கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர்

 





ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு 


ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாடு 


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, ”தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்தியதற்காகவும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு மற்றும் குடும்ப ஓய்வூதியம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டதற்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு  ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது.


சென்னை நந்தனத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "உங்களின் கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டோம்.


#Dravidian_Model

#வெல்வோம்_ஒன்றாக




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கு...