கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொறியியல் கலந்தாய்வில் 5 மாணவர்கள் பங்கேற்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஒ.சி. பிரிவு மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில், நடந்த பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். கடிதம் அனுப்பப்பட்டிருந்த மேலும் 822 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில், 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில், ஓ.சி., பிரிவில், 31 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், இப்பிரிவினருக்கு, 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. மீதமுள்ள, 19 சதவீத இடங்களை கூடுதலாக ஏற்படுத்தி, அதனை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, 827 பேருக்கு, கலந்தாய்வு கடிதங்களை, அண்ணா பல்கலை அனுப்பியது. நேற்று நடந்த கலந்தாய்விற்கு, வெறும் ஐந்து மாணவர் மட்டுமே வந்தனர்; 822 பேர் வரவில்லை. வந்த ஐந்து பேரும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மதுரை தியாகராயர் கல்லூரியில், ஏற்கனவே பொறியியலில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்கள், பாடப் பிரிவுகளை மட்டும் மாற்றிக் கொண்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. கலந்தாய்வு கடிதங்களை பெற்ற மாணவ, மாணவியர், ஏற்கனவே நல்ல கல்லூரிகளில், விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து விட்டதால், அவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை எனவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC - Annual Planner 2026

    TNPSC ஆண்டுத் திட்டம் 2026 TNPSC - Annual Planner 2026 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் TNPSC ANNUAL PLANNER  2026 ஆம் ஆண்டிற்கான (TNP...