கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன? (A 10th standard student of Kadalady Government Higher Secondary School committed suicide in the classroom.. What happened in Ramanathapuram?)...



 கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன? (A 10th standard student of Kadalady Government Higher Secondary School committed suicide in the classroom.. What happened in Ramanathapuram?)


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கடலாடி அரசுப் பள்ளியில் வகுப்பறையிலேயே 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், A.புனவாசல் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், இன்று(நவ.20) காலை பள்ளிக்கு சென்ற தீபக் வகுப்பறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.


ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு சென்ற கடலாடி போலீசார் மாணவர் தீபக் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவர் தீபக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...