கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Job satisfaction - Today's Short Story

 

செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை 


Job satisfaction - Today's Short Story 


இன்று ஒரு சிறு கதை


செய்யும் தொழில் மனத்திருப்தி

..................................


ஒரு கோவிலில் கல் தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


ஒரு கல் தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. 


எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர்,


“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.


கல் தச்சர் சொன்னார்,


“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..


வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுச் சொன்னார் -


எந்தச் சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா..


தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல் தச்சர் சொன்னார்


“அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது. ”என்றார்.

இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” 

- வழிப்போக்கர்.


“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,

ஐம்பதடி உயரத்தில் இருக்கப் போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்ன என்றார் வழிப்போக்கர்.


தனது வேலையைச் சற்று நிறுத்தி விட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் 

கல்தச்சர் சொன்னார்,


“யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள்.


அய்யா,வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.


எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.


சேதம் சிறியதா? , பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை. செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்தக் கல் தச்சர்..


ஆம்,நண்பர்களே.,


உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை.


அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.


அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட, தன் மனத்திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்

மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார் ✍️ வத்தலகுண்டு அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், தன்...