கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம் நவம்பர் 27 | ஐ.நா. சபையில் தீர்மானம்

 


சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம் நவம்பர் 27 | ஐ.நா. சபையில் தீர்மானம் 


குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக, குழந்தை, இளவயது மற்றும் கட்டாயத் திருமணங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 27-ஐ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.


இந்த நடவடிக்கை,  குழந்தை திருமணங்களுக்கு எதிரான இந்தியாவின் பிரச்சாரத்திற்கு கிடைத்த ஒரு பெரிய உலகளாவிய அங்கீகாரமாகும். 


 இந்தத் தீர்மானம் செப்டம்பர் 4 அன்று சியரா லியோனால் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.


நவம்பர் 27 ஆம் தேதி இந்தியாவிற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது, ஏனெனில் இதே நாளில்தான் இந்திய அரசு 2024 ஆம் ஆண்டில் 'பால் விவாஹ் முக்த் பாரத்' பிரச்சாரத்தைத் தொடங்கியது.


  'குழந்தைத் திருமணமில்லா இந்தியா' இயக்கம், 2024 நவம்பர் 27 அன்று 25 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுத்ததன் மூலம், இன்று உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச தினமாக மாறியுள்ளது,



 "குழந்தைத் திருமணம் எனும் குற்றத்தின் முடிவு தவிர்க்க முடியாததும் உடனடியானதுமான ஒரு திருப்புமுனையை இன்றைய நாள் குறிக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒவ்வொரு குழந்தையும் தங்களின் முழுத் திறனை உணர்ந்து கொள்வதற்கான கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யவும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீர்க்கமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய தருணம் இது."


இந்த நாள் நிகழ்வதற்கு உதவிய அரசாங்கம் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் முயற்சிகளையும் பாராட்டினர்.


சமீபத்திய தேசிய தரவுகளும் குழந்தை திருமணங்கள் குறைந்து வருவதைப் பிரதிபலிக்கின்றன. 2019-21 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, 20-24 வயதுடைய பெண்களில் 23.3% பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர். இத்துடன் ஒப்பிடுகையில், NFHS-6 (2023-24) கணக்கெடுப்பில் இந்த விகிதம் 20.1% ஆக இருந்தது.


இந்திய அரசு 2026-ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணங்களின் பரவலை 10% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.


2030-ஆம் ஆண்டிற்குள் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான உலகளாவிய உறுதிப்பாடானது, குழந்தை, இளம்பருவ மற்றும் கட்டாயத் திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளையும் ஒழிக்க அழைப்பு விடுக்கும் நிலையான வளர்ச்சி இலக்கு 5-இன் (பாலின சமத்துவம்) இலக்கு 5.3 உடன் ஒத்துப்போகிறது.


ஐ.நா.வின் இந்த அறிவிப்பு, ஒரு பெரிய வெற்றியாகும். 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுழலில் சிக்கிய 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்பு



 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது, சுழலில் சிக்கிய 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்பு 


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பள்ளி மாணவி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஜருகு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அவிநிஷா, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு உறவினர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்த மாணவி, மெயின் அருவி அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்தது.



இதனால் அந்த மாணவி நிலைதடுமாறி ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார்.


அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்று முடியாமல் போனதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவியை தீவிரமாக தேடத் தொடங்கினர்.


ஆற்றின் ஆழமான பகுதிகள் மற்றும் கரையோரங்களில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதல்நாள் மாணவி  மீட்கப்படவில்லை. 


இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கும் போது, சுழலில் சிக்கி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமி, 10 கி.மீ தொலைவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 2வது நாளாக நடந்த தேடுதலில் உடலை தீயணைப்பு படையினர் கண்டெடுத்தனர்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-09-2026

 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-09-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2026

   

திருக்குறள்: 


 பால் : பொருட்பால்


இயல் : அரசியல்


அதிகாரம்:49.காலம் அறிதல்


குறள் எண்:488


குறள்:


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.


பொருள்:


பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.


பழமொழி :

No Pains ; No Gains.


உழைப்பின்றி ஊதியம் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள் :.


1. பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எனது தனித்திறமையை வெளிப்படுத்துவேன். 


2. என்னுடன் போட்டியிடும் மாணவர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி ஊக்குவிப்பேன்.


பொன்மொழி : 


“கனவு காணும் இளைஞன் ஒரு படி முன்னேறுகிறான்; திறனை வளர்க்கும் இளைஞன் இலக்கை அடைகிறான்.”


Thought for the Day :


“Skills turn ideas into action and dreams into reality.”


பொது அறிவு : 


1. 200 ரூபாய் நோட்டிற்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 


 சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்) .


2. 100 ரூபாய் நோட்டிற்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள படம் எது? 


 ராணி கி வாவ் (குஜராத்)  


English words :


1. Resourceful – Finds clever ways to solve problems, சமயோசித புத்தி உடையவர்.


2. Punctilious – Great attention to detail and correct behavior, நேர்த்தியான ஒழுக்கமுடையவர்.


புவியியலும் சுற்றுசூழலும் :


மலைகள்

தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.

முக்கிய மலைத்தொடர்கள்:

மேற்கு தொடர்ச்சி மலை

கிழக்கு தொடர்ச்சி மலை

நீலகிரி மலை

சேர்வராயன் மலை

கல்வராயன் மலை

கொல்லிமலை

ஜவ்வாது மலை

ஏலகிரி மலை ஆகும்


NMMS :


MAT 


விதைத் தாவரங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு. வகுப்பு------>துணை வகுப்பு---------> வரிசை. 


 (1) தலாமிஃபுளோரே-------> பாலிபெட்டலே-------> டைகாட்டிலிடனே


 (2) டைகாட்டிலிடனே-------> பாலிபெட்டலே-----------> தலாமிஃபுளோரே


 (3) பாலிபெட்டலே---------> டைகாட்டிலிடனே---------> தலாமிஃபுளோரே 


 (4) பாலிபெட்டலே --------> தலாமிஃபுளோரே-------------> டைகாட்டிலிடனே 


 விடை: (2) டைகாட்டிலிடனே-------------> பாலிபெட்டலே-------------> தலாமிஃபுளோரே


நீதிக்கதை


 “பெரிய இலக்கு”


ஒரு கிராமத்தில் சூர்யா என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய சாதனை செய்ய வே ண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த இலக்கை நினைத்தாலே , “இவ்வளவு பெரிய இலக்கை எப்படி அடைவது?” என்று கவலைப்பட்டான்.


ஒருநாள் அவன் ஆசிரியரிடம் தனது கவலையைச் சொன்னான்.


ஆசிரியர் ஒரு சிறிய விதையை க் காட்டி,


“இந்த விதை இன்று ஒரு பெரிய மரமாகிவிடுமா?” என்று கே ட்டார்.


“இல்லை ஆசிரியரே ,” என்றான் சூர்யா.


“அப்படித்தான் பெரிய இலக்கும். ஒரே நாளில் வெற்றியை எதிர்பார்க்காமல், தினமும் சிறிது சிறிதாக உழைத்தால் பெரிய இலக்கையும் அடையலாம்.” என்றார் ஆசிரியர்.


அன்றிலிருந்து சூர்யா தனது இலக்கைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, தினமும் விடாமுயற்சியுடன் உழைக்கத் தொடங்கினான். தோல்விகள் வந்தபோதும் மனம் தளராமல் மீண்டும் முயன்றான்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் கனவு நனவானது.


அப்போது சூர்யாவுக்கு ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:


“பெரிய இலக்கை நினைத்து பயப்படாதே ; அதை அடைய ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அடியை எடுத்து வை .”


🌸 நீதி: பெரிய இலக்கை அடைய  பொறுமையுடனும் திட்டமிட்ட முறையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். விடாமுயற்சி இருந்தால் கனவும் நனவாகும்.


இன்றைய செய்திகள்


07.09.2026


🗒️புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


🗒️விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை.. 10 நாட்களில் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்த்தாக மத்திய அரசு தகவல். 


🗒️நவம்பர் 27' சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

 

*விளையாட்டுச் செய்திகள்*


🏀சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்


Today's Headlines


🗒️ Due to the BRICS Summit in New Delhi, the 57th GST Council meeting, which was planned for September 12, has been postponed.


🗒️ Steps to control price rise: The Central Government said that 4,000 tonnes of onions were sold in 10 days.


🗒️ The United Nations has declared November 27 as the International Day for the Elimination of Child Marriage.


🏀 Sports News


🏀 India’s Satwik Sairaj Rankireddy and Chirag Shetty won the championship title in the China Masters Super 750 International Badminton Tournament.


B.Ed., M.Ed., தேர்வு முடிவுகள் வெளியீடு



பி.எட்., எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு


கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற  B.Ed., மற்றும் M.Ed.,  தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் லாக்-இன்-ஐ பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


தேர்வு முடிவுகள் தனியே கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படாது. தேர்வு முடிவில் ஏதேனும் விளக்கம் கோர வேண்டுமானால் செப்டம்பர் 7-ம் தேதிக்குள் (திங்கள்) ஆன்லைனில் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) எம்.கண்மணி, கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.


பள்ளி உணவில் விஷம் கலந்த நபர் கைது - 51 குழந்தைகளின் உயிர் தப்பியது



பள்ளி உணவில் விஷம் கலந்த நபர் கைது - 51 குழந்தைகளின் உயிர் தப்பியது


மனைவி சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் பழி வாங்குவதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவில் விஷம் கலந்த நபர்


*  சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியின் சமையல் பணியில் இருந்து தனது மனைவியை நீக்கியதால் பழி தீர்க்க, குழந்தைகளுக்கான காலை உணவு சாம்பாரில் விஷம் கலந்த ஆறுமுகம் என்பவர் கைது


* சாம்பாரை ருசி பார்த்த ஆசிரியை கசப்பை உணர்ந்து, அதை சாப்பிட வழங்காததால் 51 குழந்தைகளின் உயிர் தப்பியது.


* போலீஸ் விசாரணையில், சாம்பாரில் தரை மெழுகும் இரசாயன பொடி கலந்திருப்பது தெரியவந்தது


EMIS LAB ASSESSMENT APPLICATION | SELF DEPLOYMENT GUIDE (Windows OS)

 

EMIS LAB ASSESSMENT APPLICATION | SELF DEPLOYMENT GUIDE (Windows OS)



Prerequisites

Before starting the deployment, ensure you have: A Windows system with administrator privileges

Active internet connection

Access to the download URL for EMIS Lab Assessment Application

■ Correct username and password for authentication


1. Download the Application Files

1. Open any web browser (e.g., Chrome, Edge, Firefox).

2. Paste the provided download URL in the address bar.

https://emis-lab-assesment.tnsed.com/EmisApp.zip

3. When prompted, enter the given username and password.

Username : emis-lab

Password : emis-lab@123

4. The file 'EmisApp.zip' will begin downloading automatically.

5. Once downloaded, it will be available in your 'Downloads' folder.


2. Extract the Application Files

1. Navigate to your 'Downloads' folder.

2. Locate the file named 'EmisApp.zip'.

3. Right-click on the file and select

'Extract All....

4. After extraction, a new folder named 'EmisApp' will appear.

5. Copy this inner 'EmisApp' folder and paste it into the 'C:\' drive.


3. Install the Application

1. Go to 'C: Drive and Open the EmisApp' folder.

2. Inside this folder, locate the installation executable file (e.g. 'setup.exe' or 'install.exe').

3. Double-click / Right Click - Open the file to begin the setup process.

4. When prompted for permission, click "Yes' to allow the installer to make changes.

5. The EMIS Lab Assessment Application will start installing automatically.


4. After Successful Installation

Once the installation completes successfully:EMIS Lab Assessment Application will be installed on your Windows machine.

A desktop shortcut may be created automatically.You can open the application using the desktop shortcut or from Start Menu.

Shortcut :

EMIS LAB ASSESSMENT


Troubleshooting 

If you face any issues:

Ensure your internet connection is active.

Re-run the installer as Administrator.

Check that you have sufficient permissions in the C:\ drive.

Contact your system administrator or support team if the issue persists.


Security Tip

After successful installation, delete the downloaded and extracted installation files from your Downloads folder for security and space management.


Support

For technical assistance, please reach out to your system administrator or application support team.


Hi-Tech Lab Quiz Assessment 2026–27 | Cycle 1 Schedule & Question Paper Guidelines

 



💁‍♂️Hi-Tech Lab Quiz Assessment 2026–27 | Cycle 1 Schedule & Question Paper Guidelines | DSE Proceedings


💁‍♂️தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (Hi-Tech Lab) வழியாக திறன் சார்ந்த வினாடி வினா மதிப்பீடு (Skill-based Quiz Assessment) நடத்துவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  


💁‍♂️ இதில் வினாடி வினா நடத்தும் முறை,  வினாத்தாள் உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு கால அட்டவணை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன


Cycle 1 High-Tech Lab Assessment:


Dear Team,


Please find the event IDs for Cycle 1 – High-Tech Lab Assessment for Classes 6–9. Please inform the teachers to allocate the question papers only for the given event IDs.


Event IDs: Cycle 1 - 2026 - 2027:


Class 6 T.M - 491106

Class 6 E.M - 491107

Class 7 T.M - 491108

Class 7 E.M - 491109

Class 8 T.M - 491110

Class 8 E.M - 491111

Class 9 T.M - 491112

Class 9 E.M - 491113


While allocating the question paper, please follow the instructions provided in the circular and the Assessment Manual video.


Question Paper Allocation Instructions:


- *4 questions per subject – 20 questions in total*.

- *Time: Set the duration to 30 minutes*.

- *Question Paper: Select 2 sets and 2 versions*.


Please ensure that these instructions are followed while allocating the question papers.


Thank you.




Dr.RadhaKrishnan Award - 05.09.2026 - All Photos Download - Direct Link

 


டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - 05.09.2026 - அனைத்து ஆசிரியர்கள் விருது பெறும் புகைப்படங்கள் - Direct Download


டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களின் கவனத்திற்கு 


டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர் பெருமக்கள் தாங்கள் விருது பெறும் புகைப்படங்கள் டவுன்லோட் செய்ய இந்த லிங்க் சொடுக்கவும்


Click Here - Dr.Radha Krishnan Award Presenting Ceremony - 05.09.2026 - All Photos Download - Direct  Link


https://drive.google.com/drive/folders/1UKF9UJNkxat02MUcCbrthCuIPCQMMvoI?usp=sharing


457 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய உலக வரைபடத்தை அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை



After 457 Years, The United Nation Approves A New World Map To Show Africa's True Size. Out Of 164 Countries, The United States Was The Only Country That Voted No To Show Africa's True Size


457 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. மொத்தம் 164 நாடுகளில், ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டுவதற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே.


 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.


16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.



ஆனால், இந்த வரைபடத்தில் பூமத்திய ரேகையிலிருந்து தொலைவிலிருக்கும் நிலப்பரப்புகளை நிஜ அளவைவிடப் பெரிதாகக் காட்டியது. ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்தை, ஆப்பிரிக்காவின் அதே அளவில் காட்டியது. அதேபோல், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் அளவுக்கு அதிகமாகப் பெரிதாகக் காட்டப்பட்டு வந்தன.


இந்த நிலையில்தான், பழைய மெர்கேட்டர் வரைபடத்துக்குப் பதிலாக, இனிவரும் காலங்களில் புதிய ஈக்வல் உலக வரைபடத்தைப் பயன்படுத்த ஐநா அவை முடிவு செய்தது.



2018-ல் வரைபடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஈக்வல் வரைபடம், அனைத்து கண்டங்கள், நாடுகளின் சரியான பரப்பளவை சரியான விகிதத்தில் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், ஆப்பிரிக்க கண்டம் முன்பைவிட பெரியதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் அவற்றின் நிஜமான சரியானதாக சிறிய அளவிலும் காட்டப்படுகின்றன.


இதனால், உலகெங்கிலும் அனைவருக்கும் உலக அமைப்பைப் பற்றிய சரியான புவியியல் பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீர்மானத்தையும் ஐநா அவையில் கொண்டுவரப்பட்டது.


ஐநா அவையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 164 நாடுகள் ஆதரவளித்தன. தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டும் வாக்களித்தது.



அதே நேரம், இந்த வாக்கெடுப்பில் எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கவில்லை.


ஐநா அவையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானமானது கட்டாயச் சட்டம் அல்ல என்றபோதிலும், இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனங்கள், வரைபட நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்களில் இந்த புதிய வரைபடத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்படுகின்றன


பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா?



பலி ஆடாக்கப்படும் ஆசிரியர்கள்: இது நிர்வாகச் சீர்கேடா அல்லது அதிகார வன்முறையா? - வாட்ஸ்அப் பகிர்வு


சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள் என்று மேடைகளில் புகழப்படும் ஆசிரியர்கள், களத்தில் அதிகார வர்க்கத்தாலும் நிர்வாக அமைப்பாலும் எந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்குப் பெரம்பலூர் தேனூர் மேல்நிலைப் பள்ளிச் சம்பவமே சாட்சி.


 வகுப்பறையில் ஆபாச வாசகங்கள் எழுதிய மாணவர்களை ஒழுங்குபடுத்த முயன்ற முதுகலை ஆசிரியரை, ஒரு பஞ்சாயத்துச் செயலாளர் பள்ளிக்குள் புகுந்து மிரட்டி மாணவர்களுக்கு முன்பாகவே முட்டி போட வைத்திருப்பது ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்தின் முகத்திலேயும் அறைந்த அவமானம்.



மற்ற அரசுத் துறைகளில் தவறு நடக்கும் போது கீழ்நிலை ஊழியர்களைக் காப்பாற்ற ஒட்டுமொத்த நிர்வாகமும் கவசமாக நிற்கும் போது, பள்ளிக் கல்வித்துறையில் மட்டும் ஆசிரியர் மீது கை வைக்க யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற அவல நிலை ஏன் உருவானது?



 *அதிகாரிகளின் மெத்தனமும் பழிவாங்கும் போக்கும்:* 


 எந்தத் துறையிலாவது தார்ச்சாலை உடைந்ததற்கோ, பாலம் விரிசல் விட்டதற்கோ பொறியாளர் உடனே சஸ்பெண்ட் ஆகிறாரா? காவல் துறையில் குற்றங்கள் தடுக்கத் தவறினால் உடனடியாக பணிநீக்கம் நடக்கிறதா? ஆனால், பள்ளியில் மாணவன் ஒழுங்கீனமாக நடந்தாலும் ஆசிரியர் மீது மெமோ; மாணவனைக் கண்டித்தாலும் சஸ்பெண்ட். ஆசிரியர் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய கல்வித்துறை அதிகாரிகளே, சமூக வலைதளப் பரபரப்புக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் பயந்து ஆசிரியர்களை உடனடியாக பலி ஆடாக்குவது வாடிக்கையாகிவிட்டது.


 *பறிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், கட்டப்பட்ட கைகளும்:*


 "மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, தட்டிக் கேட்கக் கூடாது" என்று விதிகளை வகுத்துவிட்டு, வகுப்பறையில் ஆபாசப் படங்கள் வரையும் ஒழுங்கீனத்தைச் சகித்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகையான நீதி? ஆதிக்க மனோபாவத்துடன் ஒரு உள்ளாட்சிப் பணியாளர் தலைமை ஆசிரியர் அறைக்கும் வகுப்பறைக்கும் வந்து தாதா போல் மிரட்டி ஆசிரியரை முட்டி போட வைக்கிறார் என்றால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் உயிருக்கும் சுயமரியாதைக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?



  *சுயமரியாதையை இழந்து எதற்கு இந்தப் பணி?*


 எந்நேரமும் தலைக்கு மேல் தொங்கும் மெமோ கத்திகள், ஆப் (App) பதிவுகள், கற்பித்தல் சாராத சுமை, போதாதற்கு மாணவர்களாலும் பெற்றோர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் இழைக்கப்படும் அநீதிகள். சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு வகுப்பறையில் நிற்கும் ஆசிரியரால் எப்படி ஒரு தலைமுறையை நிமிர்ந்து நிற்கக் கற்றுக்கொடுக்க முடியும்?


ஆசிரியரை முட்டி போட வைத்த அந்த பஞ்சாயத்துச் செயலாளர் மீது உடனடியாக அரசு ஊழியர் பணித் தடுப்பு, அத்துமீறல் மற்றும் மிரட்டல் சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், தன் துறை ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பாய் நிற்காமல் மௌனம் காக்கும் அதிகார வர்க்கத்தின் மனநிலையும் மாற வேண்டும்.


ஆசிரியர்களின் சுயமரியாதையை நசுக்கும் கல்வித்துறை, எதிர்காலத் தலைமுறையின் முதுகெலும்பையே உடைக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம் நவம்பர் 27 | ஐ.நா. சபையில் தீர்மானம்

  சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம் நவம்பர் 27 | ஐ.நா. சபையில் தீர்மானம்  குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் கிடைத்த...