கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Group II லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Group II லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TNPSC Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

 




TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


TNPSC Group 2 Exam Results Released


TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP 2 RESULT 2025


குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மே 15) வெளியிட்டுள்ளது.


TNPSC Group 2 Result வெளியானது


Link: https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


அதன்படி, கொள்குறி வகையிலான முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டதில், 5,83,467 பேர் தேர்வினை எழுதினர்.


முதல் நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 82 மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.


குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


இந்த நிலையில் குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (மே 15) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ பதவிகளில் 1,936 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.


முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 20,033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஏற்கனவே தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் குருப் 2 நிலையில் 15 பதவிகளில் காலியாக உள்ள 537 இடங்களில் நியமனம் செய்வதற்கான தகுதிப் பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


48 students passed the TNPSC Group 2 preliminary exam trained in Tirupur District Employment Office

 

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர்வில் 48 மாணவர்கள் தேர்ச்சி


48 students passed the TNPSC Group 2 preliminary exam among the students trained in Tirupur District Employment Office



TNPSC - 507 Group 2 பணிடங்கள் மற்றும் 1820 Group 2A பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு - Combined Civil Services Examination - II (Group II and IIA Services)...

 


TNPSC - 507 Group 2 பணிடங்கள் மற்றும் 1820 Group 2A பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு - Combined Civil Services Examination - II (Group II and IIA Services)...


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Advertisement No.687

Notification No.8/2024 Date: 20.06.2024

Combined Civil Services Examination - II (Group II and IIA Services)...



>>> Click Here to Download Notification...


 

குரூப் 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு...

 Group 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு...








குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


 தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அப்போது, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அப்போது, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



 அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது.



முதல்நிலைத் தேர்வையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த பிப்.25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.



 இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்கின்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 24ம் தேதி குரூப் 2/2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6033 ஆக அதிகரிக்கபட்டது



 இந்நிலையில், தற்போது மேலும் 118 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6151 ஆக உள்ளன.     திருத்தியமைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


TNPSC குரூப் 2 மற்றும் 2A காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு...

 


TNPSC குரூப் 2 மற்றும் 2A காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு...


TNPSC GROUP 2/2A EXAM


நகராட்சி ஆணையர் பணியிடங்கள் 30 ஆக உயர்வு..


சார்பதிவாளர் பணியிடங்கள் 26 ஆக உயர்வு.



>>> TNPSC அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

 TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு (TNPSC Group 2 Exam Results will be released on 12 January 2024 - TNPSC Notification)...





ஜனவரி 12-இல் குரூப் 2 தேர்வு முடிவுகள்...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்துப் பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.கடந்த டிச.15, 2022ஆம் ஆண்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023ஆம் ஆண்டில் கடந்த மார்ச்.15, 2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள்) நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 லட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர்.தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.


தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடுச் செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல், வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய சவால்கள் இருந்த போதிலும், தொகுதி-II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி-II தேர்வு தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நிறைவு பெற்றவர்களுக்கு UEL ஒப்படைப்பு தொடர்பான தகவல்

  பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் உரிய செய்தி  பணி நிறைவுக்கு பின்னர் பெறும் பணபயன்களில் UEL PA (அரை சம்பளவிடுப்பு) மேற்கண்ட லீவை 6 மாதங்கள் எ...