கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

 


அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு


 அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டனர். 


Special TETக்கு பயிற்சி வழங்குதல் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்



இணையதளம் வழியாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 08.06.2026 முதல் 30.06.2026 வரை பயிற்சி வழங்குதல் சார்ந்து  பள்ளிக்கல்வி , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைன் வழியாக சிறப்பு பயிற்சி 8.6.2026 முதல் - 30.6.2026 வரை நடைபெற உள்ளது அதற்கு கீழ்க்கண்ட Link ல் செல்லவும்.  அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்புங்கள்.  இறுதியாக submit கொடுக்கவும்.

 அடுத்து Telegram link இருக்கும் அதிலும் நீங்கள் join செய்து கொள்ளுங்கள்


படிவம் இணைப்பு : 

https://forms.gle/ZD9BTptudmq7T1yo7



SCERT Special TET Refreshment Courses Telegram குழுவில் இணைய 


https://t.me/scertspecialtet




பள்ளிக் கல்வி இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06.


ந.க.எண்.44750/எஃப்-3/2024 நாள். 05.06.2026.


பொருள்


பயிற்சி - பள்ளிக்கல்வி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணையின் அடிப்படையில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் 08.06.2026 முதல் 30.06.2026 முடிய பயிற்சி வழங்குதல் தொடர்பாக. அறிவுரை வழங்குதல்


பார்வை


1 அரசாணை (நிலை) எண்.231 பள்ளிக்கல்வித் துறை, நாள் : 13.10.2025.


2 சென்னை-09, தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித் துறை. அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் எண். 449/ஆ.தே.வா/2025. நாள்.13.10.2025. 


3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைக் கடிதம் ந.க. எண்.44750/எஃப்-3/2024, நாள் 22.10.2025 மற்றும் 03.06.2026


பார்வை (1) இல் காணும் அரசாணையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், அத்தேர்வினை 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இத்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


பார்வை (3) இல் காணும் கடிதத்தின்படி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 08.06.2026 முதல் 30.06.2026 முடிய பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி மாலை 06.30 மணி முதல் 08.00 மணி முடிய நடைபெறவுள்ளது.


இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்திற்கான Link-ஐ சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இணையப் பயிற்சியில்


கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இயக்குநர்

தொடக்கக் கல்வி


இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்


இயக்குநர்

பள்ளிக் கல்வி



இணைப்பு


1. பயிற்சி கால அட்டவணை


2 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) ஆன்லைன் வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP)


3. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வலுவூட்டும் பயிற்சி-அணுகுவதற்கான வழிமுறைகள்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்


அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்


நகல்


கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்து அனுப்பப்படுகிறது


POCSO சட்டத்தை பழிவாங்க பயன்படுத்தாதீர்கள் - உயர்நீதிமன்றம்



POCSO சட்டத்தை பழிவாங்க பயன்படுத்தாதீர்கள் - உயர்நீதிமன்றம் 


புனிதமான சட்டம். பழிவாங்க பயன்படுத்தாதீர்கள்


போக்சோ சட்டம் குழந்தைகளைப் பாதுகாக்கும் புனிதமான சட்டம். ஆனால். அந்தச் சட்டம் பெரியவர்களின் பழிவாங்கல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, உண்மையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான நீதி தள்ளிப்போகிறது.


போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க மாநிலம் முழுவதும் "சிங்கப்பெண் விழிப்புணர்வு” பயிலரங்குகளை நடத்த வேண்டும்.


திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-06-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:422

குறள்:

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

பொருள்:

மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌.


பழமொழி :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

Health is wealth.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் .

2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன்.


பொன்மொழி :

தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் படி.


Thought for the Day :

"Success is not about being the best. It is about being better than you were yesterday."


பொது அறிவு :

1. ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

தமிழ்நாடு.

2. உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

திபெத்.


English words :

Around - On all sides , சுற்றிலும்.

Awake - rouse from sleep, தூக்கத்திலிருந்து எழுப்பு.


புவியியலும் சுற்றுசூழலும் :

புவியியல் ஏன் முக்கியம்?
✅ பூமியைப் பற்றி அறிய உதவுகிறது.

✅ வெவ்வேறு நாடுகள் மற்றும் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.

✅ இயற்கை வளங்களைப் பாதுகாக்க கற்றுக்கொடுக்கிறது.

✅ சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது


ஜூன் 05
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED)

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில இருபதாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.


நீதிக்கதை

நீதிக்கதை: "சின்ன விதையும் பெரிய மரமும்"

ஒரு கிராமத்தில் ஒரு சின்ன விதை மண்ணுக்குள் விழுந்தது. அது சுற்றிலும் பெரிய பெரிய மரங்களைப் பார்த்து,

"நான் இவ்வளவு சின்னதாக இருக்கிறேன். என்னால் எப்படி இவர்களைப் போல வளர முடியும்?" என்று கவலைப்பட்டது.

அப்போது அருகில் இருந்த மண் சொன்னது,

"நீ தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர முயற்சி செய்."

விதை அதன்படி மழைநீரைக் குடித்து, சூரிய ஒளியைப் பெற்று மெதுவாக முளைத்தது. நாட்கள் சென்றன. அது ஒரு செடியாக மாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதுவே ஒரு பெரிய மரமாக வளர்ந்தது.

அந்த மரத்தின் நிழலில் பல பறவைகள் கூடு கட்டின. பயணிகள் ஓய்வெடுத்தார்கள்.

அப்போது அந்த மரம் நினைத்தது,

"ஒரு நாள் நான் சின்ன விதைதான். ஆனால் தினமும் முயற்சி செய்ததால் இன்று பெரிய மரமாக வளர்ந்தேன்."

நீதி: பெரிய வெற்றி ஒரே நாளில் கிடைக்காது. தினமும் சிறிது சிறிதாக முயற்சி செய்தால் பெரிய சாதனைகள் சாத்தியமாகும்.


இன்றைய செய்திகள்
05.06.2026

🗒️முதலமைச்சர் விஜய்  அவர்கள் இயற்கை வளங்கள் துறை சார்பில் ஆலோசனையின் முடிவில்  சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

🗒️புதிய சட்டசபை பேரவை செயலாளராக திருமதி சாந்தி பொறுப்பேற்றார் . தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் என்ற வரலாற்று சிறப்பு இவரைச் சேரும் .

🗒️வழக்கறிஞர்கள்  A I உதவியுடன் மனுக்கள் மற்றும் வாதங்களை தயாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

🗒️ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல் காரணமாக 900 விமான சேவைகள் ரத்து.

🏀விளையாட்டு செய்திகள்

🏀 நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் கார்ல்செனை  இளம் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தி 3 வது பெரும் சாதனை.


Today's Headlines

🗒️ Chief Minister Vijay, at the conclusion of a consultation meeting held by the Department of Natural Resources, instructed officials to take action to prevent the illegal transportation and smuggling of mineral resources.

🗒️ Mrs. Shanthi has assumed office as the new Secretary of the Legislative Assembly. She becomes the first woman Secretary in the history of the Tamil Nadu Legislative Assembly.

🗒️ The Supreme Court has stated that lawyers may use AI assistance to prepare petitions and legal arguments.

🗒️ As a result of Typhoon Jangmi's widespread impact across Japan, 900 flight services have been cancelled.

🏀 Sports News

🏀 The Norway International Chess Tournament is being held in Oslo. In the tournament, young Indian chess player R Praggnanandhaa defeated Magnus Carlsen once again, achieving his third major victory over the Norwegian champion.



G.O. (Ms) No. 31 , Dated : 22.05.2026 - ADW துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாறுதல் கலந்தாய்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு



ஆதி திராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாறுதல் கலந்தாய்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண். 31 , நாள் : 22.05.2026 வெளியீடு


G.O. (Ms) No. 31 , Dated : 22.05.2026 - ADW School Teacher's Transfer Counseling Guidelines 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி பள்ளிகள் ஆதிதிராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 2026-2027-ஆம் ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு -கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந-7) துறை


அரசாணை (நிலை) எண். 31 , நாள் : 22.05.2026


பரபாவ வருடம்

வைகாசி மாதம் 08-ஆம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2057


படிக்கப்பட்டது:-


1. அரசாணை (நிலை) எண். 61. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந7) துறை, நாள் 16.05.2025. 

2. ஆணையர், ஆதிதிராவிடர் நலம் அவர்களின் கடிதம். 5.5.670. DADW/968/2026-G1, நாள் 13.05.2026.


ஆணை

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2025-2026-ஆம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு பணியிட மாறுதல் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியிட மாறுதல் ஆகியன இணையவழி (Online) மூலமாகவும். விடுதிகளில் காப்பாளர்களாக மாறுதல் பெறவிழையும் காப்பாளர்களின் பொதுமாறுதல் நிர்வாக காரணம் கருதி நேரடியாக நடத்திடவும் ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது.


2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் ஆதிதிராவிடர் நல ஆணையர், 2026-2027-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு இணையவழி மூலமாக பொது மாறுதல் கலந்தாய்வு (General Transfer Counselling through Online) நடத்திடவும், இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளது எனவும், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் (online) நடத்திட தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி பட்டியல்கள் பெறப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி பட்டியல் பெறப்படும் நிறுவனத்தின் மூலம் 2025-2026-ஆம் ஆண்டிற்கான இணையவழி பொதுமாறுதல் (Online General Transfer Counseling) கலந்தாய்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட மென்பொருளைப் பின்பற்றியே 2026-2027-ற்கான கலந்தாய்வினையும் நடத்திடலாம் எனவும் தெரிவித்து. ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழி மூலம் 10.06.2026, 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய தேதிகளில் நடத்திட ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதியும், இப்பணிக்காக தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ள சில்லரை செலவினத்திற்கான கணக்குத் தலைப்பின்கீழ் செலவினம் மேற்கொள்ள அனுமதியும் வழங்குமாறு அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


3. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில், 2028-2027-ஆம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழி மூலம் 10.06.2026, 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய தேதிகளில் நடத்திட ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.


4. மேலும், இக்கலந்தாய்வு பொது மாறுதலின்போது இணைப்பில் உள்ள வழிமுறைகளைப் அறிவுறுத்தப்படுகிறார். பின்பற்றுமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர்


5. 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட, தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிடர் நல ஆணையரக சில்லரை செலவின கணக்குத் தலைப்பின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.


6. மேலும், மாணக்கரின் கல்வி நலன் பாதிக்காத வண்ணம் பொது கலந்தாய்வு மாறுதல் குறித்த கால அட்டவணையை தயார் செய்து அதன் அடிப்படையில் கலந்தாய்வு பொது மாறுதலை விரைந்து முடிக்குமாறு ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பதவிகளுக்குமான கலந்தாய்வுகள் சென்னையில் ஆதிதிராவிடர் நல ஆணையர் தலைமையில் உள்ள குழுவால் கண்காணிக்கப்பட வேண்டும்.


7. அனைத்துப் பதவிகளுக்குமான பொது மாறுதல்கள் குறித்த கலந்தாய்வுப் பணிகளை விரைந்து முடித்து இதுகுறித்த அறிக்கையினை அரசுக்கு அனுப்பவும் ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.


(ஆளுநரின் ஆணைப்படி)


ந. சுப்பையன், 

அரசு செயலாளர்


பெறுநர்

ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை 600 005.

இயக்குநர்.பழங்குடியினர் நலம், சென்னை 600 005.

சம்பளக் கணக்கு அலுவலர் (கிழக்கு). சென்னை 600 008. முதன்மை மாநிலக் கணக்காயர்.


நகல்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை 600 009. 

முதலமைச்சர் அலுவலகம், சென்னை 600 009.

பள்ளிக்கல்வித் துறை, சென்னை 600 009. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலரின் தனிச் செயலர், சென்னை 600 009.

இருப்புக் கோப்பு / உதிரி நகல்.


//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//


பிரிவு அலுவலர் 




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-06-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:421

குறள்:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

பொருள்:

அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌.


பழமொழி :
முயற்சி திருவினையாக்கும்.

Effort never fails.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. இந்த கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வருவேன் .

2. எனக்கென ஒப்படைக்கப்பட்ட பணிகளை பொறுப்புணர்வுடன் சரியாக செய்து முடிப்பேன்.


பொன்மொழி :

எதிர்காலம், தங்கள் கனவுகளின் உறுதியை நம்புபவர்களுக்கே சொந்தமானது.


பொது அறிவு :

1. நிலவில் இருந்து கனிமங்களை சேகரித்து வர இஸ்ரோ மேற்கொள்ளும் திட்டம் எது?

சந்திராயன் 4.

2. உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் எங்கு அமைந்துள்ளளது?

ஜம்மு - காஷ்மீர். (செனாப் பாலம், 359 m)


English words :

Advance - put forward,முன்னுக்குப்போ.

Another - One more, இன்னுமொரு.


புவியியலும் சுற்றுசூழலும் :

பூமியையும் அதில் வாழும் மக்களையும் பற்றிப் படிக்கும் அறிவியல் புவியியல் ஆகும்.

புவியியலின் முக்கியப் பிரிவுகள்

🌍 இயற்கைப் புவியியல்

மலைகள்
ஆறுகள்
கடல்கள்
காலநிலை
நிலநடுக்கம், எரிமலைகள்

👨‍👩‍👧‍👦 மனிதப் புவியியல்

மக்கள் தொகை
நகரங்கள்
விவசாயம்
தொழில்கள்
போக்குவரத்து


ஜூன் 04

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.



நீதிக்கதை

நீதிக்கதை: “குருவியும் பள்ளியும்”

ஒரு கிராமத்தில் ஒரு சிறிய குருவி இருந்தது. அதற்கு தினமும் நண்பர்களுடன் விளையாடுவதுதான் பிடிக்கும். அருகில் இருந்த மற்ற குருவிகள் எல்லாம் பள்ளிக்குச் சென்று புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டன.

ஆனால் இந்தக் குருவி, “இப்போ விளையாடுறதுதான் முக்கியம். படிப்பு பிறகு பார்த்துக்கலாம்!” என்று சொல்லி பள்ளிக்குப் போகாமல் இருந்தது.

சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் பெரிய புயல் வந்தது. மற்ற குருவிகள் ஆசிரியர் கற்றுக் கொடுத்தபடி பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுத்து தப்பித்துக் கொண்டன. ஆனால் பள்ளிக்குச் செல்லாத குருவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மிகவும் சிரமப்பட்டது.

அப்போது அதன் நண்பர்கள் உதவி செய்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

அன்றிலிருந்து அந்தக் குருவி, “விளையாட்டு முக்கியம் தான். ஆனால் படிக்க வேண்டிய வயதில் படித்தால் தான் வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என்று உணர்ந்து தினமும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது.

நீதி:

படிக்கிற வயதில் கல்வி கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் வரும் சவால்களை அறிவுடன் சமாளிக்க முடியும். 📚✨


இன்றைய செய்திகள்

04.06.2026

🗒️தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்கள்  ரூ.342 கோடியில் குடிநீர் நீர்த்தேக்கம் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் .

🗒️ மாவட்டம் முழுவதும் சிங்கப்பெண்  விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தவேண்டும் -உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

🗒️25 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு...

🗒️ விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

🗒️ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவராக வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

🏀 விளையாட்டு செய்திகள்

பிரெஞ்சு ஓபன் -டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் உக்ரைனிய வீராங்கனை- வரலாறு படைத்த கோஸ்ட்யுக்


Today's Headlines

🗒️Tamil Nadu Public Works Department Minister N. Anand personally inspected drinking water reservoir projects worth ₹342 crore.

🗒️The High Court Bench has directed that "Singappen" awareness workshops be conducted across the district.

🗒️Heavy rainfall is likely in 25 districts.

🗒️The Central Government has decided to allocate ₹10,000 crore to help control aviation fuel prices.

🗒️Khalilur Rahman, Bangladesh's Foreign Minister, has been elected as the next President of the United Nations General Assembly.

🏀 Sports News

🗒️French Open Tennis: Marta Kostyuk created history by becoming the first Ukrainian woman player to advance to the semifinals of the French Open.



சிறப்பு நிலை ஆணை வழங்க சிறப்பு முகாம் - இயக்குநர் உத்தரவு




இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சிறப்பு நிலை ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 010190/ டி1/ 2026, நாள் : 03-06-2026 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண். 010190/டி1/2026, நாள் : 03.06.2026


பொருள்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணிகள் - தொடக்கக் கல்வி இயக்கக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் - இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அனுமதிக்க கோரும் - விண்ணப்பம் -தொடர்பாக.


பார்வை:


சங்கத்தினர்களிடமிருந்து .02.06.2026. வரப்பெற்ற கோரிக்கை மனு,


பள்ளிக் கல்வித் துறையில் 2004, 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இளநிலை, இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு பின்னர் அரசாணை நிலை எண்.99, பள்ளிக் கல்வி (வ.செ.) துறை, நாள்.27.06.2006-ன்படி 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.


மேற்கண்டவாறு பணிவரன்முறை செய்யப்பெற்ற ஆசிரியர்களுக்கு முறையே 01.06.2016-ல் தேர்வுநிலை 01.06.2026 -ல் சிறப்பு நிலை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வையில் கண்டவாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.


மேற்காண் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யும் வகையில் 01.06.2026-ல் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் ஆணை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இச்சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வுகளிலிருந்து புகார்கள் ஏதும் பெறப்பட்டால் தொடர்புடைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வினை மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிட்டு துரிதமாக வழங்குவதற்கான அறிவுளைகளை / வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநருக்காக


பெறுநர்:


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)



தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) மாணவர் சேர்க்கை



 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்


மாணவர் சேர்க்கை 2026


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) Diploma in Elemantary Education


2026 2027 மாணவர் சேர்க்கை (ஆன்லைன்/நேரடி)


Online சேர்க்கை https://scert.tnschools.gov.in

என்ற இணையவழி மூலம் 02.06.2026 to 15.06.2026 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

 16.06.2026 முதல் நேரடி சேர்க்கை இந்நிறுவனத்தில் நடைபெறுகிறது (Spot Admission)


வயது வரம்பு


1) பொதுப்பிரிவினர் 30வயது மிகாமல் இருக்க வேண்டும் SC/2) SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்


3) ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் (ம) கைம்பெண்கள் - 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்


விண்ணப்பகட்டணம்


SC/SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ 250.00 OC/BC/BCM/ MBC/DNC 5.500.00


சேர்க்கை கட்டணம்


ரூ.3500.00


கல்விக்கட்டணம்


ரூ 1500.00(ஆண்டு ஒன்றிக்கு)


குறிப்பு


தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:


https://scert.tnschools.gov.in


June 2026 - பள்ளி நாட்காட்டி



June 2026 - School Calendar 


2026 ஜூன் மாதம் "பள்ளி நாட்காட்டி"


ஜூன்-1ல் சிறப்பு நிலை பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்!


* 01.06.2026 - திங்கள் கிழமை முதல் 

03.06.2026 - புதன்கிழமை வரை

1-3 வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி


* 04.06.2026 - வியாழக்கிழமை

தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகள் திறப்பு

2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்


* 06.06.2026 - சனிக்கிழமை

BEO அலுவலகம் _ ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


* 13.06.2026 - சனிக்கிழமை

DEO அலுவலகம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


* 17.06.2026 - புதன்கிழமை

"இஸ்லாமியர் புத்தாண்டு"

ஹிஜ்ரி புத்தாண்டு

RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை


* 20.06.2026 - சனிக்கிழமை

CEO அலுவலகம்

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


* 26.06.2026 - வெள்ளிக்கிழமை

மொகரம் பண்டிகை

அரசு விடுமுறை



களஞ்சியம் செயலியில் Pay Drawn Particulars Download செய்யும் வழிமுறை



Pay Drawn Particulars Download Procedure in Kalanjiyam App


களஞ்சியம் செயலியில் Pay Drawn Particulars Download செய்யும் வழிமுறை 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2024-2025, 2025-2026, 2026-2027 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கும் Pay Drawn Particulars டவுன்லோட் செய்யலாம். 



தகவலுக்காக


* Kalanjiyam app இல் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்களுடைய மே - 2026 மாத ஊதியத்தை தெரிந்து கொள்ளலாம்.


* Pay slip ஐகான்க்கு பதிலாக கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.


* Kalanjiyam app - Reports - Pay drawn - 2026 : 2027 - Submit



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...