கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இ-பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இ-பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – இன்று (7.6.2021) முதல் அமல்...

 தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.


இ-பதிவு புதிய வசதி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.


இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில் சில தளர்வுகளை அறிவித்து ஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இ-பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.


அதில் உடனடியாக சென்று பதிவு செய்வதன் மூலமாக அவசர தேவைகளுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி நபர், குழு என மாவட்டங்களுக்கு இடையே செல்லுவோர் பதிவு செய்வதன் மூலமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பு இன்றிலிந்து இ-பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.





தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு தொடர்பு எண் வெளியீடு : தமிழக அரசு தகவல்...

 


தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டணமில்லாமல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இ- பதிவு இன்று தொடக்கம்: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்...





இ- பதிவு மற்றும் இ- பாஸ் முறைக்கான ஆன்லைன் பதிவு, இன்று முதல் தொடங்க உள்ளது. இதை இணையதளத்தில் எப்படி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்.



 

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியேவும் செல்ல, இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் மூலமாக இ- பாஸ் ( மாநிலங்களிலிருந்து, வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவதற்கு), இ- பதிவு முறைக்கு விண்ணப்பிக்கலாம்.



முதலில், https://eregister.tnega.org/#/user/pass என்ற இணயதளத்திற்கு செல்லவும்.



நீங்கள் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய நினைத்தால், மற்றவை/ others என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.



இதைத்தொடர்ந்து மொபைல் எண் மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பதிவு செய்யவும்.



உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி ( otp) வரும்.



சாலை வழியாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது விமானம்/ அல்லது ரயில் மார்கமாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.



சாலை வழியாக பயணம் செய்ய நினைத்தால், பின்வரும் ஆவணங்களின் தேவை அவசியம்.


பயணிப்பதற்கான காரணம் குறிப்பிட வேண்டும்.


மருத்துவக் காரணம்/


திருமணம்/


இறப்பு/ முதியோர் பராமரிப்பு


இதில் ஏதேனும் ஒரு காரணத்தை பதிவு செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட காரணங்களுக்கான சான்றைப் பதிவேற்ற வேண்டும்.


அடையாள அட்டை


குடும்ப அட்டை,

ஆதார் கார்ட், பான் கார்ட்,

ஓட்டுநர் உரிமம்


இவற்றில் ஏதேனும் ஒன்றின் அத்தாட்சியை பதிவு செய்ய வேண்டும்.


மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள எண்ணை தனியாகக் குறிப்பிட வேண்டும்.


பயணிக்கும் வாகனம் எது என்பதை, அதாவது


கார்,

பைக்,

வாடகை டாக்ஸி


இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும். அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.


எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.


இது முதல் படிநிலையே.


அடுத்த படிநிலையில் எங்கிருந்து நீங்கள் புறப்படுகிறீர்களோ அந்த மாநிலம், மாவட்டம் , தாலூகா, வீட்டின் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அதுபோல் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்டம், தாலூகா, வீட்டின் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். 


இதைத் தொடர்ந்து மூன்றாவது படிநிலையில் பயணிகளின் பெயர், ஓட்டுநரின் பெயர், ஓட்டுநரின் கைப்பேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும். இத்துடன் இ- பதிவு முறை நிறைவடைகிறது.


>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழகத்தில் இன்று முதல் "இ - பதிவு" முறை கட்டாயம்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி

தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி பெங்களூரு: Ok Credit என்ற நிற...