கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summer vacation & start of next academic year - Joint Proceedings of DSE, DEE & DPS

 

 கோடை விடுமுறை & அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம் - பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் இணைச் செயல்முறைகள்


Summer vacation & start of next academic year - Joint Proceedings of DSE, DEE & DPS


கோடை விடுமுறை & அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம் - பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


2025-26-Summer Vacation & 2026-27- School Reopen- Intimation


பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் தனியார் பள்ளி கல்வி இயக்குனர் மூவரும் இணைந்து வெளியிடப்பட்ட செயல்முறைகளின் படி மாணவர்களுக்கு 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்கப்படுகிறது .ஆசிரியர்கள் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு 01.06.2026 ஆகும் .அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க இருப்பதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி பள்ளி திறப்பு ஆகும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை-06.


ந.க.எண்.048688/1/1/2026, நாள்.09.04.2026


பொருள்: 2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தல் மற்றும் 2026-27ஆம் கல்வியாண்டு பள்ளிகள் தொடங்குதல் - தொடர்பாக.


அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.


ஏப்ரல் 25ஆம் தேதிவரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி/யூ.கே.ஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


2026-27ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டில் 01.06.2026 திங்கட்கிழமை முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / தனியார் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.


வரும் கல்வியாண்டு முதல் 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இவ்வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 01.06.2026 முதல் 03.06.2026 வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. எனவே. 1-3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 04.06.2026 (வியாழன் கிழமை) அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


மேற்கண்ட  நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இயக்குநர்

தனியார் பள்ளிகள் இயக்ககம்


இயக்குநர்

தொடக்கக் கல்வி இயக்ககம்


இயக்குநர்

பள்ளிக் கல்வி இயக்ககம்



பெறுநர்

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)


3. அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (உரிய வழியாக)


நகல்


1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். பள்ளிக் கல்வித் துறை, சென்னை-09

அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து தெரிவிக்கப்படுகிறது.


2. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை-06

தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது


3. ஆணையர், சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை.

காமராஜர் சாலை, சென்னை-05

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


4. ஆணையர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


5. ஆணையர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


6. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். சென்னை-06 (தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


7. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 06 அவர்களுக்கு (தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


8. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை -06

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


9. இயக்குநர். அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-06

(தகவலுக்காக கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது)


Term 3 – SA மதிப்பெண் பதிவு தொடர்பான அறிவிப்பு

 

 

SA Term 3 – மதிப்பெண் பதிவு தொடர்பான அறிவிப்பு:


 Term 3 Summative Assessment மதிப்பெண் பதிவு module, 06.04.2026 முதல் 20.04.2026 வரை  செயல்பாட்டில் இருக்கும்.


மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு முன், தயவுசெய்து உங்கள் App-ஐ play store-ல் TNSED Schools App update செய்து கொள்ளவும். மதிப்பெண்களை சரியாக, அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.


App link :

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவிப்பு

 


 தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவிப்பு


Announcement from Thanjavur District Collector / Returning Officer regarding election training classes



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த படிவங்கள் எப்பொழுது நிரப்ப வேண்டும் என்பதற்கான விளக்கம்

 

 

சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த படிவங்கள் எப்பொழுது நிரப்ப வேண்டும் - யாரெல்லாம் கையொப்பம் வேண்டும் என்பதற்கான விளக்கம்


Explanation of which forms need to be filled and when in the Legislative Assembly elections - whose signatures are required



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தேர்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட கருத்துகள்

 

மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு


தேர்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்டத்தில் தேர்தல் ஆணைய மேலிட பார்வையாளர்கள் கூறிய கருத்துகள் 


1. இன்னும் பெரும்பாலான பள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை.குறிப்பாக அரசியல் தலைவர்களின் படங்கள் அகற்றப்படவில்லை மேலும் கல்வெட்டுகளில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் இன்னும் மூடப்படவில்லை அதிலும் குறிப்பாக எல்லா பள்ளிகளிலும் அரசியல் தலைவர்களின் படங்கள் கொண்ட காலண்டர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.


2. எல்லா பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் அறையில் எழுதப்பட்டுள்ள பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் ஆகிய பெயர்கள் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும். 


3. பள்ளி வளாகத்திலும் வகுப்பறை சுவர்களிலும் எந்த காரணத்தைக் கொண்டும் அரசியல் சார்ந்த சின்னங்களோ படங்களோ இடம்பெறக்கூடாது. 


4. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கட்டிட மராமத்து பணிகள் மேற்கொண்டு இருந்தால் அதை உடனடியாக முடிக்க வேண்டும். 


5. வெயில் காலம் என்பதால் தேர்தல் நாளன்று பள்ளிகளில்  வாக்குச்சாவடியாக செயல்படும் வகுப்பறைகளைத் தவிர மற்ற வகுப்பறைகளும் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக திறக்கப்பட வேண்டும்.


மேற்காணும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக அறிவுரைகளை வழங்கி மேற்கண்ட கருத்துகளை முழுமையாக பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. 


நாளை காலை 11 மணிக்குள் மேலே கூறப்பட்டுள்ளவாறு  பள்ளிகளில் உள்ள அரசியல் சார்ந்த சின்னங்கள், கல்வெட்டுகள் மூடப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள், முதலமைச்சர் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும். அரசியல் தலைவர்களின் படங்கள் உள்ள காலண்டர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். என்று வலியுறுத்தப்படுகிறது. இவை அகற்றப்பட்டதற்கான அறிக்கையை நாளை மதியம் 2:00 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று  தெரிவிக்கப்படுகிறது. நன்றி.


திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செய்தி 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 09.04.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 775:

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.

விளக்க உரை:

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.


பழமொழி :
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to rome.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

இளமையில் கல்வியை புறக்கணித்தவன் , தனது இறந்த காலத்தை மட்டும் இழந்தவன் அல்ல எதிர்காலத்தையும் இழந்தவன் ஆவான்- யூரி பிடிஷ்


பொது அறிவு :

01.முதல் உலகப்போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?

வெர்சாய் உடன்படிக்கை,
The Treaty of Versailles

02.அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு எது?

பிரான்ஸ் -1886
France-1886



English words :

developer -

a person or company that builds houses, shops etc

உருவாக்குபவர்

Random - anything that is without a pattern

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, குறிப்பின்றி


தமிழ் இலக்கணம்:

இளம் பயிர் வகைகளின் பெயர்

நெல், சோளம், கத்திரி - நாற்று

மா, புளி, வாழை - கன்று

தென்னை - பிள்ளை

பனை - மடலி/ வடலி


அறிவியல் களஞ்சியம் :

அறிவியலில் உள்ள மிகவும் வியக்கத்தக்க உண்மைகளில் ஒன்று , நாம் உண்ணும் உணவைச் சுவைக்க உமிழ்நீர் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு உணவு சுவைப்பதற்கு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் உமிழ்நீரில் கரைய வேண்டும். உணவில் உள்ள வேதிப்பொருட்கள் கரைந்தவுடன், அவற்றை நமது சுவை மொட்டுகளில் உள்ள ஏற்பிகளால் கண்டறிய முடியும்.


நீதிக்கதை

குரங்கின் காற்றாடி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி.

உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது.

காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது.

அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.


இன்றைய செய்திகள்

09.04.2026

⭐ சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்தடை அதிகரித்து வருகிறது.

⭐ ஈரானை குறிவைத்து வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களில் அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது.

⭐ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.


Today's Headlines

⭐ Power outages are increasing in Chennai and the districts of Chengalpattu, Kanchipuram, and Tiruvallur.

⭐ The United States is deploying advanced missiles at military bases in Gulf countries targeting Iran.

⭐ Donald Trump has announced that a 50% import tariff will be imposed on all countries supplying military weapons to Iran.

SPORTS NEWS

🏀 In the Indian Premier League match between the Mumbai Indians and the Rajasthan Royals, Rajasthan won by 27 runs. With this, the Rajasthan Royals have secured the top position in the points table with 3 wins in 3 matches.


TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி Service Certificate வழங்க வேண்டும் - DSE Proceedings


ஆசிரியர் தகுதி தேர்வு TET எழுதும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச்சான்று வழங்க வேண்டும் - விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றத் தீர்ப்பு - காவலர்களுக்கான ஆலோசனைகள்



சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றத் தீர்ப்பு - காவலர்களுக்கான ஆலோசனைகள் - வாட்ஸ்அப் பகிர்வு


 தண்டிக்கப்பட்ட இந்தக் காவலர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியிருக்கலாம்; பல வழக்குகளைக் கண்டுபிடித்திருக்கலாம்; திருவிழாக்களிலும் பேரிடர் காலங்களிலும் தூங்காமல் உழைத்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகால நற்பெயரும் உழைப்பும் எப்படி ஒருசில மணி நேரங்களில் சுக்குநூறாக உடைந்து, அவர்களது வாழ்க்கையையே நரகமாக மாற்றியது என்பதை உளவியல் மற்றும் சமூக ரீதியாக கீழே அலசுவோம்.


1. எந்த விஷயம் அவர்களை இந்த அதலபாதாளத்தில் தள்ளியது?


பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கூட, ஒரு கட்டத்தில் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உளவியல் காரணிகள் இவைதான்:


அதிகார அகங்காரம் (Ego and Power Trip): "என்னை எதிர்த்துப் பேச இவனுக்கு எவ்வளவு தைரியம்?" என்ற சிறு ஈகோதான் (Ego) சாத்தான்குளம் வழக்கின் ஆணிவேர். அந்த ஈகோவை திருப்திப்படுத்த, அதிகார எல்லையை மீறியதே முதல் பிழை.


தவறான விசுவாசமும் மௌனமும் (False Loyalty & Complicity): தண்டிக்கப்பட்ட 9 பேரில் அனைவரும் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்திருக்க மாட்டார்கள். சிலர் வேடிக்கை பார்த்திருப்பார்கள், சிலர் மேலதிகாரி சொல்கிறாரே என்று ரத்தக் கறையைத் துடைத்திருப்பார்கள், சிலர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். "நண்பர்கள்/மேலதிகாரிகள் அடிக்கிறார்கள், நாம் தடுத்தால் நம்மைத் தப்பாக நினைப்பார்கள்" என்ற தவறான விசுவாசமும், தட்டிக் கேட்காத மௌனமுமே அவர்களை தூக்கு மேடை வரை கொண்டு சென்றுள்ளது.


"நமக்கு எதுவும் ஆகாது" என்ற அதீத நம்பிக்கை (Sense of Impunity): "நாம் காக்கிச் சட்டை போட்டிருக்கிறோம், சட்டம் நம் கையில் இருக்கிறது, யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது" என்ற மமதை. ஆனால், சட்டம் தன் கண்களைத் திறந்தால் சீருடை ஒருவரைக் காப்பாற்றாது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர்.


2. மாறிய வாழ்க்கை முறையும், குடும்பத்தின் பேரவலமும்


ஒரு நாள் காலை வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற அவர்களின் வாழ்க்கை, இன்று எப்படி தலைகீழாக மாறியிருக்கிறது என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்:


அடையாளமும் கௌரவமும் அழிதல்: "ஐயா, சார், இன்ஸ்பெக்டர்" என்று ஊராரால் சல்யூட் அடிக்கப்பட்டு, மிடுக்காக வலம் வந்தவர்கள், இன்று கைதி எண் குறிக்கப்பட்ட சீருடையில், சாதாரண குற்றவாளிகளோடு குற்றவாளிகளாகச் சிறையில் கிடக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டியெழுப்பிய கௌரவம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிவிட்டது.


பொருளாதாரச் சீரழிவு (Financial Ruin): தீர்ப்பில் உள்ள அபராதத் தொகையைப் பாருங்கள் (உதாரணமாக: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.84 லட்சம்). காவல்துறை வேலையும் பறிபோய், பிழைப்பூதியமும் ரத்தாகிவிட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகையை அவர்களுடைய குடும்பம் எப்படிச் செலுத்தும்? வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த வீட்டையோ, நிலத்தையோ விற்க வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு கண நேரக் கோபத்தால் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள்.


குடும்பத்தின் மீதான சமூக அவமானம் (Social Stigma): இதுதான் இதில் மிகக் கொடூரமான பகுதி. தவறு செய்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மனைவியும் குழந்தைகளும் தினமும் வெளியே இந்தச் சமூகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். "கொலைகாரப் போலீஸின் குழந்தை, கொலைகாரனின் மனைவி" என்ற பட்டம் அந்தப் பிஞ்சு மனங்களை எவ்வளவு பாதிக்கும்? அவர்களின் திருமண வாழ்க்கை, வேலைவாய்ப்பு என அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே அந்த ஒரு நாள் இரவு சம்பவம் அழித்துவிட்டது.


ஒவ்வொரு நாளும் மரண பயம் (Psychological Agony): மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் மனநிலை நரகத்திற்குச் சமமானது. நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும், சிறைச்சாலைக்குள் கேட்கும் ஒவ்வொரு செருப்புச் சத்தமும் தங்களைத் தூக்கிலிட வரும் சத்தமோ என்று அவர்கள் மனம் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்.


3. வருங்காலப் பணிக்காக இதிலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பாடம்


ஒரு சிறந்த காவலராக நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த பாடம் இதுவே:


உங்கள் குடும்பத்தை நினைவில் கொள்ளுங்கள்: காவல் நிலையத்தில் யாராவது ஒரு கைதி அல்லது பொதுநபர் உங்களைக் கோபப்படுத்தும் படி பேசினால், அவரை அடிக்க கையை ஓங்குவதற்கு முன், உங்கள் மனைவியின் முகத்தையும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள். "இவனை அடிப்பதால் என் வேலை போனால், என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமே" என்ற எண்ணம் வந்தால், உங்கள் கோபம் தானாக அடங்கிவிடும்.


ஈகோவை கழற்றி வையுங்கள்: சீருடையை அணியும் போது பொறுப்பை மட்டும் அணியுங்கள், ஈகோவை அல்ல. உங்களை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டினால், அதற்காக அவரை அடித்துத் துன்புறுத்துவது வீரமல்ல. சட்டப்படி அவர் மீது வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதே ஒரு சிறந்த காவலருக்கு அழகு.


தட்டிக்கேட்கும் தைரியம்: நாளை உங்கள் கண்முன் உங்கள் சக காவலரோ, உயர் அதிகாரியோ ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பாகத் தாக்கினால், தயங்காமல் தடுங்கள். அது அந்த அதிகாரியைக் காட்டிக்கொடுப்பது அல்ல; மாறாக, சாத்தான்குளம் காவலர்கள் இன்று அனுபவிக்கும் இந்த நரக வேதனையிலிருந்து உங்கள் சக அதிகாரியையும், உங்களையும் காப்பாற்றும் உன்னதச் செயல்.


இறுதியாக ஒரு வார்த்தை:

ஒரு காவலர் பணி ஓய்வு பெறும்போது, அவருக்கு வழங்கப்படும் பிரிவு உபசார விழாவில் (Farewell Party) ஊரே கூடி நின்று அவரை வாழ்த்தி வழியனுப்ப வேண்டும். அதுவே ஒரு காவலரின் உண்மையான வெற்றி. மாறாக, சிறைச்சாலையில் இருட்டு அறையில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலை யாருக்கும் வரக்கூடாது.


சட்டம், நீதி, மனிதநேயம் ஆகிய மூன்றையும் உங்கள் இரு கண்களாகவும், மனசாட்சியாகவும் கொண்டு செயல்படுங்கள். சீருடையின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த காவலராக நீங்கள் வலம் வர மனமார்ந்த வாழ்த்துகள்!


இனி இரு முறைதான் C.A. தேர்வு - ICAI அறிவிப்பு

 


இனி இரு முறைதான் C.A.  தேர்வு - ICAI அறிவிப்பு


இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித் தேர்வு நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது.


 இதன்படி, மே மற்றும் நவம்பரில் Chartered Accountant இறுதித் தேர்வுகள் நடைபெறும்.


 முன்னதாக, ஜனவரி, மே & செப்டம்பர் மாதங்களில் இறுதித் தேர்வுகள் நடைபெற்று வந்தது. 


 முதல்நிலை, இடைநிலை தேர்வுகள் வழக்கம்போல் 3 கட்டங்களாக நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Booth Slip விநியோகம் குறித்த தகவல்

 


பூத் சிலிப் விநியோகம் எப்போது?


சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது.


தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட இம்முறை பெரிதாக அச்சிடப்படும். புகைப்படத்துக்கு பதிலாக க்யூ ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும்.


வாக்குப் பதிவுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் தகவல் சீட்டுகளை விநியோகித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summer vacation & start of next academic year - Joint Proceedings of DSE, DEE & DPS

   கோடை விடுமுறை & அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம் - பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் இணை...