கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 16.04.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 651:

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.    

விளக்க உரை:

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.


பழமொழி :
Hear more but talk less.     

அதிகம் கேள் குறைவாக பேசு.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.


பொன்மொழி :

எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதிய ஒன்றை தேடத் தொடங்குங்கள். அப்போதுதான் புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும் -வால்ட் டிஸ்னி


பொது அறிவு :

01.இந்தியா அறிவியல் கழகம் (IISc) எங்கு அமைந்துள்ளது?

பெங்களூரு- கர்நாடகம்

Bengaluru , Karnataka,

02. போலியோ நோய் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் யார்?

ஜோனாஸ் சால்க்

Jonas Salk


English words :

Itinerary – A planned route or journey schedule

Destination – The place you are traveling to


தமிழ் இலக்கணம்:

அயற் சொற்களும் அவற்றிற்கான தமிழ் சொற்களும் இன்று பார்ப்போம்

அ.சொல் - த.சொல்

  அனுமதி -  இசைவு

இருதயம் - நெஞ்சகம்

ஐதிகம் - உலக வழக்கு

அதிகாரி - அலுவலர்


அறிவியல் களஞ்சியம் :

1883-ல் கிரகடோவா எரிமலை வெடித்தபோது, ​​அதன் சக்தி மிகவும் அதிகமாக இருந்ததால், 4,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்திரேலியா வரை அதன் சத்தம் கேட்டது.


ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.


நீதிக்கதை

நன்றி மறந்த சிங்கம்

காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.

“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள்.

அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

“எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான்.

முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே…” என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்…”

“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள்.

பிறகு என்னையே5 அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

குறள் நீதி: “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” ஒருவர் செய்த நன்றியை மறப்பவர்க்கு என்றுமே உயர்வில்லை. ஆகவே, பெற்றவுதவி சிறியதோ/ பெரியதோ என்றுமே நன்றி மறவாது வாழ்வோம்.


இன்றைய செய்திகள்

16.04.2026

⭐கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்.

⭐சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தின் சிங்கிதராய் கிராமத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் பவர் பிளாண்ட்டில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தும், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.

⭐ நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

⭐ சவுதி அரேபியாவின் ரியாத், மக்கா, நஜ்ரான் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 நடப்பு ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


Today's Headlines:

⭐ Public should not worry about cylinder distribution - Indian Oil Company Official Information.

⭐ 10 people died and more than 40 workers were injured in an accident at the power plant of Vedanta Company in Singitarai village of Chhattisgarh power district.

⭐ Results for class 10th students studying under CBSE curriculum across the country have been declared yesterday.

⭐  It has been raining heavily in the Riyah, Makkah and Najran areas of Saudi Arabia for the last few days. The roads there have turned into rivers.

🏀 Sports news

🏀 22nd of the ongoing IPL series
In the league match, Chennai Super Kings registered their second consecutive win by defeating Kolkata Knight Riders by 32 runs


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-04-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.04.2026 

கிழமை:- திங்கள் 


திருக்குறள்:

குறள் 470:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு

விளக்க உரை:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.


பழமொழி :
Experience is the best teacher.

அனுபவமே சிறந்த ஆசான்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.


பொன்மொழி :

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிஜ்


பொது அறிவு :

01. இந்தியாவில் மிளகு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

கர்நாடகா- Karnataka

02. இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மெக்மஹோன் கோடு -
The McMahon Line


English words :

Resilience – Ability to recover from difficulties

Perseverance – Continued effort despite challenges


தமிழ் இலக்கணம்:

பிறமொழிச் சொற்கள் தொடர்

1. நபர் - அரபி

2. ஜாஸ்தி - உருது

3. ரூபாய் - இந்துஸ்தானி

4. துட்டு - டச்சு

5. பீரோ - பிரெஞ்சு


அறிவியல் களஞ்சியம் :

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுழல்கிறது, ஆனால் அது விண்வெளியில் நம்பமுடியாத அளவிற்கு மணிக்கு 67,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.


ஏப்ரல் 13

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



நீதிக்கதை

கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், “நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா.

என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது.

ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான்.

இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். “கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்” என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், “கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்று கேட்டான்.

அதற்குப் சோமு, “ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.


இன்றைய செய்திகள்

13.04.2026

⭐ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை

⭐டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் பெரும் மோசடிகளை தடுக்க RBI ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

⭐ மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார்.


Today's Headlines

⭐ Summer holidays for students from Classes 1 to 9 will begin on April 17 onwards.

⭐ The RBI is considering a new scheme to prevent large-scale fraud in digital transactions.

⭐ Peace talks between the United States and Iran will begin in Islamabad, the capital of Pakistan, to reduce war tensions in the Middle East.

SPORTS NEWS

🏀 In the 2026 IPL series, 15-year-old Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, has stunned the entire cricket world with his explosive performance.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.04.2026 

கிழமை:- வெள்ளி 


திருக்குறள்:

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

விளக்க உரை:

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.


பழமொழி :
work is worship.

செய்யும் தொழிலே தெய்வம்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

படைப்பாற்றலின் கதவை திறக்கக் கூடிய சாவி கல்வி -அகதா கிறிஸ்டி


பொது அறிவு :

01.மிகக் குறைந்த வயது அமெரிக்க அதிபர் யார்?

தியோடர் ரூஸ்வெல்ட்
Theodore Roosevelt

02. ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவர் யார்?

பியர் டி கூபர்டின் -1913
Pierre de Coubertin -1913


English words :

meticulous -

giving or showing great attention to details

நுணுக்க விவரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிற.

jostle -

to push hard against somebody in a crowd.

கூட்டத்தில் ஒருவர் மீது வலுவுடன் இடித்தல்


தமிழ் இலக்கணம்:

இன்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அந்நிய மொழி அவற்றின் மொழி ஆதாரங்கள் குறித்து பார்ப்போம்

1. குல்லா - பார்சி

2. ரிக்க்ஷா - ஜப்பானிய

3. பஜார் - பார்சி

4. அலமாரி - போர்ச்சுகீசியம்

5. இனாம் - உருது


அறிவியல் களஞ்சியம் :

ஒளியின் வேகம் பொதுவாக வினாடிக்கு 186,000 மைல்கள் எனக் குறைத்துக் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொன்னால், அது 299,792,458 மீ/வி (மீட்டர்/விநாடி – அதாவது வினாடிக்கு 186,287.49 மைல்களுக்குச் சமம்).


ஏப்ரல் 10

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது.1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.


நீதிக்கதை

கெட்டிக்கார சேவல்

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

" சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்" என்றது.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, "என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டது.

அதற்கு சேவல்,

" அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன்" என்றது.

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக "சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்" என்று கூறி கிளம்பியது.

சேவல், "அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது"

நரி "அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்" என்றது

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் 'யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது" என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் பொய் சொன்னாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.


இன்றைய செய்திகள்

10.04.2026

⭐கேரளா, அசாம் மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் நேற்று  சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

⭐வந்தே பாரத்தை விட மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் 2 புதிய ரயில்களை தயாரிக்கிறது இந்திய ரயில்வே

⭐அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என எஸ்என்எஸ்சி அறிவித்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 மகளிர் பிரிவு 9-வது சுற்று செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சக நாட்டு வீராங்கனையான திவ்யா தேஷ்முக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அபார வெற்றி பெற்றார்.

🏀மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோல் நடைபெறுகிறது.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


Today's Headlines

⭐ Voting for the legislative assembly elections was held yesterday in Kerala, Assam, and the Union Territory of Puducherry.

⭐ Indian Railways is preparing two new trains that can run at a speed of 220 km/h, faster than the Vande Bharat trains.

⭐ Instead of a ceasefire between the United States and Israel, the SNSC announced that safe transportation through the Strait of Hormuz will be allowed for a period of two weeks.

SPORTS NEWS

🏀 In the women’s section of the 9th round chess tournament, Tamil Nadu’s Indian player Vaishali faced fellow Indian player Divya Deshmukh. Vaishali played brilliantly and secured an impressive victory with smart moves.

🏀 The Monte Carlo Masters international tennis tournament is being held in Monaco. In this, Zverev performed well and advanced to the quarterfinals by winning 6–2, 7–5.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 09.04.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 775:

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.

விளக்க உரை:

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.


பழமொழி :
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to rome.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

இளமையில் கல்வியை புறக்கணித்தவன் , தனது இறந்த காலத்தை மட்டும் இழந்தவன் அல்ல எதிர்காலத்தையும் இழந்தவன் ஆவான்- யூரி பிடிஷ்


பொது அறிவு :

01.முதல் உலகப்போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?

வெர்சாய் உடன்படிக்கை,
The Treaty of Versailles

02.அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு எது?

பிரான்ஸ் -1886
France-1886



English words :

developer -

a person or company that builds houses, shops etc

உருவாக்குபவர்

Random - anything that is without a pattern

ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, குறிப்பின்றி


தமிழ் இலக்கணம்:

இளம் பயிர் வகைகளின் பெயர்

நெல், சோளம், கத்திரி - நாற்று

மா, புளி, வாழை - கன்று

தென்னை - பிள்ளை

பனை - மடலி/ வடலி


அறிவியல் களஞ்சியம் :

அறிவியலில் உள்ள மிகவும் வியக்கத்தக்க உண்மைகளில் ஒன்று , நாம் உண்ணும் உணவைச் சுவைக்க உமிழ்நீர் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு உணவு சுவைப்பதற்கு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் உமிழ்நீரில் கரைய வேண்டும். உணவில் உள்ள வேதிப்பொருட்கள் கரைந்தவுடன், அவற்றை நமது சுவை மொட்டுகளில் உள்ள ஏற்பிகளால் கண்டறிய முடியும்.


நீதிக்கதை

குரங்கின் காற்றாடி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி.

உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது.

காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது.

அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.


இன்றைய செய்திகள்

09.04.2026

⭐ சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்தடை அதிகரித்து வருகிறது.

⭐ ஈரானை குறிவைத்து வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களில் அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது.

⭐ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.


Today's Headlines

⭐ Power outages are increasing in Chennai and the districts of Chengalpattu, Kanchipuram, and Tiruvallur.

⭐ The United States is deploying advanced missiles at military bases in Gulf countries targeting Iran.

⭐ Donald Trump has announced that a 50% import tariff will be imposed on all countries supplying military weapons to Iran.

SPORTS NEWS

🏀 In the Indian Premier League match between the Mumbai Indians and the Rajasthan Royals, Rajasthan won by 27 runs. With this, the Rajasthan Royals have secured the top position in the points table with 3 wins in 3 matches.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 08.04.2026 

கிழமை:- புதன் 


திருக்குறள்:

குறள் 774:

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

விளக்க உரை:

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.


பழமொழி :
Knowledge is a lifelong treasure.

அறிவு வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் செல்வம்


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆனதில்லை. வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை -காமராஜர்


பொது அறிவு :

01.செடிகளின் வளர்ச்சியை அறிவதற்கு பயன்படும் கருவி எது?

கிரிஸ்கோகிராஃப்-Crescograph.

02. 'என் உண்மை' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியவர் யார் ?

முன்னாள் பிரதமர். திருமதி.இந்திரா காந்தி
Former Prime Minister Mrs.Indira Gandhi


English words :

commotion -

confused movement, பெருங் கூச்சல், அதி உற்சாகமான அல்லது குழப்பமான இயக்கம்

concoction -

any foodstuff or medicines made by combining different ingredients, வேறுபட்ட

உணவு பொருட்கள் அல்லது மருந்து பொருட்களின் கலவை


தமிழ் இலக்கணம்:

தோலின் தன்மை கொண்டு அவை அழைக்கப் படும் பெயர்கள்

1. மெல்லிய பழத் தோல் - தொலி

2. திண்ணமான பழத்தோல் - தோல்

3. வன்மையான பழத்தோல் - ஓடு

4. காய்ந்த முழு சுரையின் தோல் - குடுவை

5. நெல், கம்பின் தோல் - உமி


அறிவியல் களஞ்சியம் :

ஹீலியத்தை அதன் கொதிநிலையை விட சில டிகிரி குறைவாக, அதாவது 452 டிகிரி ஃபாரன்ஹீட் (–269 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலைக்குக் குளிர்வித்தால், அது மீப்பாய்மமாக (superfluid) மாறுகிறது. அதாவது, அதனால் உராய்வின்றி நகர முடியும். அது ஒரு கண்ணாடிக் குவளையின் ஓரங்களுக்கு மேல் உயர்ந்து செல்ல முடியும். இது மட்டுமல்ல, ஒரு கொள்கலனில் உள்ள மூலக்கூறு-மெல்லிய விரிசல்கள் வழியாகவும் அது வெளியேற முடியும். அறிவியலில் உள்ள மற்ற வியக்கத்தக்க உண்மைகளில் , பிரபஞ்சத்தில் இரண்டாவது அதிக அளவில் காணப்படும் தனிமம் ஹீலியம் ஆகும்.


ஏப்ரல் 08

பங்கிம் சந்திர சட்டர்ஜி  அவர்களின் நினைவுநாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838– ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.



நீதிக்கதை

பலசாலி முயல்

அடர்ந்த காட்டு வழியே நடந்து கொண்டிருந்த முயல், மூங்கில்குருத்துகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானையைப் பார்த்தது.

"வணக்கம் யானையண்ணே. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு" என்றது.

தன் காலடியில் நின்ற முயல்குட்டியை அலட்சியமாகப் பார்த்தது யானை. "என் கால் நகம் அளவுகூட இல்லாத நீ எல்லாம் என்கிட்டே பேசுற அளவு வளர்ந்துட்டியா?" என்று கடுமையாகக் கேட்டது.

முயல் குட்டியின் முகம் வாடிப்போனது.

ஏன் யானை அண்ணன் தன்னிடம் இப்படி பேசியது என்று யோசித்தபடியே நடந்தது. காட்டையொட்டி இருக்கிற எரி வாழும் முதலை அக்காவிடம் கேட்கலாமே என்று எரிக்கு ஓடியது.

"முதலை அக்கா…"

முயலின் சத்தம் கேட்டு, தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்த்தது முதலை. கடற்கரையில் இருந்த முயலைப் பார்த்து, "நீயா? என்னைக் கூப்பிட்டாயா?" என்றது.

ஆமாம் எனத் தலையாட்டியது முயல். அது அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "என் கண்ணைவிட சின்னதா இருக்கற உன்கிட்டே பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை" என்று யானையை விடக் கடுமையாகப் பேசிவிட்டுத் தண்ணீருக்குள் சென்றது முதலை.

முயலின் சோகம் அதிகமானது. மீண்டும் முதலையை அழைத்தது. "நான் உருவத்துல சின்னதா இருந்தாலும் பலத்துல உங்களைவிட பெரியவன். வேணும்னா ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா?" என்று கேட்டது.

முதலைக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒப்புக்கொண்டது.

நீளமான கயிறைக் கொண்டுவந்து முதலையிடம் கொடுத்தது. "அக்கா, இந்தக் கயிற்றின் இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்வேன்.

நான் இழு என்று சொன்னதும் நீங்கள் இழுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு, கயிறுடன் காட்டுக்குள் ஓடியது.

அங்கே இருந்த யானையையும் இதேபோல போட்டிக்கு அழைத்தது. "இதென்ன பெரிய விஷயம்? நான் ஒரு இழு இழுத்தால் நீ காணாமல் போய்விடுவாய்" என்று சொல்லிக்கொண்டே கயிறைத் தன் தும்பிக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது யானை.

" நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. நான் அந்தப் பக்கம் சென்று, கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொள்கிறேன். இழு என்று சொன்னதும் போட்டி தொடங்கும்" என்று சொல்லிவிட்டு, யானையின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு புதரில் மறைந்துகொண்டது.

முதலைக்கும் யானைக்கும் கேட்பதுபோல் சத்தமாக, "இழுக்கலாம்" என்று கத்தியது. உடனே அடுத்த முனையில் முயல் குட்டி இருப்பதாக நினைத்து இரண்டு விலங்குகளும் கயிறை வேகமாக இழுத்தன.

இரண்டுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. முயலுக்கா இத்தனை வலிமை இருக்கிறது என்று நம்ப முடியாமல் கயிறை வேகமாக இழுத்தன.

கொஞ்சம் விட்டால் முதலை தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. யானைக்கும் அப்படித்தான். தும்பிக்கையே உடைந்துவிடும் போல வலித்தது. இருந்தாலும் இரண்டும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இழுத்தன.

பட்டென இரண்டாக அறுந்தது கயிறு. அந்த வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி மண்டை வீங்கியது யானைக்கு. முதலை பாறையில் மோதி சிராய்த்துக்கொண்டது.

முயலின் திட்டம் புரியாமல், உருவத்தை வைத்து திறமையை எடைபோட்டுவிட்டோமே என்று நொந்தபடி யானையும் முதலையும் அதனதன் வேலையைப் பார்க்கக் கிளம்பின.

அன்று முதல் முயல் குட்டியை எங்கே பார்த்தாலும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னது யானை. முதலையும் முயல் குட்டியிடம் மரியாதையாகப் பழகியது.


இன்றைய செய்திகள்

08.04.2026

⭐நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

⭐ இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4 கோடி குழந்தைகள் உடற்பருமனுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த பாதிப்பு ஆண்டுக்கு 5% அதிகரித்து வருகிறது.

⭐நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை எழுதவோ அல்லது வழக்குகளில் முடிவெடுக்கவோ AI-யைபயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் & குஜராத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ  7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Today's Headlines

⭐ 26 lakh people have applied for the NEET examination across the country.

⭐ In India, about 4 crore children under the age of 19 are living with obesity. In India, this incidence is increasing by 5% every year.

⭐The Kerala High Court and the Gujarat Court have banned AI-initiators from writing their judgments or deciding on cases.

🏀 sports news

🏀The Māntekarlo Masters Tennis competition is going on in Monaco. Men's Singles Division 2nd Round: India's Stefanos Tsitsipas won the 7-5, 6-4 set and advanced to the next round


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 07.04.2026 

கிழமை:- செவ்வாய் 


திருக்குறள்:

குறள் 732:

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு . 

விளக்க உரை:

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.


பழமொழி :
Believe in yourself and succeed. 

உன்னை நம்பினால்  வெற்றி பெறுவாய்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிவருகின்றன - ஏபிஜே அப்துல் கலாம்


பொது அறிவு :

01. நமது உடலில் ரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் எது?

வைட்டமின் கே-Vitamin K

02. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

அபெர்டீன், ஸ்காட்லாந்து

Aberdeen, Scotland,


English words :

Appraisal - evaluation மதிப்பீடு

Cautious - being careful to avoid risks. எச்சரிக்கை


தமிழ் இலக்கணம்:

ஒரு, ஓர் வரும் இடங்கள் எவை என்று பார்ப்போம்

உயிர் எழுத்துகள் முன் ஓர் வரும்

ஓர் ஆயுதம்

ஓர் அலை

ஓர் ஒட்டகம்

ஓர் ஈ

ஓர் இலை

உயிர்மெய் எழுத்துகள் முன் ஒரு வரும்

ஒரு காகம்

ஒரு மெத்தை

ஒரு சத்திரம்

ஒரு மரம்

ஒரு பழம்


அறிவியல் களஞ்சியம் :

பூமியின் 50% முதல் 80% வரையிலான ஆக்ஸிஜன் கடல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பல்வேறு விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி, தாவர அடிப்படையிலான கடல்வாழ் உயிரினங்களால் நடைபெறுகிறது. கடல்வாழ் பிளாங்க்டன்கள், பாசிகள், கடற்பாசிகள் மற்றும் சில பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


ஏப்ரல் 7

உலக நலவாழ்வு நாள்

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.


வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த நாள் 

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார்.  தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.



நீதிக்கதை

பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் முடியவில்லை . மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றாலும் அந்த எலியை பிடிக்க முடியவில்லை. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...

ஆனால்  இளவரசர்  சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதிசயம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது?  என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?

நீதி:

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்


இன்றைய செய்திகள்

07.04.2026

⭐ "12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியாகும்"

⭐ இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

⭐ இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: புவனேஷ்வர் குமார் சாதனை


Today's Headlines

⭐ “The Class 12 public examination results will be released on May 8.”

⭐ 156 Chinese nationals have been arrested in Sri Lanka for being involved in large-scale international online financial fraud operations.

⭐ Iran has carried out a major drone attack targeting Ben Gurion International Airport in Tel Aviv, Israel.

🏀 Sports News

🏀 Bhuvneshwar Kumar becomes the first fast bowler to take 200 wickets in the Indian Premier League.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-04-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 06.04.2026 

கிழமை:- திங்கள் 


திருக்குறள்:

குறள் 731:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

விளக்க உரை:

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.


பழமொழி :
Education is the key to success.

வெற்றிக்கு கல்வியை திறவுகோல்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்


பொன்மொழி :

ஒருவரை ஒருவர் மன்னிக்க பழகிக்கொள்வோம் .அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும் - லியோ டால்ஸ்டாய்


பொது அறிவு :

01.தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கப்படும் இடம் எது?

கழுகுமலை- தூத்துக்குடி
Kazhugumalai- Thoothukudi

02.இந்தியாவின் தேசிய ரயில் அருங்காட்சியகம் எங்குள்ளது?

புதுடில்லி-New Delhi


English words :

* bluff - to try to make people believe that something is true when it is not.

பொய்யான ஒன்றை மெய்யெனக் கூறி பிறரை ஏய்க்க முயலுதல்

* brackish - about water

containing some salt but not as much as sea water.

கடல்நீர் அளவுக்கு அல்லாது ஓரளவு உப்பு நீரான.


தமிழ் இலக்கணம்:

இன்று நாம் தாவரங்களின் இலைகளின் சரியான தமிழ் சொல் அறிந்து கொள்வோம்

1. ஆல், அரசு, மா, பலா, வாழை - இலை

2. அகத்தி, பசலை, முருங்கை - கீரை

3. அருகு, கோரை - புல்

4. நெல், வரகு பிற தானியங்கள் - தாள்

5. மல்லி - தழை

6. சப்பாத்திக் கள்ளி, தாழை - மடல்

7. கரும்பு, நாணல் - தோகை

8. பனை, தென்னை - ஓலை

9. கமுகு (பாக்கு) - கூந்தல்


அறிவியல் களஞ்சியம் :

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்.


நீதிக்கதை

முல்லைக்காட்டு குரங்கு!

முல்லைக்காட்டுக்கு புதிதாக குரங்கு ஒன்று வந்தது. அந்த குரங்கின் பெயர் கிட்டு! அது நிறைய மந்திர வித்தைகளை செய்து காட்டியது.

வெறும் கையை காட்டி, அந்த கையை அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி சர்க்கரையை வரவைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த சர்க்கரையை அனைவருக்கும் கொடுத்தது.

ஒரு பூவை எடுத்து அப்படியே கைகளில் வைத்து கசக்கி தூக்கி வானத்தில் வீசியது. பூ குருவியாக மாறி வானத்தில் பறந்தது. அதைப்பார்த்து முல்லைக்காட்டு முயல்களும், எலிகளும், யானைகளும், மான்களும் ஆச்சர்யப்பட்டன. அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர்.

வித்தைகள் காட்டிக்கொண்டிருந்த குரங்கு திடீரென கூட்டத்தை நோக்கி " உங்கள் தலைவன் யார்?" என்று கேட்டது.

"எங்களுக்கெல்லாம் தலைவர் சிங்கராஜாதான்! ஏன் கேக்கறீங்க?" என்றது எலிக்குட்டி. பதிலே சொல்லாமல் சிரித்துக்கொண்டே சிங்கத்தின் குகைக்கு கிளம்பியது குரங்கு கிட்டு.

சிங்கராஜாவின் குகை வாசலில் நின்றுகொண்டு " ஏய் கோழை சிங்கமே.. வெளியேவா.. தைரியமிருந்தா என்னோடு மோதிப்பார்" என்று கூப்பிட்டது.

குகைக்குள்ளேயிருந்து நரியாரும் சிங்கராஜாவும் வெளியே வந்தனர்.

"வணக்கம் குரங்காரே நீங்க யார் உங்களை இந்த காட்டில் பார்த்ததில்லையே! ஏன் கோபமாக கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க" என்றது.

"நான் இமயமலையிலிருந்து வருகிறேன், கடவுள் எனக்கு நிறைய மந்திர சக்தி கொடுத்திருக்கிறார். மரியாதையாக இந்த காட்டை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை ஒரே நிமிடத்தில் அழித்துவிடுவேன், தைரியமிருந்தால் என்னோடு சண்டை போட்டு ஜெயித்துகாட்டு!" என்று சிங்கராஜாவை சண்டைக்கு அழைத்தது.

தன்னுடைய வெறும் கையை அப்படி இப்படி ஆட்டி அதிலிருந்து சர்க்கரையை வரவழைத்து "அஸ்கு லஸ்கா.. குஸ்கு புஸ்கா" என்று சொல்லி சிங்கத்தின் மீது வீசியது! சிங்கத்துக்கு ரொம்பே கோபம் வந்துவிட்டது..

"மவனே உன்னை அடிச்சி நொறுக்கிடறேன்" என குரங்கை அடிக்கப் பாய்ந்தார். உடனே நரியார் சிங்கத்திடம் சென்றார்.

"சிங்கராஜா இவன் ஒரு டம்மிபீஸு.. இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றார் நரியார் நந்து.

குரங்கிடம் போய் நரியார் பேசினார். "குரங்காரே.. ரொம்ப பேசாதீங்க..நான் கூட மிகப்பெரிய மந்திரவாதிதான். என்னோடு உங்களால் போட்டிபோட முடியுமா? நான் செய்யும் மாயாஜாலத்தை உங்களால் செய்ய முடியுமா?" என்றார்.

"அப்படி என்ன என்னாலேயே செய்யமுடியாத மந்திர வித்தை?" என்று திமிராக கேட்டது கிட்டு.

"நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும்போது ஆற்றங்கரைக்கு வந்துடுங்க குரங்காரே.. நம்ம போட்டிய அங்க வச்சிக்கலாம்" என்றார் நரியார்.

உடனே குரங்கு ஆவேசமாக "ஏய் நரியே! நாளைக்கு போட்டில நீ தோத்துட்டா சிங்கராஜா இந்த காட்டைவிட்டே போயிடணும். அதுக்கு பிறகு இந்த முல்லைக்காட்டுக்கு நான்தான் ராஜா! நான் வச்சதுதான் சட்டம். எல்லாரும் என் பேச்சைதான் கேக்கணும்." என்றது குரங்கு.

"ஒருவேளை நீங்க தோத்துட்டா என்ன பண்றது குரங்காரே" என்றார் நரியார்.

உடனே குரங்கு "சிங்கராஜா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு போய்விடுகிறேன்" என்றது .

இரவெல்லாம் குரங்கு கிட்டுவுக்கு தூக்கமே வரவில்லை. " அப்படி என்ன நமக்கு தெரியாத வித்தையாக இருக்கும்" என்று யோசித்துக் கொண்டேயிருந்தது.

அடுத்த நாள் ஆற்றங்கரையில் நரியார் நந்துவும் குரங்கு கிட்டுவும் சந்தித்தனர். முல்லைக்காட்டில் இருக்கிற அத்தனை பேரும் அங்கே கூடியிருந்தனர். சிங்கராஜாவும் ஆர்வத்தோடு வந்திருந்தார்.

"இந்த நரியாருக்கு ஒரு மந்திரமும் தெரியாதே எப்படி ஜெயிக்கப்போறார்னே புரியலையே" என்று சிங்கராஜாவுக்கு மிகவும் பயமாக இருந்தது.

நரியார் கிட்டுவை கூப்பிட்டு ஆற்றுக்கு நடுவில் இருந்த ஒரு கொடியைக் காட்டினார்.

"குரங்காரே அதோ அங்கே ஆத்துக்கு நடுவுல ஒரு கொடி தெரியுதே! அதை ஆற்றின் மேல் நடந்து சென்று எடுத்துட்டு வராங்களோ அவங்கதான் வின்னர்! கைகளில் தண்ணீர் படக்கூடாது" என்றார் நரியார்.

கிட்டுவுக்கு ஆற்றில் நடக்க தெரியாது. இருந்தாலும் யாராலும் தண்ணீரில் நடக்க முடியாதே என்கிற தைரியத்தில் ஒப்புக்கொண்டார். எப்படியும் நரியார் தண்ணீரில் விழுந்துவிடுவார் என நினைத்தார்.

இருவரும் தயாராயினர். முதலில் நரியார் ஓடிப்போய் ஆற்றுக்குள் குதித்தார். எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர். நரியார் தண்ணீருக்குள் மூழ்கவில்லை. அப்படியே தண்ணீர் மேல் ஒற்றைக்காலில் நின்றார். எல்லோரும் சூப்பர் சூப்பர் என கைத்தட்டினர்.

அப்படியே பொறுமையாக ஆற்றில் நடந்த நரியார், ஆற்றின் மேலேயே நடனம் ஆடினார். குரங்கு கிட்டுவைப் பார்த்து சிரித்து கேலி செய்து சிரித்தார். ஆற்றுக்கு நடுவில் இருந்த கொடியை எடுத்துக்கொண்டு வந்து குரங்கிடம் காட்டினார்.

"குரங்காரே நான் ஆத்துல நடந்து போயிட்டு வந்தாச்சு. இப்போ நீங்க… நடந்துபோய் இன்னொரு கொடியை எடுத்துட்டு வாங்க" என்றார் நரியார்.

குரங்குக்கு தலையே சுற்றுவதைப்போல இருந்தது. அவர் எத்தனையோ மாயாஜால வித்தைகள் கற்றிருந்தாலும் இது மட்டும் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்யலாம் என நினைத்து ஆற்றுக்குள் குதித்தார். தொப்புக்கடீர் என தண்ணீருக்குள் விழுந்தார்.

"நான் தோத்துட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க இந்தாங்க மாணிக்கக்கல்" என்று சிங்கராஜாவிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். "குரங்காரே எவ்ளோதான் நமக்கு திறமையிருந்தாலும் ஆணவமாக இருக்க கூடாது, அது நம்மையே அழிச்சிடும்" என்று அறிவுரை கூறினார் சிங்கராஜா. மந்திரவாதி குரங்கு காட்டைவிட்டே ஓடியது.

சிங்கராஜாவுக்கும் முல்லைக்காட்டு விலங்குகளுக்கும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. நரியார் நந்துவுக்கு எந்த மந்திரமும் தெரியாது பிறகு எப்படி நீரில் நடந்துகாட்டினார்? எலிக்குட்டி போய் நரியாரிடம் கேட்டது " நரியாரே எப்படி நீங்க தண்ணீல நடந்துபோனீங்க" என்றது.

சிங்கராஜாவும் " ஆமாம் நரியாரே நீங்க எப்படி தண்ணீரில் நடந்து போனீங்க" என்றார்.

"சிங்கராஜா அந்த குரங்குக்கு மந்திரமும் தெரியாது மாயமும் தெரியாது. அது ஒரு மோசடி பேர்வழி. விரலுக்கு நடுவில் சின்ன சின்ன சர்க்கரை கட்டிகளை வைத்துக்கொண்டு கையை அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த கட்டிகளை உடைத்து பொடியாக்கி ஏதோ வெறும் கையில் சக்கரையை வரவைத்த மாதிரி உங்கள் மேல் வீசியதை பார்த்தேன்." என்று நரியார் சொல்ல..

"ஓஹோ..!" என்று ஆச்சர்யப்பட்டார் சிங்கராஜா

"அப்போதே தெரிந்துவிட்டது அவன் ஒரு போலி மந்திரவாதி என்று. அதனால் அவனை ஏமாற்றி ஜெயிக்க நினைத்தேன். அதனால் குரங்கினை ஆற்றில் நடக்கிற போட்டிக்கு அழைத்தேன்." என்றார் நரியார்.

"அதுசரிங்க நரியாரே எப்படி தண்ணீரில் நடந்து சென்றீர்கள்" என்றார் சிங்கராஜா.

"அதுவா… நேற்று இரவு ஆற்றில் இருக்கிற நம் ஆமையாரையும் அவருடைய நண்பர்களையும் சந்தித்து ஆற்றின் குறிப்பிட்ட சில இடங்களில் வெளியே தெரியாதபடி தண்ணீருக்குள் மிதக்கும்படி சொல்லியிருந்தேன். அதனால் ஆற்றின் மேல் அவர்களுடைய முதுகில் காலைவைத்து ஜாலியாக நடந்து சென்றேன். இந்த குரங்கு நடக்கும்போது ஆமையார் நகர்ந்து போய்விட்டிருந்தார்! அவ்வளவுதான்!" என்று புன்னகை செய்தார்.

"பலே நரியாரே! அசத்திட்டீங்க" என்று சிங்கராஜா கைதட்டி வாழ்த்த.. இதை கேட்டுக்கொண்டிருந்த முல்லைக்காட்டின் மற்ற விலங்குகளும் கைதட்டி மகிழ்ந்தன.


இன்றைய செய்திகள்

06.04.2026

⭐இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு எப்போதும் ஒரு குறிப்பிட்ட நாட்டை சார்ந்திருப்ப தில்லை. வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது

⭐ ஈரானின் மிக உயரமான பாலத்தை அமெரிக்க தகர்த்துள்ள நிலையில் வளைகுடாவில் உள்ள 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

⭐ஏப்ரல் 21 முதல் 23 வரை கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணி

🏀 ஐபிஎல் 2026 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.


Today's Headlines

⭐ India does not depend on any single country for its fuel needs. It imports crude oil from multiple nations, including Gulf countries.

⭐ Following the destruction of Iran’s tallest bridge by the United States, Iran is reportedly planning to destroy 8 bridges in the Gulf region.

⭐ The Election Commission has imposed a ban on broadcasting opinion polls from April 21st  to 23rd

SPORTS NEWS

🏀 The Indian team is currently touring Zimbabwe for matches.

🏀 In the IPL 2026 tournament, Rajasthan Royals secured their second win of the season by defeating Gujarat Titans by 6 runs.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 02.04.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 917:

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

உரை:

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.


பழமொழி :
Bend the twig,bend the tree.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

மேலான பண்புள்ளவர்களின் சொற்களை கேளுங்கள் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள் - ஔவையார்


பொது அறிவு :

01. நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜான் பிலிப் ஹாலண்ட், John Philip Holland

02.தமிழ்நாட்டில் வட காவிரி என்று அழைக்கப்படும் நதி எது?

கொள்ளிடம் ஆறு- Kollidam river


English words :

Serene – Calm, peaceful, and untroubled

Ambiguous – Having more than one meaning; unclear


தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

கையெழுத்து, கையொப்பம் இரண்டும் ஒன்றா வேறு வேறா?

இரண்டும் ஒன்று அல்ல. எப்படி என்று காண்போம் வாருங்கள்

கையெழுத்து என்பது ஒருவர் பொதுவாக  கைப்பட எழுதும் எழுத்து (எழுத்து வடிவம்) ஆகும்.

பயன்பாடு - கடிதம், பாடக் குறிப்புகள் எழுத பயன்படுகிறது

கையொப்பம் என்பது ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த ஆவணங்களில் இடும் தனித்துவமான, மாற்ற முடியாத  கையெழுத்து (signature) ஆகும்

பயன்பாடு:

கையொப்பம் வங்கி, பத்திரம், அலுவலக ஆவணங்களில் சட்டப்பூர்வ சான்றாகப் பயன்படுகிறது.

கையெழுத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றலாம் (நிதானமாக, வேகமாக), ஆனால் கையொப்பத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.


அறிவியல் களஞ்சியம் :

மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

ஏப்ரல் 02

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805–1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.[1] "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People – IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்



நீதிக்கதை

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதை ஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இரக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலர வைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. “ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கவ்விக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்கு “பக்” கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாயமும் அபாயமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.


இன்றைய செய்திகள்

02.04.2026

⭐ஓஎன்ஜிசி நிறுவனம், 'தாமன் அப்சைட் டெவலப்மென்ட்' திட்டத்தின் மூலம் எரிவாயு உற்பத்தியை தொடங்கியுள்ளது.

⭐இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்கு அதிகரிப்பு: 1000 லிட்டர் ரூ.2.07 லட்சமாக உயர்வு.

⭐போரால் இஸ்ரேல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

⭐ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி.
கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அரை சதம் அடித்த இரண்டாவது அதிவேக பேட்ஸ்மேன்வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் விளாசியது ஐபிஎல்லில் புதிய சாதனையாக அமைந்தது.


Today's Headlines

⭐ Oil and Natural Gas Corporation has started gas production through the “Daman Upside Development” project.

⭐ Aviation fuel prices in India have doubled: 1000 liters have increased to
₹ 2.07 lakh.

⭐ Due to the war, the normal life of people in Israel has been affected.

⭐ One-third of the CCTV cameras sold in India are manufactured in China.

SPORTS NEWS

🏀 Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, scored a half-century and became the second - fastest batsman to achieve this milestone, setting a new record in the Indian Premier League.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2026

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 01.04.2026 

கிழமை:- புதன் 


திருக்குறள்:

குறள் 914:

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

உரை:

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.


பழமொழி :
Many hands make light work.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் ஆனந்தம் பிறக்கிறது - தங்கரசால்


பொது அறிவு :

01. பாபநாசம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

தாமிரபரணி_ Thamirabarani River

English words :

Analyze – to examine in detail to understand or interpret.

Crisis – a time of intense difficulty or danger.


தமிழ் இலக்கணம்:

பதற்றம், பதட்டம் எது சரி?

பதறு என்ற சொல்லில் இருந்து தான்

பதறி, பதறிய, பதற்றம் என்ற சொற்கள் பிறந்தது.

எனவே பதற்றம் என்பதே சரி.

எழுதும் போது பதற்றம் என்றே எழுத வேண்டும்

மதன் பதற்றத்தோடு பரீட்சை எழுத வந்தான்.


அறிவியல் களஞ்சியம் :

ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்.


ஏப்ரல் 01

வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.


நீதிக்கதை

யார் வள்ளல்?

முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.

அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.

திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.

அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.

நீதி :

தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.


இன்றைய செய்திகள்

01.04.2026

⭐சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

⭐ இந்தியாவில் LPG க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெட்ரோல் பங்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

⭐ஏமனின் ஹூத்தி தீவிரவாதிகள் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தகர்ப்போம் என்று அச்சுறுத்துவதால் உலக நாடுகள் கலக்கமடைந்து ள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஷிம்கென்ட் கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.

🏀 ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.


Today's Headlines

⭐ In cities including Chennai, the prices of daily food items such as tea, snacks, and meals in restaurants and tea shops have increased significantly.

⭐ There is a shortage of LPG in India. As an alternative to LPG cylinders, the central government has announced that kerosene will be sold at two petrol bunks in each district.

⭐ Global nations are concerned as the Houthis in Yemen have threatened to damage undersea communication cables.

SPORTS NEWS

🏀 In the Shymkent, Kazakhstan chess tournament, India’s Pranav emerged as the champion.

🏀 In the third league match of the Indian Premier League 2026, Rajasthan Royals defeated Chennai Super Kings by 8 wickets.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 30.03.2026 

கிழமை:- திங்கள் 


திருக்குறள்:

குறள் 912:

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

உரை:

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.


பழமொழி :
Measure thrice before you cut once.  

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.


பொன்மொழி :

மனிதர்களின் முழு திறமையின் வெளிப்பாடே உண்மையான கல்வி

   மகாத்மா காந்தி அடிகள்


பொது அறிவு :

01. காந்திஜியின் 125 வது பிறந்தநாளை ஒட்டி இந்தியா உருவாக்கிய மிக உயர்ந்த விருதின் பெயர் என்ன?

காந்தி அமைதி பரிசு

Gandhi Peace Prize. 

02. விண்கலங்கள் அதிக முறை சென்று ஆராய்ச்சி செய்த முதல் வால் நட்சத்திரம் எது?

ஹாலி வால் நட்சத்திரம்

Halley's Comet


English words :

Attentive- taking heed. உன்னிப்பாகக் கவனித்தல்

exotic - unusual or interesting

வழக்கத்திற்கு மாறாக இருக்கிற. விசித்திரமான.


தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

கருப்பு, கறுப்பு எது சரி?

இடையின ர கரமா வல்லின ற கரமா?

இது அநேகருக்கு குழப்பத்தை உண்டாக்கும் ஒரு வார்த்தை.

ஆனால் இரண்டுமே சரி தான்.

எப்படி என்று பார்ப்போம்.

நிலையான நிறத்தை குறிக்கும் போது கருப்பு என்று எழுத வேண்டும்

எ.கா - காகம் கருப்பு

கருப்பு குயில்

தாரின் நிறம் கருப்பு.

மாறும் நிறம் வரும் போது கறுப்பு என்று எழுத வேண்டும்.

வெள்ளி கறுத்து விட்டது

மேகம் கறுத்து வருகிறது.

வெள்ளி, மேகம் இரண்டின் நிறமும் வேறு வேறு ஆனால் வெள்ளி கறுப்பாக மாறும்

மேகம் நிறமும் கறுப்பு அல்ல அது மழை வரும் போது மாறும்.


அறிவியல் களஞ்சியம் :

"சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம் பாயாது, காரணம் சுத்தமான நீரில் தாதுக்கள் (Impurities and Minerals) இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.


மார்ச் 30

வின்செண்ட் வான்கா  அவர்களின் பிறந்தநாள்

வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx]); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.



நீதிக்கதை

அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்

அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.

அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.

நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது.

சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது.

நீதி:

தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.


இன்றைய செய்திகள்

30.03.2026

⭐ வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை மாநிலங்களுக்கு 70% ஆக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

⭐தற்போது ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த BA.3.2 எனப்படும் 'சிக்காடா' கொரோனா வைரஸ் ஐரோப்பா & அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.

⭐பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை இந்திய அரசு குறைத்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த 13 சீசன்களாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. மொத்தம் 18 சீசன்களில் 14 முறை தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

🏀பாகிஸ்தான் வீரருடன் இணைந்து ஆடப் போகும் அஸ்வின். அமெரிக்காவின் MLC டி20 தொடரில் பங்கேற்க ஒப்பந்தம்.


Today's Headlines

*TODAY’S HEADLINES*

⭐ The Government of India has announced that the distribution of commercial LPG cylinders to states will be increased to 70%.

⭐ A new Omicron variant called BA.3.2, nicknamed “Cicada,” is reportedly spreading rapidly in Europe and the United States.

⭐ To control the rising prices of petrol, diesel, and other fuels, the Government of India has reduced the excise duty imposed on oil companies.

*SPORTS NEWS*

🏀 The Mumbai team, which has won the championship 5 times, has been struggling to win its opening match for the past 13 seasons. Out of 18 seasons, it has lost the first match 14 times.

🏀 Ravichandran Ashwin is set to play alongside a Pakistani player, having signed up to participate in the USA’s Major League Cricket (MLC) T20 tournament.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 27.03.2026 

கிழமை:- வெள்ளி 


திருக்குறள்:


குறள் 844: 


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை 

உடையம்யாம் என்னும் செருக்கு. 


விளக்க உரை: 

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.


பழமொழி :

A guilty conscience pricks. 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.


பொன்மொழி : 

சேமிப்பு இல்லை என்றால் உழைப்பும் வீணே.



பொது அறிவு : 

01.இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

டாக்டர்.ஹோமி ஜஹாங்கீர் பாபா  -Dr.Homi J. Bhabha


02.இந்தியாவில் நவீன வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் (பசுமைப் புரட்சி) சிற்பி என்று அழைக்கப்படுபவர்யார்?

டாக்டர். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் 

Dr.M.S. Swaminathan.


English words :

Doodle – Drawing absent-mindedly

Scratch – Rough, quick writing


தமிழ் இலக்கணம்: 

அறிவோம் தமிழ் 

இன்று ஐவகை நிலங்களில் ஆடவர் எவ்வாறு அழைக்கப் படுகின்றனர் என்று காண்போம்

மருதம் - கடையர் 

நெய்தல் - பரதர்

பாலை- எயினர்

முல்லை- இடையர் 

குறிஞ்சி - வேடுவர்



அறிவியல் களஞ்சியம் :

மேகத்தின் எடை சுமார் 10 லட்சம் பவுண்டுகள் (million pounds) வரை இருக்கலாம். 


மார்ச் 27


உலக நாடக அரங்க நாள்  

உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.




யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.


நீதிக்கதை


 அழகிய ரோஜா செடியும் அற்புத கள்ளிச் செடியும்


அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.


அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.


நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காத என்று கேட்டது. 


சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. 


நீதி:


தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.



இன்றைய செய்திகள்

27.03.2026


⭐தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது 60 சுங்கச்சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு


⭐தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் நடவடிக்கையில் இதுவரை ரூ.34.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 


⭐ புதுச்சேரியில் வழிப்பறி செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய முகமூடி கும்பலை போலீசார் கைதுசெய்துள்ளனர்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக புதியவர்கள் களமிறங்குவார்கள் என அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.


🏀 'டி-20' அரங்கில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் உள்ளிட்டோருடன் இணைந்தார் அமேலியா கெர்.


Today's Headlines


⭐ In Tamil Nadu, toll fees at 60 toll plazas will be increased by up to 5% starting from April 1st.


⭐ In Tamil Nadu, flying squads and surveillance teams for election monitoring have seized ₹34.64 crore in cash so far.


⭐ In Puducherry, police have arrested a masked gang that was hiding with dangerous weapons, intending to commit robbery.


 SPORTS NEWS 


🏀 Chennai Super Kings captain Ruturaj Gaikwad has stated that new players will open the innings for the team.


🏀 In T20 cricket, Amelia Kerr has joined the list of captains who have scored two or more centuries, alongside Rohit Sharma, Sophie Devine, and Meg Lanning.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - RTI தகவல்

 வருகைப் பதிவேட்டில்  ஆசிரியர்களின் பெயர் எழுதும் முறை - தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில் >>> தரவிறக்கம் செய்...