கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - TNPSC அறிவிப்பு வெளியீடு


மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு 


மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.


நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது 



மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மதுரை ஆசிரியர் POCSO சட்டத்தில் கைது



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் POCSO சட்டத்தில் கைது


மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரை மாவட்டம் விரகனூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் கைது செய்தனர். 


2025-26-ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் ராஜ்குமார் மீது புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 


தனியார் பள்ளி மாணவிகளுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


G.O.Ms.No.143 - SMC Reconstitution Guidelines & Procedures



2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு


G.O.Ms.No.143 , Dated : 19-08-2026 - SMC Reconstitution Guidelines & Procedures


Government Order issued providing guidelines for the Reconstitution of School Management Committees for the years 2026–2028



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



SMC Reconstitution Process 2026-2028



பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செயல்முறை 2026-2028


SMC Reconstitution Process 2026-2028



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்



பணம் எடுத்தால் கட்டணம்


SBI-ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் அடுத்த பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15+GST கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிப்பு.


 எஸ்பிஐ வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்


சாதாரண சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிகளை திருத்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.


ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் உள்ளிட்டவற்றில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு.


5வது முறை முதல் பணம் எடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் ₹15+ ஜிஎஸ்டி தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.


சேமிப்பு கணக்குகளுக்கான இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன - பாரத ஸ்டேட் வங்கி (SBI)



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு



 புதிய SIM Cardகள் வாங்க கட்டுப்பாடு


டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி.


புதிய சிம் கார்டுகள் மீதான சோதனைகளை கடுமையாக்கும் ஒன்றிய அரசு.


'நிகழ்நேர சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும்' என அறிவிப்பு.


'புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளரை சரிபார்க்க வேண்டுமென' தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்.


'ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வைத்திருக்கலாம்'


ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மக்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள்.


அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும்விதமாக புதிய சிம் கார்டுகள் மீதான சோதனையை கடுமையாக்கப் பட்டுள்ளது என கூறப்படுகிறது.



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு



மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு


ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது


வந்தே மாதரம், தேசியகீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும்; மாநில பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என கூறப்படவில்லை என பதில்.



மாணவர்கள் மீதான FIRகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு



மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு


* நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு.


* இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், போலீசாரின் அத்துமீறல் புகார்கள் குறித்து விசாரிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உள்ளதாகவும் தெரிவிப்பு.


 Students Protests | Supreme Court


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - TNPSC அறிவிப்பு வெளியீடு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு  மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை சான்றிதழ்...