கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-06-2026

 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:423

குறள்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:
எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌,கேட்டவாறே கொள்ளாமல்‌,அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌.


பழமொழி :

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

Faith is the force of life.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.


2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

"வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியுமல்ல."


Thought for the Day :

"Responsibility is not a burden. It is an opportunity to prove your character."


பொது அறிவு :

1. தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஜுலை 18.

2. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் யார்?

உயர்திரு. ராஜ்மோகன் அவர்கள்.


English words :

Avenue - a road bordered by houses or trees, அழகான தெரு.

Believe - regard as true, நம்பு


NMMS :

அடுத்த உறுப்பைக் கண்டுபிடி:- 4,9,19,39,___

(1)59         (2)69         (3) 79         (4) 74

விடை :    (3) 79


புவியியலும் சுற்றுசூழலும் :

பூமி சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகும்.
உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரே கோள் பூமி ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% நீரும் 29% நிலமும் உள்ளன.


ஜூன் 08
உலகப் பெருங்கடல்கள் நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது. அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை

  “சிறிய துளி, பெரிய பலன்”

ஒரு கிராமத்தில் அருண், மீனா என்ற இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அவர்களுடைய ஆசிரியர், “தண்ணீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. அதனால் மழைநீரை சேமிக்க வேண்டும்” என்று கூறினார்.

அருண் அந்தப் பாடத்தை கவனமாகக் கேட்டான். வீட்டிற்குச் சென்று, அப்பாவுடன் சேர்ந்து வீட்டின் கூரையிலிருந்து வரும் மழைநீரை ஒரு தொட்டியில் சேமிக்கும் ஏற்பாடு செய்தான்.

ஆனால் மீனா, “மழை வந்தால் தண்ணீர் தானே கிடைக்கும்! இதற்கெல்லாம் என்ன அவசியம்?” என்று நினைத்தாள்.

சில மாதங்கள் கழித்து கோடைக்காலம் வந்தது. கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் குடிநீருக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அருணின் வீட்டில் சேமித்திருந்த மழைநீர் இருந்ததால் அவர்களுக்கு சிரமம் இல்லை.

அதைப் பார்த்த மீனா, “நானும் மழைநீரை சேமித்திருக்க வேண்டும்!” என்று உணர்ந்தாள். அடுத்த மழைக்காலத்தில் அவளும் மழைநீர் சேமிப்பு முறையை அமைத்தாள்.

அதன் பிறகு அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மழைநீரை சேமிக்கத் தொடங்கினர். கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறைந்தது.

நீதி:

💧 “மழைநீரை சேமிப்போம்; நாளைய தண்ணீர் தேவையை பாதுகாப்போம்.”

💧 “சிறு துளி சேர்ந்து பெரிய செல்வமாகும்.”


இன்றைய செய்திகள்
08.06.2026

🗒️ தமிழக சிங்கப் பெண் படை. ஜூன் 9 ல் தொடங்கி வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

🗒️உலகளவில் இந்தியாவில்  தான்  சமையல் எரிவாயு விலை குறைவு மத்திய அரசு அறிவிப்பு .

🗒️ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்கப்படும் என  வடகொரியா உறுதி.

விளையாட்டு செய்திகள்

🏀தெற்காசிய பெண்கள் கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

🏀ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற  தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் அமைச்சர் விஜய் வாழ்த்து.


Today's Headlines

🗒️ The Tamil Nadu government has announced that the Tamil Nadu Singa Penn Force will be launched on June 9.

🗒️ The Central Government has stated that India has the lowest cooking gas (LPG) prices in the world.

🗒️ North Korea has pledged to increase its missile production by 2.5 times.

Sports News

🏀 South Asian Women's Football Championship: The Indian team won the trophy.

🏀 Tamil Nadu chess player Savitha Shri, who won a gold medal at the Asian Chess Championship, was congratulated by Chief Minister Vijay.


TNSED Schools App New Version: 0.4.3 - Updated on 05-06-2026




தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

TNSED Schools App New Version: 0.4.3 - Updated on 05-06-2026 - Application Enhancements and Performance improvements have been implemented



* TNSED Schools App


* What's is new..?



🎯 Added enhancements to the Uniform


📍Noon Meal, and Breakfast Schemes module


UPDATED ON  05 June 2026

Version: Now 0.4.3


Link:




Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 123 பேருக்கு பாதிப்பு - பரவும் வழிகள், தடுப்பு முறைகள்

 


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 123 பேருக்கு பாதிப்பு - பரவும் வழிகள், தடுப்பு முறைகள்


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து மூன்று சிறுமிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறுமிகள் குணமடைந்துள்ளனர் . ஒரு சிறுமி உயிர் இழந்துள்ளார் என கேரள மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் திருமுருளிதரன் தெரிவித்துள்ளார்.


ஷிகெல்லா நோய்      


 ஷிகெல்லா தொற்று (Shigellosis) என்பது ஷிகெல்லா (Shigella) எனப்படும் பாக்டீரியாவால் குடலில் ஏற்படும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். 

இது கடுமையான வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் கூடிய மலம் மற்றும் வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது.


பரவும் வழிகள்:

அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட நபரின் மலம் படிந்த பொருள்கள், கைகள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.

சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்துவதாலும், நெருங்கிய தொடர்புகளாலும் பரவ வாய்ப்புள்ளது.


அறிகுறிகள்:

கடுமையான வயிற்றுப்போக்கு (மலத்தில் ரத்தம் மற்றும் சளி காணப்படலாம்).

அதிக காய்ச்சல் மற்றும் குளிர்.

தீவிரமான வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு.

குமட்டல் மற்றும் வாந்தி.


பாதுகாப்பு மற்றும் சிகிச்சை:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதைத் (Dehydration) தடுக்க, ORS கரைசல் மற்றும் அதிக நீர் ஆகாரங்கள் கொடுக்க வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி, மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.


தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விவரங்கள்

 


தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டண விவரங்கள்


உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் கட்டணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்


https://tnfeecommittee.com/fees28dirsticts.php


Ventilator சிகிச்சை ஏமாற்று வேலையா?

 


வென்டிலேட்டர் ( Ventilator ) சிகிச்சை ஏமாற்று வேலையா? 


நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று - வெண்டிலேட்டர்  சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. 

வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை. வென்டிலேட்டர் சிகிச்சை  வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற சிகிச்சை என்றும், 

இன்னும் சில திரைப்படங்களில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இறந்தவர்களை வைத்தும் போலியாக நாடகமாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டமையால் அந்த சிகிச்சை குறித்து பல அவநம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றது. அவற்றை  க் களைவதே இன்றைய கட்டுரையின் பணியாகும். 


வெண்டிலேட்டர் எப்படி செயல்படுகிறது? 


பொதுவாக ஒரு அறைக்குள் புதிய காற்று உள்ளே வந்து,  பழைய காற்று வெளியே செல்வதை "வென்டிலேசன்"( காற்று சுழற்சி) என்று கூறக் கேட்டிருப்போம். இதைப் போன்றே நமது உடலிலும் 

ஆக்சிஜன் நிரம்பிய புதிய காற்று உள்ளே வந்து, கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய பழைய காற்று வெளியே செல்வது நம் உயிர் வாழ்வுக்குத் தேவையான முக்கியமான காற்று சுழற்சியாகும். 


நமது உடலில் காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் ஏற்றுவதும், 

ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதும் என ஒரு ஓய்வறியா சலவைக்காரரின் பணியைச் செய்பவை நமது நுரையீரல்கள்.


இந்த நுரையீரல்கள் செவ்வனே அதன் பணியைச் செய்வதற்கு 

இரண்டு விஷயங்கள் தேவை. 


முதல் விஷயம் 

காற்று உள்சென்று வெளியேறத் தேவையான  தங்குதடையற்ற சுவாசப்பாதை 


இரண்டாவது விஷயம் 

நுரையீரல் காற்றை உள்ளே இழுக்கவும் வெளி விடவும்,  உதரவிதானம் மற்றும் நெஞ்சாங்கூட்டுத் தசைகளின் இயக்கம் இன்றியமையாத தேவையாகிறது. 


பல நேரங்களில், நுரையீரலில் ஏற்பட்ட நிமோனியா போன் கொடுந்தொற்றுகளின் காரணமாக, அதன் இயக்கம் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ரத்தத்தின் ஆக்சிஜன் ஏற்றப்படுவது முறையாக நடக்காமல் போகும். 


நுரையீரலில் நீர் தேங்குதல், தீவிர ஆஸ்துமா நிலை, மஸ்குலார் டிஸ்ட்ரோபி போன்ற தசைகளின் செயலிழப்பை ஏற்படுத்தும் நோய்கள், 

இதய செயல் முடக்கம், சுவாச செயல் முடக்கம், 

அறுவை சிகிச்சைகள், சுவாசப்பாதையில் ஏதேனும் பொருள் சிக்கிக் கொள்ளுதல்,  நினைவு மங்கி மூர்ச்சை நிலைக்குச் செல்வது என்று பல காரணங்களினால் சுவாசித்தல் என்பது இயற்கையாக நிகழாமல் போகின்றது. 


இந்நிலையில் உடனடியாக சி.பி.ஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) எனும் இதய சுவாச செயல் மீட்பு முதலுதவியைச் செய்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உடனடியாக அவரது உயிரைக் காக்கும்

உன்னத சிகிச்சையாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படுகின்றன. 


வென்டிலேட்டர் என்பது 

உதரவிதானமும் நெஞ்சாங்கூட்டு தசைகளும் செய்த வேலையான காற்று உள்ளிளுத்து வெளிவிடும் காற்று சுழற்சிக்கு செயற்கையான முறையில் உதவுகின்றன.


வென்டிலேட்டரில் போட்டு விட்டாலே கதை முடிந்தது என்று பரப்பப்படும் கட்டுக் கதைகளை நம்ப வேண்டியதில்லை. 


தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் செயற்கை சுவாசக் கருவிகளில் பொருத்தப்படும் பயனாளிகளில் பெரும்பான்மையினர் விரைவில் நலம் பெற்று தங்களது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வீடு திரும்புகின்றனர் என்பதே உண்மை. 


நுரையீரல் இயற்கையாக சுவாசிக்கும் திறனைப் பெறுமட்டும், தற்காலிகமாக அதன் இயக்கு தசைகளுக்கு ஓய்வு வழங்கும் பணியை மட்டுமே வென்டிலேட்டர் செய்கிறது. 


எனவே, இறந்த ஒரு நபரை வென்டிலேட்டரில் போலியாகப் பொருத்தி வைப்பது என்பது இயலாத காரியமாகும்.


வென்டிலேட்டரால் 

இதயத்தை துடிக்கச் செய்யவோ, 

நுரையீரல் மூலம் நிகழும் ஆக்சிஜன்- கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றத்தையோ செய்ய இயலாது. 

எனவே, உயிருடன் இருக்கும் நபர்களுக்கு அதிலும் வென்டிலேட்டர் உதவியுடன் மீண்டு வருவார் என்ற நிலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. 


இறந்த ஒரு உடல் அடுத்த சில மணிநேரங்களில் ரைகர் மார்டிஸ் என்ற விரைத்துக் கொள்ளும் நிலையை அடையும். இந்த சூழ்நிலையில், இறந்த உடலுக்கு வென்டிலேட்டர் பொருத்துவது இயலாத காரியம். எனவே, திரைப்படங்களில் காட்சியின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு எடுக்கப்படும் காட்சிகளை நம்பி உயிர்காக்கும் வென்டிலேட்டர் சிகிச்சையை மறுத்துவிடக்கூடாது. 


வென்டிலேட்டரைச் சுற்றியுள்ள அடுத்த மூடநம்பிக்கை - வென்டிலேட்டரில் போடப்பட்ட நபர் அதிலிருந்து வெளியே வருவது கடினம் என்பதாகும். 

உண்மையில், மயக்க மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது, ஒருவரை வென்டிலேட்டரில் பொருத்தும் போதே அவர்களைத் தொடர்ந்து துல்லியமாகக் கண்காணித்து எத்தனை விரைவாகவும் விவேகமாகவும் வென்டிலேட்டரில் இருந்து மறக்கடிப்பது என்பது குறித்தே சிந்திப்பார்கள். 


காற்று உட்புகும் அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்ப, பயனாளியின் தேக முன்னேற்றத்தைப் பொருத்து படிப்படியாகக் குறைத்து வென்டிலேட்டரை நீக்குவார்கள். இதற்குப் பெயர் "வீனிங் (weaning)" மறக்கடித்தல்" என்பதாகும். 

எனவே, தேவையில்லாமல் வென்டிலேட்டரில்  பயனாளியை வைத்திருப்பார்கள் என்ற வதந்தியில் மெய் துளியும் இல்லை. 


அவசிய தேவையின்றி வென்டிலேட்டரில் பயனாளியை வைத்திருக்கும் போது 

வென்டிலேட்டர் பொருத்தியமையால் உண்டாகும் பாதிப்புகள்  ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை சிகிச்சை அளிக்கும் குழு உணர்ந்தே செயலாற்றுகின்றது. 


நுரையீரலில் இருந்து நெஞ்சாங்கூட்டுக்கு காற்றுக் கசிவு ஏற்படுதல் (நிமோ தொராக்ஸ்), நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள், நீண்ட காலம் படுத்தே இருப்பதால் ஏற்படும் முதுகுப்பகுதி அழுத்தக் காயங்கள்,  கால்களின் ஆழ்சிரைகளில் ஏற்படும் ரத்த நாளக்கட்டிகள் ஆகியவற்றில் இருந்து பயனாளியைப் பாதுகாக்கும் பொருட்டு உயிர்காக்கும்  

தேவைக்கு மீறி நீண்ட  நாட்கள்  வென்டிலேட்டர் சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.  


நவீன கால வென்டிலேட்டர்களில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நுரையீரலுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படாத வண்ணம் சரியான அளவில் காற்றின் அளவு மற்றும்  அழுத்தம் நிர்வகிக்கப்படுகிறது. 

தொடர்ந்து வென்டிலேட்டரின் செயல்முறை கண்காணிக்கப்பட்டு பயனாளியின் தேவைக்கு ஏற்ப அதன் இயக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது. 

இதனால் பயனாளிக்குத் தேவையான குறைந்தபட்ச அழுத்தம் மற்றும் அளவில் காற்று சுழற்சி நடந்து நுரையீரலின் நலன் பாதுகாக்கப்படுகிறது.


வென்டிலேட்டர் -  உயிர்காக்கும் நவீன கண்டுபிடிப்பு


போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்காக  "இரும்பு நுரையீரல்" எனும் பெயரில் 1930 களில் இருந்து பயன்பாட்டுக்கு வந்த வென்டிலேட்டர்கள் தற்போது கணினிகள் துணைகொண்டு இயங்கும் தானியங்கி முறையில் நவீனமடைந்துள்ளன. 


கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவற்றின் உயிர்காக்கும் தன்மையைட் கண்கூடக் கண்டோம்.

கோவிட் வைரஸால் ஏற்பட்ட நிமோனியா குணமடையும் வரை பலரின் உயிர்களை உடல்களோடு ஒட்டி வைத்த பெரும் காரியத்தைச் செய்தவை வென்டிலேட்டர்கள். 


வென்டிலேட்டர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு  

உயிர் காக்கும் உன்னத சிகிச்சையை வழங்குகின்றன. எனவே, அவற்றைப் பற்றிய அவதூறுகளை நம்பி, முக்கியமான நேரத்தைத் தாழ்த்தாமல், செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை குறித்து சரியான முடிவெடுப்போம் 


இன்றைய (6.6.2026) இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை. 


நன்றி இந்து தமிழ் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை உயர்வு



வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை உயர்வு


 நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு



தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகளில் (TN School Education Department Service rules) குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள்



தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகளில்  (TN School Education Department Service rules) குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்கள் 


நண்பர்களே வணக்கம் 🙏


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏழு பணித் தொகுதிகளின் சிறப்பு பணி விதிமுறைகள் ( special rules) அடங்கிய அரசிதழ் ( Service rules) 3/6/26 நாளிட்டு வெளி வந்துள்ளது... 

பார்க்க இணைப்பு 


எனது பார்வையில் 

( *மாற்றங்கள் மட்டும்* )


1) High school HM பதவி உயர்வு பெற 

School education Admin test paper 1 & 2 கட்டாயம்.

(TET பற்றிய (தேவை என) குறிப்புகள் இல்லை)


2) High school HM பதவி உயர்வு பெற

Account test for subordinate service test part 1 தேர்ச்சி தேவை என உள்ளது ( முன்பு EO or Account test part 1 என இருந்தது, தற்போது EO missing) ( திருத்தம் வரலாம்)


3) DEO requirement by transfer (promotion) 

( High school HM/ HSS HM to DEO) 

School Ed Admin test paper 1 & 2 தேவை என உள்ளது 

( 30.1.2020 க்கு முன் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விலக்கு) 


4) High school HM/ HSS HM இல் இருந்து DEO வின் போது (40%, 35% )

அதில்

High school HM

HR Sec HM

High school HM

HR sec HM

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படும்...


அதில் ஒருவேளை ஒரு High school HM DEO ஆக விரும்பவில்லை என்றால் அந்த வாய்ப்பு seniority படி அடுத்த High school HM க்கு தான் செல்லும் அவரும் வேண்டாம் எனில் அடுத்த High school HM க்கு செல்லும்...


இதே போல் தான் ஒரு HR Sec HM வேண்டாம் என்றால் அந்த வாய்ப்பு பட்டியலில் உள்ள அடுத்த HSS HM க்கு தான் செல்லும்...


இந்த முறையில் சிறப்பு என்னவென்றால் 15 DEO வாய்ப்பு எனில் அதில் கட்டாயம் 

8 High school HM

7 HR Sec HM 

இடம் பெறுவார்கள்...

யார் relinquish செய்தாலும் 

இந்த ratio maintain ஆகும்...


5) PG appointment

50% direct

50% promotion

அந்த 50% direct இல்

8% SGT or its equivalent from Govt/Municipal/Aided

+ *Graduate Teacher (BT) from Govt/Municipal PUMS*

2% Ministerial staff


அதாவது Govt/Municipal Middle school BT க்கு 8% Direct PG requirements இல் வாய்ப்பு ( Sgt & others உடன் சேர்ந்து) வழங்கப்பட்டுள்ளது இது மட்டுமே புதிது ...

இது பதவி உயர்வு அல்ல... 

நேரடி நியமனத்தில் ஏற்கனவே Sgt க்கு இட ஒதுக்கீடு இருந்தது தற்போது அவர்களுடன் சேர்த்து Elementary Ed Dept BT க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ..

(பதவி உயர்வு அல்ல நேரடி தேர்வில் இட ஒதுக்கீடு மட்டும்)


6) அதேபோல் PG promotion இல் TET குறிப்பிட வில்லை... 


7) RTE act படி 1-8 வகுப்பு கையாளுபவர்களுக்கு மட்டுமே TET needed என உள்ளது ( Middle school HM, BT, Primary HM ஆக பதவி உயர்விற்கு TET must)


8) RTE act வரம்பிற்குள் இல்லாத PGT (BT to PG) ,  High school HM (BT/BEO to HS HM) க்கு பதவி உயர்வில் TET தேவை என்று இல்லை... 


கூடுதல் தகவல்கள்/விவரங்களுக்கு விரைவில்


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மதுரை மாவட்டம்

7/6/26🙏



TN School Education Department Service Rules Reissued - Tamilnadu Government Gazette No. 22, Dated : 03-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





பதிவுத் துறையில் இணையவழியில் “வருகையில்லா ஆவணப்பதிவு” ( Anywhere Registration)



பதிவுத் துறையில் இணையவழியில் “வருகையில்லா ஆவணப்பதிவு” ( Anywhere Registration) விரைவில் கட்டாயமாக்கப்படுகிறது - பதிவுத் துறைத் தலைவர் செய்தி வெளியீடு


Registration Department Press Release No.190



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தண்ணீருக்கு காலாவதி தேதி (Expiry Date) உண்டா?



தண்ணீருக்கு காலாவதி  தேதி (Expiry Date) உண்டா?


    இந்த அருமையான மற்றும் விழிப்புணர்வு ஊட்டும் கருத்தின் தமிழ் மொழியாக்கம் :

* தண்ணீரின் காலாவதி தேதி (Expiry date) என்ன?

பெரும்பாலும், தண்ணீரின் "காலாவதி தேதியை" நாம் நம்முடைய வசதிக்கும் மனநிலைக்கும் ஏற்பவே தீர்மானிக்கிறோம்; அதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்த முரண்பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள்


🚰  நகரங்களில்:

தினமும் குழாயில் தண்ணீர் வரும் இடங்களில், நேற்று பிடித்த தண்ணீர் "பழையது" என்று சொல்லி கீழே ஊற்றப்படுகிறது.

* (காலாவதி தேதி: 1 நாள்)

⏳ 2 முதல் 8 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும் இடங்களில்:

அதே தண்ணீர் இரண்டு முதல் எட்டு நாட்கள் வரை முற்றிலும் புதியதாகவும், குடிப்பதற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

* (காலாவதி தேதி: 2 முதல் 8 நாட்கள்)


🍾 திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில்

ஒரு புதிய பிஸ்லெரி (Bisleri) பாட்டில் திறக்கப்பட்டவுடன், ஏற்கனவே திறந்திருந்த பழைய பாட்டில் உடனடியாக பயனற்றதாகக் கருதப்பட்டு தூக்கி எறியப்படுகிறது.

* (காலாவதி தேதி: சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள்)



 🏜️  மறுபுறம் இருக்கும் நிஜம்

🌵 பாலைவனத்தில்:

பயணத்தின் போது, அடுத்த நீர் ஆதாரம் கிடைக்கும் வரை ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் விலைமதிப்பற்றதாகவும் புதியதாகவும் இருக்கும்.

(காலாவதி தேதி: அடுத்த நீர் ஆதாரம் கிடைக்கும் வரை)


🌧️  இயற்கையில்:

அணைகளிலும் குளங்களிலும் சேமிக்கப்படும் தண்ணீர் அடுத்த பருவமழை வரும் வரை முற்றிலும் பயன்படுத்தக்கூடியதாகவே இருக்கும் — வறட்சி காலங்களில் 2-3 ஆண்டுகள் கூட அது நீடிக்கும்.

(காலாவதி தேதி: பல ஆண்டுகள்)


🕳️ ஆழ்துளை கிணறுகளில் (Borewells):

பூமிக்கு அடியில் 50 முதல் 500 அடிகள் ஆழத்திலிருந்து நாம் எடுக்கும் தண்ணீர் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம், இருப்பினும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் தூய்மையானதாகவும் கருதப்படுகிறது.

(காலாவதி தேதி: நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள், அல்லது என்றென்றைக்கும்)


💡 முடிவுரை (சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து) 💡

உண்மையில், தண்ணீருக்கு காலாவதி தேதி என்று எதுவும் கிடையாது. அதன் "காலாவதி" என்பது நம்முடைய மனநிலை, அதன் இருப்பு மற்றும் அதன் தூய்மை ஆகியவற்றால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்போது அதை 'பழையது' என்கிறோம்; அதுவே பற்றாக்குறை ஏற்படும் போது, அதே தண்ணீர் 'விலைமதிப்பற்றதாக' மாறிவிடுகிறது.


எனவே, தண்ணீரை அறிவுடனும், பொறுப்புடனும், சிக்கனத்துடனும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இயற்கையிடம் தண்ணீர் தீருவதற்கு முன்பாகவே, நமது அலட்சியப் போக்கு நம்மைத் தாகத்தில் தவிக்க விட்டுவிடும்.


 🙏 ஒரு பணிவான வேண்டுகோள்🙏

இது வெறும் செய்தி மட்டுமல்ல, நமது எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஓர் அழைப்பு. விழிப்புணர்வை ஏற்படுத்த தயவுசெய்து இதை உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

💧 நீரின்றி அமையாது உலகு (தண்ணீரே உயிர்) 💧

🌱 நீர் இருந்தால் தான், எதிர்காலம் உண்டு 🌱

ஆரோக்கியமாக இருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்... தண்ணீரைச் சேமியுங்கள்... 🙏🙏🍎



தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் / பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய RTI தீர்ப்பு



தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் /  பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள  வேண்டிய RTI  தீர்ப்பு


✒ அனைத்து தனியார் (மெட்ரிக்) பள்ளிகள் CBSC மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தினை (Fee Structure) பொதுமக்கள் கேட்காமலேயே தங்கள் பள்ளிகளின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் பார்வைக்கு பள்ளியின் விளம்பர பலகையில் விளம்பரம் செய்தும் அனைத்து பள்ளிகளின் இணையதளங்களில் வெளியிடவும் உத்தரவு


✒ தனியார் ( மெட்ரிக்) பள்ளிகள், CBSC மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் வலியை போக்கும்  ஒர் மகத்தான தீர்ப்பு.


✒ பெற்றோர்கள் தங்கள் நிகழ்கால அத்யாவசிய தேவைகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு செலவிடக்கூடிய ஒவ்வொரு காசிலும் பெற்றோரின் உழைப்பும் இரத்தமும், வியர்வையும் தங்கள் பிள்ளைகள் வெல்ல வேண்டும் என்ற பேரவாவும் அடங்கியுள்ளது.


✒ தங்கள் பொருளாதார தகுதியை மீறி  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அளிக்கும் கல்வி கட்டணத்தின் ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர்களுக்கு வெளிப்படை தன்மையோடு கூடிய கணக்கு வழக்குகளை  கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டியது இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அடிப்படையான அவசியமான ஒன்றாகும்.


✒ மாணவர்களின் கல்விக் கட்டணம் என்பது பொது நலன் சார்ந்தது ஆகும்.


✒ மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மிகமிக அவசியமான ஒன்றாகும்.


✒ RTI தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) ல் தகவல் கோரி இரண்டரை ஆண்டுகளாக தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர் 

 RTI  பிரிவு 19(8)(b) -ன்கீழ் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு.


✒உரிய காலத்திற்குள் தகவல் வழங்காத  பொது தகவல் அலுவலர் மீது  பிரிவு 20(2)ன் கீழ்  துறை ரீதியான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான எழுத்து மூலம்  விளக்கம் அளிக்கவும் உத்தரவு..


✒ தகவல் ஆணையத்தின் ஆணையினை சிறிதும் மதிக்காமலும் பொருட்படுத்தாமலும் இருந்த பொது தகவல் அலுவலரை ஆணையம் வன்மையாக  கண்டிக்கிறது.


✒ RTI பிரிவு 19(8XaX2) ன்படி இயக்குநர், (தனியார் பள்ளிகள்) பள்ளிக்கல்வித்துறை சென்னை அவர்களை  பொது தகவல் அலுவலராக நியமிக்க கூடும் எனவும் ஆணையம் எச்சரிக்கின்றது.


✒ மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர். இளம்பரிதி, MA., B.L., M.Phil., அவர்கள்  உத்தரவு 


வழக்கு எண் : 

 

SA 4827/A/2023 &  SA 17794/A/2023 

ஆணை நாள் :  25.05.2026


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

RTIACT2005



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-06-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-06-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக...