இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி
வெளிவந்த ரூ. 230 கோடி மோசடி! 50,000 அரசு ஊழியர்களின் ஊதியம் எங்கே?
மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மாநில அரசு தகவல்
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று வரைதல் மற்றும் வழங்கல் (DDO - அரசு ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் நிர்வகிப்பவர்) அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தின்படி, 50,000 ஊழியர்கள் என்றால், அம்மாநிலத்தின் அரசுப் பணிக்குழுவின் 9 சதவிகிதமாகும். அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவைகூட இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியமாக (ரூ. 230 கோடி) வழங்கப்படவில்லை என்று கடிதம் கூறுகிறது.
இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? (Ghost Employees)
ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.
ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ. 230 கோடி முறைகேடு நடப்பதை, அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த ரூ. 230 கோடி மோசடி விவகாரம் குறித்து, 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மே 23 ஆம் தேதியில், சுமார் 6,000 அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.
உண்மையான அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாததால்தான், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசு ஊதியத்தில் போலி ஊழியர்களின் விவரங்களைச் சேர்த்து, பொது ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடுகின்றனர்.
50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி
மத்திய பிரதேசத்தில், அரசு கோப்புகளில், 50,000 ஊழியர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் விடுவிக்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசின் பல்வேறு துறைகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களில், 50,000 ஊழியர்களின் பெயர்கள் அரசு கோப்புகளில் உள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்களுக்கு பிரத்யேக அடையாள எண், பணியாளர் குறியீடு இருந்தும் சம்பளம் வழங்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனரா? அல்லது போலி ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இந்த ஊழியர்கள் போலியாக இருந்தால், அவர்களின் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்ட, 230 கோடி ரூபாய் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, மாநிலம் தழுவிய சரிபார்ப்பு நடைமுறையை கருவூல துறை துவங்கி உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் பணிபுரியவில்லை என சான்றளிக்கும்படி, துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், '2024 டிசம்பர் நிலவரப்படி, 50,000 அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்கள், 10,000 பேர் தற்காலிக ஊழியர்கள்.
'ஒருவேளை இவர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்திருந்தால், அரசு கோப்புகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 50,000 ஊழியர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு, அதன் வாயிலாக, 230 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்' என்றனர்.
அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மோசடி
மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மாநில காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும். இதுதொடர்பாக துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊதிய மோசடியாக இது கருதப்படுகிறது.
நடந்தது என்ன?
ஊதியம் கிடைக்கப்பெறாத ஊழியர்களுக்கு அவர்களுக்கான அடையாள எண்கள் இருந்தும், ஊதியம் வரவு வைக்கப்படாததால் இதில் ஏதேனும் பெரும் முறைகேடு நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா? அல்லது அவர்கள் போலி ஊழியர்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. திடுக்கிடும் ஒழுங்கின்மை சம்பவத்தை விசாரிக்க வலியுறுத்தி, கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடந்த மே மாதம் 23ம் தேதி அனுப்பிய கடிதத்தின் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, 6,000க்கும் மேற்பட்ட டிடிஓக்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், மேலும் 15 நாட்களில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்று விளக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
போலி ஊழியர்கள்:
ஊதியம் வழங்கப்படாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்கள் என்றும், மற்ற 10 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் கடந்த 6 மாத ஊதியம் 230 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்படாவிட்டால் பணம் எங்கே போனது? என்ற கேள்வி வலுத்துள்ளது. போலி ஊழியர்களின் விவரங்கள், சம்பளதாரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு மோசடி அரங்கேறியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
குவியும் கேள்விகள்:
அது உண்மையானால் அரசாங்கத்தை ஏமாற்றுவது யார்? சம்பளத்தொகையை நிலுவையில் வைத்து பின்பு காசோலை இன்றியே அந்த பணத்தை எடுக்க முடியுமா? அரசாங்கம் அறியாமலேயே 230 கோடி ரூபாய் மோசடிக்கு இடம் அளித்துள்ளதா? 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? ஆம் எனில், 9 சதவீத ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன? என யாராளமான கேள்விகள் எழுகின்றன.
சரிபார்ப்பு பணிகள் தீவிரம்:
வழக்கமான தரவு தணிக்கையின் போது மாநில கருவூலம் இந்த முரண்பாட்டைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், ஒரு பெரிய நிதி ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஊழியர்களின் தரவுகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் போலி ஊழியர்கள் அரசின் அமைப்பில் அமைதியாக பதுங்கியிருக்கிறார்களா என்பதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.