கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐ.ஏ.எஸ்., பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 1,052 ஐ.ஏ.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், கடந்த மே மாதம் 23ம் தேதி, முதல் நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், மொத்தம், 4.5 லட்சம் பேரும், தமிழகத்தில், 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.ஏ.எஸ்., முதல் நிலைத் தேர்வில், மொத்தம் 13 ஆயிரத்து 92 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றிருப்பர் என தெரிகிறது.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் அக்டோபர் 5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhar என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல - Supreme Court

 ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல - உச்ச நீதிமன்றம் Aadhaar is not proof of citizenship - Supreme Court ஆதார் என்பது சரியான அடையாள ஆ...