கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்-2 வினாத்தாள் விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை துவக்கம்

குரூப்-2 வினாத்தாள் அவுட் ஆன விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நேற்று துவங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து, மீண்டும் விசாரிக்க, தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரத்தை, ஈரோடு மற்றும் தர்மபுரி போலீசார், விசாரணை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய, 24 பேரை கைது செய்து விசாரித்ததில், விசாகப்பட்டினத்தில், ஆனந்தராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வடமாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனால், இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றி, டி.ஜி.பி., உத்தரவிட்டார். கோவை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., ராஜராஜன் தலைமையில், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தில் பதிவான வழக்கு தொடர்பான ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், நேற்று பெற்றுள்ளனர். அந்த ஆவணங்களில் உள்ள, குற்றவாளிகளின் வாக்குமூலத்தை, ஆய்வு செய்து வருகின்றனர்.
சில குற்றவாளிகளின் வாக்குமூலம், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. எனவே, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை, மீண்டும் காவலில் எடுத்து விசாரித்து, புதிதாக வாக்குமூலம் பெறும் முடிவில், தனிப்படை போலீசார் உள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...