கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

 


வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கதைகள் வரவேற்றல் - மாணவர்கள் படைப்புகளை ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்...



Vaasippu Iyakkam - Students Story Collection - User Manual



Improving the reading skills of school students - Preparing books in four categories: Enter, Walk, Run, and Fly. Welcome stories - Method to send students creations through teachers' EMIS login - Letter from the State Project Director



மாநில திட்ட இயக்ககம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை – 600 006


அனுப்புநர்

Dr. மா. ஆர்த்தி, இ.ஆ.ப.,

மாநிலத் திட்ட இயக்குநர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,

சென்னை – 600 006.


பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்,

அனைத்து மாவட்டங்கள்.


அய்யா/அம்மையீர்,


ப.க.எண்:1535/C7/.8/6/2025, நாள்: 09.06.2025


பொருள்: தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாபெரும் வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கதைகள் வரவேற்றல் - மாணவர்கள் படைப்புகளை ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்புதல் - சார்பு


பார்வை: இவ்வியக்ககக் கடித ந.க.எண்:2123/C7/நூலகமானியம்/ஒபக/2023, நாள்: 15.04.2025


*****


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 53 புத்தகங்களும், இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


• தற்போது நான்காம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன. நான்காம் கட்ட புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களின் படைப்புகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


• அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் EMIS Login வழியாக அனுப்பி வைக்கலாம்.


• தேர்வு செய்யப்படும் கதைகள் வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும்.


• கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, திருத்தங்கள் செய்யவோ அரசு உயர் அலுவலர்களால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.


• சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானது.



மேலும் அறிய....








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

  வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கத...