கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கும் ROs & AROs உயர் நிலை அலுவலர்களுக்கான பயிற்சி (Election Training)

 

Election Training - Chief Electoral Officer Letter


Elections Conduct of two-days Training programme for Returning Officers / Assistant Returning Officers (AROS) for General Elections to TNLA, 2026 Instructions Communicated -Regarding.


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கும் ROs & AROs உயர் நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நாளை தொடக்கம்  - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம்



PUBLIC (ELECTIONS.VII) DEPARTMENT,

SECRETARIAT, CHENNAI-600 009.

Letter No.04/Elec.VII/2026-9, Dated: 28.02.2026

From

Tmt. Archana Patnaik, I.A.S.,

Chief Electoral Officer and

Principal Secretary to Government.

To

All District Election Officers (w.e).

The State Level Master Trainers (w.e)

Madam / Sir,

Sub:

Elections - Conduct of two-days Training programme for Returning Officers/ Assistant Returning Officers(AROs) for General Elections to TNLA, 2026 -Instructions - Communicated -Regarding.

Ref: 1. From the Election Commission of India,New Delhi, Letter No.590/ IIIDEM/ Training for Legislative Election in five States-2026, dated:06.01.2026.

2. Government letter No.04/ Ele-VII/ 2026-4, dated 07.01.2026

3. From the Election Commission of India,New Delhi, Letter No.590/ IIIDEM/ Training for Legislative Election in five States-2026, dated:08.01.2026.

*****

I am to invite your kind attention to the references cited and to inform that it is decided to conduct 2 days Zonal level Training Programme for Returning Officers/Assistant Returning Officers in the districts like Chennai, Villupuram, Salem, Coimbatore, Madurai, Tiruchirappalli and Tirunelveli on 03.03.2026 and 04.03.2026.The details of zone-wise training and the SLMTs details who will conduct the training session as Resource Person arc as follows:



>>> கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை - அமைச்சர்

 

 ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை  - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்


விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு 

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு.

 பொது தேர்வுகள் முடிந்தவுடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும் 

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் 

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 02.03.2026 

கிழமை:- திங்கள்



திருக்குறள்: 

குறள் 581:

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

விளக்க உரை:

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.


பழமொழி :
As the fool things so the bell clinks.

  பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.


பொன்மொழி :

பயத்தை வெல்ல விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது . வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி


பொது அறிவு :

01.உலகின் மிக நீளமான நீர்ப்பாசன கால்வாய் எது?

இந்திரா காந்தி கால்வாய் - இந்தியா

Indira Gandhi Canal - India

02.தாவரங்களின் மிக நுண்ணிய  வளர்ச்சியைக் கண்டறியவும், அளவிடவும் உதவும் முக்கியக் கருவி  எது?

கிரெஸ்கோகிராஃப் -Crescograph


English words :

Passed out -became unconscious

Passed away-died


தமிழ் இலக்கணம்:

சின்னத்தம்பி
சின்னதம்பி
இந்த இரண்டில் எது சரி? வல்லினம் மிகுமா மிகாதா என்று காண்போம் வாருங்கள்.
பிரித்து பார்ப்போம்.
சின்னத்தம்பி = சின்னம்+ தம்பி
இதன் பொருள் சின்னம் உடைய தம்பி. அப்படி ஒரு சொல் கிடையாது.
அடுத்த சொல்லைப் பார்ப்போம்
சின்னதம்பி = சின்ன+ தம்பி.
இதன் பொருள் சிறிய தம்பி எனவே
*சின்னதம்பி* என்பதே சரியான சொல் ஆகும்.
......தொடரும்


அறிவியல் களஞ்சியம் :

2020 ஆம் ஆண்டு முதல், பூமி அதன் சொந்த சுழற்சி வேக சாதனைகளை மீண்டும் மீண்டும் உடைத்து வருகிறது. 2024, ஜூலை 5, அன்று, பூமி வழக்கத்தைவிட 1.66 மில்லி வினாடிகள் வேகமாக சுழன்றது, இதுவே இதுவரை அளக்கப்பட்ட  எல்லா காலத்திற்குமான குறுகிய நாள். 2024 ஜூலை 9 அன்று 1.36 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும், ஜூலை 22 அன்று  1.34 மில்லி வினாடிகள் குறைவான நேரத்திலும் பூமி சுழன்றது என்று அறியப்பட்டது


மார்ச் 02

சரோஜினி நாயுடு அவர்களின் நினைவு நாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.


நீதிக்கதை

அதி புத்திசாலிகள்!

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.

நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.

குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் மரம் வெட்டுவற்காகத் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர்.

காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து இதற்கு என்ன வழியென்று சிந்தித்தனர். அவர்களில் ஒரு அறிவாளி, இந்த மரத்தின் கிளையைப் பிடித்து தொங்குகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடைய காலைப் பிடித்து தொங்குங்கள். அப்படி தொங்கினால் மரக்கிளை வளைந்து ஒடிந்து விழும். நாம் அதை எடுத்துச் சென்று வீடு கட்டலாம் என்றான். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த அறிவாளி சொன்னது போலவே செய்தனர். மரக்கிளை ஒடிந்து கீழே விழும் நேரத்தில் முதலில் மரக்கிளையைப் பிடித்து தொங்கிய அறிவாளியின் கை வழுக்கியது. கை வழுக்கி அனைவரும் கீழே விழுந்தனர். மரக்கிளை முன்பு இருந்தது போலவே நீளாமாக ஆனது.

அவர்கள் அனைவரும் மீண்டும் கூடி அமர்ந்து சிந்தித்தனர். அவர்களில் ஒருவன் அப்போது நல்ல படியாகச் சிந்தித்தான். அவன் சொன்னான். நண்பர்களே, நாம் திரும்பிச் சென்று, வழியில் போட்டுவிட்டு வந்த கோடாரிகளை மீண்டும் எடுத்து வரலாம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை! என்றான். அவ்வாறு அவர்கள் சென்று தங்கள் கோடாரிகளுடன் திரும்பி வந்தனர். தேவையான மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு கிராமத்துக்குச் சென்றனர். தங்களது புத்திசாலித்தனத்தை நினைத்து தங்களை தாங்களே மிகவும் பாராட்டிக் கொண்டனர்.


இன்றைய செய்திகள்

02.03.2026

⭐ தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. தமிழ்நாட்டில் 8.07 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

⭐ வர்த்தகம், முதலீடு, கல்வி, உற்பத்தி, கலாச்சாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் மற்றும் AI உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன.

⭐அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்க ராணுவம் இஸ்ரேலியப் படைகளுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் ஆரம்பித்துள்ளது

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சூப்பர் 8 சுற்று: கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.


Today's Headlines

⭐ The 12th standard public examination in Tamilnadu begins today. 8.07 lakh students in Tamilnadu are going to write the 12th standard public examination.

⭐ India and Israel have signed a total of 17 agreements and documents to provide cooperation in several areas including trade, investment, education, manufacturing, culture, maritime heritage, agriculture and AI.

⭐The US military has launched an attack on Iran in conjunction with Israeli forces after talks between the US and Iran in Geneva failed

*SPORTS NEWS*

🏀Super 8 round: South Africa easily beat Zimbabwe in the final match.


March 2026 - School Calendar


மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி


March 2026 - School Calendar - Revised 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மார்ச் - 2026 நாள்காட்டி:


மார்ச் 2 - திங்கள் - +2 தேர்வு ஆரம்பம்


மார்ச் 7 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.


மார்ச் 11 - புதன் - 10ஆம் வகுப்பு தேர்வு ஆரம்பம்


மார்ச் 26 - வியாழன் - +2 தேர்வுகள் முடிவு.


ஏப்ரல்  6 -திங்கள் - 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவு.


💥 அரசு விடுமுறை நாள்கள்:


மார்ச் 19  - வியாழன் - தெலுங்கு வருடப்பிறப்பு


மார்ச் 21 - சனி -  ரம்ஜான்


மார்ச் -31 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி


💥 RL & RH:


02.03.2026 - திங்கள் - மாசிமகம்


04.03.2026 -  புதன் - பகவான் வைகுண்டசாமி அவதாரதினம்


16-03-2026  - திங்கள் - ஷபேகாதர்


---- 


முன்னதாக வெளியிடப்பட்ட நாட்காட்டி 

மார்ச் 2026 மாத பள்ளி நாட்காட்டி - 19.03.2026 தெலுங்கு வருடப் பிறப்பு 20.03.2026 என்று தவறுதலாக உள்ளது - இணைப்பு: 2026ஆம் ஆண்டின் பொது விடுமுறை அரசாணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை - தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் அறிவிப்பு



Tension in Gulf countries - Tamil Nadu government announces helpline numbers


தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் அறிவிப்பு


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  


மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது


தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது.


போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம்.


மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 

011-24193300 (Land line)

92895 16712 (Mobile Number with Whatsapp)


அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:

இந்தியாவிற்குள் – 1800 309 3793

வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call)

தொடர்புக்கு – +91 80 6900 9901


–  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEOs) பணியிட மாறுதல் - இயக்குநர் உத்தரவு

 

4 DEOs Transfer - DSE Proceedings 


மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் 27-02-2026


நிருவாக நலன் கருதி 4 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (District Education Officers) பணியிட மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Government Aided School - B.T. Assistant Vacancies

 

 அரசு உதவி பெறும் பள்ளி - பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் - வேலைவாய்ப்புகள்


Government Aided School - Graduate Teacher Vacancies - Job Notification 


நிரந்தர ஆசிரியர்கள் தேவை


ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)


பணியிடம்


1) பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) 

SC - 01

B.Sc., B.Ed., TET Paper-II (கணிதம்)


2) பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)

MBC/DNC - 01

B.A., B.Ed., TET Paper-II (ஆங்கிலம்)


அரசு விதிகளின்படி


தகுதியுடைய பணிநாடுநர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் உரிய அசல் கல்விச்சான்றுகளுடன் கலந்து கொள்ளவும்.


செயலர்

ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி

மயிலாடும்பாறை-625579, ஆண்டிப்பட்டி வட்டம், தேனி மாவட்டம்.



அரசுப் பள்ளிகளில் இன்று (02-03-2026) முதல் மாணவா் சோ்க்கை (Admission) தொடக்கம்

 

 

அரசுப் பள்ளிகளில் இன்று (02-03-2026) முதல் மாணவா் சோ்க்கை (Admission) தொடக்கம்


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) முதல் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 52 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனா். அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது.


மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2024-ஆம் ஆண்டுமுதல் மாணவா் சோ்க்கை முன்கூட்டியே மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரவலாக பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன


அதேபோல், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விழிப்புணா்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவா் சோ்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


வருமான வரி (Income Tax) குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் விளக்கம்



வருமான வரி குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் விளக்கம்


SMS From TN Treasury


Sir / Madam, 

As per the Income Tax Act, the "New Regime" is the default tax regime for FY 2026-27. If you wish to opt for the Old Regime, please do so on or before 13.03.2026 through the Kalanjiyam mobile app or website. Once exercised, the option will be final. - TN Treasury 


அடுத்த நிதியாண்டுக்கு வருமான வரி தேர்வு செய்யும் வசதி களஞ்சியம் செயலியில் தற்போது தரப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் OLD REGIME என தவறாக தேர்வு செய்தவர்கள் அடுத்த நிதியாண்டுக்கு சரியாக தேர்வு செய்யவும். கடைசி தேதி - 13/03/2026


* வருமான வரிச் சட்டத்தின்படி, "புதிய வரி6 முறை" என்பது 2026-27 நிதியாண்டிற்கான இயல்புநிலை வரி முறையாகும்.


* நீங்கள் பழைய வரி முறையைத் தேர்வுசெய்ய விரும்பினால், 13.03.2026 அன்று அல்லது அதற்கு முன் களஞ்சியம் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் அவ்வாறு செய்யுங்கள். ஒருமுறை தேர்வு செய்யும் விருப்பமே (Old / New Regime) இறுதியானதாக இருக்கும். - தமிழ்நாடு கருவூலம்


அதாவது பழைய வருமான வரி செலுத்தும் முறையை (Old Regime) தேர்வு செய்பவர்கள் மட்டும் அதற்கான விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு புதிய முறை தானாகவே தேர்வு செய்யப்பட்டு விடும்.


பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து செய்தி


 பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து செய்தி


பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்


வாழ்த்து செய்தி


தமிழ்நாட்டில் மாணவச் செல்வங்களுக்கான மேல்நிலைப் பொதுத் தேர்வு 02.03.2026 அன்று முதலும். பத்தாம் வகுப்புத் பொதுத்தேர்வு 11.03.2026 அன்று முதலும் தொடங்க இருக்கிறது. மேல்நிலைத் தேர்வை 7,99,692 மாணவ மாணவியரும் பத்தாம் வகுப்புத் தேர்வை 8,82,806 மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர். 


உயர்கல்வியே எங்கள் இலக்கு என்னும் உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து உங்கள் குறிக்கோளின் நுழைவு வாயிலான மேல்நிலை / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய்ப் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது.


"என்னால் முடியும்" என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவையில்லை. தேர்வுகளை முனைப்புடனும், முழு கவனத்துடனும் எழுதுங்கள். இக்காலத்தில் உங்கள் உடல் நலனும் மன நலனும் மிகவும் அவசியமானது. சத்தான உணவும். போதுமான தூக்கமும், மன அமைதியும் தேர்வுகளை எதிர்கொள்ளத் துணை நிற்கும். நம்பிக்கையோடும். மகிழ்ச்சியோடும். பதற்றமின்றியும் தேர்வை அணுகுங்கள். உங்கள் இலட்சியப் பாதையில் சிறிது தளர்ச்சி வந்தாலும் பதற்றமின்றி முயற்சி செய்யுங்கள்.


உழைப்பிற்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருவருக்குமான வாய்ப்பு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உயர் கல்வி இலக்கினை அடைய புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற சிறப்பான திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அன்புக் குழந்தைகளே! மனவலிமையும், விடாமுயற்சியும். கடின உழைப்பும் உங்கள் வெற்றிப்பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்கள் உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சி. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள்!




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...