ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி / ஐடிஐ / டிப்ளமோ / கல்லூரி விடுதி சேர்க்கை - செய்தி வெளியீடு
Adi Dravidar and Tribal Welfare Department School / ITI / Diploma / College Hostel Admission - Press Release
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி / ஐடிஐ / டிப்ளமோ / கல்லூரி விடுதி சேர்க்கை - செய்தி வெளியீடு
Adi Dravidar and Tribal Welfare Department School / ITI / Diploma / College Hostel Admission - Press Release
2027ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav
சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2025 5:30PM by PIB Chennai
சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.
***
(Release ID: 2133845)
AD/SM/SMB/AG/DL
உள்துறை அமைச்சகம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 சாதிகளின் கணக்கெடுப்புடன் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்
மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச், 2027 முதல் நாள் 00:00 மணியாக இருக்கும்
லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, குறிப்பு தேதி அக்டோபர், 2026 முதல் நாள் 00.00 மணியாக இருக்கும்
பதிவிடப்பட்டது: 04 ஜூன் 2025 மாலை 5:30 மணி PIB டெல்லி
சாதிகளின் கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027ஐ இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச் 2027 முதல் நாள் காலை 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகளுக்கு, குறிப்பு தேதி அக்டோபர் 2026 முதல் நாள் காலை 00.00 மணியாக இருக்கும். மேற்கண்ட குறிப்பு தேதிகளுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நோக்கத்திற்கான அறிவிப்பு, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன் விதியின்படி, 16.06.2025 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தற்காலிகமாக வெளியிடப்படும்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது. இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது, அதாவது
i) கட்டம் I- வீட்டுப் பட்டியல் (HLO) (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2010 வரை) மற்றும்
(ii) கட்டம் II - மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) (பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28, 2011 வரை) குறிப்பு தேதியுடன் - மார்ச் 2011 முதல் நாள் 00:00 மணி வரை, ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளைத் தவிர, 2010 செப்டம்பர் 11 முதல் 30, 2010 வரை நடத்தப்பட்டன, குறிப்பு தேதி அக்டோபர் 2010 முதல் நாள் 00.00 மணி ஆகும்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக இதேபோன்ற முறையில் நடத்த முன்மொழியப்பட்டது, கட்டம் I ஏப்ரல்-செப்டம்பர் 2020 மற்றும் இரண்டாம் கட்டம் பிப்ரவரியில் 2021. 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன, மேலும் ஏப்ரல் 1, 2020 முதல் சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் களப்பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.
RK/VV/RR/PS (வெளியீட்டு ஐடி:2133845)
Ministry of Home Affairs
Azadi Ke Amrit Mahotsav
Population Census-2027 to be conducted in two phases along with enumeration of castes
The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027
For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and
Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026
Posted On: 04 JUN 2025 5:30PM by PIB Delhi
It has been decided to conduct Population Census-2027 in two phases along with enumeration of castes. The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027. For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026. The notification for intent of conducting Population Census with the above reference dates will be published in the official gazette tentatively on 16.06.2025, as per provision of section 3 of Census Act 1948.
The Census of India is conducted under the provisions of the Census Act, 1948 and the Census Rules, 1990. The last Census of India was conducted in 2011 in two phases,namely i) Phase I- House Listing (HLO) (1 April to 30 September 2010) and (i) Phase ⅡI - Population Enumeration (PE) (09 February to 28 February 2011) with reference date - 00:00 hours of the first day of March 2011, except for snow-bound non-synchronous areas of Jammu and Kashmir, Uttarakhand and Himachal Pradesh for which it was conducted during 11 to 30 September 2010 with reference date as 00.00 hours of the first day of October 2010.
Census 2021 was also proposed to be conducted in two phases in a similar manner with phase I during April-September 2020 and second phase in February 2021. All the preparations for the first phase of the Census to be conducted in 2021 were completed and field work was scheduled to begin in some States/UTs from April 1, 2020.However, due to the outbreak of COVID-19 pandemic across the country, the census work was postponed.
RK/VV/RR/PS
(Release ID:2133845)
Read this release in: Hindi
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS பத்திரிகை செய்திக் குறிப்பு Press Release
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு நாளை 26-05-2025 முதல் விண்ணப்பிக்கலாம்
>>> பத்திரிகை செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY
PRESS MESSAGE
Tamil Nadu Veterinary and Animal Sciences University invites applications for undergraduate courses (BVSc & AH / B.Tech) from the candidates of Tamil Nadu State through online (https://adm.tanuvas.ac.in) from 26.05.2025,10.00 AM to 20.06.2025, 5.00 PM.
For online applications, guidelines, number of seats reserved for NRIs (Non-Resident Indians) / Wards of NRIs / NRI Sponsored and Foreign National Quota, please visit https://adm.tanuvas.ac.in.
Chairman, Admission Committee (UG),
TANUVAS, Chennai-600 051.
https://chat.whatsapp.com/DDqsauWKkln1IUdqOq9BnA
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்
கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கடந்த 1903-ல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது.
பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
மேற்கண்ட பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.
பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் போதும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நீட் மதிப்பெண்கள் தேவையில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடத்தில் சேர்வதற்கு, நீட் மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
எம்பிபிஎஸ் போன்றே, இந்த படிப்பும் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சியை உள்ளடக்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ குழுமம் மூலமாக நிரப்பப்படுகிறது. எஞ்சிய இடங்கள், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் கிடைக்கும்
பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என 8 இடங்கள் கிடைக்கும்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கால்நடை மருத்துவம் அல்லது கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகள் படித்தால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி, கோவைக்கு தலா 30 வீரர்களை கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு
சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு
Civil Defence Exercise and Rehersal - Tamil Nadu Disaster Management Authority - Press Release
மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு
+2 Exam Results on May 8 - Directorate of Government Examinations Press Release
மே 9க்குப் பதில், மே 8இல் தேர்வு முடிவுகள்
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
+2 RESULTS
12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
மே 09ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.
Speech by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin in the Tamil Nadu Legislative Assembly, issuing various notifications under Rule 110 for the welfare of Government Employees, Teachers and Pensioners - Press Release
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை - செய்தி வெளியீடு
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்வு
மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்
அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம்
- முதல்வர் ஸ்டாலின்
DIPR - TNLA No - 38 - Hon'ble CM Speech - 110 Statement - Govt Servants welfare - Date 28.04.2025
செய்தி வெளியீடு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்கீழ் வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
*முதல் அறிவிப்பு; கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இரண்டாவது அறிவிப்பு: 01-01-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியினை
ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்கிட அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.
மூன்றாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய
குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கெனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
நான்காவது அறிவிப்பு; அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி
பயில்வதில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்தக் கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
ஐந்தாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமது
பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
ஆறாவது அறிவிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம
பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால் சுமார் நான்கு இலட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.
ஏழாவது அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச்
சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
எட்டாவது அறிவிப்பு: அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
ஒன்பதாவது அறிவிப்பு; திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பை 01.07.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation period) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால். தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது.
>>> முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்
செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜியின் துறைகளில் மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கீடு
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு, செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கீடு
பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு
இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS EXAMINATION) தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து செய்திக்குறிப்பு வெளியீடு
NMMS Exam February 2025 Results - Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
NMMS 2024-2025 Individual Students Marks Download Link
1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு - திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு
1 - 5th Std Revised Annual Exam Time Table - DEE Press Release
திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பத்திரிக்கை செய்தி
நாள் : 30-03-2025
தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09-04-2025 முதல் 21-04-2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07-04-2025 முதல் 17-04-2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் - ஏப்ரல் 2ஆம் தேதி வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
March salary for government employees, teachers and pensioners - will be credited on April 2nd - Tamil Nadu Government Press Release
Salary and pension / family pension for approximately 9.30 lakh Tamil Nadu Government Employees / Teachers and 7.05 lakh pensioners / family pensioners for the month of March 2025 will be credited to their bank accounts on April 2, 2025, since April 1 is a holiday for Banks in view of Annual Accounts Closing.
ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்குகள் முடிவடைவதைக் கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், மார்ச் 2025 ஆம் ஆண்டிற்கான சுமார் 9.30 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் ஏப்ரல் 2, 2025 அன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு எண்: 639, நாள் : 22-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கடன் செயலிகள் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை
Police warn of loan app scams
கடன்செயலிகள் மோசடி குறித்த இணையவழி குற்ற தடுப்பு பிரிவு, தலைமையகம், தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை பதிவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ரேபீஸ் நோய்க்கு ARV Anti-Rabies Vaccine தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநரகத்தின் பத்திரிகை செய்தி, நாள் : 16-03-2025
ARV vaccination for rabies - Press release from the Directorate of Public Health and Preventive Medicine, Date: 16-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய்
@@@@@@@@@@@@@@
கடந்த சில நாட்களுக்கு முன், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார் என விசாரணையில் தெரிய வந்தது.
எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ARV (Anti-Rabies Vaccine) எனப்படும் தடுப்பூசியை செலுத்திக கொள்வது அவசியமாகிறது.
ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய் இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகின்றான்.
நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபீஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும். நாய், பூணை ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
நாய்கள் கடிப்பதால் மட்டும் இல்லாமல், நாய் புரண்டினால் உடலில் உள்ள சிறுகாயங்களில் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் பரவும்.
நாய் கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும்.
ரேபீஸ் நோய்க்கு ARV (Anti-Rabies Vaccine) ப்படும் தடுப்பூசிகள் உள் நாய் கடித்தவுடன் 4 ஊசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபீஸ் நோயை 100% வரவிடாமல் தடுத்து விடலாம். நாய்கடித்தவுடன் இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.
1) முதல் நாள் - முதல் தவணை
2) 3வது நாள் - இரண்டாவது தவணை
3) 7 வது நாள் - மூன்றாவது தவணை
4) 28 வது நாள் - நான்காவது தவணை
இந்த தடுப்பூசி கைகளில் (Intra Dermal) தோலுக்கு கீழேப் போடப்படுகிறது.
மேலும், நாயின் ஆழமான கடிகளுக்கு ஏற்ப இம்யூனோகுளோபுளின் மருந்தும் அளிக்கப்படுகிறது.
இந்த ARV மற்றும் இம்யூலோகுளோபுளின் தடுப்பூசிகள் அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் (24X7) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொது மக்கள் வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணியிடங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு, நாள் : 13-03-2025
Job Notification - Female Nurse Posts in Saudi Arabian Hospitals - Tamil Nadu Government Press Release, Date: 13-03-2025
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு - விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் - ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
Monthly salary of ₹2 lakh - Nurse (Male / Female) job in Germany - Free German language training will be provided - Tamil Nadu Government Press Release
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம் : தமிழ்நாடு அரசு
ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குள்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கு B1 , B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் - அலைபேசிக்கு தடை - ஒழுங்கீனச் செயல்பாடுகளுக்குத் தண்டனை - செய்தி வெளியீடு எண்: 476, நாள் : 01-03-2025
Class 12 Public Exams Start Tomorrow - Cell Phone Banned - Punishment for Misbehave Activities - Press Release No: 476, Dated : 01-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (03.03.2025) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.
நடப்பாண்டு + 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத உள்ளனர்.
3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் - பள்ளிக்கல்வித்துறை.
+2 பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை
பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணை - செய்தி வெளியீடு எண். 425, நாள் : 23-02-2025
In order to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them, the Chief Minister constituted a committee consisting of his ministers and ordered
Press Release No. 425, Dated : 23-02-2025
* பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.
* இந்தக் குழுவில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ வ வேலு , மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
* அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
We are also studying the changes brought by the central government in the pension scheme which may have a major impact on the financial condition of the state governments - Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin.
மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதலமைச்சர் உரை - பக்கம் 4, பத்தி 2ல்
90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்
We have fulfilled 90% of our promises - Chief Minister Mr. M.K.Stalin
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதேபோல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று, தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தொடக்கக்கல்வித்துறை - 2025-2026ஆம் கல்வியாண்டு விடுமுறை நாட்கள் விவரம் DEE - List of Holidays 2025-2026 Department of Elementary Education -...