கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மு.க.ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.க.ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதிய ஆட்சி அமைவதை உறுதி செய்தார் திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்

 



புதிய ஆட்சி அமைவதை உறுதி செய்தார் திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்


திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முகநூல் பதிவு 



என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.

நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.


அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.


ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.

எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.


கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.


இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.


கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.

தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.


மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.





தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு.


தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதம் வழங்கியது விசிக.




தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி


விசிகவை தொடர்ந்து தவெக ஆட்சி அமைக்க ஐயுஎம்எல் கட்சியும் ஆதரவு.


 ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகிகளிடம் வழங்கினர் ஐயுஎம்எல் தலைவர்கள்.



பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறார் விஜய்.


வி.சி.க.வின் 2 எம்.எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் த.வெ.க. பெரும்பான்மைக்கான 118 இடங்களை பெற்றது.


மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 2 எம்.எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளதால் பெரும்பான்மைக்கான 120 இடங்களை பெற்றது.


ஏற்கனவே காங்.(5), இந்திய கம்யூ. (2), மா. கம்யூ. (2) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்


முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்


முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள்


ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பினார்


தி.மு.க.வின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்



 தி.மு.க.வின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்


மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!


கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.


மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.


அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.


நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!


எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்

அனைவருக்கும் நன்றி !


எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.


எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.


அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.


இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.


போர்ச்சூழல் - முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் குறித்த வலைதள பதிவு



போர்ச்சூழல் -  முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் குறித்த வலைதள பதிவு 


அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  இன்று விரிவாக ஆய்வு செய்தேன்.


தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.


இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.


குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.


- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதள பதிவு


விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

 


விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! - முதலமைச்சர் அறிவிப்பு


இது குறித்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவு


கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.


நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!


இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 


5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், 


பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.


அதுமட்டுமின்றி,


மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.


இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - 


தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்! 


#வெல்வோம்_ஒன்றாக!



ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை



CM Speech @ JACTTO GEO Conference


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 320, நாள் : 08-02-2026


Speech delivered by the Hon'ble Chief Minister of Tamil Nadu at the vote of thanks conference organized by JACTTO GEO - Press Release No: 320, Date: 08-02-2026


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்கள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை 


முதலில் உங்களிடம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நன்றி சொல்லி, நமக்கான உறவை தூரமாக்கிவிடாதீர்கள்! உங்கள் வியர்வைத் துளிகள் மதிக்கப்பட வேண்டும். கண்ணீர்துளிகள் துடைக்கப்பட வேண்டும் என்றுதான், உங்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்!*

மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!*

இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!*

கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.*

மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் நாங்களும், அரசு ஊழியர்களாக மக்களுக்காகப் பணியாற்றும் நீங்களும் சேர்ந்துதான், அரசாங்கம்! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும், அமைச்சரவையையும், அரசு ஊழியர்களையும் ஒருசேர பார்ப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!*

இந்த மகிழ்ச்சி, எனக்குள் மட்டுமல்ல; உங்களுக்குள்ளேயும் இருப்பதை, உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது! நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!*

கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது! ”நிலம் நனைக்கும் வான் போல” அரசு ஊழியர்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஒரு மாநாடு போதாது! எனவே, அந்த சாதனைகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் விரிவாக அல்ல. விளக்கமாக அல்ல. தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.*

இப்படி, அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து நன்மையை மட்டுமே செய்த ஆட்சிதான், தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி! அரசியலில் கொள்கைப் பிடிப்போடு இயங்கும் நாங்கள், மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை, வெற்றிகரமாக அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பெருங்கடமையை செய்பவர்கள், அரசு ஊழியர்களான நீங்கள்தான்!*

அதேபோல், ஆசிரியர்கள் செய்வதை பணி என்று சொல்ல மாட்டேன்! நீங்கள் செய்வது தொண்டு! உங்களால்தான், இந்தியாவில் பள்ளிக்கல்வியில் இரண்டாவது சிறந்த மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக்கொண்டு இருக்கிறது*

நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள்தான், உலகம் முழுவதும் நல்ல பணிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து நமக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறார்கள்! இப்படி, இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களை உருவாக்கக்கூடிய, உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசுதான், திராவிட முன்னேற்றக் கழக அரசு!*

நம்முடைய திராவிட மாடல் அரசில், நாட்டிற்கே முன்னோடியான முத்திரைத் திட்டங்களை செயல்படுத்திகொண்டு இருக்கிறோம். இங்கு நண்பர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்*

இந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பெருமையில் பெரும்பங்கு அரசு ஊழியர்களான உங்களுக்குதான் இருக்கிறது! அதற்கான எங்களின் நன்றியை சொல்வதற்கான வாய்ப்பாக, இந்த மாநாட்டை நான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்! இந்த மேடையில் நின்று, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நன்றியை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்!*

அரசின் கண்களாக, கரங்களாக செயல்பட்டு வரும் உங்களுக்காக, நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,*

கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, 2022 முதல், ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்கியதுடன், ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அரசுப் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறோம்.

நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கிகொண்டு இருக்கிறோம்!*

பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் முதல், பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.

அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும் - கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்!*

அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம், 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிகொண்டு இருக்கிறோம்*

ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வுபெற அனுமதித்து ஆணையிட்டிருக்கிறோம்.*

ஓய்வூதியப் பணிக்கொடையை 20 இலட்சம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!*

பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதங்களிலிருந்து, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறோம்.*

பெண் அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பில் செல்ல நேர்ந்தால், அந்தக் காலத்தையும் தகுதிகாண் பருவமாக கருத வேண்டும் என்று ஆணை வெளியிட்டிருக்கிறோம்.

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி இருக்கிறோம்.*

குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்களின் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!*

=அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.*

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்கள் உள்ளிட்ட, இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.*

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்தப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது."*

நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.*

இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று, உங்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” செயல்படுத்தியிருக்கிறோம*

இந்த அறிவிப்பு வெளியான அன்று கோட்டையில் நாம் இனிப்புகள் பரிமாறிக் கொண்ட, அந்த பாசக் காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை பார்க்காத காட்சி! இவ்வளவு பெரிய திட்டத்தை, எப்படிப்பட்ட சூழலில் நிறைவேற்றியிருக்கிறோம் என்று மற்ற எல்லோரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்!*

ஒவ்வொரு ஆண்டும், நமக்கான வரிப்பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துகொண்டே இருக்கிறது! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட குறைத்துகொண்டு இருக்கிறார்கள்! அந்த நிதியையும் முறையாக வழங்குவதில்லை! ஜி.எஸ்.டி மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துகொண்டே வருகிறது! இப்படிப்பட்ட சூழலில், எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும்!*

வருமானம் குறைவு - செலவு அதிகம், இதுதான் நம்முடைய நிலை! பேரறிஞர் அண்ணாதான் சொன்னார். பெட்டி இருக்கிறது! பூட்டு இருக்கிறது! சாவி இருக்கிறது! ஆனால், பெட்டி காலியாக இருக்கிறது என்று சொன்னார். திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்! அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாகரீதியாகவும் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துதான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிகொண்டு இருக்கிறோம்!*

பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டு இருக்கிறீர்கள்! யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில்! அப்போது, நீங்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? வியர்வைத்துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்தக்கண்ணீரை வர வைத்ததுதான், கருணையில்லா அ.தி.மு.க. ஆட்சி! ஆனால், இது அனைவரையும் அரவணைக்கும் கருணையே வடிவான தி.மு.க. ஆட்சி!*

அதனால்தான், உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான, தகுந்த பரிந்துரைகளை வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்*

ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில், ஒரு குழுவை அமைத்தோம். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உங்களிடம் உட்கார்ந்து தொடர்ந்து பேசினார்கள்.*

உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” அறிவித்தோம்!*   இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில், 50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு, பணியாளர்களின் 10 விழுக்காடு பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்!*

50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.*

ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்!*

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல், பணிக்கொடை வழங்கப்படும்.*

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல், பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.*

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இனி, இதை கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல், உங்களின் உழைப்பிற்கான உரிமைத்தொகை என்றே வழங்குவோம்!*

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்! இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.*

*இப்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று, இப்போது சொன்ன அத்தனை செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்!

இந்த ஓய்வூதியத் திட்டம் எவ்வளவு சிறப்பானது என்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சோமசுந்தரம் அவர்கள் உள்ளிட்ட பலரும் பேட்டிகளை கொடுத்திருந்தீர்கள்! அதையெல்லாம், நீங்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அவர்கள், ஆட்சியில் இருந்தபோது, அரசு ஊழியர்களை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி பேசினார்? இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்களே… எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் நான் அதிகம் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை! ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக கூட்டணி அமைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா? சிந்திச்சுப் பாருங்கள்! ஆனால், நாங்கள் அப்படி இல்லை!*

*எங்களை பொறுத்தவரைக்கும், சொன்னதைச் செய்வோம்! சொல்வதைத் தான் செய்வோம்! செய்து, உங்களின் பாராட்டுகளை பெறுவோம்! நான் உறுதியாக சொல்கிறேன். உங்களின் கோரிக்கைகள் - கனவுகள் - எதிர்ப்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்! உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்.


IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்



கும்பகோணம் IUML மாநாட்டில் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 


1. வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்வு.


2. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய 10 உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பப்படும்.


3. சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் வக்ஃப் வாரியம் அமைக்கப்படும்.


4. உலமாக்களில் முதல்கட்டமாக 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.50 ஆயிரம் ஆக உயர்வு


5. கல்லறைத் தோட்டம், கபரஸ்தான் தோட்டம் இல்லாத இடங்களில் அரசு நிலம் தேர்வு செய்து அமைக்கப்படும்.


முதலமைச்சர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்

 


பொதுமக்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்


5 new announcements issued by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin, to the public, nutritional meal organizers, Anganwadi workers, Village Panchayat Secretaries and Part-time Teachers


முதல் அறிவிப்பு:


கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்' கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 இலட்சம் வீடுகள் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


இரண்டாவது அறிவிப்பு:


கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற 'முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


மூன்றாவது அறிவிப்பு:


ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் 'சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்' கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி இதற்கான விழா வரும் 04-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்த அறிவிப்பு


இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி


குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; (மேசையைத் தட்டும் ஒலி) பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்த அறிவிப்பு:


அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.


அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.


அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். (மேசையைத் தட்டும் ஒலி



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைகள்



 திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களில் முக்கியமானவை - முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு


Important milestones of the Dravidian model Dawn Regime  (Vidiyal Government) - Chief Minister Stalin's announcement


ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான்! இந்தப் பயணங்களால் மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்து, கலைஞர் மகளிர் do திட்டம்! 95 கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி


இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 இலட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது.


தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள். மேசையைத் தட்டும் ஒலி)


நான் முதல்வன் திட்டத்தில் 48 இலட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி)


புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 இலட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலிடி


2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.


அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். (மேசையைத் தட்டும் ஒலி) நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு அகவிலைப்படியை இப்பொழுது வழங்கியிருக்கோம். ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி 58


2 இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள், மேசையைத் தட்டும் ஒலி)


14 புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்.


2 கோடியே 56 இலட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48* திட்டத்தில் சாலை விபத்துக்குள்ளான 5 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு 483 கோடி ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கய உதவிக் குழுக்களுக்கு 1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)


2 இலட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள். (மேசையைத் தட்டும்


22 இலட்சத்து 71 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா. (மேசையைத் தட்டும் ஒலி)


4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு. மெசையைத் தட்டும் ஒலி


மேசையைத் தட்டும் ஒலி)


8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.


மேசையைத் தட்டும் ஒலி)


12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு.


தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 இலட்சத்து 55 ஆயிரம் பேருக்கு தேடி


ரேஷன் பொருட்கள்


5 ஆயிரத்தி 700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.


சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற


200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி, மேசையைத் தட்டும் ஒலி)


கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. (மேசையைத்


தட்டும் ஒலி)


மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.


சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.


திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.


முதல்வர் படைப்பகங்கள்.


38 மாதிரிப் பள்ளிகள்.


37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.


10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்


19 தோழி விடுதிகள்.


141 மினி ஸ்டேடியங்கள்.


பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்.


ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.


6 ஆயிரத்தி 45 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்.


நெடுஞ்சாலைத் துறை மூலமாக, 24 ஆயிரத்தி 774 கிலோமீட்டர் நீள சாலைகள் 180 உயர்மட்டப் பாலங்கள்.


கிராமச் சாலைகள் மேம்பாடு,


20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர்


தூரத்துக்கு


121 தடுப்பு அணைகள்


101 அணைக்கட்டுகள்


மிக நீளமான, G.D. நாயுடு மேம்பாலம் (மேசையைத் தட்டும் ஒலி)


மிக நீளமான, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்


87 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், சுமார் 3 கோடி மக்கள் பயன்பெறும் 75 இலட்சம் வீட்டு இணைப்புகள். (மேசையைத் தட்டும் ஒலி)


விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட, முக்கியத் தலைவர்களுக்கு 23 மணிமண்டபங்கள் 70 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி)


சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கீழடி அருங்காட்சியகம்.


பொருதை அருங்காட்சியகம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு பூங்கா.


கோவையில் செம்மொழிப் பூங்கா. (மேசையைத் தட்டும் ஒலி)


தொல்காப்பிய பூங்கா சீரமைப்பு.


39 கோடி ரூபாயில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட உத்தரவு.


10 கோடி ரூபாயில் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு என்று


சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை.


இந்த அரசைப் சாதனை செய்தால், பொறுத்தவரைக்கும், ஒரு அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மேசையைத் தட்டும் ஒலி


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.


கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! (மேசையைத் தட்டும் ஒலி) மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலுரை



ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலுரை


த. நா.ச.பே. எண்: 03 நாள் : 24.01.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


சட்டசபையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்



 இன்று (22-01-2026) சட்டசபையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்


Hon'ble Chief Minister of Tamil Nadu's reply to a question regarding the protest of government employees and teachers in the Assembly today (22-01-2026)


அரசு ஊழியர்கள் மீது அதிமுகவினருக்கு என்ன கரிசனம்?


* உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.


* அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசியது எடப்பாடி பழனிசாமி.


* இந்த உண்மைகளை யாரும் மறக்க மாட்டார்கள்.


* ஆனால் திமுக அரசு, உரிமைக்காக போராடிய அரசு ஊழியர்களின் போராட்டத்தை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.


* இந்த மகிழ்ச்சியான அறிவிப்பையடுத்து கோட்டையில் எனது அறைக்கே வந்து அரசு ஊழியர்கள் எனக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.


* அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்கு பிடிக்கவில்லை.


* இன்னும் சில போராட்டங்கள் நடக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.


- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 






>>> Great Republic Day Sale 2026 Offer...


TAPS திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

 


TAPS திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் 


மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பெருமிதத்துடன் தந்த “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு” தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக திகழ்ந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் E.V. Velu அவர்கள் Thangam Thenarasu அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.


- மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்கள்



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...

விபத்தில் தாயை இழந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி பணி நியமன ஆணை



விபத்தில் தாயை இழந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி பணி நியமன ஆணை 


 பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளிக்கு வேலைக்கான ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி நேரில் வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.


இதனையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண்ணுக்கு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


பார்வையற்ற பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறுதல் கூறினார்.


TNPL A4 Copier Paper 80 GSM 500 Sheets - 1 Ream


https://amzn.to/4omoJgd




SIRஐ ஏன் எதிர்க்கிறோம்? - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி



 S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி 


SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்


S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்: 08065420020





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும்



Microtek Pulse Oximeter with Oxygen Saturation Monitor, Heart Rate and SpO2 Levels Oxygen Meter with OLED Display

இதயத் துடிப்பின் அளவையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிந்து கொள்ள உதவும் கருவி

Limited Time Offer





Actual Price: 1129

Offer Price : 669

Benefit : Rs. 460



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3LvU02v



தமிழ்நாடு போராடும் ; தமிழ்நாடு வெல்லும் : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி



தமிழ்நாடு போராடும் ; தமிழ்நாடு வெல்லும் : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி


💪🏻கல்வி நிதியை கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்


💪🏻"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என்ற ஆளுநரின் கேள்விக்கு முதல்வர் பதிலடி“


💪🏻“இந்தி மொழியை ஏற்றால் கல்வி நிதி என்ற ஆணவத்துக்கு எதிராக போராடும், இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்


💪🏻 மதத்தைப் பிடித்து வளர்ச்சியைத் தடுக்கும் கும்பல்களுக்கு எதிராக போராடும், ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக போராடும்


💪🏻 தொகுதி மறுவரையறை சதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும், நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்


💪🏻“மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக போராடும்“


💪🏻  ஒற்றுமையை சீர்குலைத்து மனுதர்மத்தை நிலை நாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்


💪🏻 தொகுதி மறு சீரமைப்பு மூலம் மாநில வலிமையை குறைக்கும் சதிக்கு எதிராக தமிழ்நாடு போராடும்


💪🏻 உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்கு காவிக்கறை பூசும் வன்மத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்

💪🏻 கீழடியின் உண்மைகளை நிலத்துக்கு அடியிலேயே புதைத்து விட நினைக்கும் வன்மத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்


💪🏻ஏகலைவனின் கட்டை விரலை கேட்டது போல திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்


💪🏻நாகலாந்து புறக்கணித்த பிறகும் திருந்தாமல் தமிழக மக்களிடையே குழப்பம் உண்டாக்கும் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்

💪🏻 இறுதியில் தமிழ்நாடே வெல்லும்,  ஒட்டு மொத்த இந்தியாவையும் காக்கும்


- முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்



மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரை

 

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரை


Advice from Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin to students, parents and teachers



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



திடீர் உடல்நலக்குறைவு : முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனையில் அனுமதி



சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதி


காலை நடைப் பயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி என அப்போலோ நிர்வாகம் அறிக்கை.




திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

 

 

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்


▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம்


▪️ நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்


▪️ மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும்


▪️ திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் புனரமைக்கப்படும்


▪️ பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்


▪️ பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்


தொகுதி மறுவரையறையை பேசுபொருளாக்கியது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ


Why did the constituency fair delimitation become a topic of discussion? - Chief Minister M.K. Stalin's video


Why did the constituency redelineation become a topic of discussion? - Chief Minister M.K. Stalin's video




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Chief Minister M.K.Stalin's congratulatory message For 11th and 12th Std students



11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி


Chief Minister M.K.Stalin's congratulatory message For students appearing for Class 11th and 12th Public Examination


🔹🔸11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து


✍️  "நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளை தரும். எனக்கு உங்கள் உழைப்பில் முழு நம்பிக்கை உள்ளது.


நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்"


 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்

SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் >>> தரவிறக்கம் செய்ய ...