கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்

கரூர் துயர சம்பவத்தில் நடந்தது என்ன? - ADGP விளக்கம்


 விஜய் பேசும்போது மின்சாரம் தடை செய்யப்படவில்லை : மின்வாரிய அதிகாரி ராஜலட்சுமி பேட்டி 



* கரூரில் தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான பகுதி, ஒரு பக்கம் பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது 


* 2வதாக அனுமதி கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம் 


* 3வதாக அனுமதி அளிக்கப்பட்ட வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் ஏற்கனவே அதிமுக பிரச்சாரம் செய்த இடம் என்பதால் பரிந்துரைத்தோம் 


* போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் வேலுச்சாமிபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் தவெகவினர் அனுமதி பெற்றனர் 


* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் கல்வீச்சு ஏதும் நடைபெறவில்லை 


* நேற்று, விஜய் வந்தபோது 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 



* அதற்கு முந்தைய நாள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது 137 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் 


* கூட்டம் அதிகம் உள்ளதால் 50 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்தமாறு காவல்துறை அறிவுறுத்தலுக்கு விஜய் தரப்பு மறுப்பு, 


* குறிப்பிட்ட இடத்தில்தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என விஜய் திட்டவட்டம் - சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் 


* தவெகவினர் அமைத்திருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்துவிட்டது 


* விஜய் வருவதற்கு முன்பு தொண்டர்கள் மரம், மின்கம்பம் மீது ஏறி இருந்ததால் அவர்களை கீழே இறக்கவதற்காக சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது 


* விஜய் பேசும்போதும் மின்சாரம் தடை செய்யப்படவில்லை - மின்துறை விளக்கம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...