கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள்


கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள்


கடந்த (28.01.2026) அன்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், நாளை (07.02.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-02-2026 ; School Morning Prayer Activities


🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 06.02.2026

கிழமை:- வெள்ளி


 

திருக்குறள்: 

குறள் 283:

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.    

விளக்க உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.


பழமொழி :
Work hard in silence ; let success make the noise.

அமைதியாக உழை; வெற்றி உன் பெயரை பேசட்டும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.


பொன்மொழி :

படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  - காமராஜர்


பொது அறிவு :

01.இந்திய சினிமா துறையில் வாழ்நாள் பங்களிப்பிற்காக இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருது எது?

தாதாசாகேப் பால்கே விருது  Dadasaheb Phalke Award

02.நவீன "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் போற்றப்படுபவர்யார்?
ஆறுமுக நாவலர்
Arumuga Navalar

 

English words :

strangle-choke

cranky-easily irritable


தமிழ் இலக்கணம்:

சுடு தண்ணீர்
இது தவறு.
சுடு என்றால் சூடான
தண்ணீர் பிரித்தால் தன்மை+நீர் என்று வரும். தன்மை என்றால் குளிர்ந்த என்று பொருள்
இப்போ சுடு தண்ணீர் என்பதன் பொருள் சூடான குளிர்ந்த நீர் என்று ஆகி விடும். இது தவறு எனவே சுடு நீர் அல்லது வெந்நீர் என்றே சொல்ல வேண்டும்


அறிவியல் களஞ்சியம் :

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி 'தெதிஸ் கடல்' என்று அழைக்கப்பட்ட கடலாக இருந்தது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த பாலைவனத்தின் தற்போதைய மேற்பரப்பு, பண்டைய கடற்பரப்பின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உள்ளூர்வாசிகள் இந்த பாலைவனத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது ஏலியன்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.


பிப்ரவரி 06

நியூசிலாந்து நிறுவிய நாள், 1840

FGM பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள், ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.



நீதிக்கதை

சிங்கத்தின் வீரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது.

ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.


இன்றைய செய்திகள்

06.02.2026

⭐ரூ.1,267 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழகத்தில் வெப்பநிலை உயரக்கூடும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

⭐ இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல்போயி ருப்பதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

⭐ இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), "திட எரிபொருள் ராம்ஜெட்" என்ற மிக நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

🏀டிராபி. 2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone for new projects worth Rs. 1,267 crore.

⭐ The Meteorological Department warned that temperatures may rise in Tamil Nadu.

⭐ Delhi Police has revealed that 807 people went missing in the first 15 days of 2026 alone in the Indian capital Delhi.

⭐The Defence Research and Development Organisation (DRDO) is implementing a "solid fuel ramjet" missile technology that can hit air targets from a very long distance.

SPORTS NEWS

🏀The 10th T20 World Cup begins on the 7th. The defending champions, India, have a chance to be the champions for the third time.

🏀Trophy. The 2025-26 Ranji Trophy is currently underway. The quarter-finals are set to begin tomorrow.


TNSED Parents App Update new version 0.0.57 - Updated on 21-01-2026

 

 


TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.57

 

Updated on 21 January 2026


👉👉 NSNOP Bill Image Upload bug fixes


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent




For parents of students from Tamil Nadu for information and school management


Parent App is an app created by the Tamil Nadu State Education Department with a goal of engaging parents and the larger community towards the development of schools. 


Parents can access information about their children’s attendance, scholastic and co-scholastic performance. Feedback can be provided on the management of the school and welfare schemes and scholarships offered. 


Parents can view all data about the school - student enrollment, teacher details and infrastructure. 


Members of the School Management Committee can collect data of the school and surrounding habitation to plan for the development of the school. All parents of the school can access the resolutions passed by this committee.  


Parents can offer feedback across various categories like infrastructure, safety, learning and welfare schemes.  


Parents can access resources on child development, education schemes and career options to support their children.



Sony BRAVIA 3 Series 139 cm (55 inches) 4K Ultra HD AI Smart LED Google TV K-55S30B (Black)





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qNSQ2t



Conducting SMC Meetings - Guidelines & Video Collection

 


பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் & காணொளிகள் தொகுப்பு


Guidelines & Video Collection on Conducting School Management Committee Meetings


Sir / Madam,

Sharing the link for the supporting videos and documents, which may be accessed during the SMC meeting.


Kindly circulate the same in all relevant groups (BRTEs/HMs).


📌 வழிகாட்டுதல்கள் & காணொளிகள்:


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SMC Meeting on 06-02-2026 - SPD Proceedings


 பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 06.02.2026 அன்று நடைபெறுதல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 


அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 2026 மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்தப்படுதல் வேண்டும். இணைப்பில் கண்டுள்ள மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தினை நடத்திடும் வகையில்,  மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கான அழைப்பினை தெரிவித்திட அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


SMC Meeting on 06-02-2026 - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந க.எண்:1077/A1/பமேகு/ஒபக/2025-26, நாள் : 27/01/2026

பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு- அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் 2026 பிப்ரவரி மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 06.02.2026, வெள்ளிக் கிழமை அன்று நடத்துதல் கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல்-சார்பு

பார்வை : (1) அரசாணை (நிலை) எண். 144, பள்ளிக் கல்வித் (அக.இ2) துறை, நாள். 28.06.2024

(2) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இை செயல்முறைகள் நக.எண்.9111/கே2/2025, நாள்: 02.07.2025

(3) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 012381/ஜெ2/2025, நாள்: 11.07.2025

(4) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நக. எண். 32841/b1/1/2025.: 02.07.2025.

(5) பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 034785/m/51/2025, 30.06.2025.

பார்வை-1-இன்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு பள்ளி மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளரச்சியில் சிறப்பாகப் பங்காற்றி வரும் அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு 2026-புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பள்ளிக் கல்வித் துறை பெருமைகொள்கிறது.

பார்வை-2 மற்றும் 3-இன்படி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கும், பள்ளியின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் வகையில் மாதம் தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026 பிப்ரவரி மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வருகின்ற 06.02.2026, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை கீழ்காண் கூட்டப் பொருள்கள் மற்றும் பள்ளியின் முக்கியத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

I. கூட்டப் பொருள்

1. திறன் இயக்கம்

திறன் மாணவர்களில் டிசம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் 'அடிப்படைக் கற்றல் விளைவில்" (Basic Learning Outcome) பாடவாரியாகத் தேர்ச்சி அடைத்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் முந்தைய மாத மதிப்பீட்டிலிருந்து அதில் ஏற்பட்டுள்ள முன்ணேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

b) திறன் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தாநிலை அறிக்கை (Report Card) பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து விவாதிக்க வேண்டும்.

2. எண்ணும் எழுத்தும்

a) இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில், வகுப்பு நிலையில் (Grade Proficiency) உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும்.

Grade Proficiency: (வகுப்பு நிலை)

வகுப்பு 2-மொட்டு, 

வகுப்பு 3-மலர், 

வகுப்பு 4.வகுப்பு நிலை (Grade Level)

வகுப்பு 5-வகுப்புநிலை (Grade Level)

b) பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வகுப்பு 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு Holistic Report Card வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

3. உயர்கல்வி வழிகாட்டி

a) 2026 ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்கல்வியே எங்கள் இலக்கு" நிகழ்வு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றதா என்பதை உறுதிசெய்திட வேண்டும்.

b) இக்கல்வியாண்டில் (2025-2026) அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வுகளை எழுதுவதை உறுதிசெய்திட வேண்டும்.

4. அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACiS)

a) இடைநின்ற மற்றும் இடைநிற்க வாய்ப்புள்ள குழந்தைகள் 9 -12 வகுப்பில் இருப்பதற்கு வாய்ப்புள்ளதால், பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள இல்லம் தேடிக் கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக் குழுவினர். தலைவர் மற்றும் செயலர் இவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து இடைநின்ற மாணவர்களின் பட்டியலை பகிர்ந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


மேலும் விவரங்களுக்கு...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்




 சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ந.க. எண்.09077/அ5/2024, நாள் 06.10.2025


அறிவிப்பு


6 OCT 2025 


திருச்சிராப்பள்ளி


சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


06/10/25


மாவட்டக் கல்வி அலுவலர் 

திருச்சிராப்பள்ளி


பெறுநர்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம்.



TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? RTI - CM Cell Reply



 TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் RTI - CM Cell Reply


TNTET தேர்ச்சி சான்றிதழ் உண்மைத்தன்மை பெற வேண்டுமா ? RTI- Letter - 03.11.2022



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> TET - Genuineness Certificate பெற  & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்



அனுப்புநர்.

திருமதி. கோ.கிருஷ்ணப்பிரியா.

முதன்மைக் கல்வி அலுவலர்.

விழுப்புரம்-605602


9477/6/2022,


பெறுநர்.

முதலமைச்சர் தனிப் பிரிவு,

மாவட்ட ஆட்சியரகம்,

விழுப்புரம்.


03.11 2022


பொருள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனு அறிக்கை பணிந்தனுப்புதல் சார்பு


பார்வை


1) முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு எண். 4560971 -02:11.2022


மனுதாரரின் பெயர்

சையது இஸ்மாயில்


மனுதாரரின் கோரிக்கை : முதலமைச்சர் தனிப்பிரிவு மனு : ஆசிரியர் தகுதித்தேர்வில் TNTET)தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டுமா


மனுதாரருக்கு அனுப்பிய பதில் : 

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் (TNTET )தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது




மனு ஏற்கப்பட்டதா (அ) நிராகரிக்கப்பட்டதா

ஏற்பு


நிராகரிக்கப்பட்டிருப்பின் காரணம்



 முதன்மைக் கல்வி அலுவலர் விழுப்புரம்.


நகல்


சையது இஸ்மாயில் 01 மங்களாம்பிகை கார்டன் TV நல்லூர் விழுப்புரம் மாவட்டம் (தகவலின் பொருட்டு அனுப்பபடுகிறது ).




2026ஆம் ஆண்டுக்கான UPSC அறிவிக்கை வெளியீடு



2026ஆம் ஆண்டுக்கான UPSC அறிவிக்கை வெளியீடு


2026 UPSC Civil Services Examination Notification 


2026ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வுகள் அறிவிப்பு பிப்ரவரி 4, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. மொத்தம் 933 காலியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் பிப்ரவரி 24, 2026 வரை வரவேற்கப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வு (Prelims) மே 24, 2026 அன்றும், முதன்மைத் தேர்வு (Mains) ஆகஸ்ட் 21, 2026 அன்றும் நடைபெறும். 


முக்கிய விவரங்கள்:

அறிவிக்கை தேதி: 04 பிப்ரவரி 2026.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 24 பிப்ரவரி 2026 (மாலை 6:00 மணி வரை).

முதல்நிலைத் தேர்வு (Prelims): 24 மே 2026.

முதன்மைத் தேர்வு (Mains): 21 ஆகஸ்ட் 2026.

காலியிடங்கள்: 933. 


தேர்வு நடைமுறை:

முதல்நிலைத் தேர்வு (Objective Type): தகுதித் தேர்வு.

முதன்மைத் தேர்வு (Descriptive): எழுத்துத் தேர்வு.

நேர்காணல் (Interview): ஆளுமைத் திறன் தேர்வு.



>>> அறிவிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-02-2026 ; School Morning Prayer Activities


🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 05.02.2026

கிழமை:- வியாழன்


 

திருக்குறள்: 

*குறள் 417:*


பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 

தீண்டிய கேள்வி யவர்.        


*விளக்க உரை:*


நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.


*பழமொழி :*


Effort is the key to success. 


முயற்சியே வெற்றியின் சாவி.


*இரண்டொழுக்க பண்புகள் :*



1. பணத்தை விட அறிவே உயர்ந்தது


2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.


*பொன்மொழி :*


பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.


       - விவேகானந்தர்.


*பொது அறிவு :*


01. எந்த நாட்டின் பாராளுமன்றம் அமைதிக்கான நோபல்  பரிசை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது?


நார்வே பாராளுமன்றம்


The Norwegian Parliament 


02.பலூனில் முதல்முறையாக  உலகைச் சுற்றிப் பறந்த முதல் அமெரிக்கர் யார்?


ஸ்டீவ் ஃபோசெட் -Steve Fossett


*English words :*


haunting-sad and unforgettable 


piblings-aunt and uncle


*தமிழ் இலக்கணம்:* 


 அது, இது, அஃது, இஃது 


உயிர் மெய் எழுத்துக்கு முன் அது, இது வரும்

எ. கா. அது மாலாவின் புத்தகம்

இது பாரதியின் வீடு

ஆனால் உயிர் எழுத்துக்கு முன்னால் அஃது, இஃது தான் வரும்

அஃது 

*உ* ன்னுடைய வீடா?

இஃது 

*அ* வரின் கவிதை


*அறிவியல் களஞ்சியம் :*


இந்த பாலைவனம் நீண்ட காலமாக 'இருண்ட மண்டலம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நிகழ்விற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அமெரிக்க ஆய்வுக்குப் பிறகு, மெக்சிகோ அரசு சிஹுவாஹுவா பாலைவனத்தில் ஒரு பெரிய ஆய்வகத்தை நிறுவியது. இது 'தி ஜோன்' என அறியப்படுகிறது.


*பிப்ரவரி 05*


*கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்*




கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.


*நீதிக்கதை*


ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.



கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.


நீதி: நாம் பிறருக்கு துன்பம் விளைவிக்கும்போது  நமக்கும் இன்னல் வரும்.


*இன்றைய செய்திகள்*


05.02.2026



⭐'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


⭐தமிழகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மேலும் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.


⭐மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.


*Today's Headlines*



⭐Chief Minister M.K. Stalin launched the project "My Dream My Future"


⭐In Tamil Nadu, Rs. 66.37 crore has been allocated under the Adi Dravidar Munnetra Kazhagam (ADMP) in the financial year 2025-26, and Rs. 14.35 crore of small business loans have been provided to 1,514 Adi Dravidar beneficiaries.


⭐Home Ministry of  India announced withdrawal of President's rule in Manipur.


*SPORTS NEWS*



🏀The 16th Under-19 Cricket World Cup is going on in Zimbabwe and Namibia.


பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 



பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பதும் பாலியல் தொல்லைதான் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பெண்ணை பார்த்து கண் அடிப்பது, சைகை செய்வது, மற்றும் பறக்கும் முத்தம் (Flying kiss) கொடுப்பது போன்ற செயல்கள் பாலியல் தொல்லையின் கீழ் வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் வழக்கொன்றில், இத்தகைய செயல்கள் பாலியல் ரீதியான தொந்தரவு மற்றும் குற்றச் செயலாகக் கருதப்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 


2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள்

கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள் கடந்த (28.01.2026) அன்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் குடமுழுக்...