அமைச்சர் மீது POCSO புகார்
அமைச்சர் மீது POCSO புகார்
Government doctors should not engage in private practice – Supreme Court
அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம் கருத்து
தனியாகத் தொழில் செய்யும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் மிகவும் நல்லது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள், தடை இருந்தபோதிலும் தனியார் மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுவதாகவும், அரசு மருத்துவமனைக்கு வெளியே ஒரு மாற்று மருத்துவச் சேவையை நடத்துவதாகவும் எழுந்த புகார்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஆணையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத்தில் ஈடுபடுவது தீவிரமான பிரச்சினை என்று கருத்து தெரிவித்துள்ளது.
வழக்கின் முக்கிய விவரங்கள்:
நீதிமன்றத்தின் கருத்து:
அரசு மருத்துவமனையின் அவல நிலைக்கு நிதிப் பற்றாக்குறை காரணமல்ல, மாறாக அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை நடத்துவதுதான் காரணம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
முறையீடு வாபஸ்:
மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் அறுவைசிகிச்சை துறை இணைப் பேராசிரியரான டாக்டர் சந்தோஷ் குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இறுதி முடிவு:
விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, மனுதாரர் தனது மனுவை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுக் கொண்டார்.
Good afternoon, all. Kindly note today's session and its timings
👉🏽Click here for SPECIAL TET PAPER 1 ENGLISH SESSION 3
https://www.youtube.com/live/MeZzjMdCxw4?si=xGXVxDl4G75nA9kr
👉🏽Click here for SPECIAL TET PAPER 2 ENGLISH SESSION 3
https://www.youtube.com/live/MLyRKwpEPa0?si=2E1TYM5zXBd_hyJQ
The session starts today, 24.06.26, at 06.30 PM.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:436
குறள்:
பொருள்:
முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது.
பழமொழி :
A good reputation is a fair estate
நற்குணமே சிறந்த சொத்து
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .
2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.
பொன்மொழி :
கனவு என்பது நீங்கள் தூங்கும்போது காண்பது அல்ல; உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவு." டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
Thought for the Day :
Dream is not what you see in sleep; dream is something that does not let you sleep."
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் முதல் இருண்ட வான் பூங்கா (Dark sky park) எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
கொல்லிமலை.
2. இளம்பிள்ளை வாதம் நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?
மூளை மற்றும் குடல்.
English words :
1. nearby - close ,அருகில்.
2. guard - watchman ,காவலன்.
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
SAT - SCIENCE:
ஒரு பொருளின் அடிப்பரப்பினை அதிகரிக்கும்பொழுது எது அதிகரிக்கிறது??
(1)ஈர்ப்பு மையம்
(2) சமநிலை
(3) உறுதியற்ற சமநிலை
(4) நடுநிலைச் சமநிலை
விடை : (2) சமநிலை
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
நீதிக்கதை
ஒரு பருக்கையின் மதிப்பு
பனையூர் என்ற கிராமத்தில் கங்கா,கௌரி என்ற இரு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தினமும் சாப்பிடும்போது தட்டில் நிறைய உணவை மீதம் வைத்து வீணாக்குவார்கள். எவ்வளவு முறை அம்மா கண்டித்தாலும் அவர்கள் மாறுவதாக இல்லை.
ஒருநாள் அவர்களுடைய தாத்தா அவர்களை வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு விவசாயிகள் கடும் வெயிலிலும் வியர்வை சிந்தி நெல் பயிரிடுவதை பார்த்தார்கள்.
தாத்தா ஒரு நெல் மணியை கையில் எடுத்து, “இந்த ஒரு நெல் மணியை உருவாக்க எவ்வளவு உழைப்பு தேவை தெரியுமா? விவசாயியின் வியர்வை, மழை, மண், சூரியன்—இவை அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பருக்கை அரிசி கிடைக்கிறது” என்றார்.
அன்று மாலை வீட்டிற்கு வந்த அவர்கள் வழக்கம்போல் சாப்பிட அமர்ந்தார்கள். தட்டில் இருந்த ஒவ்வொரு பருக்கையையும் பார்த்தபோது விவசாயிகளின் உழைப்பு நினைவுக்கு வந்தது. அவர்கள் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொண்டு, தட்டில் எதையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டனர்.
அதன் பிறகு அவர்கள் மட்டும் அல்லாமல், தங்கள் நண்பர்களிடமும் உணவை வீணாக்கக் கூடாது என்று சொல்லத் தொடங்கினர்.
நீதி: உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் பலரின் உழைப்பு இருக்கிறது. எனவே உணவை ஒருபோதும் வீணாக்கக்கூடாது.
🗒️பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ந்தேதி வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
🗒️தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
🗒️ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அடுத்த மாதம் இந்தியா வருகை.
Today's Headlines
🗒️ The Government of Tamil Nadu has announced awards for the best Tamil books of 2025. Writers can apply for the Best Tamil Books Award Scheme.
🗒️ The rank list for engineering admissions will be released on July 1, according to the Higher Education Minister.
🗒️ The Cauvery Water Management Authority has directed Karnataka to release 40 TMC of water to Tamil Nadu.
🗒️ Japan's Prime Minister, Sanae Takaichi, will visit India next month.
Sports News
🏀 FIFA World Cup: France secured the top position in Group I'.
பள்ளிக்கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வெளியீடு
PA to DEO - Over 3 Years, Willing Transfer and Promotion - Counselling - Instructions, Schedule and Format - DSE Proceedings
2026-2027 ஆம் ஆண்டு - தமிழ்நாடு பொதுப் பணி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் /பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
School Education – Conduct of counseling for transfers, Willing transfer, and promotions for those serving in the same office or post for more than three years – Proceedings of the Joint Director
கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்குக் கட்டாய மாறுதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
// மின்னஞ்சல் மூலமாக //
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை 06
ந.க. எண். 030153/அ3/இ1/2026 , நாள். 23.06.2026
பொருள் :
பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து.
பார்வை :
1. அரசாணை எண். 151 பள்ளிக்கல்வி (SE1 (1) துறை நாள். 09.09.2022
2. அரசாணை எண். 149 பள்ளிக்கல்வி (SE5 (1) துறை நாள். 01.07.2024
வகுக்கப்பட்டுள்ள பார்வை (2) இல் காணும் அரசாணையில் நெறிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 30.06. என்ற தேதியில் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முடித்தவர்களுக்கு கட்டாய மாறுதல் அளிக்க மேல் பணி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு ஆண்டில் 30.06.2026 என்ற குறிப்பான தேதியின் (Crucial Date) அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு கட்டாய மாறுதல், மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் ஆகியவை பின்வரும் அறிவுரைகளையும், பார்வை (2) இல் காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்திட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
தொடக்கக்கல்வி இயக்ககம் - பணி நிரவல் கலந்தாய்வு 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள்
DEE - Surplus Counselling 2026-2027
DEE - Revised Deployment Guidelines
தொடக்கக் கல்வி இயக்ககம் - பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
26 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு 06-09-2026 அன்று நடைபெறும் - TNPSC அறிவிப்பு
Group I 2026 | TNPSC Notification
23-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 Tamil SESSION 3 - Youtube Links
Good afternoon all. Kindly note today session and its timings
Click here for SPECIAL TET PAPER 1 TAMIL SESSION 3
https://www.youtube.com/live/z0X47_aeY1M?si=cIEkOgOUO0NxwrIF
Click here for SPECIAL TET PAPER 2 TAMIL SESSION 3
https://www.youtube.com/live/05217Lxn3CA?si=AnVAFSXmQrZ-ffe6
Session starts on 23.06.26 at 06.30 PM Today.
கர்மவீரர் காமராஜர் பிறந்த ஜூலை-15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 007719/சி4/2026, நாள் : 04.06.2026
பொருள்
தொடக்கக்கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட அனுமதியும் சிறப்பு பரிசளிப்புத் திட்டம் மாவட்டத்திற்கு 75,000 வீதம் 38 மாவட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடுதல் - சார்பு.
பார்வை
1. அரசாணை (நிலை) எண்.169 ப.க.(என்)துறை, நாள் 06.07.2012.
2. அரசாணை (நிலை)எண்.123 பள்ளிக்கல்வி (ப.க.5(1)த் துறை, நாள்.15.07.2013.
3 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 006366/C-1/2026, . நாள் 16.04.2026.
4. அரசாணை (நிலை) எண்.10, பள்ளிக் கல்வி (பொது1(2) துறை, நாள் 11.01.2023.
5. அரசுக் கடிதம் (நிலை)எண். efile 11915/பொது1(2) 2023-1, நாள் .24.11.2023.
பார்வை 1-இல் காணும் அரசாணையில் பெருந்தலைவர், காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது சார்ந்த. 2012-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்காண் விழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான "பரிசளிப்பு திட்டம் ( (Award Scheme)" ஒன்றினை ஏற்படுத்தவும், அத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்திடவும் உரிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) என பரிசுத் தொகை கணக்கிட்டு 38 மாவட்டங்களில் உள்ள 38 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு காமராசர் பிறந்த நாள் சிறப்பு பரிசளிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து 2026-2027 ஆம் ஆண்டிற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக அரசின் சார்பில் கொண்டாடும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழாவினை சிறப்பாக நடத்திட அனுமதியும், வருவாய் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு
நடுநிலைப்பள்ளியினை தேர்வு செய்து பரிசுகளை வழங்கிடவும், தொடக்கக் கல்வித் துறைக்காக ரூபாய் 28,50,000/- நிதி ஒதுக்கீடு செய்து பார்வை 3-இல் காணும் கடிதத்தின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு பிரித்து வழங்கிடும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
பார்வை 5-இல் குறிப்பிட்ட அரசுக் கடிதத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை கீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக பகிர்ந்து அளித்து ஆணையிடப்படுகிறது.
>>> DEE செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-06-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:435
குறள்:
பொருள்:
குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும் .
பழமொழி :
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .
2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.
பொன்மொழி :
"நீங்கள் உலகில் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்.""மகாத்மா காந்தி
Thought for the Day :
"Be the change that you wish to see in the world."
பொது அறிவு :
1. உயிர் காக்கும் ஹார்மோன் எது?
கார்டிசோல்.
2 . எந்த தனிமம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது?
கோபால்ட் -60
English words :
Arrived - reached the place,வந்து சேர்தல்.
Profession - Job or work, தொழில்.
புவியியலும் சுற்றுசூழலும் :
"உலகம் பொதுவாக 7 கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது . Asia (ஆசியா)
Africa (ஆப்பிரிக்கா)
North America (வட அமெரிக்கா)
South America (தென் அமெரிக்கா)
Antarctica (அண்டார்டிகா)
Europe (ஐரோப்பா)
Australia (ஆஸ்திரேலியா) ஆகும்"
NMMS :
SAT - SCIENCE
ஒரு கம்பியின் வழியே 60 கூலூம் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது??
மின்னூட்டம் q. = 60 கூலூம்
நேரம் t. = 2 நிமிடம் × 60விநாடிகள்
= 120 விநாடிகள்
மின்னோட்டம் l = q/ t = 60C/120s = 0.5 A
(1) 0.5 ஆம்பியர்
(2) 0.1 ஆம்பியர்
(3) 0.25 ஆம்பியர்
(4) 120 ஆம்பியர்
விடை: (1) 0.5 ஆம்பியர்
கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
நீதிக்கதை
அம்மாவின் அறிவுரை.
கண்ணனூர் என்ற கிராமத்தில் ஹரீஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அம்மா, அப்பா எப்போதும் நல்ல அறிவுரைகளைக் கூறுவார்கள். ஆனால் ஹரீஷ்அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் தன் விருப்பப்படி நடந்துகொள்வான்.
ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது, நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரையில் விளையாடச் சென்றான். செல்லும் முன் அவனுடைய அம்மா, “மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு போகாதே, அது ஆபத்தான இடம்” என்று எச்சரித்தார். ஆனால் ஹரீஷ் அதைக் கவனிக்கவில்லை.
விளையாடிக்கொண்டிருந்தபோது அவன் தவறி வழுக்கி விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனை காப்பாற்றினார்.
வீட்டிற்கு வந்த ஹரீஷ், அம்மாவின் அறிவுரையை மதிக்காமல் நடந்ததற்காக வருந்தினான். “அம்மா, இனிமேல் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பேன்” என்று கூறினான்.
அதன் பிறகு அவன் பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடக்கத் தொடங்கினான். அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.
நீதி: பெற்றோரின் அறிவுரையும் அன்பும் நம் நலனுக்காகவே இருக்கும்; அவர்களை மதித்து நடக்க வேண்டும். 🌷👨👩👦
🗒️மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக என்.டி.ஏ (NTA) தலைவர் அறிவித்துள்ளார்.
🗒️விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கான தினசரி உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
🗒️இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம், ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெறவுள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி.
🏀 உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் பரிசு.
Today's Headlines
🗒️ The Chairman of the National Testing Agency (NTA) has announced that the results for students who appeared for the re-examination will be released soon.
🗒️ Minister Aadhav Arjuna has announced an increase in the daily food allowance for boys and girls staying and studying in sports hostels.
🗒️ Under India's presidency, the meeting of Energy Ministers of the BRICS member nations for the year 2026 will be held in Gurugram, Haryana.
Sports News
🏀 Asian Relay Championships: The Indian women's team created history by winning the gold medal.
🏀 At the World Cup Boxing Championship, an Indian woman boxer was awarded the gold medal.
அமைச்சர் மீது POCSO புகார் சிறுமிகளின் கால்களை அமுக்கியதாக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும...