பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-06-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
குறள் 13:
விளக்கம் : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.
பொன்மொழி :
உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியாது . பழக்க வழக்கங்களை மாற்றலாம் . உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயம் எதிர்காலத்தை மாற்றும் - ஏ பி ஜே அப்துல் கலாம்.
பொது அறிவு :
01.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் எது?
02. இந்தியாவின் கேப் கென்னடி என்று அழைக்கப்படும் இடம் எது?
ஸ்ரீஹரிகோட்டா-ஆந்திரபிரதேசம்
Sriharikota-Andarapradesh
Grammar Tips:
செவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜூன் 23
கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்
கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது
ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.
குரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சமமாக பிரித்துத் தரும்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து வைத்தது.
அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டும் போட்டது.
இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.
அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.
ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.
பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.
நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்
இன்றைய செய்திகள்
23.06.2025
⭐புதிய மினி பஸ் சேவை திட்டத்தின் மூலம் 3,103 வழித்தடங்களில் போக்குவரத்து வசதி; தற்போது வரை 90,000 கிராமங்களை சேர்ந்த 1 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு தகவல்.
⭐ ஈரானிய அணுசக்தி நிலையங்கள் உட்பட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
⭐டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀கிளாட்பெக் களிமண் போட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நோலியா மந்தாவை 6-2, 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து டீன் ஏஜ் வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் தனது முதல் ITF ஜூனியர் பட்டத்தை வென்றார்.
🏀FIH ஹாக்கி புரோ லீக்கில் இன்று இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பெல்ஜியத்தை எதிர்கொள்கின்றன.
Today's Headlines
⭐ By new mini bus service project transport facilities are afforded to 3,103 routes till date. Up to 90,000 villages and 1 crore people are benefitted information by Tamil Nadu Government.
⭐In three nuclear power stations including Iranian nuclear power stations United States did the air strike.
⭐ Minister Avadi Nasar has donated Rs.8000 in the bank accounts of people who were affected by Delhi house demolition.
⭐Maya Rajeshwaran, the first junior to defeat Switzerland's Noliya Manta by 6-2, 6-4 in the Gladbeck Kaliman competition and won her first IFT junior title.
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.