கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெருந்தொற்று காலத்தில் வருகைப்பதிவு குறித்து மத்திய அரசு அறிவிப்பு...



 அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெருந்தொற்று காலத்தில் வருகைப்பதிவு குறித்து மத்திய அரசு அறிவிப்பு...


மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் பின்பற்ற வேண்டிய வருகைப்பதிவு மற்றும் பாதுகாப்பு குறித்த சில வழிமுறைகளை மத்திய  அரசு வெளியிட்டுள்ளது.




வருகைப்பதிவு

கொரோனா பேரிடர் காரணமாக நாடு முழுவதும் செயல்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருக்கும் அனைத்து அலுவலகங்களையும் மீண்டுமாக திறப்பதற்கு அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் பரவ துவங்கிய கொரோனா தொற்றால் மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா புதிய பாதிப்பானது தற்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.




இதனால் மூடப்பட்டிருக்கும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வருகை பதிவு உள்ளிட்ட சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூன் 16 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.



மீதமுள்ள 50% பணியாளர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்க்கலாம். தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் அலுவலர்கள், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை வீடுகளில் இருந்து பணி புரியலாம். அதே நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...