கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொலை வழக்கில் 105 வயது முதியவரை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்

 


கொலை வழக்கில் 105 வயது முதியவரை  விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 105 வயது முதியவர் ராசிக் சந்திர மொண்டல் (Rasik Chandra Mondal) என்பவரை வயது முதுமை மற்றும் உடல் நலக் குறைவைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் நிரந்தரமாக விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.முக்கிய விவரங்கள்:வழக்கின் பின்னணி: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசிக் சந்திர மொண்டல். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு சொத்துப் பிரச்சினை காரணமாகத் தனது சகோதரரைக் கொன்றதாகக் கூறLப்பட்ட கொலை வழக்கில் கைதானார்.தண்டனை: இவருக்கு 1994 ஆம் ஆண்டில் கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.நீதிமன்றப் போராட்டம்: 2018-ல் கொல்கத்தா உயர் நீதிமன்றமும், 2019-ல் உச்ச நீதிமன்றமும் இவரது தண்டனை ரத்து மனுவைத் தள்ளுபடி செய்தன.விடுதலைக்கான காரணம்: கடந்த 2020-ல் இவருக்கு 99 வயதானபோது முதிய வயது மற்றும் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக முன்கூட்டியே விடுதலை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு நவம்பரில் இவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு: தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, "அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரே, இனி அவரைச் சிறைக்கு அனுப்ப முடியாது" எனக் கூறி, 2024-ன் இடைக்கால ஜாமீனை நிரந்தரமாக்கி மீதமுள்ள தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.


மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - TNPSC அறிவிப்பு வெளியீடு


மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு 


மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.


நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 



மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மதுரை ஆசிரியர் POCSO சட்டத்தில் கைது



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் POCSO சட்டத்தில் கைது


மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 


2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 


தனியார் பள்ளி மாணவிகளுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


G.O.Ms.No.143 - SMC Reconstitution Guidelines & Procedures



2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு


G.O.Ms.No.143 , Dated : 19-08-2026 - SMC Reconstitution Guidelines & Procedures


Government Order issued providing guidelines for the Reconstitution of School Management Committees for the years 2026–2028



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SMC Reconstitution Process 2026-2028



பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செயல்முறை 2026-2028


SMC Reconstitution Process 2026-2028



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்



பணம் எடுத்தால் கட்டணம்


SBI-ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் அடுத்த பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15+GST கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிப்பு.


 எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்


சாதாரண சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிகளை திருத்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.


ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் உள்ளிட்டவற்றில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு.


5வது முறை முதல் பணம் எடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் ₹15+ ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.


சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன - பாரத ஸ்டேட் வங்கி (SBI)



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு



 புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு


டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி.


புதிய சிம் கார்டுகள் மீதான சோதனைகளை கடுமையாக்கும் ஒன்றிய அரசு.


'நிகழ்நேர சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும்' என அறிவிப்பு.


'புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளரை சரிபார்க்க வேண்டுமென' தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.


'ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வைத்திருக்கலாம்'


ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மக்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள்.


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும்விதமாக புதிய சிம் கார்டுகள் மீதான சோதனையை கடுமையாக்கப் பட்டுள்ளது என கூறப்படுகிறது.



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு


ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது


வந்தே மாதரம், தேசியகீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும்; மாநில பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை என பதில்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொலை வழக்கில் 105 வயது முதியவரை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்

  கொலை வழக்கில் 105 வயது முதியவரை  விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 105 வயது முதியவர் ராசிக் சந்திர மொண்டல் (Rasik C...