செந்தமிழ் நாட்டுத் தமிழச்சி நான்... ஜெயிக்கப் பிறந்த தமிழச்சி நான் - தமிழ்நாடு அரசின் மகளிர் தின பாடல்
Senthamil Nattu Thamizhachi naan - Jaikka pirantha Thamizhachi naan - Tamilnadu Government Women's Day Song
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
செந்தமிழ் நாட்டுத் தமிழச்சி நான்... ஜெயிக்கப் பிறந்த தமிழச்சி நான் - தமிழ்நாடு அரசின் மகளிர் தின பாடல்
Senthamil Nattu Thamizhachi naan - Jaikka pirantha Thamizhachi naan - Tamilnadu Government Women's Day Song
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
L & T நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு
Women working at L&T get one day of menstrual leave per month
மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
அண்மையில் உலகின் முன்னணி நாடாக நாம் வளர வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையானது முதற்கட்டமாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பொருந்தும் என்றும்,விரைவில் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய எல் அண்ட் டி நிறுவனர் சுப்ரமணியன் தற்போது பெண்களுக்கு தனது நிறுவனத்தில் சில சலுகைகளை வழங்கியுள்ளார்.
எல் அண்ட் டி நிறுவனரான எஸ்.என்.சுப்ரமணியன் சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பேசியபோது, ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளில் இருந்து என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யலாம் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுப்ரமணியன் கார்ப்பரேட் முதலாளித்துவ மனநிலையில் பேசுவதாக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றுவிட அதை பகிர்ந்து பலரும் ஞாயிற்றுக்கிழமையை வீண் செய்து விட்டீர்களே என கிண்டல் செய்து வந்தனர்.
இப்படி சர்ச்சையில் சிக்கிய எஸ்.என்.சுப்பிரமணியன் தற்போது தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு எல் அண்ட் டியின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணி புரியும் பெண்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், தனியார் நிறுவனங்களான ஸ்விகி, ஸொமேட்டோ போன்றவற்றிலும், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களிலும் ஏற்கனவே மாதவிடாய் கால சம்பளத்துடன் கூடிய விடுப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தின வாழ்த்துகள்...
உலக மகளிர் தினம் - வரலாறும் வாழ்த்துகளும்
International Women's Day - History and Wishes
அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.
பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
மார்ச்_8_அனைத்துலக_பெண்கள்_தினம்...
#மகளிர்_தின_வாழ்த்துகள்....💐💐💐💐💐
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர் ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
இனிய மகளிர் தின வாழ்த்துகள்...💐💐💐💐💐
பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை...