கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்தபின் மே 2026 மாதத்திற்கான தொகை, விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்



கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்தபின் மே 2026 மாதத்திற்கான தொகை, விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்



செய்தி வெளியீடு எண்: 018 , நாள்: 14.05.2026


செய்தி வெளியீடு


மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு


பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.


மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


TN DIPR




2% அகவிலைப்படி உயர்வு D.A. Hike

 

 

 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு


DIPR - P.R.No.019 - Hon'ble CM Press Release - Govt. Staff 2 Percent DA Hike - Date.14.05.2026


TN CM Announced.. DA 60% w.e.f. 01.01.2026


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58%ஆக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60%ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவிப்பு


2% Dearness Allowance Hike for Teachers and Government Employees


01.01.2026 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 % உயர்வு 

அகவிலைப்படி 58%லிருந்து 60%ஆக உயர்வு


Tamil Nadu CM announces that the dearness allowance, currently at 58 per cent for government officials and teachers, will be increased to 60 per cent effective from 01.01.2026


செய்தி வெளியீடு எண் : 19, நாள் : 14-05-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செய்தி வெளியீடு எண்: 019 , நாள் : 14.05.2026


செய்தி வெளியீடு


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.


இதனால் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு 1,230 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,  ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


TN DIPR


ஏற்கனவே உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? - முதலமைச்சருக்கு முன்னாள் முதலமைச்சர் கேள்வி

 


ஏற்கனவே உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? - முதலமைச்சருக்கு முன்னாள் முதலமைச்சர் கேள்வி


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,


மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.


ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?


திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?


மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?


- திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 



தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் நியமனம் - அரசாணை G.O.(Ms).No.335 , Dated: 13.05.2026 வெளியீடு

 


தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம் - அரசாணை G.O.(Ms).No.335 , Dated: 13.05.2026 வெளியீடு 


ABSTRACT

Law officers - High Court of Madras - Thiru.Vijay Narayan, Senior Advocate - Appointed as Advocate General for the State of Tamil Nadu - Orders - Issued.

PUBLIC [LAW OFFICERS] DEPARTMENT 

G.O.(Ms).No.335 , Dated: 13.05.2026


Read:

1. G.O.(Ms).No.212, Public (Law Officers) Department, dated:12.03.2024.

2. G.O.(Ms).No.334, Public (Law Officers) Department, dated: 13.05.2026.


ORDER:

The following Notification will be published in the Tamil Nadu Government Extraordinary Gazette:

NOTIFICATION

In exercise of the powers conferred by Article 165(1) of the Constitution of India, the Governor of Tamil Nadu hereby appoints Thiru.Vijay Narayan, Senior Advocate, as the Advocate General for the State of Tamil Nadu, with effect from the date on which he assumes charge of the office yice Thiru.P.S.Raman, who has resigned.

[BY ORDER OF THE GOVERNOR]

M. SAI KUMAR

CHIEF SECRETARY TO GOVERNMENT

To

Thiru.Vijay Narayan, Senior Advocate,

4-C, Eldorado,

No.112, Nungambakkam

High Road, Chennai - 600 034.

The Registrar General, High Court, Chennai- 600 104.

The Registrar, Madurai Bench of Madras High Court, Madurai.

The Additional Advocate General-I of Tamil Nadu,

Madurai Bench of High Court of Madras, Madurai-625 023.





தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ( TNAU ) இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ( TNAU ) இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கு  விண்ணப்பிக்கும் முறை Online Application Procedure மற்றும் வலைதள முகவரி 


TNAU - TAMIL NADU AGRICULTURE UNIVERSITY COIMBATORE 

UG Degree and Diploma 

ADMISSION COUNSELLING ONLINE APPLICATION IS NOW OPEN 


For Degree and Diploma ADMISSION...

Same website 👇


https://tnau.ucanapply.com/univer/public/registration?app_id=UElZMDAwMDA2NQ==



இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.(Rt).No.1670, Dated: 12.05.2026 வெளியீடு



இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.(Rt).No.1670, Dated: 12.05.2026 வெளியீடு 


IAS Officer's Transfer Order



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


* நிதித்துறை செயலாளராக சித்திக் ஐஏஎஸ் நியமனம்


* வருவாய்த்துறை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்


* சுற்றுலா வளர்ச்சி துறை செயலாளராக ஸ்வர்ணா ஐஏஎஸ் நியமனம்


* டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் 


 ஐ.ஏ.எஸ். அலுவலர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு 



PUBLIC (SPECIAL A) DEPARTMENT

G.O.(Rt).No.1670, Dated: 12.05.2026

Read:

1.G.O.Rt. No.1360, Public (Special-A) Department, dated 10.04:2026.2. G.0.Rt. No.1524, Public (Special-A) Department, dated 29.04.2026.3. G.O.Rt. No.1539, Public (Special-A) Department, dated 30.04.2026.

ORDER:

The following transfers and postings are notified:-

(i) Thiru N. Muruganandam, IAS, on return from leave, is posted as Additional Chief Secretary / Commissioner of Revenue Administration and Disaster Management vice Tmt. P.Amudha, IAS, holding additional charge;

(ii) Thiru M.A. Siddique, IAS, Additional Chief Secretary / Managing Director, Chennai Metro Rail Limited, is transferred and posted as Additional Chief Secretary Government, Finance Department vice Thiru T.Udhayachandran, IAS; and

(iii) Dr. S. Swarna, IAS, Principal Secretary / State Project Director,Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA), is transferred and posted as Principal Secretary to Government, Tourism, Culture and Religious Endowments Department yice Dr. K. Manivasan, IAS, holding additional charge.

2. The services of Thiru K. Nanthakumar, IAS, Registrar of Cooperative Societies, are placed at the disposal of Tamil Nadu State Marketing Corporation (TASMAC), for appointment as its Managing Director vice Thiru T. Christuraj, IAS.

The terms and conditions of deputation of Thiru K.Nanthakumar,IAS, on foreign service, will be governed as per the orders issued in G.O.Ms.No.167, Public (Special-A) Department, dated 21.02.1994.

(BY ORDER OF THE GOVERNOR)

M. SAI KUMAR

CHIEF SECRETRY TO GOVERNMENT



TNCMTSE தேர்வு முடிவுகள் வெளியீடு

 


TNCMTSE 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


Tamil Nadu Chief Minister's Talent Search Examination - JAN-2026 

Results.. 

👇👇👇 


https://apply1.tndge.org/nts-result-change-2022



TNCMTSE 2026 Results - DGE Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6


தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு- ஜனவரி 2026


TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION (TNCMTSE)


செய்திக் குறிப்பு


அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு, 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,50,265 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.


இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (500 மாணவர்கள் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக உரிய தகுதிகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000/- வழங்கப்பட்டு வருகிறது.


13.05.2026 அன்று பிற்பகல் இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படவுள்ளது.


இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 1683, Dated : 13-05-2026 வெளியீடு

 

 

இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 1683, Dated : 13-05-2026 வெளியீடு 


IAS Officer's Transfer Order



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம்


Guidance Tamilnadu நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரேஸ் அகமது, சுகாதாரத்துறை செயலாளராக நியமனம்


தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமனம்


தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் செயலாளராக நியமனம்


PUBLIC (SPECIAL A) DEPARTMENT


G.O. (Rt.) No.1683


Dated: 13.05.2026


பராபவ, சித்திரை-30


திருவள்ளுவர் ஆண்டு-2057


Read:


1. G.O.Rt. No.1529, Public (Special-A) Department, dated 29.04.2026.


2. G.O.Rt. No.1537, Public (Special-A) Department, dated 30.04.2026.


3. G.O.Rt. No.1654, Public (Special-A) Department, dated 10.05.2026.


ORDER:


The following transfers and postings are notified:-


i) Dr. Darez Ahamed, IAS, Managing Director / Chief Executive Officer, GUIDANCE, is transferred and posted as Secretary to Government, Health and Family Welfare Department vice Dr. P. Senthilkumar, IAS, already transferred;


(ii) Tmt Anu George, IAS, formerly Secretary-III to then Chief Minister is posted as Secretary to Government, Animal Husbandry, Dairying, Fisheries and Fishermen Welfare Department vice Dr. N. Subbaiyan, IAS;


(iii) Tmt Mariam Pallavi Baldev, IAS, Special Secretary to Government, Industries, Investment Promotion and Commerce Department is transferred and posted as Secretary to Government, Social Welfare and Women Empowerment Department vice Tmt S. Madumathi, IAS, holding additional charge;


2. The services of Thiru T. Udhayachandran, IAS, formerly Additional Chief Secretary to Government, Finance Department are placed at the disposal of Tamil Nadu Industrial Investment Corporation Limited for appointment as its Additional Chief Secretary / Chairman and Managing Director vice Thiru Kumar Jayant, IAS.


-2-


p.t.o.,


3. The services of Thiru Kumar Jayant, IAS, Additional Chief Secretary/Chairman and Managing Director, Tamil Nadu Industrial Investment Corporation Limited are placed at the disposal of Tamil Nadu Newsprint and Papers Limited for appointment as its Additional Chief Secretary / Chairman and Managing Director.


4. of The terms and conditions of deputation Thiru T.Udhayachandran, IAS and Thiru Kumar Jayant, IAS on foreign service, will be governed as per the orders issued in G.O.Ms.No.167, Public (Special-A) Department, dated 21.02.1994.


(BY ORDER OF THE GOVERNOR)


M. SAI KUMAR

CHIEF SECRETARY TO GOVERNMENT


உளவுத் துறை ஐஜி மாற்றம்



உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்


வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் உளவுத் துறை ஐஜியாக நியமனம் - தமிழ்நாடு அரசு.


உளவுத் துறை ஐஜியாக தேர்தல் ஆணையம் நியமித்திருந்த அவினாஷ் குமார் மாற்றம்.





ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது?



 இன்றைய 12.05.2026 செவ்வாய்க்கிழமை இந்து தமிழ் திசை நாளிதழில் 9 ம் பக்கம் வெற்றிக் கொடி பகுதியில் என் மன வானில் என்னும் தொடரில் ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது? என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 


ஆண்டு 2012. 


எங்கள் பள்ளியில் சமுத்திரம் என்று ஒரு மாணவன். எட்டாம் வகுப்பு. துறுதுறுவென்று இருப்பான். பெரிய மனிதர்களைப் போலத்தான் பேச்சும், நடத்தையும்... நடையும் கூட. கைகளைப் பின்னால் கட்டிக்கொள்வான். ஆய்வு செய்யும் அதிகாரிகள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு எல்லாப்பக்கமும் கண்களைச் சுழற்றியபடி எங்கேயோ பார்த்து எதையாவது கேட்பார்களே அப்படித்தான் அவனது பார்வையும் கேள்வியும். பள்ளிக்கு முதல் மாணவனாக வந்து கடைசி மாணவனாக வெளியேறுவான். 


ஒரு முறை ஏழெட்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்பு பள்ளி திறக்கப்பட்ட போது ப்ளஸ் ஒன் வகுப்பில் மாணவிகள் தங்கள் வகுப்பை சுத்தம் செய்கையில் டெஸ்க்கின் அடியில் பாம்பு ஒன்றைப் பார்த்து அலறி அடித்து வெளியே வந்தனர். ப்ளஸ் ஒன் மாணவர்களும் தங்கள் பங்குக்கு நாலாபுறமும் சிதறி ஓடினர், கத்திக்கொண்டே... கத்துவது முக்கியமில்லையா. சமுத்திரம் எட்டாம் வகுப்பிலிருந்து வெளியே வந்தவன்... வழக்கம்போல கைகளை பின்புறம் கட்டிக்கொண்டே வந்து என்ன சார் பிரச்சனை என்றான் என்னிடம். ஏதோ பாம்பு கெடக்குதாம்ப்பா சமுத்திரம்... இரண்டு கம்ப எடுத்தா... அடிச்சுத் தூக்கிப்போடுவோம் என்றேன். இருங்க சார்... என்ன பாம்புன்னு பாப்போம், முதல்ல... என்றவன் அண்ணே... அக்கா தள்ளிக்கங்க என்றவாறு அவர்களை விலக்கிக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தான். நான் சமுத்திரம் கம்ப கொண்டு போப்பா என்றேன். பாத்துக்குருவோம் சார், என்றான் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு... கண்களைச் சிமிட்டியவாறு. எனக்கு உதறலெடுத்தது. ஏதோ பயப்படாதது போல காட்டிக்கொண்டு யே... போங்கப்பா போய் அந்த மரத்துக்கடியில நில்லுங்கப்பா... பாம்ப அடிச்சுப்புட்டு கூப்புடுறோம் என்றேன். ஒரு பாம்ப அடிக்க இத்தன பேரா என்று வலது கையை நெளித்துக் கேலி செய்துவிட்டு டெஸ்க்குகளை ஆராய்ந்தான், சமுத்திரம். ஐந்து விநாடிகள்தான்... வெளியே வந்தான்... கொமரன் பாம்பு சார்... ஒண்ணும் செய்யாது சார் என்றான். நான் கம்பை நீட்டியவாறே வகுப்புக்குள் நுழைந்தேன். சார்... சார்... அடிச்சிராதீங்க சார்... இது வயப் பாம்பு சார்... விஷமில்லாத பாம்பு சார்... எலியைப் பூராம் புடிச்சுத் திங்கிற பாம்பு சார்... அடிக்கப் பிடாது சார் என்றான். வேற என்னடா செய்யிறது சமுத்திரம் என்றேன். இருங்க சார்.. பதவிசா புடிச்சுப்புடுறேன் என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. டேய்... விளையாடதடா... கொத்திப் புடுச்சுன்னா என்னடா பண்றது என்று பதறினேன். கறைப் பற்களும், குறை ஈறுகளும் தெரிய பளீரென்று சிரித்தான். சார் சத்தியமா ஒண்ணும் செய்யாது சார்... கடிச்சாலும் விஷமில்ல சார்... பயப்படாதீங்க என்று சொல்லியவாறே எங்கடி போற என்று குனிந்து அந்தப் பாம்பை கையில் பிடித்துவிட்டான். சின்னப் பாம்புதான். ஆனால், சீறுசீறுவென்று சீறியது. தலையில் தட்டினான். பேசாம இருக்கமாட்ட... சார்... பயப்படுறாருல்ல...என்றான். வெளியே நின்றிருந்த பெரிய மாணவர்கள் டேய்... சமுத்திரம் அதைத் தூக்கிக் காட்டுடா என்றார்கள். அண்ணே... இது என்ன விளையாட்டுப் பொருளாண்ணே... நம்மள மாதிரி ஒரு உசிருண்ணே... போங்கண்ணே என்று சொல்லிவிட்டு காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து வயற்காட்டிற்குள் விட்டுவிட்டு வந்தான். 


அந்த சமுத்திரத்தைப் பற்றி ஆசிரியர்கள் நித்தம் ஒரு குறை சொல்வார்கள். நான் அவனுக்கு வகுப்பு எடுக்க வில்லை என்றாலும் பள்ளியின் முரட்டு வாத்தியார் என்றும் கோபக்கார வாத்தியார் என்றும் பெயரெடுத்து வைத்திருந்ததால் என்னிடம் பலப்பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கும். வீட்டுப்பாடம் எழுதுவதில்லை. படிப்பதில்லை. கேள்விகள் கேட்டால் சொல்வதில்லை இப்படி பல குற்றச்சாட்டுகள். அப்படி அன்றும் ஒரு குற்றச்சாட்டைச் சொன்ன சக ஆசிரியர் வகுப்பு லீடரோடு சமுத்திரத்தையும் அனுப்பி வைத்திருந்தார். லீடர் வந்து ஆசிரியர் சொல்லச் சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னான். நாலு அடி போடுவீங்களாம் சார் என்று சொல்லிவிட்டு ப்ளக் கென்று சிரித்துக்கொண்டே போனான். சமுத்திரம் வழக்கம்போல கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஃபேன் சுழல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அட்டெண்டன்ஸ் நோட்டில் பென்சிலால் எழுதுவது போல பாவனை செய்து கொண்டிருந்தேன். கோபமாக இருக்கிறேனாம். மறுபடி அவனைப் பார்த்த போது பெரிய ஓணான் ஒன்று எனக்குப் பக்கவாட்டு மரத்தில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். செருமினேன். என்னா சமுத்திரம்... சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்குறியாம்... ஹோம் ஓர்க்கெல்லாம் பண்ண மாட்றியாம்... என்னா விஷயம் என்றேன், கண்களை உருட்டி, பெருமூச்செடுத்து, சட்டையை மடித்து விட்டபடி. அவன் கொஞ்சமும் அசரவில்லை. என்னை நேருக்கு நேராகப் பார்த்தான். சின்னச் சின்ன கண்கள். பெரிய பெரிய பார்வைகள். செருமிக்கொண்டான். 

நெருங்கிவந்து என் மேசை மீது இரண்டு கைகளையும் ஊன்றியபடி சொன்னான் இப்படி... 


சார்... எனக்கு படிப்பு வரலேங்கிறது எனக்குப் புரிஞ்சுருச்சு... டீச்சர்ங்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது?



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்தபின் மே 2026 மாதத்திற்கான தொகை, விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்தபின் மே 2026 மாதத்திற்கான தொகை, விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு ...