கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Scam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Scam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி



 இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி


வெளிவந்த ரூ. 230 கோடி மோசடி! 50,000 அரசு ஊழியர்களின் ஊதியம் எங்கே? 


மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மாநில அரசு தகவல்


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று வரைதல் மற்றும் வழங்கல் (DDO - அரசு ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் நிர்வகிப்பவர்) அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.


இந்தக் கடிதத்தின்படி, 50,000 ஊழியர்கள் என்றால், அம்மாநிலத்தின் அரசுப் பணிக்குழுவின் 9 சதவிகிதமாகும். அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவைகூட இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியமாக (ரூ. 230 கோடி) வழங்கப்படவில்லை என்று கடிதம் கூறுகிறது.


இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? (Ghost Employees)


ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.


ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ. 230 கோடி முறைகேடு நடப்பதை, அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.


இந்த ரூ. 230 கோடி மோசடி விவகாரம் குறித்து, 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மே 23 ஆம் தேதியில், சுமார் 6,000 அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.


உண்மையான அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாததால்தான், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


அரசு ஊதியத்தில் போலி ஊழியர்களின் விவரங்களைச் சேர்த்து, பொது ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடுகின்றனர்.



50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி


மத்திய பிரதேசத்தில், அரசு கோப்புகளில், 50,000 ஊழியர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் விடுவிக்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசின் பல்வேறு துறைகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவர்களில், 50,000 ஊழியர்களின் பெயர்கள் அரசு கோப்புகளில் உள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்களுக்கு பிரத்யேக அடையாள எண், பணியாளர் குறியீடு இருந்தும் சம்பளம் வழங்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனரா? அல்லது போலி ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இந்த ஊழியர்கள் போலியாக இருந்தால், அவர்களின் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்ட, 230 கோடி ரூபாய் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, மாநிலம் தழுவிய சரிபார்ப்பு நடைமுறையை கருவூல துறை துவங்கி உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் பணிபுரியவில்லை என சான்றளிக்கும்படி, துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், '2024 டிசம்பர் நிலவரப்படி, 50,000 அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்கள், 10,000 பேர் தற்காலிக ஊழியர்கள்.


'ஒருவேளை இவர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்திருந்தால், அரசு கோப்புகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 50,000 ஊழியர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு, அதன் வாயிலாக, 230 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்' என்றனர்.


அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மோசடி

மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மாநில காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும். இதுதொடர்பாக துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊதிய மோசடியாக இது கருதப்படுகிறது.


நடந்தது என்ன?

ஊதியம் கிடைக்கப்பெறாத ஊழியர்களுக்கு அவர்களுக்கான அடையாள எண்கள் இருந்தும், ஊதியம் வரவு வைக்கப்படாததால் இதில் ஏதேனும் பெரும் முறைகேடு நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா? அல்லது அவர்கள் போலி ஊழியர்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.  திடுக்கிடும் ஒழுங்கின்மை சம்பவத்தை விசாரிக்க வலியுறுத்தி, கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடந்த மே மாதம் 23ம் தேதி அனுப்பிய கடிதத்தின் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, 6,000க்கும் மேற்பட்ட டிடிஓக்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், மேலும் 15 நாட்களில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்று விளக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.


போலி ஊழியர்கள்:

ஊதியம் வழங்கப்படாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்கள் என்றும், மற்ற 10 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் கடந்த 6 மாத ஊதியம் 230 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்படாவிட்டால் பணம் எங்கே போனது? என்ற கேள்வி வலுத்துள்ளது. போலி ஊழியர்களின் விவரங்கள், சம்பளதாரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு மோசடி அரங்கேறியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


குவியும் கேள்விகள்:

அது உண்மையானால் அரசாங்கத்தை ஏமாற்றுவது யார்? சம்பளத்தொகையை நிலுவையில் வைத்து பின்பு காசோலை இன்றியே அந்த பணத்தை எடுக்க முடியுமா? அரசாங்கம் அறியாமலேயே 230 கோடி ரூபாய் மோசடிக்கு இடம் அளித்துள்ளதா? 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? ஆம் எனில், 9 சதவீத ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன? என யாராளமான கேள்விகள் எழுகின்றன. 


சரிபார்ப்பு பணிகள் தீவிரம்:

வழக்கமான தரவு தணிக்கையின் போது மாநில கருவூலம் இந்த முரண்பாட்டைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், ஒரு பெரிய நிதி ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஊழியர்களின் தரவுகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.  அதன் மூலம் போலி ஊழியர்கள் அரசின் அமைப்பில் அமைதியாக பதுங்கியிருக்கிறார்களா என்பதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.


Police warn of loan app scams



கடன் செயலிகள் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை


Police warn of loan app scams


கடன்செயலிகள் மோசடி குறித்த இணையவழி குற்ற தடுப்பு பிரிவு, தலைமையகம், தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை பதிவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


23,158 bank frauds in 21 private banks in FY 2023-24 - Central Finance Department



Parliament Q/A


வங்கி மோசடி


 21 தனியார் வங்கிகளில் 23,158 வங்கி மோசடிகள்  2023-24 நிதியாண்டில் நடந்துள்ளது  - மத்திய நிதித்துறை


23,158 bank frauds in 21 private banks in FY 2023-24 - Central Finance Department


இந்திய வங்கிகள் 2023ல் 23,000 இணைய பாதுகாப்பு சம்பவங்களை பதிவு செய்துள்ளன: அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஃபிஷிங், ஹேக்கிங் மற்றும் மால்வேர் தாக்குதல்கள் உட்பட 2023ஆம் ஆண்டில் 23,158 வங்கி இணைய பாதுகாப்பு சம்பவங்களை இந்தியா கண்டுள்ளது. பங்கு வர்த்தக மோசடிகள் (₹4,636 கோடி) மற்றும் டிஜிட்டல் கைதுகள் (₹1,000 கோடி) போன்ற சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், மேம்படுத்தப்பட்ட அறிக்கையிடல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு வழிமுறைகளுக்கான அழைப்புகளைத் தூண்டுகின்றன. 



2023 ஆம் ஆண்டில் இந்திய வங்கி அமைப்பு 23,158 இணையப் பாதுகாப்புச் சம்பவங்களைச் சந்தித்ததாக அரசாங்கம் டிசம்பர் 18 புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இது 2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தின் போது பதிவான 1.22 லட்சம் சம்பவங்களை விட கணிசமாகக் குறைவாக இருந்தாலும், இது இன்னும் ஒரு காரணமாகும். 


 ஒரு வங்கியின் இணையதளத்தை ஹேக் செய்ய 39 முயற்சிகள் நடந்ததாகவும், கடந்த ஆண்டு 401 ஃபிஷிங் முயற்சிகள் நடந்ததாகவும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவிடம் (CERT-In) உள்ள தரவை மேற்கோள் காட்டி அரசாங்கம் கூறியது. இந்த சம்பவங்கள் வைரஸ்கள், ஃபிஷிங், நெட்வொர்க் ஸ்கேனிங் & ஆய்வு மற்றும் இணையதள ஹேக்கிங் உள்ளிட்ட பலவிதமான தாக்குதல் திசையன்களை உள்ளடக்கியது. 


பங்கு வர்த்தக மோசடிகள், டிஜிட்டல் கைதுகள், சுங்க மோசடி மற்றும் பல போன்ற புதிய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், பங்குச் சந்தை வர்த்தக மோசடிகளில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ₹4,636 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் பரவலான சைபர் மோசடியாகும்.


இதற்கிடையில், டிஜிட்டல் கைதுகள், 2024 முதல் ஒன்பது மாதங்களில் இந்தியர்களிடம் ₹1,000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. 


டிஜிட்டல் கைதுகள் என்றால் என்ன? 


போலிஸ் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள், அவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்டவர்களை அழைக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்பின் மூலம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர், பாதிக்கப்பட்டவரை பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தி கைது செய்வதைத் தவிர்க்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பவங்களைப் புகாரளிப்பதற்கும் இழப்பீடு பெறுவதற்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கு கணிசமான சீர்திருத்தங்கள் தேவை என்று பாராளுமன்றக் குழு அறிக்கை கூறியது. 59வது அறிக்கையில் (17வது லோக்சபா) 'சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர்/ ஒயிட் காலர் கிரைம் அதிகரித்து வரும் சம்பவங்கள்' என்ற தலைப்பில் உள்ள பரிந்துரைகள் மீது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற தலைப்பில், சைபர் குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் மறுசீரமைப்பு வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் விரிவான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க அறிக்கை முன்மொழிந்தது. .



Indian banks reported over 23,000 cybersecurity incidents in 2023: Government to Parliament


India saw 23,158 banking cybersecurity incidents in 2023, including phishing, hacking, and malware attacks. Cyber frauds like stock trading scams (₹4,636 crore) and digital arrests (₹1,000 crore) are rising threats, prompting calls for improved reporting and victim support mechanisms.


The government told Parliament on Wednesday, December 18, that the Indian banking system experienced 23,158 cybersecurity incidents in 2023. While this is significantly lower than the 1.22 lakh incidents reported during the height of the COVID-19 pandemic in 2021, it's still a cause for concern.


The government, citing data available with the Indian Computer Emergency Response Team (CERT-In), said there were 39 attempts to hack a bank's website and 401 phishing attempts last year. 


The incidents reported cover a wide range of attack vectors, including viruses, phishing, network scanning & probing and website hacking. 


This year has seen the rise of new cybersecurity threats, such as stock trading scams, digital arrests, Customs fraud, and more.


According to data from the Indian Cybercrime Coordination Centre (I4C), in the first nine months of 2024, a whopping ₹4,636 crore was siphoned out of people's bank accounts in stock market trading scams, making it the most widespread type of cyber fraud.


Digital arrests, meanwhile, have defrauded Indians of over ₹1,000 crore in the first nine months of 2024. What are digital arrests? Scamsters posing as police or law enforcement officials call potential victims, alleging that they (the victims) have been implicated in a serious crime. The fraudsters then insist that they connect over a video call, forcing the victim to pay up and avoid arrest.


Earlier this month, a Parliamentary panel report called for substantive reforms to simplify the process for victims of cyber fraud to report incidents and seek compensation. Titled Action Taken by the Government on Recommendations Contained in 59th Report (17th Lok Sabha) on the Subject ‘Cyber Security and Rising Incidence of Cyber/White Collar Crime’, the report proposed establishing an overarching regulatory body to address cybercrime and improve victim recourse mechanisms.


Creating awareness among parents about money fraudsters through whatsapp number - DSE Proceedings, Dated : 07-10-2024...


பெற்றோர்களின் whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபடுவோர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 07-10-2024...



To create awareness about fraudsters who are involved in extorting money by contacting parents on whatsapp number - Proceedings of the Joint Director of School Education, Dated : 07-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



New type of scam using Google Pay app - Police advise to be careful...

 



கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி புதிய வகை மோசடி - கவனமாக இருக்க காவல்துறை அறிவுரை...


New type of scam using G Pay app - Police advise to be careful...




கல்வி உதவித் தொகை மோசடி - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...


  கல்வி உதவித் தொகை மோசடி - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...


திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை...




5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...

 


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...


அதன்படி நாங்கள் மாணவர்கள் கொடுக்கும் ஸ்டாம்புகளை விண்ணப்பத்துடன் இணைத்து, சாதாரண தபாலில் அனுப்புகிறோம். மேலும் விவரங்களுக்கு 93194 85303 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘sub code M2A5R004’ என்று குறிப்பிட்டு தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு www.pcoi.org.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் அந்த விண்ணப்பத்தில், மாணவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தந்தையின் தொழில் உள்ளிட்டவைகளுடன் 10 ஐந்து ரூபாய் அஞ்சல் தலைகளை இணைக்கச் சொல்லி குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் குறிப்பிடும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டால், தொடர்பு செல்லவில்லை. அவர்கள் குறிப்பிடும் இணையதள முகவரியும் தவறாகவே இருந்தது. மாணவர்களிடையே தேவையற்ற ஒரு ஆசையைத் தூண்டி, அவர்களை அலைக்கழிப்பதாகவே இதை உணர முடிந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் இதுபற்றி கேட்ட போது, “தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலரை விட்டு உடனே விசாரிக்க சொல்கிறேன்’‘ என்று தெரிவித்தார்.


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே இந்த 5 ரூபாய் அஞ்சல் தலை மோகம் இருந்து வரும் நிலையில், இவர்கள் குறிப்பிடுவது போல் எந்த ஒரு மாணவரும் ‘டேப்லெட் பிசி’ பெற்றதாக இதுவரையில் தகவல் இல்லை. 



மொத்தத்தில், ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடையே ஆசை காட்டி, அவர்கள் சார்ந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை ஏதோ ஓரு அமைப்பு திரட்டி வருவது உறுதியாகிறது. இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு, குறிப்பிட்ட இணையவழி கல்வியில் சேர ஆசை காட்டலாம். அடுத்த உயர்கல்விக்கு அணுகும் ஏஜென்சிகள் மாணவர்களின் இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.



தனியார் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பப்படிவ மாதிரி.



கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில், பொதுமக்களின் முழு விவரங்கள் திரட்டப்பட்டு, எப்படி வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு பணமாக்கப்படுகிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கும். அதுபோலவே மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “எல்லாம் சரி.. தரமான தனியார் பள்ளிகள் இதற்கு ஏன் உடன்பட வேண்டும்? இதுபோல மாணவர்கள் தன்னிச்சையாக செய்வதை அறிந்தால், பள்ளிகளே ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டி மாணவர்களை நல்ல முறையில வழி நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களே இதை ஏன் ஊக்குவிக்குகின்றனர்?” என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED Parents செயலியில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக NSNOP உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்

    Namma School, Namma Ooru Palli நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பள்ளிச் சாளரம் பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED P...