கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்...

 

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு, அஞ்சல் வாக்கு  / தேர்தல் பணிச்சான்று குறித்த தேர்தல் பிரிவு தகவல்கள்...



தகவலுக்காக,


தேர்தல் பணி பயிற்சி வகுப்பு  குறித்து - 22.03.2024 வெள்ளி மாலை 3.30 மணிக்கு நடைப்பெற்ற தேர்தல் பிரிவு காணொளி ஆய்வு கூட்ட தகவல்கள்...


1. எதிர் வரும் 24.03.2024 ஞாயிற்று கிழமை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.


2. இப்பயிற்சியில் காலை 9.30 மணிக்கு வருகை பதிவினை துவங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. பயிற்சிக்கு வருகை தராமல் இருக்கும் அலுவலர்களது விபரம் சேகரிக்கப்பட்டு, துறை தலைமைக்கு தகவல் வழங்கப்பட்டு, பயிற்சியில் கலந்து கொண்டிட துறை தலைமை மூலம்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


3. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திடுவதற்காக கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. நாமக்கல் பாரளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் , தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியினிலேயே தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்கினை செலுத்திட  படிவம் 12A யும்,


5. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியினை தவிர்த்து வேறு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள அலுவலர்கள் , தபால் வாக்கு செலுத்திட படிவம் 12-ம்  பயிற்சி வகுப்பில் வழங்கப்படும்.


6. நேர்வுக்கு ஏற்ப மேற்படி படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட, தொடர்புடைய அலுவலர்கள், தங்களது ,

 

1. தேர்தல் பணிநியமன கடித நகல்.


2. வாக்காளர் அடையாள அட்டை நகல்.


ஆகியவற்றை தவறாமல் எடுத்து வந்திட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. தேர்தல் அலுவலர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள  வாக்காளர் பட்டியலின் பாகம் மற்றும் வரிசை எண் விவரம் குறித்து வைத்திருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இவ்விவரம் தெரியாத நிகழ்வில் பயிற்சி நடைபெறும் இடத்தினிலே பாகம் எண் மற்றும் வரிசை எண் தெரியப்படுத்திட தேர்தல் பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது)


4. வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு 1950 எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும்  பாகம் எண் , வரிசை எண் எளிமையாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.


7. மேற்படி அலுவலர்களிடமிருந்து  நேர்வுக்கு ஏற்ப பூர்த்தி செய்யப்பட்ட படிவம்12 (அல்லது) 12A   விண்ணப்பங்கள் அன்று மாலை பயிற்சி வகுப்பிலே பெற்றுக்கொள்ளப்படும்.


8. இதன் பிறகு தொடர் நடவடிக்கையாக உரியவாறு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு  / தேர்தல் பணிச்சான்று வழங்கிட தேர்தல் பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


9. தேர்தல் பணிச் சான்று பெறுவதற்காக படிவம் 12A வழங்கப்பட்ட பின்னர், நாமக்கல் பாரளுமன்ற தொகுதி தவிர்த்து வேறு தொகுதியில் பணி ஒதுக்கீடு கிடைக்கப்பெறும் அலுவலர்களுக்கு தபால் வாக்கு கிடைத்திட இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் சிறப்பு ஏற்படாக படிவம் 12 பூர்த்தி செய்து பெற்றிட தேர்தல் பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 


10. பயிற்சி வகுப்பில்  வாக்குப் பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை, தேர்தல் படிவங்கள் பூர்த்தி செய்தல் ஆகிய இனங்களில் கூடுதல் பயிற்சி அளித்திட தெரிவிக்கப்பட்டது.


11. எதிர்வரும் பயிற்சி வகுப்புகளில் அலுவலர்கள் தங்களது  தபால் வாக்குகளை செலுத்திட தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின் படி பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்ற தகவலும் வழங்கப்பட்டுள்ளது.


12. தேர்தல் பணி புரியும் அலுவலர்கள் தங்களது வாக்குகளை உரியவாறு செலுத்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி வகுப்பில் தெரிவித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.


- தேர்தல் பிரிவு தகவல்.


    - நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2027 | Instruction Manual for House-listing and Housing Census

  இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரைக் கையேடு Guide  Census of India 2027 | In...