கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 23.12.2025

கிழமை:- செவ்வாய்கிழமை


 

திருக்குறள்: 


குறள் 213:

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
            
விளக்க உரை: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.


பழமொழி :
Life begins with self - belief.         

தன்னம்பிக்கையில்   தான் வாழ்க்கை  ஆரம்பமாகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.


பொன்மொழி :

முதலில் மனிதன் குடிக்க ஆரம்பிக்கிறான் பின்னர் அது அவனை குடிக்க ஆரம்பிக்கிறது சிங்லெயிர் லூயிஸ்



பொது அறிவு : 1. உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை எது?

அமெரிக்கா-மௌனா லோவா            America - Mauna Loa

02.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர்  யார்?

இரண்டாம் இராசராசன்

Rajaraja Chola II



English words :

Jammed-stucked,

Creased- having unwanted lines or folds


தமிழ் இலக்கணம்:

நிறுத்தக்குறிகள் பயன்கள்:

1. பேச்சு நடையை எழுத்தில் கொண்டுவர உதவுகிறது.

2. கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

3. எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், ஏற்ற இறக்கத்துடன் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.



அறிவியல் களஞ்சியம் :

அமெரிக்காவின் 'நாசா', ஐரோப்பிய விண்வெளி மையம் இணைந்து சமீபத்தில் 'சென்டினல் - 6பி' செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது கடல்நீர்மட்ட உயர்வை கண்காணித்தல், கடல் வெப்பநிலை, புயல் கண்காணிப்பு, கட்டமைப்புகளை பாதுகாத்தல், கடலோர சமூக திட்டமிடலுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வழங்கும் தகவலால் இந்திய கடலோர மக்களும் பயனடைவர் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக சாரசரி கடல்நீர்மட்ட உயர்வு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும்.


நீதிக்கதை

துணிவு மிக்க சிறுவன்

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடக மேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடக மேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடக மேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது.

விஷயம் இதுதான் நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடக மேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.

அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது. மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! என்று அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீசாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீசாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூறினார்கள்.

பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்து கொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.



இன்றைய செய்திகள்

23.12.2025

⭐கிறிஸ்துமஸ் பண்டிகை -அரையாண்டு விடுமுறை: வெளியூர்களுக்கு 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

⭐ குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் அடுத்த
2 மாதங்களில் 74 ஆயிரம் புதிய வீடுகள் பயனாளிகளிடம் தமிழக அரசு ஒப்படைக்கவுள்ளது.

⭐இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள்- 48 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீர்ர் ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை ஜேக்கப் கைப்பற்றி உள்ளார்.


Today's Headlines

⭐Christmas Festival - Half-year vacation: 800 special buses to operate for outlying areas

⭐ With the aim of creating a slum-free Tamil Nadu, the Tamil Nadu government will hand over 74,000 new houses to beneficiaries in the next 2 months through the Kalaignin Kanavu Illam project.

⭐100% duty exemption on goods exported from India. Taxes on goods exported from New Zealand to India will be reduced by up to 95%.

*SPORTS NEWS*

🏀Most wickets in a year - New Zealand batsman Jacob has broken a 48-year-old record, taking a total of 81 wickets across all three formats of cricket.
Jacob has taken 23 wickets in the Test series against the West Indies.



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பா.ம.க. தார்மீக ஆதரவு

 அரசு ஊழியர்களின் காலவரையற்ற  வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பா.ம.க. தார்மீக ஆதரவு - அன்புமணி ராமதாஸ்  பேச்சு என்ற பெயரில் அரசு ஊழியர்களை மீண...