கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி

தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அலுவலர்களின் பணிகள் முக்கியம். முப்பருவ கல்வி முறையில் முழுமையான தொடர் கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளி ஆண்டாய்வு, கல்வி தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்கலுக்கான ஒப்புதல் போன்ற பணிகளில் டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் வரை மாநிலத்தில் 27 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் 32 பேருக்கு சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டபின், தற்போது 55 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. குறிப்பாக, தேனி (தொடக்க கல்வி), மதுரை (மெட்ரிக் ஆய்வாளர்), தேவகோட்டை போன்ற 55 இடங்களில் டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐம்பது ஆண்டுகளாக காலியாக இருந்த உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பிய பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்புள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியாகியும், ஓய்வு பெறும் சூழ்நிலையிலும் உள்ள தலைமையாசிரியர்களுக்கு டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், "டி.இ.ஓ.,க்களுக்கான பணிமூப்பு பட்டியல் 1.1.2012ல் தயாரித்து, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது கிடப்பில் உள்ளது. நிர்வாக ரீதியாகவும், அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மாணவர்களை முழுமையாக சென்றடையவும், காலியான டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Marriage Advance G.O.Ms.No.148, Dated : 27-06-2025

  அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் உயர்த்தி (Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less) அரசாணை வெளியீடு G.O.Ms.N...