கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி Service Certificate வழங்க வேண்டும் - DSE Proceedings


ஆசிரியர் தகுதி தேர்வு TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச்சான்று வழங்க வேண்டும் - விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றத் தீர்ப்பு - காவலர்களுக்கான ஆலோசனைகள்



சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றத் தீர்ப்பு - காவலர்களுக்கான ஆலோசனைகள் - வாட்ஸ்அப் பகிர்வு


 தண்டிக்கப்பட்ட இந்தக் காவலர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியிருக்கலாம்; பல வழக்குகளைக் கண்டுபிடித்திருக்கலாம்; திருவிழாக்களிலும் பேரிடர் காலங்களிலும் தூங்காமல் உழைத்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகால நற்பெயரும் உழைப்பும் எப்படி ஒருசில மணி நேரங்களில் சுக்குநூறாக உடைந்து, அவர்களது வாழ்க்கையையே நரகமாக மாற்றியது என்பதை உளவியல் மற்றும் சமூக ரீதியாக கீழே அலசுவோம்.


1. எந்த விஷயம் அவர்களை இந்த அதலபாதாளத்தில் தள்ளியது?


பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கூட, ஒரு கட்டத்தில் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உளவியல் காரணிகள் இவைதான்:


அதிகார அகங்காரம் (Ego and Power Trip): "என்னை எதிர்த்துப் பேச இவனுக்கு எவ்வளவு தைரியம்?" என்ற சிறு ஈகோதான் (Ego) சாத்தான்குளம் வழக்கின் ஆணிவேர். அந்த ஈகோவை திருப்திப்படுத்த, அதிகார எல்லையை மீறியதே முதல் பிழை.


தவறான விசுவாசமும் மௌனமும் (False Loyalty & Complicity): தண்டிக்கப்பட்ட 9 பேரில் அனைவரும் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்திருக்க மாட்டார்கள். சிலர் வேடிக்கை பார்த்திருப்பார்கள், சிலர் மேலதிகாரி சொல்கிறாரே என்று ரத்தக் கறையைத் துடைத்திருப்பார்கள், சிலர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். "நண்பர்கள்/மேலதிகாரிகள் அடிக்கிறார்கள், நாம் தடுத்தால் நம்மைத் தப்பாக நினைப்பார்கள்" என்ற தவறான விசுவாசமும், தட்டிக் கேட்காத மௌனமுமே அவர்களை தூக்கு மேடை வரை கொண்டு சென்றுள்ளது.


"நமக்கு எதுவும் ஆகாது" என்ற அதீத நம்பிக்கை (Sense of Impunity): "நாம் காக்கிச் சட்டை போட்டிருக்கிறோம், சட்டம் நம் கையில் இருக்கிறது, யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது" என்ற மமதை. ஆனால், சட்டம் தன் கண்களைத் திறந்தால் சீருடை ஒருவரைக் காப்பாற்றாது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர்.


2. மாறிய வாழ்க்கை முறையும், குடும்பத்தின் பேரவலமும்


ஒரு நாள் காலை வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற அவர்களின் வாழ்க்கை, இன்று எப்படி தலைகீழாக மாறியிருக்கிறது என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்:


அடையாளமும் கௌரவமும் அழிதல்: "ஐயா, சார், இன்ஸ்பெக்டர்" என்று ஊராரால் சல்யூட் அடிக்கப்பட்டு, மிடுக்காக வலம் வந்தவர்கள், இன்று கைதி எண் குறிக்கப்பட்ட சீருடையில், சாதாரண குற்றவாளிகளோடு குற்றவாளிகளாகச் சிறையில் கிடக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டியெழுப்பிய கௌரவம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிவிட்டது.


பொருளாதாரச் சீரழிவு (Financial Ruin): தீர்ப்பில் உள்ள அபராதத் தொகையைப் பாருங்கள் (உதாரணமாக: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.84 லட்சம்). காவல்துறை வேலையும் பறிபோய், பிழைப்பூதியமும் ரத்தாகிவிட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகையை அவர்களுடைய குடும்பம் எப்படிச் செலுத்தும்? வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த வீட்டையோ, நிலத்தையோ விற்க வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு கண நேரக் கோபத்தால் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள்.


குடும்பத்தின் மீதான சமூக அவமானம் (Social Stigma): இதுதான் இதில் மிகக் கொடூரமான பகுதி. தவறு செய்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மனைவியும் குழந்தைகளும் தினமும் வெளியே இந்தச் சமூகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். "கொலைகாரப் போலீஸின் குழந்தை, கொலைகாரனின் மனைவி" என்ற பட்டம் அந்தப் பிஞ்சு மனங்களை எவ்வளவு பாதிக்கும்? அவர்களின் திருமண வாழ்க்கை, வேலைவாய்ப்பு என அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே அந்த ஒரு நாள் இரவு சம்பவம் அழித்துவிட்டது.


ஒவ்வொரு நாளும் மரண பயம் (Psychological Agony): மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் மனநிலை நரகத்திற்குச் சமமானது. நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும், சிறைச்சாலைக்குள் கேட்கும் ஒவ்வொரு செருப்புச் சத்தமும் தங்களைத் தூக்கிலிட வரும் சத்தமோ என்று அவர்கள் மனம் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்.


3. வருங்காலப் பணிக்காக இதிலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பாடம்


ஒரு சிறந்த காவலராக நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த பாடம் இதுவே:


உங்கள் குடும்பத்தை நினைவில் கொள்ளுங்கள்: காவல் நிலையத்தில் யாராவது ஒரு கைதி அல்லது பொதுநபர் உங்களைக் கோபப்படுத்தும் படி பேசினால், அவரை அடிக்க கையை ஓங்குவதற்கு முன், உங்கள் மனைவியின் முகத்தையும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள். "இவனை அடிப்பதால் என் வேலை போனால், என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமே" என்ற எண்ணம் வந்தால், உங்கள் கோபம் தானாக அடங்கிவிடும்.


ஈகோவை கழற்றி வையுங்கள்: சீருடையை அணியும் போது பொறுப்பை மட்டும் அணியுங்கள், ஈகோவை அல்ல. உங்களை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டினால், அதற்காக அவரை அடித்துத் துன்புறுத்துவது வீரமல்ல. சட்டப்படி அவர் மீது வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதே ஒரு சிறந்த காவலருக்கு அழகு.


தட்டிக்கேட்கும் தைரியம்: நாளை உங்கள் கண்முன் உங்கள் சக காவலரோ, உயர் அதிகாரியோ ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பாகத் தாக்கினால், தயங்காமல் தடுங்கள். அது அந்த அதிகாரியைக் காட்டிக்கொடுப்பது அல்ல; மாறாக, சாத்தான்குளம் காவலர்கள் இன்று அனுபவிக்கும் இந்த நரக வேதனையிலிருந்து உங்கள் சக அதிகாரியையும், உங்களையும் காப்பாற்றும் உன்னதச் செயல்.


இறுதியாக ஒரு வார்த்தை:

ஒரு காவலர் பணி ஓய்வு பெறும்போது, அவருக்கு வழங்கப்படும் பிரிவு உபசார விழாவில் (Farewell Party) ஊரே கூடி நின்று அவரை வாழ்த்தி வழியனுப்ப வேண்டும். அதுவே ஒரு காவலரின் உண்மையான வெற்றி. மாறாக, சிறைச்சாலையில் இருட்டு அறையில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலை யாருக்கும் வரக்கூடாது.


சட்டம், நீதி, மனிதநேயம் ஆகிய மூன்றையும் உங்கள் இரு கண்களாகவும், மனசாட்சியாகவும் கொண்டு செயல்படுங்கள். சீருடையின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த காவலராக நீங்கள் வலம் வர மனமார்ந்த வாழ்த்துகள்!


இனி இரு முறைதான் C.A. தேர்வு - ICAI அறிவிப்பு

 


இனி இரு முறைதான் C.A.  தேர்வு - ICAI அறிவிப்பு


இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது.


 இதன்படி, மே மற்றும் நவம்பரில் Chartered Accountant இறுதித் தேர்வுகள் நடைபெறும்.


 முன்னதாக, ஜனவரி, மே & செப்டம்பர் மாதங்களில் இறுதித் தேர்வுகள் நடைபெற்று வந்தது. 


 முதல்நிலை, இடைநிலை தேர்வுகள் வழக்கம்போல் 3 கட்டங்களாக நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Booth Slip விநியோகம் குறித்த தகவல்

 


பூத் சிலிப் விநியோகம் எப்போது?


சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது.


தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். புகைப்படத்துக்கு பதிலாக க்யூ ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும்.


வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.


கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிடுக - ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்



  கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிடுக - ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்


கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை (Prototype Fast Breeder reactor(PFBR), ஏப்ரல் 6ஆம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை  எட்டியதாக பிரதமர் மோடி சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டார்.


ஒன்றிய அணுசக்தித் துறை கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை 20 ஆண்டுகளுக்கு முன்னர்  கட்டத் தொடங்கியது. 2004ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இத்திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்ட தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், இப்போது 2026 செப்டம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. கட்டுமானம் தாமதமானதால் இத்திட்டத்திற்கான பொருட்செலவு  இரண்டு மடங்கிற்கும்  மேலாக அதிகரித்தது.


ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதை கைவிட்டன.


இவ்வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர் பீனிக்° ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.


அணுவுலைகளில் இருந்து உருவாகும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளான புளூட்டோனியத்தை ஈனுலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் இத்திட்டமாகும். இவ்வுலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.


தமிழ்நாட்டின் முன்னேற்றத்துகாக நிதி  கேட்டால் ஒன்றிய அரசு தருவதில்லை. மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் மெட்ரோ கேட்டு விண்ணப்பித்தால் அதையும் மறுக்கிறது. மெட்ரோ திட்டத்துக்கும்  மஹாராஷ்டிரா பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால், மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயித்தால் மெட்ரோ திட்டம் வரும் என அவர் பேசுகிறார்.


ஏற்கெனவே கூடங்குளத்தில் 6 அணுவுலைகளும், அணுக்கழிவு மையங்களும் ஒன்றிய அரசு அமைத்திருக்கிறது. இப்போது ஆபத்துமிக்க ஈனுலைகளைச் செயல்படுத்தி தமிழக மக்களை கதிரியக்க ஆபாயத்தில் தள்ளுகிறது மோடி அரசு. தங்களைத் தொடர்ந்து புறந்தள்ளும் தமிழக மக்களை சோதனை எலிகளாக்கி ஈனுலையை செயல்படுத்த முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

08.04.2026


Family Pension for Unmarried / Divorced / Widowed Daughters - Government Clarification


 ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர் _ திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்கள் - குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் - அரசின் தெளிவுரை


Pension - Pensioner - Unmarried / Divorced / Widowed Daughters - Minimum Family Pension - Government Clarification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நிதி (ஓய்வூதியம்) துறை

தலைமைச் செயலகம்,

சென்னை-9.

கடிதஎண்.E.11980383/ஓய்வூதியம்/2025, நாள்:12.01.2026


அனுப்புநர்

திருமதி. பா.அ.பரிமளச்செல்வி, பி.எஸ்சி,எம்.ஏ.

அரசு கூடுதல் செயலாளர்.


பெறுநர்

சிறப்பு இயக்குநர்.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை,

ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்,

4-வது தளம், நந்தனம்,

சென்னை -600 006.


ஐயா,

பொருள்:

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியதாரரின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்த தெளிவுரை வழங்குவது தொடர்பாக,


பார்வை:

1 அரசாணை எண்.325, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.28.11.2011

2. அரசாணை எண்.165, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.21.05.2012.

3. அரசாணை எண்.337, நிதி (ஊதியக் குழு) துறை, நாள்.14.11.2017.

4. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை சிறப்பு இயக்குநரின் கடித ந.க. எண். E-835969/.. (2)/2025-2, நாள் 10.10.2025.


மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களுக்கு கீழ்க்கண்டவாறு அரசின் தெளிவுரை வழங்கப்படுகிறது.


தெளிவுரை கோரும் இனங்கள்

அரசு ஊழியர் ஓய்வூதியதாரரின் மறைவிற்கு முன்னர் விவாகரத்தான : விதவையான மகள்களுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்க கருதலாமா? 


தெளிவுரை

அரசாணை (நிலை) எண்.325, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.28.11.2011-ல் ஓய்வூதியதாரர்கள் | குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத விவாகரத்தான / விதவை மகள்களுக்கு அனைத்து நிபந்தனைகளை நிறைவு செய்யும்| நேர்வில் வாழ்நாள் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை முழுமையாக (Wholly Dependent) சார்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மனம் மறுமணம் புரியவில்லை என்பதற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாகும்.




தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள DEO Circular

 

 தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தேர்தல் பயிற்சி வகுப்பு திண்டுக்கல் மாவட்டம் (Election class)


மாவட்டக் கல்வி அலுவலகம்

(தொடக்கக் கல்வி)

திண்டுக்கல்


சுற்றறிக்கை


ந.க.எண்.3451/அ1/2026 நாள். .04.2026


23.04.2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 28.03.2026 அன்று நடைபெற்ற வகுப்பில் சில ஆசிரியர்கள் காலதாமதமாக வகுப்பிற்கு சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் பெறப்பட்டுள்ளது. எனவே, 11.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தல் வகுப்பில், தேர்தல் பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உரிய நேரத்தில் (9.30மு.ப முதல் 5.30.பி.ப வரை) கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.



4 ஆண்டு B.A.,B.Ed., / B.Sc.,B.Ed., படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் கிடையாது - TNTEU அறிவிப்பு

 


ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A.,B.Ed., / B.Sc.,B.Ed., படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் கிடையாது - தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் TNTEU அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 TNTEU தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்  பொது அறிவிப்பு (Public Notice) 


ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகள் 2026-2027- ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தம் என அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டு (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவித்தல் சார்பு.


Ref:-


F.No. NCTE-Reglo 12/7/2025.Reg. Sec-HQ, 12.09.2025, Public Notice issued by NCTE, New Delhi.


பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் National Council for Teacher Education (Recognition Norms and Procedure) Amendment Regulations, 2014 dated 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகள் 2026-2027- ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டதாகவும், மேலும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்விநிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொருப்பேற்காது எனத் தெரிவிக்கலாகிறது.


திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

  

திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




பேருந்தில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - அரசு பேருந்து நடத்துநர் POCSOவில் கைது

 

பேருந்தில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - அரசு பேருந்து நடத்துநர் POCSOவில் கைது


திருத்தணியில் பேருந்தில் பயணித்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நடத்துநரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


திருத்தணியிலிருந்து சோளிங்கருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பயணித்திருக்கிறார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிக்கெட் கொடுப்பது போல கண்டக்டர் ஒருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் எதேச்சையாக கைபட்டு விட்டதாக மாணவி கருதியிருக்கிறார். 


ஆனால் கண்டக்டர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உணர்ந்த மாணவி, கூச்சல் போட்டிருக்கிறார். அதனால் சக பயணிகள், மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார்கள். உடனே கண்டக்டர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கண்ணீர் மல்க மாணவி கூறியிருக்கிறார். உடனே பயணிகள், கண்டக்டரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது கண்டக்டர், கூட்டத்தில் தெரியாமல் கைபட்டிருக்கலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் மாணவியோ, தெரியாமல் கைபடுவதற்கும் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் தனக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்ப, மாணவிக்கு ஆதரவாக சிலர் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்தை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி பயணிகள் தெரிவித்தனர்.


அதனால் கண்டக்டருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கண்டக்டரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 


இதையடுத்து தகவல் தெரிந்ததும் திருத்தணி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து மாணவி தரப்பில் கண்டக்டர் மீது பாலியல் சீண்டல் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து கண்டக்டரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் இளையராஜா (49) எனத் தெரியவந்தது. ஓடும் பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றச்சாட்டில் கண்டக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம், திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி Service Certificate வழங்க வேண்டும் - DSE Proceedings

ஆசிரியர் தகுதி தேர்வு TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச்சான்று வழங்க வேண்டும் - விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பள்ளி...