Presiding Officer Guide
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Presiding Officer Guide
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்
PrO App Timeline
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
2% Dearness Allowance Hike for Central Government Employees
01.01.2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 % உயர்வு
58%லிருந்து 60%ஆக உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்தி வெளியீடு
2% DA Hike - Press Release
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Cabinet
Azadi Ke Amrit Mahotsav
Cabinet approves additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2026
Posted On: 18 APR 2026 3:13PM by PIB Delhi
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2026 representing an increase of 2% over the existing rate of 58% of the Basic Pay/Pension, to compensate against price rise.
The combined impact on the exchequer on account of increase in both Dearness Allowance and Dearness Relief would be Rs.6791.24 crore per annum. This will benefit about 50.46 lakh Central Government employees and 68.27 lakh pensioners.
This increase is in accordance with the accepted formula, which is based on the
recommendations of the 7th Central Pay Commission.
MJPS
****
(Release ID:2253244) Visitor Counter: 121
அமைச்சரவை
ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 01.01.2026 முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பதிவிட்ட நாள்: 18 ஏப்ரல் 2026, பிற்பகல் 3:13, PIB டெல்லி
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2026 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 58% என்ற விகிதத்தை விட 2% கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பின் காரணமாக அரசு கருவூலத்திற்கு ஏற்படும் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு ரூ.6791.24 கோடியாக இருக்கும். இதனால் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
இந்த அதிகரிப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி அமைந்துள்ளது.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்.
எம்.ஜே.பி.எஸ்.
****
(வெளியீட்டு ஐடி: 2253244) பார்வையாளர் எண்ணிக்கை: 121
உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்
உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? உங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா?
நீங்கள் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் எது என்று தெரியவில்லையா?
எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள google playstore ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ECINET மொபைல் ஆப் ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரே செயலியில் வாக்காளர் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.
ECINET செயலி என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு "சூப்பர் செயலி" ஆகும். இது 40-க்கும் மேற்பட்ட தனித்துவமான தேர்தல் தொடர்பான சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு (படிவம் 6), டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பதிவிறக்கம் செய்தல் (e-EPIC), வாக்காளர் பட்டியலைத் தேடுதல், விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல், வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வேட்பாளர் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் cVIGIL வழியாக விதிமீறல்களைப் புகாரளித்தல் ஆகியவை இதன் முக்கியப் பயன்பாடுகளில் அடங்கும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app
இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (CEO) தகவல்
1. சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற இருக்கின்ற அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் இன்றைய (19.04.2026) பயிற்சியின் போது தேர்தல் பணி சான்று (EDC) வழங்கப்பட உள்ளது.
2. தபால் வாக்கு இதுவரை செலுத்தாதவர்கள் இன்று செலுத்தலாம். தபால் வாக்கினை தேர்தல் பயிற்சி மையங்களில் மட்டுமே அன்றைய தினமே செலுத்தி விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.
3. PRO App இல் இன்றைய பயிற்சியின் போதும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் (Presiding Officers ) அந்தந்த நேரத்திற்கு உண்டான பதிவுகளை குறித்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
4. இரண்டாவது பயிற்சிக்காக, முதன்மை கல்வி அலுவலர் நிலையில் ஒவ்வொரு தேர்தல் பயிற்சி மையத்திற்கும் நியமிக்கப்பட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், சான்றொப்பம் இடுவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் போன்ற அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை இன்றைய பயிற்சியின் போதும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
CEO, Tiruvannamalai
வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை
Procedure to Check Your Part Number and Serial Number in the Voter List via SMS
23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதை SMS மூலம் பார்ப்பதற்கான எளிமையான முறை
1950 என்ற எண்ணிற்கு ECI டைப் செய்து இடைவெளி gap விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட்டு அனுப்பினால் உங்கள் விவரங்கள் சில நிமிடங்களில் வந்து சேரும். சட்டமன்றத் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு உதவியாக இருக்கும்.
எ.கா:
ECI WWW123456
👆 உங்கள் Voter ID number (all caps..)
SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் 1950
மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) குறித்த தகவல்
1️⃣ நேர மேலாண்மை
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே மாதிரி வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்.
குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முகவர்கள் முன்னிலையில் மட்டுமே இதை நடத்த வேண்டும்.
2️⃣ மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை
1. முன் தயாரிப்பு:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (BU), கட்டுப்பாட்டு கருவி (CU) மற்றும் VVPAT ஆகியவற்றை சரியாக இணைக்கவும்.
2. பூஜ்ஜிய சரிபார்ப்பு (Zero Verification):
CU-வில் உள்ள 'Total' பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகள் 0 என்று இருப்பதை முகவர்களுக்குக் காட்டவும்.
VVPAT-ல் 'Mock Poll Slip' இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
3. வாக்கு அளித்தல்:
ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா சில வாக்குகள் வீதம், மொத்தம் குறைந்தது 50 வாக்குகள் பதிவாக வேண்டும். (தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பொத்தானுக்கும் குறைந்தது 1 வாக்கு பதிவாவது கட்டாயம்).
நோட்டா (NOTA) பட்டனுக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.
4. சரிபார்த்தல் (Verification):
CU-வில் உள்ள 'Close' மற்றும் 'Result' பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளவும்.
VVPAT-ல் விழுந்த சீட்டுகளை எண்ணி, CU-வில் உள்ள எண்ணிக்கையுடன் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.
3️⃣ வாக்குப்பதிவு நீக்கம் மற்றும் சீல் வைத்தல் (மிக முக்கியமானது)
1. வாக்குகளை நீக்குதல் (Clearing Data):
'Clear' பொத்தானை அழுத்தி, மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான அனைத்து வாக்குகளையும் நீக்கவும்.
மீண்டும் 'Total' பொத்தானை அழுத்தி, வாக்குகள் 0 என்று இருப்பதை முகவர்களிடம் காண்பிக்கவும்.
2. சீல் வைத்தல் (Sealing):
வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT-க்கு உரிய சீல்களை (Green Paper Seal, Special Tag, Strip Seal) வைத்து முறையாக சீல் வைக்கவும்.
இந்த செயல்முறையின் போது முகவர்களின் கையொப்பத்தை வாக்குப்பதிவு நாட்குறிப்பில் (Polling Station Diary) பெறவும்.
3. சான்றிதழ் (Certificate):
மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்கான சான்றிதழில் (Mock Poll Certificate) தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முகவர்கள் கையொப்பமிட வேண்டும்.
* கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய 'Mock Poll Certificate' படிவத்தைப் பயன்படுத்தவும்.
இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக 'Zonal Officer'-க்குத் தகவல் தெரிவிக்கவும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்
தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்*
வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி முடிய நள்ளிரவு வரை சில இடங்களில் ஆகிவிடுகிறது. மறுநாள் அவர்களால் மீண்டும் பள்ளிக்கு செல்வது சிரமமாகும்.
இதனால் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நாளான
23.4.2026 அன்று அதிகாலை முதல் இரவுநேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் இந்திய தேர்தல் ஆணைய தமிழ்நாடு அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள்பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 24.4.2026 வெள்ளிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தல் பணி மிகவும் பொறுப்பும் கவனமும் உடைய பணியாகும்.
இப்பணிகளை நிறைவேற்ற உடல் மற்றும் மன உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.
குறிப்பாக ஓட்டுப் பதிவு நிறைவடைந்த பின்பு ஒட்டுப்பெட்டி ஒப்படைக்கும் பணிகள் இரவு நேரம் வரை, நள்ளிரவு வரை நீடிப்பதால், அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருவது ஆசிரியர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
பல ஆசிரியர்கள் தன் இருப்பிட முகவரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், பல ஆசிரியர்கள் ஒட்டுச் சாவடி மையத்திலிருந்து 24.4.2026 அன்று அதிகாலையே தன் இருப்பிடத்திற்குச் சென்று சேர்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆசிரியர்கள் உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு 23.4.2026 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும். அதற்கு மறுநாள் 24.4.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை
வணக்கம்
17.04.2026 Friday
Today Attendanceல்
Fully Not working எனவும்,
Reason இல் Others எனவும் தேர்வு செய்து
Save கொடுக்கவும்.
பின்னர் வழக்கம்போல Teacher Attendance பதிவு செய்யலாம்.
ஆசிரியர்களுக்கு மட்டும் காலை மாலை என இருவேளையும் வருகை பதிவு செய்யவும்
துப்புரவு பணியாளர்களுக்கும் வழக்கம் போல் பதிவு செய்யவும்
மாணவர் வருகைப்பதிவு செய்ய முயற்சி செய்தால் கீழேயுள்ளது போன்று தகவல் காட்டும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 16.04.2026
கிழமை:- வியாழன்
திருக்குறள்:
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
விளக்க உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
பழமொழி :
Hear more but talk less.
அதிகம் கேள் குறைவாக பேசு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.
2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.
பொன்மொழி :
எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதிய ஒன்றை தேடத் தொடங்குங்கள். அப்போதுதான் புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும் -வால்ட் டிஸ்னி
பொது அறிவு :
01.இந்தியா அறிவியல் கழகம் (IISc) எங்கு அமைந்துள்ளது?
பெங்களூரு- கர்நாடகம்
Bengaluru , Karnataka,
02. போலியோ நோய் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் யார்?
ஜோனாஸ் சால்க்
Jonas Salk
English words :
Itinerary – A planned route or journey schedule
Destination – The place you are traveling to
தமிழ் இலக்கணம்:
அயற் சொற்களும் அவற்றிற்கான தமிழ் சொற்களும் இன்று பார்ப்போம்
அ.சொல் - த.சொல்
அனுமதி - இசைவு
இருதயம் - நெஞ்சகம்
ஐதிகம் - உலக வழக்கு
அதிகாரி - அலுவலர்
அறிவியல் களஞ்சியம் :
1883-ல் கிரகடோவா எரிமலை வெடித்தபோது, அதன் சக்தி மிகவும் அதிகமாக இருந்ததால், 4,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்திரேலியா வரை அதன் சத்தம் கேட்டது.
ஏப்ரல் 16
சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
நீதிக்கதை
நன்றி மறந்த சிங்கம்
காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.
அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.
“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.
தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.
அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.
மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.
“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.
“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று நைசாகப் பேசியது சிங்கம்.
சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.
இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.
“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள்.
அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்றது சிங்கம்.
“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.
அவ்வழியாக ஒரு நரி வந்தது.
“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.
“எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான்.
முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே…” என்றது.
அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.
“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.
உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.
“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்…”
“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.
“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.
“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.
சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.
“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.
“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள்.
பிறகு என்னையே5 அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.
நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.
குறள் நீதி: “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” ஒருவர் செய்த நன்றியை மறப்பவர்க்கு என்றுமே உயர்வில்லை. ஆகவே, பெற்றவுதவி சிறியதோ/ பெரியதோ என்றுமே நன்றி மறவாது வாழ்வோம்.
இன்றைய செய்திகள்
16.04.2026
⭐கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்.
⭐சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தின் சிங்கிதராய் கிராமத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் பவர் பிளாண்ட்டில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தும், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.
⭐ நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.
⭐ சவுதி அரேபியாவின் ரியாத், மக்கா, நஜ்ரான் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
Today's Headlines:
⭐ Public should not worry about cylinder distribution - Indian Oil Company Official Information.
⭐ 10 people died and more than 40 workers were injured in an accident at the power plant of Vedanta Company in Singitarai village of Chhattisgarh power district.
⭐ Results for class 10th students studying under CBSE curriculum across the country have been declared yesterday.
⭐ It has been raining heavily in the Riyah, Makkah and Najran areas of Saudi Arabia for the last few days. The roads there have turned into rivers.
🏀 Sports news
🏀 22nd of the ongoing IPL series
In the league match, Chennai Super Kings registered their second consecutive win by defeating Kolkata Knight Riders by 32 runs
Presiding Officer Guide வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...