கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birth Certificate தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி

 


பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி


Press release by the District Collector regarding birth certificates


குறிப்பு: அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




செ.வெ.எண். 42, நாள். 10.07.2026


பத்திரிகைச் செய்தி


பிறப்புப் பதிவு-குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான ஆதாரம் ஆகும். குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றுதான் முழுமை பெற்ற சான்றிதழ் ஆகும்.


குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம்பெற, அரசுப் பணிகளில் சேர, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும்.


ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்து குழந்தையின் பெயரினை தாமத கட்டணமின்றி பதிவுசெய்து கொள்ளலாம்.


12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, உரிய அலுவலரின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


குழந்தையின் பெயரினை இதுவரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யாதோர் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து குழந்தையின் பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.


பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை ஒருமுறை பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் பெயரினை மாற்றம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 26.09.2026-க்குள் குழந்தையின் பெயரினை பிறப்புச் சான்றில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி



Census பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 10 முழு நாட்கள் / 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி - கேரளா அரசு அரசாணை வெளியீடு



  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 10 முழு நாட்கள் அல்லது 20 அரை நாட்கள் சிறப்பு அனுமதி - கேரளா அரசு அரசாணை G.O.(Ms) No.69 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



GOVERNMENT OF KERALA

Abstract


General Administration Department Census 2027 Facilities and concessions to the staff engaged for the census work - Orders issued.


GENERAL ADMINISTRATION (PROTOCOL) DEPARTMENT


G.O.(Ms)No.69/2026/GAD Dated, Thiruvananthapuram, 01-07-2026


Read: 1. Letter F. No. 14/32/M-STATE/2019 dated 02/02/2026 of the Director of Census Operations, Kerala, Thiruvananthapuram.


2. Letter F. No. 35/32/HLB/2019 dated 25/02/2026 of the Director of Census Operations, Kerala, Thiruvananthapuram.


3. Letter No. DGE/9629/2026-SS dated 06/06/2026 of the Director General of Education, Thiruvananthapuram


ORDER


In the circumstances reported by the Director of Census Operations, Kerala, Government are pleased to issue the following orders regarding the facilities and concessions to be given to the staff engaged for the work in connection with the Census 2027.


2. The Village / Local Bodies/Forest Staff/Teachers / Anganwadi Workers / Other category of staff who are appointed as Supervisors/Enumerators/Assistant Enumerators will be allowed the concession of absenting themselves from their institutions/offices on Census duty for half of a day either in the forenoon or in the afternoon on twenty working days from 01.07.2026 to 30.07.2026 or for the full day for ten working days between 01.07.2026 and 30.07.2026 for the phase 1 operations of House listing and Housing Census (HLO). The staff engaged in the Census work will have the option to choose one of the above concessions.


(By order of the Governor)


ARAVIND BS

JOINT SECRETARY & STATE PROTOCOL OFFICER



To:


The Principal Director (LR), Thiruvananthapuram


All Heads of Departments


The Director of Census Operations, Kerala


All District Collectors


The Principal Chief Conservator of Forests, Thiruvananthapuram


The Director of Urban Affairs, Thiruvananthapuram


The Director of Panchayats, Thiruvananthapuram


The Director of General Education, Thiruvananthapuram


The Director of Economics & Statistics, Thiruvananthapuram


All District Planning Officers


All District Informatics Officers


All District Information Officers


All District Project Manager, IT Mission


All Revenue Divisional Officers


All Tahsildars/Additional Tahsildars


All Municipal Corporation Secretaries/Additional Secretaries


All Municipal Secretaries


The Executive Officer, Kannur Cantonment


The State Informatics Officer, Thiruvananthapuram


All Deputy Collectors (General)


All Joint Directors (LSGD)


All Deputy Directors of Education


All Deputy Directors of Economics & Statistics


Staff Officer to Chief Secretary


PA to Secretary, General Administration Department


PA to Special Secretary, General Education Department


The Director, Information and Public Relations (Web and New Media)


Stock File/Office Copy (Pro5A/2/2025-GASD-Part(3)




பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும்

 பணி ஓய்வு - மறு நியமனம் கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பதிவும், பணி நீட்டிப்பு பெற்ற ஆசிரியரின் பதிவும் 

சமூக வலைதளங்களில் இத்தகவல் டிரெண்ட் ஆன நிலையில் கல்வி அமைச்சர் அமெரிக்காவில் இருந்து உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதின் படி 02/07/2026 அன்று மறு நியமன பணி ஆணை பெற்று பணியில் தொடர்கிறார்.





பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மறு நியமனம் மறுக்கப்பட்ட தி.மாரிமுத்து (யூமா வாசுகி) என்னும் கலை ஆசிரியரின் வேண்டுகோள்



பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மறு நியமனம் மறுக்கப்பட்ட தி.மாரிமுத்து (யூமா வாசுகி) என்னும் கலை ஆசிரியரின் வேண்டுகோள்

--------------------------------

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் Raj Mohan அவர்களுக்கு வணக்கம். 

என் பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி எனும் பெயரில் எழுதி வருகிறேன். கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில் ஐந்தாண்டு பட்டயப் படிப்பாக ஓவியம் பயின்றேன்.


மொழிபெயர்ப்புக்காகவும் சிறார் இலக்கியத்திற்காகவும் இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருதும் ஐந்துமுறை தமிழ்நாடு அரசு விருதும் பெற்றிருக்கிறேன். மூன்று சிறார் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறேன். முப்பது ஆண்டுகளாக பத்திரிகை பதிப்பகம் சார்ந்து செயல்பட்டு வருகிறேன். 


சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதி, செண்டங்காடு (பட்டுக்கோட்டை வட்டம்) அரசு உயர்நிலைப் பள்ளியில் 25/11/2019 அன்று ஓவிய ஆசிரியராக (சிறப்பாசியராக) பணியில் இணைந்தேன். 30/06/26ல் எனக்குப் பணி ஓய்வு. ஆயினும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால் அடுத்த கல்வியாண்டுவரை (பத்து மாதங்கள்) பணியாற்றலாம் என்பது அரசு விதி. 


எனவே, 05/06/26 அன்று மறு நியமனத்துக்காக, பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையுடன் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். தஞ்சை CEO விடுப்பில் இருக்கிறார். எனவே திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியா தஞ்சைக்கு பொறுப்பு CEO ஆக இருக்கிறார். 


இதில் இனைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை நேற்று திருமதி சுகப்பிரியா என் பள்ளி மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கிறார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்து, பெற்றுக்கொண்டதற்கு கையெழுத்திடக் கோரினார். நான் அவகாசம் கேட்டு பள்ளியிலிருந்து வெளியேறினேன். 


பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிப்படைய மாட்டார்கள் என்று சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார். மறு நியமனம் என்பது என்போன்ற அரசுப் பள்ளி கலையாசிரியர்களின் உரிமை. இதை திருமதி சுகப்பிரியா துச்சமாகப் புறக்கணிக்கிறார். 


நான் நூலகப் பாடவேளையும் ஓவியப் பாடவேளையும் சேர்த்துதான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பார்த்து வருகிறேன். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 81. நான் பணியில் சேரும்போதே நூறுக்கும் குறைவான மாணவர்கள்தான் இருந்தார்கள். 


நான் இது குறித்து சென்னையில் உள்ள கல்வித்துறை சார்ந்த அதிகாரியிடம் பேசினேன். அவரும் அவரது உயர் அதிகாரியும் திருமதி சுகப்பிரியாவிடம், "இதை நீங்கள் மறுக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கான மறு நியமனம் என்பது அரசு நடைமுறைதான்" என்று மிகவும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். 


ஆனால் திருமதி திருவாரூர் CEO சுகப்பிரியா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். 


"நான் எந்த சிறப்பாசிரியருக்கும் மறு நியமனம் கொடுத்ததில்லை. செண்டங்காடு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஓவிய ஆசிரியர் பற்றி கருத்து கேட்டுவிட்டுதான் முடிவெடுத்தேன்" என்று திருமதி சுகப்பிரியா சொல்லியிருக்கிறார். 


ஒன்று, கலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது மறு நியமனம் என்பது மிக எளிய நடைமுறை. இதை திருமதி சுகப்பிரியா எதேச்சாதிகாரமாக மறுக்கிறார். 

இரண்டு, பள்ளியில் என் செயல்பாடு சரியில்லை என்றது என் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய பழிச்சொல். திருமதி சுகப்பிரியா எனக்கு இழைத்த கொடும் அவமானம். 


நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். எவர் வேண்டுமானாலும் என் பள்ளியின் ஒவ்வொரு மாணவரிடத்திலும் என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 


தலைமை ஆசிரியரிடம்,"பள்ளியில் என் செயல்பாடுகள் சரியில்லை என்று திருவாரூர் CEO திருமதி சுகப்பிரியாவிடம் சொன்னீர்களா?" என்று கேட்டேன். நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. என் போனை வேண்டுமாலும் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளலாம்" என்று அவர் சொன்னார். 


இத்தனைக்கும் தலைமை ஆசிரியரும் நானும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மறு நியமனத்துக்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்ததே அவர்தானே!

அப்படியென்றால் திருமதி சுகப்பிரியா பொய் சொல்கிறாரா? 


கல்வித்துறை அதிகாரி, மறு நியமனம் கோரியும் இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டும் திருமதி சுகப்பிரியா மீது வழக்குத் தொடுங்கள் என்று ஆலோசனை சொன்னார். வழக்கு நடத்தும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. 


நான் மொத்தம் ஆறு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் மட்டுமே பள்ளியில் பணிபுரிந்திருக்கிறேன். எனக்கான மறு நியமனத்தை திருமதி சுகப்பிரியா மறுப்பது முறைகேடு. 


நான் பிழைப்புக்காக இதைக் கேட்கவில்லை. என் உரிமை அபகரிக்கப்படுவது, சர்வாதிகாரமாக உதாசீனப்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது. 

ஓவிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, கலையாசியர்கள் மீதான திருமதி சுகப்பிரியாவின்  அலட்சியத்தையே காட்டுகிறது. 


ஓவிய, நூலக ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்றால் காலங்காலமாக அரசுப் பள்ளிகளில் ஏன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. 

இந்த விஷயத்தில் மௌனமாக இருந்தால், எனக்குப் பின் ஓய்வு பெறும் கலையாசிரியர்களும் மறு நியமனத்துக்குத் தகுதியற்றவர்களாகப் புறக்கணிக்கப்படுவார்கள் எனும்  அச்சமும் ஏற்படுகிறது. 


எனவே மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள், திருவாரூர் CEO  திருமதி சுகப்பிரியா எனக்கு அளித்த மறு நியமன நிராகரிப்பு ஆணையை ரத்து செய்து எனக்கு அடுத்த கல்வியாண்டுவரை பணிபுரிய உத்தரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 


இவண்

தி. மாரிமுத்து (யூமா வாசுகி)


ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி?



ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி?


இந்த பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் உண்மை சம்பவங்களே.


திரைப்படங்களில் வருவது போல் நிஜத்தில் நடந்த ஒரு பரபரப்பான கொள்ளை சம்பவத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.


திரைப்படத்தையே மிஞ்சும் அளவிற்கு சுவாரசியம் கொண்ட அந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது வேறெங்கும் இல்லை நம் தமிழ்நாட்டில் தான்.


08-ஆகஸ்ட்-2016 அன்று சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.323 கோடி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.


இதனை அறிந்த கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி மதிப்பிலான பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


இந்த கொள்ளை தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலக்க முடியாத நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.


சிபிசிஐடியின் தடயவியல் துறை அதிகாரிகள் பெட்டியை அங்குலம் அங்குலமாக சோதித்தனர்.


பெட்டியின் மேற்கூரை சதுரமாக கத்திரிக்கப்பட்டு ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டப்பட்டு அதன் வழியாக ஆட்கள் நுழைந்து பணப்பெட்டிகளில் சிலவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.


சிபிசிஐடி போலீஸார் சேலத்திலிருந்து சென்னை வரை 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர்.


சேலத்தில் பணம் ஏற்றப்படுவதற்கு முன்னரே ரயில் பெட்டியின் மேற்கூரையை துண்டித்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.


பணம் ஏற்றிய போது சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர், பார்சல் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள், போர்ட்டர்கள் என 34 ஊழியர்களிடம் சிபிசிஐடி தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.


மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.


ரயில் வரும் வழியெங்கும் உள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்ந்தனர்.

ஆனாலும் துப்பு துலக்க முடியவில்லை.


மின்சார ரயிலாக இருந்தாலும் சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.


மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையை பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது.


ஆகவே டீசல் எஞ்சின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.


கொள்ளையர்கள் பற்றிய ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் 1 வருடம் கடந்தது.

சிபிசிஐடியில் அதிகாரிகள் மாறினர். அம்ரேஷ் புஜாரி புதிய ஏடிஜிபியாக பொறுப்பேற்றார்.


அதன் பின்னர் அவரது உத்தரவின் பேரில் இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்தது.

இம்முறை சிபிசிஐடி போலீஸார் புது யுக்தியை கையாண்டனர்.

இந்த வழக்கிற்காக இஸ்ரோவின் உதவியை நாடினர் .


இந்த சம்பவம் குறித்து இஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து உதவி கோரினர்.

இதன் மூலம் ரயிலில்

எந்த இடத்தில் பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டது?


எந்த இடத்தில் பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது?


எப்படி அந்த பணம் கொண்டு செல்லப்பட்டது?


என்பவற்றை பற்றிய துல்லியமான படங்களை பெற முடியும்.


கொள்ளை நடைபெற்ற அந்த நாளில் அந்த நேரத்தை சரியாக கணக்கிட்டு அந்த தகவல்களை இஸ்ரோவிடம் கொடுத்து அதற்கான படங்களை கேட்டனர் சிபிசிஐடி அதிகாரிகள்.


இஸ்ரோ உதவியுடன் செயற்கைகோள் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்தது.

எந்த இடத்தில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற துப்பும் கிடைத்தது.

அதன் பின்னர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

இதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் கிடைத்தன.


அவற்றை ஆராய்ந்த போது அவை மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள நபர்களின் பெயரில் இருப்பது தெரிய வந்தது.


இதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் நம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து கொள்ளை சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்தனர்.


கிட்டத்தட்ட 2 வருடங்களாக (2016-2018) சிபிசிஐடி போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தை பற்றிய விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தனர்.


சிபிசிஐடி போலீஸாரின் கடின முயற்சிக்கு பின்னர் இறுதியாக மத்திய பிரதேச மாநில போலீஸார் மூலம் சில தகவல்களை சேகரித்திருக்கின்றனர்.


அதில் மத்தியபிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தை சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக் கூட்டத்தலைவனின் ஆட்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.


மேலும் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகள் சென்னை வருவதாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்படி சென்னை வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ்(38), ரோஹன் பார்தி(29) ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.


விசாரணையின் போது குற்றவாளிகள் இருவரும் மோஹர்சிங் தலைமையின் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.


மேலும் விசாரணையில் கொள்ளை சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கூட்ட தலைவன் மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளில் சிலர் குணா மாவட்ட மத்திய சிறையில் மற்ற வழக்கு சம்மந்தமாக அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது.


ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோஹர்சிங் தலைமையிலான குழுவானது பார்தி குற்றவாளிகள் குழுவினைச் சேர்ந்தவர்களாவர்.

(தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் பவாரியா குழுவை போல )


இந்த கொள்ளை குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவாக சென்று அப்பகுதிகளில் சாலையோரம் அல்லது ரயில் நிலையம், தண்டவாளங்கள் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து கொள்வார்களாம் .


இவர்கள் கட்டிட தொழிலாளிகளாகவும், பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளராகவும் வேலை செய்வது போல் அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொள்ளையடிப்பதற்கு ஏதுவான இடத்தை தேர்ந்தெடுப்பார்களாம்.


மேலும் இவர்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள்.


தமிழ்நாட்டில் இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மற்ற குற்றங்கள் குறித்தும் அந்த சமயத்தில் விசாரணை நடத்தப்பட்டது.


ஓடும் ரயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது தொடர்பாக குற்றவாளிகளின் வாக்குமூலத்தை இப்போது பார்க்கலாம்.


சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி பணம் எடுத்து செல்லப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்த ரெயிலில் கொள்ளையை அரங்கேற்ற நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தோம்.

இதற்காக சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தோம்.

சேலம் ரெயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் பல நாட்கள் வேவு பார்த்தோம்.

சேலத்தில் இருந்து ரெயில் எப்போது புறப்படுகிறது?

எந்தெந்த நிலையங்களில் நிற்கிறது?

எவ்வளவு நேரம் நிற்கிறது?

எப்போது சென்னை வருகிறது?

பெரிய பெரிய பார்சல்களை ரெயில்வே சரக்கு போக்குவரத்து அதிகாரிகள் எப்படி கையாளுகிறார்கள்?

என்பதை நீண்ட நாட்களாக கண்காணித்தோம்.


ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டும்

ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே டீ குடித்துக் கொண்டும்

நாளிதழ் படித்துக் கொண்டும்

அங்கு நடக்கும் விஷயங்களை தீவிரமாக கண்காணித்தோம்.


இந்த நிலையில் 08-ஆகஸ்ட்-2016 அன்று சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோடிக்கணக்கான அளவில் பணம் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்படுவதை அறிந்தோம்.


மின்சார ரயிலான சேலம் எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து விழுப்புரம் வரை டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்படும் என்பதை அறிந்து கொண்டோம்.

அந்த இடைவெளியில் கொள்ளையடிப்பது தான் சரியான இடம் என்பதை தேர்வு செய்தோம்.


அதன்படி சேலத்தில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்ட ரயிலில் எங்கள் தலைவன் மோஹர்சிங் தலைமையில் 5 பேர் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டோம்.


குறிப்பிட்ட நேரத்தில் ரெயிலின் மேற்கூரைக்கு செல்லும் வகையில் பெட்டியின் படிக்கட்டு பகுதியிலேயே தயாராக இருந்தோம்.

ரெயில் புறப்பட்டதுமே திட்டத்தை மீண்டும் ஒருமுறை எங்களுக்குள் கூறிக்கொண்டோம்.


நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் ரெயிலின் ஜன்னல் கம்பிகளை பிடித்து மெதுவாக ரெயிலின் மேற்கூரைக்கு ஒவ்வொருவராக சென்றோம்.


இரவு வேளை என்பதாலும் ஏற்கனவே நோட்டமிட்டபடி சுரங்கப்பாதைகளோ மரக்கிளைகளோ இல்லாத காரணத்தாலும் மின் மயமாக்கப்படாத பாதை என்பதாலும் எளிதாக ரெயிலின் மேற்கூரைக்கு சென்றோம்.


ஒரு கட்டத்தில் நாங்கள் 5 பேரும் பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையில் கூட்டாக அமர்ந்திருந்தோம்.

பேட்டரியால் இயங்கும் கட்டர் மற்றும் கையால் இயக்கப்படும் கட்டர் ஆகியவற்றை கொண்டு துளையிட தயாரானோம்.


இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சின்ன சேலம் கடந்து விருத்தாச்சலம் நோக்கி சென்றது.

அப்போது தான் நாங்கள் திட்டமிட்டிருந்த படி மேற்கூரையில் துளை போட்டோம்.


எந்த சூழ்நிலையிலும் கண்காணிப்பு போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம்.

இதனால் ரெயில் என்ஜின் ஒலி எழுப்பும் சமயத்தில் குறிவைத்து வேகவேகமாக மேற்கூரையில் துளைபோட்டோம்.

ஓரளவு துளை போட்டதும் எங்களில் 2 பேர் அந்த துளையின் வழியாக ரெயில் பெட்டிக்குள் இறங்கினார்கள்.


அந்த 2 பேர் தான் ரெயில் பெட்டிக்குள் இருந்த மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த ரூபாய் நோட்டுகளை 6 லுங்கிகளில் சுற்றி கட்டினார்கள்.


அவசர அவசரமாக பணக்கட்டுகளை எடுத்து கொண்டு 2 பேரும் மேலே ஏறி வந்தனர்.

நாங்களும் முன்பு போல ஜன்னல் கம்பிகள் வழியாக மெதுவாக கீழே இறங்கி ரெயில் பெட்டிக்குள் வந்துவிட்டோம்.


ரயில் விருத்தாசலம் வந்த போது அங்கே தண்டவாளம் அருகே காத்திருந்த எங்கள் கூட்டாளிகளிடம் பணத்தை கொடுத்து விட்டு நாங்கள் அங்கிருந்து தப்பி விட்டோம்.

அதிக அளவில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த போதும் நேரமின்மையால் குறைவான பணத்தையே எங்களால் கொள்ளையடிக்க முடிந்தது.


பெரும் சிரமங்களுக்கு இடையே துல்லியமாக திட்டமிட்டு சில கோடிகளை கொள்ளையடித்தை நினைத்து சந்தோஷப்பட்டோம்.

ஆனால் நாங்கள் கொள்ளையடித்தது செல்லாத மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து மிகவும் கவலைப்பட்டோம்.


ஆயினும் எப்படியாவது இந்த பணத்தை மாற்றிவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்தோம்.

சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு கொள்ளை கும்பலைச் சேர்ந்த அனைவரும் பணத்தை சமமாக பிரித்து கொண்டோம்.


அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி சந்தோஷமாக செலவு செய்து வந்தோம்.

ஆனால் சம்பவம் முடிந்து சரியாக 3 மாதங்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதியான 500 ரூபாய் நோட்டுகளை எரித்து விட்டோம்.

எரிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும்

அவர்களின் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.


இறுதியாக இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோஹர்சிங் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.


இவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார் கொள்ளை நடந்த பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


இதனைத் தொடர்ந்து


இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மோஹர்சிங் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்.

இவரது குடும்பத்தினர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலை வழக்கில் தேடப்பட்டதால் தென் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த மோஹர்சிங் கடந்த 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளான்.

தனது கும்பலுடன் சேர்ந்து விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள், ரயில்வே பாதைகள், பாலங்கள் அருகே தங்கியுள்ளான்.

அப்போது சேலத்தில் தங்கியிருந்த தனது கும்பலை சேர்ந்த ஒருவன் மூலமாக ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து அறிந்து இந்த கொள்ளை சம்பவத்தை சாமர்த்தியமாக அரங்கேற்றியுள்ளான்

என்று சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தனர்.


கூடுதல் தகவல்:


சேலம் மாநகர குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றனர்.

அங்கு உஜ்ஜையின் மற்றும் குணா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்ற குழுக்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.

இடையறாத முயற்சிக்குப் பின் மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளுக்கு இவ்வழக்கோடு தொடர்புள்ளது என்ற நம்பத் தகுந்த தகவலை காவல் துணை காணிப்பாளர் கிருஷ்ணன் திரட்டினார்.

நீண்ட ஆய்வுக்கு பின் மேற்கண்ட குழுவானது ரயில் கொள்ளையில் ஈடுபடுட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.


குறிப்பு: இந்த பதிவு 2016-ல் நடந்த சேலம்–சென்னை ரயில் பணக் கொள்ளை வழக்கை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு செய்தி அறிக்கைகள் மற்றும் பொதுவில் கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்டுள்ளது


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings

 


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings


Order denying re-appointment / extension of service to a retired teacher - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்(பொறுப்பு) செயல்முறைகள் 

பிறப்பிப்பவர்: திருமதி.அ.சுகப்பிரியா எம்.எஸ்.ஸி.,பி.எட்.எம்ஃபில்.,


மூ.மு.எண்.4001 / ஆ4/ 2026, நாள். 30.06.2026


பொருள்:


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - பணி ஓய்வு - பணி நீட்டிப்பு - தஞ்சாவூர் மாவட்டம். செண்டங்காடு, அரசு நீட்டிப்பு உயர்நிலைப்பள்ளி. ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு - 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.261. பள்ளிக்கல்வி (155(2)) துறைநாள்.20.12.2018.


2. அரசாணை (நிலை)எண்.115, பள்ளிக்கல்வித் (பக5(2)) துறைநாள்.28.06.2022.


3. அரசாணை (நிலை)எண்.151. பள்ளிக்கல்வித் (SE1 (1) துறைநாள்.09.09.2022.


4.அரசுக்கடிதஎண்: 3618/பக5(1)/2025 நாள்:30.05.2025.


5.செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரின் கடித ந.க.எண்:37/516/ 2026, நாள்: 05.06.2026.


தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் 01.07.2026 முதல் 2026 27 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணி நீடிப்பில் பணிபுரிய அனுமதி கோரி பார்வை (5) இல் கண்டுள்ள கடிதத்தில் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.


பார்வை 1-ல் காணும் அரசாணையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு கலை ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செண்டங்காடு. அரசு உயர்நிலைப்பள்ளியில் 01.08.2025 ஆசிரியர் நிர்ணயத்தின் படி 6 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும், 7 ஆம் வகுப்பில் 21 மாணவர்களும், 8 ஆம் வகுப்பில் 16 மாணவர்களும் ஆக கூடுதல் 52 மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மேலும் இன்றைய தேதியிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.


எனவே திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும், அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர்(பொ). தஞ்சாவூர்.


பெறுநர் :

சம்மந்தப்பட்ட ஆசிரியர் (உரியவழியாக)


நகல் :

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, செண்டங்காடு.


நகல் :

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தஞ்சாவூர்.




அரசுப் பணியாளர்களை 9 ஆண்டுகளாக பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு



அரசுப் பணியாளர்களை 9 ஆண்டுகளாக பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு 


அரசாணை எண் 81 (04.08.2022)-ஐ கட்டாயம் பரிசீலித்து, குற்றவியல் / ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை பணியாளரை உணர்திறன் அற்ற (Non-Sensitive) பணியிடத்தில் நியமிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



⚖️ வழக்கு விவரங்கள்


* நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்றம்

* வழக்கு எண்:Rev. Appl. No.103 of 2026 in W.P.No.30989 of 2024

* தீர்ப்பு நாள்:25.06.2026

* நீதிபதி: மாண்புமிகு நீதியரசர் G.K. Ilanthiraiyan

* சட்டப்பிரிவுகள்:


  * Order XLVII Rule 1, Code of Civil Procedure, 1908

  * Section 114, Code of Civil Procedure, 1908

* சம்பந்தப்பட்ட அரசாணை: G.O.(Ms.) No.81, Human Resources Management (N) Department, dated 04.08.2022 


📝 வழக்கின் பின்னணி


மனுதாரர் ஒரு ஊராட்சி செயலாளர் (Village Panchayat Secretary) ஆவார்.


அவர் 10.08.2017 அன்று பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டார். அதனை எதிர்த்து தாக்கல் செய்த W.P.No.30989 of 2024 வழக்கு, 25.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அந்தத் தீர்ப்பில், G.O.(Ms.) No.81, Human Resources Management Department, dated 04.08.2022 மனுதாரருக்கு பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.


இதனை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுதாரர் Review Application தாக்கல் செய்தார். 


⚖️ மனுதாரரின் வாதம்


மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:


* தாம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் (பணிவிதிமுறைகள்), 2013-ன் கீழ் பணியாற்றுபவர்.

* அந்த விதிகளின்படி, பணியிடை நீக்கத்தை ஒவ்வொரு காலாண்டிலும் (Quarterly Review) மறுஆய்வு செய்ய வேண்டும்.

* எனவே G.O.(Ms.) No.81, 04.08.2022 தமது வழக்கிற்கும் பொருந்தும்.

* இதனை கருத்தில் கொள்ளாமல் முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பில் தவறு ஏற்பட்டுள்ளது. 


🏛️ சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள்


1️⃣ G.O.(Ms.) No.81 இந்த வழக்கிற்கும் பொருந்தும்


முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பில்,


அரசாணை எண் 81 பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.


ஆனால் Review மனுவில் முன்வைக்கப்பட்ட விவரங்களை பரிசீலித்த நீதிமன்றம், இந்த அரசாணை மனுதாரரின் வழக்கிற்கும் பொருந்தும் என்று தெளிவுபடுத்தியது. 


2️⃣ பணியிடை நீக்கத்தை காலாண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும்


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் (பணிவிதிமுறைகள்), 2013-ன் அடிப்படையில்,


பணியிடை நீக்க உத்தரவை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை (Quarterly Review) மறுபரிசீலனை செய்வது கட்டாயம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. 


3️⃣ நீண்டகால பணியிடை நீக்கம் தொடரக் கூடாது


2017 முதல் பல ஆண்டுகளாக பணியிடை நீக்கம் தொடரும் நிலையில்,


அதனை மறுஆய்வு செய்யாமல் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. 


4️⃣ உணர்திறன் அற்ற (Non-Sensitive) பணியிடத்தில் நியமிக்க வேண்டும்


என நீதிமன்றம் முக்கியமாக உத்தரவிட்டது.


குற்றவியல் வழக்கு அல்லது ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை,


மனுதாரரை Non-Sensitive Post-இல் நியமிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு வழங்க வேண்டும். 


 5️⃣ ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை


சேலம் மாவட்ட ஆட்சியர் / Inspector of Panchayats,


G.O.(Ms.) No.81-ன் அடிப்படையில் பணியிடை நீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்து,


6 வாரங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 


⚖️ நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு


சென்னை உயர்நீதிமன்றம்:


✅ 25.11.2025 அன்று வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை (Review) செய்தது.


✅ G.O.(Ms.) No.81, 04.08.2022 மனுதாரரின் வழக்கிற்கும் பொருந்தும் என்று உறுதி செய்தது.


✅ 10.08.2017 பணியிடை நீக்க உத்தரவை மறுஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.


✅ குற்றவியல் வழக்கு அல்லது ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை, மனுதாரரை Non-Sensitive Post-இல் நியமிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது.


✅ இந்த நடவடிக்கையை 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு Review மனுவை முடித்துவைத்தது. 


📚 இந்த தீர்ப்பின் சட்ட முக்கியத்துவம்


இந்த தீர்ப்பு, நீண்டகால பணியிடை நீக்கத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மற்றும் இதேபோன்ற அரசு ஊழியர்களுக்கு முக்கியமான வழிகாட்டுதலாகும்.


இந்த தீர்ப்பின் மூலம்:


* G.O.(Ms.) No.81 (04.08.2022)-ன் அடிப்படையில் Suspension-ஐ கட்டாயம் காலாண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும்.

* பல ஆண்டுகள் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது.

* வழக்கு நிலுவையில் இருந்தாலும், தேவையான சூழ்நிலையில் Non-Sensitive Post-இல் பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

* Review மனு மூலம் நீதிமன்றம் தன்னுடைய முந்தைய தீர்ப்பையே திருத்தி, சரியான சட்ட நிலையை உறுதி செய்துள்ளது. 


🔑 முக்கிய அம்சங்கள்


1. 2017 முதல் பணியிடை நீக்கத்தில் இருந்த ஊராட்சி செயலாளர் தொடர்பான வழக்கு.

2. G.O.(Ms.) No.81 , Dated : 04-08-2022 இந்த வழக்கிற்கும் பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

3. Suspension-ஐ காலாண்டுதோறும் (Quarterly) மறுஆய்வு செய்ய வேண்டும்.

4. முந்தைய தீர்ப்பு Review மூலம் திருத்தப்பட்டது.

5. குற்றவியல் / ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை Non-Sensitive Post-இல் நியமிப்பதை பரிசீலிக்க உத்தரவு.

6. 6 வாரங்களுக்குள் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும்.

7. நீண்டகால Suspension-ஐ மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது.

8. ஊராட்சி செயலாளர்களின் சேவை விதிகளும் G.O.(Ms.) No.81-உம் இணைந்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

9. Review மனு ஏற்கப்பட்டு முந்தைய உத்தரவு மாற்றப்பட்டது.

10. நீண்டகால பணியிடை நீக்கம் தொடர்பான முக்கிய முன்னுதாரண தீர்ப்பாக இது அமைந்துள்ளது.



Rev.Aplw.No.103 of 2026

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 25.06.2026

CORAM:

THE HONOURABLE MR. JUSTICE G.K.ILANTHIRAIYAN

Rev.Aplw.No.103 of 2026 in

WP.No.30989 of 2024

M.Murthy ... Petitioner

Vs.

1.The District Collector/

Inspector of Panchayats,

Salem District,

Salem

2.The Personal Assistant to District Collector,

Development,

Salem District,

Salem

3.The Block Development Officer,

Village Panchayat,

Panamarathupatti Panchayat Union,

Panamarathupatti,

Salem District ... Respondents

Prayer:

Review Application filed under Order 47 Rule 1 of CPC r/w

Section 114 of CPC praying to review the order dated 25.11.2025 made in

WP.No.30989 of 2024 passed by this Court.

For Petitioner : Mr.M.R.Jothimanian

For Respondents : Mr.G.Abraham Prabhu,

 Government Counsel


ORDER

This review application has been filed praying to review the order dated 25.11.2025 passed in WP.No.30989 of 2024 by this Court, thereby dismissing the writ petition since GO.(Ms).No.81, Human Resources Management (N) Department dated 04.08.2022 is not applicable to the case of the petitioner. 

2. However, now by way of this review application, it is brought to notice of this Court that the aforementioned Government Order is applicable to the case of the petitioner since the petitioner’s suspension order can be reviewed once in a quarter as per the Rules i.e. Tamil Nadu Village Panchayat Secretaries (Conditions of Service) Rules, 2013.

3. In view of the above, the order dated 25.11.2025 passed in WP.No.30989 of 2024 by this Court is reviewed and the first respondent is directed to revisit the order of suspension dated 10.08.2017 in the light of the GO.(Ms).No.81, Human Resources Management (N) Department dated 04.08.2022 and to place the petitioner in any one of the non sensitive posts till completion of the criminal case / disciplinary proceedings, within a period of six weeks from the date of receipt of this order.

4. With the above direction, this review application is disposed of. There shall be no order as to costs.

25.06.2026

Index : Yes/No

Neutral citation : Yes/No

Speaking/non-speaking order

lok

To

1.The District Collector/

Inspector of Panchayats,

Salem District,

Salem

2.The Personal Assistant to District Collector,

Development,

Salem District,

Salem

3.The Block Development Officer,

Village Panchayat,

Panamarathupatti Panchayat Union,

Panamarathupatti,

Salem District

4.The Public Prosecutor,

High Court of Madras



அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

 


அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு


2022 ஆகஸ்ட் 4 அன்று தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 81, நாள் : 04.08.2022 ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை வகுக்கிறது. 


இது ஒழுங்கு விசாரணைகளை இறுதி செய்வதற்கான கால வரம்புகளைக் கட்டாயமாக்குவதோடு, கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களின் பணி இடைநீக்கத்தை மறுஆய்வு செய்வதற்கும் ரத்து செய்வதற்குமான நெறிமுறைகளையும் வகுக்கிறது.


Disciplinary cases - Review of suspension pending enquiry into grave charges - Time limit for finalization of disciplinary proceedings - Compendium of instructions - Issued.


G.O.(Ms.) No.81 , Dated : 04-08-2022



>>> Click Here to Download 



Today's (12-07-2026) Wordle



Today's (12-07-2026) Wordle Puzzle 


                            

Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,

 

மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 


>>> Click Here...



Yesterday's (11-07-2026) Wordle Answer: 



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



கடும் குளிரிலும் கற்றல் நன்றே | உறைபனியைக் கடந்து பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுவன் Ice Boy Wang Fuman



 கடும் குளிரிலும் கற்றல் நன்றே | உறைபனியைக் கடந்து பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுவன் Ice Boy Wang Fuman


8 வயதில் உறைபனியைக் கடந்து பள்ளிக்குச் சென்ற சிறுவன் | உலகையே நெகிழவைத்த உண்மைக் கதை


வெறும் 8 வயதிலேயே, பின்னர் "ஐஸ் பாய்" (Ice Boy) என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட வாங் ஃபுமான், தனது விடாமுயற்சியால் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சிறுவனாக மாறினார்.


சீனாவின் மலைப்பகுதியில் வசித்த அவர், -9°C கடும் குளிரிலும் தினமும் 4.5 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் செல்வார். குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரிடம் மெல்லிய ஜாக்கெட் மட்டுமே இருந்தது. கையுறை, கம்பளித் தொப்பி போன்ற குளிர் பாதுகாப்பு ஆடைகள் எதுவும் அவரால் அணிய முடியவில்லை.


ஒரு நாள், உறைபனி நிறைந்த பாதையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த பிறகு, அவரது தலைமுடி, புருவம், இமைகள் அனைத்தும் பனியால் வெண்மையாக உறைந்த நிலையில் பள்ளியை அடைந்தார். கடும் குளிரால் அவரது கைகள் சிவந்து வீங்கியிருந்தன.


ஆனால் அந்தக் கடினமான பயணம் அவரது மன உறுதியைத் தளரச் செய்யவில்லை. அன்றைய இறுதித் தேர்வில் அவர் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


📸 பள்ளி முதல்வர் எடுத்த அவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை நெகிழச்செய்தது. கல்விக்கான அவரது அர்ப்பணிப்பும், தன்னம்பிக்கையும் பலருக்கு உத்வேகமாக அமைந்தது.


💙 சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உயரங்களை அடைய முடியும் என்பதை வாங் ஃபுமானின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.


வாங் ஃபுமான் (Wang Fuman) என்பவர் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் கிராமப்புறத்தில் வசித்து, உலகப் புகழ் பெற்ற "ஐஸ் பாய்" (Ice Boy) என்று அறியப்பட்ட சிறுவன் ஆவார். 


2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது இறுதித் தேர்வை எழுதுவதற்காகக் கொட்டும் பனியில் (-9° C வெப்பநிலையில்) சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து பள்ளிக்குச் சென்றார். 


கடுமையான குளிரால் உறைந்த தலைமுடி மற்றும் புருவங்கள், சிவந்த கன்னங்களுடன் அவர் வகுப்பறையில் இருந்த புகைப்படம் உலகளவில் வைரலானது. 


கல்வியின் மீது அவர் கொண்டிருந்த இந்த அசைக்க முடியாத உறுதி, பலரின் கவனத்தை ஈர்த்து கோடிக்கணக்கான நிதியுதவிகளை அவரது பள்ளிக்குக் கொண்டுவந்தது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birth Certificate தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி

  பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி Press release by the District Collector regarding birth certi...