கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - மத்திய அரசு...

 


ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் நீட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



இதற்காக நிலைமையை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக ஜேஇஇ தேர்வுகள் நடப்பாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதற்கட்டமாகவும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 2ம் கட்டவும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.


நீட் தேர்வுகள் குறித்து முடிவெடுக்காத நிலையில் கடந்த மே மாதம் 1ம் தேதி நடந்த தேர்வுக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New procedure for NOC to obtain Passport

   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டு பெற தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை New procedure for Tamil Nadu government employ...