கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல்

 பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல் அறிவிப்பு


​ரயில் பாதை மற்றும் சிலிப்பர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பெருகமணியில் உள்ள ரயில்வே கேட் (LC No.65) தற்காலிகமாக மூடப்படுகிறது.


​நேரம் : 19.04.2026 காலை 8:00 மணி


 முதல் 23.04.2026 மாலை 6:00 மணி வரை.


​மாற்று வழி:


பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுகமணி (LUS No.64) மற்றும் காமநாயக்கன்பாளையம் (LC No.63) வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.



வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module

 


Presiding Officer Guide


வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்



 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்


PrO App Timeline



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2% அகவிலைப்படி உயர்வு D.A. Hike

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு


2% Dearness Allowance Hike for Central Government Employees


01.01.2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 % உயர்வு 

58%லிருந்து 60%ஆக உயர்வு


 மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்தி வெளியீடு 


2% DA Hike - Press Release 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Cabinet

Azadi Ke Amrit Mahotsav

Cabinet approves additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2026


Posted On: 18 APR 2026 3:13PM by PIB Delhi


The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2026 representing an increase of 2% over the existing rate of 58% of the Basic Pay/Pension, to compensate against price rise.

The combined impact on the exchequer on account of increase in both Dearness Allowance and Dearness Relief would be Rs.6791.24 crore per annum. This will benefit about 50.46 lakh Central Government employees and 68.27 lakh pensioners.

This increase is in accordance with the accepted formula, which is based on the

recommendations of the 7th Central Pay Commission.

MJPS

****

(Release ID:2253244) Visitor Counter: 121



அமைச்சரவை

ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 01.01.2026 முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பதிவிட்ட நாள்: 18 ஏப்ரல் 2026, பிற்பகல் 3:13, PIB டெல்லி


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2026 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 58% என்ற விகிதத்தை விட 2% கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பின் காரணமாக அரசு கருவூலத்திற்கு ஏற்படும் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு ரூ.6791.24 கோடியாக இருக்கும். இதனால் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இந்த அதிகரிப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி அமைந்துள்ளது.

7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்.

எம்.ஜே.பி.எஸ்.

****

(வெளியீட்டு ஐடி: 2253244) பார்வையாளர் எண்ணிக்கை: 121


உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்


உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்


 உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? உங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா?


 நீங்கள் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் எது என்று தெரியவில்லையா?


 எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள google playstore ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ECINET மொபைல் ஆப் ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரே செயலியில் வாக்காளர் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.


ECINET செயலி என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு "சூப்பர் செயலி" ஆகும். இது 40-க்கும் மேற்பட்ட தனித்துவமான தேர்தல் தொடர்பான சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு (படிவம் 6), டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பதிவிறக்கம் செய்தல் (e-EPIC), வாக்காளர் பட்டியலைத் தேடுதல், விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல், வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வேட்பாளர் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் cVIGIL வழியாக விதிமீறல்களைப் புகாரளித்தல் ஆகியவை இதன் முக்கியப் பயன்பாடுகளில் அடங்கும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app


இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து CEO தகவல்


 இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (CEO) தகவல்


1. சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற இருக்கின்ற அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் இன்றைய (19.04.2026) பயிற்சியின் போது தேர்தல் பணி சான்று (EDC) வழங்கப்பட உள்ளது.


2. தபால் வாக்கு இதுவரை செலுத்தாதவர்கள் இன்று செலுத்தலாம். தபால் வாக்கினை தேர்தல் பயிற்சி மையங்களில் மட்டுமே அன்றைய தினமே செலுத்தி விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.


3. PRO App இல் இன்றைய பயிற்சியின் போதும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் (Presiding Officers ) அந்தந்த நேரத்திற்கு உண்டான பதிவுகளை குறித்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.


4. இரண்டாவது பயிற்சிக்காக, முதன்மை கல்வி அலுவலர் நிலையில் ஒவ்வொரு தேர்தல் பயிற்சி மையத்திற்கும் நியமிக்கப்பட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், சான்றொப்பம்  இடுவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் போன்ற அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை இன்றைய பயிற்சியின் போதும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


CEO, Tiruvannamalai


வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை


வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை


Procedure to Check Your Part Number and Serial Number in the Voter List via SMS


23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதை SMS மூலம் பார்ப்பதற்கான எளிமையான முறை


1950 என்ற எண்ணிற்கு ECI டைப் செய்து இடைவெளி gap விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட்டு அனுப்பினால் உங்கள் விவரங்கள் சில நிமிடங்களில் வந்து சேரும். சட்டமன்றத் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு உதவியாக இருக்கும். 


எ.கா: 

ECI WWW123456


👆 உங்கள் Voter ID number (all caps..)


SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் 1950


மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) குறித்த தகவல்

 


மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) குறித்த தகவல் 


 1️⃣ நேர மேலாண்மை

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே மாதிரி வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்.

  குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முகவர்கள் முன்னிலையில் மட்டுமே இதை நடத்த வேண்டும்.

 

2️⃣ மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை


 1. முன் தயாரிப்பு:

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (BU), கட்டுப்பாட்டு கருவி (CU) மற்றும் VVPAT ஆகியவற்றை சரியாக இணைக்கவும்.


2. பூஜ்ஜிய சரிபார்ப்பு (Zero Verification):

    CU-வில் உள்ள 'Total' பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகள் 0 என்று இருப்பதை முகவர்களுக்குக் காட்டவும்.

    VVPAT-ல் 'Mock Poll Slip' இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.


3. வாக்கு அளித்தல்:

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா சில வாக்குகள் வீதம், மொத்தம் குறைந்தது 50 வாக்குகள் பதிவாக வேண்டும். (தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பொத்தானுக்கும் குறைந்தது 1 வாக்கு பதிவாவது கட்டாயம்).

    நோட்டா (NOTA) பட்டனுக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.

 

4. சரிபார்த்தல் (Verification):

    CU-வில் உள்ள 'Close' மற்றும் 'Result' பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளவும்.

    VVPAT-ல் விழுந்த சீட்டுகளை எண்ணி, CU-வில் உள்ள எண்ணிக்கையுடன் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.


3️⃣  வாக்குப்பதிவு நீக்கம் மற்றும் சீல் வைத்தல் (மிக முக்கியமானது)


 1. வாக்குகளை நீக்குதல் (Clearing Data):

    'Clear' பொத்தானை அழுத்தி, மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான அனைத்து வாக்குகளையும் நீக்கவும்.

    மீண்டும் 'Total' பொத்தானை அழுத்தி, வாக்குகள் 0 என்று இருப்பதை முகவர்களிடம் காண்பிக்கவும்.

 

2. சீல் வைத்தல் (Sealing):

    வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT-க்கு உரிய சீல்களை (Green Paper Seal, Special Tag, Strip Seal) வைத்து முறையாக சீல் வைக்கவும்.

    இந்த செயல்முறையின் போது முகவர்களின் கையொப்பத்தை வாக்குப்பதிவு நாட்குறிப்பில் (Polling Station Diary) பெறவும்.


3. சான்றிதழ் (Certificate):

    மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்கான சான்றிதழில் (Mock Poll Certificate) தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முகவர்கள் கையொப்பமிட வேண்டும்.

 

* கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  தேர்தல் ஆணையத்தின் தற்போதைய 'Mock Poll Certificate' படிவத்தைப் பயன்படுத்தவும்.

  இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக 'Zonal Officer'-க்குத் தகவல் தெரிவிக்கவும்.


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்


தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்*


வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி முடிய நள்ளிரவு வரை சில இடங்களில் ஆகிவிடுகிறது. மறுநாள் அவர்களால் மீண்டும் பள்ளிக்கு செல்வது சிரமமாகும்.


இதனால் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் நாளான


23.4.2026 அன்று அதிகாலை முதல் இரவுநேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.


இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் இந்திய தேர்தல் ஆணைய தமிழ்நாடு அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள்பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 24.4.2026 வெள்ளிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்தல் பணி மிகவும் பொறுப்பும் கவனமும் உடைய பணியாகும்.


இப்பணிகளை நிறைவேற்ற உடல் மற்றும் மன உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.


 குறிப்பாக ஓட்டுப் பதிவு நிறைவடைந்த பின்பு ஒட்டுப்பெட்டி ஒப்படைக்கும் பணிகள் இரவு நேரம் வரை, நள்ளிரவு வரை நீடிப்பதால், அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருவது ஆசிரியர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.


பல ஆசிரியர்கள் தன் இருப்பிட முகவரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், பல ஆசிரியர்கள் ஒட்டுச் சாவடி மையத்திலிருந்து 24.4.2026 அன்று அதிகாலையே தன் இருப்பிடத்திற்குச் சென்று சேர்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


எனவே, ஆசிரியர்கள் உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு 23.4.2026 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும். அதற்கு மறுநாள் 24.4.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.



இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை


வணக்கம் 

17.04.2026 Friday

Today Attendanceல் 

Fully Not working எனவும்,

Reason இல் Others எனவும் தேர்வு செய்து 

Save கொடுக்கவும்.



பின்னர் வழக்கம்போல Teacher Attendance பதிவு செய்யலாம்.


ஆசிரியர்களுக்கு மட்டும் காலை மாலை என இருவேளையும் வருகை பதிவு செய்யவும்


துப்புரவு பணியாளர்களுக்கும் வழக்கம் போல் பதிவு செய்யவும்


மாணவர் வருகைப்பதிவு செய்ய முயற்சி செய்தால் கீழேயுள்ளது போன்று தகவல் காட்டும்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல்

 பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல் அறிவிப்பு ​ரயில் பாதை மற்றும் சிலிப்பர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பெருகமணியில் உள்ள ரயி...