கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN SPARK | Term 1 | Assessment



TN SPARK Term 1 Assessment

Questions are uploaded in teacher login and will be enabled today. The schools can do the assessments making a schedule on their time availability from today until October 1st week.

CEO


*TNSPARK Assessment for term1* is active from today.All supervisors can communicate to schools to plan for conducting the Assessment in their available schedule and ensure the completion of entry before october-9.


வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்



வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்


CPS ஒழிப்பு இயக்கம்

*_மாநில மையம்_*

________________________

*வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS.!*


 *ஓய்வூதியர் நலனுக்கு எதிராக தெளிவுரை கடிதம் வெளியிட்ட தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்*

_________________________


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, கடந்த ஜனவரியில் TAPS திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. 


திமுக அரசு உறுதியளிக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தோம்.


டேப்ஸ் திட்டம் மெல்ல மெல்லக் கொள்ளும் விஷம் என்று கருத்து 

தெரிவித்து போராட்டங்கள் நடத்தினோம்.


தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் 

தவெக, தனது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, டேப்ஸ் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.


TAPS திட்டம் அறிமுகப்படுத்தி எட்டரை மாதங்கள் முடிந்த பின்பும், இன்று வரை அத்திட்டத்தை அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் 

வெளியிடப்படாததால் TAPS  திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.


இந்நிலையில் தவெக அரசு,  அரசாணை 111 மூலம் TAPS க்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை, இடைக்கால பணப்பலன் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டது.


கடைசியாக பெற்ற மாத ஊதியத்தில்  30 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். 


பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளது.


இடைக்கால பணப்பலன் வழங்கும் நடைமுறைக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் குறைந்தபட்ச பணிக்காலம் தெரிவிக்கப்படவில்லை. 


இந்நிலையில், நிதித்துறை வெளியிட்டுள்ள தெளிவுரைக் கடிதத்தில் குறைந்தபட்ச பணிக்காலம் 18 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் 18 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து, 30 சதவீதம் இடைக்கால பணப்பெற்ற ஓய்வூதியரிடமிருந்து கூடுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இச்செயல் மனித நேயமற்றது மற்றும் மோசடி நடவடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 


தவெக  அரசின் இச் செயல்பாடு அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.


_*TAPS  திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்பு தான் TAPS  திட்டத்தின் கோர முகம் வெளிப்படையாக தெரியவரும்.*


டேப்ஸ் திட்டத்தில், ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு தன்னை விடுவித்து கொண்டு ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஓய்வூதிய நிதியத்தில், நிதி இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.

போதுமான நிதி இல்லையென்றால் ஓய்வூதியம் வழங்குவது தடைபடும்.


அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சந்திக்கும் அவலநிலை TAPS ஓய்வூதியர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க இயலாது.


_*TAPS திட்டத்தை ஆதரித்த தலைவர்களும் இத்திட்டத்தின் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.*


பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறோம்.


தமிழகத்தை விட வரி வருவாயில், இதர வருவாயில் பின்தங்கிய மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டிஸ்கர், இமாச்சல் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமே நடைமுறையில் உள்ளது.


எனவே, தவெக அரசு  தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, திமுக அரசு அறிமுகப்படுத்திய TAPS  திட்டத்தை ஒழித்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு  ஏற்ப, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சு.ஜெயராஜராஜேஸ்வரன்


பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் 


மு.செல்வக்குமார்


*மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்*

🙏🙏.🙏🙏🙏🙏🙏🙏


ஓய்வூதிய பொறுப்பை தட்டி கழிக்கிறது தமிழ்நாடு அரசு : CPS ஒழிப்பு இயக்கம் கண்டனம்

 

ஓய்வூதிய பொறுப்பை தட்டி கழிக்கிறது தமிழ்நாடு அரசு : சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்டனம்



TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உயர் பதவிகளுக்கான அடுத்தகட்டப் பதவி உயர்வுகளுக்குத் தகுதியற்றவர்கள் - சிறப்பு அரசு வழக்கறிஞர்



ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உயர் பதவிகளுக்கான அடுத்தகட்டப் பதவி உயர்வுகளுக்குத் தகுதியற்றவர்கள் - சிறப்பு அரசு வழக்கறிஞர் 


WA No.3501 of 2023



However, learned Special Government Pleader would submit that the appointment alone is protected by Courts, and in respect of teachers, who have not passed TET are not eligible for further promotions to the higher posts.




>>> உயர்நீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த தடை நீட்டிப்பு : 30.09.2026 அன்று வழக்கு விசாரணைக்கு ஒத்திவைப்பு


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த  தடை நீட்டிப்பு : 30.09.2026 அன்று வழக்கு விசாரணைக்கு ஒத்திவைப்பு


* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகு மாறுதல் நடத்தப்பட வேண்டும்

* ஆண்டு பேனல் காலிப் பணியிடம் அடிப்படையில் பதவி உயர்வு

* ஒவ்வொரு ஒன்றியமும் ஒரு அலகு பதவி உயர்வு

* மாறுதல் கலந்தாய்வுக்குத் தடை நீட்டிக்கப்பட்டு   30.09.2026 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.



ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் சலுகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட பல வழக்குகள் நேற்று ஒன்றிணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது மூல வழக்கில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு தடையாணை பிறப்பித்து உள்ளதை அரசு தரப்பில் சுட்டிக் காட்டிய நிலையில் மேலே கண்ட மூல வழக்கு விசாரணைக்கு வர உள்ள 30.09.2026 அன்றைக்கே அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என நீதிபதி மும்முனேனி சுதீர்குமார்  அறிவித்துள்ளார்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-09-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-09-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் குற்றச்சாட்டு - மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு (Compulsory wait) மாற்றம்



தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முடிவடையும் முன்பே பணிகளை முடித்துத் திறந்து வைத்ததாக அறப்போர் இயக்கம் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் ஐஏஎஸ் தனது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு (Compulsory wait) மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது 



2 தலைமை ஆசிரியர்கள் உட்பட 8 ஆசிரியர்களுக்கு Memo

 


இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட எட்டு ஆசிரியர்களுக்கு மெமோ - நாளிதழ் செய்தி 



14,829 பள்ளிகளில் குறைவான மாணவர் சேர்க்கை - தமிழ்நாட்டை அதிரவைக்கும் சேர்க்கை சரிவு

 


14,829 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவான சேர்க்கை - தமிழ்நாட்டை அதிரவைக்கும் சேர்க்கை சரிவு - நாளிதழ் செய்தி 




Social Justice Day Pledge



இன்று (17.09.2026) காலை 11 மணிக்கு அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய சமூக நீதி நாள் உறுதிமொழி 


Social Justice Day Pledge 


இன்று (17.09.2026) காலை 11 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க அரசுச் செயலாளர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN SPARK | Term 1 | Assessment

TN SPARK Term 1 Assessment Questions are uploaded in teacher login and will be enabled today. The schools can do the assessments making a sc...