கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பணிநியமன உத்தரவு நகல் கேட்பு:அரசு ஊழியர் சம்பளத்திற்கு சிக்கல்

பணி நியமன உத்தரவின் நகலைஅனுப்பாத துறைக்கு, இம்மாத சம்பளம் வழங்க இயலாது என, கருவூலத்துறை தெரிவித்துள்ளது.அரசு ஊழியர்களுக்கு, கருவூல அலுவலத்தில் சம்பள பட்டியல் சரிபார்க்கப்பட்டு பாங்க்கில் பணம் பட்டுவாடா செய்ய அனுமதி அளிக்கப்படும். இம்மாதம் சம்பள பட்டியலுடன், பணி நியமன உத்தரவின் நகல் இணைத்திருந்தால் மட்டுமே, பணம் பட்டுவாடா செய்ய அனுமதி அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில துறைகள் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். கண்டு கொள்ளாத பிற துறை ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மருத்துவம், நீதித்துறையை சார்ந்த ஊழியர்கள், அரசு உத்தரவு நகலை பெற, சென்னை ஆவண காப்பகத்திற்கு தங்கள் அலுவலர்களை அனுப்பியுள்ளனர். இங்கிருந்து உத்தரவு நகல்பெற்றால் மட்டுமே, இம்மாத சம்பளம் கிடைக்கும். எனவே, இவர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
திண்டுக்கல் மாவட்ட கருவூல அதிகாரி பாலசுப்பிரமணியம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் சிலரது, தற்போதைய நிலை குறித்து, அவ்வலுவலகத்தில் முழுமையான தகவல்கள் இல்லை. இதை பயன்படுத்தி, சில மாவட்டங்களில் சம்பந்தம் இல்லாதவர்களின் பெயரை சம்பள பட்டியலில் சேர்த்து முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது. எனவே தான் பணி நியமன உத்தரவு நகலை தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை தராதவர்கள் இந்நகலை, இம்மாத சம்பள பில்லுடன் தர கேட்டுள்ளோம். இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Marriage Advance G.O.Ms.No.148, Dated : 27-06-2025

  அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் உயர்த்தி (Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less) அரசாணை வெளியீடு G.O.Ms.N...