கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.0 - Updated on 05-04-2026

 

 

தற்போது TNSED Schools  App-ல் RTE attendance Enhancement added  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது


TNSED Schools App New Version: 0.4.0 - Updated on 05-04-2026 - RTE attendance Enhancement added


* TNSED Schools App


* What's is new..?


🎯 RTE attendance Enhancement added


UPDATED ON  05 April 2026

Version: Now 0.4.0


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis



TNSED Schools app update, செய்தபின் log out செய்து log in செய்தால் மதிப்பெண்கள் பதிவிட முடியும்.



Official app for the teachers by State School Education Department, Tamil Nadu

The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.



>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்... 





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 07.04.2026 

கிழமை:- செவ்வாய் 


திருக்குறள்:

குறள் 732:

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு . 

விளக்க உரை:

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.


பழமொழி :
Believe in yourself and succeed. 

உன்னை நம்பினால்  வெற்றி பெறுவாய்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிவருகின்றன - ஏபிஜே அப்துல் கலாம்


பொது அறிவு :

01. நமது உடலில் ரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் எது?

வைட்டமின் கே-Vitamin K

02. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

அபெர்டீன், ஸ்காட்லாந்து

Aberdeen, Scotland,


English words :

Appraisal - evaluation மதிப்பீடு

Cautious - being careful to avoid risks. எச்சரிக்கை


தமிழ் இலக்கணம்:

ஒரு, ஓர் வரும் இடங்கள் எவை என்று பார்ப்போம்

உயிர் எழுத்துகள் முன் ஓர் வரும்

ஓர் ஆயுதம்

ஓர் அலை

ஓர் ஒட்டகம்

ஓர் ஈ

ஓர் இலை

உயிர்மெய் எழுத்துகள் முன் ஒரு வரும்

ஒரு காகம்

ஒரு மெத்தை

ஒரு சத்திரம்

ஒரு மரம்

ஒரு பழம்


அறிவியல் களஞ்சியம் :

பூமியின் 50% முதல் 80% வரையிலான ஆக்ஸிஜன் கடல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பல்வேறு விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி, தாவர அடிப்படையிலான கடல்வாழ் உயிரினங்களால் நடைபெறுகிறது. கடல்வாழ் பிளாங்க்டன்கள், பாசிகள், கடற்பாசிகள் மற்றும் சில பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


ஏப்ரல் 7

உலக நலவாழ்வு நாள்

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.


வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த நாள் 

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார்.  தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.



நீதிக்கதை

பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் முடியவில்லை . மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றாலும் அந்த எலியை பிடிக்க முடியவில்லை. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...

ஆனால்  இளவரசர்  சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதிசயம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது?  என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?

நீதி:

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்


இன்றைய செய்திகள்

07.04.2026

⭐ "12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியாகும்"

⭐ இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

⭐ இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: புவனேஷ்வர் குமார் சாதனை


Today's Headlines

⭐ “The Class 12 public examination results will be released on May 8.”

⭐ 156 Chinese nationals have been arrested in Sri Lanka for being involved in large-scale international online financial fraud operations.

⭐ Iran has carried out a major drone attack targeting Ben Gurion International Airport in Tel Aviv, Israel.

🏀 Sports News

🏀 Bhuvneshwar Kumar becomes the first fast bowler to take 200 wickets in the Indian Premier League.


சாத்தான்குளம் வழக்கு : 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு

 


சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு


ஆயுள் தண்டனை வழங்கினால் இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு    சாத்தான்குளம் வழக்கு : நீதிமன்றம் தலையிடாவிட்டால் இருவரின் உடல்களுடன் உண்மையும் புதைக்கப்பட்டிருக்கும் - நீதிபதி பரபரப்பு தீர்ப்பு


ஆயுள் தண்டனை வழங்கினால் இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.  சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை அறிவித்ததும் பேனா நுனியை முடித்தார் நீதிபதி முத்துக்குமரன்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.


இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது. இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது.


குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை என்பது குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள்; படித்தவர்கள். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது. பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.


உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்று சொல்வதை ஏற்க முடியாது. தந்தையும் மகனும் நிராயுதபாணியாக இருந்தும் இரவு முழுவதும் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது என்று தெரிவதாக தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



தொடர்ந்து குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 9 காவலர்களுக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என சிபி.ஐ. மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இன்று தண்டனை விவரத்தை அறிவித்தார்.


இதன்படி கைது செய்யப்பட்ட காவலர்கள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இன்று மாலை 5.30 மணியளவில் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்களை அறிவித்தார்.


சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.


ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.


வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 06.04.2026 

கிழமை:- திங்கள் 


திருக்குறள்:

குறள் 731:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

விளக்க உரை:

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.


பழமொழி :
Education is the key to success.

வெற்றிக்கு கல்வியை திறவுகோல்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

ஒருவரை ஒருவர் மன்னிக்க பழகிக்கொள்வோம் .அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும் - லியோ டால்ஸ்டாய்


பொது அறிவு :

01.தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கப்படும் இடம் எது?

கழுகுமலை- தூத்துக்குடி
Kazhugumalai- Thoothukudi

02.இந்தியாவின் தேசிய ரயில் அருங்காட்சியகம் எங்குள்ளது?

புதுடில்லி-New Delhi


English words :

* bluff - to try to make people believe that something is true when it is not.

பொய்யான ஒன்றை மெய்யெனக் கூறி பிறரை ஏய்க்க முயலுதல்

* brackish - about water

containing some salt but not as much as sea water.

கடல்நீர் அளவுக்கு அல்லாது ஓரளவு உப்பு நீரான.


தமிழ் இலக்கணம்:

இன்று நாம் தாவரங்களின் இலைகளின் சரியான தமிழ் சொல் அறிந்து கொள்வோம்

1. ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை

2. அகத்தி, பசலை, முருங்கை - கீரை

3. அருகு, கோரை - புல்

4. நெல், வரகு பிற தானியங்கள் - தாள்

5. மல்லி - தழை

6. சப்பாத்திக் கள்ளி, தாழை - மடல்

7. கரும்பு, நாணல் - தோகை

8. பனை, தென்னை - ஓலை

9. கமுகு (பாக்கு) - கூந்தல்


அறிவியல் களஞ்சியம் :

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்.


நீதிக்கதை

முல்லைக்காட்டு குரங்கு!

முல்லைக்காட்டுக்கு புதிதாக குரங்கு ஒன்று வந்தது. அந்த குரங்கின் பெயர் கிட்டு! அது நிறைய மந்திர வித்தைகளை செய்து காட்டியது.

வெறும் கையை காட்டி, அந்த கையை அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி சர்க்கரையை வரவைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த சர்க்கரையை அனைவருக்கும் கொடுத்தது.

ஒரு பூவை எடுத்து அப்படியே கைகளில் வைத்து கசக்கி தூக்கி வானத்தில் வீசியது. பூ குருவியாக மாறி வானத்தில் பறந்தது. அதைப்பார்த்து முல்லைக்காட்டு முயல்களும், எலிகளும், யானைகளும், மான்களும் ஆச்சர்யப்பட்டன. அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர்.

வித்தைகள் காட்டிக்கொண்டிருந்த குரங்கு திடீரென கூட்டத்தை நோக்கி " உங்கள் தலைவன் யார்?" என்று கேட்டது.

"எங்களுக்கெல்லாம் தலைவர் சிங்கராஜாதான்! ஏன் கேக்கறீங்க?" என்றது எலிக்குட்டி. பதிலே சொல்லாமல் சிரித்துக்கொண்டே சிங்கத்தின் குகைக்கு கிளம்பியது குரங்கு கிட்டு.

சிங்கராஜாவின் குகை வாசலில் நின்றுகொண்டு " ஏய் கோழை சிங்கமே.. வெளியேவா.. தைரியமிருந்தா என்னோடு மோதிப்பார்" என்று கூப்பிட்டது.

குகைக்குள்ளேயிருந்து நரியாரும் சிங்கராஜாவும் வெளியே வந்தனர்.

"வணக்கம் குரங்காரே நீங்க யார் உங்களை இந்த காட்டில் பார்த்ததில்லையே! ஏன் கோபமாக கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க" என்றது.

"நான் இமயமலையிலிருந்து வருகிறேன், கடவுள் எனக்கு நிறைய மந்திர சக்தி கொடுத்திருக்கிறார். மரியாதையாக இந்த காட்டை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை ஒரே நிமிடத்தில் அழித்துவிடுவேன், தைரியமிருந்தால் என்னோடு சண்டை போட்டு ஜெயித்துகாட்டு!" என்று சிங்கராஜாவை சண்டைக்கு அழைத்தது.

தன்னுடைய வெறும் கையை அப்படி இப்படி ஆட்டி அதிலிருந்து சர்க்கரையை வரவழைத்து "அஸ்கு லஸ்கா.. குஸ்கு புஸ்கா" என்று சொல்லி சிங்கத்தின் மீது வீசியது! சிங்கத்துக்கு ரொம்பே கோபம் வந்துவிட்டது..

"மவனே உன்னை அடிச்சி நொறுக்கிடறேன்" என குரங்கை அடிக்கப் பாய்ந்தார். உடனே நரியார் சிங்கத்திடம் சென்றார்.

"சிங்கராஜா இவன் ஒரு டம்மிபீஸு.. இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றார் நரியார் நந்து.

குரங்கிடம் போய் நரியார் பேசினார். "குரங்காரே.. ரொம்ப பேசாதீங்க..நான் கூட மிகப்பெரிய மந்திரவாதிதான். என்னோடு உங்களால் போட்டிபோட முடியுமா? நான் செய்யும் மாயாஜாலத்தை உங்களால் செய்ய முடியுமா?" என்றார்.

"அப்படி என்ன என்னாலேயே செய்யமுடியாத மந்திர வித்தை?" என்று திமிராக கேட்டது கிட்டு.

"நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும்போது ஆற்றங்கரைக்கு வந்துடுங்க குரங்காரே.. நம்ம போட்டிய அங்க வச்சிக்கலாம்" என்றார் நரியார்.

உடனே குரங்கு ஆவேசமாக "ஏய் நரியே! நாளைக்கு போட்டில நீ தோத்துட்டா சிங்கராஜா இந்த காட்டைவிட்டே போயிடணும். அதுக்கு பிறகு இந்த முல்லைக்காட்டுக்கு நான்தான் ராஜா! நான் வச்சதுதான் சட்டம். எல்லாரும் என் பேச்சைதான் கேக்கணும்." என்றது குரங்கு.

"ஒருவேளை நீங்க தோத்துட்டா என்ன பண்றது குரங்காரே" என்றார் நரியார்.

உடனே குரங்கு "சிங்கராஜா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு போய்விடுகிறேன்" என்றது .

இரவெல்லாம் குரங்கு கிட்டுவுக்கு தூக்கமே வரவில்லை. " அப்படி என்ன நமக்கு தெரியாத வித்தையாக இருக்கும்" என்று யோசித்துக் கொண்டேயிருந்தது.

அடுத்த நாள் ஆற்றங்கரையில் நரியார் நந்துவும் குரங்கு கிட்டுவும் சந்தித்தனர். முல்லைக்காட்டில் இருக்கிற அத்தனை பேரும் அங்கே கூடியிருந்தனர். சிங்கராஜாவும் ஆர்வத்தோடு வந்திருந்தார்.

"இந்த நரியாருக்கு ஒரு மந்திரமும் தெரியாதே எப்படி ஜெயிக்கப்போறார்னே புரியலையே" என்று சிங்கராஜாவுக்கு மிகவும் பயமாக இருந்தது.

நரியார் கிட்டுவை கூப்பிட்டு ஆற்றுக்கு நடுவில் இருந்த ஒரு கொடியைக் காட்டினார்.

"குரங்காரே அதோ அங்கே ஆத்துக்கு நடுவுல ஒரு கொடி தெரியுதே! அதை ஆற்றின் மேல் நடந்து சென்று எடுத்துட்டு வராங்களோ அவங்கதான் வின்னர்! கைகளில் தண்ணீர் படக்கூடாது" என்றார் நரியார்.

கிட்டுவுக்கு ஆற்றில் நடக்க தெரியாது. இருந்தாலும் யாராலும் தண்ணீரில் நடக்க முடியாதே என்கிற தைரியத்தில் ஒப்புக்கொண்டார். எப்படியும் நரியார் தண்ணீரில் விழுந்துவிடுவார் என நினைத்தார்.

இருவரும் தயாராயினர். முதலில் நரியார் ஓடிப்போய் ஆற்றுக்குள் குதித்தார். எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர். நரியார் தண்ணீருக்குள் மூழ்கவில்லை. அப்படியே தண்ணீர் மேல் ஒற்றைக்காலில் நின்றார். எல்லோரும் சூப்பர் சூப்பர் என கைத்தட்டினர்.

அப்படியே பொறுமையாக ஆற்றில் நடந்த நரியார், ஆற்றின் மேலேயே நடனம் ஆடினார். குரங்கு கிட்டுவைப் பார்த்து சிரித்து கேலி செய்து சிரித்தார். ஆற்றுக்கு நடுவில் இருந்த கொடியை எடுத்துக்கொண்டு வந்து குரங்கிடம் காட்டினார்.

"குரங்காரே நான் ஆத்துல நடந்து போயிட்டு வந்தாச்சு. இப்போ நீங்க… நடந்துபோய் இன்னொரு கொடியை எடுத்துட்டு வாங்க" என்றார் நரியார்.

குரங்குக்கு தலையே சுற்றுவதைப்போல இருந்தது. அவர் எத்தனையோ மாயாஜால வித்தைகள் கற்றிருந்தாலும் இது மட்டும் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்யலாம் என நினைத்து ஆற்றுக்குள் குதித்தார். தொப்புக்கடீர் என தண்ணீருக்குள் விழுந்தார்.

"நான் தோத்துட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க இந்தாங்க மாணிக்கக்கல்" என்று சிங்கராஜாவிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். "குரங்காரே எவ்ளோதான் நமக்கு திறமையிருந்தாலும் ஆணவமாக இருக்க கூடாது, அது நம்மையே அழிச்சிடும்" என்று அறிவுரை கூறினார் சிங்கராஜா. மந்திரவாதி குரங்கு காட்டைவிட்டே ஓடியது.

சிங்கராஜாவுக்கும் முல்லைக்காட்டு விலங்குகளுக்கும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. நரியார் நந்துவுக்கு எந்த மந்திரமும் தெரியாது பிறகு எப்படி நீரில் நடந்துகாட்டினார்? எலிக்குட்டி போய் நரியாரிடம் கேட்டது " நரியாரே எப்படி நீங்க தண்ணீல நடந்துபோனீங்க" என்றது.

சிங்கராஜாவும் " ஆமாம் நரியாரே நீங்க எப்படி தண்ணீரில் நடந்து போனீங்க" என்றார்.

"சிங்கராஜா அந்த குரங்குக்கு மந்திரமும் தெரியாது மாயமும் தெரியாது. அது ஒரு மோசடி பேர்வழி. விரலுக்கு நடுவில் சின்ன சின்ன சர்க்கரை கட்டிகளை வைத்துக்கொண்டு கையை அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த கட்டிகளை உடைத்து பொடியாக்கி ஏதோ வெறும் கையில் சக்கரையை வரவைத்த மாதிரி உங்கள் மேல் வீசியதை பார்த்தேன்." என்று நரியார் சொல்ல..

"ஓஹோ..!" என்று ஆச்சர்யப்பட்டார் சிங்கராஜா

"அப்போதே தெரிந்துவிட்டது அவன் ஒரு போலி மந்திரவாதி என்று. அதனால் அவனை ஏமாற்றி ஜெயிக்க நினைத்தேன். அதனால் குரங்கினை ஆற்றில் நடக்கிற போட்டிக்கு அழைத்தேன்." என்றார் நரியார்.

"அதுசரிங்க நரியாரே எப்படி தண்ணீரில் நடந்து சென்றீர்கள்" என்றார் சிங்கராஜா.

"அதுவா… நேற்று இரவு ஆற்றில் இருக்கிற நம் ஆமையாரையும் அவருடைய நண்பர்களையும் சந்தித்து ஆற்றின் குறிப்பிட்ட சில இடங்களில் வெளியே தெரியாதபடி தண்ணீருக்குள் மிதக்கும்படி சொல்லியிருந்தேன். அதனால் ஆற்றின் மேல் அவர்களுடைய முதுகில் காலைவைத்து ஜாலியாக நடந்து சென்றேன். இந்த குரங்கு நடக்கும்போது ஆமையார் நகர்ந்து போய்விட்டிருந்தார்! அவ்வளவுதான்!" என்று புன்னகை செய்தார்.

"பலே நரியாரே! அசத்திட்டீங்க" என்று சிங்கராஜா கைதட்டி வாழ்த்த.. இதை கேட்டுக்கொண்டிருந்த முல்லைக்காட்டின் மற்ற விலங்குகளும் கைதட்டி மகிழ்ந்தன.


இன்றைய செய்திகள்

06.04.2026

⭐இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு எப்போதும் ஒரு குறிப்பிட்ட நாட்டை சார்ந்திருப்ப தில்லை. வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது

⭐ ஈரானின் மிக உயரமான பாலத்தை அமெரிக்க தகர்த்துள்ள நிலையில் வளைகுடாவில் உள்ள 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

⭐ஏப்ரல் 21 முதல் 23 வரை கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணி

🏀 ஐபிஎல் 2026 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.


Today's Headlines

⭐ India does not depend on any single country for its fuel needs. It imports crude oil from multiple nations, including Gulf countries.

⭐ Following the destruction of Iran’s tallest bridge by the United States, Iran is reportedly planning to destroy 8 bridges in the Gulf region.

⭐ The Election Commission has imposed a ban on broadcasting opinion polls from April 21st  to 23rd

SPORTS NEWS

🏀 The Indian team is currently touring Zimbabwe for matches.

🏀 In the IPL 2026 tournament, Rajasthan Royals secured their second win of the season by defeating Gujarat Titans by 6 runs.


Artemis 2 விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் எடுத்த பூமியின் புகைப்படங்கள்



நிலவை நோக்கிய பயணத்தின்போது வீரர்கள் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்


Photos of Earth taken by astronauts aboard the Artemis 2 spacecraft





நாசாவின் Artemis 2 விண்கலம் மூலம் நிலவை நோக்கிப் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் பாதி தூரத்தைக் கடந்தனர்.


பயணத்தின்போது வீரர்கள் கிரிஸ்டினா கோச் மற்றும் ரீட் வைஸ்மேன் ஆகியோர் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது.


THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்

  


THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்


அனைவருக்கும் வணக்கம்.


அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களில் திறன் மாணவர்களுக்கு 01.04.2026 முதல் 16.04.2026 வரை முழு ஆண்டுத் தேர்வு (End line Assessment) நடைபெற உள்ளது.

 

பிப்ரவரி மாதாந்திர தேர்வின் தேர்ச்சியில் 80%  அடைவு பெற்ற நிலையில் மாநில அளவில் 35/38 நிலையில் உள்ளோம்.


 ( Endline Assessment ) மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து முழு ஆண்டுத் தேர்வில் 95% - 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


குறிப்பு:

 ஜூலை மாதத்தில் திறன் மாணவர்களாக tagging  செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் Endline Assessment நடத்த வேண்டும்.


தேர்ச்சி   -  6, 7 ஆம் வகுப்பு: 42/60 , 8, 9 ஆம் வகுப்பு: 70/100 (மதிப்பெண்)


Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். EDIT option இல்லை


நன்றி



TETக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்

 

TN TET 2026


PAPER I & PAPER II


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்


👉 புகைப்படம் 60.55 Kb 

👉 கையொப்பம் 60.55 Kb

👉 சாதிச்சான்றிதழ் 500 Kb

👉 பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 500 Kb

👉 +2 மதிப்பெண் பட்டியல் 500 Kb

👉 D.TEd Mark sheets & Diploma Certificate 500 Kb

👉 UG Convocation 500 Kb

👉 UG consolidated Mark Sheet or 1 st semester to final semester all mark statement 500 Kb

👉 B.Ed Convocation 500 Kb

👉 B.Ed Mark statement 500 Kb

👉 Aadhaar , PAN card 500 Kb

👉 Service Certificate 500 Kb


மேற்காணும் சான்றிதழ்களை சரியான format & file size ல் Resize செய்து save செய்த பின் விண்ணப்பிக்கவும்.


பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026


▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test for Working Teachers) நடைபெற இருக்கிறது.


▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.


▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NHISல் Reimbursement கேட்டு கடிதம் அனுப்பவேண்டிய முகவரி

 


NHISல் Reimbursement கேட்டு கடிதம் அனுப்பவேண்டிய முகவரி


NHIS மருத்துவ காப்பீடு திட்டத்தில் Networkல் இல்லாத மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட சிகிச்சை (Reimbursement) தொகையை திரும்ப பெறுவதற்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது


இனி ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் / வட்டார கல்வி அலுவலரிடமிருந்து கடிதம் அனுப்ப வேண்டிய புதிய முகவரி குறித்த கடிதம்


NHIS அலுவலகம் முகவரி மாற்றப்பட்டுள்ளது - Pay and Accounts Officer கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NHIS NEW OFFICE ADDRESS


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address


DEPARTMENT OF TREASURIES AND ACCOUNTS


From

Pay and Accounts Officer,

Pay and Accounts Office (South),

Amma Complex, 1st Floor,

NO.571 Anna Salai,

Nandanam, Chennai -600 035.


To

AII DDOs


PAO(South)/BAS III/12580/2024 dated 28/10/2024

Sir/Madam,

Sub : New Health Insurance Scheme 2021 - United Insurance Co Ltd's Divisional Office - shifted -New Address communicated -Regarding.


Ref : 1. Letter received from the commissioner of Treasuries and Accounts, Rc.No.30655/NHIS-2/2024 Dated 21-03-2024


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings,(Behind IDBI Bank),

Greams Road, Chennai-600 006"

Therefore the reimbursement claims may be send to the above address. And it is also informed that there is no change in the telephone numbers.

Asst Pay and Accounts Officer (South)

Chennai-35


March 2026 Salary & Pension ECS Settlement Date


March 2026 Salary & Pension ECS Settlement Date :


🎯 இன்று 02-04-2026 ஓய்வூதியம் மற்றும் ஊதியம் அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.


வங்கிக்கணக்கின் எண்ணை மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி (PaSS)

 


வங்கிக்கணக்கின் எண்ணை மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி விரைவில் அறிமுகம்


மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (MNP) போலவே, வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலேயே ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் வசதியை (Bank Account Portability) ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 'பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்' (PaSS) மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இது சம்பளம், EMI மற்றும் மானியங்கள் தடங்கலின்றி, பழைய கணக்கு எண் தொடர உதவும். 


முக்கிய அம்சங்கள்:

எண் மாறாது: பழைய 11 அல்லது 16 இலக்க கணக்கு எண் அப்படியே இருக்கும்.

தானியங்கி மாற்றம்: சம்பளப் பரிமாற்றம், EMI, SIP மற்றும் பயன்பாட்டு பில்கள் (Utility bills) புதிய வங்கிக்குத் தானாகவே மாற்றப்படும்.

எளிதான நடைமுறை: KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் குறையும், அதே வங்கி கணக்கு எண்ணுடன் வேறு வங்கிக்கு (எ.கா., SBI-ல் இருந்து இந்தியன் வங்கிக்கு) மாறலாம்.

நோக்கம்: வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கிச் சேவையைத் தேர்ந்தெடுக்கும் வசதியை அளித்தல் மற்றும் வங்கி மாற்றத்தில் உள்ள சிரமங்களைக் குறைத்தல். 


இந்த வசதி, 'Payments Vision 2028' ஆவணத்தின் ஒரு பகுதியாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 


இதன் மூலம், வாடிக்கையாளர் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும்போது, ​​அவர்களின் அனைத்து EMI-கள், SIP-கள், கடன்கள் உள்ளிடவையும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படும்.


பலர் சம்பளக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் அரசுத் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதால், விருப்பமில்லாதபோதும் தங்கள் பழைய வங்கியிலேயே தொடர்ந்து கணக்கு வைத்துள்ளனர்.


புதிய நடைமுறையால் பயனர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கணக்கு விவரங்களை நேரடியாக மாற்ற வேண்டிய தேவை இருக்காது.


அதேநேரம் இந்த செயல்முறையில் கணக்கு எண் மாறாவிட்டாலும், புதிய வங்கியின் IFSC குறியீடு மாறும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.0 - Updated on 05-04-2026

    தற்போது TNSED Schools  App-ல்  RTE attendance Enhancement added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.0 - U...