கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Census லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement



 2027ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உள்துறை அமைச்சகம்

azadi ka amrit mahotsav

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2025 5:30PM by PIB Chennai

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.  முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.


***


(Release ID: 2133845)


AD/SM/SMB/AG/DL



உள்துறை அமைச்சகம் 

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 சாதிகளின் கணக்கெடுப்புடன் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்  

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச், 2027 முதல் நாள் 00:00 மணியாக இருக்கும் 

லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, குறிப்பு தேதி அக்டோபர், 2026 முதல் நாள் 00.00 மணியாக இருக்கும் 

பதிவிடப்பட்டது: 04 ஜூன் 2025 மாலை 5:30 மணி PIB டெல்லி 

சாதிகளின் கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027ஐ இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச் 2027 முதல் நாள் காலை 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகளுக்கு, குறிப்பு தேதி அக்டோபர் 2026 முதல் நாள் காலை 00.00 மணியாக இருக்கும். மேற்கண்ட குறிப்பு தேதிகளுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நோக்கத்திற்கான அறிவிப்பு, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன் விதியின்படி, 16.06.2025 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தற்காலிகமாக வெளியிடப்படும்.


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது. இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது, அதாவது 

i) கட்டம் I- வீட்டுப் பட்டியல் (HLO) (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2010 வரை) மற்றும் 

(ii) கட்டம் II - மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) (பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28, 2011 வரை) குறிப்பு தேதியுடன் - மார்ச் 2011 முதல் நாள் 00:00 மணி வரை, ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளைத் தவிர, 2010 செப்டம்பர் 11 முதல் 30, 2010 வரை நடத்தப்பட்டன, குறிப்பு தேதி அக்டோபர் 2010 முதல் நாள் 00.00 மணி ஆகும். 


2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக இதேபோன்ற முறையில் நடத்த முன்மொழியப்பட்டது, கட்டம் I ஏப்ரல்-செப்டம்பர் 2020 மற்றும் இரண்டாம் கட்டம் பிப்ரவரியில் 2021. 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன, மேலும் ஏப்ரல் 1, 2020 முதல் சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் களப்பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது. 

RK/VV/RR/PS (வெளியீட்டு ஐடி:2133845) 



Ministry of Home Affairs

Azadi Ke Amrit Mahotsav

Population Census-2027 to be conducted in two phases along with enumeration of castes

The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027

For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and

Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026

Posted On: 04 JUN 2025 5:30PM by PIB Delhi

It has been decided to conduct Population Census-2027 in two phases along with enumeration of castes. The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027. For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026. The notification for intent of conducting Population Census with the above reference dates will be published in the official gazette tentatively on 16.06.2025, as per provision of section 3 of Census Act 1948.

The Census of India is conducted under the provisions of the Census Act, 1948 and the Census Rules, 1990. The last Census of India was conducted in 2011 in two phases,namely i) Phase I- House Listing (HLO) (1 April to 30 September 2010) and (i) Phase ⅡI - Population Enumeration (PE) (09 February to 28 February 2011) with reference date - 00:00 hours of the first day of March 2011, except for snow-bound non-synchronous areas of Jammu and Kashmir, Uttarakhand and Himachal Pradesh for which it was conducted during 11 to 30 September 2010 with reference date as 00.00 hours of the first day of October 2010.

Census 2021 was also proposed to be conducted in two phases in a similar manner with phase I during April-September 2020 and second phase in February 2021. All the preparations for the first phase of the Census to be conducted in 2021 were completed and field work was scheduled to begin in some States/UTs from April 1, 2020.However, due to the outbreak of COVID-19 pandemic across the country, the census work was postponed.

RK/VV/RR/PS

(Release ID:2133845)

Read this release in: Hindi


மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்...

 


மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) 2021 ஒத்திவைப்பு – மத்திய அமைச்சர் தகவல்...


2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி வாரி விவரங்கள் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர் பாலு கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


மத்திய அமைச்சர் பதில்:

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது 16-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். பொதுவாக இதன் முதற்கட்ட பணிகள் ஏப்ரல் 2020 முதல் துவங்கி செப்டம்பர் 2020 முடிய நடைபெறும். இரண்டாம் கட்டப் பணி மற்றும் இறுதி கட்டப் பணிகள் 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 9 முதல் 28 முடிய நடைபெறும். முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணிகளும் சேர்த்து மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், தொலைபேசி எண் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படும்.


இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிவாரி விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என, மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகளில் தொடரும் சட்ட சிக்கல்களை சரி செய்ய, மத்திய அரசால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்தார்.


இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். அதில், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, மத்திய அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.


மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும், மக்கள் தொகைக்கேற்ப தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்பு & கல்வி நிறுவனங்களிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இடஒதுக்கீட்டிலும், கணக்கெடுப்புகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் வரும் சட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகள் காண்பதற்கு, மத்திய அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை

  EMIS - Transfer / Retirement ஆன ஆசிரியரின் பெயரை Common pool க்கு அனுப்பும் வழிமுறை  அனைவருக்கும் வணக்கம்,  தங்கள் பள்ளியில் 31.5.2025 அன்...