கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி செல்லா மாணவர்களைக்(Out of School Children) கணக்கெடுக்கும் பணி: பிரத்யேகச் செயலி(App) மூலம் தொடக்கம்...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி செல்லா மாணவர்களைக் கண்டறியும் வகையில் பிரத்யேக ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுக்கும் பணி மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது.
கோவிட் -19 பெருந்தொற்று காரணமாகக் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு, கூடுதல் கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இன்று முதல் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆலோசனையின்படி இன்று முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் 2,280-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பள்ளி செல்லா மாணவர்கள் பற்றிக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ’சர்வே ஆப்’ மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பள்ளி செல்லா மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க திட்டம்...
பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்? ஜூன் 30க்குள் கணக்கெடுக்க கிராம அளவில் குழு அமைக்க திட்டம்...
பள்ளிக்கு மீண்டும் வராத மாணவர் நிலை என்ன ஆகும்?
கொரோனா ஊரடங்கிற்கு பின், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 70 சதவீத மாணவர்கள் மட்டுமே, பள்ளிக்கு வரத் துவங்கி உள்ளனர்.
இதனால், படிப்பை தொடர முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனரா என, கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பள்ளிகள், 19ம் தேதி முதல் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளன. இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சி பள்ளிகளை பொருத்தவரையில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன.இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 70 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். பள்ளிக்கு வராத மற்ற மாணவர்களின் நிலை குறித்து, கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி துவங்க உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். சராசரியாக ஓராண்டு, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில மாணவர்கள், குடும்ப பொருளாதாரம் காரணமாக, வேலைக்கு சென்றிருக்கலாம். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.சொந்த ஊர், உறவினர்களின் ஊர்களுக்கு சென்றவர்கள், திரும்பி வர சில நாட்கள் தேவைப்படும்.
அவர்கள், மீண்டும் பள்ளியில் சேர்ந்து விடுவர். ஆனால், வேலைக்கு சென்ற மாணவர்கள், பள்ளிப்படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களை கணக்கெடுத்து, தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், மீண்டும் பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாணவர்களின் குடும்ப பின்னணிக்கு ஏற்ப, கல்வி உதவி தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
DEE - Holidays 2025-2026 Academic Year
தொடக்கக்கல்வித்துறை - 2025-2026ஆம் கல்வியாண்டு விடுமுறை நாட்கள் விவரம் DEE - List of Holidays 2025-2026 Department of Elementary Education -...
