கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>14 புதிய சார் கருவூலங்கள் அமைக்க உத்தரவு

தமிழகம் முழுவதும், 14 வருவாய் வட்டங்களில், புதிய சார் கருவூலங்கள் அமைக்கவும், ஏற்கனவே வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் கருவூலங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த நிதியாண்டில் புதியதாக, அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், நாகை, பெரம்பலூர், நீலகிரி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில், தலா ஒன்றும்; சேலத்தில், இரண்டு இடங்களிலுமாக, மொத்தம், 14 சார் கருவூலங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கருவூலத்திலும் பணியாற்ற, புதிதாக, ஆறு பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும். மொத்தமுள்ள, 206 சார் கருவூலங்களில், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும், 54 கருவூலங்களில், 14 கருவூலங்களுக்கு, 7.70 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடங்கள் கட்டவும், தூத்துக்குடி மாவட்ட கருவூலத்திற்கு, 1.37 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings

 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செ...