March 2026 ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும்
Salary & Pension ECS SETTELEMENT DATE:
ஓய்வூதியம் மற்றும் ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
கருவூலத்துறை தகவல்
March 2026 ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும்
Salary & Pension ECS SETTELEMENT DATE:
ஓய்வூதியம் மற்றும் ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
கருவூலத்துறை தகவல்
TET எழுத விண்ணப்பிக்க SMC Teachers, பகுதி நேர ஆசிரியர்கள் & AI ஆகியோருக்கு Service Certificate வழங்குதல் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) Ranipet DEO(E) அவர்களின் தகவல்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் கற்பித்தல் பணி நிலையில் EMIS அடையாள எண் கொண்டு பணிபுரியும் தகுதி உள்ள தற்காலிக/ பகுதி நேர/ தொகுப்பூதிய ஆசிரியர்களும் தகுதித்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்
2025-2026ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்திட ஆணை
G.O. Ms. No : 76, Dated : 12-03-2026 - Government Order issued allocating funds for the successful conduct of annual day function in all government schools
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பாக நடத்திட ₹15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை எண் : 76 வெளியீடு - நாள்:12.03.2026 வெளியீடு
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் 2025-2026ஆம் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு. அரசாணை எண் : 76 பள்ளிக்கல்வித் துறை நாள் : 12.03.2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஏப்ரல் 1 முதல் வருமான வரி படிவங்களுக்கு புதிய எண்கள்
New numbers for income tax forms from April 1
ஏப்ரல் 1 முதல் வருமான வரி படிவங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்த எண்களுக்கு பதில் புதிய எண்கள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026
▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test for Working Teachers) நடைபெற இருக்கிறது.
▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.
▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :
திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல் 1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும்.
- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும்.
- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்.
- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும்.
- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.
மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்:
- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60.
- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.
- EMIS-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை நிரப்ப வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம்.
குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும்.
- மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை 01.04.2026 முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம்.
நன்றி.
ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்
Change in train ticket cancellation procedure
ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது.
8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்.
72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும்.
ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 25.03.2026
கிழமை:- புதன்
திருக்குறள்:
குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
விளக்க உரை:
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
பழமொழி :
Grasp all lose all.
பேராசை பெரு நஷ்டம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.
2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.
பொன்மொழி :
முடியும் என்று நம்பினால் வாய்ப்புகளை காண்பீர்கள்.
முடியாது என்று நினைத்தால் தடைகளே கண்களுக்கு தெரியும்.
பொது அறிவு :
01.தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?
தம்பிரான் வணக்கம் -
Thambiran Vanakkam
02.உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் எங்குள்ளது?
இந்தியா- சென்னை உயர் நீதிமன்ற வளாகம்
India- Chennai high court complex
English words :
Canvassing – Asking people for votes
Rally – Public meeting to support a candidate
தமிழ் இலக்கணம்:
கற்போம் தமிழ்
நேற்று காற்று வீசும் திசையின் அடிப்படையில் காற்றின் பெயர்கள் பார்த்தோம். இன்று வேக அடிப்படையில் அதன் பெயர்கள் பார்ப்போம்
0 - 6 கிமீ வேகம் மென்காற்று
6 - 11 கிமீ வேகம்
இளந் தென்றல்
11 - 19 தென்றல்
20 - 29 கிமீ வேகம்
புழுதிக் காற்று
30 - 39 கிமீ வேகம்
ஆடிக் காற்று
40 - 100 கிமீ வேகம்
கடும் காற்று
101 கிமீ மேல் புயல் காற்று
அறிவியல் களஞ்சியம் :
கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வாரம் வரை உயிர்வாழும்.
மார்ச் 25
வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்
வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.
நீதிக்கதை
இரண்டு நண்பர்கள்
ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”
ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வர முடியும்”
ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!
1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.
2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது.
4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய செய்திகள்
25.03.2026
⭐கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு
⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் அளவை 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.
⭐ஈரான் மீதான போர் 5நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா கோலாகலமாக நடை பெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
Today's Headlines
⭐ School children get an opportunity to learn Japanese during the summer holidays: Organized by the Indo-Japan Chamber of Commerce.
⭐ To address the cooking gas shortage in India, oil companies have suggested reducing the size of domestic LPG cylinders from 14.2 kg to 10 kg.
⭐ U.S. President Donald Trump has announced a 5-day pause in the war against Iran.
*SPORTS NEWS*
🏀 The Chennai Super Kings (CSK) reunion event was held grandly at the Chepauk Stadium in Chennai. A large number of CSK fans enthusiastically attended and enjoyed the celebration.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, சிறப்புப் பார்வையாளர் நியமனம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, திரு. பிரதாப் சிங் அவர்களைச் சிறப்புப் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-03-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 24.03.2026
கிழமை:- செவ்வாய்
திருக்குறள்:
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
விளக்க உரை:
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
பழமொழி :
Even a trash becomes worthy in a dexterous hand .
வல்லவர் கை பட்டால் உதவா குப்பையும் உயர் மதிப்படையும்
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.
2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.
பொன்மொழி :
ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.
பொது அறிவு :
01.சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) எங்கு அமைந்துள்ளது?
நெதர்லாந்து -ஹேக் நகர் (Netherland -Hague)
02. தமிழின் முதல் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்-Silappatikaram
English words :
Campaign – Activities to win votes
Manifesto – Promises made by a party
தமிழ் இலக்கணம்:
காற்றுக்கு பொருளோடு வைக்கப் பட்டுள்ள பெயர்கள் குறித்து இன்று பார்ப்போம்
தெற்கில் இருந்து வீசும் இதமான காற்று - தென்றல்
வடக்கிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று - வாடை
கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல்
மேற்கிலிருந்து வீசும் காற்று - கச்சான்/மேலைக் காற்று
தொடரும் நாளை
அறிவியல் களஞ்சியம் :
தட்டான் பூச்சிகளுக்கு (Grasshoppers) அவற்றின் வயிற்றுப் பகுதியில் காதுகள் உள்ளன.
மார்ச் 24
உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)
உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்
நீதிக்கதை
அழுக்கு சட்டை
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். “ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.
“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். “ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.
“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.
அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.
அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா. “குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.
மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.
விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.
அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். “தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.
அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.
ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். “சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.
அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.
“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன்கள் “கொல்” லென்று சிரித்தனர்.
அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.
இன்றைய செய்திகள்
24.03.2026
⭐ ஈரானில் உள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது. "இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஈரான் கூறியுள்ளது.
⭐அமெரிக்க - ஈரான் போரில் ஈரான் மிக பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த போரால் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.
⭐வளைகுடா நாடுகள் குடிநீருக்கு 90% கடல் நீரை தான் நம்பியிருக்கின்றன. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் பல நாடுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀நியூசிலாந்துக்கு எதிரான 4வது 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
🏀 இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்
மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ)அறிவித்துள்ளது.
Today's Headlines
⭐ In a situation where several lakh people in Iran are affected, India has been continuously sending aid. Iran has stated, We will never forget India’s compassion and humanity.
⭐ In the US–Iran war, Iran has suffered massive damage. More than 5,000 people have lost their lives due to this conflict.
⭐ Gulf countries depend on seawater for about 90% of their drinking water. If desalination plants are attacked, many countries could face severe drinking water shortages.
*SPORTS NEWS*
🏀 In the 4th T 20 match against New Zealand, South Africa won by 19 runs.
🏀 Cricket Australia (C A) has announced that the Test series between India and Australia will begin in January next year.
March 2026 ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும் Salary & Pension ECS SETTELEMENT DATE: ஓய்வூதியம் மற்றும் ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி அ...