பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு.
வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2026 ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் பலர் e-KYC செய்யாமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 85% வாடிக்கையாளர்கள் e-KYC முடித்துள்ள நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
* e-KYC எப்படி செய்வது?
உங்கள் LPG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் ஆன்லைனில் செய்யலாம்.
ஆதார் அடிப்படையிலான Face Authentication மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
ஆன்லைனில் சிரமம் இருந்தால் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று e-KYC செய்யலாம்.
நேரில் செல்லும்போது ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.
ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் e-KYC-ஐ முடித்துக் கொள்ளுமாறு LPG வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு கல்வித்தகுதி போதும் - தபால் துறையில் 25,000+ வேலைவாய்ப்பு - தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள்
இந்திய தபால் துறையில் ВРМ, АВРM, Dak Sevak பணிகளுக்கு 25,000- மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அடிப்படை கணினித் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது 18-40; 2026 செப்டம்பர் 21 அடிப்படையில் கணக்கிடப்படும். விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.
OTR: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19 வரை; விண்ணப்பம் செப்டம்பர் 2 முதல், கடைசி நாள் செப்டம்பர் 21 மாலை 5 மணி.
10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மூலம் தேர்வு; பின்னர் ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.
BPM- . 12,000-.29,380, ABPM/Dak Sevak- ரூ.10,000-ரூ.24,470 வரை TRCA வழங்கப்படும்.
விண்ணப்பிக்க: https://indiapost.gov.in/
நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு மத்தியிலும், திரிசூலி ஆற்றில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கர் ஒன்றை உடைத்து, அதற்குள் இருந்த பணத்தை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 29 பேரைப் பிடித்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாயை மீட்டுள்ளது.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவாவிலிருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த வங்கி லாக்கர், தாடிங் மாவட்டத்தில் உள்ள பெல்குகோலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு வருவதற்குள், உள்ளூர் வாசிகள் சிலர் அந்த லாக்கரை உடைத்து பணத்தைக் திருடிச் சென்றதாகக் போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நேபாள் போலீஸார் மற்றும் ஆயுதப் படைப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது அவர்களிடமிருந்து 92 லட்சத்திற்கும் அதிகமான நேபாளி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 29 பேரும் தாடிங் மாவட்டக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
லாக்கரில் எவ்வளவு பணம் இருந்தது என்பதை போலீஸார் இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும், அந்த லாக்கரின் உரிமையாளர் யார், அதிகாரிகள் வருவதற்கு முன்பு வேறு யாரேனும் பணத்தை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க காதணியை திருடியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் - ஆசிரியர் கல்வி - பள்ளிகள் / விடுதிகள் - 01.03.2026 அன்றைய நிலையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் /பட்டதாரி ஆசிரியர்கள்/ காப்பாளர் விவரங்கள் அனுப்பக்கோருதல் தொடர்பாக பழங்குடியினர் நலம் கூட்டமைப்பு திட்ட அலுவலர் கடிதம்
நாள் 28/08/2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
List of hospitals approved for medical treatment under NHIS 2026
01.07.2026 அன்று முதல் அரசு ஊழியர்களுக்கான புதிய உடல்நல காப்பீட்டு திட்டத்தில் NHIS 2026 மருத்துவம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியல்
பக்க எண் 36 முதல் 192 வரை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பாக்கெட் உணவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை லேபிள்? – FSSAI புதிய திட்டம்
அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் கட்டாயமாக சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.
'HIGH SUGAR', ‘HIGH SALT', 'HIGH FAT' எச்சரிக்கைகள் பெரிய எழுத்துகளில் இடம்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள்களை (Red Hexagonal Warning Labels) கட்டாயமாக்கும் புதிய திட்டத்தை FSSAI (Food Safety and Standards Authority of India) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள compliance affidavit மூலம் அறிவித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
சிவப்பு நிற அறுகோணம்: பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் சிவப்பு நிறத்தில் அறுகோண வடிவிலான எச்சரிக்கை லேபிள் இடம்பெறும்.
எச்சரிக்கும் கூறுகள்: தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு (Fat) உள்ளதா என்பதை இது சுட்டிக்காட்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு: இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் (Obesity) மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்தும் கட்டங்கள்
முதற்கட்டம் (Phase I): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்தான ஊட்டச்சத்துக்கள் (உப்பு, சர்க்கரை, கொழுப்பு) அதிகம் உள்ள உணவுகள் மற்றும் குறிப்பிட்ட குளிர்பானங்கள் மீது இந்த லேபிள் கட்டாயமாக்கப்படும்.
இரண்டாம் கட்டம் (Phase II): ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து மட்டும் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களுக்கும் இந்த எச்சரிக்கை முறை விரிவுபடுத்தப்படும்.
விலக்கு அளிக்கப்பட்டவை
ஒற்றைப் பொருள் கொண்ட உணவுப் பொருட்கள் (Single-ingredient food products).நெய், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன்.
OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையரின் செயல்முறைகள்
Proceedings of the Commissioner of Backward Classes and Denotified Communities Welfare regarding applications for the PM YASASVI scholarship for students belonging to OBC, EBC, and DNT categories.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
வாகனம் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு
திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 3 சிறுமிகள், 1 சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்
திண்டுக்கல்லில் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவில் வாகனம் மோதி 4 சிறார் உயிரிழப்பு.
கொல்லம்பட்டி பிரிவில் விளையாடிய சிறுவர்கள் மீது பால் வேன் மோதி உயிரிழப்பு.
விபத்தில் தனுஸ்ரீ (5), யோக வர்ஷி (11), அனன்யா (6) மற்றும் மோசிகீரன் (6) உயிரிழப்பு; காவல் துறை விசாரணை.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்