உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை...
Collegium recommends appointment of 3 new judges to High Court...
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.
நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம்.
கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 3 பேருக்கு பதவி உயர்வு; 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் காலியிடங்கள் எண்ணிக்கை 10ஆக குறையும்.
மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூன்று பேரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன் மற்றும் அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆக இருக்கும் நிலையில், தற்போது 62 நீதிபதிகள் உள்ளனர். இதனிடையே , சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி மற்றும் கே.ஜி.திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.