கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shriram Finance Student Scholarship Program 2026–2027

 


Dear All,


We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027.


Kindly share this scholarship information in your WhatsApp groups and circulate it among eligible students, parents, schools and your contacts so that deserving students can benefit from this opportunity.


Thank you for your support.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரிக்க 40,000 லஞ்சம் பெற்றதாக BEO மீது புகார் - நாளிதழ் செய்தி



ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் 40,000 லஞ்சம் பெற்ற மதுரை வட்டாரக்கல்வி அலுவலர், லண்டனில் இருந்து ஆசிரியரது மகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் புகார் - நாளிதழ் செய்தி 


மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, லண்டனில் உள்ள ஆசிரியை மகன் முதல்வர் விஜய்க்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.


விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய். இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முத்துக்குமார் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றார் என புகார் அளித்தார். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.


இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த 'லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்' தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண் மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.


அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: 

என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று (No Objection, No Due Certificate) பெற BEOக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில், மாத ஓய்வூதியம் கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், ரூ.40 ஆயிரத்தை திரும்ப பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


சீனித்தாய் கூறுகையில், ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே பி.இ.ஓ.,வுக்காக என்னிடம் தலைமையாசிரியர் வாசுதேவன் பேசி இத்தொகையை பெற்றார். துபாயில் உள்ள என் மற்றொரு மகன் ரோஹித் தான் ரூ.30 ஆயிரத்தை வாசுதேவனுக்கு அனுப்பினார். நான் ரூ.5 ஆயிரம் பி.இ.ஓ.,விடம் நேரில் கொடுத்தேன். என் புகார் மீது சரிவர விசாரிக்கவில்லை என்றார்.


சம்பந்தப்பட்ட முத்துக்குமார் கூறுகையில், இதுகுறித்த புகார் மீது திருமங்கலம் தொடக்கக் கல்வி DEO., விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்து விட்டார். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, வாங்கவில்லை என்றார்.



வெளிப்படையான விசாரணை வேண்டும்

இப்பிரச்னை குறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாவட்ட செயலாளர் ஜெயசந்திரனும் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய கருத்துரு தயாரித்துக்கொடுக்கிறோம் என்ற பெயரில் பலரிடம் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. டி.இ.ஓ., விசாரணையில் சம்பந்தப்பட்ட பி.இ.ஓ., அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவரின் கருத்து கேட்கப்படவில்லை.


IFHRMS., நடைமுறைக்கு வந்த பின் பி.இ.ஓ., அலுவலக எழுத்தரே பி.இ.ஓ.,வின் 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' மூலம் ஓய்வூதிய கருத்துருவை தயாரிக்க முடியும். இதற்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் 'ஒரு வாரத்திற்குள் நீங்களே கருத்துருவை வெளியே தயாரித்து கொண்டு வாருங்கள்' என கூறுவதால், வேறு வழியின்றி பணம் கொடுக்கும் சூழல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.


அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்கக் கூடாது என முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஓய்வு ஆசிரியையின் இப்புகார் மீது கல்வி அதிகாரிகள் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.




National Science Seminar 2026 தொடர்பான தகவல்கள்



National Science Seminar (for Students from Classes VIII to X) - 2026 - Reg


National Science Centre, Delhi Ministry of Culture, Govt. of India Pragati Maidan, New Delhi-110001


(A Unit of National Council of Science Museums)


NATIONAL SCIENCE SEMINAR - 2026 (For students from Classes VIII to X)


Basic informations for organising Science Seminar up to State/UT Level


Topic of the Seminar:


Indian Energy Basket 2047: Prospects and Challenges भारतीय ऊर्जा परिदृश्य 2047: संभावनाएँ एवं चुनौतियाँ


Organised by:


National Council of Science Museums (NCSM) Ministry of Culture, Govt. of India Sector-V, Block-GN, Bidhan Nagar Kolkata 700 091


Venue of National Science Seminar: National Science Centre, Delhi


(A Unit of NCSM) Near Gate No. 4, Pragati Maidan, Bhairon Marg, New Delhi-110001


Phone No.: +91-7428693715-16


E-mail: educationnscdelhi@gmail.com


Website: www.nscd.gov.in


Date of National Science Seminar: 30th October 2026


RULES AND REGULATIONS


Introduction: The objective of the Science Seminar is to inculcate a spirit of scientific enquiry


and analytical thinking in the minds of young students. The Science Seminar will be held on a competitive basis in each State and Union Territory. The Seminar is organized generally at School, Block/Taluk, District and State level before culminating at the National Level. Winners from each School participate at Block/Taluk level seminars and winners of Block/Taluk level seminars participate at the District level seminars. A maximum of 2 (Two) winners from each District participate in each State/UT level Seminar and only one winner from each State/Union Territory is eligible for National level Science Seminar, which will be held at National Science Centre, Delhi on 30th October 2026.


Participants: High School Students from class VIII to Class X only


Language: English, Hindi or any recognized Indian language


Duration: Each participant shall make the presentation on the given topic for a maximum duration of 6 minutes. This will be followed by a 2 minute Question-Answer Session with the Judges on the same topic. Each participant will be asked 3 questions in the Question-Answer


session after his/her presentation by the judges and the participant will be required to answer any 2 of the questions within two minutes.


Supporting Visuals: The maximum number of supporting visuals/slides/charts etc. permitted per presentation is restricted to 5 nos. altogether. The details of these are as given below:


a) Charts/Posters-maximum size permitted is 850 mm (width) x 600 mm (height). All charts/posters are to be mounted one on top of other-as done in a calendar. One side of the chart/poster is considered as one unit. There should be no pop-ups.


b) Computer based Static slides (MS Office 2007 or higher in ppsx, .pptx, .ppt, .pps format) without additional features like pop-up, animation, rollovers, etc. No interaction within one slide is permitted.


Grading: For evaluating and grading the presentations of the participants, Following criteria will be judged:


1) Scientific Content in presentation - 40 marks


2) Novelty in use of visuals - 15 marks


3) Fluency in speech - 25 marks


4) Ability to answer questions


(a) Written Aptitude Test - 10 marks


(b) Answers to oral questions - 10 marks


Total: 100 marks.


Note: 3D models, animation, pop-ups, rollovers, videos and films in any form are not allowed.


Prizes: As decided by the host organisers of State/Union Territory Level Science Seminars.


Date: As announced by the State/UT organizing authority (like State/UT Education Dept./SCERT/DSE/DGE/SISE/SIE/S&T etc.). However, all contests in States/UTs must be completed on or before 30th September 2026.


(This is mandatory in order to enable the participants to prepare for National Level Seminar).


Special Note: At the time of deliberation, no Teacher or Escort shall be allowed to assist the participant on the dais except for physically challenged students.


INFORMATION TO THE HOST (STATE/UT) ORGANISER:


The details of the Seminar held at each District level and State/UT level may be sent to National Science Centre, Delhi along with photographs of the event. During the State/UT Level Competition, a banner showing the details of the sponsor (to be communicated by us later) may be displayed and a photograph of the banner with the participants may be sent to educationnscdelhi@gmail.com.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Perunthalaivar Kamarajar Breakfast Scheme | G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026

 


அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயரிடப்படுதல் - அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் - அரசாணை வெளியீடு


G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026 - Naming the Chief Minister's Breakfast Scheme as the "Perunthalaivar Kamarajar Breakfast Scheme" - Extension of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme to students studying in Classes 6 to 8 in all government and government-aided schools - Government Order issued



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிடப்படுதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந.4-1) துறை


அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஆனி 31


படிக்கப்பட்டவை


1. அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.07.2022.


2. அரசாணை (நிலை) எண்.01. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 13.01.2023.


3. அரசாணை (நிலை) எண்.33, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 07.06.2023.


4. அரசாணை (நிலை) எண்.60. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-4-1) துறை, நாள் 11.09.2023.


5. அரசாணை (நிலை) எண்.17, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 11.03.2024


6. அரசாணை (நிலை) எண்.71. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.06.2025.


7. அரசாணை (நிலை) எண்.96, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 08.10.2025.


8. தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.229, நாள் 15.06.2026.


9. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 3060546/சஉதி-2 (1)/2026, நாள் 03.07.2026.


ஆணை:-


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்குவதற்காக முதற்கட்டமாக முதலமைச்சரின் உணவுத் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிடப்பட்டது. காலை


2. பின்னர், மேலே இரண்டு முதல் ஆறு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி, தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 19,34,230 மாணவ மாணவியருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், 15.06.2026 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் LOITGOOT GU மாணவியருக்கு. தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று முதல் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


4. இதனைத் தொடர்ந்து, மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர். இத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15.14,274 மாணவ/மாணவியர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியையும், இதற்கான தொடரும் செலவினத்திற்காக ரூ.240.01 கோடியும் தொடரா செலவினத்திற்காக ரூ.28.71 கோடியும் ஆக மொத்தம் ரூ.268.72 கோடிக்கான நிதி அனுமதியையும் கோரியுள்ளார்.


5. மேலே பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-


i. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுகிறது.


ii . தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் (இணைப்பு-1-ல் உள்ளவாறு) 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. 


iii. இத்திட்டம் இணைப்பு-II-இல் உள்ள ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுகிறது.


iv. மாணவ/மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/மாணவியருக்கு. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில். ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00.000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.


v. 2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13.57.25.000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் ரூ.217,63,09,395/க்கான (ரூபாய் இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.



முழுமையான அரசாணை


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TAPS Interim Payout | IFHRMSல் செயல்பாட்டு வழிமுறை (Flow chart)

 


கருவூலம் மற்றும் கணக்குத் துறை - தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow Chart) அனுப்புதல் தொடர்பாக


01.01.2026ன் படி அனைத்து பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு TAPS திட்டத்தின் படி பணம் வழங்குதல்


 பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பாக கருவூல கணக்குக் துறை கூடுதல் வழி காட்டு நெறிமுறைகள் வெளியீடு , நாள் : 22.07.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருவூலக் கணக்கு துறை


அனுப்புநர்:

இயக்குநர்,

கருவூலக் கணக்கு இயக்குநரகம்,

(ப.ஓ.திபிரிவு), 571, 5-வதுதளம். பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, நந்தனம், சென்னை -35.


பெறுநர்:

அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் /சம்பளக் கணக்கு அலுவலர்கள் /கருவூல அலுவலர்கள்.


ந.க.எண்.11711/ப. ஓ.தி./2026, நாள்:22.07.2026


ஐயா/அம்மையீர்,


பொருள்:


கருவூலம் மற்றும் கணக்குத் துறை இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow chart) அனுப்புதல்-தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை எண்.7 நிதி (HTC) துறை, நாள்: 09.01.2026.


2. அரசாணை எண் 111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026.


3. அரசுக் கடித எண் 1419011/ நிதித் துறை (TAPS) /2026-3, நாள்: 02.07.2026.


4 இவ்வலுவலக கடித எண்:11711/ ப.ஓ.தி. /2026, நாள்:10.07.2026


01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற /பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்திட ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து, இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பான செயல்பாட்டு வழிமுறை (Flow chart) இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


எனவே. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு மேற்குறிப்பிட்ட செயல்பாட்டு வழிமுறையினை (Flow Chart) தெரிவித்து, அவற்றை முறையாக பின்பற்றி இடைக்கால தொகை (Interim payout) வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அவ்வாறு இடைக்கால தொகை (Interim payout) வழங்கப்பட்ட விவரம் குறித்த அணைத்து தகவல்களையும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் உள்ளவாறு தனிப்பதிவேடு கொண்டு உரிய முறையில் எவ்வித விடுபாடும் இன்றி பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும் மண்டல இணை இயக்குநர்கள் இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் நேரடியாக செயல்பாட்டினை திறனாய்வு செய்திடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


இணைப்பு : மேற்கூறியவாறு


ஓம்/-இயக்குநர்,


// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//


கருவூலக் கணக்கு இயக்குநரகம்.


முதன்மை கணக்கு அலுவலர்


ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு (TET Exemption) தொடர்பாக மக்களவையில் (Lok Sabha) கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அளித்துள்ள பதில்



ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு (TET Exemption) தொடர்பாக மக்களவையில் (Lok Sabha) கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அளித்துள்ள பதில்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மக்களவையில் (Lok Sabha) கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு மத்திய கல்வி அமைச்சகம் அளித்துள்ள பதில் 


 முக்கியக் கருத்துகளைத் தெளிவாகவும் எளிமையாகவும் கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளது


1. என்ன கேள்வி கேட்கப்பட்டது? (கேள்வி எண்: 212)

உறுப்பினர்: திரு. E. துகாராம்

தலைப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) தாக்கம்

கேள்விகள்:

TET கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு (கர்நாடகா உட்பட) இந்த விதியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அரசு ஆய்வு செய்துள்ளதா?

நாட்டில் அத்தகைய ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

TET அமலுக்கு வரும் முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE Act, Section 23) திருத்தம் செய்யப்படுமா?

இந்த ஆசிரியர்கள் குறித்த காலத்திற்குள் TET தேர்ச்சி பெற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அவர்களுக்கு ஏதேனும் தற்காலிக விலக்கு/ஆறுதல் (Transitional relief) அளிக்கும் திட்டம் உள்ளதா?

2. மத்திய அரசு அளித்த பதில்

பதிலளித்தவர்: மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி

மாநிலங்களின் அதிகாரம்:

கல்வி என்பது பொதுப்பட்டியலில் (Concurrent List) உள்ளது. எனவே ஆசிரியர்கள் நியமனம், அவர்களின் சேவை விதிகள் மற்றும் TET கட்டாயமாவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே வருகின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி (01.09.2025), இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE Act, 2009) பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற TET தேர்வு என்பது கட்டாயமான குறைந்தபட்சத் தகுதியாகும்.

கால அவகாசம் நீட்டிப்பு:

உச்ச நீதிமன்றம் தனது மறுஆய்வு மனுக்களின் மீதான தீர்ப்பில் (29.05.2026), ஆசிரியர்கள் TET தகுதியைப் பெறுவதற்கான கால அவகாசத்தை 31.08.2027-லிருந்து 31.08.2028 வரை நீட்டித்துள்ளது.

ஆண்டிற்கு 2 முறை TET தேர்வு:

ஆசிரியர்கள் இந்த குறைந்தபட்சத் தகுதியைப் பெற ஏதுவாக, சம்பந்தப்பட்ட அரசுகள் ஆண்டிற்கு இரண்டு முறை (சுமார் 6 மாத இடைவெளியில்) தவறாமல் TET தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

💡 சுருக்கமாக:

முக்கியச் செய்தி: TET கட்டாயமாவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக உள்ளது. ஆனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் 31 ஆகஸ்ட் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மாநில அரசுகள் ஆண்டிற்கு 2 முறை TET தேர்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மத்திய அரசு அளித்துள்ள பதிலில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்:

 * சட்டத் திருத்தம் இல்லை: கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23-ல் (Section 23) திருத்தம் கொண்டுவந்து, பழைய ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை.

 * உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது: உச்ச நீதிமன்றம் TET தேர்வைக் கட்டாயமாக்கித் தீர்ப்பளித்துள்ளதால், சட்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக நீதிமன்றத் தீர்ப்பையே அரசு பின்பற்றுகிறது.

 * விலக்கு அல்ல, கால அவகாசம் மட்டுமே: ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் TET தேர்ச்சி பெற 31 ஆகஸ்ட் 2028 வரை கால அவகாசத்தை நீட்டிப்பது மற்றும் ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு நடத்துவது மட்டுமே தற்போதைய தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், TET தேர்வில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது; ஆனால் தேர்ச்சி பெற கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


GOVERNMENT OF INDIA

MINISTRY OF EDUCATION

DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY

LOK SABHA

UNSTARRED QUESTION NO:- 212

ANSWERED ON-20/07/2026

Impact of Teacher Eligibility Test

212. Shri E Tukaram:

Will the Minister of EDUCATION be pleased to state:

(a) whether the Central Government has assessed the impact of the Teacher Eligibility Test (TET) requirement on in-service teachers in the country including Karnataka who were  appointed before the TET was made mandatory;

(b) if so, the number of such teachers in the country, State/UT-wise including Karnataka;

(c) whether the Central Government proposes to amend Section 23 of the Right of Children  to Free and Compulsory Education Act, 2009, to provide appropriate relief to teachers  appointed before the TET requirement came into force, if so, the details thereof; and

(d) the steps taken or proposed by the Central Government to help such teachers qualify the TET before the prescribed deadline, including ensuring that TET examinations are conducted regularly; and

(e) whether any transitional relief is under consideration and if so, the details thereof?


ANSWER

MINISTER OF STATE IN THE MINISTRY OF EDUCATION

(SHRI JAYANT CHAUDHARY)

(a) to (e): Education is a subject in the Concurrent List of the Constitution and the  recruitment, service conditions and deployment of teachers fall within the administrative  domain of the respective State Governments and Union Territory Administrations. 

Accordingly, the data regarding the number of in-service teachers, including those in the State of Karnataka, who were appointed prior to the introduction of the mandatory Teacher Eligibility Test (TET), is maintained by the respective State Governments and Union Territory Administrations.

The Hon'ble Supreme Court of India, vide its judgment dated 01.09.2025, inter alia, held that the Teacher Eligibility Test (TET) is one of the minimum qualifications prescribed under  Section 23 of the Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009, and is mandatory for appointment as a teacher in schools covered under the Act. The order of the Hon'ble Supreme Court may be accessed at the following link: 

https://api.sci.gov.in/supremecourt/2018/36466/36466_2018_9_1501_63764_Judgement_01-Sep-2025.pdf


Subsequently, while disposing of the review petitions in the matter, vide judgment dated  29.05.2026 the Hon'ble Supreme Court extended the timeline for acquisition of TET  qualification from 31.08.2027 to 31.08.2028. The judgment dated 29.05.2026 of the Hon'ble  Supreme Court may be accessed at the following link:

https://api.sci.gov.in/supremecourt/2025/53434/53434_2025_7_1501_71637_Judgement_29-May-2026.pdf

The Hon'ble Supreme Court, in the judgment dated 29.05.2026, has further observed that the  respective appropriate Governments/authorities should endeavour to conduct the Teacher  Eligibility Test (TET) periodically, preferably twice every year, with an interval of  approximately six months between successive examinations, so as to afford eligible teachers a reasonable opportunity to comply with the prescribed minimum qualification.


"நான் உயிரிழந்திருக்கலாம் ; இல்லை என்றால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம்" - உண்மையான நாயகனின் செயல்



 "நான் உயிரிழந்திருக்கலாம் ; இல்லை என்றால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம்" - உண்மையான நாயகனின் செயல்


"I could have lost my life; otherwise, that child might have survived" | The incident of a true hero


ஒன்றில் நான் இறந்திருப்பேன்… இல்லை என்றால் அந்தப் பெண் குழந்தை உயிர் பிழைத்திருப்பாள். — இந்த ஒரே எண்ணத்தோடு பெரியாறு ஆற்றில் குதித்த தனியார் பேருந்து ஓட்டுநர் அஜேஷுக்கு இன்று கேரளா முழுவதும் சல்யூட் அடித்து வருகிறது. 


எர்ணாகுளம் மாவட்டம், வடக்கன் பரவூர் அருகே உள்ள மாஞ்சாலி பாலத்தில் நடந்த இந்தச் சம்பவம் மனிதநேயத்திற்கும், தன்னலமற்ற துணிச்சலுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. 


நீட் (NEET) தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் கடும் மனவேதனையில் இருந்த 19 வயது பள்ளி மாணவி, மாஞ்சாலி பாலத்தில் இருந்து பெரியாறு ஆற்றில் குதித்தார். தென்மேற்கு பருவமழை காரணமாக ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கும், வேகமான நீரோட்டமும் இருந்ததால், சில நொடிகளில் அந்த மாணவி நீரில் மூழ்கத் தொடங்கினார். 


இந்தக் காட்சியை பார்த்த பொதுமக்கள் பலர் பாலத்தின் மீது திரண்டனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான அந்த வெள்ளநீரில் இறங்கி காப்பாற்ற யாருக்கும் தைரியம் வரவில்லை.


அந்த நேரத்தில், பரவூர்–அங்கமாலி வழித்தடத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் 41 வயதான ஓட்டுநர் அஜேஷ், பாலத்தின் மீது ஏற்பட்டிருந்த அசாதாரண கூட்டத்தைக் கவனித்தார். ஏதோ விபத்து நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த அவர், பேருந்தை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்திவிட்டு, நடத்துநருடன் பாலத்திற்கு விரைந்து ஓடினார். 


கீழே பார்த்தபோது, கடும் நீரோட்டத்தில் மாணவி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டார். 


ஒரு நொடியும் யோசிக்காமல், அஜேஷ் பாலத்தில் இருந்து நேராக பெரியாறு ஆற்றில் குதித்தார்.


அந்த ஆபத்தான நீரோட்டத்தை எதிர்த்து நீந்திச் சென்ற அஜேஷ், முற்றிலும் சோர்ந்து கொண்டிருந்த மாணவியை பாதுகாப்பாக தனது கைகளில் தாங்கிக் கொண்டார். பின்னர் வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்து சுமார் 250 மீட்டர் தூரம் நீந்தி, அவரை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தார். 


இது மிகுந்த துணிச்சலும், உயிரையே பணயம் வைக்கும் மனஉறுதியும் தேவைப்படும் ஒரு அபூர்வமான மீட்புப் பணியாகும். 


கரைக்கு கொண்டுவரப்பட்ட மாணவி, பேருந்து ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சரியான நேரத்தில் அஜேஷ் எடுத்த இந்த வீரத் தீர்மானம்தான் இன்று ஒரு இளம் உயிரை மீட்டெடுத்துள்ளது. 



பின்னர் அவர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்தன.


ஒன்றில் நான் உயிரிழந்திருப்பேன்… இல்லை என்றால் அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருப்பாள். அந்த நேரத்தில் என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை.


இந்தச் சம்பவம் வெளியாகியதிலிருந்து, சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடையிலும் அஜேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. புகழுக்காகவோ, பாராட்டுக்காகவோ அல்ல… ஒரு மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக தனது உயிரையே பணயம் வைத்த இந்த சாதாரண மனிதர், இன்று கேரளாவின் பெருமையாக உயர்ந்துள்ளார். 


உயிர்களைக் காப்பவர்களுக்கு பெரிய பதவிகள் தேவையில்லை… பெரிய மனசும், சரியான நேரத்தில் செயல்படும் துணிச்சலும் இருந்தால் போதும். 


தனது உயிரையே பணயம் வைத்து ஒரு இளம் உயிரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் அஜேஷுக்கு மனமார்ந்த சல்யூட்! ❤️


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Revised Budget of the Government of Tamil Nadu for 2026 | Press Release

 


தமிழ்நாடு அரசு திருத்திய நிதிநிலை அறிக்கை 2026 தாக்கல் செய்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு


Announcement regarding the presentation of the Revised Budget of the Government of Tamil Nadu for 2026


ஆகஸ்ட் 5 அன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்




ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது


 -  சபாநாயகர் அறிவிப்பு


* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2026-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அதாவது. 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளது.


* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-. 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 'நாள்' குறித்துள்ளார்கள்.


மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.



தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009.

21.7.2026

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shriram Finance Student Scholarship Program 2026–2027

  Dear All, We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027. Kindly share this scholarship information ...