கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Wayanad Landslide | What is the cause?



வயநாடு நிலச்சரிவு - காரணம் என்ன?


 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழப்பு; மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்ற இடத்தில் அண்மையில் மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 


கடந்த 2024-ஆம் ஆண்டு முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளின் சோகம் இன்னும் மறையாத நிலையில், அங்கு பெய்த தொடர் கனமழை காரணமாக இந்த புதிய பேரிடர் நிகழ்ந்தது.


சமீபத்திய நிலச்சரிவு விவரம்

கல்லாடி பகுதியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், சுரங்கப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் தங்குமிடங்கள் மற்றும் வாகனங்கள் மண்ணில் புதைந்தன.


பாதிப்புகள்: 

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.


காரணம்: 

தொடர்ச்சியான கனமழையுடன், சுரங்கப் பணிகளுக்காக மலைப் பகுதியில் அகற்றப்பட்டு மலை போல் தேங்கியிருந்த மண் குவியல்கள் முறையாக அகற்றப்படாததே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்களும், கேரள அரசும் குற்றம் சாட்டுகின்றனர்.


மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கேரள முதல்வர் வி.டி.சதீசன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். 


இந்த நிலச்சரிவு விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை இந்த காணொளியில் காணலாம் (அதிர்ச்சியூட்டும் காணொளி - மென்மையான மனம் கொண்டவர்கள் காண வேண்டாம்)




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு




கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு


கேரள முதலமைச்சராக திரு.வி.டி.சதீஷன் அவர்களை தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சி.


தேர்தல் முடிவு வெளியாகி 11 நாட்களாக முதலமைச்சரை தேர்வு செய்ய திணறி வந்த நிலையில் சதீஷனை தேர்வு செய்துள்ளது.


2026 மே 14 நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி. சதீஷன் (V. D. Satheesan) கேரளாவின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


இவர் முன்னதாக பரவூர் தொகுதியில் இருந்து பலமுறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


முக்கியத் தகவல்கள்:

பதவி: கேரள முதல்வர் (2026 மே முதல்).

கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்.

தொகுதி: பரவூர், கேரளா.

முந்தைய பொறுப்பு: கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் (2021-2026).


கேரளா: காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக தேர்வாகியுள்ள வி.டி.சதீஷன், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.



TET தொடர்பாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும் - அமைச்சர்

 

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் மாநில அரசு நிலைப்பாட்டிற்கு மாறான அம்சங்கள் உள்ளன. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும்

- - கேரளா அமைச்சர் வி.சிவன் குட்டி 




The Supreme Court's order on teacher eligibility test has aspects that are contrary to the state government's stand. The Kerala government has filed an appeal against this in the Supreme Court.


- Kerala minister V Sivankutty.



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb




தெற்கு ரயில்வேக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்

 


தெற்கு ரயில்வேக்கு கேரள முதலமைச்சர் கண்டனம்


* “எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களை RSS பாடல் பாட வைத்தது கடும் கண்டனத்திற்குரியது.


* வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப்புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற RSS அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மீறும் செயலாகும்” 


- பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்


Microtek Pulse Oximeter with Oxygen Saturation Monitor, Heart Rate and SpO2 Levels Oxygen Meter with OLED Display

இதயத் துடிப்பின் அளவையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிந்து கொள்ள உதவும் கருவி

Limited Time Offer





Actual Price: 1129

Offer Price : 669

Benefit : Rs. 460



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3LvU02v


கேரளாவில் 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000

 


கேரளாவில் 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000


கேரளாவில் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.


35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள மகளிர் பயனடைய உள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது


- முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு



Apis Himalaya Honey, 500g + 500g (Buy 1 Get 1 Free) | 100% Pure 




Actual Price: Rs. 260

Offer Price : Rs. 212

Benefit : Rs. 48


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3X3Pzyl


PM SHRI திட்டத்தில் இருந்து விலகியது கேரள அரசு




 PM SHRI திட்டத்தில் இருந்து விலகியது கேரள அரசு


* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் சேரும் முடிவை கைவிட்டுள்ளது கேரள அரசு. 


* மத்திய அரசின் இந்த திட்டத்தில் உள்ள எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தீர்மானித்துள்ளது.


* மேலும், மத்திய அரசின் தகுந்த பதில் கிடைக்கும் வரை, இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டில் அமலாகாது எனவும் தகவல்


மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.


திடீரென கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.


மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.


இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழ்நாடு அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.


இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டார்.


இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.


இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


PM SHRI திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 999

Benefit : Rs. 1491


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb



திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்



Kerala Chief Minister's security  vehicles collided one after the other at Thiruvananthapuram's Vamanapuram


 திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.


அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.


இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.


முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...



>>> கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...



 எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...


திருவனந்தபுரத்தில் வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை எஸ்பி சஸ்பெண்ட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் அலுவலகம் தலையிட்டதை தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் போலீஸ் தொலை தொடர்பு எஸ்பியாக பணிபுரிந்து வருபவர் நவநீத் சர்மா. இவரது மனைவி ரயில்வேயில் உயரதிகாரியாக உள்ளார். இதனால் ரயில்வே குடியிருப்பில் தான் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கி உள்ளார். நவநீத் சர்மாவுக்கு 2 பாதுகாவலர்கள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து நாயை குளிப்பாட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று டிவி பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதில் கோபமடைந்த நவநீத் சர்மா, தொலைத்தொடர்பு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து, ஆகாஷ் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து  பொருட்களை சேதப்படுத்தியதாக எப்ஐஆர் பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.


வேறு வழியின்றி எஸ்பி கூறியபடி ஆகாஷ் மீது சப் இன்ஸ்பெக்டர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இதன் பின் ஆகாஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நவநீத் சர்மா உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து ஆகாஷ் முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய போலீஸ் தலைமையாக உதவி ஐஜிக்கு  முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆகாஷின் சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் எஸ்பி நவநீத் சர்மாவின் பாதுகாவலர் பணியிலிருந்து  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  இந்த சம்பவம் கேரள போலீசில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)...



கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)...


>>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 1...


>>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 2...


>>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 3...



>>> Kerala Flood 2021 - Flood in Sabarimala Pamba River - கேரளாவில் சபரிமலை பம்பை நதியில் வெள்ளம் - Video 4...


>>> Kerala Flood 2021 - Landslide - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம், நிலச்சரிவு - சாலைகள் துண்டிப்பு - Video 5...


கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ...



 கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட 136 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். 


பதவி ஏற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய தாய்மொழியான மலையாளத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிகுளம் எம்.எல்.ஏ.வான ராஜா, தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதேபோல் மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ. அஷரப் கன்னடத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.

கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்...



கே.கே.ஷைலஜா டீச்சர்

மட்டண்ணூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர்.


கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றுலிருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு தேவையான 71 இடங்களைத் தாண்டி இடதுசாரி கூட்டணி 95 இடங்களுக்கும் மேலாக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பலான தொகுதிகளில் இன்னும் சில சுற்றுகளே மீதமுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது.


இடது முன்னணி கூட்டணி 97 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்த மக்கள் நல செயல்களே அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குக்களாக கூடுதல் பலம் சேர்ந்திருக்கின்றன. குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்றை மாநில அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.


நிலச்சரிவு, நிஃபா வைரஸ், கேரள பெருவெள்ளம் என முன்னதாக பல பேரிடர்களையும், அசாதாரண சூழல்களையும் திறம்பட எதிர்கொண்ட கேரளா கொரோனா வைரஸை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. அதற்கு காரணம், சூழலை கணித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.


64 வயதான சைலஜா டீச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் அமைச்சரவையில் இரண்டு முக்கிய பதவிகளை கவனித்து வந்தார். 2016 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த சைலஜா டீச்சர், கேரள அரசின் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை என இரண்டு மிகமுக்கியமான இலாக்காக்களை கவனித்து வந்தார். சூழல் எவ்வளவு இக்கட்டானதாக இருந்தாலும் துணிந்து போராடும் மனதிடம் கொண்ட சைலஜா கேரளாவின் பல பேரிடர் நேரங்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார்.



கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் அதிகமாக இருந்த போதிலும், மாநிலத்தில் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. கொரோனா முதலாம் அலையில் சூழலை கச்சிதமாக கையாண்டு கேரளாவில் கொரோனா பரவலையும், தாக்கத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா குறைத்தார். அதன் காரணமாக சைலஜா டீச்சர் மக்கள் மனங்களை வென்றார். சைலஜா கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொண்ட விதம் இந்தியளவில் பெரிதாக பேசப்பட்டது, தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது.


கேரள சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சைலஜாவிற்கு மக்கள் தங்கள் நன்றிக்கடனை இந்த தேர்தலில் வாக்குகளாக செலுத்தியிருக்கின்றனர். மட்டண்ணூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர். கடவுளின் தேசத்தை காக்க மீண்டும் சட்டசபைக்குள் நுழையவிருக்கும் கம்யூனிச காம்ரேட் ஷைலஜா டீச்சருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நன்றி: விகடன்

கே.கே.ஷைலஜா அவர்கள் 1980 ஆம் ஆண்டில் மட்டனூரில் உள்ள பழசி ராஜா என்.எஸ்.எஸ். கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டம் மற்றும் விஸ்வேஸ்வரய்ய கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். பின்னர் அவர் சிவபுரம் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏழு ஆண்டு சேவைக்குப் பிறகு, முழுநேர அரசியல் நடவடிக்கைக்காக 2004 இல் ஓய்வு பெற்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...