கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

 


Dr. Radhakrishnan Award Application 2026–2027 User Manual


Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை


Step 1 : Login into EMIS Teacher login https://emis.tnschools.gov.in using Teacher EMIS ID and Password



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Today's (18-07-2026) Wordle

 



Today's (18-07-2026) Wordle Puzzle 


Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,


மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 



>>> Click Here...



Yesterday's (17-07-2026) Wordle Answer: BENCH 



Kalai Thiruvizha Competitions 2026-2027 | Guidelines | Joint Proceedings of the Directors



கலைத்திருவிழா போட்டிகள் 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


Kalai Thiruvizha Competitions 2026-2027 | Guidelines | Joint Proceedings of the Directors


பள்ளிக் கல்வி - 2026-2027 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்



பள்ளிக் கல்வித்துறை


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 600006.


ந.க.எண்.1800/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2026, நாள்: 17.07.2026


பொருள்:


2026-27 பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து.


 கலைத்திருவிழா என்பது பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும், இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு, அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது.


அதன்படி, 2026-2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகளை "இளையோர் திறன்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் ஐந்து பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


கலைத்திருவிழா 2026-2027 போட்டிப் பிரிவுகள் மற்றும் எண்ணிக்கை


பிரிவு         வகுப்புகள்     போட்டிகளின் எண்ணிக்கை


பிரிவு 1

1 மற்றும் 2 ஆம் வகுப்பு

9 போட்டிகள்


பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை

15 போட்டிகள்


பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை

18 போட்டிகள்


பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு

32 போட்டிகள்


பிரிவு 5

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

32 போட்டிகள்




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மீண்டும் பரவும் கொரோனா | ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு



ஆந்திராவில் மீண்டும் கொரோனா


ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


- ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவல்


3 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் Corona பரவல் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 


இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேரில் கடப்பாவைச் சேர்ந்த 8 பேர், குண்டூரைச் சேர்ந்த 2 பேர், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். 3 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 2 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் இல்லை. அதே சமயம் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா புதிய வகை வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிய 5 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா மட்டுமின்றி 2026 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 339 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 


Census பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 நாட்கள் Special CL வழங்கக் கோரிய மனுவுக்கு CEO அவர்களின் பதில்



மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குமாறு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவுக்கு கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் பதில்



Response from the Chief Educational Officer of Karur District regarding the request to grant 10 days of special casual leave to teachers and staff engaged in census work



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) | செய்தி வெளியீடு



கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings



 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Selection of outstanding teachers for the Dr. Radhakrishnan Award to be presented at the Teachers' Day celebration on 05-09-2026 – Proceedings of the Director of School Education


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண். 010095/ஐ/இ1/2026, நாள்.15.07.2026


பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்


பொருள்:


பள்ளிக் கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2026 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்திட மென்பொருள் உருவாக்குதல் - நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் - தொடர்பாக.


பார்வை: அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை. நாள் 05.08.2022


தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.


பார்வையில் காணும் அரசாணையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்திட கீழ்கண்டவாறு 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம். மாவட்ட / மாநில குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.




 மாவட்டத் தேர்வுக்குழு


வ. எண்    பதவி     குழுவில் பதவி


1. முதன்மைக் கல்வி அலுவலர்

தலைவர்


2. முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 

உறுப்பினர்


3. மாவட்டக் கல்வி அலுவலர்கள் 

உறுப்பினர்


4. மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


5. உயர்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


6. முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர்

உறுப்பினர்


மாநிலத் தேர்வுக் குழு


1. பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6

தலைவர் 


2. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை -6

உறுப்பினர்


3. தொடக்கக் கல்வி இயக்குநர். சென்னை-6

உறுப்பினர்


4. அரசு தேர்வுகள் இயக்குநர், சென்னை - 6

உறுப்பினர்


5. தனியார் பள்ளிகள் இயக்குநர், சென்னை-6

உறுப்பினர்


6. இயக்குநர், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, சென்னை 8 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


7. சென்னை மாநகராட்சி ஆணையாளர். சென்னை 8 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


8. முதல்வர், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை சென்னை  

உறுப்பினர்


9. சிறப்பு ஆணையர் (ம) இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சென்னை - 5 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


10. இயக்குநர், சமூக பாதுகாப்புத்துறை, சென்னை (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


11. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) சென்னை - 6 

உறுப்பினர் செயலர்


விருது வழங்கிட ஆசிரியர்களைத் தேர்வு செய்திட பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள்.


1. விருதிற்குத் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தெரிவித்தல் வேண்டும்.


2. போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்காமல் ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின் போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை பள்ளிக் தலைமையாசிரியரிடம் இணையதளத்தில் பதிவு செய்திடல் வேண்டும். அறிவுறுத்தி


3. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை இணையதளத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும்.


4. விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.


5. விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, மதிப்பீடு செய்தல் வேண்டும்.


6. மாவட்டத்தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் /கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.


7. மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.


வழிகாட்டு நெறிமுறைகள் (GUIDELINES)


1. மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள் / ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை / பிற்பட்டோர் நலத்துறை / சமூக பாதுகாப்புத் துறை / நிதி உதவி பெறும் பள்ளிகள் / ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் அயநிதி / மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.


2. இவ்விருது வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கற்பித்தல் ஈடுபடும் வழங்கப்படும். அலுவலகங்களில் பணியில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது.


3. கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள் கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். (மறுநியமன காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது).


4. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும். ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும். பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை. தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.


5. அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக் கூடாது.


6. கல்வியினை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இவ்விருதிற்குத் தகுதியற்றவர்களாகக் கருத்தப்பட வேண்டும்.


7. சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள். கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்களில் தகுதியானவர்களையும் விருதிற்குப் பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டும்.


8. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் கருத்துருக்கள். பெயர்பட்டியலினை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களும் இது தொடர்பாக மந்தணம் காத்திடல் வேண்டும்.


9. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்காக வரையரை செய்யப்பட்ட படிவத்தில் மட்டுமே ஆசிரியர்களின் இணையவழியாக EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


10. ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் தயார் செய்து 1:2 என்ற வீதத்தில் தேர்வு செய்து, நல்லாசிரியர் விருதிற்கான ஆசிரியர்களின் கருத்துருக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


11. வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும் பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


12 மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.


ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது 


1. விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியிலான EMIS வழியாக மட்டுமே ஆசிரியரின் EMIS login மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


2. விண்ணப்பம் பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 03.08.2026 வரை மட்டுமே EMIS-ல் பதிவேற்றம்/Reset/Edit செய்ய இயலும். அதன்பிறகு விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய இயலாது.


3. அனைத்து வினாக்களுக்கும் உரிய உள்ளீட்டினை பதிவேற்றம் செய்யுமாறும், பதில் எதுவும் இல்லை எனில் (Not applicable) கலத்தில் இல்லை அல்லது 0 (பூஜியம்) - னை உள்ளீடு செய்து (whichever is applicable) சமர்ப்பிக்கவும். noor


4. விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யும் pdf/link ஆனது மாவட்ட/மாநிலத் தேர்வுக்குழுவால் சரிபார்க்க ஏதுவாக இருக்க வேண்டும் (Expiry ஆகாமலும் viewable ஆகவும் இருத்தல் வேண்டும்)


5. Presentation to State Selection Committee எனும் கலத்தில் ஆசிரியர்கள் மாநிலத் தேர்வுக்குழுவிற்கு தங்களுடைய பங்களிப்பை தெரிவிக்கும் வகையிலான உள்ளடக்கத்தினை ஒருங்கிணைந்த pdf ஆக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


6. இணைப்பில் கண்டிப்பாக உள்ள சான்றிதழ்களை அவற்றிற்குண்டான கலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


7. விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்காக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள demo video-வினை முழுமையாக பார்த்து மின் விண்ணப்பிக்கவும்.


எனவே. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் 17.07.2026 அன்று முதல் 03.08.2026-க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக்கல்வி இயக்குநர்


இணைப்பு: சான்று படிவங்கள் மூன்று



பெறுநர்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


நகல்: 


1. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், செ-06 

2. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், செ-06



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



New Curriculum for 1 to 3th Std | Training for BEOs and BRTEs | Joint Proceedings



1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


New Curriculum for Classes 1 to 3 | Training for Block Educational Officers and Block Resource Centre Teacher Educators | Joint Proceedings of the Directors


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை -06.


ந.க.எண்.29299/எஃப்4/2023 நாள். 16.07.2026.


பொருள்:


பயிற்சி - 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியமை பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.


பார்வை:


1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.RC.No.2531/A11/FLN-PMU/SS/22 Date 30.03.2023.


2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.50656/அ1/இ4/2023, நாள் 31.08.2023.


3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2640773/ஊ1/2026, நாள்.11.06.2026.


பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.


இந்த இணையவழி பயிற்சியில் தங்களது மாவட்டத்திலேயே உரிய அலுவலர்கள் பங்கேற்கும் வகையில், எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்படி பயிற்சி சார்ந்து உத்தேச செலவினத் தொகை தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும்.


இணைப்பு: மைய எண்ணிக்கை விவரப் படிவம்


இயக்குநர்

தொடக்கக்கல்வி இயக்ககம்


இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்


இயக்குநர்,

பள்ளிக்கல்வி இயக்ககம்



பெறுநர்


1. முதல்வர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.


2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.


3. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1. கூடுதல் முதன்மைச் செயலர். பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம். சென்னை-09 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.


2. மாநிலத்திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.


3. இயக்குநர். பள்ளிக்கல்வி இயக்ககம். சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.


4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



NHIS Number அறிய Website Link



NHIS Number அறிய வலைதள முகவரி


Website Link to know NHIS Number 


https://tnnhis2016.com/TNEMPLOYEE/IDCardSearch.aspx



Today's (17-07-2026) Wordle



Today's (17-07-2026) Wordle Puzzle 


Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,


மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 



>>> Click Here...



Yesterday's (16-07-2026) Wordle Answer: CAKES 





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

  Dr. Radhakrishnan Award Application 2026–2027 User Manual Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை Step 1 : Login into...