கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு...



தமிழ்நாட்டில் 7 IPS அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது...


IPS அதிகாரிகளான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐபிஎஸ் அதிகாரிகளான பி.ஆர். வெண்மதி, பி. அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி. மகேஷ்குமார், என். தேவராணி, இ.எஸ். உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்ட 10 பேருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.


அதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2027 | Instruction Manual for House-listing and Housing Census

  இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரைக் கையேடு Census of India 2027 | Instructi...