தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
“எதிர்காலத்திற்கு தேவையான பார்வையுடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை (பள்ளிக் கல்வி) உருவாக்கியுள்ளோம்”
இந்தக் கல்விக் கொள்கையின் மூலமாக…
🙇படித்து மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்து கேள்விக் கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.
⚡️எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்கவுள்ளோம்.
👩💻தொழில்நுட்ப மனம் படைத்த மாணவர்களை உருவாக்குவோம்.
👩🎨படிப்பவர்களாக மட்டுமல்ல! படைப்பாற்றல் உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்குவோம்!
🤾♀️கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும்.
📋தாய்மொழித் தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்கும்.
📕தமிழும் ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கைதான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும்.
🏫ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்!
📺கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.
👨🎓மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி தேர்வுகள் அமையும்.
📚பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
🧑🎓‘நான் முதல்வன்’ திட்டம் வாழ்க்கைக்கும் வழிகாட்டுதலாக அமையும்.
👨🔬அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்!
*“அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் உயர்தரமான கல்வி” இதுதான் நமது திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை!* - மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.