கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் TCS



 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் TCS


இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான TCS, நடப்பு நிதியாண்டில் 12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம்.


Al பயன்பாடு, பணியாளர்கள் திறன் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2% ஊழியர்களை நீக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் CEO க்ரித்திவாசன் கூறியுள்ளார்.


இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. இந்நிறுவனம் அடுத்த ஓராண்டில் தனது பணியாளர்களில் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, டிசிஎஸ் நிறுவனத்தை மேலும் துரிதமாக செயல்பட வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றம் அடையும் வகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த பணிநீக்க அறிவிப்பு, நிறுவனம் செயல்படும் பல்வேறு நாடுகள் மற்றும் தொழில் துறைகளில் உள்ள பணியாளர்களை பாதிக்கவுள்ளது. இந்த திட்டம், 2026ஆம் நிதியாண்டில் (அதாவது ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிரிதிவாசன் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். வேலை செய்வதற்கான முறைகள் மாறி வருகின்றன. நாம் எதிர்காலத்திற்குத் தயாராகவும் துரிதமாகவும் இருக்க வேண்டியது அவசியம். 


ஏஐ தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களை மதிப்பீடு செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் புதிய பொறுப்புகளை வழங்குவதில் நிறைய முதலீடு செய்துள்ளோம். இருப்பினும், சில பணிகளில் மாற்று பணிநியமனங்கள் பயனுள்ளதாக இருக்கவில்லை. இதனால், உலகளாவிய அளவில் டிசிஎஸ் பணியாளர்களில் சுமார் 2% பேர் பாதிக்கப்படுவார்கள். முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் இருப்பவர்கள் இதில் அடங்குவர். இது எளிதான முடிவல்ல. தலைமை நிர்வாகியாக நான் எடுத்துக் கொண்ட கடினமான முடிவுகளில் இது ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.


டிசிஎஸ் நிறுவனத்தில் 2025 ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கான பணியாளர் எண்ணிக்கை 6,13,000 ஆகும். இதன் அடிப்படையில், 2 சதவீதம் குறைப்பு என்பது சுமார் 12,200 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை குறிக்கிறது. இது ஒரு கடினமான முடிவாக இருந்தாலும், ஒரு வலிமையான மற்றும் எதிர்காலத் தயாரான TCS-ஐ உருவாக்குவதற்காக எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். எங்களால் முடிந்தவரை, இந்த செயல்முறை மனிதநேயமான முறையில் நடைபெறும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்றும் கே. கிரிதிவாசன் கூறியுள்ளார். 


 டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து 2% பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ள நிலையில், நோட்டீஸ் கால சம்பளம், கூடுதல் செவெரன்ஸ் பேக்கேஜ், காப்பீட்டு வசதிகளை நீட்டித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 


டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து கவனித்து வரும் இரு பங்கு ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த பணிநீக்கங்கள் ஏஐ மாற்றத்தால் நிகழ்ந்தவை ஆகும். முன்னர் தேவையாக இருந்த திறன்கள் இருந்தன. குறிப்பாக முகநூல் சோதனை போன்றவை தற்போது தேவையற்றதாக மாறுகின்றன. சில மூத்த ஊழியர்கள் புதிய தொழில்நுட்ப சூழலுக்கேற்ப மாற தயங்குகிறார்கள். கிளையண்ட் திட்டங்கள் சுருங்கி, குறுகிய காலத்தில் முடியும் பணிகள் அதிகரித்துள்ளன. இதனால், அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைகிறது" என்று தெரிவித்துள்ளனர்.


Chief Minister discharged from hospital



மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர்


அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடர மருத்துவர்கள் அறிவுறுத்தல்.



விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சித்தலைவர்



 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,அவர்கள் தகவல்



>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஆங்கில கல்வி அவசியம் - ராகுல் காந்தி



 "இந்தியாவில் முன்னேற்றத்தை  தீர்மானிப்பது ஆங்கில கல்வி" - ராகுல் காந்தி 


"இந்தியாவில் முன்னேற்றத்தை தீர்மானிப்பது ஆங்கில கல்வி, இந்தியில் கல்வி பெறுவதை விட ஆங்கில கல்வி இந்தியாவில் இன்று மிகவும் சக்தி வாய்ந்தது" - ராகுல் காந்தி 


இந்தியாவின் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஒற்றை அம்சம் ஆங்கில கல்வி தான் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்வி பெறுவதை விட ஆங்கில கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறியுள்ளார். இந்தி, தமிழ், கன்னட கல்வி வழங்க வேண்டும், ஆனால் அதற்கு அடுத்ததாக ஆங்கில மொழி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறும் பாஜகவினரின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளியில் தான் படிப்பதாக கூறினார். அந்த வாய்ப்பை, ஏழை, பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு ஏன் வழங்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இன்று இந்தியாவில் ஒரு பிராந்திய மொழி அல்லது இந்தியில் கல்வி கற்பதை விட ஆங்கிலக் கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது. இது  ஆச்சரியமானது. ஆனால் உண்மை," என்று எம்.பி. கூறினார்.


இந்தி அல்லது தமிழ் அல்லது கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார், ஆனால் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்வதற்காக ஆங்கிலமும் கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


"இந்தி முக்கியமில்லை, பிராந்திய மொழிகளும் முக்கியமில்லை என்று நான் சொல்லவில்லை. அவை மிக முக்கியமானவை. ஆனால் இன்று இந்தியாவில் முன்னேற்றத்தை தீர்மானிப்பது ஆங்கிலக் கல்வி. அதாவது நாம் இந்தி கல்வி, தமிழ் கல்வி, கன்னட கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆனால் அதற்கு அடுத்ததாக ஆங்கில மொழி இருக்க வேண்டும். இது ஒரு விசித்திரமான விஷயம், ஆனால் இது ஒரு வரலாற்று உண்மை," என்று அவர் கூறினார்.


பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக சாடிய காந்தி, ஆங்கிலத்தை பகிரங்கமாக எதிர்க்கும் சில தலைவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்புவதை விமர்சித்தார்.


"ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் அனைத்து பாஜகவினரிடமும், உங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்றால் அவர்கள் ஆங்கில வழிப் பள்ளியில் படிப்பதாகச் சொல்வார்கள்."


இதை மேற்கோள் காட்டி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அதிகாரம் அளிக்க ஒரே மாதிரியான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.


"இந்தியாவின் ஏழைகளுக்கு ஏன் அந்த வாய்ப்பு (ஆங்கிலக் கல்வி) வழங்கப்படக்கூடாது? அந்த வாய்ப்பு ஏன் தலித் குழந்தைகள், ஆதிவாசி குழந்தைகள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்படக்கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.


SMC கூட்ட அறிக்கை மாதிரி



SMC கூட்ட அறிக்கை மாதிரி


பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்


*இடம்:*********

*நாள்: 25-07.2025 மாலை 3:00-4:30 மணி .


இன்று எம் பள்ளியில் 2025-26 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் 'முதல் கூட்டம்' நடைபெற்றது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.*********  அவர்கள் தலைமையிலும், ஏனைய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தும் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களை பெற்றோர் செயலியில்  வருகையை பதிவு செய்த பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்  வரவேற்புரை நிகழ்த்தி, முன்னதாக தெரிவிக்கப்பட்ட முக்கிய கூட்டப் பொருள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.


இக்கூட்டத்தின் தீர்மானங்கள் 


 *∆ மாநில கற்றல் அடைவு SLAS மற்றும் திறன் மேலாண்மை பங்கு பற்றி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிப்பது என தீர்மானிக்கப்படுகிறது


*∆ எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகள் சத்தமாக வாசிக்க 10-15 நிமிடங்கள் பெற்றோர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது


*∆ பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக்கான உதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்குவதை 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' இணையதளத்தில் பதிவு செய்ய தீர்மானிக்கப்படுகிறது


*∆ மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி மற்றும் உபகரணங்கள் பற்றி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அறிந்து கொள்ள தீர்மானிக்கப்படுகிறது


*∆ குழந்தைத் திருமணம், குழந்தை பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் முறைகளால் விடுபட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது


*∆ NSNOP மூலம் வழங்கப்படும் பள்ளியின் தேவைகளை அளவீடு செய்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றி செயலியில் பதிவு செய்ய தீர்மானிக்கப்படுகிறது.


*∆ POCSO சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.


*∆ பள்ளிக்கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14 417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098 குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.


*∆ ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை உருவாக்கும் வகையில் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.


∆ மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.


 ∆ மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கியில் பணம் சேமிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்க தீர்மானிக்கப்படுகிறது.


         *மேற்காணும் கூட்டப் பொருள் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி விவாதித்து பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மேற்காண் பொருள் சார்ந்து அனைத்து செயல்பாடுகளுக்கும்  ஒத்துழைப்பு  அளிப்பதாக ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.


*மேலும் 2025-26 கல்வி ஆண்டிற்கான பள்ளி ஒருங்கிணைந்த மானியத்திலிருந்து  ரூபாய்----------யை-------,--------,------------ போன்ற செலவினங்களை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


(மேலும் அந்தந்த பள்ளி சூழல் சார்ந்து ஏதேனும் தீர்மானங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக தத்தம் பள்ளிகளில் பணி மாறுதல் காரணமாக ஓய்வு காரணமாக காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் மாற்றுப் பணியில் அல்லது SMC மூலமாகவோ தற்காலிக ஆசிரியர் நியமிக்க தீர்மானிக்கப்படுகிறது என்று தீர்மானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். )


     இறுதியாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களை செயலியின் உரிய பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர்களுக்கு இனிப்பு ,தேநீர் வழங்கி, பள்ளியின் ஆசிரியர் பிரதிநிதி திரு/திருமதி********** *அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


*நன்றி 🙏🏻*


தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி

 


நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி


பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியீடு


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அதிகப்படியான காயங்களுடன் நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், அவற்றை கருணைக் கொலை செய்ய கால்நடைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகப்படியான நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்க்கடி மட்டுமல்லாமல் சாலை விபத்துகளும் தெரு நாய் தொல்லையால் ஏற்படுகின்றன.


குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு நாய்க்கடியின் காரணமாக மனிதர்களிடையே ஏற்படும் ரேபிஸ் நோய் தொற்றும் அதிகமாகி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.


குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்கள் சரியான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதற்கான பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


In a move aimed at addressing the growing threat posed by dog-related safety concerns, the Tamil Nadu government has issued a Government Order (GO) permitting mercy killing (euthanasia) of critically ill or severely suffering dogs.


According to the GO, dogs shall not be euthanised simply because they can no longer breed or be sold commercially. Only mortally wounded or incurably ill dogs may be euthanised, and this must be done solely by a registered veterinary practitioner. The process must be properly documented, including post-mortem reports, and the carcasses must be disposed of humanely as per official norms.


The dog menace in Tamil Nadu has been escalating in recent years, causing widespread fear and frustration among the public. Incidents of dog bites, rabies infections, road accidents, and general safety concerns have become increasingly common, especially affecting children, women, and the elderly.


Recent data revealed that 39,259 people have been affected between January and June this year by dog bites, with two rabies-related deaths in Tiruvallur and Kancheepuram.


காவேரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - TNSDMA எச்சரிக்கை



 காவேரியில் 75000 கனஅடி நீர்  திறப்பு - TNSDMA எச்சரிக்கை


மேட்டூர் அணையிலிருந்து காவேரியில் 75000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும்,  ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSDMA எச்சரிக்கை



மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது.



2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?

 


What Is the Last Date to File ITR for FY 2024-25?


2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன?


வருமான வரிப் படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2025-ல் இருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 









தமிழக அவலத்தை நாடு முழுவதும் பரப்புவோம் - பென்ஷன் விவகாரத்தில் தேசிய இயக்கத் தலைவர் ஆவேசம்

தமிழக அவலத்தை நாடு முழுவதும் பரப்புவோம் - பென்ஷன் விவகாரத்தில் தேசிய இயக்கத் தலைவர் ஆவேசம் - நாளிதழ் செய்தி 



B.T. Assistant Vacant Places as on 26-07-2025



26-07-2025 நிலவரப்படி தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக 


Details of Graduate Teacher Vacancies in Elementary Education Department Middle Schools as on 26-07-2025 District wise



DEE : State Level B.T. Assistant Vacant Places as on 26-07-2025



>>> BT Tamil Vacancies as on 26-07-2025



>>> BT English Vacancies as on 26-07-2025



>>> BT Mathematics Vacancies as on 26-07-2025



>>> BT Science Vacancies as on 26-07-2025



>>> BT Social Science Vacancies as on 26-07-2025


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...