கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் : CBI விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் : CBI விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு 


நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் 




கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.


காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் சில த.வெ.க தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இந்நிலையில் கரூர் விஜய் பிரசார கூட்டநெரிசல் மரணம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் மீதும் இன்று (அக்டோபர் 3) உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை தொடங்கி இருக்கிறது.


இதில் கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து அந்த மனுவை முடித்து வைத்திருக்கின்றனர்.


இழப்பீடு கோரிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.


விஜய் மற்றும் அரசுத்தரப்பு 2 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருக்கின்றனர்.


இது ஒரு துயர சம்பவம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்திருக்கிறது.


என்.ஆனந்த், நிர்மல்குமார் மீதான முன் ஜாமீன் மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மதியத்துக்கு மேல் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - கணக்கு தலைப்பு AD இல் இருந்து ACக்கு மாற்றம் செய்யும் முறை

  🏹 நண்பர்களே தொடக்க கல்வித்துறையில் AD இல் இருந்து AC கணக்கு தலைப்பு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் சென்னையில் HOD இல் சொல்லி தான் மாற்...