கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government / Government aided schools Admission will start from tomorrow (01-03-2025)

 



நாளை (01-03-2025) முதல் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்...


Admission to Government / Government aided schools will start from tomorrow (01-03-2025)



மாணவர் சேர்க்கை - பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - இயக்குநரின் செயல்முறைகள்...


High Court orders government to state stand on removal of caste names from school and college names



 பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


High Court orders government to state stand on removal of caste names from school and college names


பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்?” எனக்கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒருவார கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.


சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு ஆசிரியர் "சாதிகள் இல்லையடி பாப்பா" என பாடம் நடத்துவது பெரிய முரண் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதேபோன்ற வழக்கில் மதுரை அமர்வு, சாதி சங்கங்கள் குறிப்பிட்ட சாதியினரின் நலனுக்கானது என்ற சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சங்கங்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


`எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை’ எனத் தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், மேலும், சில அரசு பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் என விளக்கமளித்தார்.


அப்படி இருந்தாலும், சாதிப் பெயர் சேர்க்கப்படக் கூடாது எனக் கூறிய நீதிபதி, பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.


மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.


Sub Registrar Offices will function on Saturdays - Head of Registration Department


சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் - பதிவுத் துறை தலைவர் 


Offices of the Sub Registrars will function on Saturdays - Head of Registration Department


 அரசின் வருவாயை பெருக்கும் வகையில். மாநிலம் முழுவதும் பதிவுத்துறையில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு



Case trial on TET mandatory for promotion completed in Supreme Court - when is the verdict?


பதவி உயர்வுக்கு TET அவசியம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது - தீர்ப்பு எப்பொழுது?


அதாவது TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி, வரும் திங்கட்கிழமைக்குள் (03-03-2025) தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது.. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்... அநேகமாக ஏப்ரல் 10க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்..


TET Promotion/Appointment Related Supreme Court Case


- Pending Final Hearing Continuation 


Feb-6


Feb-13


Feb-20


Feb-27


( இன்றும் தீர்ப்பு இல்லை)


 Next Upcoming


 March-6 ( Thursday) அன்று விசாரணை தொடரும்...,


The  hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025 (Monday), as directed by the judges.


TET Compulsory for Promotion Case – Details in 3 Forms to file reply on 03.03.2025 – DEE Proceedings

 

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு - 03.03.2025 அன்று நடைபெறும் விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்யும் பொருட்டு, 3 படிவங்களில் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 27-02-2025...



A case filed in the Supreme Court challenging the Madras High Court judgment that Teacher Eligibility Test TET is mandatory for teachers for promotion – Details in 3 Forms to file reply on 03.03.2025 – Proceedings of Director of Elementary Education






28-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை

குறள் எண்:979

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:
தற்பெருமையற்றது பெருமையின் குணம், தற்பெருமையுடையது சிறுமையின் குணம்


பழமொழி :
அதிகம் கேள், குறைவாகப் பேசு.

Hear more, but talk less


இரண்டொழுக்க பண்புகள் :  

* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன். 

  *மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.


பொன்மொழி :

நீ நினைத்ததை அடைய , நீ நினைத்துப் பார்த்ததை விட அதிகம் "உழைக்க" வேண்டும்.


பொது அறிவு :

1. பழ மரங்களிலேயே சுமார் 400 ஆண்டுகள் விளைச்சல் தரும் மரம் எது?

விடை : ஆரஞ்சு மரம்.

2. இந்தியாவில் நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை : கேரளா


English words & meanings :

Police station     -     காவல் நிலையம்

Post office     -      தபால் நிலையம்


பிப்ரவரி 28

தேசிய அறிவியல் நாள்

தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


நீதிக்கதை

அக்பர்-பீர்பால்  மனவேறுபாடு

அக்பருக்கும் பீர்பாலுக்கும்

அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு அன்றைக்கும் ஏற்பட்டது.

அக்பர் ஏதோ சொல்ல,

அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல… பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு

விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

“இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது.

எனது ஆளுகைக்கு உட்பட்ட  மண்ணை விட்டு நீ வெளியேறி விடவேண்டும்!” என்று

ஆணை பிறப்பித்தார்.

“சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!” என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி

சீன நாட்டுக்கு சென்றார்.



சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும்

தில்லிக்கே வந்துவிட்டதை

அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது.

தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலை உடனே அரசவைக்கு அழைத்து

வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார் பீர்பால்.

“இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக்

கொட்டி வைத்திருக்கிறீர்களே?” என்று கேட்டார் அந்த

அமைச்சர்.“இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான்

பரப்பி வைத்திருக்கிறேன்!”

என்று கூறினார்.

பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பின்தொடர்ந்து

தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்… “இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??” என்று கேட்டார் அந்த அமைச்சர்.“எல்லாம் காரணமாகத்தான்!” என்று

பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று

வணங்கினார் பீர்பால்.

“என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? 

என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து

விட முடியுமா?” என்று கோபத்துடன் கேட்டார்

அக்பர்.“மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை

அப்படியே பின்பற்றி

வருகிறேன்!” என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

“எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?” என்றார் அக்பர் சினத்துடன்.“தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால்

தங்களின் மண்ணில்

நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப்

பாருங்கள். அவரே என்

வீட்டுக்கு வந்து பார்த்தாரே!” என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்… உடனே அமைச்சர் பதில் அளித்தார்..

“மன்னர் அவர்களே! பீர்பால்

தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக்

கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்

கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார்

என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!”

அப்போது பீர்பால், “மன்னர் அவர்களே,”என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான்

கொட்டி பரவி இருப்பது

சீன தேசத்தில் இருந்து

கொண்டு வரப்பட்ட மண்.

அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?” என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.


இன்றைய செய்திகள்

28.02.2025

* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* 25 மருத்துவமனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.

* பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி: தென் கொரியா வெற்றி.


Today's Headlines

* The Medical Services Recruitment Board has announced that applications are invited for 425 vacant pharmacist positions in government hospitals.

* Chief Minister Stalin has inaugurated de-addiction treatment and rehabilitation centers in 25 hospitals.

* The Chennai Meteorological Centre has predicted heavy rain in 10 districts, including Kanyakumari and Tirunelveli, today.

* The Central government has spent over ₹400 crore on court cases over the past 10 years, according to government data.

* Hamas has announced its readiness for the next round of ceasefire talks.

* South Korea wins the Pink Women's Cup football tournament.


Covai women ICT_போதிமரம்


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


Case seeking cancellation of New Pension Scheme - High Court Madurai branch orders Tamil Nadu government


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.


தமிழ்நாடு அரசுக்கு எதிர்வாத உரை அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No fuel for 15 year old vehicles - Delhi BJP Govt takes action

 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது - டெல்லி பாஜக அரசு அதிரடி No fuel for 15 year old vehicles - Delhi BJP Govt takes ...