கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி



பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி


 ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம், எஸ்.எம், வி.எஸ்.எம், இன்று மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதியாகவும் (சி.டி.எஸ்) மற்றும் இராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்றார். 




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



அவர் தனது முன்னோடிகளின் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் பங்களிப்பையும் பாராட்டினார், மேலும் அவர்களின் சாதனைகளை மேலும் மேம்படுத்துவதாக உறுதியளித்தார். பாதுகாப்புப் படைகளின் மீது நாடு வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தேசியப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான 'முழு தேச அணுகுமுறை'யின் ஒரு பகுதியாக, அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படுவோம் என்று வலியுறுத்தினார். பாதுகாப்புப் படைகளில் ஒருங்கிணைப்பு, ஒன்றிணைப்பு மற்றும் ஒத்திசைவை மேம்படுத்துவதற்கும், தற்சார்பை அடைவதற்காக உள்நாட்டு ஆயுதங்களின் விரைவான வளர்ச்சி, அறிமுகம் மற்றும் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவதற்கும் பாடுபடுவேன் என்று அவர் வலியுறுத்தினார். திறன் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல, சிந்தனை மற்றும் செயலில் புதுமைகளைப் புகுத்தவும், அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றும் முப்படைத் தலைமைத் தளபதி அழைப்பு விடுத்தார். பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையைப் பாராட்டிய அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர நாரிகளின் நலனை உறுதி செய்வதோடு, அவர்களின் பயிற்சிக்குத் தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். அனைத்துத் தரப்பினரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், இராணுவ நெறிகளைக் கடைப்பிடிக்கவும், அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க அயராது பாடுபடவும் அவர் வலியுறுத்தினார்: பாதுகாப்பு அமைச்சகம்



General NS Raja Subramani, PVSM, AVSM, SM, VSM, assumed charge as the third Chief of Defence Staff (CDS) and Secretary, Department of Military Affairs today. 


He acknowledged the exemplary leadership and contribution of his predecessors and pledged to build upon their achievements. Expressing gratitude to the country for the trust reposed in the Defence Forces, General NS Raja Subramani asserted that they would work in unison with all stakeholders as part of the Whole-of-Nation approach to further strengthen national security. He emphasised that he would work towards enhancing jointness, integration and synergy in the Defence Forces and focus on accelerated development, induction and integration of indigenous weapons to achieve Aatmanirbharta. The CDS called for innovation in thought & action and greater collaboration among all stakeholders to drive capability development and modernisation. He complimented the members of the Defence Forces on their professionalism & operational readiness and reiterated his commitment to their training, while ensuring welfare of veterans and Veer Naris. He urged all ranks to embrace change, uphold the military ethos and relentlessly strive towards achieving excellence in all spheres: Ministry of Defence


Special TET - Model Question Bank - Child Development and Pedagogy - Paper II

 


சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 

மாதிரி வினா வங்கி 

Special Teacher Eligibility Test 

Model Question Bank

கல்வி உளவியல்

Educational Psychology 

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் கலை தாள் 2 (Child Development and Pedagogy - Paper II) 

தயாரிப்பு : DIET நாமக்கல் 

சமர்ப்பிப்பு : SCERT சென்னை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



180 உடற்கல்வி ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம்



சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 180 உடற்கல்வி ஆசிரியர்கள் (PET) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை


க.து.ந.க.எண்.D1/ சிறப்பு/2025


பெருநகர சென்னை மாநகராட்சி,

கல்வித்துறை.

நாள். 14.05.2026


சுற்றறிக்கை


பொருள்:


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை சென்னை தொடக்க, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக SMC உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை கோருதல் -தொடர்பாக.


பார்வை:


மாண்புமிகு மேயர் அவர்களின் 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பு எண். 2


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


வ.எண்     பள்ளிகள்     பணியிடங்கள்  கல்வித்தகுதி   சம்பளம்


1   சென்னை தொடக்கப்பள்ளிகள்     101   C.P.Ed/B.P.Ed    ரூ. 18,000


2     சென்னை நடுநிலைப்பள்ளிகள்      29     B.P.Ed/M.P.Ed    ரூ. 20,000


3 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்    50    B.P.Ed/M.P.Ed   ரூ. 25,000


மொத்தம்    180


எனவே, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கல்வி அலுவலர்


பெறுநர்:


1 இணை ஆணையர்(கல்வி) அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.


2 அனைத்து உதவி கல்வி அலுவலர்கள்


3. அனைத்து சென்னை தொடக்க நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்



அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு



 தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு 


தமிழ்நாடு அரசின் 181 கலை அறிவியல் கல்லூரிகளில்


BA BSC BCom & BBA படிக்க 


Online மூலம் விண்ணப்பிக்க

 29.05.2026 உடன் கால அவகாசம் முடிந்தது.


ஆனால்


விண்ணப்பிக்க தவறிய மாணவ மாணவிகளுக்கு


மீண்டும் ஒரு வாய்ப்பு👌👌👌


மீண்டும் ஜூன் 1 முதல்...  Online விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026 - 2027ம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் பெறப்படும்.


விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்கள் https://www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்


- உயர்கல்வித்துறை அமைச்சர் திரு விஸ்வநாதன் அறிவிப்பு


தமிழ்நாட்டின் புதிய DGPஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்



தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம்


தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரதோருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக (DGP & HoPF) மூத்த  இந்திய காவல் பணி அலுவலர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


அவரைப் பற்றிய முக்கிய விவரங்கள்:


அவரது பின்னணி மற்றும் பணிகள்

    இவர் 1994-ஆம் ஆண்டு பேட்ச் (Batch) சேர்ந்த தமிழ்நாடு Cadre IPS Officer ஆவார். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சட்டம் பயின்றவர்.


மத்திய அரசுப் பணி: 

தற்போதைய நியமனத்திற்கு முன்பு வரை, டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) சிறப்பு இயக்குநர் ஜெனரலாகப் (Special DG) பணியாற்றி வந்தார்.


தமிழ்நாட்டில் முக்கியப் பொறுப்புகள்: 

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் (Commissioner of Police), மதுரை மற்றும் திருநெல்வேலி மாநகர ஆணையர், மற்றும் சிபிசிஐடி (CB-CID) ஐஜியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 


நியமனம் குறித்த விவரங்கள்


பதவி மாற்றம்: தற்காலிகமாகப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்களுக்குப் பதிலாக மகேஷ்குமார் அகர்வால் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்.


பணிக்காலம்: உச்ச நீதிமன்றத்தின் 'பிரகாஷ் சிங்' வழிகாட்டுதலின்படி, இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து குறைந்தது 2 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.


மத்தியப் பணியில் இருந்த இவரை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் இவர் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.


5 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்



G.O. (Rt) No. 1889, Dated : 30-05-2026 , 10 I.A.S. Officers including District Collectors transferred - Tamil Nadu Government Order issued


மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு  அரசு அரசாணை வெளியீடு 


G.O. (Rt) No. 1889, Dated : 30-05-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


 

 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்


ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மை செயலராக மாற்றம்


சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்


அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளினி நியமனம்


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமனம்


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம்


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா நியமனம்


ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள் - பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அவர்கள்

 


ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! தயவுசெய்து வீரவசனம் வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் 


​பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) கட்டாயம் என 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

“​ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும், பணியில் தொடர்வதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்” எனவும், “இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம்” என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

​தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மூத்த ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தீர்ப்பு வந்த மறுநாளே, எனது தலைமையில் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து இரண்டு முறை விரிவான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினோம். ஒரு ஆசிரியர் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பினால் பாதிக்கப்படாத வகையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்குத் துணை நிற்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியதால், ஆசிரியர்கள் மனச்சுமையின்றி பணியாற்றும் சூழலைத் திராவிட மாடல் அரசு உருவாக்கியது.


​மேலும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது என்றும், மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.

​உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவினைத் தாக்கல் செய்வதற்கு, ‘வில்சன் அல்ல வின்சன்’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர்களோடு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


​திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசனை வழங்கினார். “இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மூலமாக ஆசிரியர் சமூகத்தைக் காத்து வந்தது தி.மு.க அரசுதான் என்பது ஆசிரியர்கள் அனைவரும் நன்கு அறிவர்.


​இத்தகைய நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மேலும் ஓராண்டு காலநீட்டிப்பும் வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளால், ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் முதல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்படாததால் நிர்வாகப் பணியிடங்களில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பல ஆண்டுகால அனுபவமுள்ள மூத்த ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாகவே அமையும்.


​திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.


​மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள் (Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (SCERT) ஒப்படைக்கப்பட்டது.

​ஆனால், ஜூலை மாதம் முதல் வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், இதுவரை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இணையவழிப் பயிற்சி குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.


​ஆகவே, ‘ரீல்ஸ்’ அரசாகத் திகழும் இன்றைய தமிழ்நாடு அரசு வீரவசனம் பேசி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுபோல, இவ்விரண்டையும் எளிதாகக் கடந்து சென்றுவிடாமல் உடனடியாக நம்முடைய ஆசிரியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

​ஒன்றிய அரசை வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரச்செய்து, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமாகப் பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் இணையவழிப் பயிற்சி குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.


​எங்கள் குடும்ப உறுப்பினர்களான ஆசிரியர்களுக்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


- பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் 



ரூ.5,64,000ஐ ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்



ரூ.5,64,000ஐ ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள் 


 சாலையோரத்தில் கிடந்த ரூ.5,64,000 பணம் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மதனுக்கு பாராட்டு


தானாராம் என்பவர் தனது பணப்பை காணவில்லை என புகார் அளித்திருந்ததை அடுத்து விசாரணைக்கு பின் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது


திருப்பூரில் சாலையில்  கட்டு கட்டாக கிடந்த ரூ. 5,64,000 பணத்தை  கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாநகர காவல் துணை ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.


மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்



மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்


ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.


அரசு பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.


புதிய பேருந்து அட்டை வழங்க அவகாசம் தேவைப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு.


அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.


பள்ளிகள் தொடங்கும் / முடியும் நேரம் வரை அரசு பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க குழுக்கள் நியமனம்.


உரிய நிறுத்தங்களில் நிறுத்தி மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்க ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுரை - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்


மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு



G.O. (Rt) No. 1883, Dated : 29-05-2026 , 30 I.A.S. Officers including District Collectors transferred - Tamil Nadu Government Order issued


மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு  அரசு அரசாணை வெளியீடு 


G.O. (Rt) No. 1883, Dated : 29-05-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.


சுகாதாரத்துறை துணைச் செயலாளராக அழகுமீனா நியமனம்.


இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக டி.ஜி.வினய் நியமனம்.


நீதித்துறை (செலவினம்) செயலாளராக லலிதா நியமனம்.


தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா நியமனம்.


தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் நியமனம்.


தமிழ்நாடு கிராமபுற வளர்ச்சித் திட்ட தலைமை செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி நியமனம்.


ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லி நியமனம்.


வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ் நியமனம்.


செங்கல்பட்டு ஆட்சியராக வீரப்பன் நியமனம்.


கன்னியாகுமரி ஆட்சியராக பிரதாப் நியமனம்.


திருவண்ணாமலை ஆட்சியராக வந்தனா கர்க் நியமனம்.


தருமபுரி ஆட்சியராக சரவணன் நியமனம்.


தேனி ஆட்சியராக வைத்தியநாதன் நியமனம்.


மதுரை ஆட்சியராக ஆகாஷ் நியமனம்.


நாகை ஆட்சியராக பிரவீன்குமார் நியமனம்.


நாமக்கல் ஆட்சியராக மதுபாலன் நியமனம்


ராணிப்பேட்டை ஆட்சியராக பிரியா நியமனம்.


கள்ளக்குறிச்சி ஆட்சியராக பத்மஜா நியமனம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி

பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி  ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம், எஸ்.எம், வி.எஸ்.எம், இன்று மூன...