கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Resolution லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Resolution லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாக்டோ ஜியோ போராட்டம் - தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்



தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


*✍️. தீர்மானம்.1*


இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்:


நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படை தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி. வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது.


இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது


வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது


*✍️. தீர்மானம் 2.*


மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்


தமிழக மீனவர்களை எப்போதும் மதித்துப் போற்றும் இயக்கம், தமிழக வெற்றிக் கழகம். நம் வெற்றித் தலைவர் அவர்களும், தான் எப்போதும் மீனவர்களின் பக்கம் நிற்கும் மீனவ நண்பன் என்றே தன் செயல்பாடுகளால் நிரூபித்து வருகிறார். அந்த உணர்வுடன் மீனவர்களுக்காக எத்தகைய எல்லைக்கும் தமிழக வெற்றிக் கழகம் செல்லும் என்பதையும் இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.


கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள். இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதும் கூட, தாங்கொணாக் கொடுமைக்கு ஆளாகி உள்ள நம் தமிழக மீனவர்கள் கண்ணீருடனும் கண்டனக் குரலுடனும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். ஆனாலும் மீனவர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வு பற்றி. ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இதுவரை யோசித்ததே இல்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.


குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர். தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


*✍️. தீர்மானம்-3.*


பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது:


காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பொதுமக்களையும் விவசாயப் பெருங்குடி மக்களையும் நம் தமிழக வெற்றிக் கழத்தின் வெற்றித் தலைவர் சந்தித்த மறுநாளே, மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அதில், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் எப்படி என்கிற விளக்கம் இல்லவே இல்லை. விவசாயிகள் நலனுக்கெனத் தனி பட்ஜெட் போடுகிறோம் என்று மார்தட்டும் வெற்று அரசு. 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரான துரோகச் செயலே ஆகும்.


மேலும் இது, சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக இருக்கும் இந்த அரசின் இரட்டை வேடக் கபடதாரிப் போக்கையே காட்டுகிறது. தமிழக மக்கள் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், அரசின் இந்தக் கபட நாடகச் செயலை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும், புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது


*✍️. தீர்மானம்-4.*


இருமொழிக் கொள்கையில் உறுதி:


அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது


*✍️. தீர்மானம் -5.*


நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை:


நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை சரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.


மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.



*✍️. தீர்மானம் – 6.*


மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்:


ஒன்றியப் பிரதமர் அவர்கள் மாநில முதல்வராக இருந்த போது, மாநில வளர்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்று அந்த மாநில நலனுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே பிரதமராக இருக்கக் கூடிய ஒன்றிய அரசானது, பிற மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பாராளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு, ஒன்றிய அரசின் அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாநில சுயாட்சியை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது.


ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறுசீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.


*✍️. தீர்மானம் 7*


 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை:


மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச் சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.


மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள். 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது


*✍️. தீர்மானம் 8.*


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்:


அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்போராட்டத்தை இந்த வெற்று விளம்பர மாடல் அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்கிறது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போலி வாக்குறுதி அளித்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு, மீண்டும் அவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறது


*✍️. தீர்மானம் – 9*


 சட்டம் ஒழுங்கு சீர்கேடு அரசுக்குக் கண்டனம்:


கள்ளம் கபடமற்ற பச்சிளம் சிறுமிகள் முதல் பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. பள்ளிச் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கொடூர வன்முறைச் செயல்களில் ஈடுபடும் கட்டுப்பாடற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தாராளமாகிவிட்டது. வேறு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய கொடும் சூழல் மேலும் மேலும் பெருகி வருதலுக்குக் காரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடே அன்றி வேறில்லை.


இந்தச் சீர்கேட்டிற்கு ஒரே காரணம், கையாலாகாத தற்போதைய ஆளும் அரசு மட்டுமே. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.


*✍️. தீர்மானம் -10*


டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்:


ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் அமலாக்கத் துறை, டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் / நபர்கள் சார்ந்த இடங்களில் நடத்திய சோதனையில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கணக்கில் வராத. சட்டத்திற்குப் புறம்பான முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.


ஒன்றிய பா.ஜ.க. அரசும் தமிழ்நாட்டின் அரசும் மறைமுக உறவுக்காரர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் முறையான, நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. டாஸ்மாக் நிறுவனம் மீது தொடர்ச்சியாக எழுந்துவரும் முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டே வருகின்றன. டாஸ்மாக் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாது, ஊழலை ஊக்குவிக்கும் வகையிலான அதிகார மையமாகவே அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.


ஆகவே. டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி. உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி. பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது


*✍️. தீர்மானம் – 11.*


சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்:


அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி. சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்காமல், தெலங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை அந்தந்த மாநில அரசுகளே தங்களது சொந்தச் செலவில் நடத்தியுள்ளன.


சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் திமுகவினரும், பாஜகவினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


*✍️. தீர்மானம் 12.*


இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு:


நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள். இதுவரை சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சொந்த நாட்டிலேயே அடிமைகள் போலச் சுதந்திரம் அற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைமை. அவர்களுக்குக் காலங்காலமாக இருந்து வருகிறது.


எனவே, இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும். அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.


பொது வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரே வழி என்பதை மீண்டும் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தீர்க்கமாக நம்புகிறது. மேலும், இப்பொது வாக்கெடுப்பை, இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தி, இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதையும். தனது ஏப்ரல் மாத இலங்கைப் பயணத்தின்போது இது குறித்தும் இலங்கை அரசிடம் ஒன்றியப் பிரதமர் உறுதியுடன் வலியுறுத்த வேண்டும் என்பதையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது


*✍️. தீர்மானம்-13.*


பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக:


சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத்தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


*✍️ தீர்மானம் -14*


 கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்:


தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது


*✍️. தீர்மானம் -15.*


தலைவருக்கே முழு அதிகாரம்:


தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர் அவர்கள், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள். சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது


*✍️. தீர்மானம்-16.*


கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:

நம் கழகத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர். கொள்கைப் பரப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர்கள், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள். கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது


*✍️. தீர்மானம் 17.*


கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்:


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மீதும், கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்த, கழகச் செயல்வீரர்கள். திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் திரு. U.P.M.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024

 

28.12.2024 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக்  பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்


TETOJAC State General Body Meeting Resolutions held at Chennai on 28.12.2024


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில்  (28.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் மார்ச் மாதம் ஏழாம் தேதி (07.03.2025) வெள்ளிக்கிழமை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும்  சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிப்ரவரி 1, 8, 15 போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Resolutions of the STFI, Dated : 08-12-2024

 இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) தீர்மானங்கள், நாள் : 08-12-2024


Resolutions of the School Teachers Federation of India (STFI), Dated : 08-12-2024





TETOJAC மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...

 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இன்று (08.09.2024) தீர்மானிக்கப்பட்ட முடிவுகள்...


"தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் 08.09.2024 அன்று காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ( பொறுப்பு ) திரு.ஈ.ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் . கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி.ரக்ஷக்ஷித் , ஆவின்சென்ட் பால்ராஜ் , ச.மயில் , இரா.தாஸ் , சி.சேகர் , இல.தியோடர் ராபின்சன் , மன்றம் நா.சண்முகநாதன் , வி.எஸ்.முத்துராமசாமி , கோ.காமராஜ் . சி.ஜெகநாதன் , டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர் . இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . தீர்மானம் : 1 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024,30.09.2024 , 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும் மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் . பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண் : 1387 , நாள் : 07.09.2024 வெளியிடப்பட்டுள்ளது . அந்த செய்திக்குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு , டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும் , 28.09.2024 , 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது ."


திட்டமிட்டபடி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு...

 


(22-07-2024) சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் நடைபெற்ற டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானங்கள்...

 

இன்று (22-07-2024) சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் நடைபெற்ற டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்  தீர்மானங்கள்...


Today (22-07-2024) Resolutions of TETOJAC State Office Bearers Consultative Meeting  held at Chennai...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாநில டிட்டோஜாக் அமைப்பு  தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு முற்றுகை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வர இயலாத ஆசிரியர்கள் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுத்து தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் முற்றுகை போராட்டம் என எழுதி கொடுத்து விட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக  இருக்க வேண்டும்.. எனவே அன்றைய முற்றுகைக்கு செல்லும் எண்ணிக்கையும், தற்செயல் விடுப்பு எண்ணிக்கையும் மட்டுமே அரசை அசைத்து யோசிக்க வைக்கும். எனவே சென்னைக்கு பெருந்திரளாக பயணிப்போம் , எதிர்ப்பினை பதிவு செய்வோம்...



இன்று (14-07-2024) திருச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானங்கள்...

 

இன்று (14-07-2024) திருச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிட்டோஜாக் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்  தீர்மானங்கள்...


Today (14-07-2024) Resolutions of TETOJAC State Office Bearers Consultative Meeting being held at Trichy...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...


அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...



>>> TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று சென்னையில் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து 13.5.2024 அன்று மாவட்டத்தலைநகரில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  தொடர்பான கடிதம் வழங்கினர்....


 மேலும் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதங்களை நேரில் வழங்கினர்...




திருச்சியில் இன்று (04.01.2024) நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

 

திருச்சியில் இன்று (04.01.2024) நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TETOJAC முடிவு


6.1.24 மாவட்ட டிட்டோஜாக் கூட்டம்

(மாவட்ட மற்றும் வட்டார டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் கூட்டம்)


11.1.24 வட்டாரங்களில் ஆர்ப்பாட்டம்


27.1.24 மாவட்டங்களில் உண்ணாவிரதம்.


*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (04.01.2024) திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமாகிய தோழர் ச.மயில் தலைமையில் நடைபெற்றது.*


*கூட்டத்தில் டிட்டோஜாக்கில் இணைந்துள்ள அனைத்துச் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர்கள்,மாநிலப் பொருளாளர்கள் பங்கேற்றனர்.*


 *இன்றைய கூட்டத்தில், தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் (இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்) பதவி  உயர்வு வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண்:243 பள்ளிக்கல்வித்துறை நாள்:21.12.2023ஐ உடனடியாக ரத்து செய்திட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும்....*


*கடந்த 12.10.2023 அன்று சென்னையில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜாக் அமைப்புடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி ஆணைகள் வெளியிட வலியுறுத்தியும்....*


*இரண்டு கட்டப்  போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.*


 *அதன்படி 06.01.2024 அன்று மாவட்ட டிட்டோஜாக் கூட்டங்களை நடத்துதல்.*


*11.01.2024 அன்று வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துதல்.*


*27.01.2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துதல்.*


*கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக வலிமையான களப்போராட்டங்களை நடத்தவும் டிட்டோஜாக் தீர்மானித்துள்ளது.*


16-10-2023 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், EMIS, TNSED App, எண்ணும் எழுத்தும் மதிப்பீடு பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் (From 16-10-2023, we will not do any other online works like EMIS, TNSED App, Ennum Ezhuthum assessment posting other than Teacher, Student Attendance - Decision on behalf of TETOJAC)...


 16-10-2023 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், EMIS, TNSED App, எண்ணும் எழுத்தும் மதிப்பீடு பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் (From 16-10-2023, we will not do any other online works like EMIS, TNSED App, Ennum Ezhuthum assessment posting other than Teacher, Student Attendance - Decision on behalf of TETOJAC)...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எதிர்வரும் 16.10.2023 முதல் ஆசிரியர் & மாணவர்கள் வருகை பதிவு தவிர வேறு எந்த பதிவுகளையும் EMIS, TNSED Appகளில் பதிவிடமாட்டோம் - டிட்டோஜாக் அறிவிப்பு...


டிட்டோ ஜாக்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


பெறுதல்


மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்

தொடக்கக்கல்வி இயக்ககம்,

பேராசிரியர் க.அன்பழகனார் வளாகம்,

கல்லூரி சாலை, சென்னை - 600 006.


மதிப்புடையீர், வணக்கம்,


பொருள் : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் 25.09.2023 நாளிட்ட கூட்டத் தீர்மானங்கள் சமர்ப்பித்தல் சார்பு


EMIS, TNSED APP பதிவேற்றங்களில் இருந்து ஆசிரியர்கள் தங்களை 16.10.2023 முதல் விடுவித்துக்கொள்ளுதல்


ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை முழுமையாக மேற்கொள்ள இயலாத வகையில் ONLINE பதிவேற்றங்கள் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி நேரத்தை அபகரித்து வருகிறது. மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நடத்திய சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இப்பொருள் தொடர்பாக அனைத்து சங்கங்களும் தெளிவுபடுத்தியுள்ளோம். மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செப்டம்பர் 05 அன்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்கள் ONLINE பதிவேற்றப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பினை வெளியிட்டார்கள். ஆனால் இன்றுவரை ஆசிரியர்கள் பதிவேற்றப்பணிகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை.


எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்


ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.


எண்ணும், எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும், செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும், கிராமப்புறங்களில் NETWORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு, ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும், EMIS, TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் 16.10.2023 முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.


மாணவர் வருகை, ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை 16.10.2023 முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்ற விபரத்தினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களுக்கும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநர் ஆகியோருக்கும் டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படிக்கு,


செ.முத்துச்சாமி EX.MLC, 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


(அ.வின்சென்ட் பால்ராஜ்) 

பொதுச்செயலாளர் 

தமிழக ஆசிரியர் கூட்டணி


ச.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(இரா.தாஸ்)

பொதுச்செயலாளர் 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(சி.சேகர்) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்


(வி.எஸ்.முத்துராமசாமி) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(இல.தியோடர் ராபின்சன்) பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


(நா.சண்முகநாதன்) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


(கோ.காமராஜ்) 

பொதுச்செயலாளர் 

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


சி.ஜெகநாதன்

பொதுச்செயலாளர் 

JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(டி.ஆர்.ஜான் வெஸ்லி) 

பொதுச்செயலாளர் 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்


இன்று (05.10.2023) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத் தீர்மானங்கள் (Today (05.10.2023) TETOJAC meeting resolutions held in Chennai)...

இன்று (05.10.2023) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத் தீர்மானங்கள் (Today (05.10.2023) TETOJAC meeting resolutions held in Chennai)...


 *தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)*


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக்

பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 05.10.2023 காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி, நல்லதம்பி வீதியில் அமைந்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.


 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


*தீர்மானம் - 1*


தங்களுடைய கோரிக்கைகளுக்காக சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைதி வழியில் போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை கைது செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிடடோஜேக் பேரமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட தமிழக அரசை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


*தீர்மானம்-2*


டிட்டோஜேக்கின் 30 அம்சக் கோரிக்கைகளை விளக்கியும், கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள், பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக முழுவதும் 05.10.2023 மாலை பயிற்சி மையத்தின் முன்பு கூட்டங்களை நடத்துவது என டிட்டோஜேக் பேரமைப்பு முடிவு செய்து அறிவிக்கிறது.


*டிட்டோஜாக்*







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

25-09-2023 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (TETOJAC General Body Meeting Resolutions held on 25-09-2023)...


 டிட்டோஜாக் உயர் மட்டக் குழுவின் முடிவின் படி பள்ளிக்கல்வித்துறை DPI வளாகத்தில் (13-10-2023) வெள்ளிக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது...


>>> 25-09-2023 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (TETOJAC General Body Meeting Resolutions held on 25-09-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - (Assessment of Ennum Ezhuthum Scheme with B.Ed., studying students - Mass demonstration demanding to abandon - Resolutions taken at the 07.09.2023 state high level meeting of the Joint Action Committee of Tamil Nadu Elementary Teachers' Organizations (TETOJAC) - PDF)...


 பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - (Assessment of Ennum Ezhuthum Scheme with B.Ed., studying students - Mass demonstration demanding to abandon - Resolutions taken at the 07.09.2023 state high level meeting of the Joint Action Committee of Tamil Nadu Elementary Teachers' Organizations (TETOJAC) - PDF)...


>>> 07-09-2023 டிட்டோஜாக் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் Click Here to Download TETOJAC Resolutions - PDF...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,

 இன்று மாலை சரியாக 5:45 முதல் 7:00 மணி வரை டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் இணையவழிக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில தலைவர் ரக்ஷித் பங்கேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்ய பி.எட்., மாணவர்கள் பயன்படுத்த மாட்டோம் என்ற தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாக இன்றைய தினம் ஆங்காங்கே பி.எட்., மாணவர்களை கொண்டு முதுகலை ஆசிரியர்கள் தலைமையில் மதிப்பீடு நடைபெற்றது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. சில இடங்களில் எதிர்ப்பும், திருப்பி அனுப்பிய நிலையும் ஏற்பட்டது. சில இடங்களில் அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுடன் மீண்டும் அப்பள்ளிக்கு சென்று மதிப்பீடை முடித்துள்ளனர் என்ற தகவலும் தரப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க உயர் மட்ட குழு உறுப்பினர்களும் ஒத்த கருத்துடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு செய்வதில் பி எட் மாணவர்கள் பயன்படுத்துவதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த பணிகளில் ஆண்ட்ராய்டு TNSED ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதின் காரணமாக ஏற்படும் பணிச்சுமையையும் அதன் காரணமாக கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதையும் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் திங்கள் மாலை மேற்கண்ட இரு முக்கிய கோரிக்கைகள் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் மாலை 5 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. நம் இயக்கப் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில இணை துணை பொறுப்பாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். ஆர்ப்பாட்டம் வெற்றியடைய அயராது பாடுபட அன்புடன் அழைக்கிறோம் நன்றி...


------

           *💥டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்:*

       *💥டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை  5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.*

     *💥11.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.*

*💥பிரதானமான கோரிக்கைகள்:*

*♦️(1) எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.புதன்,வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்கவேண்டும்.*

*♦️(2)B.Ed படிக்கும் பயிற்சி  மாணவர்களை கொண்டு  பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்தக்கூடாது.*

*♦️(3) EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.*

*♦️(4) ஆசிரியர்களை(RP) கருத்தாளர்களாக நியமிக்கக்  கூடாது.*

*♦️(5) விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடாது.*

      *💥மாபெரும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்று கோரிக்கைகளை வென்றெடுத்து தன்மானம்,சுயமரியாதையை மீட்டெடுக்க ஆர்ப்பாட்டக்களம் நோக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள தயாராவோம்!*

       *💥ஆர்ப்பாட்ட களம் நோக்கி ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!.*

           சு.குணசேகரன்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத் (SMC) தீர்மானங்களை ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில் கூட்டப் பொருளாக இணைத்திட அறிவுறுத்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 08-08-2023 (Instruction to Include School Management Committee Meeting Resolutions as agenda item in August 15th Independence Day Grama Sabha Meeting - State Project Director's Proceedings Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 08-08-2023)...

 

>>> பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத் (SMC) தீர்மானங்களை ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில் கூட்டப் பொருளாக இணைத்திட அறிவுறுத்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 08-08-2023 (Instruction to Include School Management Committee Meeting Resolutions as agenda item in August 15th Independence Day Grama Sabha Meeting - State Project Director's Proceedings Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 08-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

06.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் (Decisions of State High Level Committee Meeting of TETOJAC ( Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) held at Chennai on 06.06.2023)...


>>> 06.06.2023 அன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் (Decisions of State High Level Committee Meeting of TETOJAC ( Tamilnadu Elementary School Teachers Organizations Joint Action Committee) held at Chennai on 06.06.2023)...


🌹டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.


            🌷தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்  கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
        
       இக்கூட்டத்தில்
*🌷(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(2)தமிழக ஆசிரியர் கூட்டணி.
*🌷(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(5)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(சண்முகநாதன்).
*🌷(6)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(தியோடர்).
*🌷(7)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(8)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(9)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.
*🌷(10)தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
*🌷ஆகிய சங்க பொறுப்பாளர்கள்  கலந்துகொண்டனர்.
      *🌷இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது. தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.


      *🌷இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் இயற்றப்பட்டது.


*🌷(1)12.6.2023 ல் வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


*🌷(2)26.6.2023 ல் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


*🌷(3)14.7.2023 ல் மாநில தலைநகரில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குதல்.


*🌷(4)மீண்டும் டிட்டோஜேக் கூட்டத்தை 18.6.2023 ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் கூட்டுதல்.


*ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்வு தேவையில்லை என வலியுறுத்திட  டிட்டோஜாக் முடிவு

*👉👉12.6.23- வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம்

*👉👉26.6.23 - மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

*👉👉14.7.23 -மாநில தலைநகர் பேரணி


இன்று ( 02.04.2023 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என தீர்மானம் (Resolutions) முடிவாற்றப்பட்டது (Today (02.04.2023) in JACTTO GEO State Coordinators Meeting and State High Level Committee Meeting held in Trichy, it was decided to conduct the following protest movements to insist on fulfilling the livelihood demands of Tamil Nadu Government Employees and Teachers)...


இன்று ( 02.04.2023 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என தீர்மானம் (Resolutions) முடிவாற்றப்பட்டது (Today (02.04.2023) in JACTTO GEO State Coordinators Meeting and State High Level Committee Meeting held in Trichy, it was decided to conduct the following protest movements to insist on fulfilling the livelihood demands of Tamil Nadu Government Employees and Teachers)...


*1. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிரந்தர அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வாங்குகிறார்கள் என்று சொல்லி அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கான முன் மொழிவுகளை தமிழ்நாடு முதலமைச்சரை வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக இயற்றப்பட்டது.


*2. எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்து திட்டமிடக்கூடிய கூட்டத்தினை நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது.


*3. எதிர்வரும் ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்குவது என்று முடிவாற்றப்பட்டது.


*4. எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் முடிவாற்றப்பட்டது.


ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை களத்தில் தீவிரமாக அமல்படுத்தி நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். 


ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள் (JACTTO-GEO Livelihood Trust Conference - On behalf of Department of Elementary Education Demand Resolutions presented to the Hon.Chief Minister of Tamil Nadu)...



>>> ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள் (JACTTO-GEO Livelihood Trust Conference - On behalf of Department of Elementary Education Demand Resolutions presented to the Hon.Chief Minister of Tamil Nadu)...




ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னையில் பென்சனை மீட்டெடுக்கும் மாநில மாநாடு - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அழைப்பது என முடிவு - ஜாக்டோ ஜியோ இன்றைய (17-07-2022) தீர்மானங்கள் (State conference to restore Pension in Chennai at the end of August - Decision to invite Tamil Nadu Chief Minister - JACTTO-GEO Today's Resolutions)...



>>> ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னையில் பென்சனை மீட்டெடுக்கும் மாநில மாநாடு - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அழைப்பது என முடிவு - ஜாக்டோ ஜியோ இன்றைய (17-07-2022) தீர்மானங்கள் (State conference to restore Pension in Chennai at the end of August - Decision to invite Tamil Nadu Chief Minister - JACTTO-GEO Today's Resolutions)...






11-05-2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (TETOJAC) - மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் மற்றும் கோரிக்கை தீர்மானங்கள் (TamilNadu Elementary School Teachers' Organization's Joint Action Committee (TETOJAC) - State High Level Committee Meeting Determinations and Demand Resolutions)...



>>> 11-05-2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (TETOJAC) - மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள் மற்றும் கோரிக்கை தீர்மானங்கள் (TamilNadu Elementary School Teachers' Organization's Joint Action Committee (TETOJAC) - State High Level Committee Meeting Determinations and Demand Resolutions)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெங்களூரு - காமாக்யா அதிவேக விரைவு தொடர்வண்டி ஒடிசாவில் விபத்து - காணொளி

  ஒடிசாவில் பெங்களூரு - காமாக்யா அதிவேக விரைவு தொடர்வண்டி  விபத்து - காணொளி Cuttack, Odisha: One person died and 8 injured after 11 coaches ...