12.03.2025 - புதன் - மாசிமகம் திருவிழா - தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை
12.03.2025 - Wednesday - Masimagam Festival - Local Holiday in Thanjavur District
இவ்விடுமுறை ஈடு செய்ய எதிர்வரும் 29.03.2025 - சனி அன்று வேலை நாள்
12.03.2025 - புதன் - மாசிமகம் திருவிழா - தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை
12.03.2025 - Wednesday - Masimagam Festival - Local Holiday in Thanjavur District
இவ்விடுமுறை ஈடு செய்ய எதிர்வரும் 29.03.2025 - சனி அன்று வேலை நாள்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Local holiday declared for Pudukkottai district on March 10.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வரும் 10ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருணா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும், சனிக்கிழமையை பணி நாளாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிநாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு டிசம்பர் 12 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாகை மாவட்டம் நாகூரில் நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் அமீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு 468-வது ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி(வியாழக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 21-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரியில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை.
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிசம்பர் 3 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு
விடுமுறைக்கு ஈடாக 14.12.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15-11-2024 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Local Holiday on 15-11-2024 for Mayiladuthurai District - District Collector
நவம்பர் 15ல் மயிலாடுதுறைக்கு உள்ளூர் விடுமுறை
காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.
விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 23ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது- மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி.
13-11-2024 அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்
Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector
முத்துப்பேட்டை கந்தூரி 13-11-2024 அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அந்த விடுமுறை ஈடு செய்திட 07-12-2024 வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆக.23ல் தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21 வேலைநாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர்...
தென்காசி மாவட்டத்திற்கு சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சங்கரன் கோவிலில் அமைந்துள்ள "சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 23ல் தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நாளில் அரசு தேர்வுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 21 வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை (12-07-2024) குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும்.
மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மார்ச் 23ஆம் தேதி அன்று இதனை ஈடு செய்யும் விதமாக பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு - திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...
ஜனவரி 30ஆம் தேதி தஞ்சையில் உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 10ஆம் தேதி வேலைநாள் - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு...
>>> மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் 16-11-2023 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது (Mayiladuthurai district announced that a local holiday will be observed on 16-11-2023 on the occasion of Kadaimuka Theerthavari festival - 25th November has been declared as working day to cover the holiday)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Local Holiday (8-9-2022) declared for Thiruvonam Festival in Chennai, Tirupur, Coimbatore, Kanyakumari, Nilgiri,
ஓணம் பண்டிகைக்கு 5 மாவட்டங்களில் 08-09-2022 அன்று விடுமுறை அறிவிப்பு (Local Holiday on 08-09-2022 in 5 districts for Onam festival) ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்...
06.07.2022 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு - திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா - (Thiruvatar Adhikesava Perumal Temple Kumbabhisheka Festival - 06.07.2022 (Wednesday) Tamil Nadu Government declared local holiday for Kanyakumari District - G.O. Released) அரசாணை (வாலாயம்) எண்: 2683, நாள்: 04-07-2022...
பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து 17-01- 2022 திங்கட்கிழமை அரசு உள்ளூர் விடுமுறை. அதற்கு பதிலாக 29-01-2022 அன்று பணி நாளாக இருக்கும்.
பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியீடு...
கார்த்திகை தீபத் திருநாள் - திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் முருகேஷ்...
ஆடித் திங்கள் 18ஆம் நாளான 03-08-2021 அன்று (தீரன் சின்னமலை நினைவு நாள்) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு...
ஆணை :
ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 – ம் நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால் , அரசாணையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது.
இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 ( under Negotiable Instruments Act 1881 ) -ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 14.08.2021 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette போளூர், செ...