கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 


 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நீக்கம் செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 


நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை முழுமையாக உறுதி செய்துள்ளது.


இந்த வழக்கின் முக்கிய விவரங்கள்:

முறைகேடு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி 54 இளநிலை உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.


நீதிமன்ற உத்தரவு: இந்த நியமனங்கள் சட்டவிரோதம் எனக்கூறி, பணி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


உச்சநீதிமன்ற தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பணி இழந்தவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்:


தேர்வுச் செயல்முறையில் நடந்த கடுமையான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, 2021-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 440 விண்ணப்பங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டு, ஒரே இரவில் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனிதாபிமான அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களைப் பணியில் தக்கவைக்கக் கோரிய மனுவை நிராகரித்தது.


2021-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியால் பணியமர்த்தப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 440 விண்ணப்பதாரர்களை ஒரே இரவில் எவ்வாறு பரிசீலித்து ஒப்புதல் அளித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியது.


நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆள்சேர்ப்பு செயல்முறையின் மின்னல் வேகத்தைக் கேள்விக்குட்படுத்தி, அதனை வன்மையாகக் கண்டித்தது.


"நீதிபதிகளாகிய எங்களுக்கே, தினமும் எங்கள் முன் பட்டியலிடப்படும் 65 வழக்குகளை முழுமையாகப் படிக்கப் போதுமான நேரம் இல்லை என்றால், உங்களால் எப்படி ஒரே இரவில் 440 விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து நியமனக் கடிதங்களை வழங்க முடிந்தது?" என்று நீதிபதிகள் அமர்வு கேட்டது.


முன்னணி தேசிய நாளிதழ்களில் வெளியிடுவதற்குப் பதிலாக, மின்னிதழ் மூலம் மட்டுமே காலிப்பணியிடங்களை விளம்பரப்படுத்தியதற்காகவும் நீதிமன்றம் அந்த நிறுவனத்தைக் கண்டித்தது.


மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்ட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் வி.வி. கிரி கோரிக்கை விடுத்தபோதிலும், சட்டவிரோத நியமனம் பெற்றவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று கூறி, நீதிபதி அமர்வு அந்தக் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தது.


வழக்கின் தோற்றம்

இந்த சர்ச்சை, எஸ்.பி.வேலுமணி அதிமுக அரசின் கீழ் நகராட்சி நிர்வாக அமைச்சராகப் பணியாற்றிய 2021-ஆம் ஆண்டுக்கு உட்பட்டது.


கோயம்புத்தூர் மாநகராட்சி 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அழைத்திருந்தது. விண்ணப்பித்த 654 பேரில், 440 பேர் சான்றித சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதன் விளைவாக, 54 பேர் நியமிக்கப்பட்டனர்.


பணிக்கு தேர்ந்தெடுக்கப்படாத,  தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், ஈஸ்வரி என்ற ஊழியரின் தலைமையில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். மாநகராட்சி நிர்வாகம், நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு விதிகளை மீறியதாகவும், முறையான பொது விளம்பரங்களை வெளியிடத் தவறியதாகவும், மேலும் எழுத்துத் தேர்வுகள் அல்லது முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழு இல்லாமல் "பின்வாசல்" வழியாக நியமனங்களை நடத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


ஆரம்பத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தபோதிலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு 18 ஜூன் 2026 அன்று அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து , அனைத்து 54 நியமனங்களையும் “சட்டவிரோதமானவை மற்றும் மோசடியானவை” எனக் கூறி ரத்து செய்ததுடன், பொறுப்பான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.


பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பின்னர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.



தமிழ்நாடு அரசுக்கு TETOJAC கோரிக்கைகள்



தமிழ்நாடு அரசுக்கு டிட்டோஜாக் பேரமைப்பு முன் வைக்கும் கோரிக்கைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டிட்டோஜாக் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் சந்திப்பு



*1. அ) 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற சில மாநிலங்களைப் போல் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்திட வேண்டும்.*


*ஆ) தேர்வு எழுதிய பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, அவர்களது பணி அனுபவத்திற்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*இ) தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு அவர்களது உயர்கல்வித் தகுதிக்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*ஈ) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடத்திட்டத்தைத் தாண்டி கேட்கப்பட்ட சம்பந்தமில்லாத வினாக்களுக்குரிய மதிப்பெண்களை அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும்.*


*2. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.*


*3. இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*4. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 1,76,000 ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் பிரிவு 23ல் திருத்தம் செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.*


*5.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.*


*6. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய அட்டவணையில் (Pay Matrix) Level -10க்கான Cell-45 உடன் முடிவடைந்து விட்ட நிலையில் வருடாந்திர ஊதிய உயர்வு பெற முடியாமல் இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் மிகக் கடுமையான ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குஇது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, ஊதிய அட்டவணையில் Level-10க்கு கூடுதல் கலங்களை உருவாக்கி Cell-45 லிருந்து Cell-50 வரை நீட்டித்து உரிய ஆணை வெளியிட வேண்டும்.*


*7. தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து வழங்கிய, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*8. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தொகுப்பூதிய நியமனங்கள் கூடாது.*


*9. அரசாணை எண்: 23 நிதி (ஊதியப் பிரிவு) துறை, நாள்: 12.01.2011ன் படி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் ரூ.5400- மற்றும் சிறப்பு நிலைக்குப் பெற்ற தர ஊதிய ரூ.5700- ஆகியவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் தணிக்கைப் பிரிவு விதித்துள்ள தவறான தணிக்கைத் தடைகளின் மீது பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்து 1500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பணப் பலன்கள் பெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும்.*


*10.(அ) பி.லிட் தகுதி பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.எட் உயர் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடையால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இலட்சக்கணக்கில் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக தவறான இத்தணிக்கைத் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.*


*(ஆ) அரசாணைகளின்படி M.com; B.Ed மற்றும் M.A (பொருளாதாரம்) ஆகிய உயர் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து விதிகளுக்குப் புறம்பாக, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணையை ரத்து செய்திட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.*


*11.அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றிப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும்.*


*12.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.*


*13.நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் விலக்கு அளித்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கேரள மாநில அரசு வழங்கியுள்ளதுபோல் 10 நாட்கள் தற்செயல் விடுப்பு அல்லது 20 அரைநாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கிட வேண்டும்.*


*இப்படிக்கு*


*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்*


நம் வீட்டிற்கு நாமே சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யும் வழிமுறை



நம் வீட்டிற்கு நாமே சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யும் வழிமுறை 


நம்முடைய Phone Number மூலம் எப்படி செய்வது?


 இந்த காணொளியில் தெளிவாக இருக்கிறது



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் 





அனைவரும் தெரிந்து கொள்ள 


அனைத்து நண்பர்களுக்கும் 

 

அனைத்து குழுக்களுக்கும் 

Share செய்யவும்


இங்கு பதிவு செய்து முடித்த பிறகு 

கடைசியாக  SE ID வரும் 


Self Enumaraion ID

இதை மட்டும் 

உங்கள் வீட்டிற்கு மக்கள் தொகை கணக்கு எடுக்க வருபவரிடம் நீங்கள் சொன்னால் போதும்


33 கேள்விகளுக்கும் பதில்  அதில் இருக்கும். அவர் உடனே நன்றி சொல்லி விட்டு சென்று விடுவார்


Census 

Online Registration 

From July 17 to Last Date: July 31.


https://se.census.gov.in/



TAPS | Interim Pay Out வழங்குதல் | IFHRMSல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்



 தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) - இடைக்கால நிவாரணம் (Interim Pay Out) வழங்குதல் - IFHRMSல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் | Where is the Friend's House? | Movie Link

 


ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம்

"Where is the Friend's House?"

Movie Link 

👇👇👇


https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard



Census 2027 | Instruction Manual for House-listing and Housing Census

 


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027


வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரைக் கையேடு Guide 


Census of India 2027 | Instruction Manual for House-listing and Housing Census


Census 2027 Handbook 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


CMBFS - DEE instructions to all School HMs



 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள் 


CMBFS - DEE instructions to all School HMs


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை.6


முன்னிலை : முனைவர் பூ.ஆ.நரேஷ்


ந.க.எண் . 012531/கே2/2026, நாள்: 13.07.2026


பொருள்:


தொடக்கக் கல்வி - முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை உணவு வழங்கப்படாதது தொடர்பாக பத்திரிக்கை செய்தி வரப்பெற்றது - அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குவது - சார்பாக,


பார்வை:


சமூக நல இயக்குநரின் கடிதம், ந.க.எண்.2981885/சஉதி2(1)/2026, நாள் : 25.06.2026


பார்வையில் காணும் சமூக நல இயக்குநரின் கடிதத்தில் தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19.06.2026 அன்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால், அதற்கு மாற்றாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது எனவும்,


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் சத்தான காலை உணவை உட்கொண்டு வகுப்பினை ஆரோக்கியமாகத் தொடங்குவதையும், ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் கவனச் சிதறலைத் தவிர்த்து சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திட்டத்தின் செயல்பாட்டில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு தங்கள் துறையின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அளவு எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு, அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநருக்காக



பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:449

குறள்:

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

பொருள்:

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.


பழமொழி :

East or west, home is best.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :

நல்ல எண்ணங்களே நல்ல வாழ்க்கையின் அடித்தளம்.


Thought for the Day :

Time is precious. Use it wisely.


பொது அறிவு :

1. மனித உடலின் மிக நீளமான எலும்பு எது?

தொடை எலும்பு (பீமர் எலும்பு)

2. மனித உடலின் மிக சிறிய எலும்பு எது?

உட்செவி எலும்பு (அங்கவடி எலும்பு).


English words :

Determine - Firmly decide or find out, தீர்மானி.

Magnificent - Extremely beautiful or impressive, பிரமாதமான.


புவியியலும் சுற்றுசூழலும் :

மலைகள் (Mountains) – உயரமான நிலப்பகுதிகள்.
மலைத் தொடர்கள் (Mountain Ranges) – ஒன்றோடொன்று இணைந்த மலைகளின் வரிசை.
பீடபூமிகள் (Plateaus) – உயரமாகவும் சமமாகவும் காணப்படும் நிலப்பகுதிகள்.
சமவெளிகள் (Plains) – தட்டையான, பரந்த நிலப்பகுதிகள்.


NMMS :

MAT

P என்பவர் Q விற்கு சகோதரர். R என்பவர் S ற்கு சகோதரி.Q என்பவர் R ற்கு மகன் எனில், R என்பவர் Pக்கு என்ன உறவு?

(1)தந்தை

(2)தாய்

(3)மருமகன்

(4) மருமகள்

விடை: (2) தாய்


ஜூலை 14
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நினைவுநாள்

மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan),  (24 சூன் 1928 – 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு  பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.


நீதிக்கதை

"கடன் அன்பை முறிக்கும்"

ஒரு சிறிய கிராமத்தில் அருள் மற்றும் யாசின் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்தனர். அவர்கள் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்கள். எந்த வேலையையும் சேர்ந்து செய்வார்கள்.

ஒருநாள் யாசின், "என் தங்கையின் படிப்புச் செலவுக்காக ₹20,000 வேண்டும். ஒரு மாதத்தில் திருப்பித் தருகிறேன்," என்று அருளிடம் கேட்டான்.

நண்பன் என்பதால் அருளும் யோசிக்காமல் பணத்தைக் கொடுத்தான்.

ஒரு மாதம் முடிந்தது. இரண்டு மாதங்களும் கடந்தன. ஆனால் யாசின் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அருள் கேட்டபோதெல்லாம், "இன்னும் கொஞ்ச நாள் பொறு," என்று கூறிக்கொண்டே இருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, கிராமத் திருவிழாவில் இருவரும் சந்தித்தனர். அருள் மீண்டும் பணத்தைப் பற்றி கேட்டான். அதற்கு யாசின் கோபமாக, "பணம் கொடுத்ததாலே என்னை அவமானப்படுத்துகிறாயா?" என்று அனைவரின் முன்னிலும் பேசிவிட்டான்.

அதைப் பார்த்த அருளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பணத்தை விட, பல ஆண்டுகள் இருந்த நட்பு உடைந்ததே அவனுக்கு பெரிய வேதனையாக இருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, யாசின் தனது தவறை உணர்ந்து பணத்தையும் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்டான். ஆனால் உடைந்த நம்பிக்கையை மீண்டும் பழையபடி உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது.

நீதி:

"கடன் வாங்குவது எளிது; அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாதபோது, பணத்தை விட அன்பும் நம்பிக்கையும் முதலில் முறியும்.”


இன்றைய செய்திகள்
14.07.2026

🗒️முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வரும் 16-ந் தேதி நடக்கிறது.இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

🗒️ ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் 73,000
பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

🗒️புதிய வாக்காளர்கள் தங்கள் பெற்றோரின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:  இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம்.

விளையாட்டுச் செய்திகள்

🏀559 குழந்தைகளுக்கு கால்பந்து வீரர் ஹாலண்டின் பெயரை சூட்டிய பெற்றோர்.பெரு நாட்டில் நெகிழ வைக்கும் கால்பந்து பாசம்.

🏀உலகக் கோப்பை கால்பந்து - தங்க ஷூக்கான போட்டியில் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி.

🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 16 பதக்கங்களை குவித்தது இந்தியா, சீனா 52 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.


Today's Headlines:

🗒️ A Cabinet meeting chaired by Chief Minister Vijay will be held on the 16th. Approval for the State Budget is expected to be given during the meeting.

🗒️ It has been reported that 73,000 Smart Ration Cards will be issued across Tamil Nadu by the end of July.

🗒️ New voters must submit their parents' details, clarifies the Election Commission of India.

Sports News

🏀 Parents in Peru have named 559 children after football star Haaland, reflecting the country's deep love for football.

🏀 FIFA World Cup – Intense competition is underway among players in the race for the Golden Boot award.

🏀 Asian Athletics Championships – India won 16 medals, while China topped the medal tally with 52 medals.



Deputation Order issued for teachers to work in government model schools | DSE Proceedings

 



அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கி இணை இயக்குநர் உத்தரவு


Deputation Staff List 2026 - District wise


Order issued for teachers to work on deputation in government model schools - DSE Joint Director's Proceedings 


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், சென்னை-6


ந.க.எண்.31064/டபிள்யு2/இ1/2026, நாள்.13.07.2026


பொருள் : பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணி மற்றும் பணி மாறுதலில் பணிபுரிந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/கணினிப் பயிற்றுநர் நிலை 1 பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றது - மீண்டும் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்ந்து


பார்வை


1. அரசாணை நிலை எண் 176 , பள்ளிக் கல்வித் (பக 5(1)) துறை, நாள் 17.12.2021


2. G.O(Ms)No.138 School Education (SSA1) Department, dated 08.08.2022


3. G.O.(Ms) No.224 School Education (SSA1) Department, dated 23.12.2022.


4. G.O.210, School Education Department, Dated 18.11.2023.


5. சென்னை 06, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிக் குழு உறுப்பினர் செயலாளர் கடிதம் ந.கஎண் 1559/ஆ1/மா.ப/2026 நாள் 09.07.2026.


38 மாவட்டங்களில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டதில். தமிழ்நாடு மாதிரி குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் மற்றும் பணிமாறுதலில் நிரந்தர பணியிடத்தில் பணிபுரிந்து வரும் பட்டியலில் கண்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1ல் உள்ளவர்கள் 08.07.2026 அன்று நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு மாதிரி பள்ளி குழுமத்திலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை தெரிவு செய்து மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். மாதிரிப் பள்ளிகளின் நிர்வாக காரணங்களுக்காகவும், ஏற்கனவே ஆசிரியர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் அவ்வாசிரியர்கள் தொடர்ச்சியாக மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிவது அவசியமாக கருதப்படுகிறது என்பதால் அவரவர் பணியாற்றிய மாதிரிப் பள்ளியில் மாற்றுப் பணியில் பணிபுரிய மாற்றுப்பணி புரிதலுக்கான ஆணை (Deputation Order) வழங்கிடுமாறு பார்வை (5)ல் காண் கடிதம் வாயிலாக கோரப்பட்டுள்ளது.


எனவே பார்வை (5)ல் காண் கடிதத்துடன் பெறப்பட்ட 91 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1 ஆசிரியர்களும் 08.07.2026 ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்று சார்ந்த பள்ளியில் பணியேற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பணிபுரியவில்லை என்பதை உறுதி செய்த பின்பு, அவ்வாசிரியர்களுக்கு தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மறு உத்தரவு வரும்வரை மாற்றுப்பணியில் பணிபுரிதல் பொருட்டு பணிவிடுவிப்பாணை வழங்கிடுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப் பணிக்கு செல்வதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியை தொடர பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அதற்கான ஊதியம் மாதிரிப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்றும் மாதிரிப் பள்ளிகள் குழும உறுப்பினர் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் பட்டியலில் கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/ கணினி பயிற்றுநர் நிலை 1 பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்ற அறிக்கையினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு : முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)


பெறுநர் சார்ந்த ஆசிரியர்கள் (உரிய வழியாக)


நகல் 

1. சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வாயிலாக)

2. சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் (முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக) 

3. உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமம், சென்னை-6 (தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)



மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தேசிய நல்லாசிரியர் விருது NTA 2026 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



தேசிய நல்லாசிரியர் விருது National Teachers' Awards 2026 - விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 6


ந.க. எண். 035316/ஐ/இ1/2026, நாள். 13.07.2026


பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்


பொருள்


பள்ளிக் கல்வி விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கால தேசிய நல்லாசிரியர் விருது 2026 அவகாசம் நீடித்து வழங்குதல் - தொடர்பாக


பார்வை


1. Joint Secretary (Inst. & Trng.), Ministry of Education, Department of School Education & Literacy New Delhi, D.O.No.1-13/2026-NAT, Dated.15.06.2026


2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 035316/9/1/2026, न. 18.06.2026.


3. Director, Government of India, Ministry of Education, Department of School Education and Literacy, New Delhi, Lr.No.1-3/2026-NAT, Dated 10.07.2026


பார்வை 1 மற்றும் 2-ல் காணும் கடிதத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான விண்ணப்பத்தினை http://nationalawardstoteachers.education.gov.in ஆசிரியர்களின் என்ற  இணையதளம் வாயிலாக 13.07.2026க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து 21.07.2026க்குள் இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை முடித்திட தெரிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது பார்வை 3-ல் கண்ட அரசுக் கடிதத்தில் 2026ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக முழுமையாக பதிவேற்றம் செய்ய 17.07.2026ம் தேதிவரையும், மாவட்ட அளவில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை 21.07.2026 முதல் 26.07.2026க்குள் முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, எனவே இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் பணியினை துரிதப்படுத்துமாறும், குறிப்பாக கன்னியாகுமரி. நாமக்கல், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு ஆசிரியர் கூட முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதால் இம்மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் இதன்மீது தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர்கள் முழுமையாக விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் முழுமையான அளவில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையினை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிப்பதுடன், பிற மாவட்டங்களில் பகுதியாக விண்ணப்பப் பதிவேற்றம் செய்துள்ள ஆசிரியர்களை முழுமையான அளவில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தேர்வுக்குழு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக்குழுவிற்கு அனுப்பும் பணியினை 26.07.2026 மாலை 5.00 மணிக்குள் முடித்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு - பார்வை 3-ல் காணும் கடித நகல்


பள்ளிக்கல்வி இயக்குநர்


பெறுநர்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்



மாவட்ட வாரியாக விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் விவரம்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

   54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் முறைகேடாக நியமி...