உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு
Teacher Eligibility Test required for promotion case in Supreme Court adjourned to 03.04.2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு
Teacher Eligibility Test required for promotion case in Supreme Court adjourned to 03.04.2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
01.01.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (2%), ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள், நாள் : 22-03-2025
Details of Ministerial employees who have passed the Teacher Eligibility Test for promotion to Graduate Teacher (2%) as on 01.01.2025 - Proceedings of the Joint Director of School Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு TET வழக்கு 27.03.2025க்கு ஒத்திவைப்பு
Supreme Court DIARY NO. - 37105/2023
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - ஆணை வெளியீடு - புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் செயல்முறைகள், நாள்: 24-02-2025
Promotion only for those who have completed the Teacher Eligibility Test to the post of Head Master - Order issued - Proceedings of Pudukkottai District Adi Dravidar and Tribal Welfare Officer, Date: 24-02-2025
ஆதிதிராவிடர் நலத்துறையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியம் என்பதை மேற்கோள்காட்டி டெட் முடித்தவர்களுக்கு மட்டுமே தற்காலிக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு TET அவசியம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது - தீர்ப்பு எப்பொழுது?
அதாவது TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி, வரும் திங்கட்கிழமைக்குள் (03-03-2025) தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது.. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்... அநேகமாக ஏப்ரல் 10க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்..
TET Promotion/Appointment Related Supreme Court Case
- Pending Final Hearing Continuation
Feb-6
Feb-13
Feb-20
Feb-27
( இன்றும் தீர்ப்பு இல்லை)
Next Upcoming
March-6 ( Thursday) அன்று விசாரணை தொடரும்...,
The hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025 (Monday), as directed by the judges.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு - 03.03.2025 அன்று நடைபெறும் விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்யும் பொருட்டு, 3 படிவங்களில் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 27-02-2025...
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ்
An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வணக்கம்,
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கின்ற நிறைவான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும் என்பதை அறிவீர்கள்.
இந்நிலையில், ஆசிரியர் பெருமக்களின் நலனை முன்னிறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சட்டரீதியிலான முயற்சிகளின் பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தீர்வின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , நன்றி தெரிவிக்கவும் நாளை (20.02.2025) சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.
சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாமல்,
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும்,
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழும் அண்ணன் தளபதி அவர்களின் திராவிட மாடல் அரசிற்கு என்றும் தோள் கொடுப்போம்.
என்றும் மக்கள் பணியில்,
இனிகோ இருதயராஜ், எம்எல்ஏ.,
TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு
TAMILNADU State Eligibility Test (TN-SET)
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பேராசிரியர் தகுதி தேர்வு (TNSET) நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
TamilNadu government nominated Teachers Recruitment Board (TRB) as the nodal agency for conducting the State Eligibility Test (SET) for three years from 2024-25 to 2026-27.
>>> Click Here to Download G.O. (D) No. 278, Dated : 17-12-2024...
பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.
பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.
மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.
அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது. எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு 13.09.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...
ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023...
>>> சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 19.08.2024
CORAM
THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH
W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023..
7. In the facts of the present case, there is no scope for interfering with the action taken by the respondents in transferring BRTEs to the post of B.T. Assistants for those who were all recruited between 2002 to 2010 and were selected to the respective post before 23.08.2010. The problem arises only in those cases where such appointment/promotion/transfer has been made after 29.07.2011. The learned Government Advocate appearing on behalf of the respondents relied upon the adhoc arrangement that was made under G.O.Ms.52 dated 30.03.2006. This adhoc arrangement that was made will not override the judgment of the Division Bench which categorically holds that any appointment made to the post of B.T.Assistant after 29.07.2011, whether by direct recruitment or promotion or by way of transfer, must necessarily pass TET. In view of the same, when a BRTE is interchanged and transferred as a B.T.Assistant after 29.07.2011, to hold the position of the B.T. Assistant, the concerned candidate must have passed TET.
8. Even though the post of BRTE and B.T.Assistant are interchangeable, it is not as if the same person will be holding a dual post. At any given point of time, the concerned person may be holding the post as BRTE or as B.T.Assistant. Therefore, when the person is adorning the role of BRTE and is intended to be changed as B.T.Assistant, it involves a transfer to the post of B.T.Assistant. Once that happens, automatically the mandate prescribed by the Division Bench will come into operation and for all those transfers made after 29.07.2011, for holding the post of B.T.Assistant, TET becomes mandatory.
9. The above clarification will suffice and the same is to be kept in mind by the official respondents when they undertake the exercise of interchangeability between BRTEs and B.T.Assistants.
10. This Writ Petition is disposed of with the above observation. There shall be no order as to costs. Consequently, the connected miscellaneous petitions are closed.
19.08.2024
10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 10.07.2024
CORAM :
THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE
and
THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ
Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023
and
Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023
>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்
ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...
410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...
10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர் Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில் 410 பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...
23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET - Teachers Eligibility Test இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு Writ Petition No.12410 of 2024...
Telangana High Court Judgment Order to consider promotion without TET for Teachers appointed as per NCTE Norms 2001 prior to 23.8.2010...
>>> தீர்ப்பு நகல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஜூன் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான `செட் தேர்வு’ ரத்து - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு...
06.06.2024.
PRESS RELEASE
It is informed that the State Level Eligibility Test (SET)examination Scheduled on 07th and 08th June 2024 is postponed due to technical reasons. The revised date will be intimated later.
REGISTRAR
TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி 627 012
மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்)-2024
அறிவிப்பு எண்.01/2024
திருத்தம்
அரசாணை (நிலை) எண்.5 , உயர்கல்வித் (H1) துறை, நாள்: 11.01.2021 & அரசாணை (நிலை) எண்.163 உயர்கல்வித் (H1) துறை, நாள்: 27.08.2021 இன் படி, 5% மதிப்பெண்கள் தளர்வு அனுமதிக்கப்படும். (55% லிருந்து 50% மதிப்பெண்கள்) பட்டியல் சாதி (SC)/பட்டியலிடப்பட்ட சாதி (A)/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC)/ சீர்மரபினர் சமூகங்கள் (DNC) ஆகியவற்றைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதுநிலை மட்டத்தில்) மற்றும் மாற்றுத் திறனாளிகள்.
TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.05.2024 அன்று மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு: www.musuniv.ac.in
பதிவாளர்/ உறுப்பினர் செயலாளர்
TNSET 2024
பதிவாளர்
MANONMANIAM SUNDARANAR UNIVERSITY
Abishekapatti, Tirunelveli 627 012
STATE LEVEL ELIGIBILITY TEST (SET)-2024
Notification No.01/2024
CORRIGENDUM
As per the G.O. (Ms) No.5 Higher Education (H1) Department dated 11.01.2021 & G.O.(Ms) No.163 Higher Education (H1) Department dated 27.08.2021, a relaxation of 5 % marks shall be allowed( From 55% to 50%of the Marks) at the Master's level for the candidates belonging to Scheduled caste (SC)/Scheduled Caste (A)/ Scheduled Tribe/Backward Class (BC)/Most Backward Class (MBC)/ Denotified Communities (DNC)and Differently Abled. Last date for online submission of application for TNSET Exam 2024 is extended up to 5.00 p.m. on 15.05.2024.
For details: www.musuniv.ac.in
Registrar/Member Secretary
TNSET 2024
REGISTRAR
29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் Judgment...
W.P.Nos.693 & 695 of 2024
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 11.01.2024
29.07.2011க்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் ஆண்டு ஊதிய உயர்வு (increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive) தேர்வுநிலை ஊதிய உயர்வு (Selection Grade) ஆகியவை உடனே வழங்கிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)...
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET) Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...
இன்று (20.11.2023) வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை
அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
TET பதவி உயர்வு வழக்கு
இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது
வழக்கு dismiss செய்யப்படவில்லை
இடைக்கால தடை வழங்கப்படவில்லை
1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது
இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.
*AIFETO..20.11.2023*
*உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TETவழக்கின் விசாரணைத் தொகுப்பு...*
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*
📕📗📘📙📕📗📘📙📕📗📘📙
*நாம் புலனப் பதிவில் ஏற்கனவே தெரிவித்தபடி உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET சம்பந்தமான வழக்கு இன்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அரசு வழக்கறிஞர்களும் அவர்களுடன் கூடுதல் வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இவ்வழக்கினை இரு அமர்வு நீதியரசர்கள் ஹரிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் விசாரித்தார்கள்.*
*அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்கி அவர்களுடைய தலைமையில் மூத்த வழக்கறிஞர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர் கவிதா ராமேஸ்வர் வாதாடினார்கள்.*
*தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க இயலாது, வழக்கினை முழுவதும் விசாரணை செய்து தீர்ப்பினை வழங்குவதாக விசாரணையின் போது தெரிவித்தார்கள்.*
*தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு பெற பணி மூப்பு அடிப்படையில்தான் என்பதை கொள்கை முடிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.... என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.*
*இந்த வழக்கில் தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் (டிட்டோஜாக்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் இணைத்துக் கொள்ள திறமையான மூத்த வழக்கறிஞரை கொண்டு மனு செய்ய திடமிட்டு இருக்கிறோம்.*
*எப்படி இருந்தாலும் பதவி உயர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு அளிக்க முடியுமென்ற அரசின் கொள்கை முடிவு நமக்கு சாதகமான தீர்ப்பினைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.*
*மற்றபடி எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் தான் வழக்கிற்கு வலு சேர்க்கும்!.. என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்!..*
*அடுத்த வழக்குவிசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.*
*மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுள்ள தகவல் தொகுப்பாகும்.*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*
*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*
*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*
*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)...
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என்னும் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது...
>>> Diary No 43850/2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...
DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023
2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்...
2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்...
2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்...
2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்...
2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்...
2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.
7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette போளூர், செ...