கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்

  


THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்


அனைவருக்கும் வணக்கம்.


அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களில் திறன் மாணவர்களுக்கு 01.04.2026 முதல் 16.04.2026 வரை முழு ஆண்டுத் தேர்வு (End line Assessment) நடைபெற உள்ளது.

 

பிப்ரவரி மாதாந்திர தேர்வின் தேர்ச்சியில் 80%  அடைவு பெற்ற நிலையில் மாநில அளவில் 35/38 நிலையில் உள்ளோம்.


 ( Endline Assessment ) மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து முழு ஆண்டுத் தேர்வில் 95% - 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


குறிப்பு:

 ஜூலை மாதத்தில் திறன் மாணவர்களாக tagging  செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் Endline Assessment நடத்த வேண்டும்.


தேர்ச்சி   -  6, 7 ஆம் வகுப்பு: 42/60 , 8, 9 ஆம் வகுப்பு: 70/100 (மதிப்பெண்)


Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். EDIT option இல்லை


நன்றி



TETக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்

 

TN TET 2026


PAPER I & PAPER II


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான & பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ் விவரங்கள்


👉 புகைப்படம் 60.55 Kb 

👉 கையொப்பம் 60.55 Kb

👉 சாதிச்சான்றிதழ் 500 Kb

👉 பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் 500 Kb

👉 +2 மதிப்பெண் பட்டியல் 500 Kb

👉 D.TEd Mark sheets & Diploma Certificate 500 Kb

👉 UG Convocation 500 Kb

👉 UG consolidated Mark Sheet or 1 st semester to final semester all mark statement 500 Kb

👉 B.Ed Convocation 500 Kb

👉 B.Ed Mark statement 500 Kb

👉 Aadhaar , PAN card 500 Kb

👉 Service Certificate 500 Kb


மேற்காணும் சான்றிதழ்களை சரியான format & file size ல் Resize செய்து save செய்த பின் விண்ணப்பிக்கவும்.


பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பிக்கும் பொழுது Upload செய்ய வேண்டிய Documents & File size விவரங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2026


▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test for Working Teachers) நடைபெற இருக்கிறது.


▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.


▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NHISல் Reimbursement கேட்டு கடிதம் அனுப்பவேண்டிய முகவரி

 


NHISல் Reimbursement கேட்டு கடிதம் அனுப்பவேண்டிய முகவரி


NHIS மருத்துவ காப்பீடு திட்டத்தில் Networkல் இல்லாத மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட சிகிச்சை (Reimbursement) தொகையை திரும்ப பெறுவதற்கான முகவரி மாற்றப்பட்டுள்ளது


இனி ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் / வட்டார கல்வி அலுவலரிடமிருந்து கடிதம் அனுப்ப வேண்டிய புதிய முகவரி குறித்த கடிதம்


NHIS அலுவலகம் முகவரி மாற்றப்பட்டுள்ளது - Pay and Accounts Officer கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NHIS NEW OFFICE ADDRESS


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address


DEPARTMENT OF TREASURIES AND ACCOUNTS


From

Pay and Accounts Officer,

Pay and Accounts Office (South),

Amma Complex, 1st Floor,

NO.571 Anna Salai,

Nandanam, Chennai -600 035.


To

AII DDOs


PAO(South)/BAS III/12580/2024 dated 28/10/2024

Sir/Madam,

Sub : New Health Insurance Scheme 2021 - United Insurance Co Ltd's Divisional Office - shifted -New Address communicated -Regarding.


Ref : 1. Letter received from the commissioner of Treasuries and Accounts, Rc.No.30655/NHIS-2/2024 Dated 21-03-2024


The United India Insurance Co.Ltd's Divisional Office dealing with NHIS scheme was shifted to a new premises in the following address

"United India Insurance Co. Ltd,

LBO-010600,

134, Silingi Buildings,(Behind IDBI Bank),

Greams Road, Chennai-600 006"

Therefore the reimbursement claims may be send to the above address. And it is also informed that there is no change in the telephone numbers.

Asst Pay and Accounts Officer (South)

Chennai-35


March 2026 Salary & Pension ECS Settlement Date


March 2026 Salary & Pension ECS Settlement Date :


🎯 இன்று 02-04-2026 ஓய்வூதியம் மற்றும் ஊதியம் அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.


வங்கிக்கணக்கின் எண்ணை மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி (PaSS)

 


வங்கிக்கணக்கின் எண்ணை மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி விரைவில் அறிமுகம்


மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (MNP) போலவே, வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலேயே ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் வசதியை (Bank Account Portability) ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 'பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்' (PaSS) மூலம் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இது சம்பளம், EMI மற்றும் மானியங்கள் தடங்கலின்றி, பழைய கணக்கு எண் தொடர உதவும். 


முக்கிய அம்சங்கள்:

எண் மாறாது: பழைய 11 அல்லது 16 இலக்க கணக்கு எண் அப்படியே இருக்கும்.

தானியங்கி மாற்றம்: சம்பளப் பரிமாற்றம், EMI, SIP மற்றும் பயன்பாட்டு பில்கள் (Utility bills) புதிய வங்கிக்குத் தானாகவே மாற்றப்படும்.

எளிதான நடைமுறை: KYC ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் குறையும், அதே வங்கி கணக்கு எண்ணுடன் வேறு வங்கிக்கு (எ.கா., SBI-ல் இருந்து இந்தியன் வங்கிக்கு) மாறலாம்.

நோக்கம்: வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கிச் சேவையைத் தேர்ந்தெடுக்கும் வசதியை அளித்தல் மற்றும் வங்கி மாற்றத்தில் உள்ள சிரமங்களைக் குறைத்தல். 


இந்த வசதி, 'Payments Vision 2028' ஆவணத்தின் ஒரு பகுதியாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 


இதன் மூலம், வாடிக்கையாளர் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும்போது, ​​அவர்களின் அனைத்து EMI-கள், SIP-கள், கடன்கள் உள்ளிடவையும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்படும்.


பலர் சம்பளக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் அரசுத் திட்டங்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதால், விருப்பமில்லாதபோதும் தங்கள் பழைய வங்கியிலேயே தொடர்ந்து கணக்கு வைத்துள்ளனர்.


புதிய நடைமுறையால் பயனர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கணக்கு விவரங்களை நேரடியாக மாற்ற வேண்டிய தேவை இருக்காது.


அதேநேரம் இந்த செயல்முறையில் கணக்கு எண் மாறாவிட்டாலும், புதிய வங்கியின் IFSC குறியீடு மாறும்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 02.04.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 917:

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

உரை:

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.


பழமொழி :
Bend the twig,bend the tree.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

மேலான பண்புள்ளவர்களின் சொற்களை கேளுங்கள் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள் - ஔவையார்


பொது அறிவு :

01. நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜான் பிலிப் ஹாலண்ட், John Philip Holland

02.தமிழ்நாட்டில் வட காவிரி என்று அழைக்கப்படும் நதி எது?

கொள்ளிடம் ஆறு- Kollidam river


English words :

Serene – Calm, peaceful, and untroubled

Ambiguous – Having more than one meaning; unclear


தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

கையெழுத்து, கையொப்பம் இரண்டும் ஒன்றா வேறு வேறா?

இரண்டும் ஒன்று அல்ல. எப்படி என்று காண்போம் வாருங்கள்

கையெழுத்து என்பது ஒருவர் பொதுவாக  கைப்பட எழுதும் எழுத்து (எழுத்து வடிவம்) ஆகும்.

பயன்பாடு - கடிதம், பாடக் குறிப்புகள் எழுத பயன்படுகிறது

கையொப்பம் என்பது ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த ஆவணங்களில் இடும் தனித்துவமான, மாற்ற முடியாத  கையெழுத்து (signature) ஆகும்

பயன்பாடு:

கையொப்பம் வங்கி, பத்திரம், அலுவலக ஆவணங்களில் சட்டப்பூர்வ சான்றாகப் பயன்படுகிறது.

கையெழுத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றலாம் (நிதானமாக, வேகமாக), ஆனால் கையொப்பத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.


அறிவியல் களஞ்சியம் :

மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

ஏப்ரல் 02

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805–1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.[1] "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்



நீதிக்கதை

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதை ஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இரக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலர வைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. “ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கவ்விக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்கு “பக்” கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாயமும் அபாயமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.


இன்றைய செய்திகள்

02.04.2026

⭐ஓஎன்ஜிசி நிறுவனம், 'தாமன் அப்சைட் டெவலப்மென்ட்' திட்டத்தின் மூலம் எரிவாயு உற்பத்தியை தொடங்கியுள்ளது.

⭐இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்கு அதிகரிப்பு: 1000 லிட்டர் ரூ.2.07 லட்சமாக உயர்வு.

⭐போரால் இஸ்ரேல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

⭐ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி.
கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அரை சதம் அடித்த இரண்டாவது அதிவேக பேட்ஸ்மேன்வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் விளாசியது ஐபிஎல்லில் புதிய சாதனையாக அமைந்தது.


Today's Headlines

⭐ Oil and Natural Gas Corporation has started gas production through the “Daman Upside Development” project.

⭐ Aviation fuel prices in India have doubled: 1000 liters have increased to
₹ 2.07 lakh.

⭐ Due to the war, the normal life of people in Israel has been affected.

⭐ One-third of the CCTV cameras sold in India are manufactured in China.

SPORTS NEWS

🏀 Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, scored a half-century and became the second - fastest batsman to achieve this milestone, setting a new record in the Indian Premier League.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2026

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 01.04.2026 

கிழமை:- புதன் 


திருக்குறள்:

குறள் 914:

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

உரை:

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.


பழமொழி :
Many hands make light work.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் ஆனந்தம் பிறக்கிறது - தங்கரசால்


பொது அறிவு :

01. பாபநாசம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

தாமிரபரணி_ Thamirabarani River

English words :

Analyze – to examine in detail to understand or interpret.

Crisis – a time of intense difficulty or danger.


தமிழ் இலக்கணம்:

பதற்றம், பதட்டம் எது சரி?

பதறு என்ற சொல்லில் இருந்து தான்

பதறி, பதறிய, பதற்றம் என்ற சொற்கள் பிறந்தது.

எனவே பதற்றம் என்பதே சரி.

எழுதும் போது பதற்றம் என்றே எழுத வேண்டும்

மதன் பதற்றத்தோடு பரீட்சை எழுத வந்தான்.


அறிவியல் களஞ்சியம் :

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்.


ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.


நீதிக்கதை

யார் வள்ளல்?

முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.

அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.

திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.

அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.

நீதி :

தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.


இன்றைய செய்திகள்

01.04.2026

⭐சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

⭐ இந்தியாவில் LPG க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெட்ரோல் பங்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

⭐ஏமனின் ஹூத்தி தீவிரவாதிகள் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தகர்ப்போம் என்று அச்சுறுத்துவதால் உலக நாடுகள் கலக்கமடைந்து ள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஷிம்கென்ட் கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.

🏀 ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.


Today's Headlines

⭐ In cities including Chennai, the prices of daily food items such as tea, snacks, and meals in restaurants and tea shops have increased significantly.

⭐ There is a shortage of LPG in India. As an alternative to LPG cylinders, the central government has announced that kerosene will be sold at two petrol bunks in each district.

⭐ Global nations are concerned as the Houthis in Yemen have threatened to damage undersea communication cables.

SPORTS NEWS

🏀 In the Shymkent, Kazakhstan chess tournament, India’s Pranav emerged as the champion.

🏀 In the third league match of the Indian Premier League 2026, Rajasthan Royals defeated Chennai Super Kings by 8 wickets.


Notification for TNLA Elections published in the Gazette

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு


Notification for Tamil Nadu Legislative Assembly elections published in the Gazette


* 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிப்பு



GOVERNMENT OF TAMIL NADU

2026

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

No.211]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

CHENNAI, MONDAY, MARCH 30, 2026

Panguni 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu-2057

Part V-Section 4

Notification by the Election Commission of India

NOTIFICATION BY THE ELECTION COMMISSION OF INDIA

APPOINTMENT OF DATES FOR VARIOUS STAGES OF ELECTIONS AND FIXATION OF HOURS OF POLL

No. SRO G-14/2026.

FOR ALL THE ASSEMBLY CONSTITUENCIES IN THE STATE OF TAMIL NADU.

The following Notification of the Election Commission of India, Nirvachan New Delhi-110 001, dated: 30th March, 2026 [9 Chaitra, 1948 (Saka)] is published:-

Sadan, Ashoka Road, No. 464/SS-I/TN-LA/2026:- WHEREAS, the Governor of the State of Tamil Nadu has, by a notification issued under Sub-section (2) of Section 15 of the Representation of the People Act, 1951 (43 of 1951) and published in the official Gazette of the State on the 30th March, 2026, been pleased to call upon all Assembly Constituencies in the State of Tamil Nadu, to elect members to the Legislative Assembly of the State, in accordance with the provisions of the said Act and of the rules and orders made thereunder;

NOW, THEREFORE, in pursuance of Sections 30 and 56 of the said Act, the Election Commission of India hereby-

(A) appoints, with respect to the said election in each of the Assembly Constituencies:-

(a) the 06 April, 2026 (Monday) as the last date for making nominations;

(b) the 07 April, 2026 (Tuesday) as the date for the scrutiny of nominations;

(c) the 09 April, 2026 (Thursday) as the last date for the withdrawal of candidatures;

(d) the 23 April, 2026 (Thursday) as the date on which a poll shall, if necessary, be taken; 

(e) the 06 May, 2026 (Wednesday) and as the date before which the election shall be completed; and


(B) fixes the hours, from 7.00 AM to 6.00 PM, as the hours during which the poll shall, if necessary, be taken on the date specified above, for the election.

(By Order)

LATA TRIPATHI,

Secretary,

Election Commission of India.

ARCHANA PATNAIK,

Chief Electoral Officer and

Principal Secretary to Government,

Public (Elections) Department.


Secretariat,

Chennai-600 009,

30th March, 2026.




2026-2027 : RTE மூலம் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

 

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு , தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை  நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை - 600 006.


ந.க. எண் . 2335/E1/2026, நாள். 27.03.2026


பொருள்

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், 2009, பிரிவு 12 (1) (C) இன்படி- 2026 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை (LKG / I Std) வகுப்பில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக. சேர்க்கை


பார்வை :


1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள். 2011.


2. அரசாணை (நிலை) எண்.271 பள்ளிக் கல்வித்துறை (சி2) नं. 25.10.2012.


3. அரசாணை (நிலை) எண் 60. பள்ளிக் கல்வித் (எக்ஸ்2) துறை, श्री 01.04.2013.


4. அரசாணை (நிலை) எண் 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, आनी 12.05.2014.


5.அரசாணை (நிலை) எண் 66, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, फ्रन 07.04.2017.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ໙ 12 (1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2025 2026 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, பார்வை (5) இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி RTE Act 2009 பிரிவு 12 (1) (சி ) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


1. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.


2. RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2025 -2026 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25% ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 6.4.2026 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7..4.2026 அன்று 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 15.4.2026 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்


Postal Ballot - Voting Procedure

 

தபால் வாக்கு - வாக்களிக்கும் வழிமுறை


Postal Vote - Voting Procedure


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு செலுத்தும் முறை...


Procedure for Casting of Postal Ballot / Postal Vote for Polling Officers...



>>> தபால் வாக்கு செலுத்தும் முறை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தபால் வாக்கு
13-A உறுதிமொழி படிவம்
13-B தபால் வாக்குச்சீட்டு
13-C OUTER COVER
13-D வாக்காளருக்கான அறிவுரை


COVER A
இதனுள் 13-B வாக்குச்சீட்டு வைத்து ஒட்ட வேண்டும்.


COVER B (13C)
இதனுள் உறுதிமொழிப் படிவம்(13A)
+
COVER A (Containing 13B)


இரண்டையும் (13A வினை Cover A வின் மேல் மடித்து)13C இல் வைத்து ஒட்ட வேண்டும்.



தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! தங்களது மக்களாட்சி உரிமையை நிலைநாட்டும் கடமையைச் செய்ய அஞ்சல் வாக்குச் சீட்டிற்கு விண்ணப்பித்திருப்பீர்கள்.


கவனமாக வாக்களித்து நமது வாக்காளர் கடமையை 💯 நிறைவு செய்வோம்.


சிறு தவறு செய்தால் கூட நமது ஓட்டு செல்லாத ஓட்டாக மாறிவிடும்.


சட்டமன்றத் தொகுதி உள்ள மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பிலேயே அஞ்சல் வாக்குச் சீட்டு கிடைக்கும். கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் அதன்பிறகு ஒரு சில நாளில் அஞ்சல் வழியே வந்து சேர்ந்துவிடும்.


அஞ்சல் வாக்களிக்கத் தரப்படும் காக்கி உறையில் என்னென்ன இருக்கும்? எப்படி நிரப்புவது? எங்கே சமர்ப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.


நமக்கு வழங்கப்படும் *காக்கி உறையின் உள்ளே,*

1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A)

2. வாக்குச் சீட்டு 

3. இரண்டு உறைகள் (A Cover & B Cover)

4. வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) உள்ளிட்டவை இருக்கும்.


வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) படிவத்தைத் தனியே எடுத்து உங்கள் வசமே வைத்துக் கொள்ளுங்கள். இதை உறையில் வைத்து அனுப்பத்தேவையில்லை.


*1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A) :*


வாக்காளராகிய நீங்கள் கொடுக்க வேண்டிய உறுதிமொழிப்படிவம் இரு பக்கங்களில் இருககும். இதில் *முன்பக்கம் மட்டும் நிரப்பினால் போதும்.* கையொப்பமிடத் தெரியாத / இயலாதவர்களுக்குத் தான் பின் பக்கம்.


உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட வேண்டிய *தொடர் எண் என்பது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண்.* இந்த எண் வாக்குச் சீட்டின் பின்புறம் / மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும்.


உறுதிமொழிப் படிவத்தின் *மேல்பகுதியில்* இடும் உங்களின் *கையொப்பமும்,* வெளி உறையில் (B cover) இடும் கையொப்பமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.


உறுதிமொழிப் படிவத்தின் *கீழ்ப் பகுதியில் A / B grade அலுவலர்களிடம் சான்றொப்பம்* பெறப்பட வேண்டும். பெரும்பாலும் பயிற்சி மையத்திலேயே இதில் சான்றொப்பமிட வட்டாட்சியர்கள் தயார்நிலையில் இருப்பர். வெளியிடங்களில் பெற வேண்டுமெனில் *உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், அரசு மருத்துவர்* உள்ளிட்டோரிடம் சான்றொப்பம் பெறுவது சிறந்தது. எளியதும் கூட.


சான்றோப்பத்துடன் சார்ந்த *அலுவலரின் Seal-ஐயும்* பெற மறவாதீர்.


*2. வாக்குச் சீட்டு :*


தங்களது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அடங்கிய வாக்குச் சீட்டில் தங்களது வாக்கினை தாங்கள் தேர்வு செய்யக்கூடிய தமிழ்நாட்டின் நலன் பேணும், மக்களின் நலனிற்காகத் தொடர்ந்து இயங்கக்கூடிய கூட்டணியின் / கட்சியின் *வேட்பாளரது சின்னத்தில் Ball Point பேனாவில் Tick* அடித்து, முன்னர் மடிக்கப்பட்டபடியே மடிக்கவும்.


ஏதேனுமொரு சின்னத்தில் நீங்கள் அடிக்கும் டிக்கைத் தவிர்த்து *வேறு எந்தவிதக் குறியீடோ கையொப்பமோ வாக்குச்சீட்டில் இடப்படக் கூடாது.*


*3. உறை A :*


A உறையின்மேல் *FORM 13B* என்ற தலைப்பிட்டு சில விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.


*வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை A உறையின்மேல்* உரிய இடத்தில் எழுதவும்.


அதன்பின், டிக் அடித்து மடித்து வைத்திருக்கும் *வாக்குச் சீட்டினை A உறையினுள் வைத்து உறையை ஒட்டிவிடவும்.*


*4. உறை B :*


B உறையின்மேல் *FORM 13C* என்ற தலைப்பிட்டு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுலர் முகவரி உள்ளிட்ட  விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.


B உறையின்மேல் *இடது புறத்தில் தங்களது கையொப்பத்தை* இட வேண்டும். இக்கையொப்பம் முன்னர் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட தங்களது கையொப்பத்தை ஒத்திருப்பது அவசியம்.


இதன்பின் *பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவம் மற்றும் வாக்குச் சீட்டு வைத்து ஒட்டப்பட்ட உறை A ஆகிய இரண்டையும் B உறையின் உள்ளே வைத்து உறையை ஒட்டிவிட* வேண்டும்.


அவ்வளவு தான் தங்களது அஞ்சல் வாக்கு தயார்.


இனி, இந்த B உறையை *பயிற்சி மையம் / தங்களது தொகுதிக்கான துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Taluk Office) / தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Collector Office)* உள்ளிட்ட இடங்களில் உள்ள அஞ்சல் வாக்கிற்கான பெட்டிகளில் போட்டுவிடலாம்.


மேற்படி இடங்களுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனில், *அருகிலுள்ள அஞ்சலகத்தில் / அஞ்சல் பெட்டியில் அளித்துவிட்டால், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமே கொண்டு சேர்த்துவிடும்.* இதற்கென Stamp ஏதும் ஒட்டத் தேவையில்லை.


நீங்கள் அனுப்பும் அஞ்சல் வாக்கு பூர்த்தி செய்யப்பட்ட உறை, மே-4-2026 அன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் தங்களது தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை அடைந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு மாத கால அவகாசமிருப்பினும் ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் சேர்த்துவிடுவது நலம்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்

   THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல் அனைவருக்கும் வணக்கம். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்...