கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

 


துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்

அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்பு


திருச்சியை அடுத்த துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு, முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.


துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் 2025-26 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 74 பேருக்கு பாடத்திட்டத்துடன் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.


இந்நிலையில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தர வரிசை பட்டியலில் இப்பள்ளி மாணவர் எஸ்.மாதவ்(564 மதிப்பெண்கள்) உட்பட 4 மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 28 பேருக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.


இதில், பட்டியலின மாணவர் பிரிவில் சஞ்சய் தரன் மாநிலத்தில் 2-ம் இடம், பழங்குடியினர் பிரிவில் மாணவி தீபிகா 3-ம் இடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் வனிஷா 5-ம் இடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஜனுஜா 7-ம் இடம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கே.கோபிகிருஷ்ணன் 15-ம் இடம் என 5 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.


நிகழாண்டில் இப்பள்ளியில் பயின்ற 32 பேர் முதல் முயற்சியிலேயே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பை பெற உள்ளனர். இது தவிர, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.


இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.


பொதுவாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் வெற்றி சதவீதம் சராசரியாக 10 முதல் 15 சதவீதம்தான் இருக்கும். ஆனால், துவாக்குடி அரசு பள்ளி பயிற்சி மையத்தின் வெற்றி கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருப்பது மிகப்பெரும் சாதனை என அவர்கள் தெரிவித்தனர்.


26-08-2026 – Milad-un-Nabi – தலைமை ஹாஜி அறிவிப்பு

 

26-08-2026  புதன் - மிலாடி நபி - தலைமை ஹாஜி அறிவிப்பு


26-08-2026 Wednesday – Milad-un-Nabi – Announcement by the Chief Qazi



பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் PKBFS - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு



பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் PKBFS - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


6 முதல் 8 வரையிலான மாணாக்கர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - திருத்திய நிலையான வழிகாட்டுதல்கள் தொடர்பாக


Perunthalaivar Kamarajar Breakfast Scheme (PKBFS) – Standard Operating Procedures and Guidelines Released



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


சொந்தமாக வீடு, மனை வாங்க TNHB வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு



 சொந்தமாக வீடு, மனை வாங்க TNHB வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு


வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் விற்பனைக்கு உள்ள 7659 வீடு, மனை வாங்க tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வரும் 21, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விற்பனை நடைபெற உள்ளதாகவும், இந்தாண்டு விலை உயர்வு எதுவும் இல்லாமல் வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிப்பு.


Census : Enumerators கவனத்தில் கொள்ள வேண்டியவை



மக்கள் தொகை கணக்கெடுப்பு : கணக்கெடுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை - whatsapp பகிர்வு


 ⚠️⚠️⚠️ *அவசரக் கவனம் தேவை* ⚠️⚠️⚠️


📌 _*கணக்கெடுப்பாளர்கள் பதிவு செய்துள்ள விவரங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் குறித்து, ORGI (இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம்) அவசர நடவடிக்கை மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளது:*_📌


‼️ *திறந்தவெளியில் மலம் கழித்தல்* - 6256 குடியிருப்புகளில் (HLBs) பதிவு செய்யப்பட்டுள்ளது (பொறுப்பு அதிகாரிகள் இதன் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். வளாகத்தில் கழிப்பறை இல்லாவிட்டாலும், பொதுக் கழிப்பறை வசதி இருந்து, அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாமல் இருந்தால், 'திறந்தவெளி' (Open) என்று குறிப்பிடாமல் 'பொதுக் கழிப்பறை' (Public Latrine) என்ற விருப்பத்தேர்வை (option) தேர்ந்தெடுக்க வேண்டும்.)


‼️ *மனிதர்களால் மலம் அகற்றுதல்* - 2708 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது 100% தவறான பதிவு)


‼️ *LPG (சமையல் எரிவாயு) வசதி இருந்தும் விறகு, பயிர் கழிவுகள் அல்லது மண்ணெண்ணெய் பயன்படுத்துதல்* - 371 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது சரியானதாகவும் இருக்கலாம்)


‼️ *சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர்* - 126 நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது சரியானதாகவும் இருக்கலாம்)


‼️ *வளாகத்திற்குள் ஆறு இருத்தல்* - 301 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது 100% தவறான பதிவு)


‼️ *விளக்கு வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய் பயன்பாடு* - 3990 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (தவறான பதிவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது)


‼️ *மின்விளக்கு வசதி இல்லாமை* - 5303 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது 100% தவறான பதிவு)


‼️ *தொலைபேசி இல்லை, ஆனால் மொபைல் போன் மூலம் இணைய வசதி உள்ளது எனத் தேர்வு செய்தல்* - 24 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது 100% தவறான பதிவு)


‼️ *லேண்ட்லைன் (Landline) தொலைபேசி இல்லாமை* - 933 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது சரியானதாகவும் இருக்கலாம்)


‼️ *தொலைபேசி வசதி இல்லாமை* - 376 குடியிருப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது (இது தவறானதாக இருக்கலாம்)


📌 _*கணக்கெடுப்பாளர்கள் பல குடியிருப்புகளில் ஒரே மாதிரியான பிழைகளைத் திரும்பத் திரும்பச் செய்துள்ளனர்; இவற்றை உடனடியாகச் சரிபார்த்துத் திருத்த வேண்டும்*_


📌 _*இனிவரும் பதிவுகளில் இப்பிழைகளை மீண்டும் செய்யக்கூடாது என்று கணக்கெடுப்பாளர்களுக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட வேண்டும்*_


புது ஊஞ்சல் , தேன் சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்களில் உங்கள் படைப்புகள் இடம்பெற, செய்ய வேண்டியவை



Steps to get your work featured in Pudhu Oonjal, Then Chittu, and Kanavu Aasiriyar magazines


புது ஊஞ்சல் , தேன் சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்களில் உங்கள் படைப்புகள் இடம்பெற, செய்ய வேண்டியவை


ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு வரும் 

மாணவர்களுக்கான 

*புது ஊஞ்சல் , தேன் சிட்டு* மற்றும் ஆசிரியர்களுக்கான *கனவு ஆசிரியர்* இதழ்களில் நீங்களும் பங்களிக்க விரும்புகின்றீர்களா?


உங்களது மாணவர்களின் படைப்புகள்,


நீங்கள் பணிபுரியும் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

மற்றும் 

உங்களது கதை , கவிதை, கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகள் மற்றும் சிந்தனைகள் இதழில் இடம்பெற வேண்டுமா?


*கீழ்கண்ட Google படிவத்தை நிரப்பவும்..*


https://forms.gle/bqofh3XWuR1TMhAy9


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-08-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-08-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...