கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Science Practical Exam - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்


SSLC அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - 2026 தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியல் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

 

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் திருத்தம் / சேர்த்தல் / நீக்கம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Scribes நியமித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

 


பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு


கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவர்களாக (Scribe) நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 20.02.2026 

கிழமை:- வெள்ளி



திருக்குறள்: 

குறள் 341:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.

விளக்க உரை:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


பழமொழி :

Borrowing is sorrowing.

கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.- சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு :

01.நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?

சுமார் 19,000 கிலோமீட்டர் -
Approximately 19,000 km

02 மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் B12
Vitamin B12


English words :

consequence –impact happens due to some incidents

ஒரு செயலினால்‌ ஏற்படும் பின்விளைவுகள்.

contest –a competition to find out who is the best

யார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி


தமிழ் இலக்கணம்:

ஒருமை பன்மையில் வரக்கூடிய பிழைகளை எவ்வாறு கண்டறிந்து அதை சரி செய்வது? வாருங்கள் பார்ப்போம்
ஒருமை சொற்கள் இறுதியில் து என முடியும்.

பன்மை சொற்கள் இறுதியில் ன என முடியும்.
இதை கண்டறிய எதை என்ற கேள்வி கேட்க வேண்டும்.
எ.கா 1. பசு‌ கன்றுகளை ஈன்றன.
எது? பசு.‌ பசு ஒருமை
ஒருமை து வில் முடியும்

சரியான விடை –பசு‌ கன்றுகளை ஈன்றது.

2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.


எது? இரும்பு சத்து.‌ இரும்பு சத்து ஒருமை

சரியான விடை

கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.

3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது


எது? வண்டிகள்.‌ இது பன்மை.
சரியான விடை
வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.


அறிவியல் களஞ்சியம் :

இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது.  இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது


பிப்ரவரி 20

சமூக நீதிக்கான உலக நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.



நீதிக்கதை

எதையும் நாமே நாடிப்போவது சரியா?

ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார்.

ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதை பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.

எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாக தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.


இன்றைய செய்திகள்

20.02.2026

⭐தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

⭐நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி

⭐அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.


Today's Headlines

⭐ Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.

⭐ A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.

⭐ Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.

🏀 Sports News

🏀 ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.


TETக்கு விண்ணப்பிக்க Service Certificate பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - DEOs Proceedings


TETக்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள்: 17-02-2026


Attachments to be attached to obtain Service Certificate to apply for TET - Proceedings of District Education Officers, Date: 17-02-2026


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பணிச்சான்று வழங்குவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் குறித்தான சிவகங்கை & இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் கடிதம் நாள்: 17.02.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEOs Proceedings


பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)


1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 19.02.2026 

கிழமை:- வியாழன்



திருக்குறள்: 

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு

விளக்க உரை:

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.


பழமொழி :
An empty sack cannot stand upright

வெறும் கையால் முழம் போட முடியாது


இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும்பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது- கார்லஸ் டிக்கின்ஸ்


பொது அறிவு :

01.2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில்  இடம்பெற்றுள்ள சின்னம் எது?

    மங்கள்யான்- Mangalyaan

02.உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம்  எங்குள்ளது?

      மெக்கா-சவூதி அரேபியா

Mecca-Saudi Arabia.


English words :

regret –to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

remorse –a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.


தமிழ் இலக்கணம்:

தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்
ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.

1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்


2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர்


ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்*  என்று தான் குறிக்க வேண்டும்
சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்

தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.


அறிவியல் களஞ்சியம் :

நமது  பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி.  பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக்  கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.


பிப்ரவரி 19

நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள்.

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.


இன்றைய செய்திகள்

19.02.2026

⭐ தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

⭐உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

⭐’ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:
நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.


Today's Headlines

⭐ Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

⭐ In Cuba, which is known as the “Sugar Bowl of the World,” the fuel shortage is worsening day by day. As a result, the country’s economy and the normal life of the people have been severely affected.

⭐ ‘2,000 children rescued from Russia’ – Ukrainian President Zelenskyy

🏀 Sports News

🏀 T20 World Cup:
Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.


NMMS 2026 Results - DGE Press Release

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


NMMS 2026 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு


NMMS 2026 Results - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


NMMS 2026 Results - Website Link

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட தேர்வு 2025 - 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு


வலைதள இணைப்பு 


NMMS 2026 Results - Website L

👇 👇 👇 


https://apply1.tndge.org/nts-result-change-2022



User Name: 9 Digit Roll number 


Password: Date of Birth (YYYY-MM-DD)



மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings

 

 மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநில திட்ட இயக்ககம்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006


அனுப்புநர்

திருமதி.மா.ஆர்த்தி.இ.ஆ.ப.

மாநிலத் திட்ட இயக்குநர் 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 

சென்னை 600 008


பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண். 3701/C7 /MLM /ஒபக/2026, நாள்: 16.02.2026


அய்யா அம்மையீர் 

பொருள்:


17 FEB 2025


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிகளில் 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் சோதித்து அறித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக


பார்வை

1. மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்


2. தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித நகஎண். 022696/2/2025. 10.02.2026


பார்வை-2ன் படி கண்டுள்ள கடிதத்தின் படி 2025-26-ஆம் கல்வியாண்டு 100 நாட்கள் அறைகூவல் மதிப்பீடு 14000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் கழித்தல், பெருக்கல். வருத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை சோதித்து அறிவதற்கான மதிப்பீடு வினாத்தாள் (Assessment Tool மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடு பணிகளைப் போன்று இவ்வாண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


வஎண்.  மதிப்பீடு செய்யப்படும் நாள் வகுப்பு பாடம் மாணவர் எண்ணிக்கை



1)  18.02.2026   1 முதல் 3    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்


2)  20.02.2026   4மற்றும் 5    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்



பள்ளிகளில் முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் /திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறனறியும் இப்பொருண்மையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவளமையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மைய எல்லைக்குள் இடம்பெறும் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நகல்


மாநில திட்ட இயக்கு 226


தொடக்கக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்.


கிருஷ்ணகிரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (ஒபசு) அவர்களின் செயல்முறைகள்


ந.க.எண்.119/MLM/ஒபக/2025 நாள்:17.02.2026


(நகல்) சென்னை-6. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.3701/C7/MLM/ஒபக/2026 நாள். 02.2026-னை இத்துடன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டாராக் கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார வள மைய (பொ) மேற்பார்வையாளர்களுக்கு தகவலின் பொருட்டும் தக்க நடிவடிக்கையின் பொருட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது இணைப்பு-பார்வை கடிதம்


முதன்மை அலுவலர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி, ஓசூர்.


பெறுதல்: மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி),


2.அணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.


3.அனைத்து வட்டார வளமைய (பொ) மேற்பார்வையாளர்கள். 

4.சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்.


நகல்


முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி அவர்களுக்கு தகவலுக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 18.02.2026 

கிழமை:- புதன்



திருக்குறள்: 

குறள் 513:

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

விளக்க உரை:

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.


பழமொழி :
Hard work writes your destiny.        

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்


பொது அறிவு :

01.இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?

மீரா குமார்-Meira Kumar

02.இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

டி. உதய குமார்-தமிழ்நாடு
D. Udaya Kumar - Tamilnadu


English words :

Famished - starving

Sluggishly - slowly


தமிழ் இலக்கணம்:

வாக்கிய பிழை பாகம் 2
மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்
வல்லுனராக –இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை

2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.


பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே
அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து  கடைகள்  திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும்
நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்


அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.


பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.


மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்


மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.



நீதிக்கதை

நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.


இன்றைய செய்திகள்

18.02.2026

⭐ 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

⭐இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

⭐இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.


Today's Headlines

⭐ In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

⭐ In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

⭐ In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

🏀 Sports News

🏀 In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Science Practical Exam - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

SSLC அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - 2026 தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும...