சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர்
சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது - அரசாணை (நிலை) எண்: 34, நாள் : 12-02-2025 வெளியீடு - இணைப்பு: பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025, நாள்: 18-02-2025 & படிவங்கள்
Perasiriyar Anbalagan Award for Excellent Schools - Ordinance G.O. (Ms) No: 34, Date : 12-02-2025 Released - Attachment: Director of School Education Proceedings Rc.No : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Forms
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> தெளிவான படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 010421/ எம்2/ இ2/ 2025, நாள்: 18-02-2025 & படிவம்
"Perasiriyar Anbazhagan Award" for Best Schools - Request for Selection and Referral of Eligible Schools - Regarding - Proceedings of Director of School Education Rc.No. : 010421/ M2/ E2/ 2025, Date: 18-02-2025 & Form
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தோருக்கு Online Interview &Teaching Efficiency Test நடைபெறும் நாட்கள் அறிவிப்பு
Notification of Online Interview & Teaching Efficiency Test Dates for Best Science Teacher Award Applicants
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது
Sahitya Akademi Award to A.R.Venkatachalapathy
2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது.
'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.
எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
"திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஆளுநர் விருதுகள் Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ. 5 இலட்சம் பரிசுத்தொகை...
'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Applications invited for Tamil Nadu Governor Awards 2024 - Each Rs. 5 Lakhs Cash Award...
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 09, 2024 மாலை 05:00 மணி.
'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனங்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் தமிழ்நாடு ஆளுநரால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) வழங்கப்படும்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம். ஓய்வு பெற்ற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள், அரசு செயலாளர்கள், அரசு இணை செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிரிவுகளில் சிறந்த வகையில் பணியாற்றிய தகுதியான தனிநபர்கள் / நிறுவனங்களை பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்தந்தத் துறையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 வருட காலத்திற்கு சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து, "ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை - 600 000'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:
“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள்...
அண்ணா பதக்கம்
Award for act of bravery
அரசாணை (நிலை) எண். 333, நாள் : 12-02-1980...
...
அண்ணா பதக்கம்
1. G.O.MS.NO. 333, Dated 12-02-1980...
>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அண்ணா பதக்கம்
i. இவ்விருது பதக்க வடிவில் இருக்கவேண்டும். “வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” என பெயரிடப்பட்டிருக்க வேண்டும்.
ii. இப்பதக்கம் வட்ட வடிவத்தில் தங்க முலாம் பூசிய வெள்ளியால் (3/3 விட்ட அளவில்) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.
iii. இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.1.00 லட்சத்திற்கான (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.
iv. இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படவேண்டும்.
v. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
பொது மக்கள் பிரிவில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் பிரிவில் மூவருக்கும் என ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கலாம் என்பதற்கு அரசாணை (நிலை) எண்.734, பொது (பொது-1)த் துறை, நாள் 01.04.1986- ல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05-09-2024 அழைப்பிதழ்...
Dr. Radhakrishnan Award Ceremony 05-09-2024 Invitation...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
50 பேர் கொண்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...
தமிழ்நாட்டில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர், ராஜாகுப்பம் கோபிநாத் அவர்கள், மதுரை முரளி அவர்கள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு 10கிராம் தங்கப் பதக்கத்துடன் "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...
"Helen Keller Award" for Outstanding Teachers of Education of Students with Disabilities - Ordinance G.O. Ms. No : 07, Dated: 31-07-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் மாநில விருது 'ஹெலன் கெல்லர் விருது' என்ற பெயரில் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை
அரசாணை (நிலை) எண். 07 நாள்: 31.07.2024,
குரோதி, ஆடி-15,
திருவள்ளுவர் ஆண்டு, 2055.
படிக்க :
1. அரசாணை (நிலை) எண்.47, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந.2) துறை, நாள்.19.10.2015.
2. அரசாணை (பை) எண்.01, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை, நாள் 29.07.2022.
3. அரசாணை (2ப) எண்.07, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2)த் துறை, நாள் 28.11.2019.
4. அரசாணை (நிலை) எண்.17, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, நாள் 04.07.2022.
5. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண்.2429/உ.உ.பிரிவு/2024, நாள்.25.06.2024.
ஆணை:
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படும் விருதாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான வரையறைகள் வெளிடப்பட்டுள்ளன.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில்,
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் 7 நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா (ஆகஸ்ட்-15) மற்றும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டி சம்பர்-3) வழங்கப்படும் மாநில விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும் மாநில அளவிலான தேர்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2019-ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களில் சிறந்த பணியாளர்களுக்கான மாநில விருதினை 5-லிருந்து 10-ஆக உயர்த்தியும் தொழு நோயிலிருந்து குணமடைந்த பணியாளர் பிரிவினை, நடமாட இயலாதோருக்கான விருது பிரிவுடன் சேர்த்தும் மற்றும் 5 கூடுதல் விருதுகள் வழங்கிட ஏதுவாக தலா 10 கிராம் எடையுள்ள 5 எண்ணிக்கையிலான 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்க நிதி ஒதுக்கீடு...
2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...
மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும் , அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும் , உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
1. இயற்பியல் துறையில் திருமதி. ச.ர.பிந்துலேகா , முதுகலை ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி , கொட்டாரம்- 629703. கன்னியாகுமரி மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது .
2. உயிரியல் துறையில் திருமதி சு.சங்கீதா , பட்டதாரி ஆசிரியை , அரசு மேல்நிலைப்பள்ளி சேடப்பட்டி -625 527 , மதுரை மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2023-2024 - மாநில தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடைபெறுதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...
தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல்...
சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல்...
Perasiriyar Anbazhaganar Award for Best Schools - 2023-2024 - List of 76 Selected schools...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பசுமை சாம்பியன் விருது - 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000/- பரிசு - Pasumai Champion Award - Rs.1,00,000/- prize to 100 individuals...
மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் அவர்கள் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த, நிதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும். 2021-2022 முதல் ரூ.1/- கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2023-24ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனி நபர்கள் /உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி
2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4. பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்
5. நிலைத்தகு வளர்ச்சி
6. திடக்கழிவு மேலாண்மை
7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு
8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை
9. காற்று மாசு குறைத்தல்
10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை
11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு
12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை
13. பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா தலைமைத்துவ விருதுகள் வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 031660/ ஐ/ இ 1/ 2022, நாள்: 27-12-2023 - இணைப்பு: அரசாணை (1டி) எண்: 45, நாள்: 17-04-2023, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம் - Anna Leadership Awards for the academic year 2023-2024 for the best school HeadMasters working in Elementary / Middle / High and Higher Secondary Schools - DSE & DEE Joint Proceedings Rc.No. : 031660/ I/ E 1/ 2022, Dated: 27-12-2023 - Annexure: Ordinance G.O.(1D) No: 45, Dated: 17-04-2023, Assessment Procedures and Form...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
விளையாட்டு துறையில் சாதனை: முகமது ஷமி, வைஷாலிக்கு “அர்ஜூனா விருது” அறிவிப்பு.
கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது.
கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி.
கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது வென்ற நிலையில், இந்தாண்டு அவரது சகோதரிக்கு விருது.
விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.
2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை தற்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை
கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 2023ஆம் ஆண்டு க்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதுகள் அறிவிப்பு...
தயான் சந்த் கேல் ரத்னா விருது - பேட்மிண்டன் வீர்ர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருது - வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி, கிரிக்கெட் வீர்ர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது - லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).
விருது வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு (Kanavu Aasiriyar 2023 – Awardee List Released)...
>>> கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கனவு ஆசிரியர் 2023 - திட்டம் குறித்த அறிக்கை...
கனவு ஆசிரியர் 2023
மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது.
நிலை -1
இணையவழி MCQ (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிலை - 2
மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு.
நிலை 3
ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.
இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள். பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.
மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள். 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031696/ எம்/ இ1/ 2023, நாள்: 16-11-2023 (Young Poet Award for Students - Proceedings of Director of School Education Rc.No: 031696/ M/ E1/ 2023, Date: 16-11-2023)...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-06-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 4: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்...