செய்ய* முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்...


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

20/3/26


அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு "தேர்வுக்களம்" (Thervukalam) எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி வெளியீடு



அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு " தேர்வுக்களம் "  எனும்  ஒருங்கிணைந்த கைபேசி செயலி (Integrated Mobile App) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



App Download Link : 

https://play.google.com/store/apps/details?id=com.tn.integrated.app



App has recruitment related information from TamilNadu Govt’s recruitment boards


The Government of Tamilnadu through its various recruitment boards like TNPSC, TRB, TNUSRB and MRB organize and manage recruitment process to fill the vacant positions within the respective boards. Currently there are different websites and web portals that are being maintained by the respective recruitment boards for notifying and announcing the job recruitment related information to the prospective candidate (or) aspirant. Now for the benefit of the candidates/ aspirants of Tamilnadu, The Government of Tamilnadu has come up with developing an integrated mobile application in both iOS & Android platforms for the aspirants/ candidates of TNPSC, TRB, TNUSRB and MRB for connecting them with the respective recruitment board related information and provide a single touch point for the aspiring candidates.


The official Government Recruitment Mobile app for Tamilnadu candidates exclusively developed for the benefits of the candidates from Tamilnadu to refer and apply for various government job recruitments happening through the following recruitment boards of Tamilnadu Government, TNPSC, TRB, MRB and TNUSRB. The Candidates can download this mobile application and access the above mentioned recruitment boards to get various information about the communications that these recruitment boards provide to the candidates of TamilNadu.


The mobile app has information about the announcements, notifications and other recruitment related communications from the TamilNadu Government’s recruitment boards, TNPSC, TRB, MRB and TNUSRB.


Being an integrated mobile app, this mobile app provides a single place view of all the announcements, notifications and other recruitment related communication to the candidates from Tamilnadu for the recruitment related communications from the above mentioned recruitment boards of Tamilnadu Government.


The mobile app provides the candidates with easy to access user interface and is currently available in both English and Tamil languages for the convenience of the Tamilnadu candidates who are aspiring to join the Government services through the recruitments happening through the Government recruitment boards TNPSC, TRB, MRB and TNUSRB.


The Integrated Mobile application will be used by the aspirants/ candidates from the general public who are currently using the TNPSC, TRB, TNUSRB and MRB respective websites and web portals for their recruitment related information updates like (1) Notifications (2) Announcements (3) Exam date announcement (4) Hall Ticket related announcements and download links (5) Results and results related announcements (6) Press release announcements (7) What is new announcement (8) Instruction to the candidates (9) Syllabus related communications.


Now, this Thervukalam App provide the aspirants/ candidates a single platform ( here it is a Mobile Application) that can be downloaded by the aspirants/ candidates from the Google Play Store and Apple App Store and installed in the aspirants/ candidates mobile devices to access the recruitment related updates and announcements of the respective recruitment boards (TNPSC, TRB, TNUSRB and MRB)


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 23.03.2026 

கிழமை:- திங்கள் 


*திருக்குறள்:* 



பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்



*குறள் 236:*


தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று.      


*விளக்க உரை:*


ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.


*பழமொழி :*


Beat after beat will make even a stone move. 


அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.


2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.


*பொன்மொழி :* 


ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம். ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு எச்சரிக்கை - கவிஞர் கண்ணதாசன்


*பொது அறிவு :*


 01.அமெரிக்க அதிபர் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?


            நான்கு ஆண்டுகள்


02.இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த மற்றும் பழமையான இலக்கிய விருது எது?


ஞானபீட விருது -Jnanpith Award


*English words :*


Ballot – The vote itself (paper or electronic)


Polling – The act of voting


*தமிழ் இலக்கணம்:*


இன்று இறந்த கால இடைநிலைகள் என்றால் என்ன என்று பார்ப்போம்


தமிழ் இலக்கணத்தில், ஒரு செயல் ஏற்கனவே முடிந்துவிட்டதைக் காட்டும் இடைநிலைகள் இறந்தகால இடைநிலைகள் (Past Tense Markers) எனப்படும்.


இவை த், ட், ற், இன் ஆகிய நான்கும் ஆகும். இவை பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் உணர்த்துகின்றன. 


முக்கியமான இறந்தகால இடைநிலைகள்:


த்: படித்தான் (படி+த்+த்+ஆன்)


ட்: உண்டான் (உண்+ட்+ஆன்)


ற்: பெற்றான்


இன்: ஓடினான் (ஓடி+ன்+ஆன்)


இன்னும் சில எ. கா 


சென்றான்: செல் + ற் + ஆன் (ற் - இறந்தகால இடைநிலை)


கற்றாள்: கல் + ற் + ஆள் (ற் - இறந்தகால இடைநிலை)



பார்த்தான்: பார் + த் + ஆன் (த் - இறந்தகால இடைநிலை)


*அறிவியல் களஞ்சியம் :*


பிறக்கும்போது குழந்தைகளின் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வளர வளர அவை இணைந்து பெரியவர்களில் 206 எலும்புகளாக மாறுகின்றன.


*மார்ச் 23*


*உலக வானிலை நாள் (World Meteorological Day)*





உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.


*பகத் சிங்,  சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார்,*




இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்




பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.



இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.


*நீதிக்கதை*


 *ஏமாந்த சிறுத்தை*


ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.


அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.


அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.


சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.


உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.


முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.


*இன்றைய செய்திகள்*


23.03.2026



⭐இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.


⭐குஜராத்தில் யோகா மையம் நடத்தி, கள்ள நோட்டுகளை அச்சிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.


⭐பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சுகிறது. 



*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'ரோர் 26' என்ற பெயரில் பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நேற்று சென்னையில் நடத்தியது.


🏀இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.


*Today's Headlines*



⭐ In response to attacks by Israeli and American forces, Iran has announced that it will carry out attacks targeting public places around the world.


⭐ In Gujarat, a gang of six people who were running a yoga center and printing counterfeit currency has been arrested.


⭐ Pakistan is facing a potential water crisis. Meanwhile, it has urged India to release water by implementing the Indus Water Treaty.


 *SPORTS NEWS* 



🏀 The Chennai Super Kings (CSK) management organized a grand reunion event in Chennai yesterday called Roar 26,bringing together former and current players.


🏀 The Indian team has decided to tour Ireland and play two T20 matches.


TN Assembly Elections 2026 : Training Schedule for Polling Personnel


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 : வாக்குப்பதிவுப் பணியாளர்களுக்கான பயிற்சி கால அட்டவணை குறித்த அறிவுறுத்தல்கள் - அனுப்பப்பட்டது - சார்பாக


General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 Training for Polling Personnel Instructions-Communicated- Reg


TN Assembly 2026 : Training Schedule for Polling Personnel Instructions-Communicated- Reg.


Proposed schedule for Training of polling personnel


1st Training

(separately for each category Pro, PO1, PO2,PO3)

On or before 02.04.2026 (Thursday)


2nd Training

for Team together PrO+PO1+PO2 +PO3

11.04.2026 (Saturday)


2nd Repeat training (same as 2nd training)

20.04.2026 (Monday)


3rd Training

P-1 Day (Pre Poll Day)

22.04.2026 (Wednesday)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தேர்தல் பயிற்சி வகுப்புகள் பற்றிய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் 


முதன்மை தேர்தல் அலுவலர், சென்னை அவரின் கடித எண். 5055/Ele.VII/2026-1, நாள் 19.03.2026-ன் படி, 


2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான பயிற்சி குறித்த அறிவுறுத்தல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன👇


பயிற்சி அட்டவணை

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதற்கான பயிற்சி அட்டவணை பின்வருமாறு:


| முதலாம் பயிற்சி | 02.04.2026 (வியாழன்) அல்லது அதற்கு முன் | PrO, PO1, PO2, PO3 ஆகிய ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்படும். |


| இரண்டாம் பயிற்சி | 11.04.2026 (சனி) | முழு குழுவினருக்கும் (PrO+PO1+PO2+PO3) இணைந்து வழங்கப்படும். |


| இரண்டாம் கட்டத் திரும்பும் பயிற்சி | 20.04.2026 (திங்கள்) | இரண்டாம் பயிற்சியைப் போன்றதே; அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். 


| மூன்றாம் பயிற்சி | 22.04.2026 (புதன்) | வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் (P-1 Day) நடைபெறும். 

முக்கிய அறிவுறுத்தல்கள்

 * பணியாளர்கள் எண்ணிக்கை: தேவையான பணியாளர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 120% பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


 *மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கு (PwDs) வழங்கப்படும் வசதிகள் குறித்து பணியாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.


 * முதலாம் பயிற்சி:

  வகுப்பறை சூழலில் சுமார் 40 பேர் கொண்ட குழுக்களாக நடத்தப்பட வேண்டும்.


   * மாதிரி வாக்குச்சாவடி அமைத்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.


   * தபால் வாக்குக்கான படிவம் 12/12A இந்தப் பயிற்சியின் போது சேகரிக்கப்பட வேண்டும்.


 * இரண்டாம் பயிற்சி:


   * மண்டல அலுவலர்களால் முழு குழுவிற்கும் சேர்த்து பயிற்சி அளிக்கப்படும்.


   * 'PRO Mobile App' மூலம் வாக்குப்பதிவு சதவீதத்தை அனுப்பும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும்.


 * மூன்றாம் பயிற்சி:


   * பணி நியமன ஆணைகளை விரைவாக வழங்கத் தேர்வுக்கூட நடைமுறை பின்பற்றப்படும்.


   * வாக்குச்சாவடி எண் ஒட்டப்பட்ட பெஞ்சுகளில் அந்தந்தக் குழுவினர் அமர வைக்கப்படுவர்.


  *நான்காம் கட்டப் புத்தாக்கப் பயிற்சி:* 


   * வாக்குப்பதிவு மையத்தில் மண்டல அலுவலரால் வழங்கப்படும்.


   * மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் பிற பொருட்களைச் சரிபார்த்து, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.


மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



PUBLIC (ELECTIONS.VII) DEPARTMENT, SECRETARIAT, CHENNAI-600 009.


Letter No.5055/Ele.VII/2026-1, Dated: 19.03.2026


தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா".


From

Tmt. Archana Patnaik, I.A.S., 

Chief Electoral Officer and Principal Secretary to Government.


To 

All District Election Officers.


Sir/Madam,


Sub: Training General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 Training for Polling Personnel Instructions-Communicated-Reg.


Ref: Letter received from Election Commission of India letter No ECI/PN/029/2026, dated 15th March, 2026.


I am directed to state that the Election Commission of India, in its letters cited has communicated the schedule for the General Elections to Tamil Nadu Legislative Assembly 2026 and the date of poll will be on 23.04.2026.


2. In connection with General Elections to Tamil Nadu Legislative Assembly 2026, the training has to be imparted to all elections related officials especially Polling Personnel. I am to furnish below a tentative schedule for the training of polling personnel to be imparted for the above said elections.


Proposed schedule for Training of polling personnel


S.No.   Training Guidelines of ECI     Probable date that can be fixed by the DEO 


1 Training (separately for each category Pro, PO1, PO2, PO3)


First 3 days after First randomization ( First randomization 3-4 days after date of notification)


+P3) 2nd Training (for the Team togetherPrO+Pol+Po2


2


2 days after second 11.04.2026 randomization (Second (Saturday)


randomization 9 to 12 days before date of poll and after postal


2nd Repeat training


ballots are finalized) 3 days before poll date


3


20.04.2026 (Monday) 22.04.2026 (Wednesday)


(same as 2nd training) 3rd Training


P-1 Day


3. In addition to the above, I am to request you to take into notice the following points of action, for effective conduct of the training Programme:-


Important action points:


Total number of polling personnel to be trained should be at least


120% of the required Personnel. Accessible Elections: The facilitation provided to the PwDs should be clearly explained to the polling personnel.


 Service of orders to be made within 2 days of first randomization.


First Training


Should be done in Batch of around 40 persons in class room environment.


Separately for PrO, PO1, PO2, РОЗ. To be imparted by Zonal Officers/AROS/RO.


Practical Sessions with dummy polling station may be set up. Full set of polling material to be supplied.


Role play to be done.


Practice of filling up Statutory and other Forms. At the end of training, it should be indicated to them where


they should come for getting orders after second randomization.


Form 12/12A for Postal Ballots to be collected during the training.


Second Training


To be given for the entire polling team group-together.


To be given by zonal officers of the constituency.


Actual polling booth scenarios to be enacted.


Postal ballots to be issued and necessary arrangements


made to receive the polled PBs. o Trial sending of poll turnout through PRO Mobile App to be done.


Second Repeat training


Same as second training


Ensure that there are no absentees


Third training


Basically for service of orders preferably in locations which have sufficient with number of rooms.


To ensure fast service of orders, the examination hall approach should be adopted. The polling station number should be pasted on the benches


in the class room in order, and the staff should sit together on the allocated bench (one polling station personnel together).


Zonal officer would then serve the order to the polling personnel of their zone.


Pre familiarization of the actual team members and concerned zonal officers.


Clarify last minute doubts if any.


Fourth refresher training


To be given at the polling station by the zonal officer. Confirming the presence of polling personnel at polling station and pre familiarity of the actual situation with EVM's and other polling materials.


Final doubts clarification.


4. The above instructions should be followed scrupulously.


Yours faithfully,

for Chief Electoral Officer & Principal Secretary to Government.




2025-26 - 1 to 9th Standard - Term 3 Summative Assessment / Annual Examination Timetables

 

 

2025-26 - 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


2025-26 - Third Term Summative Assessment / Annual Examination Timetables for Students of Classes 1 to 9 - Joint Proceedings of DSE, DEE & DPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06


ந.க.எண்.048688/எம்1/இ1/2025, நாள்.20p3.2026.


பொருள் :


பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள் அனுப்புதல் சார்ந்து,


அரசு / அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை தொடக்க/ நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு - முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


இயக்குநர் 

தனியார் பள்ளிகள் இயக்ககம்


இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்


இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்


பெறுநர்


1. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்.


2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்( தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்) அனைத்து மாவட்டங்கள்


நகல்


1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை.

தலைமைச் செயலகம், சென்னை-09,


2. இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம், தகவலுக்காக அனுப்பப்படுகிறது.



வகுப்பு 1-5 மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை 2025-26

1 முதல் 5 ஆம் வகுப்புகள் - தேர்வு கால அட்டவணை


வகுப்பு 1,2,3


* ஏப்ரல் 8 - தமிழ்


* ஏப்ரல் 13 - ஆங்கிலம்


* ஏப்ரல் 16 - கணிதம்


 4 & 5 ஆம் வகுப்பு


* ஏப்ரல் 6 - தமிழ்


* ஏப்ரல் 8 - ஆங்கிலம்


* ஏப்ரல் 9 - கணிதம்


* ஏப்ரல் 13 - அறிவியல்


* ஏப்ரல் 16 - சமூக அறிவியல்





வகுப்பு 6-9 மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை 2025-26

6 முதல் 9 ஆம் வகுப்புகள் - தேர்வு கால அட்டவணை




ECINET App வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான செயலி - பயன்படுத்தும் முறை



 ECINET App for Polling Station Presiding Officer - How to use


ECINET App வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான செயலி - பயன்படுத்தும் முறை



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




ECINET App தரவிறக்கம் செய்ய இணைப்பு

 



ECINET App தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNLA 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்  தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, திரு....