கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave



 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு 


அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு


அரசு பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டிற்கான அரசாணை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் - மாவட்ட ஆட்சியர்



Official records are essential for the cash held by government employees – District Collector


 அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் -  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் பணம் குறித்த தகவல்கள் "Personal Cash Register" என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.


அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.


இந்தப் பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் சுற்றறிக்கை.


கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதான் - சென்னை உயர்நீதிமன்றம்



Compassionate appointment is a concession – Madras High Court


கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதான் - சென்னை உயர்நீதிமன்றம்


கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதானே தவிர, அரசமைப்பு நியமனத் திட்டம் அல்ல.


“கருணை அடிப்படையில் அரசுப் பணி என்பது சலுகையே தவிர, அரசியல் சாசன விதி அல்ல; எந்த தகுதியும் பார்க்காமல் பணி வழங்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது”


உயிரிழந்த அரசு ஊழியரின் மகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி வழங்க, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து.


தகுதியான குடும்பத்தினரே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதை உறுதி செய்ய, திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


தொழில்நுட்ப பிரிவில் 170 பணியிடங்கள் - TNPSC அறிவிப்பு வெளியீடு



TNPSC தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் 170 அரசு வேலைகள் - விண்ணப்பம் தொடங்குகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு

 


ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு


சென்னை, கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 சிறப்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் அரசாணை எண்.259, நாள் 07.08.2026 மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Prevention of Corruption Act-ன் கீழ், காவல்துறை மற்றும் DVAC விசாரணை செய்யும் வழக்குகளை இந்த சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கும்.


பயிற்சி முடித்த நேரடி நியமன மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு - செயல்முறைகள் வெளியீடு

 



Allocation of posting places for directly recruited District Educational Officers upon completion of training – DSE Proceedings


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் (மு.கூ.பொ) செயல்முறைகள், சென்னை-06.


முன்னிலை திருமதி.ந.லதா


ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள்.31.08.2026.


பொருள்:


தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021,  தீர்ப்பாணை நாள். 29.04.2024) தெரிவுப்பட்டியலின்படி மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.


பார்வை:


1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.எஸ்.நிர்மல்குமார் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு எண். (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021 I. இன் மீதான தீர்ப்பாணை நாள்.  29.04.2024


2. அரசாணை (3டி) எண்.01. பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள்.11.02.2026.


3. சென்னை -06, தமிழ்நாடு செயல்முறைகள்.  பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள் .19.02.2026.


4. அரசாணை (நிலை) எண். 146, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள் 25.08.2026. 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார், (2)திரு.Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும், நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.


2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும், அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு



கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு.


வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2026 ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


முன்னதாக ஆகஸ்ட் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் பலர் e-KYC செய்யாமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 85% வாடிக்கையாளர்கள் e-KYC முடித்துள்ள நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


* e-KYC எப்படி செய்வது?


உங்கள் LPG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் ஆன்லைனில் செய்யலாம்.

ஆதார் அடிப்படையிலான Face Authentication மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.


ஆன்லைனில் சிரமம் இருந்தால் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று e-KYC செய்யலாம்.

நேரில் செல்லும்போது ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.


ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் e-KYC-ஐ முடித்துக் கொள்ளுமாறு LPG வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


10ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு தபால் துறையில் 25,000+ வேலைவாய்ப்பு



10-ம் வகுப்பு கல்வித்தகுதி போதும் - தபால் துறையில் 25,000+ வேலைவாய்ப்பு - தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள்


இந்திய தபால் துறையில் ВРМ, АВРM, Dak Sevak  பணிகளுக்கு 25,000- மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள் உள்ளன.


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அடிப்படை கணினித் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது 18-40; 2026 செப்டம்பர் 21 அடிப்படையில் கணக்கிடப்படும். விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.


OTR: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை; விண்ணப்பம் செப்டம்பர் 2 முதல், கடைசி நாள் செப்டம்பர் 21 மாலை 5 மணி.


10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மூலம் தேர்வு; பின்னர் ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.


BPM- . 12,000-.29,380, ABPM/Dak Sevak- ரூ.10,000-ரூ.24,470 வரை TRCA வழங்கப்படும்.


விண்ணப்பிக்க: https://indiapost.gov.in/




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...