கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண் : 243 வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் சங்கங்கள்...






மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அலுவலக செய்தி  வெளியீடு...

➖➖➖➖➖➖➖➖

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று இனிவரும் காலங்களில் "மாநில முன்னுரிமை(State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.


இதனை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை "தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை" ஆகியோர் சந்தித்து தங்களின் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (15-07-2026) Wordle

    Today's (15-07-2026) Wordle Puzzle                               Wordle விளையாடும் முறை:  ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந...