கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்கள், அமைச்சுப் பணியாளர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை



Negotiations held by the Hon'ble Minister for School Education with teacher associations and ministerial staff unions affiliated with the School Education Department.


தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்கள், அமைச்சுப் பணியாளர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை 28.07.2026  காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்துள்ளார்


சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் வீதம் பங்கேற்க தெரிவிக்கப்பட்டுள்ளது


​பள்ளிக் கல்வித் துறை - கலந்தாலோசனைக் கூட்ட அறிவிப்பு.


​தேதி: 28.07.2026 (செவ்வாய்க்கிழமை)


நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை


இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை.


தலைமை: மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்


​கூட்டத்தின் முக்கிய விவரங்கள்:

​பொருள்: ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மேம்பாடு குறித்தான கலந்தாலோசனை.


​பங்கேற்பாளர்கள்: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்.


​குறிப்பு: கூட்டத்தில் பங்கேற்கும் சங்க நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வருகை தந்து தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


G.O. No. 113, Dated : 14.05.2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "சம்பள" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு

 


G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "ஊதியக்" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு


அரசாணை எண்.113 நிதி (கருவூலம் மற்றும் கணக்குகள் - III), நாள்:14.05.2025


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் பெறும் வங்கிக் சேமிப்பு கணக்கில் இருந்து சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.


அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் முன்னோடி வங்கிகளுடன் போடப்பட்டது.


தற்போது தமிழ்நாடு அரசின் ஊழியர்களின் சம்பளம் பெறும் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


G.O. Ms. No. 113, Dated 14.05.2025

Package for Salary Acount

Package Details

🟢அரசு ஊழியர் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ 1 கோடி ரூபாய் இழப்பீடு.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் ஒரு மகளுக்கு 5 லட்சமும் இரண்டு மகள்கள் இருந்தால் தலா ஐந்து லட்சமும் திருமண உதவித்தொகை.

🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் மகளின் உயர்கல்விக்கு 10 லட்ச ரூபாய் உதவித்தொகை.

🟢பணியின் போது அரசு ஊழியர் இயற்கை மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு.

🟢அரசு ஊழியர்கள் வாங்கும் தனிநபர் கடன் வீட்டுக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை.

2025-26 FY முதல்

இந்த சலுகைகள் 2025-26  நிதியாண்டு முதல் அமுலுக்கு வரும்.

வங்கிகள் பட்டியல்

1. SBI

2. Indian Bank

3. IOB

4. Axis Bank

5. Union Bank of India

6. Canara Bank

7. Bank of Baroda





 G.O. No. 113 - Finance - Changing Tamilnadu Government Employees Savings Bank Account to Salary Bank Account  - pdf



>>> Click Here to Download 



TNEA - Medical Fitness Certificate

 



Tamil Nadu Engineering Admission 


Medical Fitness Certificate and


Anti Ragging form 


From Anna University website 



>>> Click Here to Download 




TNEA BE Counseling குறித்த தகவல்கள்



TNEA BE Counselling


Provisional Allotment order DOWNLOAD செய்து 


கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும்


 *7.5 கோட்டாவில் No College Fees No Hostel Fees Free Seat பெற்றுள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் & பெற்றோர் கனிவான கவனத்திற்கு* 👇


முதல் சுற்றில் தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரிகளில் BE seat பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.💐💐💐


30.07.2026 வியாழன் காலை 10 மணிக்குள் கிடைத்த கல்லூரிக்கு சென்று விடுங்கள்


 *ஒரு நாள் முன்பே 29.07.2026 புதன் அன்றே சென்று விடுவது சிறப்பு* 


கீழ்காண் original + மூன்று  set Xerox  சான்றிதழ்களை எடுத்து செல்லுங்கள்👇


1. Provisional order

2. SSLC Mark Sheet *original* 

3. +1 & +2 Combined Mark Sheet with HM Signature

4. +2 *original TC* or College *original* TC

5. *Medical Fitness Certificate* 



Digitally signed *e-certificates* for👇


6. BC MBC DNC BCM SC SCA ST COMMUNITY CERTIFICATE

7. *NATIVITY CERTIFICATE* 

8. *First Graduate Certificate* 

9. *Srilankan Tamil Refugee Certificate* 

10. *Income certificate* for AICTE TUITION FEES WAIVER SCHEME and SC SCA ST POST MATRIC SCHOLARSHIP SCHEME 

11. Passport size Photo -4 copies

(7.5 QUOTA வில் BE Free seat பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் Nativity First Graduate Sri Lankan Refugee and Income certificate ஆகிய 4  சான்றிதழ்கள் தவிர மீதமுள்ள 7 ஆவணங்களை மட்டும்  சமர்ப்பித்தால் போதும்🛑 மேற்காண் 4 ஆவணங்கள் கைவசம் இருந்தால் சமர்ப்பிக்கலாம் தவறில்லை. கட்டாயமில்லை🛑)


சிறந்த பொறியாளர்களாக படித்து மிளிர்ந்து

உங்கள் தலைமுறைகளை சிறக்க செய்திருங்கள்👌👍👏 வாழ்த்துகள்💐💐💐


உங்கள் சேர்க்கையில் ஏதும் சிரமம் ஏற்பட்டால் .... உடனே அருகில் உள்ள TFC மையத்தின் உதவியை நாடவும்.


அல்லது ....


1800 425 0110 என்ற DOTE Help line எண்ணை அழைக்கவும்.


அல்லது 


tneacare@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் புகார் செய்யவும்.👌👍👏💐


7.5 கோட்டா Bonafide certificate தேவையில்லை. கேட்க மாட்டார்கள். EMIS மூலம் அரசு Online verification முடித்து விட்டது. ஆகவே Bonafide certificate அவசியமில்லை.

இருப்பினும் தேவை என நீங்கள் கருதினால் உங்கள் பள்ளி தலைமை ஆசியரிடம் கேளுங்கள். ஒரே நிமிடத்தில் தந்து விடுவார். 6-12 வகுப்புகளை 3 - 4 பள்ளிகளில் படித்திருந்தால் .... அந்தந்த பள்ளிக்கு சென்றால் .... ஒரு நிமிடத்தில் கிடைத்து விடும். இருப்பினும் இது தேவையற்ற வீண் அலைச்சல். தவிர்ப்பது நல்லது👌👍👏💐 பதிவு நாள் : 26.07.2026 ஞாயிறு மாலை 4 மணி


Medical Fitness Certificate Format link👇


https://www.auegov.ac.in/Admissions/assets/PDF/DownloadDoc.pdf


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பதவி விலகினார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

 


 பதவி விலகினார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்


நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜினாமா


'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 


நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20ஆம் தேதி நடத்திய பேரணியின் பொழுது காவல்துறையினர் தாக்குதலில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கனிமொழி தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தனர். 


வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.


இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 


இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.


மந்திரி அமைச்சர் ராஜினாமா


இந்த நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், "கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 10 நாட்களாக நாட்டில் நிலவி வரும் சூழல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் மோடி அரசின் வரலாற்றில் போராட்டங்களுக்கு பணிந்து, மத்திய அமைச்சர் பதவி விலகுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் Free ஆக 2 Years Nursing Training

 


Free 2-year nursing training at a government nursing training school.


ரூ.200 மட்டும் இருந்தால் போதும்.

அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் Free ஆக 2 வருட நர்சிங் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு.👌


 *Just Last 5 days only Last Date 31.07.2026* 


உடனே உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று *ரூ.200 DD எடுத்து Application Print எடுத்து நிரப்பி உங்கள் ஊரில் உள்ள Post office சென்று Speed Post* அனுப்பி விடுங்கள்.👌👍👏💐


*No College Fees No Hostel Fees Only Mess Fees* 


 *Free Nurse Training* 


 *only for +2 Girls* 


+2 முடித்த பெண் குழந்தைகளுக்கு அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகளில் 2 வருட ANM சான்றிதழ் Nursing படிப்பு படிக்க அரிய கடைசி வாய்ப்பு.


1. சென்னை எழும்பூர்

2. சென்னை பூந்தமல்லி

3. சென்னை திருவல்லிக்கேணி

4. *நாமக்கல் மாணிக்கம் பாளையம்* 

5. *திண்டுக்கல் காந்திகிராம்* 

6. மதுரை சமயநல்லூர்

7. தேனி வீரபாண்டி

8. *புதுக்கோட்டை திருவரங்குளம்* 

9. சிவகங்கை திருபுவனம்

10. தருமபுரி பாலக்கோடு

11. திருநெல்வேலி


ஆகிய 11 ஊர்களில் உள்ள தமிழ்நாடு அரசு ANM பயிற்சி பள்ளிகளில் உள்ள மொத்த ANM Nursing இடங்கள் ஒரு பள்ளிக்கு 60 வீதம் மொத்தம் 600 இடங்கள்


இதுவரை நிரம்பியவை 259

இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் 341


Application link👇


https://live.tndphpm.com/admin/tndphpmfiles/1784436154_application_for_selection_of_anm_candidates_through_open_quota_in_11_government_anm_training_schools.pdf


மேலே உள்ள 29 பக்க விண்ணப்ப விளக்க படிவத்தில்


பக்கம் 27 28 29 ஆகிய 3 பக்கங்களை மட்டும் 2 copies Print எடுத்து


 *அழகாக பிழையின்றி மாணவிகள் தங்கள் சொந்த கையெழுத்தில் விண்ணப்பத்தை நிரப்பி* 


ரூ. 200 Bank Demand Draft எடுத்து


DD in favour of 


 *DPH&PM-ANM Training Course* 


 *29.07.2026 க்குள் கீழ்காண் சென்னை முகவரிக்கு speed post ல் அனுப்பி வைக்கவும்.* 👌👍👏💐


Speed Post அனுப்ப வேண்டிய முகவரி👇


To 


இணை இயக்குநர் (பயிற்சி)

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை

359, அண்ணா சாலை

DMS வளாகம் தேனாம்பேட்டை

சென்னை 600 006


மேலும் விபரங்களுக்கு

044 -29510136

044- 29510167

044- 29510183


Uploading students' Aadhaar and Post Office Savings Bank account details in EMIS | DEO Proceedings



மாணவர்களின் ஆதார் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு  விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் வெளியீடு


Proceedings of the District Educational Officer (Elementary Education) regarding the uploading of students' Aadhaar and Post Office Savings Bank account details to EMIS.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


 

காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்


ந.க.எண்.2198/ஆ5/2026 , நாள். 22.07.2026


பொருள்: தொடக்கக் கல்வி - கல்வி உதவித் தொகை - காஞ்சிபுரம் மாவட்டம் -மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பெறும் பொருட்டு ஆதார் புதுப்பித்தல் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு துவங்குதல் EMIS இல் இவ்விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்ந்து.


பார்வை: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் நே.மு.க.ந.க.எண்.1758/அ4/2025, நாள். .07.2026.


பார்வையில் காணும் கடிதத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடக்கக் கல்வியின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகைகளும் EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அந்தந்த நலத்தறை வாயிலாக நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்துவதற்கு கீழ்க்காணுமாறு EMIS வளைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இப்பணிக்கென ஒரு Nodal Officer-ஐ உடனடியாக நியமித்து, மாணாக்கர்களின் ஆதார் எண், வங்கிகணக்கு எண், சாதி மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சரிபார்த்து EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும், பதிவேற்றம் செய்பவருடன் ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து இப்பணியை கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். மாணாக்கர்களின் செயல்பாடற்ற வங்கி கணக்கினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எனவே, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் EMIS தளத்தில் மாணாக்கர்களது விவரங்கள் அனைத்தும் எவ்வித காலதாமதமும் இன்றி 100% முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டமைக்கான அறிக்கையினை (Compliance Report) 27.07.2026 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) காஞ்சிபுரம்.


பெறுநர்-


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்


காஞ்சிபுரம் / வாலாஜாபாத் / உத்திரமேரூர்/ ஸ்ரீபெரும்புதூர் / குன்றத்தூர்.


Shriram Finance Student Scholarship Program 2026–2027

 


Dear All,


We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027.


Kindly share this scholarship information in your WhatsApp groups and circulate it among eligible students, parents, schools and your contacts so that deserving students can benefit from this opportunity.


Thank you for your support.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...